மெட்ரோ ரயில் பணிக்காகக அடையாறு  ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு…

சென்னை: மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு  ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது  ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, சென்னை பசுமை வழிசாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை ஆற்றில் சுரங்கம் தோண்டப்படுகிறது. அடையாறு ஆற்றில் மிதவை படகில் இயந்திரம் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் … Read more

டெல்லி சாஸ்திரி நகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

டெல்லி: டெல்லி சாஸ்திரி நகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பயன்பாட்டில் இல்லாமல் இருந்த  கட்டடம் தானாக இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர், பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு ரொட்டிக்கு ஏன் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து ? – பிரெஞ்சு கழி ரொட்டி புராணம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஏழை மக்களின் மீது எவ்வித அக்கறையும் இல்லாத அரசியல்வாதிகளைச் சாட,  “ரொட்டி இல்லையென்றால் கேக்கை சாப்பிட சொல்லுங்கள்”  எனும் உதாரண வாசகம் அரசியல் அரங்கில் பயன்படுத்தப்படுவதுண்டு…  அந்த வாசகம் பிரெஞ்சுப் புரட்சியின் போது, மக்கள் ரொட்டி கூட கிடைக்காமல் பசியால் தவிக்கிறார்கள் என … Read more

கனடாவில் கேட்பாரற்று இருக்கும் ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம்! மொத்தமும் ஒருவருக்கு சொந்தம்

கனடா லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது. $5 மில்லியன் பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை கேட்பாரற்று உள்ளது. ஆம்! பரிசு தொகைக்காக யாரும் இன்னும் உரிமை கோரவில்லை. saultonline அவகாசம் எவ்வளவு? லொட்டரி பரிசு வென்றவர்கள் தங்கள் பரிசைப் பெற 52 வாரங்கள் வரை … Read more

மீனவர்கள் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால், மீனவர்கள் நாளைமுதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் தமிழகஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினாலும் டெல்டா மாவட்டம் உள்பட கடலோர மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  மேலும் சென்னை போன்ற பல நகரங்களில் தொடக்க காலத்தில் ஒருசில நாட்கள் மழை பெய்த நிலையில், கடந்த 10 நாட்களாக மழை ஏதும் இல்லாத நிலையே உள்ளது. இந்த … Read more

பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்து, டேங்கர் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேருந்து ஓட்டுநர் ஜானகிராமன் உயிரிழந்தார். 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டட பணிகளுக்கு டில்லியில் தடை| Dinamalar

புதுடில்லி : புதுடில்லியில், நேற்று காற்று மாசின் அளவு மிகவும் மோசமான நிலையை எட்டியதால், அத்தியாவசியம் இல்லாத கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புதுடில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரி காற்றின் தரம் அளவு மிகவும் மோசமாகி,407 புள்ளியை எட்டியது.எனவே, காற்றின் தரம் குறித்து மதிப்பிட, மத்திய காற்று தரக் குழு நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், காற்றின் தரம் மேலும் மோசமடைந்து விடாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அத்தியாவசியம் … Read more

பாம்பு தீண்டி உயிரிழந்த தாய்; சோகத்திலும் கிராம உதவியாளர் தேர்வெழுதிய மகள்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குருமலை வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவரின் மனைவி பசுபதி. இருவரும் விவசாயக்கூலி தொழிலாளர்கள்.  இவர்களுக்கு கனகரத்தினம் என்ற ஒரே மகள். கனகரத்தினத்தின் கணவர் இருளப்பன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவினால்  உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 8-ம் வகுப்பு படித்து வரும் வசந்த் என்ற மகனும், 3-ம் வகுப்பு பயிலும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். கணவரை இழந்த நிலையில், கனகரத்தினம் தன் தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் … Read more

உக்ரைனில் போர் நடைபெறும் இடத்துக்குச் செல்ல புடின் திட்டம்: உறுதி செய்தது கிரெம்ளின் வட்டாரம்.

ரஷ்ய ஜனாதிபதி புடின், உக்ரைனில் போர் நடக்கும் இடத்துக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் நுழைந்து அதை கைப்பற்றிவிடலாம் என சிறுபிள்ளைத்தனமாக முடிவெடுத்து அந்நாட்டை ஊடுருவியது ரஷ்யா. ஆனால், அது இவ்வளவு நாள் நீடிக்கும், இவ்வளவு பெரிய போராக மாறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில், உக்ரைனுக்கு செல்ல புடின் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதை கிரெம்ளின் வட்டாரமும் உறுதிசெய்துள்ளது. கிரெம்ளின் ஊடகச் செயலாளரான … Read more

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் 4 நாட்கள் தடை!

விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழையொட்டி, சதுரகிரி மழைப்பாகுதிகளில் பெய்து கனமழை காரணமாக, மலைப்பகுதிகளில் செல்லும்  நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால்,  பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் வரும் திங்கள்கிழமை பிரதோஷமும், புதன்கிழமை பௌர்ணமி வழிபாடும் நடைபெற உள்ளன. காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, … Read more