உலகக்கோப்பை கால்பந்து 2022: குரோஷியா ,பெல்ஜியம் அணிகள் மோதிய போட்டி 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு F-வில் உள்ள குரோஷியா  – பெல்ஜியம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் குரோஷியா அணியை 0-0 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

கடவுள் தான் சொன்னார்., 37,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்!

அமெரிக்காவில் 37,000 அடி உயரத்தில் வானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னுடன் சேர்த்து அனைத்து பயணிகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்து விதமாக நடுவானில் விமான கதவுகளை திறக்கமுயன்றுள்ளார். சனிக்கிழமையன்று, ஹூஸ்டனில் இருந்து ஒஹாயோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் நகரத்திற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் 34 வயது பெண்மணி ஒருவர் பயணித்துள்ளார். விமானம் நடு வானில் பறிந்து கொண்டிருந்த போது, அப்பெண் தனது இருக்கையில் இருந்து எழுந்து … Read more

உலகக்கோப்பை கால்பந்து 2022: கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வென்றது மொரோக்கோ அணி

உலகக்கோப்பை கால்பந்து 2022: 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பிரிவு F-வில்  உள்ள கனடா – மொரோக்கோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொரோக்கோ அணி வெற்றி பெற்றது.

ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ரூ.82 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்:

ராஞ்சி: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி பூஜா சிங்காலின் ரூ. 82 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. ஜார்க்கண்டில், சுரங்கத் துறை செயலராக உள்ள பூஜா சிங்கால், குந்தி மாவட்ட கலெக்டராக பதவி வகித்த போது, மஹாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக இரண்டு நாட்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான பூஜா சிங்கால், கடந்த மே … Read more

வழக்கறிஞர்களிடமிருந்து டிப்ஸ் பெற ஆடையில் QR code! – டவாலியை சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் நடவடிக்கை

வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் அன்பளிப்பாகப் பணம் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு. டெல்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற வழக்கறிஞர்களிடமிருந்து நீதிபதியின் டவாலி பேடிஎம் மூலம் பணம் வசூல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது. டவாலி அவர் தனது இடுப்பில் ஆடையுடன் சேர்த்து பேடிஎம்-க்கான QR code-ஐ வைத்திருந்திருக்கிறார். இதனைக் கவனித்த நீதிபதி அஜித் சிங், அவர் மீது கடிதம் மூலம் தலைமை நீதிபதிக்குப் … Read more

செல்லப்பிராணிகளுக்கான உணவை… பிரித்தானிய குடும்பங்கள் தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரித்தானிய குடும்பங்கள் பல செல்லப்பிராணிகளுக்கான உணவை உட்கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உணவை பொருளாதார நெருக்கடியால் அவதிப்படும் மக்களுக்கு போதிய உதவிகளை முன்னெடுக்கவும், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளாக சமுதாய பணிகளில் ஈடுபட்டுவரும் மார்க் சீட் என்பவர் தெரிவிக்கையில், @shutterstock பணவீக்கம் அதிகரித்துள்ளதால், இனி கொள்கைகள் என்பது மக்கள் மீது கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட இடங்கள் மீதல்ல என குறிப்பிட்டுள்ளார். கார்டிஃப், ட்ரோபிரிட்ஜ் பகுதியில் சமுதாய உணவுக் … Read more

தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் 2.50 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி

சென்னை: தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். தமிழ் இலக்கிய திறனறிவு தேர்வில் 2.50 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் மாணவிகளே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய விமான படை ஹெலிகாப்டர் தொழில்நுட்ப கோளாறால் அவசர தரையிறக்கம்

புனே, மராட்டியத்தின் புனே நகரில் இந்திய விமான படையை சேர்ந்த சேடக் ரக ஹெலிகாப்டர் ஒன்று இன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த நிலையில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளது என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, புனே மாவட்டத்தில் உள்ள பராமதி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹெலிகாப்டர் தரையிறங்கியது. இதனை விமான படையின் மக்கள் தொடர்பு அதிகாரியான விங் கமாண்டர் ஆஷிஷ் மோகே உறுதிப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் விமானி பாதுகாப்புடன் உள்ளார். இதனையடுத்து, சம்பவ … Read more

கிருஷ்ணகிரி: புள்ளிமானை வேட்டையாடி சமைத்த கும்பல்! – ரகசிய தகவலால் கைதுசெய்த வனத்துறை

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த குடிசலுார் கிராமத்தில், சிலர் மான்கறி சமைப்பதாக, வன உயிரினக்காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் தலைமையிலான வனத்துறையினர், இன்று மாலை, ‘ஒசூர் கோல்டு ஃபார்ம்’ என்ற பண்ணையில் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு தங்கியிருந்த மூன்று பேர், மான் கறியை மசாலா தூக்கலாக சமைத்துக்கொண்டிருந்தனர். புள்ளி மான் அவர்களைப் பிடித்து விசாரித்ததில், கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (43), … Read more