​திண்டுக்கல்​: பள்ளி​ மாணவிகள் 4 பேர் திடீர் மாயம்; நள்ளிரவில் மீட்ட போலீஸார் – நடந்தது என்ன?!

​திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே அரசு உதவி பெறும் புனித செசிலியா​ல் பெண்கள் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். திண்டுக்கல், நந்தவனப்பட்டி, சீலப்பாடி, சென்னம்மாநாயக்கன்பட்டி, முருக பவனம், பேகம்பூர் உள்ளிட்ட திண்டுக்கல் நகரின் 5 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள மாணவிகள் படித்து வருகின்றனர். ​இவர்கள் ஆட்டோக்கள், பேருந்துகளில் பள்ளிக்க வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.​ பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் ​இந்நிலையில் நேற்று … Read more

முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்பு இன்று தொடக்கம்

சென்னை: அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு வகுப்பு இன்று தொடங்குகிறது. இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவிக்கையில், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோருடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும். தொடர்ந்து மாணவர்களுக்கு மருத்துவருக்கான உடை மற்றும் தேவையான பொருட்கள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டும். கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜி 20 மாநாட்டில் இன்று காலை இந்தோனேஷியாவில் தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பேசினார்.

குஜராத் தேர்தல்: வெடித்த கலகம்… பாஜக-விலிருந்து விலகும் எம்.எல்.ஏ-க்கள் – பின்னணி என்ன?!

பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுவதால் சூடுபிடித்திருக்கிறது குஜராத் தேர்தல் களம். டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்யும் பா.ஜ.க-வை எதிர்த்து ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல்கள் வெடித்திருப்பது, அந்தக் கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது. மறுக்கப்பட்ட வாய்ப்பு! 182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில், இதுவரை … Read more

நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை மாரடைப்பால் காலமானார்

ஐதராபாத்:  தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 89. தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக நேற்று காலை ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இருந்தாலும் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தன. … Read more

வாழ்த்துங்களேன்

கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை – அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.அடுத்து 29.11.22முதல் 12.12.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் – நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள். விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 25.11.22 வாழ்த்துங்களேன் பிறந்த நாள் :  எஸ்.ரவீண்குமார், சென்னை … Read more

நஷ்டத்தில் அமேசான்: 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்

அமேசான் நிறுவனம் நஷ்டம் அதிகரிப்பதால், அதன் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த சில காலாண்டுகள் லாபகரமாக இல்லாததால், ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும், செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தவும் அமேசான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரம் முதல் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கம்! மொத்த பணிநீக்கங்களின் எண்ணிக்கை சுமார் 10,000-ஆக இருந்தால், அது அமேசான் வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கமாக இருக்கும். ஆனால், … Read more

உலகளவில் 64.05 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.05 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.16 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.02 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ-15: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

இந்த வார ராசிபலன்: நவம்பர் 15 முதல் 20 வரை #VikatanPhotoCards

வார ராசிபலன் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Source link