அக்-23: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

விமானத்தில் சக பயணிகளால் கேலி கிண்டலுக்கு இலக்கான போரிஸ் ஜோன்சன்: பிரதமராக எதிர்ப்பு

முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இருவரும் முந்துவதாக தகவல் போரிஸ் ஜோன்சன் மீண்டும் போட்டியிடுவதை கேலி செய்ததாகவும், வேண்டாம் விட்டுவிடுங்கள் என கத்தியதாகவும் தகவல் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கரீபியன் தீவுகளில் விடுமுறையை கொண்டாடிவிட்டு திரும்பிய முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனை சக பயணிகள் கிண்டல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமரான போரிஸ் ஜோன்சன் தமது மனைவியுடன் கரீபியன் தீவு ஒன்றில் விடுமுறையை கழித்துவிட்டு இன்று நாடு திரும்பியுள்ளார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,582,067 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65.82 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,582,067 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 632,672,676 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 611,427,273 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 38,597 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை எய்ம்ஸ் தலைவராக டாக்டர் நாகராஜன் நியமனம்| Dinamalar

புதுடில்லி : தமிழகத்தின் மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு தலைவராக டாக்டர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள வி.என். நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான டாக்டர் வி.நாகராஜன், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ளது. கடந்த 2015 பிப்ரவரியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அறிவிப்பு வெளியாகி, 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2019 ஜனவரி 27ல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு, பிரதமர் நரேந்திர … Read more

ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சிறப்பு நிதியுதவி: முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு

PDCA எனப்படும் சிறப்பு நிதியுதவியான 115,000 பவுண்டுகள் தொகைக்கு அவர் தகுதியுடையவர்  லிஸ் ட்ரஸ் குறித்த தொகைக்கு தகுதியானவர் அல்ல, அதை நிராகரிக்க வேண்டும் என சர் கீர் ஸ்டார்மர் பிரித்தானிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பதவி விலகிய நிலையில், முன்னாள் பிரதமர்களுக்கான சிறப்பு நிதியுதவி 1 கோடி தொகையை அவர் கோரக்கூடாது என எதிர்ப்பு வலுத்துள்ளது. பிரித்தானிய பிரதமராக 45 நாட்கள் பதவியில் இருந்த லிஸ் ட்ரஸ் கடந்த வியாழக்கிழமை தாம் பதவியில் இருந்து விலகுவதாக … Read more

மாநில அரசுகள் டிவி சேனல் நடத்த தடை!| Dinamalar

புதுடில்லி : மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தொலைக்காட்சி சேனல் நடத்த அல்லது அது தொடர்பான வினியோக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த அதிரடி உத்தரவால், தமிழக அரசு நடத்தும் கல்வி ‘டிவி’யின் செயல்பாடு கேள்விக்குறியாகி உள்ளன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பில், மத்திய அரசின் பல்வேறு துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மத்திய தொலை … Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் தேடப்பட்ட 5வது வீரரும் பலி

இடாநகர் : அருணாச்சல பிரதேசத்தில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி நான்கு வீரர்கள் உயிரிழந்த நிலையில், தேடப்பட்டு வந்த ஐந்தாவது வீரரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில், சியாங் மாவட்டத்தில் உள்ள லிகாபலி என்ற இடத்தில் இருந்து, ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் பயிற்சிக்காக புறப்பட்டது. இது, நம் அண்டை நாடான சீன எல்லைக்கு ௩௫ கி.மீ.,க்கு முன் உள்ள மிக்கிங் என்ற கிராமத்தின் அருகே, அடர்ந்த மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குஉள்ளானது. இதில் சென்ற ஐந்து வீரர்களும் … Read more

நடுவானில் விமானத்துடன் மாயமான ஜேர்மன் மில்லியனர்: வெளிவரும் புதிய தகவல்

லிமோன் விமான நிலையத்திலிருந்து 17 மைல் தொலைவில் குறித்த விபத்து நடந்துள்ளதாக அதிகாரிகள் விமானம் காணாமல் போனது குறித்து கோஸ்டாரிகா அதிகாரிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு எச்சரிக்கை ஜேர்மன் மில்லியனர் மற்றும் குடும்பத்தினர் பயணம் செய்த தனியார் விமானம் விபத்தில் சிக்கியுள்ளதாக உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜேர்மன் மில்லியனரான Rainer Schaller மற்றும் அவரது குடும்பத்தினர் பயணப்பட்ட தனியார் விமானமானது கோஸ்டாரிகாவில் விபத்துக்குள்ளானது. இந்த நிலையில், தீவிர தேடுதல் நடவடிக்கையின் ஒருபகுதியாக … Read more

தீபாவளி கொண்டாட்டம்; புதுடில்லியில் கூடுதல் பாதுகாப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி நாளை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தலைநகர் புதுடில்லியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுடில்லி மாநகர போலீஸ் சிறப்பு கமிஷனர் சாகர் பிரீத் ஹூடா கூறியதாவது: மாநகரம் முழுதும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. துணை கமிஷனர்கள் தலைமையில் போலீஸ் படையினர் மாநகர் முழுதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வணிக வளாகங்கள், மார்க்கெட், … Read more

சர்க்கரை நோயாளிகளே! நீங்களும் இந்த தீபாவளிக்கு ஸ்வீட் சாப்பிடனுமா? இதோ சூப்பரான ரெசிபி

வரும் தீபாவளியை முன்னிட்டு அனைவரது வீட்டிலும் இனிப்பு பண்டங்கள் செய்வது வழக்கம். இருப்பினும் நமது வீட்டில் சர்க்கரை நேயாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு ஏற்ற வகையில் வீட்டிலே எளிய முறையில் செய்யக்கூடிய சூப்பரான இனிப்பு பண்டம் ஒன்றை எப்படி செய்வது என்று இங்கே பார்ப்போம். தேவையான பொருட்கள்: வறுத்த பாதம் – 1 கப் வறுத்த வேர்க்கடலை – 1 கப் பிஸ்தா – 1/2 கப் வால்நட்ஸ் – 1/2 கப் குறைவான கொழுப்புள்ள பால் … Read more