பிரான்சில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

பிரான்சில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துவருவதாக அரசு தெரிவித்துள்ளது. கோவிட் தொடர்பில் பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ள தகவல் பிரான்சில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. ஏழு நாட்களில் சராசரியாக எத்தனை பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது என்னும் எண்ணிக்கை, நவம்பர் மாத துவக்கத்தில் நாளொன்றிற்கு 25,000க்கும் குறைவாக இருந்தது, இந்த திங்கட்கிழமை நிலவரப்படி 44,000ஐத் தாண்டிவிட்டது. Credit: AFP Photo  ஆனாலும், மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களில் … Read more

தமிழக டிஜிபியுடன் என்ஐஏ இயக்குனர் திடீர் ஆலோசனை…

சென்னை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உடன் என்.ஐ.ஏ இயக்குநர் தின்கர் குப்தா இன்று அதிகாரிகள் சென்னையில்  சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியை மத்தியஅரசு தடை செய்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் பெட்ரோல் குண்டு வீசி பதற்றத்தை உருவாக்கினர். அதைத்தொடர்ந்து, கோவையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது தொடர்பான விசாரணையில், பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் … Read more

பனிப்பொழிவு, தொடர்மழை காரணமாக சத்தியமங்கலம் மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஈரோடு: சத்தியமங்கலம் மலர் சந்தையில் பனிப்பொழிவு, தொடர்மழை காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோவுக்கு ரூ.1,300 உயர்ந்தது ரூ.2,892-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நெல் கொள்முதல் முறைகேடு: திமுக பிரமுகர், விஏஓ என மேலும் 2 பேர் கைது! – வேலூர் சிபிசிஐடி அதிரடி

நெல் கொள்முதல் முறைகேடு வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி, அதில் தொடர்புடைய நபர்கள்மீது கைது நடவடிக்கை எடுத்துவருகிறது வேலூர் சி.பி.சி.ஐ.டி போலீஸ். கடந்த ஓராண்டுக்கு முந்தைய ‘காரீப்’ பருவத்தின்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விவசாயிகளிடமிருந்து குறைந்தளவே நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக, வியாபாரிகள் மற்றும் ஏஜென்டுகளிடமிருந்து அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றை விவசாயிகளிடமிருந்து வாங்கியதைபோலவே உள்ளூர் விவசாயிகளின் பெயரில் போலியாக ரசீது தயாரித்தும் அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். நெல் கொள்முதல் இதற்கு உள்ளூர் … Read more

காதலியுடன் கண்காட்சிக்கு சென்ற இளைஞர்..தோழிகளுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய மற்றொரு காதலி..வைரலாகும் வீடியோ

இந்திய மாநிலம் பீகாரில் இளைஞர் ஒருவரின் காதலியை நான்கு பெண்கள் சேர்ந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இன்னொரு காதலி பீகார் மாநிலம் சோன்பூரில் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் கண்காட்சிக்கு சென்றுள்ளார். அங்கு வந்த அவரது இன்னொரு காதலி தனது காதலனுடன் இளம்பெண் இருப்பதைக் கண்டு கோபமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில், தனது மூன்று தோழிகளுடன் சேர்ந்து காதலருடன் வந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். அவரது தலைமுடியைப் … Read more

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டதுடன், ஊழல் வழக்கு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க. அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  தரப்பில் வழக்குகள் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றத்தில் … Read more

தண்டையார்பேட்டை சீதாராம் நகர் மயான பூமி பராமரிப்பு பணி காரணமாக மூடல்

சென்னை: தண்டையார்பேட்டை சீதாராம் நகர் மயான பூமியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், பொதுமக்கள் முல்லை நகர் தகன எரிவாயு மேடையை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெறும் 01.12.2022 முதல் 31.01.2023 ஆகிய நாட்களில் பொதுமக்கள் வார்டு-37க்குட்பட்ட முல்லை நகர் தகன எரிவாயு மேடையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

முதல்வர் பசவராஜ் டில்லியில் முகாம் | Dinamalar

டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, நேற்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து கலபுரகி, துமகூரு, விஜயபுரா ஆகிய மூன்று மாவட்டங்களில் மித்ரா திட்டத்தின் கீழ் மெகா ஜவுளி பூங்கா அமைக்கும்படியும்; 2 லட்சம் டன் அரிசி வழங்கும்படியும் வலியுறுத்தினார். பின், மத்திய தொழிலாளர் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவை சந்தித்து, பல்லாரியின் குடேகோட்டை கரடி சரணாலயம், பெலகாவியின் பீம்காட் வன விலங்கு சரணாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக … Read more

“15 வருஷமா துயரத்தை அனுபவிச்சிட்டு இருக்குறோம்!" – நிலம், பட்டாவுக்கு எங்கும் பழங்குடியின மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, ஆறுபாதி கிராமத்தில், செம்பனார் கோயில் காவல் நிலையம் எதிரே 12 பழங்குடியின குடும்பங்கள் சுமார் 15 வருடங்களாக வசித்து வருகின்றன. அவர்களுள் சிலருக்கு மட்டுமே அடையாள அட்டை, குடும்ப அட்டை இருக்கின்றன. ஒருவருக்குக்கூட ஓட்டுரிமை இல்லை. நிரந்தரமாக தங்க இடம்கூட இல்லாமல் இந்த மக்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதியில் வசிக்கக்கூடிய கலியமூர்த்தி என்பவர், “நாங்க 15 வருஷமா இங்கதான் தங்கி இருக்கோம். கிட்டத்தட்ட 15 … Read more

பணியின்போது ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவப்பணியாளர்கள்: 23 பேர் பலி, ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

பிரித்தானியாவில், கோவிட் பரிசோதனை செய்யும் ஆய்வகத்தில், பணி நேரத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஆய்வகப் பணியாளர்களால் 23 பேர் பலியானதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. 39,000 பேருக்கு தவறான கோவிட் பரிசோதனை முடிவுகள் ஆய்வகப் பணியாளர்களின் கவனக்குறைவால், கோவிட் பரிசோதனை செய்யும் தானியங்கி இயந்திரங்களில் ஏற்பட்ட பிரச்சினை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோவிட் நோயாளிகளுக்கு, கொரோனா தொற்று இல்லை என தவறான பரிசோதனை முடிவுகளைக் கொடுக்க காரணமாக அமைந்துள்ளது. மிகச்சரியாகக் கூறினால், 39,000 கோவிட் நோயாளிகளுக்கு, உண்மையில் … Read more