7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை வழக்குப்பதிவு!

கொல்கத்தா: 7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். கஸ்டடியில் உயிரிழந்த நபரின் மனைவி அளித்த புகாரில், டி.ஐ.ஜி., எஸ்.பி., அந்தஸ்து அதிகாரிகள் உள்பட 7 சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க போலீசார் கொலை, குற்றச்சதி வழக்குப்பதிவு செய்தனர்.

ஆம்புலன்சை கடத்திய 13 வயது சிறுவன்| Dinamalar

திருச்சூர் :கேரளாவின் திருச்சூரில், அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சை, ௧௩ வயது சிறுவன் கடத்தியுள்ளான். 8 கி.மீ., துாரத்துக்கு ஓட்டிச் சென்ற நிலையில், போலீசார் அவனை துரத்திப் பிடித்தனர். கேரளாவின் திருச்சூரில் உள்ள அரசு பொது மருத்துவமனையில், ௧௩ வயதாகும், ௧௦ம் வகுப்பு படிக்கும் மாணவன், காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனுடைய தந்தை அதே மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மருத்துவமனை வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சுக்குள் நுழைந்த அந்தச் சிறுவன், அதை இயக்கி ஓட்டியுள்ளான். வாகனம் … Read more

டெல்லி ஆசிட் வீச்சு சம்பவம் – 3 பேர் கைது

புதுடெல்லி, டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி தனது சகோதரியுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர் மாணவி மீது ஆசிட் வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அந்த மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தையடுத்து … Read more

Pathaan: கட்டாய வெற்றியை எதிர்நோக்கும் ஷாருக்கான்; ஜம்மு வைஷ்ணவி தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு!

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் படம் நான்கு ஆண்டுகளாகத் திரைக்கு வரவில்லை. வரும் ஜனவரி மாதம்தான் அவர் நடித்த ‘பதான்’ படம் திரைக்கு வருகிறது. இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘Besharam Rang’ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஷாருக்கான் தன் இழந்த மார்க்கெட்டைப் பிடிக்க ‘பதான்’ படத்தை எப்படியும் வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இப்படத்தின் வெற்றிக்காக … Read more

கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஆவினில் 12 வகை கேக்குகள் அறிமுகம்! அமைச்சர் நாசர்…

சென்னை: ஆவின் பாலகங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகளை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்தார். அரசு பால்பொருள் நிறுவனமான ஆவின், பண்டிகைகளையொட்டி புதுப்புதுப் இனிப்பு வகைகளை அறிமுகம் செய்து வருகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு பல்வேறு இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது,  கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் மற்றும் கேக் வகைகள் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேக் மற்றும் இனிப்பு வகைகளை பால்வளத்துறைஅமைச்சர் … Read more

ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

சென்னை: ஜெயகுமாருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளனர். மீன்விலை உற்பத்தி நிறுவனம் அமைந்த நிலத்தில் நில உரிமை தொடர்பான பிரச்னை பற்றி அவதூறு பரப்புவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமூக வலைதளம் வாயிலாக பயங்கரவாத பிரசாரம்| Dinamalar

புதுடில்லி:’சமூக வலைதளங்கள் வாயிலாக, பயங்கரவாதம் தொடர்பான பிரசாரம் செய்யப்படுவது முன்னெப்பொழுதையும்விட தற்போது மிக அதிகமாக உள்ளது’ என, பார்லிமென்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய உள்துறை இணைஅமைச்சர் நித்யானந்த ராய் கூறியுள்ளதாவது: நம் அண்டை நாட்டில் இருந்து, நமக்கு பயங்கரவாத பிரச்னை அதிகமாக உள்ளது. இந்நிலையில் சமூக வலைதளம் உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக பயங்கரவாதம் பரப்பப்படுவது தற்போது அதிகரித்துள்ளது. எல்லை, கட்டுப்பாடுகள் இல்லாததால், இந்த சமூக வலைதளங்களை கண்காணிப்பது சிரமமாகவே உள்ளது. … Read more

ஷாருக்கான் – தீபிகா படுகோன் நடித்துள்ள 'பதான் ' படத்தை தடை செய்ய வேண்டும்: பாஜக மந்திரி ஆவேசம்

இந்தூர், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படம் வரும் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் ‘பேஷ்ரம் ரங்’ வெளியாகியுள்ளது. ஒரே நாளில் இந்த பாடல் 1.9 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த … Read more

`14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு சிகரெட் கிடையாது!’ – அதிரடி சட்டம் இயற்றிய நியூசிலாந்து

வரும் 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக நியூசிலாந்தை மாற்ற, 14 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்குவதற்குத் தடைவிதித்து புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அடுத்த தலைமுறையைப் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து தடுக்கும் சட்டமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  சிகரெட் இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களால் சிகரெட் வாங்க முடியாது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அயேஷா வெர்ரால் கூறுகையில், “ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், ஆரோக்கியமாக … Read more

கத்தாரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மொராக்கோ விமானங்கள் ரத்தானதால் FIFA உலகக் கோப்பை ரசிகர்கள் ஏமாற்றம்

FIFA உலகக் கோப்பை 2022: கத்தார் கட்டுப்பாடுகளைக் கூறி மொராக்கோ விமான நிறுவனம் உலகக் கோப்பை ரசிகர் விமானங்களை ரத்து செய்தது. கத்தாரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் உலகக் கோப்பை அரையிறுதிக்கு தோஹாவுக்கு ரசிகர்களை பறக்கச் செய்வதற்காக புதன்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக மொராக்கோவின் தேசிய விமான நிறுவனம் அறிவித்தது, இது கத்தார் அதிகாரிகளின் முடிவு என்று கூறியது. இது குறித்து விமான நிறுவனம் மின்னஞ்சல் மூலம் வெளியிட்ட அறிக்கையில், “கத்தார் அதிகாரிகளால் விதிக்கப்பட்ட சமீபத்திய … Read more