32 ஓட்டங்களில் சுருண்ட அணி! புயல்வேக பந்துவீச்சு

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டி வங்கதேச மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் சோஃபி டிவைன் 34 பந்துகளில் 45 ஓட்டங்களும், பேட்ஸ் 33 பந்துகளில் 41 … Read more

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரெய்லரை ரசித்த வைகைப்புயல்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். வடிவேலுவின் மகளாக பாடகியும் ஸ்டார் விஜய் டி.வி. புகழ் சிவாங்கி நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். vaigai puyal 🌪️ himself, reacts to #NaaiSekarReturns 🐶💯 TRAILER in the middle of promotions! … Read more

வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் – 4 முதல் தாள் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

சென்னை: வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் -4 முதல் தாள் தேர்வு டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 10 வனப்பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் 4-தேர்வுக்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  2,3-ம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை காலை மத்திய வேலைகளிலும் டிசம்பர் 11-ம் தேதி காலையும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

செயற்கை கோள் அனுப்பிய குஜராத் மாநில புகைபடம்: பிரதமர் மோடி பகிர்ந்தார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை :’இஸ்ரோ’ நிறுவனம், சமீபத்தில் விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி., சி.54 ராக்கெட்டின் இ.ஓ.எஸ். 06 செயற்கைகோள் அனுப்பிய புகைபடத்தை பிரதமர் மோடி பகிர்ந்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., – 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., – சி54 ராக்கெட் கடந்த நவம்ப 26-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – … Read more

குஜராத்தில் பிரதமர் மோடியின் பிரம்மாண்ட பேரணி – 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாக தகவல்

காந்திநகர், குஜராத்தில் 182 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அகமதாபாத்தில் பிரதமர் மோடி நேற்று மாலை பேரணியாக சென்றார். மாலை தொடங்கும் இந்த பயணம் இரவு 9.45 மணியளவில் நிறைவு பெற்றது. அகமதாபாத்தில் 13 தொகுதிகளையும், காந்திநகரில் ஒரு தொகுதியையும் இணைக்கும் வகையில், சுமார் 50 கி.மீ தொலைவு வரை பிரதமர் சாலை மார்கமாகவே பயணித்தார். … Read more

கரூர்: மனநலம் குன்றியவர் சித்தராக சித்திரிப்பு; உண்டியல், கூகுள் பே மூலம் கல்லா கட்டிய கும்பல்!

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி செல்லும் சாலையில், கன்னியாகுமரி டு காஷ்மீர் சாலையில் இருக்கிறது, மலைக்கோவிலூர். இந்தப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக, மனநலம் பாதித்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் முதியவர் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். தன்னிலை உணராமல், உடம்பில் உடையின்றி எதையோ சதா பிதற்றியபடி அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்தார். இதனையறிந்த, அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் சிலர், அவருக்கு உண்ண உணவு கொடுத்ததால், அப்பகுதியில் உள்ள சென்ட்டர் மீடியன் … Read more

நான்கு ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்! 32 சிம்கார்டுகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்

தமிழகத்தில் நான்கிற்கும் மேற்பட்ட ஆண்களை திருமண ஆசை காட்டி நகை, பணத்தை சுருட்டிய மோசடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.  நகை பணத்துடன் ஓட்டம்  செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (25), ஒன்லைனில் உணவு விநியோகம் செய்யும் வேலை செய்து வந்த இவர், அபிநயா (28) என்ற பெண்ணை காதலித்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆகத்து மாதம் நடராஜன்-அபிநயாவின் திருமணம், நடராஜனின் பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் நடந்தது. இருவரும் வெவ்வேறு நகை கடைகளில் வேலைக்கு … Read more

வகுப்பறையில் சக மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த 8 ஆம் வகுப்பு மாணவர்கள்! இது மும்பை சம்பவம்…

மும்பை: வகுப்பறையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் சிறுமிக்கு மட்டுமின்றி பள்ளி நிர்வாகத்துக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவில், சிறார்களுக்கு எதினரா பாலியல் சம்பவம் 2021ம் ஆண்டு 36.05 சத விகிதம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுஉள்ளது. கிரேட்டர் மும்பை மாநகராட்சி பள்ளி மாட்டுங்கா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்து வரும் 8ம் வகுப்பு மாணவர்கள் … Read more

சமூக நீதிக்கான கி.வீரமணி விருதுக்கு என்னை தேர்வு செய்ததற்கு மிகுந்த நன்றி: மு.க. ஸ்டாலின் உரை

சென்னை: திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணியின் நூற்றாண்டு விழாவையும் நாம் நடத்துவோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். கலைஞர் மறைவுக்கு பிறகு தைரியத்தையும் தெம்பையும் எனக்கு ஊற்றியவர்தான் ஆசிரியர் கி.வீரமணி என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைவர், போராட்டக்காரர், எழுத்தாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் கி.வீரமணி என்று முதல்வர் கூறியுள்ளார்.

டெல்லியில் மிகவும் மோசமான நிலையில் காற்றின் தரக்குறியீடு

புதுடெல்லி, போபாலில் விஷ வாயு தாக்கியதை அடுத்து, இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 2ம் தேதி தேசிய மாசுகட்டுப்பாட்டு தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தேசிய தலைநகர் டெல்லி அடர்த்தியான மாசு, புகைமூட்டத்தில் மூழ்கியதால், நகரில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசமான குறியீட்டில் இருப்பதால், அதிகாலை நேரங்களில் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களை இயக்குவதிலும், சுவாசிப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தினத்தந்தி Related Tags : டெல்லி காற்றின் … Read more