தலைப்பு செய்திகள்
உங்களை விட எங்களுக்கு வேதனை அதிகம்! உலகக்கோப்பை தோல்வி குறித்து அஸ்வின் கருத்து
உலகக்கோப்பை தோல்வி குறித்த விமர்சனங்களுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார். 300 மடங்கு வேதனை டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதன் விளைவாக இந்திய அணி மீது ரசிகர்கள் இடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தமிழக வீரர் அஸ்வின் சமீபத்திய வீடியோ ஒன்றில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்தார். @Getty Images அவர் கூறுகையில், ‘இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் … Read more
11 மாதங்களில் 255 திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
வேலூர்: 11 மாதங்களில் 255 திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூகநலத் துறை, குழந்தைகள் பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், கடந்த ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை வேலூரில், 83, திருப்பத்தூரில் 37, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 107, திருவண்ணாமலையில், 28 என மொத்தமாக 4 மாவட்டங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பின் ட்வீட்டர் கணக்கு செயல்பட தொடங்கியது
அமெரிக்கா: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பின் ட்வீட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியது. டிரம்பின் டிவிட்டர் கணக்குக்கு விதித்த தடையை நீக்குவதாக எலான் மஸ்க் அறிவித்ததை அடுத்து மீண்டும் செயல்பட தொடங்கியது. வன்முறையை தூண்டுவதாகக் கூறி டொனல்டு டிரம்பின் டிவிட்டர் கணக்கு 22 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
கள்ளக்காதலியின் மகள் கொலை; மும்பையில் குற்றவாளி கைது: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar
கள்ளக்காதலியின் மகள் கொலை; மும்பையில் குற்றவாளி கைது பூந்தமல்லி: சென்னை புறநகரான, பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்தவர் அம்சவள்ளி, 35. கணவரை பிரிந்து, தன் மகள் சங்கீதா, 18, உடன் தனியாக வசித்து வந்தார். இவருக்கு, ராஜு, 38, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. சங்கீதாவுக்கு, அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த வாரம், வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை, கழுத்தை நெரித்து ராஜு கொலை செய்து மாயமானார். பிரேத பரிசோதனையில், சங்கீதா … Read more
கனமழை எச்சரிக்கை வாபஸ்: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: இன்று விடப்பட்டிருந்த மிக கனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்படுவதாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கிய மிக கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுவிட்டது. இந்நிலையில் நேற்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் வழங்கப்பட்ட மிக கனமழை எச்சரிக்கைக்கான அறிவுரைகள் திரும்ப பெறப்படுகின்றன.
ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இருவர்..கைப்பற்றப்பட்ட மரண ஆயுதங்கள்
அமெரிக்காவில் ஜெப ஆலயங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக 22 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நியூயார்க்கில் ஜெப ஆலயங்களுக்கு இருவர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அறிந்த பொலிஸார், Aquebogue-ஐ சேர்ந்த கிறிஸ்டோபர் பிரவுன்(22) என்பவரையும், மான்ஹாட்டனைச் சேர்ந்த மாத்யூ மஹ்ரர்(22) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிரவுன் மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஆனால் அவர் சமீபத்தில் நியூயார்க் சென்று துப்பாக்கியை வாங்க ஆர்வமாக இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி இதற்கிடையில், கைது … Read more
உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா
ஜெனீவா: உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.28 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.25 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.19 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவ-20: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பின்போது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! பரபரப்பு காட்சிகள்
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பின்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் அணிவகுப்பு வடக்கு கரோலினாவில் கிறிஸ்துமஸ் அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதற்காக ட்ரக் வாகனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வாகனத்தின் பின்புறம் இணைக்கப்பட்ட மிதவை பகுதியில் நடனக் குழு கலைஞர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் சில ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் அடங்குவர். அணிவகுப்பின்போது குறித்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சிறுமி ஒருவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில் குறித்த … Read more