அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசனை..!!

சென்னை: அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு மாவட்ட மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அருகே பனையூர் அலுவலகத்தில் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சீன வீரர்களுடன் மோதல்: இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை: ராஜ்நாத்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. யாரும் படுகாயம் அடையவில்லை என லோக்சபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் சீன வீரர்களுடன் நடந்த மோதல் தொடர்பாக லோக்சபாவில் ராஜ்நாத் சிங் அளித்த விளக்கம்: கடந்த 9 ம் தேதி தவாங் செக்டாரில் உள்ள யங்ஸ்டே பகுதியை சீன … Read more

மழை, மக்கள் நல்வாழ்வு வேண்டி இருக்கன்குடி மாரியம்மனுக்கு சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் தரிசனம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆன்மிகத் தலங்களில் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில், கார்த்திகை மாதத்தின் கடைசி சோமவார தினத்தையொட்டி அம்மனுக்கு சங்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது. சங்காபிஷேகம் கார்த்திகை கடைசி சோமவார தினத்தையொட்டி இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நெல்லையைச் சேர்ந்த ஓதுவார் குழுவினர் தலைமையில் யாகசாலை பூஜையுடன் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், மக்கள் நல்வாழ்விற்காகவும் சிறப்பு மகாஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்குப் பால், பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், … Read more

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்..இணையத்தில் பதிவிட்ட யூடியூபர்

ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்..இணையத்தில் பதிவிட்ட யூடியூபர் Source link

மூன்றாம் கட்ட நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம்!

சென்னை:  மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி குறித்து ஜெர்மன் மேம்பாட்டு வங்கியுடன் முதலமைச்சர் முன்னிலையில் தமிழகஅரசு ஒப்பந்தம் பரிமாற்றப்பட்டது. ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி – தமிழ்நாடு திட்டத்திற் கான ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பரிமாற்றம் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஜெர்மன் … Read more

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்..!!

சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை பொருட்படுத்தாமல் ஒரு மாநில அரசு இப்படி நடந்துகொள்வது இறையாண்மைக்கு சவாலாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டப்படுவதை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பயம் காரணமாக காங்., அமளி: அமித்ஷா குற்றச்சாட்டு| Dinamalar

புதுடில்லி: சீன தூதரகத்திடம் இருந்து ரூ.1.35 கோடி பணம் காங்கிரஸ் பெற்றுள்ளது. இது குறித்து உண்மை வெளியே வந்துவிடும் என்ற பயத்தால், பார்லிமென்டில் காங்கிரஸ் அமளியில் ஈடுபட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். அமளி அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டார் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இன்று(டிச.,13) பார்லிமென்டில் அமளியில் ஈடுபட்டன. … Read more

வீரபாண்டிய கட்டபொம்மன் வணங்கிய சுந்தரராஜ பெருமாள் கோயில்; வரலாறும் புராணமும் கூறும் அதிசயங்கள்

தமிழகத்தில் புகழ்பெற்ற பழைமையான வைணவத் தலங்களில் ஒன்று வீரவநல்லூர் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயில். இந்த தலத்தில் பெருமாள் தனது திருதேவியர் சுந்தரவல்லி அம்பாள் மற்றும் சுந்தரநாயகி அம்பாளுடன் சுந்தர வடிவமாய் பக்தர்களுக்கு அருள்கிறார். சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்னொரு காலத்தில் காசியப முனிவர் என்ற தீவிர வைணவ பக்தர் ஒருவர் வைணவ ஆலயங்களுக்கு சென்று எம்பெருமானை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அவ்வாறாகவே திருமாலிருஞ்சோலையில் கள்ளழகரை வழிபட்டுவிட்டு தென்பக்கம் நோக்கி நடந்த போது ஓரிடத்தில் தியான நிலையில் … Read more

கத்தார் உலகக்கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட இங்கிலாந்து கேப்டன்! இந்திய தொழிலதிபர் கூறிய கருத்து

இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹரி கேன் குறித்து ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். கத்தார் உலகக்கோப்பையின் காலிறுதிப் போட்டியில் பிரான்ஸ் – இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. பெனால்டியை தவறவிட்ட இங்கிலாந்து கேப்டன்   இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹரி கேன் 54வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து மிரட்டினார். ஆனால் 84வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி … Read more

உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்! பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்புக்கு தடை இல்லை என்றும் கூறியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை பதிவு செய்ய பதிவுச்சட்ட காலவரம்பு தடையாக இல்லை என்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக,  அனைத்து சார்-பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட்டுள்ளது. தீர்ப்புகளை பதிவு செய்ய மறுக்கும் பதிவாளர்களுக்கு எதிராக நடவடிக்கை … Read more