கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 5,6,7 ஆகிய தேதிகளில் 317 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் திண்டிவனத்தில் இருந்து 82 பேருந்துகளும், புதுசேரியில் இருந்து 180 பேருந்துகள்  திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் திருக்கோவிலூரிலிருந்து 115, கள்ளக்குறிச்சியில் இருந்து 200 சிறப்புபேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. 

லுாதியானா குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பிடிபட்டார்| Dinamalar

புதுடில்லி பஞ்சாப் மாநிலம் லுாதியானா கோர்ட் வளாகத்தில் கடந்தாண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை, புதுடில்லி விமான நிலையத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் உள்ள விசாரணை நீதிமன்ற வளாகத்தில், கடந்தாண்டு டிச., 23ல் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்; ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் விசாரித்தனர். … Read more

என்.டி டிவி அதானி குழுமம் வசமானது… நிறுவனர்கள் பிரனாய் ராய், ராதிகா ராய் ராஜினாமா!

முன்னணி ஊடகத்துறை சார்ந்த என்.டி டிவி நிறுவனத்தின் நிறுவனர்களான பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகியோர் தமது பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு அதானி குழுமம் கையகப்படுத்தி இருந்தது. பெரும்பாலான பங்குகள் தற்போது அதானி குழுமத்திடம் சென்றுள்ளதால் இந்த முடிவினை அவர்கள் எடுத்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை என்.டி டிவி நிறுவனத்தின் இயக்குநர் குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அதானி குழுமம் தொலைத்தொடர்பு சேவை உரிமம் பெற்ற அதானி … Read more

IRMS 2023: இந்திய ரயில்வேக்கு தனித் தேர்வை UPSC 2023 முதல் நடத்தும் என அறிவிப்பு…

டெல்லி:  இந்திய ரயில்வேக்கான ஐஆர்எம்எஸ்  தனித் தேர்வை  யுபிஎஸ்சி அடுத்த ஆண்டு முதல் (2023)   நடத்த உள்ளது. யுஎஸ்சியால் நடத்தப்படும், ஐஆர்எம்எஸ் இரண்டு அடுக்குத் தேர்வாக இருக்கும் – முதன்மைத் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் ரயில்வே பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்புக்கு 2023 முதல் யுபிஎஸ்சியால் நடத்தப்படும் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட தேர்வு மூலம் மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே … Read more

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட துறையினருக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல்

சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2023ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு சுவிட்சர்லாந்தின் பொதுத்துறைப் பணியாளர்களுக்கு 2023ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு அளிக்க சுவிஸ் பெடரல் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் பணவீக்கம் 3 சதவிகிதமாக இருந்த நிலையில், அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரியிருந்தார்கள். பேச்சுவார்த்தைகளின்போது, ஊழியர் பிரதிநிதிகள் பண வீக்கத்தை ஈடு செய்யும் அளவில் இழப்பீடு கொடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்கள். ஆனால், ஏற்கனவே பட்ஜெட்டில் பற்றாக்குறை … Read more

அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சென்னை: அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி பேட்டி அளித்துள்ளார். வரைப்பட அனுமதி இல்லாமல் எந்த கட்டிடமும் கட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது பொறியாளர்களின் பொறுப்பு என்று கூறியுள்ளார். கட்டிடடம் கட்ட வரைபட அனுமதி தேவை என்பது பொதுமக்களுக்கு தெரியவில்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

“இது சீனாவுக்கு தேவையில்லாத வேலை” – இந்திய, அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி குறித்து அமெரிக்கா

உத்தரகாண்ட் மாநிலத்தில், சீனாவுடனான சர்வதேச எல்லையில் இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தப் பயிற்சி, இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக சீனா கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து சீனா தரப்பில், ” உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் இந்தக் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்று வருகிறது. இது இரு நாட்டு எல்லை ஒப்பந்தத்தை மீறுவதாகும்” என்றனர். இந்தியா – அமெரிக்கா இந்தியா இதற்கு பதிலடி … Read more

லண்டனிலுள்ள இந்த கட்டிடத்தின் பின்னணியில் உலவும் ஆவிக் கதைகள்: பலருக்கும் தெரியாத ஒரு திகில் செய்தி

லண்டனில் அமைந்துள்ள ஒரு குறிப்பிட்ட கட்டிடம் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மதுபான விடுதியாக இருந்ததாம். அங்குள்ள மர்மம் தெரியாமல், அங்கு சென்ற பலர் உயிருடன் திரும்பியதில்லை என ஒரு செய்தி கூறுகிறது. மாயமான வழிப்போக்கர்கள் லண்டனின் Croydon நகரில், George Street மற்றும் High Street சந்திப்பில் ஒரு பழமையான கட்டிடம் அமைந்துள்ளது. அதைக் கடந்து செல்லும் பெரும்பாலானவர்களுக்கு, அந்த கட்டிடத்தின் பின்னால் உள்ள திகில் கதை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1880களில் நடந்த இந்த சம்பவங்கள் … Read more

உச்சநீதிமன்றம் நாட்டின் வெளிப்படையான அமைப்புகளில் ஒன்று; ஆர்டிஐ வழக்கில் நீதிபதிகள் தகவல்…

டெல்லி: உச்சநீதிமன்றம் நாட்டின் வெளிப்படையான அமைப்புகளில் ஒன்று ஆர்டிஐ வழக்கில்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். சமூக ஆர்வலர் அனில் பரத்வாஜ் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி,  கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டம் தொடா்பான மூன்று ஆவணங்களைக் கோரி விண்ணப்பித்திருந்தார். அவரது மனுகள் நிராகரிக்கப்பட்டன. இறுதியாக  மேல்முறையீட்டு மனுவும் தலைமை தகவல் ஆணையரால் நிராகரிக்கப் பட்டது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த மனுவை டெல்லி … Read more