கார்த்திகை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

"மக்களின் உரிமைகள் மீது பா.ஜ.க. தாக்குதல் நடத்துகிறது" – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே

புதுடெல்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் வழிநடத்தல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், மாநிலங்களவை எம்.பி. பா.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, பா.ஜ.க. அரசு நாட்டு மக்கள் மீதும், அவர்களது உரிமைகள் மீதும் … Read more

பால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E19

நம் வாசகர் ஒருவர் [email protected] வழியே, “எனக்கு TPHA பரிசோதனை செய்யும்போதெல்லாம்  தொடர்ந்து பாசிட்டிவ்வாகவே வந்து கொண்டிருக்கிறது. இதனால், பின்னாளில் எனக்கு எய்ட்ஸ் வருமா?” என்று கேட்டிருந்தார். அவருடைய கேள்விக்கு பதில் அளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.  “TPHA என்பது ஒருவகை ரத்தப் பரிசோதனை. அதன் விரிவாக்கம். Treponema pallidum haemagglutination test (TPHA). சிஃபிலிஸ் (SYPHILIS) என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவகையான பால்வினை நோய்.  இந்த நோய் உடலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் ரத்தப் பரிசோதனைதான் TPHA.  சிஃபிலிஸ் பால்வினை நோய், பாலுறவின் மூலமே ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் … Read more

400க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய போராட்டம்! 2 மாதத்திற்கு பின் முதல் வெற்றி

ஈரானில் ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக அறநெறி பொலிஸ் பிரிவு கலைக்கப்பட்டுள்ளது. மாஷா அமினி ஈரான் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என மாஷா அமினி(22) என்ற இளம்பெண் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோமா நிலைக்கு சென்ற அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் ஈரானில் பெண்கள் கிளர்த்தெழுந்தனர். கொதித்தெழுந்த பெண்கள் நாடு முழுவதும் ஹிஜாப் அணிவதற்கு எதிராக … Read more

அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை: அமைச்சர் ரகுபதி

சென்னை: அரசாங்கம் இயற்றக்கூடிய சட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதுதான் நடைமுறை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். எல்லா சட்ட மசோதாக்களுக்கும் உடனே அனுமதி அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியது குறித்த கேள்விக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

ஊட்டி: கோயில் அருகில் உலவும் சிறுத்தை; பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகருக்கு மிக அருகில் இருக்கிறது ஹெல்க்ஹில் வனப்பகுதி. இந்த வனத்தையொட்டியே குடியிருப்புகளும் உள்ளன. மேலும், சிறப்பு வாய்ந்த ஹெல்க்ஹில் முருகன் கோயிலும் இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். முருகன் கோயில் மும்பை: குடியிருப்புக்குள் நுழைந்து, சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்- ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை வனத்தையொட்டிய பகுதி என்பதால் கரடி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது உலவி … Read more

கோவிலில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்த நபர்: சில நிமிடங்களில் காத்திருந்த அதிர்ச்சி

இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் கோவிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரார்த்தனை செய்த நபர் மத்திய பிரதேச மாநிலத்தில் மருந்தகக் கடை ஒன்றை நடத்தி வரும் ராஜேஷ் மெஹானி என்பவர் தீவிர சாய் பக்தர் ஆவார். இவர் கட்னியில் உள்ள கோவிலுக்கு வழிபாடு செய்ய சென்றிருந்தார். அங்கு இருந்த சிலை முன் அமர்ந்து மெஹானி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். கண்ணை மூடி அமர்ந்திருந்த அவர் 15 நிமிடங்களுக்கு எழுந்திருக்கவில்லை. … Read more

திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது: டிஜிபி அறிவுறுத்தல்

சென்னை: திருமண உறவு, காதல் உறவு போன்ற போக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று டிஜிபி அறிவுறுத்தியுள்ளார். போக்சோ வழக்குகளில் கைது நடவடிக்கை மற்றும் புலனாய்வு செய்யும் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படாத விவரத்தை வழக்கு கோப்பில் பதிவு செய்து, அதற்கான காரணத்தை பதிய வேண்டும்.

உறவினர்களுடன் பயணிக்க முழு விமானத்தை புக் செய்த மணமக்கள்! – இணையத்தில் வீடியோ செம வைரல்

திருமணம் என்பது கொண்டாட்டமாக மாறியதிலிருந்து ஒவ்வொருவரும் அவர்களின் சக்திக்கேற்றவாறு அதை நினைவுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை சேர்ந்த மணமக்கள், தங்கள் திருமணத்துக்கு விமானம் மூலம் உறவினர்களை அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக ஸ்ரேயா ஷா எனும் டிஜிட்டல் கிரியேட்டர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். தன்னுடைய சகோதரி திருமணத்துக்காக ஸ்ரேயா விமானத்தில் பயணித்திருக்கிறார். அந்த விமானத்தில் ஸ்ரேயாவுடன் பயணித்தவர்கள் அனைவரையும், அவர் தன்னுடைய … Read more

மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கனமழையால் இடிந்து விழுந்தது

மன்னார்குடி: மன்னார்குடி அருகே நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. மன்னார்குடி அருகே, 2015ல் அதிமுக ஆட்சியில் ரூ. 25 லட்சம் செலவில் கட்டப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கனமழையால் இடிந்து விழுந்தது. கட்டி 7 ஆண்டுகளே ஆன நிலையில் கட்டிடம் இடிந்துள்ளது.