2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலை நாளை ஆலோசனை

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே பைக்கில் 4 பேர் பயணம் பஸ் மோதி 3 பேர் பலி| Dinamalar

ராய்ச்சூர் : நெல் அறுவடைக்காக ஒரே இருசக்கர வாகனத்தில் சென்ற, நான்கு பேர் மீது அரசு பஸ் மோதியது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். ஆந்திராவை சேர்ந்தவர்கள் நாகராஜா, 25; சீனு, 30; ஜெயபால், 27; ஸ்ரீகாந்த், 30. இவர்கள் நான்கு பேரும் நேற்று முன்தினம் நெல் அறுவடைக்காக ராய்ச்சூர் மாவட்டம்,மஸ்கி அருகே உள்ள குடதுார் கிராமத்துக்கு சென்றனர். நான்கு பேரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் அறுவடை இயந்திரத்துடன் சென்றனர். குடதுார் கிராமத்தின் அருகே இரவு … Read more

கோவை: கேள்வி எழுப்பிய மேயர்… போட்டுடைத்த அதிகாரி… சர்ச்சையில் திமுக கவுன்சிலர்கள்!

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், கடந்த சில நாள்களுக்கு முன்பு வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஆய்வு செய்துள்ளார். அப்போது அங்கு அனுமதி இல்லாமல் குப்பை அள்ளுவோர் குறித்து அதிகாரிகளிடம், ‘இதற்கு யார் பொறுப்பாளர்?’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதார அலுவலர் திருமால், குப்பைக் கிடங்கு கார்ப்பரேட் வேலைக்கு குட்பை… – கலைப்பொருள்கள் தயாரிப்பில் கலக்கும் கோவை பெண்! “இதை ஒழுங்குப்படுத்த முன்பே செந்தில் பாஸ்கர் என்ற உயரதிகாரிக்கு கடிதம் எழுதினேன். குப்பை … Read more

இன்று உருவாகிறது ‘மாண்டஸ்’ புயல்

சென்னை: ‘மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாண்டஸ் புயலாக வலுபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மாண்டஸ்’ புயல், தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள், தெற்கு ஆந்திரா மற்றும் புதுச்சேரி கடலோரத்தை, நாளை காலை நெருங்கும். புயலின் நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து, இன்று அறிவிக்கப்படும்.இன்று பல இடங்களில் மிதமான மழை … Read more

கொடிய Strep A பாதிப்பால் சிறுமி அவஸ்தை: பிரித்தானிய மருத்துவமனை தொடர்பில் தாயாரின் குமுறல்

பிரித்தானியாவில் மருத்துவமனை ஒன்றில் உயிர் காக்கும் மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக Strep A தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமியின் தாயார் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுவரை 9 சிறார்கள் மரணம் பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 சிறார்கள் மரணமடைந்துள்ள நிலையில், தாயார் ஒருவரின் வெளிப்படுத்தல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. Credit: Ben Lack தமது 9 வயது மகள் எல்லா Strep A தொற்றால் பாதிக்கப்பட்டு வெஸ்ட் யார்க்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட … Read more

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை அறிவுறுத்தல்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதிதாக புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

ஒன் பை டூ: பிரதமரின் தமிழக வருகை பாதுகாப்பு விவகாரம்… அரசியல் செய்கிறதா பா.ஜ.க?

வினோஜ் பி செல்வம், மாநிலச் செயலாளர், பா.ஜ.க “பிரதமர் மோடி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அவரின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டியது மாநில அரசின் பொறுப்பு. தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த ஒரு சம்பவத்தால் தமிழக காவல்துறைக்கு ஏற்பட்ட களங்கம் பல ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை நீங்கவே இல்லை. தமிழகத்தின் மீது கொண்டிருக்கும் அளவுகடந்த அன்பு காரணமாக, பிரதமர் அடிக்கடி தமிழகத்துக்கு வருகிறார். அப்போதெல்லாம், பிரதமரைக் காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. … Read more

வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர்

வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி, இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள். பின்னர் மாலையைக் கழட்டி பூஜைக்கு கொடுத்து விடுவாள். பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார். ஒரு நாள் மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,649,180 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66.49 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,649,180 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 650,793,702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 627,514,971 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,137 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தங்கவயலில் ஒயின் திருவிழா| Dinamalar

தங்கவயல் : தங்கவயலில் வரும் 9 முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள்ஒயின் திருவிழா நடக்கிறது. தங்கவயல் பெமல் நகர் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில்ஒயின் திருவிழா நடக்கிறது. கர்நாடக அரசின தோட்டக் கலைத் துறை, திராட்சை உற்பத்தி மற்றும் ஒயின் வாரியம் சார்பில் இம்மாதம் 9 முதல் -11ம் தேதி வரை மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது. தினமும் காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை விழா நடக்கும். நுழைவு கட்டணம் 20 ரூபாய். … Read more