ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஓ.பி.எஸ். தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ்

சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். தரப்பு  வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என ஓ.பி.எஸ் தஹ்ராபி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சென்னையில் பன்னீர்செல்வம் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆலோசனையில் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறப்படுவதாகவும் இரட்டை இலை சின்னம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெறுவதாக ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.

தொடரும் அமளி: மூன்றாவது முறையாக மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைப்பு| Continuity of chaos: Postponement of mayoral election again for third time

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: எதிர்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மூன்றாவது முறையாக இன்று(பிப்.,06) மீண்டும் மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கடந்தாண்டு நடந்து முடிந்த டில்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.,104 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜன. 6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அப்போது மாநகராட்சிக்கு நியமன உறுப்பினர்கள் நியமனம், தேர்தல் நடத்தும் அவைத்தலைவர் நியமனம் ஆகியவற்றில், முதல்வர் … Read more

பேச மறுத்ததால் ஆத்திரம்; இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவன்! – போலீஸ் விசாரணை

மும்பை, மீராரோடு பகுதியில் வசிப்பவர் முகேஷ் (22) (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). கல்லூரியில் படித்து வரும் இவர், தனது வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டிலிருந்து இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், முகேஷின் காதலி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அவரை வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், முகேஷ் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று அந்தப் பெண்ணிடம் தெரிவித்திருக்கிறார். … Read more

பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது பொலிசார் வந்ததால் நிகழ்ந்த துயரம்: பிள்ளைகளைப் பிரிந்த தாயின் நிலை

ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சிறுபடகொன்றில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது தன் பிள்ளைகளைப் பிரிந்தார் தாய் ஒருவர். பிரித்தானியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என்று நம்பி எடுத்த முடிவு எரித்ரியா நாட்டவரான ஒரு பெண், தன் நாட்டிலும் பிறகு சூடான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளிலும் சித்திரவதை அனுபவித்ததால், பிரித்தானியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என்றும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும் என்றும் நம்பி, பிரித்தானியாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்து, பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் … Read more

கடைகளில், பேருந்து நிறுத்தங்களில் 2 குப்பை தொட்டிகள்! சென்னை மாநகராட்சி தகவல்…

சென்னை: மாநகராட்சி பகுதிகளில் உள்ள  கடைகளில் 2 குப்பை பெட்டி வைக்க வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி, பேருந்து நிறுத்தங்களிலும் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகரரில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி, அசுத்தம் செய்யப்படும் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி பல நடவடிக்கைகளை வருகிறது. வீடுகளில், குப்பைகளை பிரித்து கொடுக்கும்படியும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பேருந்து  … Read more

செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் இறந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறுவன் தாயார் பிரியாவுக்கு இழப்பீடாக ரூ.7.5 லட்சம், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.2.5லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

சொல்லாமல் நெஞ்சள்ளி போன `வாணியம்மா’! – ரசிகை பகிரும் நினைவலை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் தன் அழகான மென்மையான குரலால் நம்மை ஈர்த்து ஒரு நொடி நம்மை ஆகாயத்தில் பறக்க விடும் அற்புத மங்கை காற்றில் கலந்து இதயத்தை கனக்க வைத்துவிட்டார். தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரை உலகிலும் மறக்க முடியாத குரல். வாணி ஜெயராம் அவர்கள் … Read more

அதிமுக விவகாரம்: பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களுடன் டெல்லி சென்றார் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

சென்னை:  அதிமுக விவகாரம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் சின்னம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதங்களுடன்  அதிமுகவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இன்று காலை விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் சென்றுள்ளார்.  இன்று மாலை அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் படிவங்களை தேர்தல் ஆணையத்தில் அவர் சமர்ப்பிக்க உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அதிமுக பொதுக்குழு வழக்கு … Read more

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல்

பிரித்தானிய இளவரசர் ஹரி, புத்தகம் எழுதுவதாகக் கூறிக்கொண்டு பலருக்கு பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். எப்போதோ நடந்த விடயங்களைக் கிளறும் ஹரி   தன் புத்தக விற்பனைக்காக, எப்போதோ நடந்த விடயங்களை எல்லாம் இப்போது வெளிக்கொண்டுவந்துகொண்டிருக்கிறார் ஹரி. அவை சம்பந்தப்பட்டவர்கள் வாழ்வில் ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்குமா என்ற கவலை கொஞ்சமும் அவருக்கு இல்லை. தானும் தன் முன்னாள் காதலியான Caroline Flackஐயும் அவரது குடும்பத்தினரையும் ஊடகவியலாளர்கள் தொந்தரவு செய்ததால், தாங்கள் இருவரும் பிரிந்துவிடுவது எனவே முடிவு செய்ததாக தனது புத்தகத்தில் … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று 3 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல்

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இன்று 3 சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.