30 நாடுகள், 120 குறும்படங்கள் – ஊட்டியில் குறும்பட விழா கோலாகலம்! என்ன ஸ்பெஷல்?

சுற்றுலா சிறப்பு வாய்ந்த நீலகிரியில் கலை ஆர்வம் கொண்ட சிலர் குழுவாக இணைந்து கடந்த சில ஆண்டுகளாகக் குறும்பட விழா நடத்தி வருகின்றனர். திரைப்படத்துக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் குறும்படங்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் நடத்தப்படும் இந்தக் குறும்பட விழாவில் உலகின் பல்வேறு நாடுகளில் சிறப்பு வாய்ந்த குறும்படங்களைத் திரையிட்டு வருகின்றனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த குறும்படங்கள் மற்றும் குறும்பட கலைஞர்களை ஊக்கப்படுத்தி அங்கீகாரம் அளித்து வருகின்றனர். ஊட்டி குறும்பட விழா இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான குறும்பட விழா … Read more

கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருந்த பொருட்கள்! அதிகாரிகளிடம் வசமாக சிக்கிய பெண்

சீனாவில் கர்ப்பிணி போல் நடித்து கணினி சிப்கள் மற்றும் மொபைல் போன்களை கடத்திய பெண்ணை பொலிஸார் கைது செய்தனர். சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜுஹாய் நகரத்தின் எல்லையை கடக்க முயன்ற அப்பெண், பார்க்க கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணி போல் பாரிய வயிற்றுடன் காணப்பட்டுள்ளார். சோதனை வழக்கமான எல்லை சோதனையின்போது, சுங்க அதிகாரிகளில் ஒருவர் அப்பெண்ணை விசாரித்தபோது, அவர் 6 மாத கர்ப்பம் என தெரிவித்துள்ளார். இதனால் சற்று சந்தேகமடைந்த அதிகாரிகள், அப்பெண்ணை முழுமையாக சோதனை … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் 16-வது சுற்று முதல் ஆட்டத்தில் அமெரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு நெதர்லாந்து அணி முன்னேறியது.

`ஆண்களின் பதவிகளில் பெண்களை ஏன் அமர்த்துகிறீர்கள்?' – 100 நாள் வேலைத்திட்டத்தில் பாகுபாடு புகாரா?

கிராமப்புற இந்தியாவில் `ஆண்களுக்கான வேலைகளைப் பெண்கள் எடுத்துக் கொள்கிறார்கள்’ என்று, ஆண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானைப் பொறுத்தவரைப் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. எனவே அங்குள்ள பெண்களுக்கு உறுதியான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில், பில்வாரா அரசு ஒரு செயல் திட்டத்தைக் கொண்டு வருகிறது. ஆண்கள் அதாவது, மத்திய அரசின் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ), 100 நாள் வேலைத்திட்டத்தில் உள்ள பணிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று கூறியுள்ளது. அதாவது இவ்வேலைகளில் மேற்பார்வையாளர் … Read more

பிரித்தானிய சிறார்களை காவுவாங்கும் கொடிய நோய்… பீதியில் குடும்பங்கள்: இதுவரையான பின்னணி

பிரித்தானியாவில் வேகமாக பரவும் கொடிய பாக்டீரியாவுக்கு இதுவரை 6 சிறார்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துவக்கப் பள்ளி சிறார்களில் பாக்டீரியா பாதிப்பு சதை உண்ணும் அந்த கொடிய பாக்டீரியாவுக்கு Strep A என பெயரிட்டுள்ளனர். பிரித்தானியா முழுமையும் துவக்கப் பள்ளி சிறார்களில் குறித்த பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 6 மரணங்கள் இந்த பாக்டீரியா தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. Image: Just Giving சர்ரே மற்றும் வேல்ஸில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் வைகோம்பில் உள்ள ஒரு … Read more

மும்பையில் 21மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் பாதிப்பில்லை…

மும்பை: மும்பையின் மலாட் பகுதியில் உள்ள  21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை உயிர் சேதம் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் மலாட் பகுதியில் உள்ள ஜான்கல்யான் நகரில் உள்ள மெரினா என்கிளேவ் எனப்படும் 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்படி, தீயை அணைக்கும் பணியில் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

ராகுல் காந்தி பாதயாத்திரையில் கலந்து கொள்ள சென்ற நபர் திடீர் மரணம்

போபால், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையில் ஈடுபட்டு உள்ளார். இந்த பாதயாத்திரை கடந்த மாதம் 23-ந்தேதி முதல் மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியின் காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக ராஜ்கார் மாவட்டத்தின் ஜிராப்பூர் பகுதியை சேர்ந்த மங்கிலால் ஷா (வயது 55) என்பவர் சென்றுள்ளார். அவர், அகர்-மால்வா மாவட்டத்தில் சூஸ்னெர் பகுதியில் நடந்த பாதயாத்திரையில் பங்கேற்க சென்றுள்ளார். … Read more

“ரூ.1,600 கோடியைத் தாண்டும் உண்டியல் வருமானம்" திருப்பதியில் அதிகரித்த பக்தர்களின் வருகை!

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்யும் தலமாக திருப்பதி விளங்குகிறது. அப்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கைகளை செலுத்துவது வழக்கம். ஏழை, நடுத்தர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை தங்கள் பணத்தை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். திருமலை திருப்பதி திருப்பதி கோயிலின் சொத்துமதிப்பு இவ்வளவா? வியக்கவைக்கும் வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்த தேவஸ்தானம்! கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் … Read more

நேருக்கு நேர் வந்து நின்ற ஏழு அடி உயர ஆவி… பிரித்தானிய குடும்பத்தை திணற அடித்த பேய் வீடு!

புதிய வாழ்வைத் துவங்கலாம் என ஆயிரம் கனவுகளுடன் பண்ணை வீட்டுக்கு குடிபுகுந்த ஒரு பிரித்தானியக் குடும்பம், அந்த குடும்பத்தில் இருந்த ஆவிகள் தொல்லையால் துவம்சம் செய்யப்பட்டிருக்கிறது. பிரித்தானியாவில், Brecon Beacons என்ற இடத்தில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றிற்கு தங்கள் பிள்ளைகளுடன் குடிபெயர்ந்தனர் Liz Rich, Bill தம்பதியர். பல அமானுஷ்யங்களைக் கொண்ட வீடு அவர்கள் அந்த வீட்டுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்தே பல அமானுஷ்யங்களை உணர்ந்திருக்கிறது அந்தக் குடும்பம். திடீரென காரணமே இல்லாமல் கரண்ட் பில் அதிகரிப்பது முதல், … Read more

ரஜினி ரசிகர்களை தெறிக்க வைத்த ‘பாபா’ ரீ-ரிலீஸ் டிரெய்லர்

ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி நடித்த பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆவதை அடுத்து அதன் டிரெய்லர் இன்று வெளியானது. லோட்டஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த் தாயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாபா. மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்தப் படம் கவுண்டமணி-யின் கவுண்டர்களால் அதகளப்பட்டது. 2002 ம் ஆண்டு வெளியான பாபா ரஜினி … Read more