மோடியின் `ரோடு ஷோ’… தேர்தல் விதிகளை பிரதமரே மீறலாமா… கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்!

குஜராத் சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வாக்களித்தனர். டிசம்பர் 5-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின்போது, அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப் நிஷான் அரசுப் பள்ளியில் மோடி வாக்களித்தார். பிரதமர் மோடி அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ஜனநாயகத் திருவிழாவை குஜராத், இமாச்சலப் பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் … Read more

முகத்தை சிதைத்து இளைஞர் படுகொலை! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட ஆறு பேர் வெறிச்செயல்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக கிடந்த இளைஞர் கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையைச் சேர்ந்தவர் மல்லப்பா. இவர் பெங்களுரூவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் மல்லப்பா கே.பி.அக்ரஹாரா பகுதியில் சாலையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து … Read more

தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 ஐ “முழுமையாக மாற்றியமைக்க” வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கான (Tamil Nadu Medical Council, TNMC – டி.என்.எம்.சி.) தேர்தலை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர் சுப்பிரமணியன், டி.என்.எம்.சி.யை நிர்வகிக்கும் “தொன்மையான விதிகள்” கொண்ட மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டத்தை … Read more

திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது: விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழா, திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கம் இட்டனர். 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரமும் 200 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 4,500 கிலோ நெய், 1,150 மீட்டர் திரி (காடா துணி), 20 கிலோ கற்பூரத்தை கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற முழக்கத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் … Read more

100 பெண்களிடம் சேட்டை மல்யுத்த வீரர் அதிரடி கைது| Dinamalar

ராஜ்கோட், குஜராத்தில் 100 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த மல்யுத்த வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தில், ராஜ்கோட்டில் உள்ள பூங்கா அருகே மர்ம நபர் ஒருவர் தன்னிடம் பாலியல் சேட்டை செய்ததாக, ஆசிரியை ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த கவுஷல் பிபாலியா, 24, என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது: பிபாலியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் … Read more

`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' – நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?

`பொது இடங்களில் மது அருந்துதல் சட்டப்படி குற்றம். ஆனால், அந்தக் குற்றம் சென்னை மாநகராட்சின் பல்வேறு இடங்களில் மிகவும் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன. மேலும், இதைக் கண்டும் காணாதபோல காவல்துறையினர் கடந்து செல்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன’ டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி … Read more

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி செய்த கொடூர செயல்: பேய் வீடாக மாறிய பயங்கரம்

தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு இருப்பதை அறிந்த மனைவி, ஆத்திரம் கண்ணை மறைத்ததால் செய்த செயல், நாடே அவரது வீட்டை இன்று பேய்வீடு என அழைக்கும் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது. கணவனைக் குறித்த நீண்ட நாள் உண்மை தெரியவந்ததால் ஆத்திரமடைந்த மனைவி மலேசியாவிலுள்ள Selangor என்ற இடத்தில், 19,000 சதுர அடி கொண்ட பிரம்மாண்டமான வீடு ஒன்றில் மனைவியுடன் வாழ்ந்துவந்தார் சஞ்சய் (Sanjay Gill). image – dailystar ஒரு கட்டத்தில், அவர் வேறொரு பெண்ணுடன் … Read more

ரஷ்யா – கிரிமியா இடையிலான பாலத்தின் மீது கார் ஒட்டிச் சென்ற ரஷ்ய அதிபர் புடின்… வீடியோ

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட கிரிமியா பாலம் வழியாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று கார் ஒட்டிச் சென்று ஆய்வு நடத்தினார். உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியா-வை 2014 ம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. 2018 ம் ஆண்டு ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையே கிரிமிய கடலில் 30000 கோடி ரூபாய் செலவில் 19 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல பாலமும் ரயில் பாலமும் அமைக்கப்பட்டது. உக்ரைன் ரஷ்யா போரை அடுத்து தென்பகுதியில் உள்ள ரஷ்ய படையினருக்கு … Read more

சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர்: டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டு!

சென்னை: தாம்பரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து விலை உயர்ந்த ‘ஐ- போனை’ பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த திருடனை பெண் காவலர் காளீஸ்வரி மடக்கி பிடித்தார். சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.