வாகனங்களை பராமரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை

மதுரை : பொதுப்பணித்துறையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை பராமரிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பாக முறையான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆதி திராவிடர் பள்ளிக்கான சிறப்பு நிதி; ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு மட்டும்தானா?

பட்டியல் சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சம வாய்ப்பை உருவாக்கி சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு ஆதி திராவிடர் மாணவர்கள் 9 பேர் வெளிநாடுகளில் பிஎச்.டி படிப்பு; RTI ஆர்வலர் முயற்சியின் எதிரொலி! அந்த வகையில், தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 1431 பள்ளிகளில், … Read more

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார்! அமைச்சர் பொன்முடி

சென்னை: தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் விரைவில் ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று  இந்த நிலையில் உயர்கல்வித்துறையில் பணியாற்றும் பொறியாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி , சென்னை உயர்கல்வித்துறையின் ஆய்வு கூட்டம் தொடர்ந்து நடத்தப்படுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றிருந்தது. இன்று பொறியாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. … Read more

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு என தகவல்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்.பி. சி.எஸ்.மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசாரணை அதிகாரியாக கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் நியமிக்கப்பட்டுள்ளார். 2 டிஎஸ்பி -கள் , 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்களும் தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். 

பேரிடர் நிகழ்வுகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செய்தி வெளியிடணும்: அனுராக் தாகூர் வலியுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகிய பேரிடர் நிகழ்வுகள் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் வெளியிட வேண்டும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார். ஆசிய பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபை கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் கலந்து கொண்டு பேசினார். அப்போது மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசியவதாவது: நிலநடுக்கம், தீ விபத்து மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகிய பேரிடர் நிகழ்வுகள் தொடர்புடைய செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் … Read more

விருதுநகர்: செவித்திறன் குறைவுடைய மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் சாதனை; ஆட்சியர் பாராட்டு

தமிழ்நாடு செவித்திறன் குறைபாடுடைய ஜூனியர் மற்றும் சப் ஜூனியருக்கான, 3-ம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள், கடந்த நவம்பர் 25, 26, 27-ம் தேதி ஆகிய 3 நாள்கள் சென்னையில் நடைபெற்றது. 14 வயதுக்குட்பட்டோர் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் என இரு பிரிவாக நடைபெற்ற இந்தப் போட்டியில், விருதுநகர்‌ மாவட்டத்திலிருந்து சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைவுடையோர் பள்ளியிலிருந்து கலந் துகொண்ட மாணவர்கள், மாநில அளவில் சாதனை படைத்து பதக்கங்கள் பெற்றனர். இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் பால்ராஜ் … Read more

'கடவுளிடம் வேண்டிக்கொள்' லியோனல் மெஸ்ஸிக்கு மிரட்டல் விடுத்துள்ள குத்துச்சண்டை வீரர்!

FIFA உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற பிறகு மெக்சிகோ ஜெர்சியை அவமரியாதை செய்ததற்காக லியோனல் மெஸ்ஸிக்கு உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். மெக்சிகோவை வென்ற பிறகு அர்ஜென்டினாவின் கொண்டாட்டத்தின் போது லியோனல் மெஸ்ஸி மெக்சிகோ அணியின் ஜெர்சியை காலுக்கு அடியில் போட்டு அவமரியாதை செய்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) லுசைல் மைதானத்தில் நடைபெற்ற மெக்சிகோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார … Read more

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு ‘சகயோக்’: கடும் எதிர்ப்பை தொடர்ந்து அகற்றிய அதிகாரிகள்…

திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலைய தகவல் மையத்தின் பெயரை, இந்தியில்  ‘சகயோக்’ என பொருத்தப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அகற்றினர். திருப்பூர் ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் தகவல் மையத்தில் ஆங்கிலத்தில் Information center என்றும், தமிழில் சேவை மையம் என்பதற்கு பதிலாக இந்தியில் கூறப்படும் சகயோக் என்பதை, தமிழிலும் சகயோக் என்று எழுதப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், இதுவும் இந்தி திணிப்புதான் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்தியில் … Read more

மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் பாசன நிலங்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவு..!!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் சேலம், நாமக்கல், ஈரோடு பாசன நிலங்களுக்கு நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மேட்டூர் கிழக்கு, மேற்கு கரை கால்வாய்கள் மூலம் ஜனவரி 15 வரை நீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 137 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் மேலும் 47 நாட்களுக்கு நீர்திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

'மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு' – அரசு மீதான சர்ச்சைகளும் திமுக பதிலும்!

தமிழ்நாடு முழுவதும் தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்கள் பிரிவில் 3.24 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருக்கின்றன. இது தவிர 10,000 – க்கும் மேற்பட்ட உயரழுத்த மின் பயனீட்டாளர்கள் இருக்கின்றனர். இதற்கிடையில் மின்சார வாரியத்தின் கடன் சுமையும், வருவாய் இழப்பும் அதிகரித்து வருகிறது. இதை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக தான் கடந்த செப்டம்பர் 10 -ம் தேதி முதல் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து முறைகேடாக மின்சாரத்தைப் பயன்படுத்துவதைத் … Read more