குடும்ப செலவு தகராறில் கொலை காதலியை கொன்றவர் தகவல்| Dinamalar

புதுடில்லி:குடும்ப செலவு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து கொலை செய்ததாக, காதலியைக் கொன்று துண்டு துண்டாக்கிய அப்தாப் புனேவாலா, தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிர மாநிலம்மும்பையைச் சேர்ந்த அப்தாப் புனேவாலா, ஷ்ரத்தா வால்கர் இருவரும்காதலர்களாக பழகி வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பைத் தொடர்ந்து இருவரும் புதுடில்லிக்கு இடம்பெயர்ந்தனர். இதற்கிடையே, கடந்த மே மாதம் ஷ்ரத்தாவை கொலை செய்து, ௩௫ துண்டுகளாக்கி பல்வேறு இடங்களில் அப்தாப் வீசியது சமீபத்தில் தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள அப்தாப், விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரிடம் … Read more

சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டம் நிறுத்தமா… உண்மை நிலவரம் என்ன?!

சச்சார் கமிட்டியின் அறிவுறுத்தலின்படி 2006-ம் ஆண்டு சிறுபான்மையினருக்கான நலத்துறை மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் சிறுபான்மை மதங்களான முஸ்லீம், கிறித்துவம், புத்தம், சீக்கியம், பார்சி, சமணம் மக்களுக்கான நலத்துறை அமைச்சகம். இதன் கீழ், சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் உயர்த்தும் நோக்கில் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படும். சிறுபான்மை பள்ளி மாணவர்களின் நிதிச் சுமையைக் குறைத்து, பள்ளி இடைநிற்றலைத் தடுக்க,  `மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித்தொகை’ என்னும் திட்டத்தின் கீழ் நிதி உதவி  வழங்கப்பட்டு வருகிறது. … Read more

மேகன் குறித்து நெருங்கிய நண்பர் சொன்ன கருத்து! மனம் புண்ணாகி இளவரசர் ஹரி எடுத்த முடிவு

மேகன் மெர்க்கல் தொடர்பில் தனது நெருங்கிய நண்பர் மனதை புண்படுத்தும் வகையில் கருத்து சொன்னதால் தன் திருமணத்திற்கு அவரை இளவரசர் ஹரி அழைக்காமல் தவிர்த்தார் என தெரியவந்துள்ளது. ஹரியின் பால்ய சினேகிதன் பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும், மேகன் மெர்க்கலுக்கும் கடந்த 2018ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்னர் ஹரியின் பால்ய நண்பர் டாம் இன்ஸிகிப் ஹரி, மேகனை சந்தித்ததில் இருந்து நண்பனை இழந்தது போல் உணர்ந்ததாக கூறினார். அவரின் இந்த கருத்து ஹரியை வேதனைப்படுத்தியதன் விளைவாக தனது … Read more

வாகனங்களில் விதிகளை மீறி நம்பர் பிளேட்! உடனடியாக அகற்ற நீதிமன்றம் உத்தரவு

மதுரை: வாகனங்களில் விதி மீறி நம்பர் பிளேட் இருந்தால் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சமீக காலமாக வாகனங்களில்  உள்ளட நம்பர் பிளேட்களில், அரசியல் கட்சிகளின் சின்னம், படங்கள் மட்டும், விதிகளை மீறி அரசியல் கட்சி கலர்கள் போன்றவற்றுடன் நம்பர் பிளேட் காணப்படுகிறது. குறிப்பாக ஆளுங்கட்சி கலரில் நம்பர் பிளேட் அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட வாகனத்தில் வருபவர்களை காவல் துறையினர் கண்டுகொள்வது இல்லை. இது … Read more

மாருதி சுசூகி கார்களின் விலை வரும் ஜனவரியில் உயர்த்தப்பட உள்ளதாக நிறுவனம் அறிவிப்பு

டெல்லி : வரும் ஜனவரியில் மாருதி சுசூகி கார்களின் விலை உயர்த்தப்பட உள்ளதாக நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இடுபொருட்களின் விலை உயர்வால் உற்பத்தி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு என மாருதி சுசூகி அறிவித்துள்ளது. அண்மையில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப கார்களில் மாற்றம் செய்யப்படுவதாலும் விலை உயர்கிறது. 

