ரெய்டில் சிக்கிய 11 கிலோ தங்கம்; அயன் பட பாணியில் வயிற்றில் வைத்து கடத்தல்! – திருச்சியில் பரபரப்பு
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்கு வரும் பயணிகளிடமிருந்து சோதனை செய்யும்போது, அடிக்கடி கடத்தல் தங்கம் சிக்கும் சம்பவங்கள் நடப்பதுண்டு. இந்த நிலையில், ‘செப்டம்பர் 2-ம் தேதி திருச்சிக்கு வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக’ அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில், சுங்கத்துறையினர் மற்றும் மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அலர்ட் ஆகியுள்ளனர். அதையடுத்து மலேசியாவிலிருந்து வந்த … Read more