`வெளி உணவுப்பொருள்களுக்கு தடை விதிக்க தியேட்டர்களுக்கு உரிமை உண்டு!’ – உச்ச நீதிமன்றம்

வெளியில் இருந்து உணவு மற்றும் பானங்களை மல்டிபிளக்ஸ்கள், திரையரங்குகளுக்குள் எடுத்துச் செல்வதைக் கட்டுப்படுத்த, திரையரங்க உரிமையாளருக்கு உரிமை உண்டு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில், அம்மாநில அரசு வகுத்துள்ள விதிகளின்படி, திரையரங்குகளில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை அனுமதிக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிஃபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் … Read more

கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.74 கோடியில் 2 உயர் மட்டப் பாலங்கள்! அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சாலை போக்குவரத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதற்காக ஏராளமான பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு, சட்டப்பேரவையிலும் அறிவிக்கப்பட்டு உள்ளது.  சென்னையில் அதிகரித்து வரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் நகர் முழுவதும் 3 மேம்பாலங்களைக் கட்ட சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருப்பதாகவும்,  சிங்கார சென்னை 2.o … Read more

பெரிய மீன் சிக்கியதாக நினைத்த மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: அம்பலமான உண்மை

தாய்லாந்தில் உள்ளூர் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவருக்கு திகிலை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. வலையில் பெரிய மீன் தாய்லாந்தின் Phitsanulok பகுதியில் உள்ள ஆற்றில் அந்த மீனவர் மீன் பிடிக்க சென்றுள்ளார். அவரது வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியதாக கருதியவருக்கு, நான்கு நாட்களுக்கு முன்னர் மாயமானதாக கூறப்படும் இளம்பெண் ஒருவரின் சடலம் சிகியதை அறிந்து உறைந்து போயுள்ளார். @getty ஜனவரி 2ம் திகதி பகல் 10.30 மணியளவிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. தகவலையடுத்து … Read more

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது பணியாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதைப்பொருட்கள் பழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் உத்தரவிட்டார். பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை அதிகப்படுத்த வேண்டும். போதைப்பொருள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரிடம் பிணை முறிவு பத்திரம் மூலம் உறுதிமொழி பெற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார்.

பிரதமர் யாருன்னு விவாதம் வந்ததுமே, தேன்கூட்டை கலைச்ச மாதிரி, எல்லாரும், சிட்டா பறந்துடுறாங்களே!| speech, statement,interview

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: லோக்சபா தேர்தலில், நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் தான், பா.ஜ.,வை வீழ்த்த முடியும்; இதை உறுதியாக நம்பலாம். இதற்கு வாய்ப்பு இருக்கிறதா, இல்லையா என, சொல்ல முடியாது. அதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட வேண்டும். ‘தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும்’என, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே இப்போது சொல்ல ஆரம்பித்து விட்டனர்; அதற்கான வாய்ப்பு நிச்சயம் உருவாகும். எல்லாம் பேசுறாங்க சரி… பிரதமர் யாருன்னு விவாதம் வந்ததுமே, தேன்கூட்டை … Read more

“கோயில்ல குத்து விளக்கைக்கூட விட்டுவைக்கல..!" – திருடர்கள் அட்டகாசம் குறித்து புலம்பும் மக்கள்

சாத்தூர்-தாயில்பட்டி சாலையில் வடமலாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாமுண்டீஸ்வரி அம்மன், வெற்றி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலிலிருந்து சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்கள் பலர் இருமுடிக்கட்டி கன்னி பூஜை நடத்தினர். இருமுடி பூஜைகள் முடிந்ததையடுத்து கோயில் பூசாரி பால்பாண்டி (வயது 60) கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்த நிலையில், வழக்கம்போல கோயிலை மீண்டும் திறப்பதற்காக பால்பாண்டி வந்துபோது கோயிலின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கபட்டு அதிலிருந்த பணம் … Read more

லண்டன் அடுக்குமாடியில் ஏற்பட்ட தீவிபத்து! இளம்பெண் உயிரிழப்பு

லண்டன் அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளார். அடுக்குமாடி வீட்டில் தீவிபத்து புத்தாண்டு தினத்தில் தெற்கு லண்டனின் ஓல்ட் கெண்ட் சாலைக்கு வருமாறு அவசரகால சேவை பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தீயை அணைத்தனர். மேலும் அருகிலுள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் சாலை மூடப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. … Read more

டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவ்ரத்திலோவாவுக்கு மார்பக புற்றுநோய் …

உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மார்டினா நவ்ரத்திலோவா தனக்கு தொண்டை புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்துள்ளார். 18 முறை கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் சாம்பியனும், சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் உறுப்பினருமான மார்டினா நவ்ரத்திலோவாவுக்கு புற்றுநோய் இருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கான சிகிச்சையை இந்த மாதத்தில் அவர் தொடங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது. 66 வயதான நவ்ரத்திலோவா 1974ம் ஆண்டு முதல் 2006 ம் ஆண்டு … Read more

இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி பேட்டிங்

மும்பை: இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது. மும்பையில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

மே.வங்கத்தில் வந்தே பாரத் ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு| Miscreants pelted stones on Vande Bharat train in Bengal

கோல்கட்டா: மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் மீது மர்மநபர்கள் இன்று(ஜன.,03) கல்வீச்சு நடத்தினர். மே.வங்க மாநிலம் ஹவுரா-நியூஜல்பை குரி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 30ம் தேதி பிரதமர் மோடி காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். இந்த ரயில் சேவை துவங்கி நான்கு நாட்கள் ஆகியுள்ளது. இந்நிலையில் இன்று(ஜன.,03) வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது. இதில் ரயிலின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன. இந்த தாக்குதல் மல்டா … Read more