15.11.22 செவ்வாய்க்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 15 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 6.77%ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிப்பு

டெல்லி: நாட்டின் சில்லறை விலை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 6.77%ஆக குறைந்துள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் 7.41%ஆக இருந்த நிலையில் சில்லறை பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் 0.64% குறைந்து 6.77%ஆக உள்ளது. நகர்புறத்தில் 6.5%ஆக உள்ள சில்லறை விலை பணவீக்க விகிதம் கிராமப்புறங்களில் 0.5% உயர்ந்து 7% ஆக உள்ளது.

“நான் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவள்; அப்படியிருக்கும்போது என்மேல..!" – நளினி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 6 பேரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் என்ற அடிப்படையில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு முகாமிற்கு வருகை தந்த நளினி, கிட்டத்தட்ட 6 மணி நேரம் … Read more

அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழப்பு

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே மின்னல் தாக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். பறையத்தூரை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது சகோதரி மகன், மகள் உள்ளிட்ட 3 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பிரக்ஞானந்தா, இளவேனில்… கௌரவிக்கப்படும் 3 தமிழக வீரர்கள்; தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு!

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. 25 பேருக்கு அர்ஜுனா விருதும் 4 பேருக்கு துரோணாச்சாரியா விருதும், 4 பேருக்கு தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த மூன்று விளையாட்டு வீரர்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேசிய விளையாட்டு விருதுகள் தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரரான கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டிருக்கிறது. செஸ்ஸில் வளர்ந்து வரும் அடுத்தத் தலைமுறை வீரராக பிரக்ஞானந்தா பல சாதனைகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாடில் மிகச்சிறப்பாக … Read more

காதலியை 35 துண்டுகளாக வெட்டி, பாகங்களை டெல்லியில் பல்வேறு இடங்களில் வீசிய நபர்!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில், தனது காதலியை கொன்று, உடலை 35 துண்டுகளாக வெட்டி, பல்வேறு இடங்களில் வீசி சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நடந்தது என்ன? அஃப்தாப் அமீன் பூனவல்லா (28), மே 18 அன்று 26 வயதான ஷ்ரதா மதனை கழுத்தை நெரித்து கொன்றார். பொலிஸாரின் கூற்றுப்படி, அஃப்தாப் அவரது உடலை 35 துண்டுகளாக நறுக்கி, புதிய குளிர்சாதன பெட்டியை வாங்கி அதில் அவற்றை சேமித்து வைத்து, 18 நாட்கள் காலப்பகுதியில் பல்வேறு இடங்களில் … Read more

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் என யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளிக்கும் தேர்தல் பத்திர நிதி சட்டம் 2017 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசுடமை வங்கிகளில் விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்களை தாங்கள் விரும்பிய தொகைக்கு விரும்பிய பணமதிப்பில் வாங்கி தாங்கள் விரும்பிய அரசியல் … Read more

ஆரணி அருகே முள்ளண்டிபுரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட் பறிமுதல்

ஆரணி: ஆரணி அருகே முள்ளண்டிபுரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. 16 மூட்டைகளில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு: இருவேறு விபத்துகளில் சிக்கி இரண்டு பள்ளி மாணவர்கள் பலி!

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர், மாதையன்- தங்கமணி தம்பதியரின் மூத்த மகன் திவாகர் (13). இவர் பூதப்பாடியில் உள்ள புனித இஞ்ஞாசியார் அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிப் பேருந்தில் திவாகர் ஏறி பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தார். திவாகர் சென்ற பேருந்தில் அவருடன் சேர்த்து 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதேசமயம், பள்ளி பேருந்தில் உதவியாளர் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. பேருந்தை அம்மாபேட்டையைச் … Read more

பியானோ வாசித்த தாயை…தலையில் சுட்டுக் கொன்ற நட்சத்திர நடிகர்: போதை பழக்கத்தால் விபரீதம்

தி இமேஜினேரியம் ஆஃப் டாக்டர் பர்னாசஸ் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரியான் கிரந்தம், தனது அம்மா பார்பரா வெயிட்டை பியானோ வாசித்து கொண்டு இருக்கும் போது தலையில் சுட்டுக் கொன்றுள்ளார். பிரபலமான குழந்தை நட்சத்திரம் கனடாவின் வான்கூவரில் உள்ள பள்ளியில் மாணவராக இருந்த போது ரியான் கிரந்தமிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இளம் நடிகர்களை போலவே அவரும் பெரிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முன் விளம்பரத்தில் தோன்றினார். GETTY அதன்பின், சூப்பர் நேச்சுரல் மற்றும் ரிவர்டேல் உள்ளிட்ட … Read more