பிரித்தானியாவுக்கு புலம்பெயர சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்யும் கடத்தல்காரர்கள்: தண்டிக்க தயாராகும் சட்டம்

பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வது தொடர்பாக கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்துவருகிறார்கள். அத்தகையோரை தண்டிக்க, பிரித்தானியாவில் சட்டம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது. சமூக ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் சட்ட விரோதமாக ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவது தொடர்பாக, கடத்தல்காரர்கள் சமூக ஊடகங்களில் விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். ’வெற்றி’ என்பது போல கைகளை உயர்த்திக் காட்டியபடி, படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் புலம்பெயர்ந்தோரைக் காட்டும் வீடியோக்களும், பிரித்தானியாவுக்குள் எளிதாக நுழைவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் புகைப்படங்களும், டிக் டாக் … Read more

சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு! உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு வாதம்..

டெல்லி: சாதி மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு தனது வாதத்தை வலிமையாக எடுத்து வைத்துள்ளது. கடந்த விசாரணை யின்போது, நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரடியாக காண அழைப்பு விடுத்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வாதங்களை தமிழகஅரசு முன் வைத்துள்ளது. தமிழர்களின்  பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய விலங்குகள் நல அமைப்பான பீட்டா மீண்டும்  முயற்சித்து வருகிறது. ஏற்கனவே பீட்டாவின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்ட நிலையில், … Read more

டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் சென்னையில் மிக மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளனர். சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. டிசம்பர் 8-ம் தேதி 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

இனி டீ பேக்கை தூக்கி வீசாதீங்க! இந்த அற்புத நன்மைகளை அள்ளித்தருமாம்

  உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு பானம் தான் டீ. இது இல்லாமல் பலர் தங்களது நாளை தொடங்குவதே இல்லை. மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை தரக்கூடியது தேநீர் அல்லது டீ. பலருக்கு தனிமையைப் போக்க, ஆசுவாசப்படுத்திக்கொள்ள, மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ள என சிறந்த பானமாக இருக்கிறது. ஆனால் டீ போட்டவுடன் எஞ்சிய டீ பேக்குகளை குப்பையில் தூக்கி போட்டு விடுவோம்.  டீயில் உள்ள நன்மைகளைப் போலவே பயன்படுத்திய டீ பேக்குகளிலும் பல்வேறு நன்மைகள் உள்ளன.   இதனை … Read more

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்…

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்நத் 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், பல மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மாநில மற்றும் மத்தியஅரசு தலையிட்டு, கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை … Read more

நெல்லை களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து

நெல்லை: களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. கத்தியால் குத்திய மாணவர் கைதான நிலையில் காயமடைந்த பள்ளி மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தங்க நாணயம் தரும் ஏ.டி.எம்., ஹைதராபாதில் அறிமுகம்| Dinamalar

ஹைதராபாத் தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கக்காசுகள் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. வங்கிகள் தற்போது நிறுவியுள்ள ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி இயந்திரங்கள் வாயிலாக, எந்த நேரத்திலும் பணம் பெறுகிறோம். 3,000 இயந்திரங்கள் இதேபோல, வங்கிகள் வழங்கும் ‘டெபிட்’ மற்றும் ‘கிரெடிட்’ கார்டுகளை பயன்படுத்தி, தங்க நாணயங்கள் பெறும் ஏ.டி.எம்., இயந்திரத்தை, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் முதல் இயந்திரம் ஹைதராபாதின் பேகம்பேட் என்ற இடத்தில் நேற்று முன் … Read more

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது' – விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இயங்கும் `வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ என்னும் ஆய்வுக்கூடத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் கசிந்திருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹஃப் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் அவரும் ஒருவராவார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் என்ற விஞ்ஞானி … Read more

மனைவிகளுடன் ஏன் குடித்து கும்மாளம் அடிக்கவில்லை? அதான் கத்தார் உலகக் கோப்பையில் தோல்வி… ஜேர்மனி மீது விமர்சனம்

கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஜேர்மனி அணி சீக்கிரம் வெளியேற காரணம் வீரர்களின் மனைவிகள் தான் அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. ஜேர்மனி வெளியேற்றம் கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணியான ஜேர்மனி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் ஜேர்மனியர்கள் நாக் அவுட் நிலைக்கு முன்னேறத் தவறினர், ஏனெனில் வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகள் போதுமான அளவு பார்ட்டி மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை … Read more