கனடாவில் இளம் வயதில் உயிரிழந்த இந்திய வம்சாவளி இளம்பெண்: கவலையில் இலட்சக்கணக்கானோர் …

கனடாவில் வாழ்ந்துவந்த இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் திடீரென உயிரிழந்த விடயம், அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி, இலட்சக்கணக்கான அவரது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம், அந்தப் பெண் ஒரு சமூக ஊடக பிரபலம் ஆவார். 930,000 ரசிகர்களைக் கொண்ட டிக்டாக் பிரபலம் இந்திய வம்சாவளியினரான மேகா தாக்கூர், 930,000 ரசிகர்களைக் கொண்ட டிக்டாக் பிரபலம் ஆவார். ஒருவர் தன்னுடைய தோற்றத்தைக் குறித்து கவலைப்படக்கூடாது, எப்படி இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என பல்லாயிரம் பெண்களுக்கு தன்னம்பிக்கை அளித்த மேகா … Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு வழங்க உறுதி கொள்வோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்புகள் வழங்க உறுதி கொள்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளளார். அந்த வாழ்த்துச் செய்தியில், “ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் ஒருங்கிணைத்து, சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் … Read more

சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியது..!!

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழி சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது. ஈசிஆர் சாலை சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சீர்காழி, நாகை, திருத்துறைப்பூண்டி, தூத்துக்குடி வழியே குமரியை இணைகிறது. இருபுறமும் 11 மீ. அகலத்தில் 6 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ரூ.2 கோடி இன்ஷூரன்ஸ் பெறுவதற்காக நாடகம் கூலிப்படை வைத்து மனைவியை கொலை செய்தவர் கைது| Dinamalar

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில், 2 கோடி ரூபாய் இன்ஷூரன்ஸ் தொகையை பெறுவதற்காக மனைவியை கூலிப்படை வைத்து காரை மோதி கொலை செய்து, விபத்து என கூறி நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்தவர் மகேஷ் சந்த். இவரது மனைவி சாலு தேவி, 32. கடந்த நவ., 5ம் தேதி, ஜெய்ப்பூர் நகரில் இரு சக்கர வாகனத்தில் தன் உறவினருடன் சென்ற சாலு தேவி மீது, சொகுசு கார் மோதியது. இதில் சாலு தேவியும், அவரது உறவினரும் இறந்தனர். … Read more

பஞ்சாப் பாடகர் மூஸ்வாலா கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கோல்டி பிரர் அமெரிக்காவில் கைது!

பஞ்சாப்பில் கடந்த மே மாதம் 29-ம் தேதி மான்சா மாவட்டத்தில் பாடகர் சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுவிட்ட நிலையில், முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் லாரன்ஸ் பிஸ்னோய் ஏற்கெனவே சிறையில்தான் இருக்கிறான். மற்றொரு முக்கியக் குற்றவாளியான கோல்டிபிரர் கனடாவில் பதுங்கியிருந்தான். கனடாவிலிருந்து கொண்டுதான் சித்துவைக் கொலைசெய்ய ஆட்களை ஏற்பாடு செய்து பண உதவி, ஆயுத உதவிகளைச் செய்து கொடுத்தான். இந்தக் கொலை நடக்கும்போது குற்றவாளிகளுக்கு … Read more

மெடல் வாங்கிட்டேன், தந்தையை இழந்துட்டேன்! தங்கம் வென்ற வலுதூக்கும் தமிழக வீராங்கனை லோகப்பிரியா கண்ணீர்..

பட்டுக்கோட்டை: மெடல் வாங்கிட்டேன் ஆனால், தந்தையை இழந்துட்டேன் என காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வலுதூக்கும் தமிழக வீராங்கனை லோகப்பிரியா கண்ணீர் மல்க கூறினார். நியூசிலாந்து காமன்வெல்த் போட்டியில் தங்க மெடல் வாங்கிய இளம் வலுதூக்கும் வீராங்கனை லோகப்பிரியா, அந்த மெடலை சொந்த ஊருக்கு வந்து தனது தந்தையிடம் காட்ட இருந்த நிலையில், அவர் உயிரிழந்த செய்திதான் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நியூசிலாந்து ஆக்லாண்டில் நடந்து வருகிறது. … Read more

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யக்கூடும். வரும் 5ல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது. டிசம்பர் 4ல் அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் அர்ச்சகர்களிடம் ஆபாசமாக பேசியதாகப் புகார்… அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது வழக்குபதிவு!

சேலம், சொர்ணாம்பிகை தெருவை சேர்ந்தவர் தங்கபிரசன்னகுமார். இவர் சேலம் கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 16-ம் தேதி பணியில் இருந்தபோது, திருத்தொண்டர்கள் சபை நிறுவனரான அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கோயிலுக்கு வந்து அம்மன் சந்நிதியில் பூஜையில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது அவர் தங்கபிரசன்னகுமாரிடம் தகராறில் ஈடுப்பட்டிருக்கிறார். மேலும் அங்கு பணியாற்றக்கூடிய அர்ச்சகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த நிலையில், கோயில் அர்ச்சகர்கள் அனைவரும் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் மீது சேலம் டவுன் காவல் … Read more

லண்டன் விமான நிலையத்தில் தனது சூட்கேசை தேடி அலையும் ஆவி: ஒரு திகில் செய்தி

லண்டன் விமான நிலையம் ஒன்றில், தனது சூட்கேசைத் தேடி அலையும் ஒரு ஆவியைக் குறித்த திகில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. தீப்பற்றி எரிந்த பயணிகள் விமானம் 1948ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில், பனிமூட்டம் நிறைந்த ஒரு நாளில், அப்போது லண்டன் விமான நிலையம் என அழைக்கப்பட்ட, இன்றைய ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பற்றியது. அந்த விபத்தில் 19 பேர் உயிருடன் எரிந்து பலியானார்கள். மூன்று பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டார்கள். தனது சூட்கேசைத் … Read more

15நாளில் ரூ.8.6 லட்சம் வசூல்: மாடு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னை:  சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 15 நாளில் சாலையில் திரிந்த  சுமார் 430 மாடுகள் பிடிக்கப்பட்டு, அதன்படி  உரிமையாளர்களுக்குத் தலா ரூ.1,550/- வீதம் ரூ.8.6 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது என மாநகராட்சி தெரிவித்து உள்ளது. மேலும் மாடுகளை அவிழ்த்து விடாமல் பாதுகாக்கும்படி மாடுகளின் உரிமை யாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி பொது சுகாதாரத்துறையினரால் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் … Read more