பஸ் – லாரி மோதல் உ.பி.,யில் 6 பேர் பலி

பஹ்ரைச், உத்தர பிரதேச நெடுஞ்சாலை ஒன்றில் பஸ் மீது லாரி மோதியதில், ஆறு பேர் பலியாகினர்; 15 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள லக்னோ – பஹ்ரைச் நெடுஞ்சாலையில், பஸ் மீது எதிரே வந்த லாரி நேற்று மோதியது. இந்த விபத்தில் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; 15 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், ஆபத்தான நிலையில் நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

`ரூ.786 கோடி நஷ்டம்…' – அம்மா உணவகங்களை மூட திட்டமா?!

சென்னையில் கடந்த 2013-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது கனவுத் திட்டமான ‘அம்மா உணவகம்’ என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது முதலில் 207 அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக சென்னையில் வார்டு ஒன்றுக்கு தலா 2 உணவகம், அரசு மருத்துவமனைகளில் 7 என மொத்தம் 407 இடங்களில்  திறக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 3,500 பேர் பணிபுரிகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கிட்டதட்ட 700 அம்மா உணவகங்கள் இயங்கி வருகிறது. அம்மா … Read more

6வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ‘மதரஸா ஆசிரியருக்கு’ 67வருடம் ஜெயில்! இது கேரளா சம்பவம்…

எர்ணாகுளம்: இஸ்லாமிய கல்விச்சாலையான மதரஸாவுக்கு படிக்க வந்த 6வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த மதரஸா ஆசிரியர் அப்துல் ஹக்கிம் என்பவருக்கு கேரள மாநில போக்சோ நீதிமன்றம் 67வருடம் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீப காலமாக நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்,  இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் நிறுவனங்களான மதராசா (Madrasa) எனும்  கல்விச் சாலையின் மீதும் ஏராளமான … Read more

சர்வதேச டெஸ்டில் நான்காவது இரட்டை சதம்! கிரிக்கெட் கடவுளின் சாதனையை சமன் செய்த ஸ்டீவன் ஸ்மித்

பெர்த் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் நான்காவது முறையாக இரட்டை சதம் விளாசினார். அதிக சதங்கள் சாதனை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணி 598 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. அந்த அணியின் லபுசாக்னே 204 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டீவன் ஸ்மித் மிரட்டலாக இரட்டை சதம் அடித்தார். அவர் 311 பந்துகளில் 16 பவுண்டரிகளுடன் 200 எடுத்து களத்தில் நின்றார். You CAN’T bowl there … Read more

செயற்கை அருவி வழக்கு: நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது: ஐகோர்ட் கிளை

மதுரை: செயற்கை அருவிகளை தடுக்க கோரிய வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை அருவிகள் குறித்து ஆய்வு செய்ய சுற்றுலாத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர் உள்பட 10 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்ற ஆணையை உடனே செயல்படுத்தி கண்காணிப்பு குழு அமைத்த தமழ்நாடு அரசின் செயல்பாடு பாராட்டத்தக்கது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இயக்குனர் பதவியில் இருந்து ஊடக தொழிலதிபர் விலகல்| Dinamalar

புதுடில்லி, என்.டி.டி.வி., நிறுவனத்தின் பங்குதாரர்களான ஆர்.ஆர்.பி.ஆர்., நிறுவனத்தை, அதானி குழுமம் கையகப்படுத்துவது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் இயக்குனர் பதவியில் இருந்து ஊடக தொழிலதிபர் பிரணாய் ராய், அவருடைய மனைவி ராதிகா ராய் விலகினர். புதுடில்லியை தலைமையிடமாக வைத்து செயல்படும், என்.டி.டி.வி., நிறுவனத்தை, பிரணாய் ராய், அவருடைய மனைவி ராதிகா ராய் நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனத்தின் ௨௯.௧௮ சதவீத பங்குகள், ‘ஆர்.ஆர்.பி.ஆர்., ஹோல்டிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்திடம் உள்ளது. இதன் இயக்குனர்களாக பிரணாய் ராய், … Read more

`ஜி20-க்கு தலைமையேற்ற இந்தியா' – காத்திருக்கும் சவால்கள் என்னென்ன?!

`உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இன்று (டிசம்பர் 1) இந்தியா ஏற்றிருக்கிறது. பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக உள்ள நாடுகள் முதல் உலகநாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியாவின் தலைமைத்துவம் அவற்றை எப்படி சமாளிக்கும்?’ ஜி-20 – இந்தியா ஜி-20 கூட்டமைப்பு: தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகளாவியப் பொருளாதார நெருக்கடியால், அமெரிக்கா, … Read more

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு

சென்னை: ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.560.30 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நிர்வாக அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கோவில்பட்டி, புதூர், மற்றும் விளாத்திகுளம் ஆகிய 6 பஞ்சாயத்து ஒன்றியங்களுக்குப்பட்ட 136 கிராம பஞ்சாயத்துகளில் … Read more

FIFA உலகக்கோப்பையில் நெகிழ்ச்சி: மனமுடைந்த ஈரான் வீரரை கட்டியணைத்து தேற்றிய அமெரிக்க வீரர்

FIFA உலகக்கோப்பையில் இருந்து வெளியேறுவதால் மனமுடைந்து கண்கலங்கிய ஈரானிய வீரரை அமெரிக்க வீரர் கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கத்தாரில் புதன்கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை ஆட்டத்தில் ஈரான் அணியை அமெரிக்கா 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இதனால் ஈரானின் FIFA உலகக் கோப்பை பயணம் முடிவுக்கு வந்தது. ஆனால், ஆட்டத்தின் முடிவில் அமெரிக்க வீரர் செய்த செயல் ரசிகர்களின் இதயங்களை வென்றது. உலகக் கோப்பையில் இருந்து வெளியேறுவதை தாங்கிக்கொள்ளமுடியாத ஈரானிய வீரர் ரமின் … Read more

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தமிழக அரசு பதலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. பரிசுத்தொகுப்பில் வழங்கக்கூடிய பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை கொள்முதல் செய்யப்படுமா? தமிழக விவ்சாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதா? எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.