ஆள் கடத்தல் வழக்கு; போலி ஆவணங்களைச் சமர்ப்பித்த சென்னை திமுக பெண் கவுன்சிலர் கைது! – நடந்தது என்ன?

சென்னை சோழிங்கநல்லூர், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் அமர்ராம். அந்தப் பகுதியில் சொந்தமாக அடகுக்கடை நடத்திவருகிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மயிலாப்பூரைச் சேர்ந்த தி.மு.க வட்டச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாவலூரிலுள்ள 58 சென்ட் நிலத்தை ரூ.60 லட்சம் முன்பணம் கொடுத்து பத்திரப்பதிவு செய்திருக்கிறார். அதற்கு அடுத்த வருடமே நிலத்துக்கான முழு தொகையையும் கொடுத்திருக்கிறார். அமர்ராம் இந்த நிலையில், நிலப் பிரச்னை தொடர்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் அமர்ராம் சென்னை மெரினா காவல் … Read more

தலையில் பை சுற்றப்பட்டு இறந்து கிடந்த பிரித்தானிய கணவன்: மனைவியின் செயலில் தொடரும் மர்மம்

கம்போடியாவில் வசித்து வரும் பிரித்தானிய கணவர் ஒருவரின் தலையில் கருப்பு பை சுற்றப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய கணவர் மரணம் நியூகேசிலை சேர்ந்த ஜொனாதன் ஸ்டாக்(34) என்ற பிரித்தானிய தந்தை கம்போடியாவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். இவருக்கு மீலிங்(39) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் புதன்கிழமை கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது தனது இரண்டு குழந்தைகளையும் மனைவி மீலிங் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். … Read more

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி

பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு  வர்ணனை செய்துகொண்டிருக்கும்பொது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர்  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய காப்டன், தற்போது வர்ணனையாளராக இருந்து வருகிறார். இவர்,  மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியை வர்ணனை செய்துகொண்டிருக்கும் போது, இதயப்பகுதியில் ஏற்பட்ட திடீர் வலியால் துடித்தார். இதையடுத்து அவர் உடடினயாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் டெஸ்ட் … Read more

தகுதி இல்லாதோருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தகுதி இல்லாதோருக்கு பிரதமர் வீட்டு வசதி திட்ட வீடுகளை ஒதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு  அளித்துள்ளது. ஏழை மக்களுக்கான திட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும் விடு ஒதுக்கியதாக புகார் அளித்த நிலையில்  சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது

எய்ம்ஸ் மருத்துவமனை மீது நடத்தியது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைய தளம் மீது ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். டில்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 22-ம் தேதியன்று இணையதள செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டு தீடீரென சர்வர் முடங்கியது. விசாரணையில் எய்மஸ்சின் இணையதள தகவல்களை சேகரிக்கும் கணினி, ‘சர்வர்’ ஆகியவற்றை முடக்கும் விதமாக, ‘ஹேக்கர்’கள் ‘சைபர்’ தாக்குதலில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாயின. எனினும் உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் … Read more

ராஜபாளையம்: இருதரப்பு பிரச்னையால் மோதல் உண்டாகும் சூழல்! – கோயிலுக்கு சீல் வைத்த வருவாய்த்துறையினர்

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருதரப்பினர் பூஜை முறைகள் செய்து வருகின்றனர். இரு தரப்பினருக்கிடையேயான உடன்படிக்கையின்படி கோயிலில் வழிபாடு மற்றும் புரட்டாசி பொங்கல் திருவிழா நடத்துவதற்கான உரிமை ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் இரண்டு தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த புரட்டாசி மாதம் திருவிழா நடத்திய நிர்வாகத்தரப்பினர், உடன்படிக்கைப்படி கார்த்திகை மாதம் தொடக்கத்தில் மற்றொரு பிரிவினருக்கு கோயில் நிர்வாக சாவியை … Read more

32 ஓட்டங்களில் சுருண்ட அணி! புயல்வேக பந்துவீச்சு

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் டி20 போட்டி வங்கதேச மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து மகளிர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்கள் எடுத்தது. கேப்டன் சோஃபி டிவைன் 34 பந்துகளில் 45 ஓட்டங்களும், பேட்ஸ் 33 பந்துகளில் 41 … Read more

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் டிரெய்லரை ரசித்த வைகைப்புயல்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்துள்ள படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். வடிவேலுவின் மகளாக பாடகியும் ஸ்டார் விஜய் டி.வி. புகழ் சிவாங்கி நடித்துள்ளார். மேலும் ரெட்டின் கிங்ஸ்லி, ஷிவானி நாராயணன், ஆனந்தராஜ், முனீஷ்காந்த், ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு, யூடியூபர் பிரஷாந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். vaigai puyal 🌪️ himself, reacts to #NaaiSekarReturns 🐶💯 TRAILER in the middle of promotions! … Read more

வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் – 4 முதல் தாள் தேர்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும்: டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

சென்னை: வனப் பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் -4 முதல் தாள் தேர்வு டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. 10 வனப்பயிற்சியாளர் பணியிடங்களுக்கான குரூப் 4-தேர்வுக்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர்.  2,3-ம் தாள் தேர்வுகள் டிசம்பர் 5-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை காலை மத்திய வேலைகளிலும் டிசம்பர் 11-ம் தேதி காலையும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர், மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

செயற்கை கோள் அனுப்பிய குஜராத் மாநில புகைபடம்: பிரதமர் மோடி பகிர்ந்தார்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை :’இஸ்ரோ’ நிறுவனம், சமீபத்தில் விண்ணில் செலுத்திய பி.எஸ்.எல்.வி., சி.54 ராக்கெட்டின் இ.ஓ.எஸ். 06 செயற்கைகோள் அனுப்பிய புகைபடத்தை பிரதமர் மோடி பகிர்ந்து வீடியோவாக வெளியிட்டுள்ளார். புவியை கண்காணிக்கும் இ.ஓ.எஸ்., – 6 உட்பட ஒன்பது செயற்கைக் கோள்களை, பி.எஸ்.எல்.வி., – சி54 ராக்கெட் கடந்த நவம்ப 26-ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ. ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – … Read more