திமுகவின் இரட்டை நிலைப்பாடு: பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

சென்னை: ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலைப்பாடு என திமுக இரட்டை வேடம் போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, சர்க்கரை அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்காததையும், கரும்பு கொள்முதல் செய்யாததையும் வன்மையாக கண்டிப்பதாக … Read more

“170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்துள்ள நிலையிலும்…" – முதல்வரை சாடிய ஓ.பி.எஸ்

பகுதி நேர ஆசிரியர்களின் பணியை உறுதிசெய்யக் கோரி ஒ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை பக்கம் 83 வரிசை எண் 311-ல், `ரூபாய் 8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று கழக ஆட்சி அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு … Read more

புத்தாண்டில் யூரோவுக்கு மாறிய குரோஷியா! பாஸ்போர்ட் இல்லாத ஷெங்கன் மண்டலத்தில் இணைந்தது

புத்தாண்டு தினத்தில் (ஞாயிற்றுக்கிழமை) குரோஷியா யூரோவுக்கு மாறியது மற்றும் ஐரோப்பாவின் பாஸ்போர்ட் இல்லாத மண்டலத்தில் நுழைந்தது. யூரோ மற்றும் ஷெங்கன் மண்டலம் ஜனவரி 1, 2023 புத்தாண்டின் நள்ளிரவில், பால்கன் நாடான குரோஷியா அதன் குனா நாணயத்திற்கு விடைகொடுத்து, யூரோவுக்கு மாறியது. அதாவது யூரோ நாணயத்தை பயன்படுத்தும் 20-வது ஐரோப்பிய உறுப்பினரானது. மேலும், குரோஷியா இப்போது பாஸ்போர்ட் இல்லாத ஷெங்கன் மண்டலத்தில் 27-வது நாடானது. உலகின் மிகப்பெரிய மண்டலமான இதில் 400 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எல்லை கட்டுப்பாடுகளின்றி, … Read more

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை உயர்வு

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து முதன்முறையாக ரூ.5.55க்கு விற்பனையாகிறது. வட மாநிலங்களில் குளிர் நிலவுவதன் காரணமாக நுகர்வு அதிகரித்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

அமராவதி: தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வருமுன் காப்போம்! கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்… காரணங்கள், தீர்வுகள்!

தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்த, ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் 95 சதவிகிதம் சரி செய்ய முடிந்த, ஒரே புற்றுநோய் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மட்டுமே. ஜனவரி மாதம், சர்வதேச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். இந்நேரத்தில், செர்வைகல் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான காரணம் முதல், தீர்வு வரை முழுமையாகத் தெரிந்து கொள்ள, காவேரி மருத்துவமனையின் (சீலநாயக்கன்பட்டி, சேலம்) மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவர் சத்யா சுதாகரிடம் பேசினோம். Cervical Cancer … Read more

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து ஆறுநாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுடைய போராட்டத்தை வாபஸ்பெற்றனர். சமவேலைக்கு சமஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து ஆறு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். … இந்நிலையில் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி அளித்ததை தொடர்ந்து தங்களு…

விஜயகாந்த் சந்திப்பு… எமோஷனான தொண்டர்கள் ; `இதுதான் திராவிட மாடலா?’ – திமுக அரசை சாடிய பிரேமலதா

புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் தன் கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்தார். விஜயகாந்தை பார்பதற்காக காலை 9 மணியிலிருந்தே பல்வேறு பகுதிகளில் இருந்து தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் தலைமையகத்திற்கு வரத் தொடங்கினர். அதில் சிலர் குழந்தைகளுடன் குடும்பமாக விஜயகாந்தை காண வந்திருந்தனர். மேலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதை சார்ந்த ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சி தலைமையகத்துக்கு … Read more

ஜன.3 முதல் 5ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வரும் ஜன.3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு

சென்னை: மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடை கோரிய வழக்கை அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீடு செய்யப்பட்டால் தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.