திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி

திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி என்ற ஊரல் அமைந்துள்ளது. சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் “சுழியல்” என வழங்கப்படுகிறது என்பது தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும். சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்துபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,647,331 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.45 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,647,331 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 650,198,412 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 627,232,050 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,037 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திரு விழாவை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அருணாசலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபம் ஏற்றினர். பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு| Dinamalar

அம்பிகாபுர், சத்தீஸ்கரில், அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நான்கு பச்சிளம் குழந்தைகள் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, சர்குஜா மாவட்டத்தின் அம்பிகாபுர் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனையின் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவில், 35 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில், நான்கு பச்சிளம் குழந்தைகள் நேற்று காலை 5:30 மணி முதல் 8:30 … Read more

ஜெர்மனிக்கான பயணம்: ஒப்பந்தம் கையெழுத்து| Dinamalar

புதுடில்லி இந்தியா மற்றும் ஜெர்மனி இடையே, கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு களில் மக்கள் பரிமாற்றத்தை அதிகரிக்கும் வகையில், ‘விசா’ முறைகளில் சலுகை கள் அளிக்கும் ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அனலீனா பேர்பாக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை புதுடில்லியில் அவர் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, உக்ரைன் போர், ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம், பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதல்கள் உட்பட, பல்வேறு சர்வதேச … Read more

FIFA உலகக்கோப்பை 2022: தென் கொரியாவை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில்!

தென் கொரியாவை தோற்கடித்த பிரேசில், 8-வது நேரடி உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறியது. கத்தாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022-ல் திங்களன்று நடந்த சூப்பர் 16 ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றதன் மூலம், காலிறுதிதிக்கு முன்னேறியுள்ளது. 1990-ஆம் ஆண்டு அர்ஜென்டினாவுக்கு எதிரான தோல்விக்கு பிறகு, பிரேசில் காலிறுதிக்கு முன்னேறிய தொடர்ச்சியான எட்டாவது உலகக் கோப்பையாகும். AP பிரேசில் அணிக்காக வினிசியஸ் ஜூனியர், நெய்மர், ரிச்சர்லிசன் மற்றும் லூகாஸ் பாகெட்டா ஆகியோர் … Read more

ராயல் என்பீல்டு பயிற்சி மையம் | Dinamalar

சென்னை,:சென்னை, படூரில் உள்ள ‘ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சயின்ஸ்’ கல்வி நிறுவனம், ‘ராயல் என்பீல்டு’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, ராயல் என்பீல்டு பயிற்சி மையத்தை திறந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, எச்.ஐ.டி.எஸ்., கல்வி நிறுவன ஊழியர்களுக்கு, ‘ஆட்டோமொபில் இன்ஜினியரிங்’ மற்றும் தொழில்நுட்பத்தில் பயிற்சி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகள், இன்ஜின் மாடல்கள், தயாரிப்பு ஆலை, விற்பனை மற்றும் பராமரிப்பு என அனைத்து அம்சங்கள் குறித்தும் ஆசிரியர்களும் அறிந்துகொள்ள, வாய்ப்பு ஏற்படுத்தி … Read more

வேலை செய்யாமல் 1.3 கோடி சம்பளம்: சலிப்பாக இருப்பதாக கூறி நிறுவனத்தின் மீது ஊழியர் வழக்கு பதிவு!

ஐரிஸ் நாட்டில் டப்ளினில் பணியாற்றி வரும் ரயில் ஊழியர் ஒருவர் தனக்கு வேலை எதுவும் தராமல் ஆண்டுக்கு 1.3 கோடி சம்பளமாக தருவதாக தெரிவித்து, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். வேலை செய்யாமல் 1.3 கோடி சம்பளம் ஐரிஸ் நாட்டில் டப்ளினில் ரயில் ஊழியர் டெர்மோட் அலாஸ்டர் மில்ஸ் நிறுவனத்தின் நிதி மேலாளராக பணியாற்றி வருகிறார். மில்ஸ் 2010ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றதாகவும், ஆனால் அவருக்கு 2013 ஏற்பட்ட உடல்நல குறைவு ஏற்பட்டு, மூன்று … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: தென் கொரியா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது பிரேசில் அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் 16 வது சுற்று ஆட்டத்தில் தென் கொரியா – பிரேசில் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் கொரியா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு பிரேசில் அணி முன்னேறியது.

கட்டாய மத மாற்றம் சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்| Dinamalar

புதுடில்லி:’கட்டாய மத மாற்றம் மிகத் தீவிரமான பிரச்னை; மேலும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது’ என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.,வைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய், கட்டாய மத மாற்றத்தை தடுப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மோசமான விளைவுகள் இதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்தல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. மேலும், பணம் மற்றும் பரிசுப் … Read more