மணலி அருகே ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை: மணலி அருகே ஆன்லைன் ரம்மியில் 50,000 பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மனைவி பெயரில், மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில்  தகவல் தெரியவந்துள்ளது.

`எதுவுமே நிஜமல்ல என்று நிரூபித்துக்காட்டினால்..!' – தொடரும் `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட சர்ச்சை

`தி காஷ்மீர் ஃபைல்’ – 2022 பிப்ரவரியில், இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே சர்ச்சைகள் தொடங்கின. மார்ச் 11, 2022 அன்று உலகம் முழுவதும் இந்தப் படம் வெளியான பிறகு பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. பிரதமர் மோடி உள்பட பா.ஜ.க-வினர் பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்த்தனர். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இந்தப் படத்துக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. எதிர்க்கட்சியினரோ, “இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பிரிவினையைத் தூண்டுகிறது இந்தப் படம்” எனக் குற்றம்சாட்டினர். படம் வெளியான சில … Read more

உலக கோப்பையில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்ஸி: சூப்பர் 16-க்கு அர்ஜென்டினா தகுதி

கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் போலந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி 0-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. போலந்து 0-2 அர்ஜென்டினா உலக கோப்பை கால்பந்து தொடரில் புதன்கிழமையன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போலந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் மோதின.  போட்டியின் தொடக்கத்தில் இருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய வந்த அர்ஜென்டினா அணி பலமுறை கோல்களை அடிக்க முயற்சித்தது. ஆனால் முதல் பாதியின் முடிவில் இரண்டு அணிகளுமே கோல் போடாததால், ஆட்டத்தின் … Read more

டிசம்பர் 1: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 194-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 194-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63 க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிச-01: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மாணவியரை வெளுத்த ஆசிரியை மீது வழக்கு| Dinamalar

ஹைதராபாத் தெலுங்கானாவில், மாணவியரை ஓட ஓட விரட்டி பிரம்பால் விளாசித் தள்ளிய ஆசிரியை மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தெலுங்கானாவில் காமரெட்டி மாவட்டத்தின் மட்னுார் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் ஒரு மாணவி, மொபைல் போனில் ஆசிரியையை படம் எடுத்தார். பின் அந்தப் படத்தை சமூக வலைதளத்தில், ‘போரிங் கிளாஸ்’ என தலைப்பிட்டு வெளியிட்டார். இந்த தகவல், ஆசிரியைக்கு நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, அவர் அந்த மாணவியுடன் அவருடைய வகுப்புத் … Read more

பூதநாராயணப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை

முன்னொரு காலத்தில் இப்பகுதியில் வசித்த விவசாயத் தம்பதியினர் சிவன் மீது தீவிர பக்தியுடன் இருந்தனர். தினமும் ஒருவருக்காவது உணவளித்து விட்டு, அதன்பின் சாப்பிடுவது அவர்களது வழக்கம். ஒருசமயம் சிவன் அவர்களது பக்தியை சோதிப்பதற்காக, எந்த சிவபக்தரையும் அவர் வீட்டுப்பக்கம் செல்லாதபடி செய்தார். எனவே, விவசாயி தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு உணவு கொடுக்கலாம் என்று நினைத்து, தன் மனைவியுடன் தோட்டத்திற்கு சென்றார். அங்கும் பணியாளர்கள் யாரும் இல்லை. எனவே அவர்கள் அங்கேயே காத்திருந்தனர். அப்போது, முதியவர் ஒருவர் வந்தார். … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,639,830 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.39 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,639,830 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 647,781,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 625,853,091 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 36,592 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு இல்லத்தில் போலி அதிகாரி தெலுங்கானா அமைச்சருக்கு சம்மன்| Dinamalar

புதுடில்லி, :புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் போலி சி.பி.ஐ., அதிகாரி கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தெலுங்கானா அமைச்சர் மற்றும் ராஜ்யசபா எம்.பி., ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சி.பி.ஐ., ‘சம்மன்’ அனுப்பியுள்ளது. புதுடில்லி சாணக்யபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு கடந்த 22ம் தேதி வந்த ஸ்ரீனிவாச ராவ் என்பவர், தான் சி.பி.ஐ.,யில் பணியாற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரி என அறிமுகப்படுத்தி அறை எடுத்து தங்கினார். அங்கிருந்து சிலரிடம் போனில் பேசிய ராவ், சி.பி.ஐ.,யில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமுகமாக முடித்து தருவதாகவும், … Read more

ராயல் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார் இளவரசர் வில்லியமின் ஞானமாதா: இனவெறி கருத்துக்கு மன்னிப்பு

இளவரசர் வில்லியமின் ஞானமாதா லேடி சூசன் ஹஸ்ஸி இனவெறி சர்ச்சைகளில் சிக்கி கொண்டதை தொடர்ந்து தனது அரச கடமைகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அரச சேவையில் இருந்து ராஜினாமா மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உதவியாளராக இருந்த 83 வயதான லேடி சூசன் ஹஸ்ஸி, லண்டனைச் சேர்ந்த சிஸ்டா ஸ்பேஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் என்கோசி ஃபுலானியிடம் இனவெறியுடன் பல கேள்விகளை கேட்டு சர்ச்சை வெளியானதை தொடர்ந்து தனது மன்னிப்பை சூசன் ஹஸ்ஸி கோரியுள்ளார். அத்துடன் புதன்கிழமையன்று பக்கிங்ஹாம் அரண்மனையில் அவர் … Read more