ஏரியில் கட்டிய பண்ணை வீடு; பாடகரின் வீட்டுக்கு சீல் – அதிகாரிகள் அதிரடி!

சட்டத்திற்குப் புறம்பாக ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்ற `நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனரகம்’ (The department of town and country planning) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி அப்பகுதியில் மூன்று பண்ணை வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றுக்கு சீல் வைக்க மற்றும் இடிக்கத் திட்டமிட்டனர். இந்த மூன்று பண்ணை வீடுகளின் பட்டியலில், பஞ்சாபி பாடகரான தாலேர் மெகந்தியின் (Daler Mehndi) வீடும் ஒன்று உள்ளது என்பதை மூத்த … Read more

ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை கண்டுபிடித்த பொலிசார்: தொடர்ந்த பயங்கரம்…

ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை பொலிசார் கண்டுபிடித்ததால், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளார் அவர். சட்ட விரோதமாக மான் வேட்டைக்குச் சென்ற ஜேர்மானியர்கள் ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Kusel என்ற நகரில் பொலிசார் இருவர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள். அப்போது, Andreas S (39) மற்றும், Florian V(33), என்னும் இருவர் பயணித்த வாகனத்தை அவர்கள் நிறுத்தி சோதனையிட முயன்றபோது, திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் Andreas. விடயம் என்னவென்றால், Andreasம் அவரது கூட்டாளியும் சட்ட … Read more

மழை விடுமுறையை ஈடு கட்ட வரும் சனிக்கிழமை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு வேலைநாள்!

சென்னை:  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை  விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள அனைத்து வகை உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செய்லபடும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தொடர் பெருமழையின் காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையில் 03.12.2022 அன்று … Read more

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள் சதமடித்து புதிய சாதனை

ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் 4 வீரர்கள்  சதமடித்து  சாதனை படைத்துள்ளனர். ஒரே நாளில் அதிக ரன்களை (506-4) குவித்து  இங்கிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது. சாக் கிராலி (122), பென் டக்கெட் (107), ஒல்லி போப் (108), ஹாரி புரூக் (101) ஆகியோர் சதமிடித்தனர்.

மது குடிக்குமாறு வற்புறுத்தல்; ரூ.60,000 கேட்டு மிரட்டல் – விடுதியில் மாணவருக்கு நேர்ந்த கொடுமை!

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் தனியார் விடுதியில் தங்கி, மாணவர் ஒருவர் பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி ஆய்வுப் பல்கலைக்கழகத்தில் (யுபிஇஎஸ்) முதலாம் ஆண்டு பி.பி.ஏ படித்து வருகிறார். அதே விடுதியில் அவரின் கல்லூரி மாணவர்கள் சிலரும் தங்கிப் படித்து வருகின்றனர். இந்த நிலையில், நவம்பர் 27-ம் தேதி அதிகாலை 2:30 மணியளவில் பி.பி.ஏ படிக்கும் மாணவர், அவரின் அறையில் படித்துக் கொண்டிருந்தார். மாணவர்மீது தாக்குதல் அப்போது, அவரின் கல்லூரியில் படிக்கும் சீனியர்கள் மற்றும் சக வகுப்பு மாணவர்கள் மூன்று … Read more

விபத்தில் மனைவி இறந்ததாக நாடகமாடிய நபர்: அம்பலமான உண்மை

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் காப்பீடு தொகையை பெறுவதற்காக மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சாலை விபத்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி ஷாலு தேவி(32) கடந்த 5ஆம் திகதி தனது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் வாகனத்தின் மீது வேகமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே ஷாலு தேவி மற்றும் அவரது சகோதரர் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

பிரதமர் மோடியின் கொள்கைகள் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும் – நாட்டை உடைக்கும்! ஜெய்ராம் ரமேஷ்

நாக்பூர்: பிரதமர் மோடியின் கொள்கைகள் பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக விரோதம் மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உருவாக்கும்  நாட்டை உடைக்கும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளருமான  ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ராகுலின் இன்றைய யாத்திரையில் பிரியங்கா காந்தி மற்றும் முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பு, விளம்பரம் மற்றும் ஊடகத் துறையின் பொதுச் செயலாளரான ஜெய்ராம்  ரமேஷ், ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ … Read more

வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணை

சென்னை: கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்த்தேக்கத்திலிருந்து 2022-2023 ஆம் ஆண்டு பாசனத்திற்கு 02.12.2022 முதல் 120 நாட்களுக்கு வினாடிக்கு 175 கன அடி  வீதம் (ஒரு நாளைக்கு 15.12 மில்லியன் கன அடி) தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் 24059 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கலியன் மதவு | சமூக நாவல் |அத்தியாயம் – 25 | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் கலியனைப் பார்க்கப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது துரைராமனுக்கு. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டல்லவா…! கோபம், பாபம், சண்டாளமாயிற்றே…! கோபத்தில் காரியம் செய்பவனும், கடும் புயலில் கப்பல் விடுபவனும் மீளமுடியாதே…! நிதானத்தை இழக்கச் செய்துத் தவறிழைக்கத் தூண்டி, இறுதியில் தலை குனிய வைத்துவிடுமே ஆத்திரம்…! … Read more

மற்றொரு நாட்டின் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய மற்றும் சீன அணு ஆயுத விமானங்களால் பரபரப்பு

அணு ஆயுதங்களை வீசும் திறன் கொண்ட ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் தென் கொரிய எல்லைக்குள் நுழைந்த விடயம் உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீறிப்பாய்ந்த தென் கொரிய போர் விமானங்கள் ஆறு ரஷ்ய மற்றும் இரண்டு சீன போர் விமானங்கள் முன்னறிவிப்பின்றி தென் கொரிய எல்லைக்குள் நுழைந்ததையடுத்து, தென் கொரிய இராணுவம் தனது போர் விமானங்களை அனுப்பவேண்டிய பதற்றமான சூழல் உருவாகியது. நேற்று, சீன போர் விமானங்கள் கொரிய வான் எல்லைக்குள் மீண்டும் மீண்டும் … Read more