மதுவிலக்கு அமலில் உள்ள பீஹாரில் விஷச்சாராயம் குடித்த 17 பேர் பலி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாட்னா: மதுவிலக்கு அமலில் உள்ள பீஹார் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர். பீஹார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மதுவிலக்கின் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வருகிறது. சாப்ரா மாவட்டத்தில் இஷாவ்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சிலர் நேற்றிரவு (டிச.,13) கூட்டாக மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமான மது போதையில் வீடு திரும்பியவர்களுக்கு திடீரென உடல்நிலை மோசமானது. … Read more

`பிரச்னையை தீர்க்க உதவாவிடில் சுட்டுக் கொலைசெய்வேன்!' – சரத் பவாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மும்பை காம்தேவியில் வசித்து வருகிறார். கடந்த சில நாள்களாக மர்ம நபர் ஒருவர் சரத் பவார் வீட்டுக்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து வந்தான். “என்னுடைய குடும்பப் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லையெனில், குறிப்பாக ஓடிப்போன மனைவியை என்னுடன் சேர்த்து வைக்கவில்லையெனில் கொலைசெய்துவிடுவேன்” என்று சரத் பவாருக்கு மிரட்டல் விடுத்துக்கொண்டே இருந்தான். மேலும், “மும்பைக்கு வந்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்வேன்” என்று மிரட்டினான். தொடர்ச்சியாக மிரட்டல் போன் வந்து … Read more

ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த முடிவு?

சென்னை: ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் செலுத்த  உணவு வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. மேலும்,  வங்கி கணக்கு இல்லாதவர்கள், ஆதாருடன் இணைக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு படிவம் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமில்லாமல் இருந்ததால் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நடப்பாண்டு புதிய நடைமுறையை செயல்படுத்த தமிழகஅரசு … Read more

கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு: தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கனியாமூர் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமினை ரத்து செய்யக் கோரி மாணவியின் தாயார் தாக்கல் செய்ய மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதில் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இறந்து போன மாணவி உடலில் இருந்த காயங்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.

Tamil Thalaivas: `இனிதான் ஆரம்பம்!' – சரித்திர வெற்றியைப் பெற்ற தமிழ் தலைவாஸ்!

புரோ கபடி 9 ஆவது சீசன் எலிமினேட்டர்-2 சுற்றில் தமிழ் தலைவாஸ் யுபி யோதா அணிகள் மோதின. டை பிரேக்கரில் 6-4 என வென்று தமிழ் தலைவாஸ் முதன்முறையாக அரையிறுதிக்குச் சென்று வரலாறு படைத்திருக்கிறது. நாக் அவுட் போட்டிகளுக்கே உரிய விறுவிறுப்பும் கடைசி நேர திக் திக் சுவாரஸ்யங்களும் கொண்ட போட்டியாகவே இது அமைந்தது. இரு அணிகளும் கடைசிவரை வெற்றிக்காகத் தீவிரமாக போராடின. புரோ கபடி வரலாற்றிலேயே இரண்டாவது முறையாக நடந்த டை பிரேக்கரில் தமிழ் தலைவாஸ் … Read more

தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா? இதை மட்டும் செய்தால் போதும்.. சட்டென பறந்தோடும்

வானிலை மாற்றத்தால் ஏற்படும் தொண்டை வலி, கரகரப்பை சரி செய்யும் வழிமுறைகள் குறித்து இங்கு காண்போம். மழைக் காலங்களில் பொதுவாக ஏற்படும் பிரச்சனை தொண்டை வலி, தொண்டை கரகரப்பு. இந்த பருவத்தில் பின்கழுத்து வலி, நெற்றிவலி, தும்மல் போன்றவையும் ஏற்படும் என்பதால் உடலில் நோய் எதிர்ப்பாற்றலை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். என்ன செய்ய வேண்டும்? துளசி மற்றும் ஏலக்காயை சேர்த்துக் கொதிக்க வைத்த நீரை அருந்த வேண்டும். கற்பூரவள்ளி இலை அல்லது வெற்றிலை அல்லது ஆடாதொடா இலைகளை … Read more

திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த முதலமைச்சருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  உதயநிதி ஸ்டாலின்  நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

FIFA World Cup Round up 2022: மெஸ்ஸியின் அடுக்கடுக்கான சாதனைகள் முதல் மொரோக்கோவின் வெற்றி வரை!

மெஸ்ஸியின் புதிய சாதனை: உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினா அணியும் குரோஷியா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். மற்றொரு கோலுக்கு அசிஸ்ட் செய்தார். இதன்மூலம் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றார். இந்த 2022 உலகக் கோப்பை தொடரில், மெஸ்ஸி 4வது முறையாக ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில், எந்த ஒரு வீரரும் செய்யாத சாதனையைப் படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் இதுவரை 5 கோல்கள் … Read more

அம்மாவுக்கு ஒரு துணையைக் கண்டுபிடித்தேன்! தனது தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்

இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த ஆர்த்தி ரியா என்ற பெண் தனது தாயாருக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். வைரலான புகைப்படம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் ஆர்த்தி ரியா சக்கரவர்த்தி. இவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. அதாவது, ஆர்த்தி தனது தாயார் மவுசுமிக்கு மறுமணம் செய்து வைத்த விடயம் தான் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது. அம்மாவுக்காக துணையை தேடிய மகள் இதுதொடர்பாக ஆர்த்தி வெளியிட்டுள்ள பதிவில், ‘அப்பா இறந்த பிறகு, அம்மாவுடன் பாட்டியின் வீட்டிற்கு … Read more

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல்காந்தியுடன் இணைந்து நடைபயணம் மேற்கொண்ட ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன்! வீடியோ

ஜெய்ப்பூர்: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய யாத்திரையின்போது, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குமரி முதல் காஷ்மீர் வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது  பாரத் ஜோடோ யாத்திரை, கடந்த செப்டம்பர் மாதம் 7ந்தேதி  தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் … Read more