பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்| Dinamalar

புதுடில்லி: இந்திய கிரிக்கெட் அணி குறித்து கிண்டலடித்த பாகிஸ்தான் பிரதமருக்கு, இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார்.ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்று பைனலுக்கு முன்னேறியது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘இந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பைனலில் 152/0 மற்றும் 170/0 இடையே மோதல் நடக்கிறது’ என கிண்டலாக தெரிவித்திருந்தார்.அதாவது, கடந்த … Read more

மேற்கு வங்காளத்திற்கு எதிராக சதித்திட்டம்: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டு வருவதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: ஊழல் வழக்குகளில் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறு செய்தவர்களுக்கு இவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். மேற்கு வங்க அரசுக்கு எதிராக சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் திரினாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீங்கிழைக்கும் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மூத்த … Read more

அன்று அரசம்பாளையம், இன்று நஞ்சைக்காலக்குறிச்சி; அடுத்தடுத்து கிடைக்கும் பழைமையான லிங்கங்கள்!

கரூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து விவசாயிகளின் தோட்டங்களில் 1000 வருடப் பழைமையான சிவலிங்கங்கள், நந்தி, சண்டிகேஸ்வரர் சிலைகள் கிடைத்து வருவது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி செல்லும்வழியில் உள்ள மலைக்கோவிலூர் அருகிலுள்ள அரசம்பாளையத்தில் இருக்கும் ஒரு விவசாயியின் முருங்கைத் தோட்டத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருந்த தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த சிவனடியார்கள், மூடியிருந்த மணல்மேட்டை அப்புறப்படுத்தினர். அப்போது, அவர்கள் அதிசயிக்கும் வகையில் 7 அடி … Read more

கடற்கரையில் கிடைத்த கூழாங்கல்லை பாக்கெட்டில் வைத்திருந்த பிரான்ஸ் நாட்டவர்: திடீரென தீப்பிடித்ததால் அதிர்ச்சி

பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கடற்கரையில் கிடந்த அழகான கூழாங்கல் ஒன்றைக் கண்டெடுத்தார். சிவப்பு நிறக் கூழாங்கல் Benoît Mabire என்பவர் தன் மனைவி பிள்ளைகளுடன் Normandyயிலுள்ள கடற்கரை ஒன்றிற்குச் சென்றுள்ளார். அப்போது, அழகான சிவப்பு நிறக் கூழாங்கல் ஒன்றை அவர் கண்டெடுத்துள்ளார். அதை அவரது மனைவி தண்ணீரில் கழுவிக் கொடுக்க, அதை வேறு சில கூழாங்கற்களுடன் சேர்த்து தனது கோட் பாக்கெட்டில் வைத்திருக்கிறார் Benoît. திடீரென தீப்பிடித்த கோட் பாக்கெட் சிறிது நேரத்தில் தனது பாக்கெட்டிலிருந்து புகை … Read more

விடுதலை செய்யப்பட்ட 4 இலங்கை குற்றவாளிகளும் சொந்த நாட்டுக்கு அனுப்பப்படுவார்கள்! ஆட்சியர் தகவல்…

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், குற்றவாளிகளில் 4 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் எங்கு செல்வார்கள் என்பது கேள்விக்குறியானது. இந்த நிலையில், விடுதலை செய்யப்பட்ட 4 பேர் சொந்த நாடான இலங்கை அனுப்பப்படுவர் என்று இன்று திருச்சி சிறப்பு முகாமில் ஆய்வு செய்த  மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மறைங்நதராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட … Read more

மாணவி ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை பெற்றோர் விசாரணைக்கு ஒப்படைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நியாயமான விசாரணை நடைபெற மாணவி ஸ்ரீமதியின் செல்போனை ஒப்படைக்க பெற்றோருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவியின் செல்போன் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அதனை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்சோ சட்டம்: சிறார்கள் சம்மதத்துடன் உறவு கொள்வதை குற்றமாக கருத முடியாது – டெல்லி ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!

புதுடெல்லி, 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கில், கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சட்டம் தான் போக்சோ சட்டமாகும். 18 வயதுக்கு குறைவான அனைத்து குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். டெல்லியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவள் குடும்பத்தால் ஒரு ஆணுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது.ஆனால் சிறுமி … Read more

“பல விபத்துகளைத் தாண்டிதான் சினிமாவுக்கே வந்தேன்!" – `புதிய பாதை' பார்த்திபன் @ 1989

ஒரு சினிமா நிஜமான கதை! பொறந்ததுலேருந்து ஒரு குழந்தை படுத்து. புரண்டு, குப்புற விழுந்து நெத்தியில அடிபட்டு, சுவத்தைப் புடிச்சு எழுந்து, ரெண்டு கையையும் விட்டுட்டு, எந்தப் புடிப்புமே இல்லாம சுத்தியிருக்கறவங்களை மிரண்டு மிரண்டு பாக்குமே… அந்த மாதிரியான மனநிலையிலதான் இப்போ நான் இருக்கேன். இது ஒண்ணும் ஒரு பெரிய சாதனையாளனோட ஃபிளாஷ்பேக் இல்லை! ‘திரும்பிப் பார்க்கிறேன்’ – `பின்னோக்கிச் செல்கிறேன்’ – மாதிரியான பெரிய விஷயமும் இல்லை. ஆனாலும் இதை நான் சொல்ல ஆசைப் படறத்துக்கு … Read more

கண்ணீருடன் கணவர் முருகனை தேடி வந்து நலம் விசாரித்த நளினி! தொடரும் பிரிவு

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள கணவர் முருகனை சந்தித்து நளினி கண்ணீருடன் அவரிடம் நலம் விசாரித்துள்ளார். முகாமில் உண்ணாவிரதம் அப்போது, அவரது கணவர் உள்ளிட்ட நால்வரும் முகாமில் தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் முகாமிற்கு நேரடியாக வருகை தந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். மேலும் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். ஆட்சியரிடம் நளினி கோரிக்கை அப்போது … Read more

மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்: சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

சென்னை: ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடியாத பகுதிகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் மழைநீர் தேங்கவில்லை என்பது பொய் என திமுக அரசு மீது குற்றம் சாட்டினார். வடகிழக்கு பருவமழையையொட்டி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதி கனமழை பெய்து ஓய்ந்த நிலையில் இன்னும் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து வருகிறது. கனமழை பெய்த காரணத்தால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. … Read more