இந்திய பைக் வார திருவிழா கே.டி.எம்., தரும் சலுகைகள்| Dinamalar

புனே, கோவாவில் இன்றும், நாளையும், ‘8வது எடிஷன் இந்திய பைக் வார திருவிழா’ நடக்க உள்ளது. இந்த திருவிழாவில், ‘ஹார்லி டேவிட்சன், பி.எம்.டபுள்யு., மோட்டோராட், கே.டி.எம்., ராயல் என்பீல்டு’ என பல பைக் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. இந்த திருவிழாவில் பங்கேற்க மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் புனே ஆகிய இடங்களில் இருந்து கோவாவுக்கு, கே.டி.எம்., நிறுவனம், அதன் ஆரஞ்சு அணிவகுப்பை அனுப்புகிறது. இந்த அணிவகுப்பில், கே.டி.எம்., பைக் வைத்திருப்பவர்கள் பங்கேற்க, சிறப்பு விலையில் ‘ஆரஞ்சு பாஸ்’ … Read more

`அவர் சந்தோஷப்படுவார்!’ – மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பம்

திருச்சி உறையூர் நவாப் தோட்டத்தைச் சேர்ந்த 60 வயது நபர், பக்கவாதம் ஏற்பட்டதன் காரணமாக கடந்த நவம்பர் 27-ம் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளைச் செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவரது குடும்பத்தார் சொந்த ஊரான திருச்சிக்கு கொண்டு வந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கல்லீரல் திருச்சியில் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மூளைச்சாவு அடைந்ததை … Read more

மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து இலங்கையர்கள் உட்பட 61 புலம்பெயர்ந்தோரை மீட்ட பிரான்ஸ் அதிகாரிகள்

ஆங்கிலக்கால்வாயில் மூழ்கிக்கொண்டிருந்த படகு ஒன்றிலிருந்து 61 புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அதிகாரிகள் மீட்டுள்ளனர். பெரிய அலைகளால் மூழ்கத்துவங்கிய படகு ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியில் பயணித்துக்கொண்டிருந்த 61 புலம்பெயர்ந்தோரைக் கொண்ட படகு ஒன்று பெரிய அலைகள் காரணமாக மூழ்கத்துவங்கியுள்ளது. செவ்வாய்க்கிழமை, அதாவது நவம்பர் மாதம் 29ஆம் திகதி, சிறுபிள்ளைகள் உட்பட 61 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக ஆங்கிலக்கால்வாயில் படகு ஒன்றில் பயணித்துள்ளனர். அப்போது அந்த ரப்பர் படகு மூழ்கத்துவங்க, பிரான்ஸ் அதிகாரிகள் அவர்களை மீட்டுள்ளனர். அவர்கள் … Read more

சிஎஸ்கே அணியில் இருந்து நீக்கப்பட்ட டிவைன் பிராவோ, அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்!

சென்னை: சிஎஸ்கே அணியில் இருந்து  நீக்கப்பட்ட ஆல்ரவுண்டர் டிவைன் பிராவோ, சிஎஸ்கே அணியின்  பந்து வீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் (இன்று) வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. அதன்படி வெளியேற்றப்பட்ட வீரர்களின் பட்டியல்கள் வெளியாகி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராபின் உத்தப்பா, … Read more

கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே பைக் குளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே பைக் குளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். குளத்தில் சகதியில் சிக்கி எல்லை பாதுகாப்புப் படை வீரர் கிருஷ்ணகுமார், நண்பர் அனுகுமார் உயிரிழந்தார்.