"என் மனைவியைக் கொன்றுவிட்டேன்" போனில் பொலிஸாருக்கு ஷாக் கொடுத்த நபர்

இந்திய தலைநகர் டெல்லியில் மனைவியை கொலை செய்துவிட்டு பொலிஸாரை போனில் அழைத்த நபர் கைது செய்யப்பட்டார். டெல்லியின் ஹர்ஷ் விஹாரில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை காலை 8.10 மணிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய யோகேஷ் குமார் என்ற 35 வயது நபர் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக கூறி பொலிஸாருக்கு அதிர்ச்சியை கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடமான சுசீலா கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு விரைந்த பொலிஸ் குழுவினர், அங்கு அவரது … Read more

சவுதி அரேபியாவில் நாளை பொது விடுமுறை… அர்ஜென்டினா அணியை வீழ்த்தியதை கொண்டாடுகிறது…

உலக கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பாக்கப்படும் அர்ஜென்டினா அணியை 2 -1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா தோற்கடித்தது. 2019 ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை 36 போட்டிகளில் விளையாடியுள்ள அர்ஜென்டினா அணி இதில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. இந்த உலகக்கோப்பையில் முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்தது அர்ஜென்டினா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியபோதும் சவுதி அரேபிய அணி மீது பந்தயம் கட்டியவர்கள் $1 க்கு $21 என்ற கணக்கில் பணமழை பொழிகிறது. … Read more

வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு EV பைக் கான்செப்ட் விபரம் கசிந்தது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் electrik01 என்ற பெயரில் ஆரம்பகட்ட நிலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆரம்ப நிலை தயாரிப்பில் உள்ள இந்த மின்சார மோட்டார் பைக் பற்றி முதற்கட்டமாக புகைப்படம் கசிந்துள்ளது. Royal Enfield Electrik01 ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம்  “உயர்தரமான நவீனத்துவமான அம்சங்களுடன் மற்றும் “நியோ விண்டேஜ்/கிளாசிக்” ஸ்டைலிங் ஆகியவை அடங்கும். எல்லாவற்றிற்கும், முந்தைய நூற்றாண்டின் முதல் பாதியில் கிர்டர் ஃபோர்க் (girder fork) மிகவும் சிறப்பான ரெட்ரோ முறையீடு … Read more

திருவாரூர்: தாலிகட்டும் நேரத்தில் சைல்டுலைனுக்கு அழைத்து தன் திருமணத்தை நிறுத்திய சிறுமியின் துணிவு!

திருவாரூர் மாவட்டத்தில், ஒரு பெற்றோர் திருமண வயதை அடையாத நிலையில் தங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர். உறவினர்கள் கூடியிருக்க, மணமேடையில் மணமகன் தாலி கட்டும் நேரத்தில் கழுத்தில் கிடந்த மாலையை கழட்டி வீசிய சிறுமி, `எனக்குத் தாலி கட்டாதே…’ எனக் கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. முத்துப்பேட்டையில் திருமணத்தை நிறுத்திய சிறுமி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவருக்கு, அவரின் பெற்றோர் … Read more

மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன்! தந்தையின் நினைவிடத்தை தேடி சென்ற நபர் குறித்து முதலமைச்சர் டிவிட்…

சென்னை: மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன் என தந்தையின் நினைவிடத்தை தேடி மலேசியா  சென்ற நபர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் டிவிட் பதிவிட்டுள்ளார். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன் என தெரிவித்துள்ளார். தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் அவர்கள், தனது தந்தை இராமசுந்தரம் அவர்களின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து … Read more

உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டின் பெயர் மாற்றப்படும்: இந்து மகாசபை

லக்னோ: உத்திரபிரதேசம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டின் பெயர் மாற்றப்படும். மீரட்டின் பெயர் நாதுராம் கோட்சே நகர் என மாற்றப்படும் என்று  இந்து மகாசபை அறிவித்துள்ளது.

"தந்தையாகப் பதவி உயர்வு கிடைச்சிருக்கு!"- மகளுக்காக உயர்பதவி வேலையை ராஜினாமா செய்த தந்தை

ஒரு குழந்தையின் பிறப்பு என்பது பெற்றோரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணங்களில் ஒன்று. குழந்தை பிறந்த பிறகு பெற்றோர்கள் தங்கள் முழுக் கவனத்தையும் அவர்கள் மீது செலுத்த விரும்புவார்கள். ஆனால் அப்போது குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே விடுப்பு என்பது கொடுக்கப்படும். இதனால் குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாகத் தந்தைகளுக்கும் உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தனது செல்ல மகளைப் பார்த்துக் கொள்வதற்காக   மூத்த துணைத்தலைவர் பதவியை விட்டுவிட்டு தனது வேலையையும் ராஜினாமா செய்திருக்கிறார் ஐ.ஐ.டி. … Read more

FIFA உலகக் கோப்பை 2022: ரொனால்டோவின் சாதனையை சமன் செய்த மெஸ்ஸி!

சவுதி அரேபியா மற்றும் அர்ஜென்டினா இடையிலான இன்றைய ஆட்டத்தில் லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார். உலகக் கோப்பை சாதனை கட்டாரில் நடைபெற்றுவரும் FIFA உலகக்கோப்பை 2022 கால்பந்து போட்டியில், இன்று நடந்த ஆட்டத்தில் சவூதி அரேபியாவுக்கான அரேபியாவுக்கு எதிராக பெனால்டி ஷாட் மூலம் அர்ஜென்டினாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, போர்த்துகலின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை சாதனையை சமன் செய்தார். இன்றைய போட்டியில், மெஸ்ஸி அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடினார். … Read more

பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லஞ்சம் பெற்றதாக வழக்கு! வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லஞ்சம் பெற்றதாக  தொடரப்பட்ட வழக்கை, ரத்து செய்யக்கோரி, முன்னாள் துணைவேந்தர் கணபதி  தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி இருந்தபோது, பேராசிரியர்கள் நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து, அவர்மீது, ஊழல் தடுப்பு போலீசார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தன்மீதான வழக்கை   ரத்து … Read more