தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக.கனமழையும், 6 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூரை வீட்டின் மீது சாய்ந்த புளியமரம்| Dinamalar

புதுச்சேரி: மாண்டஸ் புயலால் புதுச்சேரியில் இரண்டு கூரை வீடுகள் மீது வேரோடு சாய்ந்த புளிய மரத்தை பேரிடர் மீட்பு படையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் வெட்டி அகற்றினர். புதுச்சேரி கிருமாம்பாக்கம், பிள்ளையார் குப்பம் அங்காளம்மன் கோவில் வீதியில், செல்வராணி மற்றும் லட்சுமணன் என்பவர் கூரை வீட்டின் மீது நேற்று நள்ளிரவு வீசிய மாண்டஸ் புயல் காற்றால் வீட்டின் அருகில் இருந்த 100 வருட பழைமை வாய்ந்த புளிய மரம் வேரோடு சாய்ந்து இரண்டு கூரை வீடுகள் மீது … Read more

FIFA World Cup Round up 2022: எக்ஸ்ட்ரா டைமில் சாதனை படைத்த குரோஷியா டு மெஸ்ஸியின் நெகிழ்ச்சி வரை!

1. குரோஷியா அணியும் எக்ஸ்ட்ரா டைமும்: உலகக் கோப்பை காலிறுதி போட்டியில் பிரேசில் அணியும் குரோயேசியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணியினரும் சம நிலையில் இருந்ததால் பெனால்டி சூட்- அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டு குரோயேசியா அணி வெற்றி பெற்றது. கடந்த உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 மற்றும் காலிறுதி போட்டிகளையும் குரோஷியா பெனால்டி சூட் அவுட்டிலேயே வென்றிருந்தது. மேலும், அரையிறுதி போட்டியை கூட எக்ஸ்ட்ரா டைமில்தான் வென்றிருந்தது. இந்த உலகக்கோப்பையில் … Read more

தன் கண்ணிமைகளில் உயிரினம் ஒன்று குடித்தனம் நடத்துவதை அறிந்து அதிர்ச்சியடைந்த நபர்

மனித கண்ணிமைகளில் வாழும் உயிரினம் ஒன்றைக் குறித்துக் கேள்விப்பட்ட ஒருவர், தன் கண்ணிமைகளில் அப்படி ஏதாவது உயிரினம் வாழ்கிறதா என கண்டுபிடிக்க விழைந்துள்ளார். மனித கண்ணிமைகளில் வாழும் உயிரினம் ஆய்வகத்தில் பணி செய்யும் Dave என்பவர், மைக்ரோஸ்கோப்களை பயன்படுத்துபவர் என்பதால், தன் கண்ணிமைகள் சிலவற்றைப் பிடிங்கி அவற்றைப் பரிசோதித்தாராம். அப்போது, தன் கண்ணிமைகளில் Demodex folliculorum என்னும் அந்த உயிரினங்கள் ஜோடியாக வாழ்வதைக் கண்டுபிடித்துள்ளார் Dave. Image: Getty Images/iStockphoto மனித முகத்தில் குடித்தனம் நடத்தும் உயிரினம் … Read more

இமாச்சல பிரதேச அரசியலில் புதிய திருப்பம்: 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அருதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், அங்கு சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர். ஆனால், முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டியிடுவதால், மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி  அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. 68 இடங்களைக்கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற்றது. இந்த வாக்குகள் ஒரு … Read more

புயல் பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது

சென்னை: புயல் பாதிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. பல்வேறு பகுதிகளில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.

சாலையோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கடன் திட்டம் 2024 டிசம்பர் வரை நீட்டிப்பு!

சாலையோர வியாபாரிகள் பயனடைய ஏதுவாக, சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வா நிதி) திட்டம் அடுத்தாண்டு டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மக்களவையில் மத்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள சாலையோர வியாபாரிகளின் நலன் கருதி, அவர்களின் வணிக முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வாநிதி) என்ற கடன் திட்டம் செயல்படுத்தப்பட்ட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி சாலையோர வியாபாரிகளுக்கு … Read more

புயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை …

சென்னை: மாண்டஸ் புகல் நள்ளிரவு கரையை கடந்து, அதனால் ஏற்பட்ட சேதங்களை தமிழகஅரசு சரி செய்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என  அதற்கான உதவி எண்ணை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 10 மணிக்கு கடக்கத் தொடங்கிய இந்த புயல் அதிகாலை 3மணி அளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக கூறப்படுகிறது. இந்த புயல் பாதிப்பு … Read more

மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்னர் என சென்னை காசிமேட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார். புயல், மழை பாதிப்புகளை அகற்ற பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றி. மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ளது. மழை அதிமாக பெய்தாலும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்து தடையின்றி செயல்படுகிறது. மக்களின் ஒத்துழைப்பால் தான் பெருமளவு பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் … Read more

நிச்சயத்துக்கு சில மணிநேரத்துக்கு முன்… பெண் மருத்துவரை வீடு புகுந்து கடத்திய கும்பல்! | Video

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் அதிபட்லா பகுதியில் வசிப்பவர் வைஷாலி (24). இவர் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று அவருக்கு நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சுமார் 50 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல், ஆயுதத்துடன் வைஷாலி வீட்டில் புகுந்து, வீட்டில் உள்ள பொருள்களை சேதப் படுத்தியதுடன், அவரை வலுகட்டாயமாக காரில் கடத்திச் சென்றிருக்கிறது. மேலும், அவரின் … Read more