குடியரசு தினத்திற்கு கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடு| Google Releases Special Doodle For Republic Day

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: நாட்டின் குடியரசு தினத்தை கொண்டாடும் வகையில், இன்று(ஜன.,26) கூகுள் இணைய பக்கத்தின் முகப்பில் கூகுள் சிறப்பு ‘டூடுல்’ வெளியீட்டுள்ளது. ஆண்டும் தோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு, கூகுள் சிறப்பு டூடுல் வெளியீடுவது வழக்கம். நாட்டின் 74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இணைய தேடு பொறி நிறுவனங்களில் முதன்மை நிறுவனமான கூகுள் நிறுவனம், இணைய பக்கத்தின் முகப்பில் கூகுள் சிறப்பு ‘டூடுல்’ வெளியீட்டுள்ளது. கூகுள் … Read more

ஃபேஸ்புக் விளம்பரம்; காளை மாடுகளை ரூ.95,000-க்கு ஆர்டர் செய்து ஏமாந்த விவசாயி! – போலீஸில் புகார்

ஃபேஸ்புக் ஒரு காலத்தில் வெறுமனே நட்பு கோரிக்கைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஃபேஸ்புக் மார்க்கெட் தளமாக மாறியிருக்கிறது. அதிகமானோர் தங்களது பொருள்களை பேஸ்புக் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். சாதாரணமாக வீட்டில் பொருள்கள் தயாரிப்பவர்கள்கூட தங்களது பொருள்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு விற்பனை செய்கின்றனர். அதோடு தேவைப்படும் ஆட்களை வேலைக்கு எடுக்கவும் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். மேலும் விலங்குகள்கூட ஃபேஸ்புக் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயி ஃபேஸ்புக் மூலம் ரூ.95,000-க்கு … Read more

தாய்ப்பால் தானம் செய்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பெண்

தமிழகத்தில் 10 மாதங்களில்  135 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் ஸ்ரீவித்யா. கோயம்புத்தூரின் வடவள்ளி அருகே பி.என்.புதூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா(27), இவருக்கு அசிந்தியா (வயது 4) என்ற மகனும், ப்ரக்ருதி (10 மாதம்) என்ற மகளும் இருக்கின்றனர். மகள் பிறந்த 5வது நாளில் இருந்தே தாய்ப்பாலை தானம் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா. திருப்பூரைச் சேர்ந்த ரூபா செல்வநாயகி என்பவர் நடத்தி வரும் பவுண்டேசன் மூலமாக, ஸ்ரீவித்யா வழங்கி வருகிறாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், … Read more

குடியரசு கொண்டாட்டம்….

குடியரசு கொண்டாட்டம்…. பா. தேவிமயில் குமார் கொடியையும் குடிகளையும், காத்திடும் சட்டங்கள்!!! கவசமாய் நமக்கு! காலமெல்லாம் சட்டங்கள்! எளியவனின் குரலும் ஓங்கும் உயரமான இடங்களில் கூட, ஒவ்வொரு நாளும்! ஒரு நீதியால்!! தாயவள் அன்போடு தகை சால் இராணுவ வீரர்களின் காக்கும் பணியை கருத வேண்டும்!!! சட்டப் போராட்டம் செய்யுமிடங்களுள் சப்தங்களை உற்று கேட்கும் உரிமை வரிகள்!! ! கடமைகளை செய்யும் கண்ணிய மனிதர்களை, போற்றுவோம் , வரலாற்று பேரேடுகளில் !!! அரசியல் சாசனத்தை இனி அறிவிப்போம், … Read more

நாட்டின் 74-வது குடியரசு தின விழா: தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

டெல்லி: நாட்டின் 74வது குடியரசு தினமான இன்று டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். மேலும் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மரியாதை செலுத்தினார்.

குடியரசு தினம்; தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி| President Droupadi Murmu leads the nation in celebrating Republic Day

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : நாட்டின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு டில்லி கர்த்வயா பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. டில்லி கர்த்வயா பாதையில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றினார். இந்நிகழ்வின்போது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் … Read more

திருப்பூர்: இறைச்சிக்காக காட்டுப் பன்றி வேட்டை; துப்பாக்கியுடன் கிளம்பியவர்களை மடக்கிய போலீஸ்!

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி, சாமராயபட்டி, கொழுமம், குமரலிங்கம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இந்தக் கிராமங்களில் அதிக அளவில் கரும்பு மற்றும் மக்காச்சோளம் பயிரிடப்படுவதால், அவற்றை உண்ண காட்டுப் பன்றிகள் விவசாய நிலங்களைத் தேடி வருவது வழக்கம். காட்டுப்பன்றி இவ்வாறு வரும் காட்டுப் பன்றிகளை, சிலர் வேட்டையாடி வருவதாக போலீஸார் மற்றும் வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது. இந்த நிலையில், சாமராயபட்டி பெருமாள்புதூர் பிரிவு அருகே நேற்றைய தினம் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று … Read more

விவாகரத்தை கொண்டாடிய பெண்! வைரலாகும் பெண்ணின் உருக்கமான பதிவு

இந்தியாவில் பெண் ஒருவர் விவாகரத்து ஆகி நான்கு ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இணையத்தில் இட்ட பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சாஸ்வதி சிவா என்ற பெண்ணே இவ்வாறு தனது விவாகரத்தின் பின்னரான வாழ்க்கை குறித்த பதிவு ஒன்றை சமூக ஊடகங்களில் இட்டுள்ளார். பொதுவாக திருமண பந்தத்தில் இருந்து அதனை கொண்டாடும் வகையில் ஆண்டு நிறைவு பதிவுகள் இடுவதனை நாங்கள் பார்த்திருக்கின்றோம். எனினும் சாஸ்வாதி சற்றே வித்தியாசமாக விவாகரத்தான நாளை நினைவு கூர்ந்து லிங்கிடேன் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றில் … Read more

74வது குடியரசு தின விழா: மாவட்ட தலைநகரங்களில் கொடியேற்றினர் மாவட்ட ஆட்சியர்கள்…

சென்னை; நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடியை ஏற்றினர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக … Read more

தமிழ்நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாவட்ட ஆட்சியர்கள் மரியாதை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் 112 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். மதுரையில் 37 பயனாளிகளுக்கு ரூ.28.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் அனீஷ் சேகர் வழங்கினார். திருவாரூரில் 705 பயனாளிகளுக்கு ரூ.2.06 கோடி மதிப்பிலான திட்டங்களை ஆட்சியர் காயத்ரி வழங்கினார்.