அரியலூரில் பொது மக்களுக்கு போலி இ-சலான் கொடுத்து முறைகேடு செய்தவர் கைது: இ-சேவை மையத்திற்கு சீல்

அரியலூர்: அரியலூரில் பொது மக்களுக்கு போலி இ-சலான் கொடுத்து முறைகேடு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். இ-சேவை மையத்திற்கு சீல் வைத்துள்ளனர். செந்துறை வட்டாச்சியர் அலுவலகத்துக்கு எதிரில் பிரபு என்பவர் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். வட்டாச்சியர் அலுவலகத்துக்கு வருவோரிடம் பணம் பெற்றுவிட்டு போலி இ-சாலன் கொடுத்துள்ளார். வட்டாச்சியர் கணக்கு பார்த்தபோது குறைந்து இருந்ததால் விண்ணப்பிக்கப்பட்ட இ-சலான்களை ஆய்வு செய்துள்ளார். சாலன்கள் அனைத்தும் போலி என்று விசாரணையில் தெரியவந்ததை அடுத்து உரிமையாளர் பிரபுவை கைது செய்துள்ளனர்.

பள்ளி மாணவி பலாத்காரம் சக மாணவர்கள் கைது| Dinamalar

மும்பை, :மும்பையில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை, சக மாணவர்கள் இருவர் வகுப்பறையில் கூட்டு பலாத்காரம் செய்ததையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மும்பையில், மாதுங்கா பகுதியில் மாநகராட்சி பள்ளி ஒன்று உள்ளது. இதில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியர் நடனப்பயிற்சிக்காக வெளியே சென்ற நிலையில், ஒரு மாணவி மட்டும் வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். அப்போது உடன் படிக்கும் … Read more

மும்பை: திருமணம் மீறிய உறவு… சொத்துக்காகக் கணவன், மாமியார் உணவில் விஷம் வைத்து கொலை செய்த பெண்!

மும்பையில் மேற்கு பகுதியில் உள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் கமல்நாத் ஷா(46). கார்மென்ட் பிஸினஸ் (garment business) செய்து வந்தார். இவரின் மனைவி காஜல் ஆவார். கமல்நாத் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி உடலின் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து போனார். கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கமல்நாத் கடுமையான வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவரின் வயிற்று வலி குறையவில்லை. இதையடுத்து, அவர் பாம்பே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். … Read more

வேலைக்கு கூட போக வேணாம்! கணவராக என் கூட இருக்கனும்… வீணாய் போன மறைந்த நடிகர் ஹரி மனைவியின் நம்பிக்கை

மறைந்த நடிகர் ஹரி வைரவன் எப்படியும் நல்ல நிலைக்கு மீண்டும் வருவார் என அவர் மனைவி தொடர்ந்து கூறி வந்த நிலையில் அவரின் நம்பிக்கை வீணாகியுள்ளது.  நடிகர் விஷ்ணு விஷாலுடன் சேர்ந்து வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் ஹரி வைரவன். மேலும் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்த ஹரி நேற்று நள்ளிரவு உடல்நலக்குறைவால் காலமானார். ஹரி வைரவன் வறுமையில் வாடிய ஹரி வைரவனுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டது. இதய … Read more

தஞ்சை அருகே விவசாய நிலத்தில் புறவழிச்சாலை: எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் குண்டுகட்டாக அகற்றம்…

தஞ்சாவூர்: தஞ்சை அருகே புறவழிச்சாலை அமைப்பதற்காக  சம்பா பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில், பயிர்களை அகற்றிவிட்டு, அதன்மீது மண்கொட்டி சாலை அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடிய நிலையில், அவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி அகற்றிவிட்டு, சாலை அமைக்கும் பணியை தொடர்ந்தனர். இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையை அடுத்த திருவையாறில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து திருவையாறை அடுத்த … Read more

ராமேஸ்வரம் பாம்பன் பாலம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அடுத்துள்ள பாம்பன் பாலம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளது. ராமநாதபுரத்திலிருந்து இருந்து ராமேஸ்வரத்திற்கு 15 பயணிகளுடன் வந்த திருப்பூர் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. காயங்கள் இன்றி பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழம்பெரும் ஒடிசா நடிகை ஜரானா தாஸ் காலமானார்| Dinamalar

கட்டாக்,:ஒடிசாவைச் சேர்ந்த பழம்பெரும் திரைப்பட நடிகை ஜரானா தாஸ், 77, காலமானார். ஒடிசாவின் கட்டாக்கில் வசித்து வந்த பழம்பெரும் நடிகை ஜரானா தாஸ், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் காலமானார். ஜரானா, ௧௫ வயது முதல் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஸ்ரீ ஜெகந்நாத், நாரி, அடின மேகா, அமடா பட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர், ஒடியா திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக, மாநில அரசின் ஜெயதேவ் புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். … Read more

“ஷ்ரத்தாவை வெட்டியது போல உன்னையும் 70 துண்டுகளாக வெட்டிவிடுவேன்" – லிவ்-இன் பார்ட்னருக்கு மிரட்டல்

மும்பையை சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண் கடந்த மே மாதம் டெல்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக காதலனால் வெட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து இன்னும் மக்கள் மீளாமல் இருக்கின்றனர். இந்தநிலையில், டெல்லியில் மற்றொரு பெண் சமீபத்தில் தன் மகனுடன் சேர்ந்து தன்னுடைய கணவனை கொலை செய்து 22 துண்டுகளாக வெட்டி டெல்லி முழுக்க விட்டெறிந்தார். தற்போது இந்த சம்பவங்களை மேற்கோள் காட்டி அது போன்று செய்துவிடுவேன் என்று தன்னுடன் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த … Read more

மன்னரை சந்திக்க விரையும் இளவரசர் வில்லியம்: மீண்டும் ஹரி மேகனால் ராஜ குடும்பத்தில் பரபரப்பு

பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் வெளியிட இருக்கும் நெட்ஃப்ளிக்ஸ் தொடர், ராஜ குடும்பத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மேகனால் தொடரும் சர்ச்சை இளவரசர் ஹரி, ராஜ குடும்பத்துக்கு சற்றும் தொடர்பில்லாத நடிகையும் விவாகரத்தானவருமான மேகனை திருமணம் செய்த நாளிலிருந்தே ராஜ குடும்பம் பல அவமானங்களை சந்தித்து வருகிறது. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றிற்கு ஹரி, மேகன் தம்பதியர் கொடுத்த பேட்டியால் ராஜ குடும்பத்தில் உண்டான கொந்தளிப்பு அடங்கும் முன், மகாராணியார் மறைந்த துயரம் ஆறும் முன், … Read more

திருச்சியில் 11 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது

திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சி, புதுக்கோட்டையில் பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. திருச்சியில் 11 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட பாஜகவினரை கைது செய்துள்ளனர். புத்தூர் அருகே மது விடுதி அமைப்பதை எதிர்த்து போராடிய 9 பாஜக நிர்வாகிகள் கைது செய்து கண்டித்து போராட்டம் நடைபெற்றது.