வானில் பறக்கும் மர்ம பலூன்: கனடா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்

கனடாவில், வானில் மர்ம பலூன் ஒன்று பறப்பதை உளவு பார்க்கும் பலூன் கனடா மற்றும் அமெரிக்க வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஒன்று கவனித்து வருவதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  உளவு பார்க்கும் பலூன் மிக உயரத்தில் பறக்கும் மர்ம பலூன் ஒன்றைத் தாங்கள் கண்டுள்ளதாக கனடா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சீன உளவு பார்க்கும் பலூன் ஒன்றைத் தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், தற்போது கனடாவும் அப்படி ஒரு பலூனைக் கண்டுள்ளது கவனத்தை … Read more

தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள ரிசர்வ் வங்கியின் நியமன உறுப்பினர்களை விசாரணைக்கு அழைக்காதது ஏன் ? சு. சாமி கேள்வி

வங்கிக் கடன் மோசடி தொடர்பாக அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். மோசடி விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இயக்குனர்களை அழைத்து விசாரணை செய்யும் அதேவேளையில் அந்த வங்கிகளில் ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை விசாரணைக்கு அழைப்பது இல்லை என்று குற்றம்சாட்டினார் சுப்பிரமணியன் சாமி. In SC today my PIL on fraud Bank loans including given Adani outfits was … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 4ம் நாள் வேட்புமனு தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இடைதேர்தலில் போட்டியிட 4வது நாளில் 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உட்பட 16 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

`இறங்கும் அதானி, ஏறும் அம்பானி'… உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் நுழைந்தார் அம்பானி!

அதானிக்கு ஹிண்டன்பர்க்கின் ஆய்வறிக்கை ஒரு அடியாக வீழ்ந்தது என்றே கூற வேண்டும். உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இருந்து மெல்ல மெல்லச் சரிந்து வருகிறார். அதானி குழுமத்தைச் சுற்றி குழப்பங்கள், நம்பிக்கையின்மை, நிச்சயமில்லாத நிலையால் மளமளவென பங்குகள் சரிந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. அதானி – ஹிண்டன்பர்க் “இந்தத் தவற்றை எல்லா நேரத்திலும் செய்யாதீர்கள்…” இளைஞர்களுக்கு ஊபர் சி.இ.ஓ சொல்லும் அறிவுரை! இந்த இடத்தில்தான் உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட முகேஷ் அம்பானி, அதானியை … Read more

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.,27-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இன்று அவர் தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தலுக்காக மத்திய ஆயுதப்படை பாதுகாப்பு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலுக்காக 2 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவர் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். பிப்ரவரி 13-ம் தேதியில் இருந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய படையினர் ஈடுபடுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.

“ஒருவேளை இரட்டை இலை முடக்கப்பட்டால் அதற்கு முழு காரணம் ஓ.பி.எஸ் தான்” – வைகைச்செல்வன்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில்,  அ.தி.மு.க-வின் எடப்பாடி அணி சார்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.  இந்த தருணத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வனிடம் பேசினோம், “இந்த அறிவிப்பின் மூலம் ஓ.பி.எஸ் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்த தேர்தலில் யாருக்கு செல்வாக்கு என்பது தெரிந்து விடும். உண்மையான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் அமோக வெற்றி பெறுவார். ஓ.பி.எஸ் படுதோல்வி அடைவார்.” என்றார்.  வைகைச்செல்வன் … Read more

இந்தியாவில் வெடித்த சர்ச்சை…பிபிசி சுதந்திரம் பாதுகாக்கப்படும்: பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் விளக்கம்

பிபிசி ஊடகத்தின் சுதந்திரம் பாதுகாக்கப்படும் அதே சமயம் இந்தியாவுடனான உறவும் எப்போதும் போல் நீடிக்கும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிபிசி ஆவணப்படம் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து “இந்தியா-மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பில் பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்ட பிபிசி ஊடகம் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் 2002ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா கலவரம் தொடர்பாகவும், பிரதமர் … Read more

ஜல்லிக்கட்டுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை

சென்னை: ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஜல்லிக்கட்டு, எருது விடுதல் உள்ளிட்ட போட்டிகளுக்கு தடை விதித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியதை அடுத்து, எவ்வித விளையாட்டுக்கும் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பவில்லை என தமிழ்நாடு காவல்துறை கூறியுள்ளது. தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்கலை.யில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி: தீபக்நாதன் ட்வீட்

சென்னை: பல்கலைகழகங்களில் மாற்றுத்திறனாளிகள் பொறுப்புக்கு வரும் சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என அந்த இயக்கத்தின் தலைவர் தீபக்நாதன் தெரிவித்துள்ளார். டிசம்பர் 3 இயக்கத்தின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அவர் தெரிவித்தார்.