செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மதுராந்தகம் அருகே நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மதுராந்தகத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிராம் பகுதியில் டாடா வாகனம் மீது ஈச்சர் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 4 பேர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம்

ப்ரசிலியா: பிரேசிலின் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது என ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பீலேவுக்கு புதிதாக எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடல் பகுதியில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பீலேவுக்கு, கொரோனாவால் சுவாசப்பிரச்சனை ஏற்பட்டது.

`அப்பா! உங்கள் வருகையை எதிர்பார்க்கிறேன்!'- இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மூத்த மகன் ஆர்யன் கான் அமெரிக்கா திரைப்படக்கல்லூரியில் படித்தவர். அவர் நடிகராக அறிமுகமாவாரா அல்லது இயக்குனராக அறிமுகமாவாரா என்ற எதிர்பார்ப்பு பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் சேர்ந்து வெப் சீரிஸ்க்கு கதை எழுதுவதாக இதற்கு முன்பு தகவல் வந்தது. தற்போது அக்கதையை எழுதி முடித்துவிட்டார். தான் இயக்குநராக அறிமுகமாகப் போவதாக ஆர்யன் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆர்யன் கான் தனது … Read more

இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதில் 25 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல்களை முன்னிட்டு குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 7- ஆம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர் டிசம்பர் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 23 நாள்கள் நடைபெறும் இந்த தொடரில் வர்த்தக முத்திரைகள் திருத்த மசோதா, பொருட்களின் புவியியல் குறியீடுகள் … Read more

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலை நாளை ஆலோசனை

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே பைக்கில் 4 பேர் பயணம் பஸ் மோதி 3 பேர் பலி| Dinamalar

ராய்ச்சூர் : நெல் அறுவடைக்காக ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற, நான்கு பேர் மீது அரசு பஸ் மோதியது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்தவர்கள் நாகராஜா, 25; சீனு, 30; ஜெயபால், 27; ஸ்ரீகாந்த், 30. இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் நெல் அறுவடைக்காக ராய்ச்சூர் மாவட்டம்,மஸ்கி அருகே உள்ள குடதுார் கிராமத்துக்கு சென்றனர். நான்கு பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் அறுவடை இயந்திரத்துடன் சென்றனர். குடதுார் கிராமத்தின் அருகே இரவு … Read more

கோவை: கேள்வி எழுப்பிய மேயர்… போட்டுடைத்த அதிகாரி… சர்ச்சையில் திமுக கவுன்சிலர்கள்!

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு அனுமதி இல்லாமல் குப்பை அள்ளுவோர் குறித்து அதிகாரிகளிடம், ‘இதற்கு யார் பொறுப்பாளர்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதார அலுவலர் திருமால், குப்பைக் கிடங்கு கார்ப்பரேட் வேலைக்கு குட்பை… – கலைப்பொருள்கள் தயாரிப்பில் கலக்கும் கோவை பெண்! “இதை ஒழுங்குப்படுத்த முன்பே செந்தில் பாஸ்கர் என்ற உயரதிகாரிக்கு கடிதம் எழுதினேன். குப்பை … Read more

இன்று உருவாகிறது ‘மாண்டஸ்’ புயல்

சென்னை: ‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாண்டஸ் புயலாக வலுபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மாண்டஸ்’ புயல், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரத்தை, நாளை காலை நெருங்கும். புயலின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து, இன்று அறிவிக்கப்படும்.இன்று பல இடங்களில் மிதமான மழை … Read more

கொடிய Strep A பாதிப்பால் சிறுமி அவஸ்தை: பிரித்தானிய மருத்துவமனை தொடர்பில் தாயாரின் குமுறல்

பிரித்தானியாவில் மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக Strep A தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுவரை 9 சிறார்கள் மரணம் பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 சிறார்கள் மரணமடைந்துள்ள நிலையில், தாயார் ஒருவரின் வெளிப்படுத்தல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Credit: Ben Lack தமது 9 வயது மகள் எல்லா Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு வெஸ்ட் யார்க்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.