10 முக்கிய சாலை குறுக்குவெட்டு சாலைகளில் நவீன முறையில் வடிகால் பணிகள்! மாநகராட்சி அதிகாரிகள் தகவல்…

சென்னை: 10 முக்கிய சாலை குறுக்குவெட்டுகளில் நவீன முறையில் வடிகால் கட்டியுள்ளதால் நடப்பாண்டு சென்னையில் மழைநீர் தேங்காது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். சென்னை வரலாற்றில் முதன்முறையாக சாலையை கடக்கும் வகையில், புதிய தொழில் நுட்பத்துடன், கால்வாய்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர். கடந்த ஆண்டு மழைநீர் தேங்கிய புளியந்தோப்பு உள்பட முக்கிய 10பகுதிகளில்,  சாலை குறுக்குவெட்டுகளில் முன் தயாரிக்கப்பட்ட கான்கிரீட் ஆர்சிசி கல்வர்ட் பாக்ஸ்களைக் கொண்ட ரெடிமேட் பெட்டிகளைக்கொண்டு நூதன முறையை கையாண்டு, … Read more

நெல்லை மாவட்டத்தில் உள்ள 40 குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்க இடைக்கால அனுமதி

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளில் 40 குவாரிகளில் கற்கள் வெட்டி எடுக்க இடைக்கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி கனிமவளத்துறை இயக்குனர் அனுமதி வழங்கியுள்ளார்.

கொசு மருந்தடிக்கும் பணியின்போது விபத்துக்குள்ளானவர் உயிரிழப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன். கொசு ஒழிப்பு தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்ததாகக் கூறப்படும் இவர், கடந்த மாதம் 23-ம் தேதி ராதாபுரம் பகுதியில் கொசு ஒழிப்பு மருந்தடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வெடித்து தீ விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சாலை மறியல் கடந்த 20 தினங்களாக தீவிர சிகிச்சை பெற்று … Read more

மாணவர்கள் கண்டுபிடித்த ரோபோ மூலம் ஆயுத பூஜை கொண்டாடிய விஐடி – வீடியோ

வேலூர்: வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கண்டுபிடிப்பில் உருவான ரோபோ மூலம் இன்று ஆயுத பூஜை விழா நடை பெற்றது இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும்  இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்தியின் 9ஆம் நாளான நவம திதியில் வழக்கம்போல் ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 4.38 மணிக்கு நவம திதி தொடங்கிவிட்டது. இன்று பிற்பகல் 2.21 … Read more

இல.கணேசன் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன்; முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது;  உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் திரு. இல.கணேசன் அவர்களைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட விழைகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்; பொதுவிவாதம் கோரும் சசிதரூர்… தவிர்க்கும் கார்கே! – பின்னணி என்ன?

கடைசியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் நேரு குடும்பத்தின் ஆதரவுபெற்ற வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே களம் காண்கிறார். காங்கிரஸின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான சசிதரூரும் போட்டியில் இருக்கிறார். அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இவர்கள் இருவரும் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். மல்லிகார்ஜுன கார்கே ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகிய இருவரின் அரசியல், சமுகப் பின்னணி வெவ்வேறானவை. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, அரசியலில் … Read more

95% பணிகள் முடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி; ஆனால் மதுரை எய்ம்ஸ்…?

சென்னை: தமிழ்நாட்டில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் நடைபெறாத நிலையில், 95% பணிகள் முடிந்த  இமாச்சல் பிரதேசத்தின் பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை பிரதமர் மோடி  நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  திரு ஜெ பி நட்டா சொன்ன 95 சதவிகிதப்பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில் தான் நடந்துள்ளது என்பதை அண்ணாமலை அறிக என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் டிவிட் பதிவிட்டுள்ளார். உயர் மருத்துவ சிகிச்சை வழங்கும் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 1956ம் அண்டு தலைநகர் டெல்லியில் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று … Read more

“நட்டா தொகுதியில் திறக்கப்படவிருக்கும் எய்ம்ஸ்; ஆனால், மதுரையில் இன்னும்..!" – சு.வெங்கடேசன்

மதுரை மாவட்டம், தோப்பூரில் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். இதையடுத்து, இதன் கட்டுமானப் பணிகள் சுமார் 45 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் பெரிய அளவில் வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. உண்மையாகவே95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக் 5 ஆம் தேதி நாட்டுக்கு … Read more

இங்கிலாந்தில் வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்…

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் மூன்று நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலானதாக லைக்கா நிறுவனம் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிட்டிருந்தது. இந்திலாந்தில் மட்டும் இதுவரை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன் கமலின் விக்ரம் திரைப்படம் 7.7 கோடி ரூபாய் வசூல் … Read more

தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆபரேஷன் கஞ்சா வேட்டையில் கஞ்சா வியாபாரிகளின் 2,000 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 2,000 வங்கி கணக்குகளில் இருந்து சுமார் ரூ.50 கோடி மதிப்பிலான சொத்துக்கள், பணம் முடக்கப்பட்டுள்ளன.