சென்னையில் பரபரப்பு: அரசு பேருந்து மீது கிரேன் மோதி விபத்து…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை அரசு பேருந்து மீது  ராட்சத கிரேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லாததால் ஓட்டுநர் சிறிய காயத்துடன் தப்பினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் பெரும்பாலான சாலைகள், மழைநீர் வடிகால் பணி மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளன. மேலும் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் உள்ளன. இந்த நிலையில், சென்னைவடபழனி அருகே மெட்ரோ … Read more

தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாட்டில் 5 கோயில்களில் மருத்துவ மையங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அழகர் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பன்னாரி அம்மன் கோயில்களில் மருத்துவ மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

வன்முறை பாடல்கள் மத்திய அரசு கிடுக்கி| Dinamalar

புதுடில்லி, வன்முறை, ரவுடியிசம், போதை பழக்கங்களை போற்றும் வகையிலான பாடல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவதை தவிர்க்கும்படி, எப்.எம்., ரேடியோ சேனல்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எப்.எம்., ரேடியோ சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எப்.எம்., ரேடியோ சேனல்களை ஒலிபரப்புவதற்கான உரிமம் அளிக்கப்பட்டபோது கையெழுத்தான ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள விதிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். வன்முறை, ரவுடியிசம், போதைப் பொருள் பழக்கம் ஆகியவற்றை புகழும் வகையிலான பாடல்களையோ, … Read more

கனடாவுக்கு ஷாக் கொடுத்த அணி! கத்தார் உலக கோப்பையில் விறுவிறுப்பான போட்டி

கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் போட்டியில் கனடாவை மொரோக்கோ அணி வீழ்த்தியுள்ளது. கனடா – மொராக்கோ 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற F பிரிவு ஆட்டத்தில் கனடா – மொரோக்கோ அணிகள் மோதின. இதில் கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொரோக்கோ  அணி வெற்றி பெற்றது. கனடா அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. AP Photo/Alessandra … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது ஏன்? நீதிமன்றத்தில் வருமானவரித்துறை விளக்கம்…

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது ஏன்? என்பது குறித்து நீதிமன்றத்தில் வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக கூறி, வருமான வரித்துறை கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான 206கோடியே 42லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை … Read more

சென்னை வடபழனியில் மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்ததில் மாநகர பேருந்தின் முன்பக்கம் சேதம்

சென்னை : சென்னை வடபழனியில் மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்ததில் மாநகர பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் தூக்க கலக்கத்தில் இயக்கியதே காரணம் என தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வேலூர்: ஒரு குடும்பத்துக்கே கொலை மிரட்டல்?! – திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மெயின் பஜார் வீதியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அரிநாராயணன், சரவணன், அசோக்குமார், அருண்குமார் ஆகிய நால்வரும் தங்கள் வீட்டுப் பெண்களுடன் வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், ‘‘எங்கள் தந்தையும், எங்கள் சித்தப்பாவும் கூட்டாகச் சேர்ந்து 22-03-1994 அன்று ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர். அந்த நிலத்தை இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள்தான் அனுபவித்துவருகிறோம். இதுவரை எந்த இடையூறும் இருந்ததில்லை. … Read more

37 வயது வரை திருமணம் செய்து வைக்கல! நடிகர் ராஜ்கிரணின் 2வது மனைவியின் மகள் கண்ணீர்

நடிகர் ராஜ்கிரண் வீட்டில் உள்ள நகைகளை தன்னிடம் கொடுக்க வேண்டும் என அவரின் வளர்ப்பு மகன் ஜனத் ப்ரியா பொலிசாரிடம் கேட்டு கொண்டுள்ளார். காதல் திருமணம் தமிழகத்தின் திருச்சியில் உள்ள துறையூரைச் சேர்ந்த இளங்கோவன் பத்மஜோதி தம்பதியரின் மகள் ப்ரியா. கடந்த 2014 ஆம் ஆண்டு இளங்கோவனை பிரிந்த பத்மஜோதியை, நடிகர் ராஜ்கிரண் 2-வது திருமணம் செய்து கொண்டார். பத்மஜோதியை கதீஜா என்றும் வளர்ப்பு மகளான ப்ரியாவை ஜனத்ப்ரியா என்றும் அழைத்து வந்தார். பிரியா (37) சினிமா … Read more

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் கோளாறு….

சென்னை:  இன்று காலை சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனே தரையிறக்கப்பட்டது. சென்னை இன்டர்நேஷனல் விமான முனையத்தில் இருந்து சுமார் 139 பயணிகள் மன்றும் விமான பணியாளர்களுடன் கர்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம், கத்தார் தலைநகர் தோகாவுக்கு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, விமான இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமான கண்டறிந்தார். இதையடுத்து, 0/விமானி உடனே விமானத்தை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து … Read more