`ஆண்டுக்கு ரூ.20 லட்சம் இலக்கு’ பொறியாளர் வேலையை விட்டு விவசாயத்தில் களமிறங்கிய இளைஞர்!

மத்திய பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்திலுள்ள தாரா – தேரி  என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ்வர்தன் மெஜேஜி . கணினி பொறியியல் பட்டதாரியான இவர், இந்தூரிலுள்ள பெரிய நிறுவனம் ஒன்றில் அதிக சம்பளத்துடன் வேலைப் பார்த்து வந்துள்ளார்.  ஹர்ஷ்வர்தன் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால், இயல்பிலேயே விவசாயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர். இவர் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் அவர்களின் விவசாய முறைகளை அக்கறையுடன் கவனித்து ஆராய்ந்து வந்தார். ஹர்ஷ்வர்தன் மெஜேஜி இவர் பெறியாளராக பணியாற்றிவந்த சமயத்தில், … Read more

83 வயது பாட்டிக்கு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்; ஒரே நாளில் கோடீஸ்வரியானார்

கனடாவில் லொட்டரியில் கிடைத்த பரிசுத்தொகையால் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியிருக்கிறார் 83 வயது பாட்டி ஒருவர். கைநழுவப் பார்த்த அதிர்ஷ்டம் கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Vankleek Hill என்னும் இடத்தைச் சேர்ந்த Vera Page (83), ஓய்வு பெற்றோருக்கான இல்லம் ஒன்றில் தங்கியிருக்கிறார். வழக்கமாக அந்த இல்லத்தில் உள்ளவர்களை, வாரந்தோறும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மளிகைக் கடைக்கு அழைத்துச் செல்வார்களாம். அப்படி செல்லும்போது, Vera லொட்டரிச் சீட்டு வாங்குவதுண்டு. ஆனால், இம்முறை அவர்கள் அந்த இல்லத்திலுள்ளவர்களை மளிகைக் கடைக்கு அழைத்துச் … Read more

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் உள்பட 7 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய கொலிஜியம் பரிந்துரை…

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்பட 7 நீதிபதிகளை மாற்ற உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. நவம்பர் 17ம் தேதி நடைபெற்ற  உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி உள்பட பல நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரைத்தது. இந்த நிலையில், தற்போது,   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி உள்பட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் உள்பட மொத்தம்  7 நீதிபதிகளை … Read more

பொள்ளாச்சியில் பிப்ரவரியில் பலூன் திருவிழா நடத்தப்படும்: அமைச்சர் மதிவேந்தன் தகவல்

நாமக்கல்: பொள்ளாச்சியில் பிப்ரவரியில் பலூன் திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். குமாரபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 2 ஆண்டுகளில் குற்றாலம், ஒகேனக்கல் புதுமையாக மாற்றப்படும். சுற்றுலாத்துறையில் முதல்முறையாக கேரவன் சுற்றுலா கொண்டு வர உள்ளதாகவும் மதிவேந்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா: ஆண் – பெண் பணியாளர்கள் எப்படி பணிக்கு வரவேண்டும்… புதிய விதிமுறைகள் என்னென்ன?

ஏர்-இந்தியா நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா குழுமம், நிறுவனத்தில் பணியாற்றும் ஆண், பெண்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. விமான பயணத்தின்போது என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது போன்ற வழிகாட்டுதல்கள் அடங்கிய விதிமுறைகளை தங்களின் விமான பணிக்குழுவுக்கு ஏர் இந்திய விமான நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆண் பணியாளர்களுக்கான விதிமுறைகள் : ஆண்கள் விமானத்தில் பணியில் ஈடுபட்டிருக்கும் போது கருப்பு நிற மேல்சட்டையைக் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். ட்டை பின்கள் நிர்வாகம் வழங்காத பட்சத்தில் அவை இல்லாமல் டை … Read more

கத்தாரில் உலகக்கோப்பையில் ரொனால்டோ வரலாற்று சாதனை!

கானாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் போர்த்துக்கல் வீரர் ரொனால்டோ வரலாற்று சாதனை படைத்தார். ஐந்தாவது உலகக்கோப்பை கத்தார் உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் போர்த்துக்கல் மற்றும் கானா அணிகள் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல்கள் விழவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் இரு அணி வீரர்களும் போட்டி போட்டு விளையாடினர். ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் போர்த்துக்கலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். @Reuters வரலாற்று சாதனை இதன்மூலம் … Read more

12 சிறைகளில் கட்டப்பட்டுள்ள அடையாள அணிவகுப்பு கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை:  12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் இன்று திறக்கப்பட்டது. அதன்படி,  மாவட்ட சிறைகளில் கட்டப்பட்ட சோதனை மற்றும் அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.12 மாவட்டங்களில் ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை காணொலி மூலம் … Read more

அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உருவாக்கப்பட்டது: அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை: அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உருவாக்கப்பட்டது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்துள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக செய்தியர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் தான் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் உள்ளன. ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் அமலுக்கு வரும். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஏற்கனவே அதிமுக ஆட்சியால் நிறைவேற்றப்பட்டு பிறகு ஐகோர்ட்டால் ரத்து செய்யப்பட்டது. … Read more

வேளாண் ஏற்றுமதி: விவசாயிகளுக்கு ரூ.2 இலட்சம் பரிசு! யார் விண்ணபிக்கலாம்?

வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் “வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக ரூ.2 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு தென்னையிலிருந்து இத்தனை பொருள்களா? மதிப்புக்கூட்டலில் அசத்தும் விவசாயி! நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றி விவசாயிகள் உயர் மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பலவகையான விருதுகளை அறிவித்து விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. அந்தவகையில் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு … Read more

கால் மேல் கால் போட்டு சொகுசாக வாழ்ந்த கோடீஸ்வரர்.. இப்போது ரோட்டு கடையில் இறைச்சி விற்க காரணம்

சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஒரு சமயத்தில் பெரும் கோடீஸ்வரராக இருந்த நிலையில் தற்போது ரோட்டு கடையில் இறைச்சியை விற்பனை செய்து வருகிறார். பெரும் கோடீஸ்வரர் 52 வயதான Tang Jian ஒரு சமயத்தில் கோடீஸ்வர தொழிலதிபராக வலம் வந்தார். அவருக்கு சொந்தமாக பல உணவகங்கள் இருந்தன. இதெல்லாம் 2005 வரையில் தான், தொழிலில் பலத்த நஷ்டமடைந்து அனைத்தும் திவாலானது. அதன்படி உணவகங்கள், வீடுகள், கார்கள் என அனைத்தையும் அவர் விற்றுள்ளார். இதையடுத்து $6.4 மில்லியன் (ரூ. … Read more