தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அன்னிய செலாவணி இருப்பு மூன்றாவது வாரமாக அதிகரிப்பு| Dinamalar

மும்பை :நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து மூன்று வாரங்களாக அதிகரித்து வருகிறது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடந்த நவம்பர் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 23 ஆயிரத்து, 490 கோடி ரூபாய் அதிகரித்து, 44.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், இருப்பு 44.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஆண்டு அக்டோபரில், இதுவரை இல்லாத அளவுக்கு, 52.89 லட்சம் கோடிரூபாயாக அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்தது … Read more

PMAY : பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் முறைகேடா? – அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

இந்தியாவில் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டம், நகர்ப்புறம் (PMAY-U), கிராமப்புறம் (PMAY-G) என்று இரண்டு வகையாக செயல்படுத்தப்படுகிறது. 2022-23-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்திற்காக 48 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. 2024-ம் ஆண்டிற்கும் மேலும் 1.72 கோடி வீடுகள் கட்டப்படும் என்று மத்திய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகம் … Read more

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் 216 இணையர்களுக்கு திருமண விழா நடைபெற்றது. 31 ஜோடிகளுக்கு ரூ.72,000 மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

திருமலையில் வரும் 17 முதல் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் திருப்பதி–திருமலையில், வரும் 17ம் தேதி முதல், சுப்ரபாதத்திற்கு பதிலாக, திருப்பாவை சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி தெரிவித்தார். திருமலை அன்னமய்ய பவனில் நேற்று பக்தர்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அதில் பங்கேற்ற பக்தர்களிடம் தேவஸ்தான செயல் இணை அதிகாரி தர்மா ரெட்டி பதில் அளித்த பின் கூறியதாவது: இரவு முதல் காத்திருப்பு அறைகளில் இருக்கும் பக்தர்கள், காலையில் திரு மலை ஏழுமலையானை தரிசனம் செய்ய … Read more

ம.பி: பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்; காங்கிரஸ் கண்டனம்!

மத்தியப் பிரதேசத்தில், அரசுப் பள்ளி ஆசிரியரொருவர், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டதாதற்காக பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 24-ம் தேதியன்று, கனஸ்யாவில் உள்ள பழங்குடியினர் விவகாரத் துறையின் கீழ் உள்ள தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ராஜேஷ் கண்ணோஜே என்பவர், பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டிருந்தார். சஸ்பெண்ட் இந்த விஷயம் தெரியவரவே, அடுத்த நாளான நவம்பர் 25 அன்றே, அரசியல் கட்சியால் நடத்தப்பட்ட பாரத் ஜோடோ யாத்ராவில் … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

தோகா: உலகக்கோப்பை கால்பந்து 2022 போட்டியில் அர்ஜென்டினா, நெதர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதனால் முதல் பாதியில் அந்த … Read more

எகிப்து பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது

கொய்ரோ: எகிப்து தலைநகர் கொய்ரோவில் நடைபெற்ற பிரசிடண்ட் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது. 50 மீட்டர் ரைபிள் 3 பொஷிசன் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஹெராயின் கடத்த முயற்சி முறியடித்த பாதுகாப்பு படையினர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சண்டிகர் : பஞ்சாபிலுள்ள நம் எல்லைப் பகுதியில், பாகிஸ்தானிலிருந்து ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானம் வழியாக வீசப்பட்ட 25 கிலோ ‘ஹெராயின்’ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தும் முயற்சியை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் நேற்று முறியடித்தனர். பஞ்சாபில், பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, பசில்கா மாவட்டத்திலுள்ள சுரிவாலா சுஸ்தி கிராமத்தில், நேற்று முன்தினம் எல்லை பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில், … Read more

வருவாய் புலனாய்வு குழு சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்: தங்க கடத்தல் சகோதரர்கள் சிக்கியது எப்படி?

ராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்கு தங்கம் கடத்தி வருவதாக திருச்சி புலனாய்வு இயக்குநராக குழுவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மதுரை விரகனூர் ரிங் ரோட்டில் மோட்டார் சைக்கிள், கார், பஸ் என அனைத்து வாகனங்களையும் போலீஸார் உதவியுடன் புலனாய்வு குழுவினர் சோதனை செய்தனர். அப்போது ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த பேருந்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினத்தை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவர் கைப்பையில் ஐந்து கிலோ தங்கத்தை … Read more