வயிற்று கொழுப்பை வேகமாக கரைக்கனுமா? மறக்காமல் இந்த உற்பயிற்சிகளை செய்து வாங்க போதும்!

இன்றைய காலத்தில் பலரும் வயிற்று கொழுப்பு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதற்காக டயட்டுகள், கண்ட கண்ட உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உண்மையில் வீட்டில் இருந்தப்படி கூட வயிற்று கொழுப்பை எளியமுறையில் கரைக்கலாம். அந்தவகையில் வயிற்றின் கொழுப்பை எளிய முறையில் கரைக்க கூடிய 5 உடற்பயிற்சிகளை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.  பை சைக்கிளிங் சைக்கிளில் நீண்ட தூரம் பயணிக்கும் போது, அது நமது உடல் வலிமைக்கு உதவுகிறது. 30 நிமிட பயணிப்பதன் மூலம், 250-500 கலோரிகள் … Read more

தமிழகத்தில் இதுவரை 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை; மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று 2811 பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3.69 லட்சம் இணைப்புகளும், ஆன்லைனில் 3.11 லட்சம் இணைப்புகளும் இணைக்கப்பட்டிருக்கின்றன என அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார். இன்று வரை மொத்தம் 26.04 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப் பட்டிருக்கின்றன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மணமேடையிலும் லேப்டாப் மணமகனின் கடமை உணர்வு?| Dinamalar

கோல்கட்டா :மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த புது மாப்பிள்ளை, திருமணத்தன்று மணமேடையிலும் கடமை உணர்வுடன் ‘லேப்டாப்’ பில் வேலை பார்ப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. கொரோனாவின் தீவிர பரவலுக்குப் பின், ‘ஒர்க் ப்ரம் ஹோம்’ எனப்படும், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் நடைமுறை அதிகரித்தது. கொரோனா தாக்கம் குறையத் துவங்கியதை அடுத்து, படிப்படியாக பெரும்பாலான நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு வந்து பணியாற்றும்படி கூறியுள்ளன. இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடி சொகுசாக வேலை … Read more

சொத்துப் பிரச்னையில் அண்ணன் குத்திக் கொலை! – வீட்டில் டி.வி பார்த்துக்கொண்டிருந்த தம்பி கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள ஓ.மேட்டுப்பட்டி வைரவசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 58). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். பொன்ராஜ், அதே தெருவில் மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி பழுதுநீக்கும் கடை வைத்து நடத்தி வந்தார். இவரின் உடன்பிறந்த தம்பி மொட்டையா சாமி (55). இருவரும், அதே தெருவில் அடுத்தடுத்த வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் மொட்டையாசாமி, குடித்துவிட்டு சொத்துப் பிரச்னை காரணமாக அண்ணன் பொன்ராஜிடம் அடிக்கடி தகராறு … Read more

இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இந்தியாவில் டிசம்பர் 1 முதல் சில்லறை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 பட்ஜெட் உரையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கியின் ஆதரவுடன் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் வெளியீடு குறித்த அறிவிப்பினை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், டிசம்பர் 1 முதல் தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களின் மதிப்பிலேயே டிஜிட்டல் … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: கத்தார் அணியை 0-2 என்ற கோல் கணக்கில் வென்றது நெதர்லாந்து அணி

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு எ உள்ள கத்தார் – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கத்தார் அணியை நெதர்லாந்து அணி 0-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வென்றது.

ஈரோடு: ரெய்டில் சிக்கிய முதன்மை பொறியாளர், அவர் மனைவிக்கு 5 ஆண்டுகள் சிறை… ரூ.1 கோடி அபராதம்!

ஈரோடு, சூரம்பட்டி, நியூ டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் நடேசன் (65). இவர் மனைவி மல்லிகா (60). நடேசன் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஈரோடு நீர் மின் மண்டல சிவில் பிரிவில் முதன்மை பொறியாளராகப் பணிபுரிந்து வந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், ஈரோடு லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீஸார், நடேசன் பணிபுரிந்து வரும் ஈரோடு ஈவிஎன் சாலையிலுள்ள மின்வாரிய முதன்மை பொறியாளர் அலுவலகம், சூரம்பட்டி, நியூ டீச்சர்ஸ் … Read more

கால்பந்து உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? வெளிவந்துள்ள முக்கிய கணிப்புகள்

2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் கணித்துள்ளது. கோப்பையை நோக்கிய பயணம் கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக் சுற்றுகளில் ஒவ்வொரு குழுவிலும் முன்னணி உள்ள முதல் இரண்டு அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் சுற்றுக்களின் … Read more

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெற டிசம்பர் 15க்குள் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை தகுதி வாய்ந்தவர்கள், டிசம்பர் 15ந்தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சிறப்பு உதவித்தொகை வழங்கி வருகிறது. அதன்படி நடப்பாண்டு, தமிழகத்தில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: ஈக்வடார் அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது செனிகல் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு ஏ-யில் உள்ள ஈக்வடார்- செனிகல் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஈக்வடார் அணியை செனிகல் அணி 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.