ஏ என்ன பண்ற! தமிழக வீரரைப் பார்த்து கோபத்தில் கத்திய ரோகித் சர்மாவின் வீடியோ

வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வாஷிங்டன் சுந்தர் கேட்ச் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாததால்,கேப்டன் ரோகித் சர்மா கோபப்பட்ட நிகழ்வு நடந்தது. மிரட்டிய மெஹிதி ஹசன் டாக்கா ஒருநாள் போட்டியில், இந்திய அணி நிர்ணயித்த 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி வங்கதேச அணி ஆடியது. வங்கதேச அணி 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், மெஹிதி ஹசன் வெற்றிக்காக தனி ஆளாக போராடிக் கொண்டிருந்தார். எனினும் அவர் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசவும் தவறவில்லை. கேட்சை கண்டுகொள்ளாமல் நின்ற சுந்தர் போட்டியின் … Read more

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி!!

டாக்கா: இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கே.எல்.ராகுல் 73, ரோஹித் ஷர்மா 27, ஸ்ரேயாஸ் 24 ரன்கள் எடுத்தனர். வங்கதேசம் அணியில் ஷகிப் 5, ஹொசைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எல்லையில் சீனா தொடர் ஊடுருவல்; மத்திய அரசு அமைதி காக்கிறது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி, டெல்லியில் 24 அக்பர் சாலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டு குழு கூட்டம் அதன் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, எம்.பி. வேணுகோபால் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அசல் எல்லை கோட்டு பகுதியில் தொடர்ந்து சீனா படைகள் மற்றும் ஆயுதங்களை குவித்து வருகிறது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும், … Read more

வீட்டுப் படியிலிருந்து விழுந்த புதின்? – உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது புதினின் உடல்நிலைக்கு குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன. கடந்த சில மாதங்களாக, புதினின் கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வருவதாகவும், புதின் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தவாறே இருக்கின்றன. அதைத் தொடர்ந்து, புதினின் சமீபத்திய வீடியோக்களில் அவரால் சுயமாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கை கால்கள் உதறுவதாகவும், ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாகவும், இதனால் … Read more

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் வரைபடம் உள்ளிட்டவற்றுடன் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுமையாக கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

600 பேரை பணிநீக்கம் செய்த ஓயோ நிறுவனம் – பொருளாதார மந்தநிலை காரணமாக நடவடிக்கை

புதுடெல்லி, ஆன்லைன் ஓட்டல், விடுதி முன்பதிவு நிறுவனமான ஓயோ, தள்ளுபடி விலையில் அறைகள் வழங்கி மக்களிடையே மிகவும் பிரபலமான நிறுவனமாக உயர்ந்தது. இந்நிலையில் அண்மைக்காலமாக ஓயோ நிறுவனம் கடுமையான பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்யும் வகையில் ஓயோ நிறுவனம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து ஓயோ நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ரிதேஷ் அகர்வால் கூறுகையில், “திறமையான நபர்களை விட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்வடவசமானது. … Read more

தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. சிப்காட் இருந்தாலும், இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: தருமபுரி மாவட்டம் தொழில் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. சிப்காட் இருந்தாலும், இன்னும் பல தொழில்கள் இங்கு வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார். தமிழ்நாட்டில் நீர் மேலாண்மை திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

காரில் மலர்ந்த காதல்…! ஒரே நபரை திருமணம் செய்த இரட்டை சகோதரிகள் பிங்கி, ரிங்கி

மும்பை, மராட்டிய மாநிலம் சோலாபூர் மாவட்டம் மல்ஷிரஸ் பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் பிங்கி , ரிங்கி. 36 வயதான இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவர். பிங்கி, ரிங்கி சகோதரிகள் ஐடி துறையில் இன்ஜினியராக பணியாற்றி வருகின்றனர். இரட்டை சகோதரிகளான இருவரும் சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து வருவதால் இறப்பு வரை சேர்ந்தே வாழவேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதேபோல், ஒரே நபரை திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழ வேண்டும் என்றும் சகோதரிகள் முடிவு செய்துள்ளனர். … Read more

“அப்பாவும், சித்தப்பாவும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்!" – போலீஸில் புகாரளித்த 15 வயது சிறுமி

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசிப்பவர் பிரமோத் ஜோகிந்தர் சாஹு (48). இவரின் முதல் மனைவியின் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் மனைவி, மற்றும் முதல் மனைவியின் 15 வயது மகள், 4 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பிரமோத்தின் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் சிறுமியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், “கடந்த நவம்பர் 1-ம் தேதி என்னுடைய … Read more

கார்த்திகை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது

திருப்பரங்குன்றம்: கார்த்திகை தீபம் ஏற்ற தடையை மீறி சென்ற இந்து முன்னணியினர் 300 பேர் கைது செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியின் மீது கார்த்திகை தீபம் ஏற்றக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.