ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியீடு… சிஎஸ்கே ஆடும் போட்டிகள் விவரம்…

சென்னை: நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் 16வது சீசனுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. போட்டியானது அகமதாபாத், மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 12 இடங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது. அதன் முழுவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. … Read more

பிபிசி நிறுவனத்தில் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்கள்: வருமான வரித்துறை விளக்கம்

டெல்லி, மும்பை நகரங்களில் பிபிசி அலுவலகங்களில் சோதனை நடத்தியது தொடர்பாக, மத்திய வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில்; பிபிசி வருவாய் விவரங்கள் ஆங்கிலம் தவிர்த்த பிறமொழி ஒளிபரப்புகளின் லாப விவரங்களுடன் ஒத்துப் போகவில்லை. சில பரிவர்த்தனைகளை பிபிசி நிர்வாகம் கணக்கில் காட்டவில்லை. டிவி, டிஜிட்டல், ரேடியோ என பல வழிகளில் பிபிசி செய்திகள் மூலமாக வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது. சோதனையில் முக்கிய ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. பல்வேறு வருவாய் பிரிவுகளில் வரி செலுத்தப்படவில்லை என்றும் … Read more

“நம்ம பங்காளிக்கு வாக்களியுங்கள்!" – இபிஎஸ் பெயரில் வெளியான கடிதம்; மறுக்கும் அதிமுக

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல், இந்த மாதம் 27-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தங்களின் வேட்பாளர் வெற்றி பெற அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, நாம் தமிழர் உள்ளிட்டக் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி பிரசாரம் இந்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமியின் பெயரில், ‘கண்ணன் குலத்தைச் சேர்ந்த நமது பங்காளிக்கு வாக்குச் செலுத்துங்கள்’ என்ற கடிதம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. ஈரோடு முனிசிபல் … Read more

புடின் கூட்டாளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: மர்மமான முறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூட்டாளியான மெரினா யாங்கினா 16வது மாடி கட்டிடத்தின் ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். புடினின் கூட்டாளி உயிரிழப்பு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் நிதி உதவித் துறைக்கு தலைமை அதிகாரியாக செயல்பட்ட மெரினா யாங்கினா(Marina Yankina), செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள குடியிருப்பின் 16வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தி இண்டிபெண்டண்ட் செய்தி வெளியிட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் கலினின்ஸ்கி பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தின் நடைபாதையில் புதன்கிழமை காலை 8 மணிக்கு … Read more

பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டம்! பொதுப்பணித்துறை தகவல்…

சென்னை: ரூ.550 கோடியில் பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டு உள்ளதாகவும், அதற்காக ரூ.550 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஏரிகளில் ஒன்றான, பூண்டி ஏரியின் உயரத்தை அதிகரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ளது. இந்த குடிநீர் தேக்கம் ரூ.65 லட்சம் செலவில் 1939-ல்  தொடங்கப்பட்டு 1944-ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அப்போதைய சென்னை மேயராக இருந்த … Read more

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடையில்லை: காவல் ஆணையர்

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நாளை தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடையில்லை என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். மீனாட்சியம்மன் கோயிலில் குடியரசு தலைவர் நாளை மதியம் 12 மணிக்கு மேல் தரிசனம் செய்ய உள்ளார்.  

100 நாட்களில் 14,209 வழக்குகளுக்கு தீர்வு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு| SC takes giant leap towards reforms during first 100 days of Justice Chandrachud’s tenure as CJI

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பதவியேற்ற 100 நாட்களில் 14,209 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த லலித் ஓய்விற்கு பிறகு, 50வது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் 9ம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரை இருக்கிறது. டில்லி பல்கலை.,யில் சட்டம் பயின்ற அவர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை.,யில் முதுநிலை சட்டப்படிப்பை முடித்து, … Read more

தமிழக அரசின் மின்சார வாகனக் கொள்கை 2023… மாற்றங்களைக் கொண்டுவருமா?

நம் கண்முன்னே இன்று உலகளவில் நடந்துவரும் ஒரு மாற்றம் மின்சாரமயமாகிவரும் போக்குவரத்துத்துத் துறை. இந்த மாற்றத்தை நாம் சரியான வழியில் ஏற்றுக்கொள்ள தமிழக அரசு ‘மின்சார வாகனக் கொள்கை 2023’-யை சமீபத்தில் அறிவித்துள்ளது. இதன் முக்கிய அம்ச‌ங்கள், தாக்கங்கள் என்ன என்று பார்ப்போம். Electric Vehicle தமிழ்நாட்டில் மின்சார வாகன விற்பனை அதிகரிப்பு! – பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமா? தேசிய அளவில் இந்தியாவில் 2015-ல் FAME (Faster Adoption and Manufacture of Electric … Read more

ஐ.ஏ.எஸ்.அதிகாரி கதிரவன் திடீர் மரணம் – முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்..

சென்னை: நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி கதிரவன் பணி நிமித்தமாக சென்னை வந்திருந்த நிலையில், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார்.  அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சேலம் ஏற்காடு மலையடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு டேன்மேக் நிறுவனத்தின் முன்னாள் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்தவர் கதிரவன். சேலம் டேன்மேக் நிறுவனத்தின் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் இருந்தது. இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், … Read more

இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவு!

ஜகார்ட்ட: இந்தோனேசியாவின் தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.