திருமண வீட்டில் பாஜக பிரமுகரை வெட்டிக்கொன்ற மாவோயிஸ்டுகள் – சத்தீஸ்காரில் பயங்கரம்

பிஜாப்பூர், சத்தீஸ்காரின் பிஜாப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட அவப்பள்ளி மண்டல பாஜக தலைவராக இருந்தவர் நீல்கந்த் கேகம். இவர் நேற்று முன்தினம் தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் சென்றார். திருமண நிகழ்ச்சியில் அவர் பரபரப்பாக இருந்தபோது திடீரென அங்கு வந்த மாவோயிஸ்டுகள் சிலர் நீல்கந்த் கேகத்தை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த கேகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது … Read more

சென்னை: மாமூல் கேட்டு மிரட்டல்; சுற்றிவளைத்த போலீஸ்; மாடியிலிருந்து குதித்த ரெளடி – நடந்தது என்ன?!

சென்னை வியாசர்பாடி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கையில் பட்டாக் கத்தியுடன் சில இளைஞர்கள் வலம் வந்தனர். மேலும், அந்த கும்பல் அங்கிருந்த கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியது. பணம் தர மறுத்தவர்களைப் பட்டாக்கத்தியால் வெட்டியிருக்கிறது இந்த கும்பல். மேலும், கடைகளின் கண்ணாடிகளை உடைத்ததுடன், அங்கு நிறுத்திவைக்கப்பட்ட கார், சரக்கு வாகனங்களின் கண்ணாடிகளைக் கத்தியால் வெட்டி, உடைத்து அராஜகம் செய்துகொண்டிருந்தது. தாக்குதல் நடத்தும் கும்பல் இதே கும்பல், அண்ணாநகர், செங்குன்றம் போன்ற பகுதிகளிலும் மாமூல் கேட்டு … Read more

மெட்ரோ ரயில் பயணிகளுக்காக தனியாா் வாகன சேவை தொடக்கம்

சென்னை: ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் முதல் போரூா் டி.எல்.எப். சைபா்சிட்டி வரை தனியாா் வாகன இணைப்பு சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிா்வாக இயக்குநா் மு.அ.சித்திக் தொடக்கி வைத்தாா். போரூா் டி.எல்.எப். சைபா் சிட்டி பணியாளா்களின் ரயில் போக்குவரத்து நலன் கருதி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ‘பாஸ்ட் ட்ராக்’ நிறுவனத்துடன் இணைந்து இச்சேவையை தொடங்கியுள்ளது.

பெருவில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 36-ஆக உயர்வு

பெரு: அரேகிபாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 36-ஆக அதிகரித்துள்ளது. தொடர் மழையால் பல கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் காணாமல் போனவர்களை தேடும் பணி நடக்கிறது.

வாட்ஸ் ஆப் வாயிலாக உணவு சப்ளை ரயில் பயணத்தில் விரைவில் அறிமுகம்| Food supply through Whats App will soon be introduced in train travel

புதுடில்லி : ரயில் பயணத்தின் போது, தங்களுக்கு தேவையான உணவுகளை, ‘வாட்ஸ் ஆப்’ வாயிலாக பயணியர், ‘ஆர்டர்’ செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகிறது. ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இணையதளம் மற்றும், ‘மொபைல் போன்’ செயலி வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக உணவு வினியோகம் செய்யும் வசதியை, ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்கனவே அளித்து வருகிறது. இதை, www.catering.irctc.co.in என்ற இணையதளம் மற்றும், ‘புட் ஆன் டிராக்’ என்ற, ‘மொபைல் … Read more

உடல் சூட்டை தணிக்கும், விந்துவை பெருக்கும்: மருதாணியின் மருத்துவ பலன்கள்!

நம்மை சுற்றி இருக்கும் பல செடிகளும் கொடிகளும் மருத்துவ குணம் நிறைந்தவை, மகத்துவம் மிக்கவை. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய, நம் வீட்டிலேயே வளர்க்கக்கூடிய மருதாணியானது பல மருத்துவ குணங்களைக் கொண்டது. மருதாணி முன்பெல்லாம் மருதாணி இலைகளைப் பறித்து, மணக்கும் அளவுக்கு அம்மிக்கல்லில் அரைத்து, சாப்பிட்ட பிறகு இரவில் கை, கால் விரல்களுக்கு தொப்பி போட்டு, தூங்கிவிடுவோம். பின்னர், கைகளைக் கழுவி, யாருக்கு நன்றாகச் சிவந்துள்ளது என ஒப்பிட்டு மகிழ்வோம். இயற்கை தந்த அருங்கொடையான இந்த மருதாணியைப் … Read more

32 விருதுகளை வென்று சாதனை படைத்த பிரபல பாடகி!

அமெரிக்காவில் நடந்த கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் பிரபல பாடகி பியோன்ஸ் நோல்ஸ் 4 விருதுகளை வென்றதன் மூலம் சாதனை படைத்துள்ளார். 65வது கிராமி விருதுகள் உலகளவில் இசைக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகள் கிராமி ஆகும். திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருதை போல இசைக்கு இந்த விருதாகும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் 65வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. @EMMA MCINTYRE/GETTY IMAGES ENTERTAINMENT பியோன்ஸ் கோலாகலமாக நடந்த இந்த விழாவில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். … Read more

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,600ஐ தாண்டியது

அங்காரா: துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 3,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே நேற்று அதிகாலை  7.8 ரிக்டர் அளவில் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கமானது 17.9 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த … Read more

சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம்

சென்னை: சென்னையின் புறநகர் பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் செல்கின்றன. காலை 7 மணிக்கு மேலும் பனிமூட்டம் நிலவுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம்பட்டு வருகின்றனர்.

தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு| Case filed against 4 persons for assaulting private bus operator

திருக்கனுார் : சந்தை புதுக்குப்பத்தில் தனியார் பஸ் நடத்துனரை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; தனியார் பஸ் நடத்துனர். இவர் நடத்துனராக பணியாற்றும் தனியார் பஸ் நேற்று முன்தினம் மதியம் 3:30 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் போது, தமிழகப் பகுதியான கொண்டலாங்குப்பம் கிராமத்தில் சிலர் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூராக நின்று … Read more