புரட்சிக்கு வித்திட்ட ஐ.ஆர்.டி.ஏ.ஐ: காப்பீட்டுத் துறையில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தும்!

காப்பீட்டுத் துறையில்இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் (IRDAI) கூட்டம் ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களில் பல நீண்ட நாள் கோரிக்கைகள் ஒரே நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் துறையில் தற்போது அனுமதிக்கப்பட்ட மாறுதல்கள் காரணமாக நமது நாட்டில் 2047 ஆம் ஆண்டு அனைத்து இந்தியருக்குமான காப்பீடு என்ற இலக்கை நம்மால் அடைய முடியும் என்று ஐ.ஆர்.டி.ஏ.ஐ தெரிவித்துள்ளது. மருத்துவக் காப்பீடு காப்பீடு மற்றும் முதலீடு… இரட்டைப் பலன் அளிக்கும் புதிய … Read more

டிஎன்பிஎஸ்சி சார்பில் வனதொழில் பழகுநர் குரூப்-4 பதவிகளுக்கான போட்டி தேர்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் வனதொழில் பழகுநர் குரூப்-4 பதவிகளுக்கான போட்டி தேர்வு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வனசார்நிலைப் பணியிலான தேர்வை 2,486 பேர் எழுதுகின்றனர்.

Tamil Thalaivas : ஆல் அவுட்… சூப்பர் டேக்கிள்… சூப்பர் 20; அசத்திய அஜிங்கியா பவார்!

புரோ கபடி ஒன்பதாவது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 52-24 என மிகப்பெரிய வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அசத்தலான வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக் காரணம் அஜிங்கியா பவாரின் அசத்தலான பெர்ஃபார்மன்ஸ் தான். Ajinkya ஆல் அவுட் ஆகும் நிலையில் இருந்த தமிழ் தலைவாஸ் அணியைக் காப்பாற்றி மிகப்பெரிய புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளார் அஜிங்கியா பவார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் ஒரே … Read more

மண்ணின் மக்களைப் படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர்..எச்சரிக்கிறேன்! கொந்தளித்த சீமான்

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் மக்களை படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கூறி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 102 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நாம் தமிழர் … Read more

ஜி – 20 கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பு 

சென்னை: பிரதமரின் ஜி20 கூட்டத்தில் பங்கேற்க பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு (2023) ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்து கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-20 ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மேற்கு … Read more

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுதால் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

ரேஷன் கடைகள் மகளிர் சுய உதவி குழுவுக்கு… கைமாறுது?| Dinamalar

நாடு முழுதும் உள்ள ரேஷன் கடைகளை, மகளிர் சுய உதவி குழுக்கள் அல்லது கிராம பஞ்சாயத்துக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றவும் புதிய திட்டம் தயாராகி வருகிறது. நாடு முழுதும் தற்போது ஐந்து லட்சத்து ௩௬ ஆயிரத்து ௩௮ நியாய விலை கடைகள் உள்ளன. இதில், இரண்டு லட்சத்து ௭௮ ஆயிரத்து ௩௫௩ கடைகள் தனியார் ‘டீலர்’களால் நடத்தப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் அல்லது சிவில் சப்ளைஸ் வாரியங்கள் … Read more

“என் அம்மாக்கிட்ட பேசாதீங்க, எனக்குப் பிடிக்கலை..!" – தாயின் ரகசிய நண்பரை சரமாரியாக தாக்கிய சிறுவன்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகேயுள்ள மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் அருள்தாஸ், வயது 45. இவர் ஆரணி காந்தி நகரிலிருக்கும் சவுண்டு சர்வீசஸ் கடையில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். அருள்தாஸுக்கும் ஆரணி பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் மனைவிக்கும் இடையே திருமணம் மீறிய பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. 35 வயதான அந்தப் பெண்ணுக்கு 17 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், தயக்கமின்றி ஆண் நண்பரை தனது வீட்டிற்கே அடிக்கடி வரவழைத்து நெருக்கமாக இருந்திருக்கிறார் … Read more

ரோகித், கோலி அவுட்! ஒரே ஓவரில் அதிர்ச்சி கொடுத்த வங்கதேச வீரர்

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் ரோகித், கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். பவுண்டரிகளை விளாசிய ரோகித் இந்தியா-வங்கதேச அணிகள் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்து வருகிறது. வங்கதேச அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தவான் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். @ICC அதிர்ச்சி கொடுத்த ஷகிப் அவரைத் தொடர்ந்து பவுண்டரிகளை விளாசிய ரோகித் சர்மா (27) விக்கெட்டை ஷகிப் … Read more

தமிழ்நாட்டில் 7,8 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் 7,8 தேதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் வரும் 7ம் தேதி கனமழைக்கும், 8ம் தேதி மிகக் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பெருங்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியால், நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த … Read more