போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது

காங்கேயம்: காங்கேயத்தில் போலீசாரை மிரட்டிய பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். தாராபுரத்தில் இருந்து காங்கேயம் வந்த அரசு பேருந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக போலீசாருக்கும், பாஜக நிர்வாகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இரு தரப்பினரும் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சென்று போலீஸ் அதிகாரிகள் இரு தரப்பிலும் விசாரிக்கையில் இரு தரப்பினருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின் பாஜக மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன், நகர தலைவர் சிவபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் சிலருடன் … Read more

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது

நெல்லை: திருக்கார்த்திகையை முன்னிட்டு நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

“தமிழக ஆளுநர், பாஜக மாநில தலைவர் போல் செயல்படுகிறார்!" – எம்.பி ஜோதிமணி காட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கரூர் எம்.பி ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்ட முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்கள் செயல்படுவதன் விதம், நிறைவேற்றப்பட்ட பணிகள், கல்வி, சுகாதாரம், குழந்தைகள் மேம்பாடு, பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் … Read more

ஏலியன் தாக்குதல் முதல் ஆய்வகக் குழந்தைகள் வரை: 2023க்கான பாபா வாங்காவின் பயங்கரமான கணிப்புகள்!

2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது, வரவிருக்கும் 2023-ஆம் ஆண்டிற்காக உலகம் உற்சாகமாக இருக்கிறது. புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மக்கள் 2023-ஐத் தழுவக் காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆண்டிற்கான சில கணிப்புகள் மிகவும் பயமாக இருக்கிறது. பொதுவாக பாபா வங்கா என்று அழைக்கப்படும் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா, 2023 ஆம் ஆண்டு இருண்டதாக இருக்கும் என்று கணித்திருந்தார். வேற்றுகிரகவாசிகளின் வருகைகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகள் சாத்தியமாகும் என அவரது கணிப்பு கூறுகிறது. 9/11, வட கொரியாவுடனான பதட்டங்கள், … Read more

டிசம்பர் 06: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பயங்கரவாதிகளின் ஹிட் லிஸ்ட் அச்சத்தில் காஷ்மீரி பண்டிட்கள்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஜம்மு: பயங்கரவாதிகள் புதிதாக ‘ஹிட் லிஸ்ட்’ வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சத்தில் உள்ளனர். பிரதமர் மறுவாழ்வு திட்டத்தின் கீழ், காஷ்மீரி பண்டிட்கள், ஜம்மு – காஷ்மீரில் பல இடங்களில் அரசுப் பணியில் அமர்த்தப்பட்டனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக காஷ்மீரி பண்டிட்களை குறிவைத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, காஷ்மீர் பள்ளத்தாக்கில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் காஷ்மீரி பண்டிட்கள் அச்சமடைந்தனர். தங்களை பாதுகாப்பான … Read more

என்ன நோய்… எந்த டாக்டர்? – 4 – பெண்கள்… பிரச்னைகள்… தீர்வுகள்… யாரிடம்?

குடும்பத்தில் யாருக்கு என்ன பிரச்னை என்றாலும் கவனிக்க முதல் நபராக நிற்பவள் பெண். அதுவே தனக்கு உடல்நலம் சரியில்லை என்றால் அதை கடைசியாகவே கவனிப்பவளாகவும் இருக்கிறாள், அதுவும் அந்தப் பிரச்னை முற்றியநிலையில்… ‘`குடும்பத்தில் பெண் தன் ஆரோக்கியத்தைச் சிறப்பாகப் பார்த்துக்கொண்டால்தான், அவளால் ஒட்டுமொத்த குடும்பத் தாரின் ஆரோக்கியத்தையும் கவனிக்க முடியும். எனவே ‘இது ஒன்றும் பெரிய விஷயமல்ல’ என எந்தப் பிரச்னையையும் பெண்கள் அலட்சியம் செய்யக்கூடாது’’ என்கிறார் சென்னை யைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் … Read more

திருமேனிநாதர் திருக்கோயில், திருச்சுழி

திருமேனிநாதர் திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், திருச்சுழி என்ற ஊரல் அமைந்துள்ளது. சிவபெருமான் பிரளய வெள்ளத்தைச் சுழித்து பூமிக்குள் புகச்செய்த இடம் என்பதால் இத்தலம் “சுழியல்” என வழங்கப்படுகிறது என்பது தல புராணத்தில் கூறப்படும் பெயர்க் காரணமாகும். சிவபெருமான் திருக்கயிலை மலையைக் காட்டிலும் சிறப்புடையது என்று கருதி இத்திருச்சுழியலில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் இத்தலத்திற்கு வந்துள்ளனர். சுந்தரர் இத்திருத்தலத்திற்கு வந்து வழிபட்டுத் திருமடத்தில் தங்கியிருந்துபோது இறைவன் அவரது கனவில் கையில் பொற்செண்டும், திருமுடியில் சுழியுமும் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,647,331 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.45 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,647,331 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 650,198,412 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 627,232,050 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,037 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திரு விழாவை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அருணாசலேஸ்வரர் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பரணி தீபம் ஏற்றினர். பரணி தீபம் ஏற்றும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலைத்துறை அதிகாரிகள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.