பஸ் – லாரி மோதல் உ.பி.,யில் 6 பேர் பலி
பஹ்ரைச், உத்தர பிரதேச நெடுஞ்சாலை ஒன்றில் பஸ் மீது லாரி மோதியதில், ஆறு பேர் பலியாகினர்; 15 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ – பஹ்ரைச் நெடுஞ்சாலையில், பஸ் மீது எதிரே வந்த லாரி நேற்று மோதியது. இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆபத்தான நிலையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more