`பாரா ஒலிம்பிக் போட்டியில் வெல்வதுதான் கனவு' – சாதித்து வரும் மாற்றுத்திறன் பள்ளி மாணவி

விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஆர்.ஐ.சி.ஆர் அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகிறார் சுபஸ்ரீ. செவித்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி கடந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெற்றது. இதில், மாணவிகளுக்கான பிரிவில் 100, 200 மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும், நீளம் தாண்டுதல் போட்டியிலும் சுபஸ்ரீ முதலிடம் பிடித்து விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதோடு, நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியிருக்கிறார் தங்க பதக்கங்களுடன் மாணவி … Read more

தலையில் சுடப்பட்ட குண்டு வாயில் வழியே வெளியேறியும்…உயிர் பிழைத்தவர் கண்டு பிரமிக்கும் மருத்துவர்கள்

பிரேசில் நாட்டில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவரின் தலையில் சுடப்பட்ட குண்டு வாய் வழியாக வெளியேறியும் உயிர் பிழைத்து இருக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தலையில் சுடப்பட்ட குண்டு தெற்கு பிரேசிலின் பரானா மாகாணத்தில் உள்ள மரியால்வா என்ற பகுதியை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத 24 வயது இளைஞன், தனது நண்பர்களுடன் மதுபான ஆலைக்கு வெளியே ஒரு விற்பனை இயந்திரத்தில் நின்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த நின்ற நபர் ஒருவரால் தலையில் சுடப்பட்டார். இதனை பார்த்த … Read more

சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் 30 குற்றச்செயல் வழிமுறை விளக்கபுத்தகத்தில் மேலும் 3 செயல்கள் சேர்ப்பு

சென்னை: சைபர் குற்றவாளிகள் பயன்படுத்தும் 30 குற்றச்செயல் வழிமுறை விளக்கபுத்தகத்தில் மேலும் 3 செயல்கள் சேர்க்கப்ட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி வாயிலாக பண மோசடி, காவல் அதிகாரிகள் போன்று மிரட்டி பணம் பறிக்கும் மோசடி சேர்க்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக பணம் டெபிட் ஆனதாக கூறி மோசடி ஆகியவை விழிப்புணர்வு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முத்துவும் 30 திருடனும் என்ற விழிப்புணர்வு புத்தகத்தை சென்னை காவல்துறை நவம்பரில் வெளியிடப்பட்டிருந்தது.

மராட்டிய வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி; கர்நாடக பஸ்கள் மீது கருப்பு மை பூச்சு

புனே, கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சமீபத்தில் கர்நாடக – மராட்டிய எல்லை பிரச்சினை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதேபோல மராட்டிய மந்திரிகள் சந்திரகாந்த் பாட்டீல், சம்புராஜ் தேசாய் பெலகாவி சென்று, மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச உள்ளதாக அறிவித்தனர். இதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் மராட்டிய மந்திரிகள் பெலகாவிக்குள் நுழையவும் தடைவித்தது. இதனால் கடந்த சில நாட்களாக இருமாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் பெலகாவியில் … Read more

`பீர், ஒயின் குடிப்பதால் புற்றுநோய் ஆபத்து’ – புதிய ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

பீர், ஒயின் உள்ளிட்ட பல வகையான மதுபானங்களால் புற்றுநோய் அபாயம் ஏற்படும் என்று, புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. சில மதுபானங்கள் அழகுக்குக் கைக்கொடுக்கும், ஆரோக்கியத்துக்கு நல்லது என சிலர் இன்னும் நம்பிக் கொண்டிருப்பது கவலை அளிப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. புற்றுநோய் ஆபத்துக்குக் காரணம், ஒயின், பீர் என எல்லா மதுபானங்களிலும் சேர்க்கப்படும் எத்தனால் எனும் ரசாயனம் என்று குறிப்பிடுகிறது அந்த அறிக்கை. மார்பகம், வாய், பெருங்குடல் உட்பட ஏழு வகை புற்றுநோய்கள், மதுபானத்துடன் தொடர்புடையவை. … Read more

ஆட்டநாயகன் விருதை அவருக்கு தான் கொடுப்பேன்! வெற்றிக்கு பின் பேசிய நெய்மர்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், தான் இந்த ஆட்டநாயகன் விருதை இன்னொரு வீரருக்கு வழங்க வேண்டும் என்றால் அதை ரபின்ஹா-வுக்கு வழங்கி இருப்பேன் என தெரிவித்துள்ளார். காலிறுதிக்கு முன்னேறிய பிரேசில் கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலக கோப்பை 2022-ல் திங்களன்று நடந்த சூப்பர் 16 ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றதன் மூலம், காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. பிரேசில் அணிக்காக வினிசியஸ் … Read more

பாஜகவில் இருந்து விலகினார் திருச்சி சூர்யா சிவா….

சென்னை: பாஜக பெண் நிர்வாகியுடம் ஆபாசமாக பேசிய  ஆடியோ லீக்கானது தொடர்பாக கட்சியில் இருந்து தற்காலிக சஸ்பெண்டு செய்யப்பட்ட, திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனான சூர்யா, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.  மேலும்  மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்றினால் மட்டுமே பாஜக வளரும் என  குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், “அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . … Read more

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியை தழுவிய ஜப்பான் அணி வெளியேறியது

கத்தார்: குரோஷியா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற, உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் தோல்வியை தழுவிய ஜப்பான் அணி வெளியேறியது. 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்ததால், பெனால்டி ஷூட் அவுட்டில் 3-1 என வெற்றி பெற்று குரோஷியா அணி காலிறுதிக்கு முன்னேறியது.

போலி பலாத்கார வழக்கு, ரூம் போட்டு மிரட்டல்… ரூ.80 லட்சம் பறித்த பிரபல பெண் யூ-டியூபர் கைது

குருகிராம், டெல்லி ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்த பிரபல யூ-டியூபர் நம்ரா காதிர் (வயது 22). இவரது கணவர் மணீஷ் என்ற விராட் பெனிவால். நம்ரா யூ-டியூப்பில் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இவருக்கு 6.17 லட்சம் பின்தொடர்வோர் உள்ளனர். இந்த நிலையில், பாட்ஷாப்பூர் பகுதியை சேர்ந்த தனியார் விளம்பர நிறுவன உரிமையாளரான தினேஷ் யாதவ் (வயது 21) என்ற வாலிபர், நம்ரா மீது மிரட்டி பணம் பறித்தல் புகாரை போலீசில் அளித்து உள்ளார். இதன்படி, போலீசார் விசாரணை … Read more

`எலிகளை கொல்ல ரத்தவெறி கொண்ட ஆள்கள் வேண்டும்'; நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில மாதங்களாக எலி தொல்லை அதிகரித்துள்ளது. அதனால், எலியைக் கட்டுப்படுத்தவும், அவற்றை கூண்டோடு அழிக்கவும், அமெரிக்க அரசு தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.  Rat ஒரு எலி கூட இல்லாத ஆல்பர்ட்டா மாகாணம்; ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து சாத்தியமாக்கியது எப்படி? இந்நிலையில் நியூயார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் டிசம்பர் 1-ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில், ”எலிகளை கொல்பவர்களுக்கான வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், இவர்களுக்கு ஆண்டுக்கு 170,000 அமெரிக்க … Read more