பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., சீராய்வு மனு தாக்கல்| Dinamalar

புதுடில்லி, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, ௧௦ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தி.மு.க., சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முற்பட்ட பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், ௧௦ சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் ௨௦௧௯ல் மத்திய அரசு சட்டம் இயற்றியது. இது, ௧௦௩வது அரசியல் சாசன சட்டத் திருத்தம் என்றழைக்கப்படுகிறது. ௩:௨ இந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த … Read more

66 மகாராஷ்டிரா கிராமங்கள் கர்நாடகா, குஜராத்துடன் இணையத் தீர்மானம்… மகாராஷ்டிராவுக்கு நெருக்கடி!

கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் பெலகாவி உட்பட சில நகரங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசு போராடி வருகிறது. இது தொடர்பாக மகாராஷ்டிரா அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறது. இதற்காக சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு எல்லை ஒருங்கிணைப்புக் கமிட்டியை மாற்றியமைத்தது. இதனால் மீண்டும் இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா அமைச்சர்கள் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் சம்புராஜ் தேசாய் ஆகியோர் இன்று பெலகாவி செல்வதாக அறிவித்திருந்தனர். ஆனால் அவர்கள் … Read more

உலகின் செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இலங்கைப் பெண்

2022ஆம் ஆண்டுக்கான உலகின் செல்வாக்குமிக்க நூறு பெண்கள் பட்டியலை பி.பி.சி. வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணும் இடம்பெற்றுள்ளார். அவரது பெயர், சந்தியா எக்னெலிகொட. மனித உரிமைகள் ஆர்வலர் சந்தியாவின் கணவரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Eknaligoda), இலங்கை அரசை கடுமையாக விமர்சித்த ஒரு பத்திரிகையாளர் ஆவார். 2010ஆம் ஆண்டு திடீரென மாயமானார் பிரகீத், வேறு வார்த்தைகளில் கூறினால், காணாமல் ஆக்கப்பட்டார். தன் கணவருக்காக நீதி கோரி போராடி வரும் சந்தியா, தன் கணவரைப்போலவே காணாமல் … Read more

புயல் எச்சரிக்கை எதிரொலி: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது பேரிடர் மீட்பு படை…

சென்னை: வங்கக்கடலில் உருவாகும் மான்டஸ் புயல் காரணமாக, சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், புயலால் பாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படும் 6 மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மாண்டஸ் புயலாக வலுபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளத. இதன் காரணமாக 7, 8, 9ந்தேதி வரை மழையும், பலத்த காற்றும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த உள்ளது. … Read more

கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வரை மாற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தர்ணா போராட்டம்

நாமக்கல்: கவிஞர் ராமலிங்கம் அரசினர் மகளிர் கல்லூரியின் முதல்வர் பால் கிரேஸ் என்பவரை மாற்றக்கோரி 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி நுழைவு வாயில் முன்பு திடீர் தர்ணா போராட்டம் ஈடுப்பட்டனர். வணிகவியல் துறை மாணவிகளுக்கு இன்டெர்ன்ஷிப் கையெழுத்து போட முதல்வர் பால் கிரேஸ் மறுப்பது, பேராசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

சூதாட்டத்தில் தன்னையே இழந்த பெண் 2 குழந்தைகளுடன் கணவர் தவிப்பு| Dinamalar

பிரதாப்கர் :உத்தர பிரதேசத்தில், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண், சூதாட்டத்தில் தன்னையே பணயம் வைத்து விளையாடி தோற்று வீட்டு, உரிமையாளருடன் வசிக்கத் துவங்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.,யின் நாகர் கோட்வாலி மாவட்டம் பிரதாப்கரில் வாடகை வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வசிப்பவர் ரேணு. இவரது கணவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேலை செய்கிறார். வீட்டு உரிமையாளருடன் பொழுதுபோக்குக்காக சீட்டு விளையாடத் துவங்கிய ரேணு, நாளடைவில் பணம் வைத்து விளையாட ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் இதற்கு அடிமையாகி விட்டார். கணவன் மாதந்தோறும் … Read more

உடலின் ராஜ உறுப்பு கல்லீரல்! அதை காக்கும் இயற்கை உணவுகள் இவைதான்

நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் முக்கியமானது தான்.. அதிலும் மிக முக்கியான உறுப்புகள் என்று பார்த்தால் அது கல்லீரல்.! நொதிகளை செயல்படுத்துவது, இரத்தத்தின் அழுக்கை நீக்குவது, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவது என நமது உடலில் பல இன்றியமையாத வேலைகளை செய்துவருகிறது கல்லீரல். கல்லீரலை காத்து பாதுகாப்பாக வைத்து கொள்ள சில உணவுகள் இருக்கின்றன. பீட்ரூட் பீட்ரூட்டை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பீட்ரூட் கல்லீரல் மற்றும் இரத்தம் இரண்டையும் சுத்தம் … Read more

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு…

சென்னை: இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் காவல்துறையினரின் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன், முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி  இடிக்கப்பட்டது. இந்த இடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நாளை முன்னிட்டு பயங்கரவாத அமைப்பினர் நாசவேளைகளில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இதையொட்டி, நாடு … Read more

திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது: மகா திபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தீபத் திருவிழாவையொட்டி கிரிவலப்பலத்தையில் பக்தர்கள் குவிந்துள்ளனர். மகா திபத்தை காண மலையில் ஏறுவதற்கு 2500 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைக்கு பிறகே மலையில் ஏற அனுமதி அளிக்கப்படும். நான்கு மாட விதிகளில் வளம் வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.