ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை அழிக்கப் பார்க்கிறது மத்திய பாஜக அரசு! ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை; ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்க பார்ப்பதாகவும், இந்தி பேசாத மக்கள் மீது இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது என்று மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகள் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில், திருவள்ளூரில் வீர வணக்கநாள் கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.  நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இன்று தமிழ்நாடு … Read more

சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு

சென்னை: சென்னையில் நடந்த குடியரசு தின விழா அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்ற காவல்துறை ஊர்திக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. தீயணைப்பு துறை ஊர்திக்கு 2-ம் பரிசு, செய்தி மக்கள் தொடர்புத் துறை ஊர்திக்கு 3-ம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் திருமணம்: மாமனார் தந்த ரூ.50 கோடி வீடு; சல்மான் தந்த கார்; பிரபலங்களின் பரிசுகள்…

நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி இரண்டு நாள்களுக்கு முன்பு கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு சுனில் ஷெட்டியின் கண்டாலா பண்ணை வீட்டில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தது. திருமண தம்பதிக்கு பாலிவுட் வட்டாரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோடிகளில் பரிசுப்பொருள்களை வழங்கியிருக்கின்றனர். சுனில் ஷெட்டி தன் மருமகனுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான வீட்டை வரதட்சணையாகக் கொடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இந்த வீடு மும்பையில் இருக்கிறது. இது … Read more

பாம்புடன் செல்பி எடுத்து கொஞ்சல்! திடீரென நேர்ந்த விபரீதம்

பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (வயது 28), ஜூஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையிலிருந்து வீட்டிற்கு வந்தபோது பேருந்து நிலையம் அருகே பாம்பாட்டி ஒருவர் வித்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனைக்கண்ட மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டார், இதனை பாம்பாட்டியிடம் சொன்ன போது அவர் ஒப்புக்கொள்ளவில்லை. File Photo காசு தருவதாக கூறி பாம்பாட்டியிடம் ஆசை வார்த்தை … Read more

‘பாரத தேசம் என்று தோள் கொட்டி’ மாணவர்கள் அதகள ‘ரிப்பீட்டு’… தமிழ்நாட்டில் குடியரசு தின விழா கோலாகலம்…

74வது இந்திய குடியரசு தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் நடைபெற்று வரும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய நடனம், பொய்க்கால் குதிரையாட்டம் என பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் இந்த பல்வேறு … Read more

நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் இசை, நடன நிகழ்ச்சி மற்றும் ராணுவத்தினரின் சாகச நிகழ்ச்சி

டெல்லி: நாட்டின் 74வது குடியரசுதின விழாவில் டெல்லியில் பெண்சக்தியை கருத்தாக கொண்ட கலை நிகழ்ச்சியில் 479 கலைஞர்கள் பங்குபெற்ற இசை, நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து ராணுவத்தினரின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்தியாவின் ராணுவ பலம்: குடியரசு அணிவகுப்பில் ஆயுதங்கள் வலம்| The Republic Day Parade has started

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்தியாவின் 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கர்த்வயா பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, குடியரசு தின அணிவகுப்பு துவங்கியது. முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை முர்மு ஏற்று கொண்டார். பரம்வீர் சக்ரா மற்றும் அசோக் சக்ரா விருது பெற்றவர்களுடன் இந்த அணிவகுப்பு துவங்கியது. இதனை தொடர்ந்து, குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. தற்போது, உலகிலேயே, இந்தியாவில் மட்டும் தான் குதிரைப்படை … Read more

“பாஜக இந்தியைத் திணிக்க முயன்றால், வார்டு கவுன்சிலரைக்கூட வெற்றி பெற முடியாது!" – டி.டி.வி.தினகரன்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அ.ம.மு.க சார்பில் நேற்று இரவு நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தி மொழியைத் திணிக்கும் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வளராது. தமிழகத்தில் இந்தி மொழியைத் திணிக்க முயன்ற காங்கிரஸால், அதன் பிறகு ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த நிலையை பா.ஜ.க நன்கு உணர்ந்திருக்கிறது. அது போன்ற ஒரு விபரீத முடிவை பா.ஜ.க எடுக்காது. பா.ஜ.க தமிழகத்தில் இந்தியைத் திணிக்க … Read more

காணாமல் போன 4 வயது சிறுவன்..சடலமாக சுமந்து வந்து கரை சேர்த்த முதலை..அதிர்ந்த மக்கள்

இந்தோனேசியாவில் காணாமல் போன சிறுவனை, முதலை ஒன்று கொண்டு வந்து சேர்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு நாட்களாக தவித்த குடும்பம் கிழக்கு காலிமண்டான் மாகாணத்தில் உள்ள ஜாவா முகத்துவாரம் அருகே முகமது ஜியாத் விஜயா என்ற 4 வயது சிறுவன் காணாமல் போனதாக கூறப்பட்டது. சிறுவன் காணாமல் போய் இரண்டு நாட்கள் ஆனதால் குடும்பத்தினர் மிகுந்த வேதனையில் இருந்தனர். அப்போது முதலை ஒன்று முகமது ஜியாத்தின் உடலை சுமந்துகொண்டு வந்து கரையில் சேர்த்தது. @Newsflash சுமந்து … Read more

74வது குடியரசு தின விழா: டெல்லி கடமை பாதையில் முதன்முறையாக கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு! வீடியோ

சென்னை: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், டெல்லியில் உள்ள கடமை பாதையில் (ராஜபாதை) குடியரசு தலைவர் திரவுபதி முர்மு முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றினார். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில், முதன்முறையாக எகிப்து அதிபல் அல் சிசி கலந்து கொண்டு சிறப்பித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென … Read more