மனைவி, பிள்ளைகளுக்கும் வேலை! கனடாவின் அதிரடி நடவடிக்கை

கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க, திறந்த பணி அனுமதி (Open Work Permit) பெற்றவர்களின் உறவினர்களை வேலையில் அமர்த்த கனடா அனுமதிக்கவுள்ளது. கனடா, ஒரு முக்கிய நடவடிக்கையாக, தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வேலை அனுமதி தகுதி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தது. இந்தியர்கள் மற்றும் இலங்கையர்கள் இந்த நடவடிக்கை மற்ற வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து கனடாவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் இலங்கை தொழில் வல்லுநர்களுக்கு … Read more

சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை இறந்தது தொடர்பாக 2 மருத்துவர்களிடம் விசாரணை நிறைவு

சென்னை: சென்னையில் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை இறந்தது தொடர்பாக 2 மருத்துவர்களிடம் விசாரணை நிறைவுபெற்றது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்களிடமும் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. மருத்துவர்களிடம் மாணவி உயிரிழப்பு குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகள் வீடியோவில் பதிவிடப்பட்டன.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று ஒரே நாளில் 58,480 பக்தர்கள் சாமி தரிசனம்…!

சபரிமலை, கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் தினமும் வருகிறார்கள். நவம்பர் 16-ந் தேதி நடை திறந்த முதல் இன்று வரை 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இருப்பினும் கோவிலுக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், … Read more

'எட்டு வழி சாலைக்கு எதிராக முழங்கிய முதல்வர் இப்போது என்ன செய்கிறார்?' – கொதிக்கும் கோவை விவசாயிகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், அன்னூர் சுற்று வட்டார கிராமங்களில் தொழில் பூங்கா (சிட்கோ) அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘நமது நிலம் நமதே’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அன்னூரில் இருந்து கோவை புலியகுளம் வரை விவசாயிகள் நடைப்பயணத்தில் ஈடுபட்டனர். கோவை விவசாயிகள் நடைப்பயணம் `இது எங்க ஏரியா…’ – சொல்லியடித்த வேலுமணி… கோவை அதிமுக போராட்டக் கூட்டம் ரிப்போர்ட்! அதிகாலை பயணத்தைத் தொடங்கிய … Read more

டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும்: இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு

டெல்லி: டெல்லி மாநகராட்சி தேர்தலில் 149 முதல் 171 வார்டுகள் வரை ஆம் ஆத்மி கைப்பற்றும் என இந்தியா டுடே, ஆக்சிஸ் மை இந்தியா கணித்துள்ளது. 250 வார்டுகளை கொண்ட டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என கருத்து கணிப்பு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது மற்றும் பாஜக 69 முதல் 91 வார்டுகளையே கைப்பற்றும் எனவும் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல் குறித்து பா.ஜ., உயர் நிர்வாகிகள் கூட்டம்; பிரதமர் மோடி, நட்டா பங்கேற்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த பாஜ., உயர் நிர்வாகிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு தயாராவது குறித்து பாஜ., உயர் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், டில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று(டிச.,05) துவங்கியது. இந்த கூட்டம் இன்றும், நாளையும் நடைபெறும். குஜராத் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஆமதாபாத்துக்கு சென்றிருந்த பிரதமர் மோடி, … Read more

ஜி-20 ஷெர்பா கூட்டம்: பாரம்பரிய உடைகளை தேர்வு செய்து அணிந்து, மகிழ்ந்த வெளிநாட்டு குழு

உதய்ப்பூர், இந்தோனேசியாவின் பாலி நகரில் கடந்த நவம்பர் மாதம் 15 மற்றும் 16 ஆகிய 2 நாட்களில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டனர். 2-வது நாள் விழாவில், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம் இருந்து, ஜி-20 தலைமையை அதிகாரப்பூர்வ முறையில் பிரதமர் மோடி பெற்று கொண்டார். இதன் நிறைவு விழாவில் … Read more

ஆணாதிக்கத்தின் முதுகெலும்பை உடைக்கத் தவறிய `குஸ்தி!'

`ஆயிரம் பேசலாம். ஆனா, எல்லாம் ஆம்பளைக்கு கீழதான்’ என்கிற ஆணாதிக்க மனநிலை புரையோடிக்கிடக்கும் இந்தச் சமூகத்தில், `திருமணம்‘ என்பதையே ஒரு காரணமாகக் காட்டி பெண் நசுக்கப்படுவதையும், `குடும்பம்‘ என்பதற்காகவே அவளுடைய கனவுகள் பொசுக்கப்படுவதையும் பற்றிப் பேசிப் பேசி மாய்ந்துகொண்டுதான் இருக்கிறது இந்தச் சமூகம். ஆனால், தீர்வு என்ற ஒன்றை நோக்கி இச்சமூகம் நகர்வதாகவே தெரியவில்லை. இதற்கிடையில், இந்த விஷயம் தொடர்பாக பேசும் கட்டுரைகள், சீரியல்கள் மற்றும் சினிமாக்கள்தான் ஆறுதல். Gatta Kusthi குஸ்தி சண்டையில் சாதிக்க நினைக்கும் … Read more

மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடத்தில் செய்யப்படும் மாற்றம்

மன்னர் சார்லசுடைய முடிசூட்டு விழாவுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடம் ஒன்றில் மாற்றம் செய்யப்பட உள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க கிரீடம் வரலாற்றுச் சிறப்பு மிக்க புனித எட்வர்ட் கிரீடம், 350 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தில் மன்னர்களில் பதவியேற்பு விழாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முழுமையாக தங்கத்தால் செய்யப்பட்டுள்ள அந்த கிரீடத்தில் பல்வேறு விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மன்னருக்காக கிரீடத்தில் மாற்றம் அந்த கிரீடம், ராஜ குடும்ப நகைகள் வைக்கப்படும் Tower of London என்னும் மாளிகையில் வைக்கப்பட்டிருந்தது. … Read more

2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: 2001-02ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஜன.2ம் தேதி முதல் தேர்வு என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான அரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 9 மையங்களில் அரியர் தேர்வு நடைபெற உள்ளது.