DSP Review: அதே டெய்லர், அதே வாடகை; தமிழ் சினிமாவின் மற்றுமொரு டெம்ப்ளேட் காக்கிச்சட்டை சினிமா!

சாதா இளைஞன் ஊருக்குள் கெத்தாய் சுற்றும் தாதாவோடு உரசினால் என்னாகும்? கொலவெறி தாதாவை டி.எஸ்.பி-யாகி பழி தீர்க்கும் அதே அரதப்பழசான போலீஸே இந்த DSP! விஜய் சேதுபதி – பொன்ராம் கூட்டணியில் இந்த டி.எஸ்.பி வசீகரித்தானா… வதைத்தானா? திண்டுக்கல்லில் அமைதியே உருவாக வாழும் பூக்கடை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் இளவரசுவின் மகன் விஜய் சேதுபதி. நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டும் சரக்கடித்துக் கொண்டும் ஜாலியாய் திரிகிறார். விஜய் சேதுபதிக்கு அரசாங்க வேலை வாங்கித்தர ஆசைப்படுகிறார் இளவரசு. ஒரு … Read more

எனக்கு நீங்கள் வேண்டும்! நீங்கள் இல்லாமல்… காதலரிடம் உருகிய இளவரசி டயானா சொன்ன வார்த்தைகள்

இளவரசி டயானா, ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் 5 வருடம் காதலில் இருந்த நிலையில் அது குறித்து இருவருமே பொதுவெளியில் பேசியது தெரியவந்துள்ளது. இளவரசரி டயானா – ஜேம்ஸ் ஹெவிட் சார்லஸுக்கும், டயானாவுக்கும் கடந்த 1981ல் திருமணம் நடைபெற்ற நிலையில் 1996ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இதனிடையில் ராணுவத்தில் பணியாற்றிய ஜேம்ஸ் ஹெவிட் என்பவருடன் டயானாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. சார்லஸுடன் வாழும் போதே இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. அதன்படி 1986ல் இருந்து 1991 வரையில் இருவரும் … Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் வந்தார் டிஜிபி சைலேந்திரபாபு…

திருவண்ணாமலை: தீபத்திருவிழாவையொட்டி களைகட்டியுள்ள திருவண்ணாமலையில், பக்தர்கள் கூட்டம் வரத்தொடங்கி உள்ள நிலையில், அங்கு ஆய்வு மேற்கொண்ட டிஜிபி சைலேந்திரபாபு, மலையை சுற்றி கிரிவலம் வந்தார். ஓடிக்கொண்டே மலையை சுமார் ஒன்றேமுக்கால் மணி நேரத்தில் சுற்றி வந்தார். கார்த்திகை தீபத் திருவிழவையொட்டி திருவண்ணாமலைக்கு 30லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெட்ரோல் குண்டு சம்பவங்கள், கார் வெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்றுள்ளதால், திருவண்ணாமலை … Read more

ராமநதி அணை முழு கொள்ளளவை எட்டியது!

தென்காசி: 84 அடி கொள்ளளவு கொண்ட கடையம் ராமநதி அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் கனஅடி நீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

அமெரிக்க பேராசிரியரை மிரட்டி பணம் பறித்த டில்லி இளைஞர் கைது

புதுடில்லி, ஆபாச, ‘வீடியோ’வை வைத்து அமெரிக்க பேராசிரியரை மிரட்டி பணம் பறித்து வந்த புதுடில்லி இளைஞரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர். புதுடில்லியின் அசோலா என்ற இடத்தைச் சேர்ந்தவர் ராகுல் குமார். இவர் தன் காதலியுடன் ஒன்றாக வசித்து வந்தார். ராகுலின் காதலி, அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலையின் பொருளாதாரத்துறை பேராசிரியருடன் சமூக வலைதளம் வாயிலாக நட்பானார். பின் அந்தப் பெண், பேராசிரியருடன் ‘ஆன்லைன் சாட்’ வாயிலாக பேசி வந்தார். ஒருகட்டத்தில் பேரா சிரியரை பாலியல் ரீதியாக … Read more

கழிவறையை சுத்தம் செய்த பட்டியலின மாணவர்கள்… சஸ்பெண்ட் ஆன தலைமை ஆசிரியை கைது – பின்னணி என்ன?!

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம் துடுப்பதி ஊராட்சிக்குள்பட்ட பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளியில் சுமார் 40 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள 2 கழிவறைகளையும் பட்டியலின மாணவர்களை வைத்து தூய்மைப்படுத்தியதாக எழுந்த புகாரின்பேரில், பெற்றோர்கள் பெருந்துறை போலீஸில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட மாணவர்களையும், பெற்றோரையும் நேரில் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில், பள்ளியின் தலைமையாசிரியை கீதாராணி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கீதாராணியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜோதிசந்திரா சஸ்பெண்ட் … Read more

“ஆவின்” பால் பாக்கெட்டில் “சிந்தனையில் மாற்றம்! சமூகத்தில் ஏற்றம்!” என்ற வாசகம்

சென்னை: உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் “ஆவின்” பால் பாக்கெட்டில் “சிந்தனையில் மாற்றம்! சமூகத்தில் ஏற்றம்!” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் நவ., 14 முதல் டிச., 3ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும் ‘ஊனம் ஒரு தடையல்ல… ஊன்றுகோலாய் நாமிருந்தால்’, ‘சிந்தனையில் மாற்றம் சமூகத்தின் ஏற்றம்’ என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனியாக வசித்த முதிய தம்பதி கழுத்தை அறுத்து கொலை: கிரைம் ரவுண்ட் அப்| Dinamalar

தனியாக வசித்த முதிய தம்பதி கழுத்தை அறுத்து கொலை சித்ரதுர்கா : வீட்டில் தனியாக இருந்த முதிய தம்பதியின் கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் கொலை செய்தனர். சித்ரதுர்கா, ஹொசதுர்காவில் உள்ள விநாயகா காலனியை சேர்ந்தவர்கள் பிரபாகர் ஷெட்ரு, 75; விஜயலட்சுமி, 65 தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் தாவணகரேயிலும், மற்றொருவர் சிக்கநாயகனஹள்ளிலும் கணவருடன் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை முதிய தம்பதி இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தனர். வீட்டில் … Read more

கோவளத்தில் வெளிநாட்டு பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: `கைதான இருவரும் குற்றவாளிகள்’ – நீதிமன்றம்

லாட்வியா (latvia) நாட்டைச் சேர்ந்த 40 வயதுள்ள பெண் மன அழுத்த நோய்க்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த போத்தன்கோட்டில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்தார். ஆயுர்வேத மையத்தில் தங்கி சிகிச்சை எடுத்துவந்த அந்த பெண் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி வாக்கிங் சென்ற சமயத்தில் காணாமல் போனார். இதுகுறித்து அவரின் சகோதரி இலீஸ், போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் அந்த பெண்ணின் கணவர் ஆண்ட்ரூஸ் கேரளா டி.ஜி.பி.யை சந்தித்து புகார் அளித்தார். ஆரம்பத்தில் போலீஸ் … Read more