திருச்சி: `ஒரு லட்சம் கொடுத்துடுங்க; நிலத்தை கிரயம் செஞ்சிடலாம்!’ – சிக்கிய சார்பதிவாளர்

திருச்சி மாவட்டத்திலுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மிகவும் பிசியானதும், அதிகளவில் பத்திரப்பதிவு நடக்கும் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் மிக முக்கியமான இருக்கிறது திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகம். இங்கு திருச்சி காட்டூர் பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் அசோக்குமார் என்பவர், பத்திரப் பதிவுக்காகச் சென்றிருக்கிறார். அசோக்குமார் திருவெறும்பூரை அடுத்த பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் நிலத்தை வாங்குவதற்கு முடிவு செய்திருக்கிறார். அந்தப் பகுதியில் சந்தை மதிப்பில் ஒருசதுர அடி நிலம் 290 ரூபாய் என்றிருக்க, 21 சென்ட் நிலத்தினுடைய … Read more

உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 64.83 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 66.41 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 62.61 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபத்திருநாள் அன்று காலை 06.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதி: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி தீபத்திருநாள் அன்று காலை 06.00 மணி முதல் முதலில் வரும் 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தீபத்திருவிழா அன்று காலை 06.00 மணிக்கு செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு 2500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உ.பி., தொழிற்சாலையில் இருந்து 7 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு| Dinamalar

பதோஹி : உத்தர பிரதேசத்தில் தரைவிரிப்பு தொழிற்சாலை ஒன்றில் குழந்தை தொழி லாளர்களாக இருந்த ஏழு சிறுவர்களை போலீசார் மீட்டனர். உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மிர்சாபூர் மாவட்டத்தில் சுனில் குமார் மவுரியா என்பவருக்கு தரைவிரிப்பு தயாரிக்கும் தொழிற் சாலை உள்ளது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிவதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது மவுரியா சிலருடன் தப்பியோட முயற்சித்தார். அவர்களை … Read more

`தயவுசெஞ்சு வாழ விடுங்க; தொந்தரவு பண்ணாதீங்க’ – காவல் நிலையத்தில் கலங்கிய ராஜ்கிரணின் மனைவியின் மகள்

திரைப்பட நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகளாக அறியப்படுபவர் பிரியா. இவர் சில மாதங்களுக்கு முன்பு திரைப்பட நடிகரான முனீஸ்ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு ராஜ்கிரணும், அவரின் மனைவி பத்மஜோதி (எ) கதீஜாவும் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதனைத்தொடர்ந்து பிரியா அவரின் கணவர் முனீஸ்ராஜாவுடன் திருச்சி மாவட்டம், பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள தனது தந்தையான இளங்கோவிடம் தஞ்சம் அடைந்தார். இளங்கோ கதீஜாவின் முதல் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து பிரியா தனது தந்தை இளங்கோ … Read more

டிசம்பர் 2: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 195-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 195-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 போட்டிகள்!

கத்தார்: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன. தென்கொரியா – போர்ச்சுகல் (எச் பிரிவு) இன்று இரவு 8.30 மணிக்கு களம் காண்கிறது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் கானா – உருகுவே (எச் பிரிவு) அணிகள் மோதுகின்றன. செர்பியா – சுவிட்சர்லாந்து (ஜி பிரிவு) அணிகள் நள்ளிரவு 12.30 மணிக்கு களம் காண்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு மற்றொரு ஆட்டத்தில் கேமரூன் – பிரேசில் (ஜி பிரிவு) அணிகள் … Read more

பால் கொள்முதல் விலை ரூ.2 உயர்வு| Dinamalar

சாம்ராஜ் நகர், சாம்ராஜ் நகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை இரண்டு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது 1 லிட்டர் பால் கொள்முதல் விலை 28.85 ரூபாயாக உள்ளது. இது, 30.85 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் கால்நடைகள், தோல் நோயால் பாதிக்கப்படுகின்றன. இந்த நேரத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் சாதாரண பால் லிட்டருக்கு ௩௯ ரூபாயும், ஸ்பெஷல் பால் லிட்டருக்கு ௪௫ ரூபாயும் … Read more

முதன்முறையாக வாக்களிப்பு! – இந்தியாவின் `மினி ஆப்ரிக்கா'வும்… குஜராத் தேர்தலும்… யார் இவர்கள்?

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிற நிலையில், முதல்கட்ட தேர்தல் நேற்று (1-12-22) காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு நிறைவுப்பெற்றது. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 89 தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று (1-12-22) நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் குஜராத்தின் ‘மினி ஆப்ரிக்க’ கிராமமான ஜாம்பூரில் முதன்முறையாக நேற்று பழங்குடி மக்களுக்காக வாக்கு சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,641,934 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.41 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,641,934 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 648,371,704 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 626,141,153 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,771 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.