மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிவு

மும்பை: மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிந்து 61,624 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் குறைந்து 18,329  புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 

மத்திய பிரதேசத்தில் குழந்தைகள் கட்டாய மதமாற்றம்; 10 பேர் மீது பாய்ந்தது வழக்கு

தமோ, மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்தில் உள்ள அனாதை இல்லங்கள் மற்றும் கிறிஸ்தவ மிசனெரிகளால் நடத்தப்படும் குழந்தைகளின் காப்பகம் ஆகியவற்றிற்கு, தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் தலைவர் பிரியங் கனூங்கோ நேற்றிரவு திடீர் ஆய்வுக்காக சென்றுள்ளார். அவரது வருகை பற்றி மாவட்ட அதிகாரிகளுக்கு மட்டும் தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. அவருடன் மத்திய பிரதேச மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையத்தின் உறுப்பினர் ஓம்கார் சிங் மக்ராம் மற்றும் உயரதிகாரிகள் பலர் சென்றுள்ளனர். இந்த ஆய்வில், கிறிஸ்தவ … Read more

சென்னை: வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வியாபாரி – சொத்துப் பிரச்னையால் நடந்த பயங்கரம்

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். அவர் இந்த பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். பொன்ராஜின் உறவினரான அந்தோணிராஜ் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர்கள் இருவருக்கும் நீண்ட நாள்களாகவே சொத்து பிரச்னை இருந்துவந்துள்ளது. உறவினர்களான இவர்கள் சமீபத்தில்தான் சொந்த ஊருக்குச் சென்று வந்துள்ளனர். அந்தோணிராஜ், பொன்ராஜ் இரண்டு தினங்களுக்கு முன்பு பொன்ராஜ், சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்தோணிராஜும் சென்னை வந்துள்ளார். சென்னை வந்தவர், பொன்ராஜின் வீட்டுக்குச் சென்று சொத்து பிரச்னை விவகாரம் … Read more

டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா! தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்சங்கம் அறிவிப்பு…

சென்னை: டிசம்பர் 13ந்தேதி மாநிலம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்தப்படும்என தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்து உள்ளது. தமிழகஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஒய்வூதியம் பணப்பலன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டம் அறிக்கப்படுவதும், பின்னர் பேச்சுவார்த்தை நடைபெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்க மறுத்ததால் மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. பின்னர், அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தை … Read more

10% இடஒதுக்கீடு தொடர்பாக சமூக அமைப்புகள் நாளை ஆலோசனை

சென்னை: உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சமூக அமைப்புகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளன. திராவிடர் கழகம் சார்பில் அனைத்து கட்சியினர், சமூக அமைப்புகள் பெரியார் திடலில் ஆலோசனை நடத்த உள்ளனர்.

35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூர காதலன்| Dinamalar

புதுடில்லி: காதலித்து லிவ்-இன் முறையில் வாழ்ந்து வந்தவர்களில் காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அவரை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்ததுடன், அருகில் உள்ள காட்டுப்பகுதியில் உடல் பாகங்களை வீசிய காதலனை போலீசார் கைது செய்தனர்.26 வயதான ஷ்ரத்தா மும்மையில் உள்ள ஒரு மல்டிலெவல் நிறுவனத்தின் கால் சென்டரில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு அப்தப் அமீன் பூனாவாலா என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகி பின்னர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு ஷரத்தாவின் பெற்றொர் … Read more

அசாமில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் பகுதியை சுற்றி வளைத்து என்கவுன்டர் – பாதுகாப்பு படை தகவல்

கவுகாத்தி, அசாம் மாநிலம் டின்சுகியா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது. டின்சுகியா மாவட்டத்தில் உள்ள பெங்கேரி-டிக்போய் சாலையில் உள்ள போர்பதர் பகுதியில் இந்திய ராணுவம், அசாம் மாநில போலீசார் மற்றும் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு இடையே என்கவுன்டர் நடந்து வருகிறது. இது குறித்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், டின்சுகியா மாவட்டத்தில் பெங்கேரி-டிக்போய் சாலையில் போர்பத்தர் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் என்கவுன்டர் தொடங்கியது. பாதுகாப்பு படையினரும், … Read more

T20 WC: உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்துக்கு பரிசு ரூ.13.84 கோடி; இந்தியாவுக்கு எத்தனை கோடி தெரியுமா?

கடந்த மாதம் 16 ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கிய 8-வது  T20 உலகக்கோப்பை தொடர் நேற்றோடு முடிவடைந்தது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் – இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. உலகக் கோப்பையை வென்ற ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு ரசிகர்கள், இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் சமூக … Read more

மகள் திருமணத்தில் நடனமாடி அசத்திய டொனால்டு டிரம்ப்: ஆச்சரியமூட்டும் வீடியோ காட்சி

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இளைய மகள் டிப்பனி டிரம்ப், தனது காதலர் மைக்கேல் பவுலோஸை திருமணம் செய்து கொண்டார். டிப்பனி டிரம்ப்-மைக்கேல் பவுலோஸ் திருமணம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பின் இளைய மகளான டிப்பினி டிரம்ப் (Tiffany Trump), தொழிலதிபர் மற்றும் லெபனான்-அமெரிக்கரான மைக்கேல் பவுலோஸ் (Michael Boulos) இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் தந்தையாகிய டொனால்டு டிரம்ப்பின் சொத்துகளில் ஒன்றான புளோரிடாவின் மார்-எ-லாகோ (Mar-a-Lago) பாம் பீச்சில் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு … Read more

வாரிசு படத்தின் விநியோக உரிமையை வாங்க ரெட் ஜெயண்ட் முயற்சி – உதயநிதி தகவல்

அஜித் நடிக்கும் துணிவு படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் உதயநிதி ஸ்டாலின், விஜய் நடிப்பில் வெளிவரும் வாரிசு படத்தின் சில ஏரியா உரிமையை வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். நவம்பர் 18 அன்று வெளியாக இருக்கும் கலகத் தலைவன் படத்தின் ப்ரோமோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி இந்த தகவலை கூறினார். துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாவதை உறுதி செய்தார். தவிர, வாரிசு படத்தின் சில ஏரியா உரிமை கிடைத்தால் … Read more