`வீடுகளில் விரிசல்; நிலத்தடி நீர் பாதிப்பு' – கல் குவாரிக்கு எதிராக திரண்ட 7 கிராம மக்கள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த பிரிதி கிராமம், இளையாம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி ஒன்று இயங்கிவருகிறது. இந்த கல் குவாரியானது, 14 ஏக்கர் நிலத்தில் இயங்கிவருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த கல் குவாரியை எடப்பாடியைச் சேர்ந்தவர் நடத்திவருவதாக தெரிகிறது. இந்த கல் குவாரியில், கடந்த ஒரு மாத காலமாக அங்குள்ள கற்களை வெடிகள் வைத்தும், கெமிக்கல் பயன்படுத்தியும் எடுத்து வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த பகுதி, ஊர் மக்கள், பா.ஜ.க தெற்கு ஒன்றிய தலைவர் சசி தேவி … Read more

இன்று மகாதீபம்: கொப்பரையைத் தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான நெய், திரி போன்றவை 2,668 அடி உயர மலை உச்சிக்கு சென்றடைந்தது…

திருவண்ணாமலை: இன்று கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றுவதற்காக நெய், திரி உள்ளிட்டவை 2,668 அடி உயர மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே கொப்பரை மலை உச்சிக்கு எடுத்துச்செல்லப்பட்ட நிலையில், தற்போது தீபம் ஏற்றுவதற்கான பொருட்களும் மலை உச்சியை அடைந்துள்ளது. இன்று காலை 3 மணி அளவில் அண்ணாமலையார் ஆலயத்தில் பரணிதீபமும் மாலை 6 மணி அளவில் திருவண்ணாமலை மலை மீது மகாதீபமும் ஏற்றப்படும். கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் … Read more

அம்பேத்கர் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியெடுப்போம்: முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்

சென்னை: அம்பேத்கார் நினைவு நாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம் என சூளுரைத்து உறுதியெடுப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்  செய்துள்ளார். சமத்துவத்தை நோக்கிய போரட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர் என்று முதலமைச்சர் மு.க.சாடலின் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பெண் ஓட்டுனர்களுக்கு மகிந்திரா  முன்னுரிமை| Dinamalar

மும்பை : ‘மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம், ‘மகிந்திரா லாஸ்ட் மைல் டெலிவரி’ நிறுவனத்துடன் இணைந்து, அதன் ‘இ- டெல்’, எனும் மின்சார வாகன தொலைதூர சரக்குப் போக்குவரத்து சேவைக்கு, பெண் ஓட்டுனர்களை நியமிப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன், சரக்கு போக்குவரத்து சேவைக்காக, தற்போது பெங்களூருவில் 236 புதிய மின்சார ஆட்டோக்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும்; இந்தியா முழுவதும் அடுத்த ஆறே மாதங்களில், 1,000 புதிய மின்சார வாகனங்களை சேர்க்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த மின்சார ஆட்டோக்கள், மகிந்திரா லாஸ்ட் மைல் டெலிவரி … Read more

Doctor Vikatan: அடிக்கடி ஃபுட் பாய்சன்… காரணங்களும், தீர்வுகளும் என்ன?

Doctor Vikatan: ஃபுட் பாய்சன் என்ற வார்த்தையை அடிக்கடி பலரும் உபயோகிப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் ஃபுட் பாய்சன் என்றால் என்ன? உணவு விஷமாவதைக் குறிக்கிறதா? இதன் அறிகுறிகள் என்ன? அடிக்கடி ஏற்படும் அந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்… ஸ்ரீமதி வெங்கட்ராமன் Doctor Vikatan: காதுக்குள் ஒலிக்கும் சத்தம்… குணப்படுத்த முடியுமா? உணவு மாசடைவது அல்லது கலப்படமாவதையே ‘ஃபுட் பாய்சன்’ என்கிறோம். நடைபாதைக் … Read more

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையை காண தாயின் நகைகளை விற்ற ரசிகர்! நேரலையில் மன்னிப்பு கேட்ட வீடியோ

கத்தார் உலகக் கோப்பைக்கு செல்வதற்காக தனது தாயின் நகைகளை விற்ற மகன் தொலைக்காட்சி நேரலையில் தாயாரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தாயின் நகைகளை விற்று FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மொரோக்கோ கால்பந்து அணி ரசிகரான முகமது அமின் அம்மாரி தனது தாயின் நகைகளை விற்று கத்தார் உலகக் கோப்பையை காண சென்றுள்ளார். கத்தாரில் இருந்து தொலைக்காட்சி நேரலையில் அவர் பேசினார். அப்போது என் அன்பான அம்மா, மன்னிக்கவும். நான் திரும்பி … Read more

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 1லட்சம் படுக்கை வசதியுடன் தமிழகம் முதலிடம் – தினசரி 6 லட்சம் பேர் பயன்…

சென்னை: இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 1 லட்சம் படுக்கை வசதிகள் இருப்பதுடன், தினசரி சுமார் 6 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். அதுபோல ஆரோக்கியத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள் அதிகம் உள்ள மாநிலமாக இந்தியாவிலேயே தமிழ்நாடு தேர்வாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் சுகாதார குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. … Read more

நாளை கூடுகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.29ம் தேதி வரை நடக்கிறது. குளிர்கால கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 16 மசோதாக்களை ஒன்றிய அரசு பட்டியலிட்டுள்ளது.

அப்போ இப்போ – 9 : “என் மீதான அந்த எண்ணத்தை மாத்தணும்!" – ரீ என்ட்ரி கொடுக்கும் விசித்ரா

`விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்…!’ பாடலை இப்ப பிளே பண்ணினா கூட 90ஸ் கிட்ஸ் துள்ளி குதிச்சு கொண்டாட ஆரம்பிச்சிடுவாங்க. பெரும்பாலான இளைஞர்களுக்கு அந்தப் பாடலில் ஆடியிருக்கும் விசித்ரா மிகவும் பிடித்த நடிகை. வெறும் கிளாமர் மட்டும்தான் இவருடைய பலமா என உடனே முன் முடிவை எடுத்துடாதீங்க மக்களே…! `பொண்ணு வீட்டுக்காரன்’ திரைப்படத்தில் வருகிற டைட்டானிக் காமெடியாக இருக்கட்டும், `முத்து’ படத்தில் வருகிற `நாதா’வாக இருக்கட்டும் காமெடி டிராக்கிலும் தனக்கென ஓர் இடத்தைப் பதிவு செய்தவர்.. தற்போது … Read more

கனமழை எச்சரிக்கை: தேசிய பேரிடர் மீட்பு படை விரைவு

ராணிப்பேட்டை: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்தில் இருந்து, ஆறு மாவட்டங்களுக்கு மீட்பு குழு வீரர்கள் வாகனங்கள் மூலமாக புறப்பட்டு சென்றனர். தென்மேற்கு அந்தமான் கடலில் புதிதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகத்தை ஒட்டி தென்மேற்கு வங்கக்கடலில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களுக்கு தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க தேசிய பேரிடர் மீட்பு குழு சேர்ந்த வீரர்கள் … Read more