மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: மழையால் பாதித்த விவசாயி, மீனவர், உப்பள தொழிலாளருக்கு உடனே நிவாரணம் தர வேண்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய அரசு நிதி வரவேண்டும், காப்பீடு திட்டம் மூலம் நிதி தரப்படும் என தாமதிக்க கூடாது எனவும் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

வங்கிகள் நிலை சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை| RBI Says “Banking Sector Resilient And Stable” Amid Adani Stocks Rout

புதுடில்லி: நாட்டில் வங்கிகளின் நிலை சீராகவும், மீண்டெழும் தன்மையுடனும் உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளில் பெரும் மோசடி செய்திருப்பதாக அதானி நிறுவனத்தின் மீது, ‘ஹிண்டன்பர்க்’ என்ற அமெரிக்க நிறுவனம் குற்றஞ்சாட்டியது பெரும் விவகாரமாக வெடித்துஉள்ளது. இதனை தொடர்ந்து அதானி குழுமத்திற்கு வழங்கிய கடன்கள் குறித்து விரிவான அறிக்கை அளிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. அதானி குழுமத்திற்கு இந்திய வங்கிகள் ரூ.80 ஆயிரம் கோடி கடன் வழங்கி உள்ளன. இது, அந்த குழுமத்தின் … Read more

"ஷிவின் ஜெயிச்சிருந்தா எல்லாரும் சேர்ந்து கொண்டாடியிருக்கலாம்!"- பிக் பாஸ் கதிரவன்

பிக் பாஸ் சீசன் 6 பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. அசிம் டைட்டிலுக்குத் தகுதியானவர் இல்லை, விக்ரமன் ஜெயித்திருந்தால் அறம் வென்றிருக்கும் என ஒருபுறமும், ஷிவின் ஜெயித்திருந்தால் அது ஒரு சமூகத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாக இருந்திருக்கும் என ஒருபுறமும் சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிர்ந்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டினுள் போட்டியாளராகக் கலந்து கொண்டு இறுதி வாரம் நெருங்கும் தறுவாயில் பண மூட்டையுடன் வெளியேறிய கதிரவனைச் சந்தித்தோம். பிக் பாஸ் கதிரவன் உங்களோட சக ஹவுஸ்மேட்ஸை மீட் பண்ணீங்களா? “பிக் … Read more

உக்ரைனுக்கு அடுத்து இந்த நாடுதான் ரஷ்யாவின் இலக்கு: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் கொடுத்துள்ள அதிர்ச்சி

ரஷ்யா ஏராளம் படையினரையும், ஆயுதங்களையும் இழந்துவிட்டது, அதனால் இனி போரைத் தொடர இயலாது என ஒருபக்கமும், ரஷ்யா இன்னமும் தன் முக்கிய படைகளை போரில் இறக்கவில்லை என இன்னொரு பக்கமும் செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. ஆக, ரஷ்ய – உக்ரைன் போர் முடிவுக்கு வருமா வராதா என உலகம் குழப்பத்துடன் காத்திருக்கும் நேரத்தில், உக்ரைனுக்கு அடுத்து இன்னொரு நாட்டைத் தாக்கவிருப்பதாக மறைமுகமாக ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர். நடுவில் கொஞ்ச காலம் காணாமல் போன … Read more

சாரதா சிட்பண்ட் பண மோசடி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மனைவியின் அசையா சொத்துக்கள் முடக்கம்!

டெல்லி: சாரதா சிட்பண்ட் பண மோசடி தொடர்பான வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி, நீட் தேர்வு வழக்கில் தமிழ்நாட்டுக்கு எதிராக வாதாடிய நளினி சிதம்பரத்தின் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வந்த பிரபல நிதி நிறுவனமான சாரதா சிட்பண்ட் நிறுவனம் பெரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேற்கு வங்காள மாநில தலைநகரான கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட சாரதா … Read more

வரத்து குறைவு: சத்தியமங்கலம் மலர்சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,050க்கு விற்பனை..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலர்சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,050க்கும், முல்லை பூ ரூ.1,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பரவும் கொடிய வைரஸ்… 98 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி

வயநாடு, கேரளாவில் வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட 98 பள்ளி மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது ஆய்வில் உறுதியானது. வயநாட்டில் உள்ள லகிடி ஜவஹர் நவோதயா பள்ளியில் மாணவர்களுக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. பின்னர், ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்தில் நடப்பட்ட ஆய்வில் மாணவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. குடிநீர் குழாய் மூலம் நோய் பரவியதாக கூறும் அதிகாரிகள் பள்ளியின் கிணறுகளில் குளோரிநேஷன் செய்ய நடவடிக்கை எடுத்தனர். தினத்தந்தி Related Tags … Read more

சுசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ கினியா நாட்டின் ஆளுநரான சிவகாசி தமிழர்; அசாத்திய கதை!

சிவகாசியில் பிறந்து, தமிழ்நாட்டில் படித்து, வேலையை தேடித் தேடிப் பல நாடுகளுக்குச் சென்றவர் சசீந்திரன் முத்துவேல்.  அடுத்தடுத்து சோதனைகள், பல திருப்பங்கள் என இவர் வாழ்வில் சந்தித்த சவால்கள் ஏராளம். இப்போது பாப்புவா நியூ கினியா நாட்டின் ஒரு மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநராக ஆட்சி செய்கிறார். சிவகாசியில் 1974 -ல் பிறந்தார் சசீந்திரன் முத்துவேல். இவரின் குடும்பம் விவசாயம் சார்ந்தது அல்ல. ஆனால் இவர் பெரியகுளத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை தோட்டக்கலைத்துறையில் ஆர்வத்துடன் … Read more

நாளை தைப்பூசம்: திருத்தணிக்கு இன்றுமுதல் 3 நாட்கள் சிறப்பு ரயில்…

சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே இன்றுமுதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது. தை பூசத்தன்று முருகன் தரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பிரமாண்டமான பூஜைகள் மற்றும் தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் … Read more

உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக தேர்தல் பணிகள் முடங்கின..!!

ஈரோடு: உச்சநீதிமன்ற உத்தரவால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பழனிசாமி தரப்பு அதிமுக தேர்தல் பணிகள் முடங்கின. வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய உச்சநீதிமன்றம் ஆணையிட்டதால் வேட்பாளர் ஒப்புதல் படிவம் விநியோகித்து பழனிசாமி அணி வேட்பாளர் தென்னரசுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு பெற முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். வாக்கு கேட்பதை நிறுத்திவிட்டு வேட்பாளருக்கு ஒப்புதல் பெற பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவை திரட்டி வருகின்றனர்.