இலங்கை சிறையிலிருந்து விடுதலையான 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்…

சென்னை: இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்நத் 14 மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர். அவர்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். வங்கக்கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை அவ்வப்போது எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதும், பல மீனவர்களை, அவர்களின் படகுகளுடன் கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது. இதற்கு மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், மாநில மற்றும் மத்தியஅரசு தலையிட்டு, கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை … Read more

நெல்லை களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து

நெல்லை: களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடையேயான மோதலில் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. கத்தியால் குத்திய மாணவர் கைதான நிலையில் காயமடைந்த பள்ளி மாணவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

தங்க நாணயம் தரும் ஏ.டி.எம்., ஹைதராபாதில் அறிமுகம்| Dinamalar

ஹைதராபாத் தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தங்கக்காசுகள் வழங்கும் ஏ.டி.எம்., இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. வங்கிகள் தற்போது நிறுவியுள்ள ஏ.டி.எம்., எனப்படும் தானியங்கி இயந்திரங்கள் வாயிலாக, எந்த நேரத்திலும் பணம் பெறுகிறோம். 3,000 இயந்திரங்கள் இதேபோல, வங்கிகள் வழங்கும் ‘டெபிட்’ மற்றும் ‘கிரெடிட்’ கார்டுகளை பயன்படுத்தி, தங்க நாணயங்கள் பெறும் ஏ.டி.எம்., இயந்திரத்தை, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் முதல் இயந்திரம் ஹைதராபாதின் பேகம்பேட் என்ற இடத்தில் நேற்று முன் … Read more

`கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது' – விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைத்தது. கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில், சீனாவின் வூஹான் மாகாணத்தில் இயங்கும் `வுஹான் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’ என்னும் ஆய்வுக்கூடத்திலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா வைரஸ் கசிந்திருக்கிறது என்று அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹஃப் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளில் அவரும் ஒருவராவார். அமெரிக்காவைச் சேர்ந்த ஆண்ட்ரூ ஹஃப் என்ற விஞ்ஞானி … Read more

மனைவிகளுடன் ஏன் குடித்து கும்மாளம் அடிக்கவில்லை? அதான் கத்தார் உலகக் கோப்பையில் தோல்வி… ஜேர்மனி மீது விமர்சனம்

கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஜேர்மனி அணி சீக்கிரம் வெளியேற காரணம் வீரர்களின் மனைவிகள் தான் அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. ஜேர்மனி வெளியேற்றம் கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணியான ஜேர்மனி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது. இந்த நிலையில் ஜேர்மனியர்கள் நாக் அவுட் நிலைக்கு முன்னேறத் தவறினர், ஏனெனில் வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகள் போதுமான அளவு பார்ட்டி மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை … Read more

துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன்பாய்ந்து தற்கொலை… காட்பாடியில் பரபரப்பு…

வேலூர்: தமிநாடு அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவரது மகள் பாரதி (வயது 55) இவர் தனது கணவர் ராஜ்குமார் மற்றும் குடும்பத்தினருடன் காட்பாடி காந்தி நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லத்தேரி அருகே பாரதி ரெயிலில் அடிபட்டு … Read more

தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தொலைக்தூரக் கல்வியில் படித்தவர்கள் ஆசிரியர் பணிக்கு தகுந்தவர்களோ, தகுதியானவர்களோ அல்ல என்று  சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு நேரில் சென்று படித்தவர்களையே ஆசிரியராக நியமிக்க உத்தரவு அளித்துள்ளனர். ஆசிரியர் நியமன நடைமுறையை 3 மாதங்களில் மறு ஆய்வு செய்யவும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவு அளித்துள்ளார்.

அனைத்துக் கட்சி கூட்டம் துவங்கியது| Dinamalar

புதுடில்லி :பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்குகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சி கூட்டம் இன்று(டிச.,06) நடை பெற்றது. பார்லி., குளிர்கால கூட்டத் தொடர் நாளை துவங்கி, இம்மாதம் 29 வரை நடக்கிறது. இதில் விடுமுறை நாட்கள் தவிர 17 நாட்கள் நடக்கும் தொடரில் 16 புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. டிசம்பா் 29-ஆம் தேதி வரை 23 நாள்கள் நடைபெறும் குளிர்கால கூட்டத்தொடரில் 17 அமா்வுகள் இடம்பெற உள்ளன. பார்லி., கூட்டம் நாளை துவங்கும் நிலையில், … Read more

குழந்தை பெற்ற 17 வயது சிறுமி; சிகிச்சைக்குச் சென்ற போது விபத்தில் பலி – கணவர் மீது பாய்ந்த போக்சோ!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (25). கூலித் தொழிலாளியான இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார்.இந்தச் சிறுமி கர்ப்பமான நிலையில் இவருக்கு கடந்த 24-ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது.சிறுவயதிலேயே கர்ப்பம் ஆனதாலும், அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்ததாலும் இவரின் உடல்நிலை மோசமானது. இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த இந்த சிறுமியின் உடல்நிலை மோசமானது. மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு … Read more

திருமணத்தில் தாலி கட்டியவுடன் மணமேடையிலேயே உயிரிழந்த மணப்பெண்! உடனே இறுதிச்சடங்கு

இந்தியாவில் திருமணம் முடிந்து மண மேடையிலேயே மணப்பெண் உயிர் பிரிந்த விவகாரம் குறித்து குடும்பத்தார் பொலிசுக்கு தெரிவிக்காமல் இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர். மயங்கிய மணப்பெண் உத்தர பிரதேசத்தில் உள்ள மஹிலாபாத் பாத்வனா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பால் சர்மா. இவரது மகள் ஷிவாங்கி சர்மா (21). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடுத்து திருமண நாளும் வந்துள்ளது. மணமகனும், மணமகளும் மாலைகளை மாற்றி கொண்ட நிலையில் ஷிவாங்கிக்கு மணமகன் தாலி கட்டினார். பின்னர் புகைப்படம் எடுப்பதற்காக நின்றுகொண்டிருந்தபோது திடீரென மணப்பெண் … Read more