வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை அக்.8-ம் தேதி ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள், மழைநீர் வடிகால் பணிகளை அக்.8-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார். பணிகளின் இறுதி நிலை குறித்து அக்.7-ம் தேதி தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்ய உள்ளார். அக்.15-ம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் முதமைச்சர், தலைமைச் செயலாளர் ஆய்வு செய்கின்றனர்.

அடுத்த சர்ச்சையில் இன்னொரு சினிமா: அவஸ்தையில் ‛ஆதி புருஷ்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஆதி புருஷ் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள சில தோற்றங்கள், ஆடைகள் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் அவஸ்தையை தந்துள்ளது. பாலிவுட்டில் சமீபகாலமாக எந்த ஹிந்தி படங்கள் வெளியானாலும் பாய்காட் (புறக்கணிப்பு) என்ற வார்த்தை அதிகம் ஒலிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக முன்னணி நடிகர்கள் மற்றும் வாரிசு நடிகர்களின் படங்கள் ரிலீஸாகும் போதும் … Read more

உத்தரகாண்ட்: பனிச்சரிவில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவிப்பு! – மீட்புப்பணிகள் தீவிரம்

நேரு மலையேறும் பயிற்சி நிறுவனத்திலிருந்து 28 பேர் கொண்ட குழு ஒன்று உத்தரகாண்ட் மாநிலம், கர்வாவில் கங்கோத்ரி மலைத்தொடரின் திரௌபதி தண்டா உச்சியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் அந்தக் குழு சிக்கியது. இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகத்துடன், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகளும், ராணுவ வீரர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் இந்திய விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மீட்புப்பணி … Read more

தெலுங்கானா : தசரா பண்டிகையை முன்னிட்டு குவாட்டரும் கோழியும் வழங்கிய டி.ஆர்.எஸ். கட்சி தலைவர்… வீடியோ

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த ராஜநல்லா ஸ்ரீஹரி தசரா பண்டிகையை முன்னிட்டு வாரங்கல் கிழக்கு தொகுதியில் குவாட்டரும் கோழியும் வழங்கினார். பாரதிய ராஷ்டிரிய சமிதி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை துவங்கி தேசிய நீரோட்டத்தில் இணையும் எண்ணத்தில் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக நாளை நடைபெற இருக்கும் டி.ஆர்.எஸ். கட்சி உயர்மட்டக் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று பரபரத்து வருகிறது. இந்த நிலையில், தசரா பண்டிகையை ஒட்டி … Read more

சேலம், பொன்னம்மாப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது

சேலம்: சேலம், பொன்னம்மாப்பேட்டையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்ற இந்து முன்னணி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கடைகளுக்கு சிகரெட் சப்ளை செய்தும் ஸ்ரீதர் என்பவரை வாகன தணிக்கையில் போது போலீசார் பிடித்து சோதனைசெய்ததில் 8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கியதாக ஸ்ரீதர் போலீசாரிடம் கூறியுள்ளார்.

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்! – உ.பி-யில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம், உகைட்டியை அடுத்த கிராமம் ஒன்றில் 12 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உகைட்டி கிராமத்தில் வசித்து வரும் ஐந்து வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறாள். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் 12 வயது சிறுவன் அந்தச் சிறுமியை அங்கிருந்து தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளான். அதன் பிறகு அந்தச் சிறுமியை பாலியல் … Read more

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு…

டெல்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக, நிதி ஆதாரங்கள் குறித்த அறிக்கை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில் வழங்கப்படும் வாக்குறுதிகளுக்கு எவ்வாறு நிதி ஒதுக்கப்படும், இலவசங்களுக்கு  நிதி யளிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய விவரங்களை வழங்குவதற்கான ஒரு புரோஃபார்மாவைச் சேர்க்க,  வழிகாட்டுதல்களை திருத்த இந்திய தேர்தல் ஆணையம் முன்மொழிகிறது. அதன்படி,  நடத்தை வழிகாட்டுதல்களின் மாதிரி குறியீடு உத்தேச திருத்தம் தொடர்பாக அக்டோபர் 19க்குள் அரசியல் கட்சிகளின் … Read more

சென்னையில் தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

சென்னை: சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே தனியார் நிறுவன ஊழியரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர் சஞ்சய்குமார்(24) என்பவரை கத்தயால் தாக்கி செல்போனை பறித்த தனியார் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் கோகுலராஜ்(19), அஜய்(20) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜே.இ.இ., முறைகேடு ரஷ்ய பிரஜை கைது| Dinamalar

புதுடில்லி: ஜே.இ.இ., பிரதான தேர்வில் கடந்த ஆண்டு முறைகேடு நடந்த விவகாரத்தில், ரஷ்யாவை சேர்ந்த நபரை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது. ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில், ‘ஆன்லைன்’ வாயிலாக நடந்த ஜே.இ.இ., பிரதான தேர்வில் தொழில்நுட்ப ரீதியாக கணினி முடக்கப்பட்டு, தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ‘அபினிட்டி எஜுகேஷன்’ என்ற பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர்கள் … Read more

அரியலூர்: இரவில் சட்டவிரோதமாக அள்ளப்படும் சவுடு மணல்; சிசிடிவி ஆதாரத்துடன் புகாரளித்த பொதுமக்கள்!

இரவு நேரத்தில் ஏரியிலிருந்து திருட்டுத் தனமாகச் சவுடு மண் எடுக்கிறார்கள் என்று இளைஞர்களும், பொதுமக்களும் சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூரில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பாப்பான் ஏரி மற்றும் ஊராட்சிக்குச் சொந்தமான ஆண்டி ஏரியிலிருந்து வண்டல் மண் எடுப்பதாகக் கூறி தினந்தோறும் இரவு நேரங்களில் கிராவல் மண் எடுத்து லாரி மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பில் அதிகாரிகளுக்குப் … Read more