குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி: ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை பாஜக முக்கிய நிர்வாகிகள் விலகல் – காரணம் என்ன?!

மதுரை மாவட்ட பா.ஜ.க முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியிலிருந்து வெளியேறி வெவ்வேறு கட்சிகளில் இணையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயராம் அ.ம.மு.கவில்.. சில மாதங்களுக்கு முன் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.கவினர் நடத்தியதாக சொல்லப்பட்ட செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து மதுரை மாநகர தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பா.ஜ.கவிலிருந்து உடனே விலகினார். அதிமுகவில் இணைந்த ராஜா சீனிவாசன் அதைத்தொடர்ந்து இரண்டு மாவட்டமாக செயல்பட்ட மதுரை மாவட்ட பா.ஜ.க, மூன்று மாவட்டமாக பிரிக்கப்பட்டு … Read more

போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது

காங்கேயம்: காங்கேயத்தில் போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போலீசாருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் சிலருடன் … Read more

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

நெல்லை: திருக்கார்த்திகையை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

“தமிழக ஆளுநர், பாஜக மாநில தலைவர் போல் செயல்படுகிறார்!" – எம்.பி ஜோதிமணி காட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் எம்.பி ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் செயல்படுவதன் விதம், நிறைவேற்றப்பட்ட பணிகள், கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மேம்பாடு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் … Read more

ஏலியன் தாக்குதல் முதல் ஆய்வகக் குழந்தைகள் வரை: 2023க்கான பாபா வாங்காவின் பயங்கரமான கணிப்புகள்!

2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது, வரவிருக்கும் 2023-ஆம் ஆண்டிற்காக உலகம் உற்சாகமாக இருக்கிறது. புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மக்கள் 2023-ஐத் தழுவக் காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆண்டிற்கான சில கணிப்புகள் மிகவும் பயமாக இருக்கிறது. பொதுவாக பாபா வங்கா என்று அழைக்கப்படும் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா, 2023 ஆம் ஆண்டு இருண்டதாக இருக்கும் என்று கணித்திருந்தார். வேற்றுகிரகவாசிகளின் வருகைகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகள் சாத்தியமாகும் என அவரது கணிப்பு கூறுகிறது. 9/11, வட கொரியாவுடனான பதட்டங்கள், … Read more

டிசம்பர் 06: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பயங்கரவாதிகளின் ஹிட் லிஸ்ட் அச்சத்தில் காஷ்மீரி பண்டிட்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜம்மு: பயங்கரவாதிகள் புதிதாக ‘ஹிட் லிஸ்ட்’ வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சத்தில் உள்ளனர். பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், காஷ்மீரி பண்டிட்கள், ஜம்மு – காஷ்மீரில் பல இடங்களில் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சமடைந்தனர். தங்களை பாதுகாப்பான … Read more

என்ன நோய்… எந்த டாக்டர்? – 4 – பெண்கள்… பிரச்னைகள்… தீர்வுகள்… யாரிடம்?

குடும்பத்தில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் கவனிக்க முதல் நபராக நிற்பவள் பெண். அதுவே தனக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அதை கடைசியாகவே கவனிப்பவளாகவும் இருக்கிறாள், அதுவும் அந்தப் பிரச்னை முற்றியநிலையில்… ‘`குடும்பத்தில் பெண் தன் ஆரோக்கியத்தைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டால்தான், அவளால் ஒட்டுமொத்த குடும்பத் தாரின் ஆரோக்கியத்தையும் கவனிக்க முடியும். எனவே ‘இது ஒன்றும் பெரிய விஷயமல்ல’ என எந்தப் பிரச்னையையும் பெண்கள் அலட்சியம் செய்யக்கூடாது’’ என்கிறார் சென்னை யைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் … Read more