ராஜஸ்தானில் தொடரும் சோகம்: குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலி 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதி…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில்  அசுத்தமான குடிதண்ணீர் குடித்த ஒருவர் பலியான நிலையில், 48குழந்தைகள் உள்பட 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவதில் மெத்தனம் காட்டுவதால், அங்கு வசிக்கும் மக்கள் அசுத்தமான தண்ணீரை குடித்து உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 25ந்தேதி அன்று  ராஜஸ்தானில் உள்ள சிறையில் உள்ள  தண்ணீரைக் குடித்ததால் 3 கைதிகள்  இறந்தனர், … Read more

புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் 384 குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட போஸ் நகரில் 384 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்புகளை காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார். மொத்தம் 647 பயனாளிகளுக்கு தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆணைகளை வழங்கினார்.

குஜராத் தேர்தல் வெற்றி கர்நாடகாவில் எதிரொலிக்கும்| Dinamalar

பெங்களூரு, : ”குஜராத் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கர்நாடகாவில் தாக்கங்களை ஏற்படுத்தும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார். அம்பேத்கர் 66வது நினைவு நாளை ஒட்டி, பெங்களூரு விதான் சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை மாலை அணிவித்தார். பின் அவர் கூறியதாவது: செழிப்பு, வளர்ச்சியை மக்கள் ஆதரிக்கின்றனர். பொய்யான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவில்லை என்பது தெளிவாகிறது. குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ., வெற்றி பெறும். பிரதமர் … Read more

பிக் பாஸ் 6 நாள் 58: ‘டாஸ்க் பண்ணலாம்; ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது' விக்ரமனை சீண்டிய ஏடிகே!

சினிமாத்துறையில் திடீரென ஒரு மேஜிக் நடக்கும். ஒரு நகைச்சுவைத் திரைப்படமோ அல்லது ஃபீல் குட் படமோ வெளியாகி பேயோட்டம் ஓடி வசூலை வாரிக் குவிக்கும். ‘அது ஏன் அப்படி ஓடியது?’ என்பது யாருக்கும் சட்டென்று விளங்காது. அதற்கான பல காரணங்களில் ஒன்றை யூகிக்க முடியும். அதற்கு முன்னால் ரத்தம் சொட்ட சொட்ட பல வன்முறைப் படங்கள் வந்திருக்கலாம் அல்லது காட்டமான மசாலாப் படங்கள் நிறைய வந்திருக்கலாம். பிக் பாஸ் 6 நாள் 58 கடுமையான கோடை வெப்பத்தின் … Read more

முட்டைகோஸ் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள்! இத்தனை நோயை தடுக்கும்

உலகின் பெரும்பாலான பகுதிகளில் கிடைக்கும் ஒரு உணவு பொருள் தான் முட்டை கோஸ். கி.மு.200 -ஆம் ஆண்டில் கிரேக்கர்கள், ரோமானியர்கள் பயன்படுத்தியிருப்பது வரலாற்றில் பதிவாயிருக்கிறது. முட்டைகோஸ் சுவையானது மட்டுமல்ல! உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்க கூடியதும் கூட..! முட்டைகோஸில் உள்ள பலவித சத்துக்கள் ஒரு கிண்ணம் முட்டைகோஸில் ஒரு நாளில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி யில் மூன்றில் ஒரு பாகம் கிடைக்கிறது. கோஸின் மேல்புறம் உள்ள பச்சை நிற இலைகளில் வைட்டமின் ஏயும் … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டு வழக்கு 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வழக்கு 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து,  ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில்  மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஓபிஎஸ் கோரிகை நிராகரிக் கப்பட்டு, 6ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கறாராக கூறியது. … Read more

எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது: கோவை செல்வராஜ் பேட்டி

எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆட்சி, சுனாமியை போல் தமிழ்நாட்டில் அழிவை ஏற்படுத்திவிட்டது என கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்த பின் செய்தியர்களுக்கு பேட்டியளித்த அவர்,  4 ஆண்டுகாலம் எடப்பாடி ஆட்சியை ஆதரித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இலவச பேருந்து பயணம் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.

அரசு பள்ளியில் உலக மண் தினம்| Dinamalar

பாகூர் : புதுச்சேரியில் கள அனுபவ பயிற்சி மேற்கொண்டு வரும் காரைக்கால் வேளாண் கல்லுாரி மாணவர்கள், குடியிருப்புபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு, உலக மண் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காரைக்கால் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு பயிலும் மாணவ மாணவியர் ஊரக விவசாயம் மற்றும் வேளாண் தொழில் பணி அனுபவ பயிற்சியின் ஒரு அங்கமாக இணை பேராசிரியர் ஆனந்தகுமார் தலைமையில் புதுச்சேரியில் பல்வேறு … Read more

`குழந்தையோடு தியேட்டருக்கு வர்றீங்களா?' கேரள அரசு அறிமுகப்படுத்திய `Crying room' வசதி!

குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரும் பெற்றோர்கள்  படத்தை முழுமையாக பார்ப்பது என்பது அரிதுதான். குழந்தைகள் பெரும்பாலும் தியேட்டருக்குள் இருக்கும் இருள், ஒலி, மற்றும் அங்குள்ள லைட்  செட்டப்புகளால் அசௌகரியமடைவதால் அழுகிற சூழலில் பெற்றோர்கள் படத்தை பார்க்க முடியாமல் வெளியே செல்ல நேரிடுகிறது.  இதனைக் கருத்தில் கொண்டு கேரள மாநிலத்தின் தலைநகரான  திருவனந்தபுரத்தில் உள்ள கைரளி- ஸ்ரீ- நிலா தியேட்டர் வளாகத்தில் அம்மாநில அரசு  ‘Crying Room’ என்ற புதிய அறையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்கள் அந்த … Read more

போர்ச்சுகல் கோல் மழை! ரொனால்டோவுக்கு மாற்றாக களமிறங்கி ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்… தாறுமாறு வெற்றி

கத்தார் கால்பந்து உலகக் கோப்பையில் போர்ச்சுகல் கோல் மழை பொழிந்து சுவிட்சர்லாந்து அணியை அபாரமாக வீழ்த்தியுள்ளது. அதன்படி 6-1 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி போர்ச்சுக்கல் அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. கன்கலோ ராமோஸ் இப்போட்டியில் ரொனால்டோ பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். பின்னர் மாற்று வீரராக (substitute) 20 நிமிடங்கள் களத்தில் கிடைத்தாலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். அவருக்கு பதிலாக கன்கலோ ராமோஸ் என்ற 21 வயது இளம் வீரர் களமிறங்கினார். போட்டி தொடங்கி விறுவிறுப்பாக … Read more