குடும்ப செலவு தகராறில் கொலை : காதலியை கொன்றவர் தகவல்| Dinamalar

புதுடில்லி:குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக, காதலியைக் கொன்று துண்டு துண்டாக்கிய அப்தாப் புனேவாலா, ‘நார்கோ’ பரிசோதனையில் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா, ஷ்ரத்தா வால்கர்இருவரும் காதலர்களாக பழகி வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பைத் தொடர்ந்து இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர்.இதற்கிடையே, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவைக் கொலை செய்து, ௩௫ துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியது சமீபத்தில் தெரியவந்தது.கைது செய்யப்பட்டுள்ள அப்தாப், விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து, … Read more

பாலியல் தொல்லை – இந்தியாவில் உடனடி நடவடிக்கை: தென் கொரிய யூட்யூபர் நெகிழ்ச்சி

மும்பை, மும்பை தென் கொரியாவைச் சேர்ந்த மியோச்சி என்ற யூடியூபர் செவ்வாய்கிழமை இரவு மும்பையில் ஒரு பரபரப்பான தெருவில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார். அப்போது இரு இளைஞர்கள் பைக்கில் லிப்ட் கொடுப்பது போல் அவரது கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தனர். மியோச்ச் அவர்களிடம் நோ நோ என்று கூறுகிறார். இதற்கிடையில் அவர்களில் ஒருவர் அவளை முத்தமிட முயன்றார். இளைஞர்களின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்றும் அவர் விடவில்லை. அவர்கள் அவளைப் பின்தொடர்ந்து வாகனத்தில் ஏறும்படி வற்புறுத்தினார்கள். … Read more

"அனைவருக்கும் ஒரே மாதிரியான திருமணம்!" – பொது சிவில் சட்டத்தை வலியுறுத்தும் மத்தியப் பிரதேச முதல்வர்

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால், மத்தியில் ஆட்சியிலிருக்கும்போதே குடியுரிமை திருத்த சட்டம், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் போன்ற சட்டங்களை அமல்படுத்த பா.ஜ.க தீவிரம் காட்டிவருகிறது. அதில் பொது சிவில் சட்டம் முக்கியமான ஒன்றாக பா.ஜ.க குறிவைத்திருக்கிறது. அதாவது இந்திய அரசியலமைப்பு பிரிவு 44 கூறும் பொது சிவில் சட்டம், மதம், பாலினம், சாதி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களைக் கொண்டுவருவதை … Read more

வலையில் சிக்கிய அரியவகை டால்பின்கள்., மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு!

தமிழக மீனவர்களின் வலையில் சிக்கிய இரண்டு டால்பின்கள் மீண்டும் பத்திரமாக கடலில் விடப்பட்டன. டால்பின்களை பத்திரமாக மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு டால்பின்கள் ராமநாதபுரம் கீழக்கரையில் செவ்வாய்கிழமை அங்குள்ள மீனவர்கள் ஒன்றிணைந்து கரைவலையை கடலில் வீசி கரைக்கு இழுத்தனர். அப்போது சுமார் 4 மற்றும் 6 வயதுடைய டால்பின் மீன்கள் வலையில் சிக்கின. Twitter screengrab @supriyasahuias வலைக்குள் சிக்கி போராடிக் கொண்டிருந்த டால்பின்களை, மீனவர்கள் உயிருடன் மீட்டு மீண்டும் கடலில் … Read more

தமிழக மருத்துவ கல்லூரிகளில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலி! மத்தியஅரசின் கொள்கையால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு வீண்…

சென்னை: தமிழக மருத்துவ கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 892 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்த உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் இடஒதுக்கீடு கொள்கைகளால், இடங்கள் முழுமையாக ஒதுக்கீடு செய்வதில் ஏற்படும் பிரச்சினையால் தமிழக மாணாக்கர்களுக்கு கிடைக்க வாய்ப்பு வீணடிக்கப்படுகிறது. மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில்  அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 7,378 உள்ளன. … Read more

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரிப்பு: வருமான வரித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. அதிகளவு வரி வசூலில் தமிழகம் – புதுச்சேரி 3ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் வருமான வரி வசூல் இலக்கில் இதுவரை 53% வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் என முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசிதரூர் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு

புதுடெல்லி, முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் ஒரு நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து, அவரது வயிற்றுப்பகுதியின் உள்ளுறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டன. அமெரிக்க புலனாய்வு நிறுவனம் ஒப்படைத்த அறிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ வல்லுனர்கள் ஆய்வு செய்து வந்தனர். அந்த அறிக்கையின் மீதான கருத்துகளை டெல்லி … Read more

முன்னாள் சீன அதிபர் மறைவு | ஹங்கேரியில் பரவும் பறவைக் காய்ச்சல் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

முன்னாள் சீன அதிபர் ஜியாங் ஜெமின் (Jiang Zemin) 96 வயதில் காலமானார். தெற்கு அமெரிக்காவில் வீசிய சூறாவளியால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்கள் சேதமானதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஹங்கேரியில் தற்போது H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பரவி வருவதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் அய்பக் நகரில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 15 பேர் உயிரிழந்தனர். போலந்து வழியாக மாதந்தோறும் சுமார் 450,000 … Read more

தனுசு செல்லும் புதன்! விபரீத யோகம் யாருக்கு? நாளைய ராசிப்பலன்

புதன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். தற்போது இவர் 03 ஆம் திகதி புதன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். இந்த டிசம்பர் மாதத்தில் புதன் இரண்டு முறை ராசியை மாற்றப் போகிறார். புதனின் இந்த இடமாற்றம் நாளைய நாள் யாருக்கு விபரீத யோகத்தை தரப்போகுது என்று பார்ப்போம்.   உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு … Read more

மத்தியஅரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் 13,404 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் ஆள்சேர்ப்பு!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள  முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 13,404 பல்வேறு காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளிலும்  1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் நிரப்புவது  தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அதில் வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு … Read more