“ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது!" – சிவசேனா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

மகாராஷ்டிராவில், கடந்த ஆண்டு ஆளும் சிவசேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பிரிந்து பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால், உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. அதோடு இதற்கு காரணமான ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் புதிய முதல்வராகவும் ஆனார். உத்தவ்-ஷிண்டே இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் மகாராஷ்டிரா ஆளுநர் சார்பில் வாதிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்தியா ஒரு பல கட்சி ஜனநாயகம். இங்கு … Read more

அண்டை நாட்டுக்கு தப்பிய உக்ரைன் ஜனாதிபதி: 140 மில்லியன் டொலர் சொத்துக்களை கைப்பற்ற சுவிஸ் நடவடிக்கை

உக்ரைன் நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சொந்தமான 140 மில்லியன் டொலர் சொத்துக்களை கைப்பற்ற சுவிட்சர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. மக்கள் போராட்டம் இதன்பொருட்டு ஃபெடரல் நிர்வாக நீதிமன்றத்துடன் இணைந்து நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றில் சுவிஸ் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. @reuters உக்ரைனின் முன்னாள் ஜனாதிபதி Viktor Yanukovich கடந்த 2014ல் மக்கள் போராட்டம் காரணமாக பதவியை துறந்தார். அத்துடன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் தப்பி சென்றார். இந்த நிலையில் சுவிட்சர்லாந்தில் அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி, … Read more

ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை! தேர்தல் அலுவலர் பேட்டி

ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோட்டில் வாக்காளர்கள் சிறை வைக்கப்படவில்லை என அம்மாவட்ட தேர்தல் அலுவலர்  தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் அனைவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். திமுகவினர் வாக்காளர்களை சிறை வைத்துள்ளதாகவும், பணம் கொடுத்து … Read more

பி.பி.சி., அலுவலகத்தில் முடிந்தது 60 மணி நேர ஆய்வு பணி: நாளையும் தொடரும் என தகவல் ?| 60-hour probe completed at BBC office: information to continue tomorrow?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : சர்வதேச ஊடக நிறுவனமான, பி.பி.சி.,யின் புதுடில்லி அலுவலகத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று நடந்த வருமான வரித் துறையினர் ஆய்வு பணியை நிறைவு செய்தனர். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த பி.பி.சி., நிறுவனம், பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம்2002ல் குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப் படத்தை வெளியிடுவதாக அறிவித்தது. அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், கலவரத்துக்கும் தொடர்பு உள்ளதுபோல் தயாரிக்கப்பட்டுள்ளதாக … Read more

விருதுநகர்: கேக்கில் விஷமருந்து தடவிக்கொடுத்து மகள்களைக் கொல்ல முயன்ற தந்தை? – போலீஸ் விசாரணை

விருதுநகரில் தந்தையே, தன் சொந்த மகள்களுக்கு கேக்கில் விஷமருந்து தடவிக்கொடுத்து கொலைசெய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸாரிடம் விசாரிக்கையில், “விருதுநகரை அடுத்த சின்னபோராலி பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 37) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவருக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். மோகனின் மனைவி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி இறந்ததிலிருந்து மனஉளைச்சலுடன் இருந்து வந்த மோகன் தன்னுடைய இரண்டு மகள்களை வளர்ப்பதற்கு சிரமப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவி இறந்த துக்கம்தாளாமல், … Read more

மாதவிடாய் நாட்களில் விடுமுறை: முதல்முறையாக சட்டமியற்றும் ஐரோப்பிய நாடு

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்று இறுதி ஒப்புதல் அளித்துள்ளது. முதல் ஐரோப்பிய நாடு மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அத்தகைய விடுப்பு வழங்கும் சட்டத்தை முன்வைக்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் எனவும் கூறுகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 185 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவாகியுள்ளது. மாதவிடாய் கால விடுப்பு என்பது உலகில் மிக சில நாடுகளில் மட்டுமே … Read more

ரூ.6.40 லட்சம் கோடியில் 470 விமானங்களை வாங்குகிறது ஏர் இந்தியா!

டெல்லி: டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் வகையில், ஏர்பஸ் மற்றும் போயிங்கிலிருந்து மொத்தம் 470 அகலமான மற்றும் குறுகிய  விமானங்களை வாங்குவதாகக் அறிவித்து உள்ளது. மேலும் மொத்த ஒப்பந்த மதிப்பு 80 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 6.40 லட்சம் கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இந்த நிறுவனத்தை கடந்த ஆண்டு டாடா நிறுவனம் … Read more

தேர்தல் நேரத்தில் அவதூறு, பொய் புகார்களை பரப்புவதே ஓபிஎஸ் தரப்பின் வேலையாக உள்ளது: எடப்பாடி தரப்பு சாடல்

சென்னை: தேர்தல் நேரத்தில் அவதூறு, பொய் புகார்களை பரப்புவதே ஓபிஎஸ் தரப்பின் வேலையாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்துள்ளது. பணம் தந்து பதவி வாங்கலாம் என்ற நோக்கம் யாருக்கு இருக்கிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவும் எடப்பாடி தரப்பு கூறியுள்ளது.

தனியார் விடுதியில் பாலியல் தொழில்; சென்னையில் அடைத்து வைக்கப்பட்ட ஏழு பெண்கள் மீட்கப்பட்டது எப்படி?

சென்னை, வடபழனி கனகப்பா தெருவில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டுவருகிறது. இந்த விடுதியில் சந்தேகப்படும்படி பலரும் வந்துபோவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தகவலையடுத்து, அந்த விடுதியின் செயல்பாடுகளை பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கண்காணிப்பு செய்தனர். மணிகண்டன் தொடர் கண்காணிப்பில் அந்த விடுதியில் பாலியல் தொழில் நடப்பது தெரியவந்தது. தகவல் உறுதியானதும், பாலியல் தொழில் தடுப்புப் பிரிவு காவலர்கள் அந்த விடுதியில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, … Read more

விமர்சனங்களை எதிர்கொள்ளும் மெஸ்ஸி., கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ரொனால்டோ!

மெஸ்ஸி ரசிகர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் அதே நேரத்தில், கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து போட்டிகளைத் தாண்டி வெளியே மில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்துவருகிறார். கால்பந்து உலகின் ஜாம்பவான்களான லியோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் ஓய்வு பெறும் வரை எல்லாவற்றிலும் ஒப்பிடப்படுவார்கள் என்பது எழுதப்படாத விதி. அது அவர்கள் ஓய்வுபெற்றாலம் தொடர வாய்ப்புள்ளது. மெஸ்ஸி மீது விமர்சன மழை சமீபத்தில் UEFA சாம்பியன்ஸ் லீக்கில் Bayern Munich-க்கு எதிரான Paris Saint-Germain-ன் ஆட்டத்திற்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி மீது விமர்சன … Read more