தனுசு செல்லும் புதன்! விபரீத யோகம் யாருக்கு? நாளைய ராசிப்பலன்

புதன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். தற்போது இவர் 03 ஆம் திகதி புதன் தனுசு ராசிக்கு செல்லவுள்ளார். இந்த டிசம்பர் மாதத்தில் புதன் இரண்டு முறை ராசியை மாற்றப் போகிறார். புதனின் இந்த இடமாற்றம் நாளைய நாள் யாருக்கு விபரீத யோகத்தை தரப்போகுது என்று பார்ப்போம்.   உங்களது இன்றைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW  மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு … Read more

மத்தியஅரசின் கேந்திர வித்யாலயா பள்ளியில் 13,404 காலிப்பணியிடங்களுக்கு விரைவில் ஆள்சேர்ப்பு!

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள  முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 13,404 பல்வேறு காலி பணியிடங்களுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கேந்திர வித்தியாலயா பள்ளிகளிலும்  1162 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்கள் நிரப்புவது  தொடர்பான அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், அதில் வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு … Read more

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் சேவை 3 நாட்களுக்கு நீட்டிப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் செல்லும் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அசாமை தொடர்ந்து, உத்தரகாண்டில் கொடூரம்… நிர்வாணப்படுத்தி, மதுகுடிக்க வைத்து ராகிங் கொடுமை

டேராடூன், நாட்டில் பல்கலை கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் ராகிங்கை கட்டுப்படுத்த 2009-ம் ஆண்டு, பல்கலைக்கழக மானிய குழு சார்பில் ஒழுங்கு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. ராகிங்கை தடுக்க கடுமையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளபோதும், சமீப நாட்களாக ராகிங் கொடுமைகள் வடமாநிலங்களில் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. அசாமில் திப்ரூகார் பல்கலை கழகத்தில் எம்.காம் படித்து வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் கடந்த 27-ந்தேதி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். … Read more

”லட்சுமியே இறுதியாக இருக்கட்டும், மீண்டும் ஒரு யானை வேண்டாம்!” – கோரிக்கை வைக்கும் புதுச்சேரி மக்கள்

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்களின் வருகைக்கு முன்பே,  அதாவது 1666-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுத்தலமாக இருந்து வரும் மணக்குள விநாயகர் கோயில், சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இந்தக் கோயிலின் மற்றொரு முக்கிய அம்சம் யானை லட்சுமி. 1997-ம் ஆண்டு தன் ஆறு வயதில் இந்தக் கோயிலுக்கு வந்த லட்சுமிக்கு, அக்டோபர் 2013-ல் புதுவை நகராட்சியால் உரிமம் கொடுக்கப்பட்டது. செப்பு பதக்கத்தால் செய்யப்பட்ட அந்த உரிமம் லட்சுமியின் கழுத்தில் ஆபரணமாக தொங்கிக் கொண்டிருந்தது. யானை லட்சுமி கடும் … Read more

நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி! மத்தியஅரசு தகவல்..

டெல்லி: நவம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.45 லட்சம் கோடி என்றும், இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தை விட 11 சதவிகிதம் அதிகம் என்றும் மத்திய அரசு  தெரிவித்து உள்ளது. ஒவ்வொரு மாதமும்  ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது.  அதன்படி கடந்த நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவல் வெளியிடப் பட்டு உள்ளது. நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் ரூ. 1,45,867 … Read more

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் டிஸ்சார்ஜ்

சென்னை; வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

‛‛வரும் ஓராண்டில் 200 ஜி20 கூட்டங்கள் நடைபெறும்: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்| Dinamalar

புதுடில்லி: வரும் ஓராண்டில் 200 ஜி 20 கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளையும் வெளிப்படுத்துவதாக இருக்கும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உலகில் பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த 20 நாடுகளில் கூட்டமைப்பான ஜி 20ன் தலைமைப்பொறுப்பை இந்தியா இன்று(டிச.,01) முறைப்படி ஏற்றுள்ளது. இதனை முன்னிட்டு பல்கலைக்கழகங்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது. இதில், நாடு முழுவதும் உள்ள 75 பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், பேராசிரியர்கள் , கல்வியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்டோர் … Read more

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு 10 ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் – காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி

மும்பை, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பத்து ரூபாய் வரை குறைத்திருக்க முடியும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கடந்த 6 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை 25 சதவிகிதம் குறைந்திருப்பதாகவும், ஆனால் மத்திய அரசோ பெட்ரோல், டீசல் விலையில் ஒரு ரூபாயைக் கூட குறைக்கவில்லை என்று கூறியுள்ளார். விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ள நிலையில், பிரதமர் தனது வசூலில் மூழ்கி இருப்பதாக விமர்சித்துள்ளார். தினத்தந்தி Related … Read more

ஏரியில் கட்டிய பண்ணை வீடு; பாடகரின் வீட்டுக்கு சீல் – அதிகாரிகள் அதிரடி!

சட்டத்திற்குப் புறம்பாக ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அகற்ற `நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குனரகம்’ (The department of town and country planning) தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி அப்பகுதியில் மூன்று பண்ணை வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதை கண்டறிந்த அதிகாரிகள், அவற்றுக்கு சீல் வைக்க மற்றும் இடிக்கத் திட்டமிட்டனர். இந்த மூன்று பண்ணை வீடுகளின் பட்டியலில், பஞ்சாபி பாடகரான தாலேர் மெகந்தியின் (Daler Mehndi) வீடும் ஒன்று உள்ளது என்பதை மூத்த … Read more