விமானப் பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முன்னேற்றம்

புதுடெல்லி:  விமானப் பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு வெளியிட்டுள்ள தர வரிசை பட்டியலில், 102-வது இடத்திலிருந்த இந்தியா, சீனா, இஸ்ரேல் ஆகிய நாடுகளை பின்னுக்குத்தள்ளி 48-ஆவது இடத்திற்கு முன்னேறி  சாதனை படைத்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் சுரங்க விவாக்கத்திற்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகை

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சுரங்க விவாக்கத்திற்கு நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். 2-வது  சுரங்க விரிவாக்க பணிக்காக நிலத்தை கையகப்படுத்த நிலஅளவீடு செய்ய வந்தவர்களை முற்றுகையிட்டனர். நிலம் தந்தவர்களின் வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை தரக்கோரி கரிவெட்டி  கிராமத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடை, பாயசம், கோலா கறி…. புரதம் நிறைந்த வீக் எண்டு ஸ்பெஷல் ரெசிப்பீஸ்

அசைவ உணவுக்காரர்களுக்கு பெரும்பாலும் புரதச்சத்துக் குறைபாடு ஏற்படுவதில்லை. சைவ உணவுக்காரர்களுக்குத்தான் அந்தப் பிரச்னையே… புரதம் நிறைந்த பருப்பு வகைகளைப் பயன்படுத்தி வடை, பாயசம் முதல் கோலா கறி வரை விருந்தே சாப்பிடலாம் என்பதை அறிவீர்களா? இந்த வார வீக் எண்டை புரோட்டின் ரிச்சாக கொண்டாடுங்கள்… பலாப்பழ பருப்பு பாயசம் தேவையானவை: பாசிப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன் பழுத்த பலாப்பழம் (கொட்டை நீக்கியது) – கால் கிலோ வெல்லம் – ஒரு கப் உடைத்துக் கொள்ளவும்) ஏலக்காய் – … Read more

FIFA உலக கோப்பையில் ஆதிக்கம் செலுத்தும் மெஸ்ஸி! அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேற்றம்

கத்தார் உலக கோப்பை தொடரில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அர்ஜென்டினா அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. அர்ஜென்டினா, அவுஸ்திரேலிய அணிகள் மோதல் கத்தாரில் உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பின் உச்சத்தை தொட்டுள்ளது. நள்ளிரவு 12.30 மணிக்கு அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்த நாக் அவுட் சுற்றில் அர்ஜென்டினா, அவுஸ்திரேலிய அணிகள் மோதின. தொடக்கம் முதல் அர்ஜென்டினா அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். … Read more

திருவண்ணாமலை அருகே தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 27 பேர் படுகாயம்

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.  27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் – தேசுருக்கு சென்றபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த நிலத்தில் பேருந்து கவிழ்ந்துள்ளது.

ராஜஸ்தானில் பிரபல தாதா சுட்டுக் கொலை| Dinamalar

சிகார்,:ராஜஸ்தானில் பிரபல தாதா ராஜு தேத், சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜஸ்தானில் சிகார் மாவட்டத்தைச் சேர்ந்த தாதா ராஜுவை, அவருடைய வீட்டு வாசலில் வைத்து நான்கு பேர் சரமாரியாக சுட்டு கொன்றனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே ‘ராஜு கொலைக்கு நான் தான் காரணம்’ என, மற்றொரு தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்த ரோஹித் கோதரா என்பவர் சமூக வலைதளம் ஒன்றில் பதிவிட்டுள்ளார். பிரபல தாதாக்கள் ஆனந்த்பால் சிங், பல்பீர் பனுடா ஆகியோர் மரணத்துக்கு … Read more

2022 ம் ஆண்டின் கடைசி சோமவார பிரதோஷம் – கார்த்திகை சோமவாரமும் சங்காபிஷேகமும் ஏன் விசேஷம் தெரியுமா?

சோமவார மகிமைகள்: பொதுவாக இயற்கை வழிபாட்டில் சூரியனுக்கு இணையாகப் போற்றப்பெறுபவர் சந்திரபகவான். வேதங்கள் சந்திரனை ‘சோமன்’ என்று புகழ்கின்றன. இதனால் இவரது ஆதிக்கத்திற்கு உரிய நாளான திங்கள் கிழமை ‘சோமவாரம்’ எனப்பெறுகின்றது.  உறுதியான மனநிலையைப் பெறவும்,திடமாகச் செயலாற்றிடவும் சந்திர பகவான் அருள் அவசியம். சந்திரன் பலம் குறைந்து இயங்கிடும் காலங்களில் அதீதமான மனச்சோர்வும், குழப்பமும் ஏற்படும். இக்காலங்களில் சந்திரபகவான் அருளைப் பெற்றிட அவர் வழிபட்ட தலங்களிலுள்ள சிவபெருமானை வழிபடுதல் சிறப்பாகச் சொல்லப் பெற்றிருக்கின்றது. சோமவாரமும், சங்காபிஷேகமும் சந்திரனுக்குரிய  தினங்களான … Read more

அவனை தவிர வேறு யாரும் இல்லை! சிட்னியில் உயிரிழந்த 17 வயதான இலங்கை சிறுவன்… மனம் உடைந்த சகோதரி

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த 17 வயதான மாணவர் விபத்தில் உயிரிழந்தது அவர் குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்த இலங்கையர் கொழும்பில் பிறந்த 17 வயதுடைய கல்வின் விஜிவீர என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தானது கடந்த வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி பகல் 11.20 மணிக்கு நடந்துள்ளது. அப்போது கல்வின் தனது இரு நண்பர்களுடன் பள்ளியில் இருந்து சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் 90 வயதான மூதாட்டி ஓட்டி வந்த … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 16 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அன்னிய செலாவணி இருப்பு மூன்றாவது வாரமாக அதிகரிப்பு| Dinamalar

மும்பை :நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து மூன்று வாரங்களாக அதிகரித்து வருகிறது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.கடந்த நவம்பர் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 23 ஆயிரத்து, 490 கோடி ரூபாய் அதிகரித்து, 44.56 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில், இருப்பு 44.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஆண்டு அக்டோபரில், இதுவரை இல்லாத அளவுக்கு, 52.89 லட்சம் கோடிரூபாயாக அன்னிய செலாவணி இருப்பு அதிகரித்தது … Read more