`பாரா ஒலிம்பிக் போட்டியில் வெல்வதுதான் கனவு' – சாதித்து வரும் மாற்றுத்திறன் பள்ளி மாணவி
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஆர்.ஐ.சி.ஆர் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார் சுபஸ்ரீ. செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெற்றது. இதில், மாணவிகளுக்கான பிரிவில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் சுபஸ்ரீ முதலிடம் பிடித்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதோடு, நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார் தங்க பதக்கங்களுடன் மாணவி … Read more