சீர்காழி: கடலில் விடப்பட்ட அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள்!

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த பழையாறு, தொடுவாய், திருமுல்லைவாசல், கூழையாறு, வானகிரி, தரங்கம்பாடி வரையிலான கடலோரப் பகுதிகளில் அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டையிடுவதற்காக இக்கடற்கரையோர பகுதிகளுக்கு வருவது வழக்கம். ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் `இவை மீனவர்களின் நண்பன்!’ – ஆலிவர் ரெட்லி ஆமைகள் குறித்து வனத்துறை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கடற்கரையோரப் பகுதிகளில் தஞ்சமடையும் ஆமைகள் கடற் பரப்பு மற்றும் அருகிலுள்ள காப்புக்காடுகளில் மண்ணை … Read more

அமெரிக்கா-தென் கொரியாவின் பிரம்மாண்ட துப்பாக்கிச் சூடு பயிற்சி: கொரிய தீபகற்பத்தில் அதிகரிக்கும் பதற்றம்

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு மத்தியில் தென் கொரியா மற்றும் அமெரிக்கா இடையே மிகப்பெரிய துப்பாக்கி சூடு பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது. வட கொரியாவால் பதற்றம் அமெரிக்கா மற்றும் தென் கொரியப் படைகளால் சமீபத்திய வாரங்களில் நடத்தப்பட்ட வான் மற்றும் கடல் வழி போர் பயிற்சிகள் வட கொரியாவை பெரும் அளவு சீண்டியுள்ளது. இந்த போர் பயிற்சிகளுக்கு ஆவேசமாக பதிலளித்த வட கொரியா, இதனை படையெடுப்பிற்கான ஒத்திகை என்று குற்றம் சாட்டியது. Reuters அத்துடன் … Read more

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 4புதிய நீதிபதிகள் நியமிக்க கொலிஜியம் பரிந்துரை…

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மேலும் 4  புதிய நீதிபதிகள் நியமிக்க மத்தியஅரசுக்கு கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிபதிகள் 4 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக்க பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளில் இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்ககோரி வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து, அவ்வப்போது, சில நீதிபதிகளை நியமிக்க  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம்  பரிந்துரை செய்து வருகிறது. அதன்படி நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை … Read more

தமிழ்நாடு இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடு இந்தியாவின் நூல் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. ஜவுளி வர்த்தகம் முக்கியமானது;  விருதுநகர் மாவட்டத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மணிமகுடம் எனவும் அவர் பேசியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்: 6 பேர் கைது| Delhi Police arrests 6, registers over 100 FIRs over ‘objectionable posters’ against PM Modi across city

புதுடில்லி: தலைநகர் டில்லியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது தொடர்பாக 100 வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 6 பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் 2 பேர் அச்சக உரிமையாளர்கள் ஆவார்கள். ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து கிளம்பிய வேனை போலீசார் சோதனை செய்ததில், ஆட்சேபனைக்குரிய போஸ்டர்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அந்த வேனை பறிமுதல் செய்த போலீசார், டில்லியின் பல இடங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போஸ்டர்களை அகற்றியுள்ளனர். கண்டனம் போஸ்டர் விவகாரத்தில் 6 பேர் … Read more

எச்சரிக்கையை மீறி பயிற்சி… குண்டு பாய்ந்து 3 யானைகள் பலி; வருத்தம் தெரிவித்த இந்திய ராணுவம்

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் சுக்மா பகுதியில் கடந்த 13 மற்றும் 14 ஆகிய நாட்களில் இந்திய ராணுவம் போர் பயிற்சி செய்ய முடிவானது. எனினும், இந்த பகுதியில் வனவாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என இந்திய ராணுவத்திடம் அரசு கேட்டு கொண்டது. இதேபோன்று, மேற்கு வங்காள வன துறையும், வேறு இடத்தில் ராணுவ பயிற்சியை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்தது. எனினும், துப்பாக்கி சுடுவது உள்ளிட்ட பயிற்சிகளை இந்திய ராணுவம் அந்த … Read more

“2018-21 வரையில் தலித்துகள்மீதான தாக்குதல் தொடர்பாக 1,89,945 வழக்குகள் பதிவு!" – மத்திய அரசு தகவல்

இந்தியாவில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல்கள் என்பவை நாள்தோறும் ஆங்காங்கே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், வழக்குகள் பதிவுசெய்யப்படுமளவுக்கு, அவற்றில் எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர் என்பது வெளியில் தெரிவதில்லை. தாக்குதல் இந்த நிலையில், 2018 முதல் 2021 வரையில், பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான தாக்குதல் தொடர்பாக 1,89,945 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்திருக்கிறது. முன்னதாக, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.பி கிரிஷ் சந்திரா, கடந்த நான்கு ஆண்டுகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர்மீதான … Read more

சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம்..! மருத்துவ சேவைகள் முடங்கும் வாய்ப்பு…

சென்னை:  அரசு மருத்துவர்களின்  ஊதிய உயர்வு அரசாணையை அமல்படுத்தக் கோரி சென்னையில் நாளை அரசு மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் மருத்துவ சேவைகள் முடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் வைத்து, அரசு மருத்துவர்கள் நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு … Read more

சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி 4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிப்பு: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னையில் ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி  4 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல்துறை அறிவித்துள்ளது. இன்று முதல் 25-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பரவல்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை| PM Modi Holds High-Level Meet On Covid As Daily Cases Spike

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. நேற்று 1,134 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்தனர். தற்போது 7,026 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கோவிட்டை கட்டுப்படுத்துவது, தற்போதைய சூழல், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் உயர்மட்ட குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை … Read more