“ஈரோடு கிழக்கில் பாஜக தனித்துப் போட்டியா… இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும்!" – கே.பி.ராமலிங்கம்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பணிகள் தொடர்பாக பா.ஜ.க சார்பில் ஆலோசனைக்கூட்டம், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் வி.சி.வேதானந்தம் தலைமையில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை வகித்து தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் கே.பி.ராமலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பா.ஜ.க-வின் மாநில செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, ஈரோடு கிழக்குத் தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் … Read more

நெஞ்சில் அடி வாங்கிய பின் 95 ஓட்டங்கள் விளாசல்! முகத்தில் அடிபட்டு வெளியேறிய வீரர்கள்..வலியால் கிடைத்த வெற்றி

பிக் பாஷ் லீக் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி போராடி வெற்றி பெற்றது. பான்கிராப்ட் 95 பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதிய போட்டி பெர்த் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய பெர்த் அணி 5 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக பான்கிராப்ட் 95 ஓட்டங்களும், எஸ்கினஸி 54 ஓட்டங்களும் விளாசினர். பெர்த் அணி இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே டேவிட் மூடி வீசிய பந்து பான்கிராப்ட்டை தாக்கியது. இதனால் அவருக்கு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கட்சி மேலிடம் அதிகாரபூர்வ அறிவிப்பு…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா.-வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. திடீர் மரணத்தை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 ம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கியது தி.மு.க. காங்கிரஸ் சார்பில் தனது மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக நிறுத்த கோரிக்கை … Read more

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா: மா.சுப்பிரமணியம்

சென்னை: சென்னையில் கடந்த பருவ மழையின் போது இரவு பகலாக பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். வரும் 31-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

மோசமான ஆண்களை, பெண்கள் தொடர்ந்து நம்புவது ஏன்? – காமத்துக்கு மரியாதை | S 3 E 26

காதலிக்கும் பெண்ணையோ அல்லது தன்னை திருமணம் செய்துகொண்ட பெண்ணையோ ஆண்கள் கை ஓங்குவதும், கெட்ட வார்த்தைகள் சொல்லித் திட்டுவதும், அதிகபட்சமாக எதிர்பாராமல் அல்லது திட்டமிட்டுக் கொலை செய்வதும் நம் சமூகத்தில் நடந்துகொண்டேதான் இருக்கிறது. சமீபத்தில்கூட, தன்னுடன் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்து, டெல்லியில் ஆங்காங்கே வீசிய ஆணை பற்றிய  செய்தியைப் படித்து நாடே பதறியது. இப்படிப்பட்ட ஆண்கள் ஒரே நாளில் கொலை வரை சென்றிருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களுடைய மோசமான இயல்பை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தி … Read more

கர்ப்பமான பிறகு கணவனைப் பற்றி தெரியவந்த அதிர்ச்சியூட்டும் உண்மை! தெரியாமல் நடந்த திருமணம்

அமெரிக்காவில் திருமணமாகி கர்ப்பமான பிறகு தனது கணவர் யார் எனும் அதிர்ச்சியூட்டும் உண்மை பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. டிக்-டோக்கில் பிரபலமான பெண் அமெரிக்காவில் டிக்-டோக்கில் 3,00,000 பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலமான பெண் ஒருவர், தான் திருமணம் செய்துகொண்ட நபர் தனது உறவினர் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்ததாக சமீபத்தில் வெளிப்படுத்தினார். அவர் கர்பமானதையடுத்து தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர்களைத் தேடிக்கொண்டிருந்தபோது இந்த அதிர்ச்சியூட்டும் உண்மையை அவர் கண்டுபிடித்துள்ளார். TikTok @Marcella Hill தற்செயலான திருமணம் அமெரிக்காவின் உட்டா மாகாணத்தைச் சேர்ந்த … Read more

கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி நாளை திருமணம்… சுனில் ஷெட்டி பரபரப்பு பேட்டி…

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி மற்றும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் திருமணம் நாளை நடைபெற இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கே.எல். ராகுல் – அதியா ஷெட்டி இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களுக்கு திருமணம் செய்துவைக்கப் போவதாக சுனில் ஷெட்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் இவர்கள் திருமணம் நாளை 23ம் தேதி காந்தலா பகுதியில் உள்ள சுனில் ஷெட்டிக்கு சொந்தமான பண்ணை வீட்டில் நடைபெற இருப்பதாக சமூக வலைதளத்தில் பரபரப்பாகப் … Read more

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியின்போது உயிரிழந்த கணேசன், பூமிநாதன், கோகுல் ஆகிய 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வேட்பாளராக அறிவித்தது காங்கிரஸ் தலைமை!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான திருமகன் ஈ.வே.ரா, கடந்த ஜனவரி 4-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதன்காரணமாக ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வெற்றிடமாக அறிவிக்கப்பட்டது. திருமகன் ஈ.வெ.ரா – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிப்ரவரி 27-ல் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கே … Read more

நீண்ட நாள் காதல்… நிச்சயதார்த்தம் நடந்த அடுத்த நாள் பிரித்தானிய இளம்பெண் மரணம்: பகீர் பின்னணி

பிரித்தானியாவின் சாலிஸ்பரி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தவறான ஸ்பூன் ஒன்றை பயன்படுத்தி பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பால் பொருட்களால் ஒவ்வாமை நீண்ட நாள் காதலருடன் நிச்சயதார்த்தம் நடந்த அடுத்த நாள் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. 24 வயதான Jess Prinsloo பால் பொருட்களால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே இறந்துள்ளதாக நம்பப்படுகிறது. @facebook தமது காதலர் 24 வயதான Craig McKinnon என்பவருடன் தென்னாப்பிரிக்காவுக்கு விடுமுறையை கொண்டாடும் வகையில் சென்றிந்த போதே, இந்த … Read more