உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய்: சுற்றுலா செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர எச்சரிக்கை

அழகியல் சிகிச்சை முதலான சிகிச்சைகளுக்காக துருக்கி நாட்டுக்குச் செல்லும் பலர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு நோயால் பாதிக்கப்பட்டுவருவதைத் தொடர்ந்து, அந்நாட்டுக்குச் செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோய் துருக்கி நாடு, அழகியல் சிகிச்சைகளுக்கு புகழ்பெற்ற நாடு. இன்னொரு முக்கிய விடயம், பிரித்தானியாவை விட அங்கு சிகிச்சைக்கான கட்டணமும் குறைவு. ஆகவே, ஏராளமானோர் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறுவதற்காக துருக்கிக்கு சுற்றுலா செல்கிறார்கள். ஆனால், துருக்கியில் சிகிச்சை பெற்ற பலருக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் … Read more

வாலிபர் கத்தியுடன் புகுந்தது எதிரொலி: திருவண்ணாமலை கோவில் நுழைவு வாயில்களில் ஏகே47 துப்பாக்கியுடன் பாதுகாப்பு!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் கத்தியுடன் புகுந்த ஒரு வாலிபர், அங்கு ரகளை செய்து வந்த நிலையில்,  திருவண்ணா மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலின் கோபுர நுழைவு வாயிலில் ஏகே47 துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை கோவிலுக்கு தினசரி பல ஆயிரம் பேர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்,நேற்று  கர்நாடக மாநிலம் பெங்களூரு விஸ்ரோடு பகுதியை சேர்ந்த பிரத்தம் என்பவர் தனது காதலியான  ஜெனிபருடன்,  இரண்டு சக்கர வாகனம் மூலம்  … Read more

கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை விசாரணை!

கோவில்பட்டி: கோவில்பட்டி பாஜக மாநில பட்டியல் அணி பொதுச்செயலாளர் சிவந்தி நாராயணனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜீவ் நகரில் உள்ள சிவந்தி நாராயணன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

`பிறந்தநாள் கிஃப்ட்’ – சிறை கைதிகளுக்கு ரூ.5 கோடி வழங்க விருப்பம் தெரிவித்த சுகேஷ் சந்திரசேகர்!

டெல்லி தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.200 கோடிக்கும் அதிகமாக பணம் பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் இருந்தபோது சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு சிறைக்கு பாலிவுட் நடிகைகள் மற்றும் மாடல் அழகிகளை வரழைத்து அவர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்கி வந்தார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து தெரியவந்தவுடன் சுகேஷ் சந்திரசேகர் … Read more

முகேஷ் அம்பானியின் சமையல்காரரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் முதனிலை செல்வந்தர்களில் ஒருவராக கருதப்படும் முகேஷ் அம்பானியின் சமையல்காரர் பெருந்தொகை சம்பளத்தை ஈட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பானி மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை தனது இளம் காலம் முதல் பின்பற்றி வந்தார் எனவும், 1970களில் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சந்தர்ப்பத்திலும் அவர் சைவ உணவுகளை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் காலத்திலேயே அவர் இறைச்சி வகைகளை தவிர்த்து வந்தார் எனவும் மது அருந்துவதையும் தவிர்த்து வந்தார் எனவும் … Read more

மோடி பெயர் குறித்து அவதூறு: ராகுல்காந்திக்கு இரண்டு ஆண்டு சிறைதண்டனை விதித்த சூரத் நீதிமன்றம்…

சென்னை; மோடி பெயர் தொடர்பாக ராகுல் விமர்சித்து வருவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு சூரத் மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த்து உத்தரவிட்டு உள்ளது. தொடர்ந்து ராகுலுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. 2019ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்கள் என்று பிரதமர் மோடியை சுட்டிக்காட்டி பேசி வந்தார்.  … Read more

ஓபிஎஸ் பேச்சு.. இபிஎஸ் எதிர்ப்பு.. சபாநாயகர் விளக்கம்: சட்டப்பேரவையில் பரபரப்பு

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாக சட்டப்பேரவையில் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இதற்கு எடப்பாடி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவராக நான் இருக்கிறேன்; ஒரு கட்சிக்கு ஒருவர் என பேசக்கூறியுள்ளீர்கள். ஆனால், பெரும்பான்மை இல்லாதவரை பேச வைப்பது என்ன நியாயம். ஓ.பன்னீர் செல்வத்தை பேச அனுமதித்ததற்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். முக்கிய மசோதா என்பதால் முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பேச வாய்ப்பு அளித்ததாக … Read more

பட்டா, சிட்டா… “வாரிசு விவசாயிகளை நெறிமுறைபடுத்த நடவடிக்கை"! வேளாண்துறை செயலர் பேட்டி

தமிழக சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்ப்பட்டது. இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, பட்ஜெட் தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “தமிழ்நாட்டில் 12,500 கிராமங்களில் 4,500 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதில், நபார்டு மூலமாக ரூ.500 கோடி கடன் பெற்று, வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். அங்கக வேளாண்மையை நீலகிரியில் ஊக்குவிக்க உள்ளோம். இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருதுகள் வழங்கப்படும். வேளாண்மை … Read more

வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாகவே வெங்காய தயிர் பச்சடியை பிரியாணியுடன் தான் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் அதை தினமும் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் உண்டு என்று தெரிந்தால் நீங்கள் தவறாமல் தினசரி உணவில் பயன்படுத்திக் கொள்வீர்கள். இருப்பினும் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம். இதை சமைத்து சாப்பிடாமல் பச்சையாக சாப்பிட்டால் வெங்காயத்தின் ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. அவ்வாறு சமைத்து சாப்பிட்டால் வெங்காயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் 50% குறைகின்றது. வெங்காயத்தில் அடங்கும் ஊட்டச்சத்தக்கள் வைட்டமின் சி … Read more

கனத்த இதயத்துடன் நிற்கிறேன்: சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது,  மாநில பிரச்னைகளில் முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு., தற்போது கனத்த இதயத்துடன் உங்கள் முன் நிற்கிறேன் என்று கூறினார். தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டு காரணமாக 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டு தடை மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று … Read more