சொந்த மகள் உட்பட 20 பெண்களை திருமணம் செய்த நபர்… தீர்க்கதரிசி என அடையாளப்படுத்தியவரின் அதிர்ச்சி பின்னணி

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் 9 வயது சிறுமி உட்பட 20 பெண்களை திருமணம் செய்துகொண்ட நபர் தொடர்பில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. தீர்க்கதரிசி என கூறி வருபவர் குறித்த நபர் டிரெய்லர் ஒன்றில் தமது மனைவிகள் அனைவரையும் அழைத்துச் செல்லும் நிலையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 46 வயதான Samuel Rappylee Bateman என்பவரே தம்மை ஒரு தீர்க்கதரிசி என கூறி வருபவர். @AP இவர் 9 வயது சிறுமி உட்பட 20 பெண்களை திருமணம் செய்துகொண்டு, … Read more

ஹிஜாபுக்கு எதிரான தொடர் மக்கள் போராட்டம்; இரானில் அறநெறி காவல்துறையின் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டன!

இரானில் 1983-ம் ஆண்டிலிருந்து ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. பெண்கள் தங்கள் கண்களைத் தவிர்த்து தலை மற்றும் உடலை மறைக்க கறுப்பு நிற ஹிஜாப்புகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை , ‘மொராலிட்டி போலீஸ்’ எனப்படும் அறநெறி காவல் அதிகாரிகள் பெண்களை கைதுசெய்வதற்கு முன்பு எச்சரிக்கை வழங்குவது அப்போதைய வழக்கத்தில் இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ஆட்சிக்காலத்தில், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் பல வண்ணங்களில் முக்காடுகள் அணிவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த … Read more

திடீரென வந்த தும்மல்..சரிந்து விழுந்து இறந்த 18 வயது இளைஞர்.. அதிர்ச்சி வீடியோ

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தும்மல் வந்த பின் சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தும்மலுக்கு பின் மரணம் உத்தர பிரதேச மாநிலம் கித்வாய்நகர் காலி பகுதியைச் சேர்ந்தவர் ஜுபைர் (18). இவர் தனது நண்பர்களுடன் இரவு வெளியில் மீரட் நகரில் நடந்து சென்றுகொண்டிருந்தார். வீட்டுக்கு செல்லும் வழியில் அவருக்கு தும்மல் வந்துள்ளது. நடந்தபடியே தும்மிய ஜுபைர், சில விநாடிகளில் திடீரென சரிந்து விழுந்தார். மயங்கிய நிலையில் இருந்த அவரை எழுப்ப … Read more

 உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

உலககோப்பை கால்பந்து போட்டி: போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் காலிறுதிக்கு முன்னேறியது. இன்று நடந்த ரவுண்ட் 16 சுற்றில் 1-3 என்ற கோல் கணக்கில்  போலந்து அணியை வீழ்த்தி பிரான்ஸ் அணி வீழ்த்தியது.

நண்பர்களுடன் வீடு திரும்பிய இளைஞர்… திடீரென வந்த தும்மல்; பறிபோன உயிர்

மீரட், உத்தர பிரதேசத்தின் மீரட் நகரில் இரவில், இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்துள்ளார். வழியில் அவருக்கு தும்மல் வந்துள்ளது. இதனால், நடந்தபடியே, தும்மல் போட்ட அவர் சிறிது நேரத்திற்கு பின், நண்பரின் தோளில் கைபோட்டபடி சோர்வாக நடந்து சென்றுள்ளார். எனினும், சற்று நேரத்தில் திடீரென சரிந்து, தெருவிலேயே அவர் விழுந்துள்ளார். இதனால், பயந்து போன அவரது நண்பர்கள் உடனடியாக அவரை தூக்க முயற்சித்து உள்ளனர். ஆனால், அவர் எழுந்திருக்கவில்லை. இதனை … Read more

வணங்கான்: "சூர்யாவுக்கு மிகுந்த வருத்தம்தான்; என்றாலும்… " – இயக்குநர் பாலா நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி, சில நாட்களிலேயே கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் சூர்யாவும், ‘விரைவில் மீண்டும் படப்பிடிப்புத் தொடங்கும், அதற்காகக் காத்திருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது, இக்கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்காது, எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யாவை விலகிக்கொள்வதாக இயக்குநர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் பாலாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது குறித்து அறிப்பு … Read more

ஏ என்ன பண்ற! தமிழக வீரரைப் பார்த்து கோபத்தில் கத்திய ரோகித் சர்மாவின் வீடியோ

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் கேட்ச் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாததால்,கேப்டன் ரோகித் சர்மா கோபப்பட்ட நிகழ்வு நடந்தது. மிரட்டிய மெஹிதி ஹசன் டாக்கா ஒருநாள் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி வங்கதேச அணி ஆடியது. வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மெஹிதி ஹசன் வெற்றிக்காக தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார். எனினும் அவர் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசவும் தவறவில்லை. கேட்சை கண்டுகொள்ளாமல் நின்ற சுந்தர் போட்டியின் … Read more

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி!!

டாக்கா: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 73, ரோஹித் ஷர்மா 27, ஸ்ரேயாஸ் 24 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் அணியில் ஷகிப் 5, ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எல்லையில் சீனா தொடர் ஊடுருவல்; மத்திய அரசு அமைதி காக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி, டெல்லியில் 24 அக்பர் சாலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டு குழு கூட்டம் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அசல் எல்லை கோட்டு பகுதியில் தொடர்ந்து சீனா படைகள் மற்றும் ஆயுதங்களை குவித்து வருகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும், … Read more