"ரஜினி, தனுஷ் பல்டியடித்து; அரிவாளால் வெட்டி சாதியை ஒழிக்க முடியாது!" – இயக்குநர் லீனா மணிமேகலை

எந்த அரசியல் பின்புலமும் செல்வாக்கும் இல்லாத எளிய பின்னணியிலிருந்து வந்த என் கலை வெளிப்பாட்டுச் சுதந்தரத்தையும் வழிபாட்டுணர்வு சுதந்திரத்தையும் இந்திய அரசியலமைப்பு காப்பாற்றியுள்ளது. அதனால், இந்த இடைக்காலத் தடையை இந்துத்துவ பாசிச ஆட்சியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் விடுத்திருக்கும் எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன். ‘காளி’ என்ற ஆதிப்பெண் வடிவம் எல்லோருக்குமானது. இந்துத்துவவாதிகள் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்ற செய்தியையும்தான், இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது – உறுதியுடனும் உற்சாகத்துடனும் பேசுகிறார் இயக்குநர் லீனா மணிமேகலை. லீனா மணிமேகலை ‘காளி’ ஆவணப்பட போஸ்டர் … Read more

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 90-யை தொட்ட பலி எண்ணிக்கை!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 90 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் பாகிஸ்தானில் திங்கட்கிழமை பொலிஸ் தலைமையகத்திற்குள் உள்ள மசூதியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 90 பேர் கொல்லப்பட்டு உள்ள நிலையில், 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  BREAKING: Pakistan mosque bombing death toll reaches 90 — … Read more

குட்கா விவகாரம்: மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டுவருவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்…

சென்னை: குட்கா தடையை நீதிமன்றம்  நீக்கிய நிலையில், இது தொடர்பாக  மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டுவருவோம் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். இன்று கோவையில், ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,   இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை  மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்தல் மற்றும் மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மருத்துவர்கள், நோயாளிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழ்நாட்டில் குட்கா விற்பனையை தடுக்க, தேவைப்பட்டால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவோம் … Read more

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூரில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பெரிய முடிவுகளை எடுத்துள்ளது: ஜனாதிபதி| The central government has taken major decisions: the President

புதுடில்லி: பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு சட்டம் ஒத்து முதல் முத்தலாக் ரத்து சட்டம் வரை, அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. சர்ஜிக்கல் தாக்குதல் முதல் பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நடவடிக்கை வரையிலும், எல்லை கட்டுப்பாடு, பகுதியில்உரிய பதிலடி முதல் பல நடவடிக்கைகளை மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார். புதுடில்லி: பார்லிமென்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரை: காஷ்மீர் சிறப்பு சட்டம் ஒத்து முதல் … Read more

சென்னை: நோயாளியைப் போல நடித்த கொள்ளையர்கள்; டாக்டரின் நண்பரே கொள்ளையடிக்கத் திட்டமிட்டது ஏன்?

சென்னை சோழிங்கநல்லூர் காந்தி நகரில் டாக்டர் சதீஷ்குமார் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த 28.01.2023-ம் தேதி இரவு கிளினிக்கை சதீஷ் மூட தயாரான போது அங்கு இரண்டு பேர் வந்தனர். அவர்களில் ஒருவன் தனக்கு காலில் அடிப்பட்டிருக்கிறது என்று டாக்டரிடம் கூறினான். உடனே டாக்டர் சதீஷ்குமார், அந்த நபருக்கு சிகிச்சை அளித்தார். அப்போது திடீரென ஒருவன், மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பீரேயை சதீஷ்குமாரின் முகத்தில் அடித்தார். அதனால் அவர் நிலைதடுமாறினார். இதையடுத்து, … Read more

இந்தியா வந்த சுவிஸ் இளம்பெண்ணை ஏமாற்றிய மூன்று ஆண்கள்…

இந்தியாவுக்கு வந்த சுவிஸ் நாட்டு இளம்பெண்ணிடம் மோசடி செய்த மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தாஜ்மகாலுக்கு வந்த சுவிஸ் இளம்பெண் இந்தியா வந்துள்ள சுவிஸ் நாட்டவரான இசபெல் என்னும் பெண், நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை, பிரபல சுற்றுலாத்தலமான தாஜ்மகாலைக் காணச் சென்றுள்ளார். அவருக்கு கைடாக செயல்பட்ட ஃபர்கான் அலி என்பவர், ஹைதர் அலி என்பவருடைய கடையில் ஷாப்பிங் செய்ய ஆலோசனை கூறியுள்ளார். அங்கு மார்பிளால் செய்யப்பட்ட செஸ் போர்டு ஒன்றை வாங்கியுள்ளார் இசபெல். கடையில் வேலை செய்யும் … Read more

சென்னையில் 81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு! அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு தகவல்கள்…

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் வசிக்கும் மக்களில்  81 சதவீதம் பேருக்கு வைட்டமின்-டி சத்து குறைபாடு உள்ளது என்பது ஆய்வில்  தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் 76 சதவிகிதம் பேருக்கு வைட்டமின் டி குறைபாடு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. வைட்டமின் டி பெற சூரிய ஒளி முக்கியம். ஆனால், நகர வாழ்க்கையில் பெரும்பாலோர் சூரியனை காண்பதே அரிதாக உள்ளது. இதனால், வைட்டமின் டி குறைவு காரணமாக நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைட்டமின்-டி பல வழிகளில் … Read more

ஆந்திராவில் கொதிகலன் வெடித்து 2 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திரா மாநிலம் அச்யுதபுரத்தில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கொதிகலன் வெடித்து 2 பேர் உயிரிழந்தனர். லாலன் கோடூர் கிராமத்தில் உள்ள ஜி.எஃப்.எம்.எஸ். பார்மா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்தது.

உ.பி.,யில் மதமாற்றம் செய்தால் 10 ஆண்டு சிறை: யோகி ஆதித்யநாத் | 10 years imprisonment for conversion: Yogi Adityanath

மும்பை: உ.பியில் இப்போது யாரும் மதமாற்றத்தில் ஈடுப்பட முடியாது. அவ்வாறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், குற்றவாளி 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதியத்நாத் கூறியுள்ளார். மும்பையில் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள ஜாம்னரில் நடந்த நிகழ்ச்சியில் உ.பி முதல்வர் யோகி பேசியதாவது: நாம் சாதி மற்றும் பிராந்திய பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும். இதையடுத்து நமது முன்னேற்றத்தை தடுக்க, யாராலும் தடுக்க முடியாது. உ.பியில் சட்ட விரோதமாக மதம் மாற்றுவதை தடுக்கும் சட்டம், நவம்பர் … Read more