2022 ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

மும்பை: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு 211 ரன்களை வெற்றி இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயம் செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்தது. பின்னர் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 … Read more

கொரோனா இறப்பு இழப்பீடு வழங்க 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டை வழங்க 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, 2022-ம் ஆண்டு மார்ச் 20 முதல் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் அதற்கு முன்பு நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் … Read more

தங்கம் விலை வீழ்ச்சியா.. எவ்வளவு குறைந்திருக்கு.. ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன?

2022ம் ஆம் காலாண்டர் ஆண்டில் தங்கம் விலையானது இதுவரையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் தொடர்ந்து, பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் தேவையை ஊக்குவித்துள்ளது. இது இன்னும் தொடரலாம் என்ற போக்கே நிலவி வருகின்றது. எனினும் உக்ரைன் – ரஷ்யா இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில், தற்போது சுமூக தீர்வு ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. ரஷ்ய படைகள் பின் வாங்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது … Read more

“கல்வி அறிவைவிட அனுபவத்துக்கு அதிக சக்தி உண்டு!" – மாநிலங்களவையில் பிரதமர் மோடி

மாநிலங்களவை உறுப்பினர்கள் ப.சிதம்பரம், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிகேஎஸ் இளங்கோவன், நவநீத கிருஷ்ணன், ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட 72 எம்,பி-க்களின் பதவிக்காலம் ஜூலைக்குள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில், இவர்களுக்கான பிரிவு உபசார விழா இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவும், பிரதமர் மோடியும் பிரியாவிடை கொடுத்தனர். நாடாளுமன்றம் அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அதிக அனுபவம் இருக்கிறது. சில சமயங்களில் … Read more

மொத்தமும் ஏமாற்று வேலை: அம்பலமான வடகொரியாவின் ஏவுகணை சோதனை

உலகின் மிகப்பெரிய ஏவுகணை சோதனை என உலக நாடுகளை நம்ப வைத்த வடகொரியாவின் தில்லாலங்கடி வேலைகள் தற்போது அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் பிரபல திரைப்படம் ஒன்றின் பாணியில் வடகொரியா வீடியோ ஒன்றை வெளியிட்டு உலக நாடுகளை ஏமாற்றியுள்ளதாக இந்த விவகாரம் தொடர்பில் தென் கொரியாவும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டியுள்ளது. Hwasong-17 என்ற அணு ஆயுதம் தாங்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது. ஆனால் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் வானிலை … Read more

செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மனைகளுக்கு இனி சி.எம்.டி.ஏ அனுமதி வாங்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்சி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில், வீடு மட்டும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சரால் மான்ய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் எல்லையை செங்கல்பட்டு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று கடைசி நாள்: பான்-ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

சென்னை: வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்காக வருமான வரி துறை சார்பில் நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) வழங்கப்பட்டுள்ளது. இந்த பான்கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே நேரத்தில் பலர் அதில் கவனம் செலுத்தவில்லை. இதையடுத்து பலமுறை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை … Read more

முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா?.. ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதா? என  ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் என்ன? எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

வங்காள விரிகுடா பிராந்திய பாதுகாப்பிற்கு அதிக… முன்னுரிமை:பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி:”தற்போதுள்ள சர்வதேச சூழலில், நம் பிராந்திய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என, பிரதமர் மோடி, ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் வலியுறுத்தியுள்ளார். இந்தியா, வங்கதேசம், இலங்கை, மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய வங்க கடல் நாடுகள் இணைந்து, பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக, ‘பிம்ஸ்டெக்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. ‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் ஐந்தாவது மாநாடு, இலங்கையில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்று, துவக்க உரையாற்றினார். அப்போது, அவர் … Read more

9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம்.. நடப்பு கணக்கு பற்றாக்குறையால் தவிக்கும் இந்திய அரசு!

இந்தியாவில் கொரோனாவின் வருகைக்கு பிறகு பல்வேறு சவால்களை இந்தியா எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது மிக மோசமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் – டிசம்பர் 2021 வரையிலான காலகட்டத்தில் 23 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..! இதுவே கடந்த ஜூலை – செப்டம்பர் காலகட்டத்தில் 9.9 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. என்ன காரணம் இது … Read more