கனடாவுக்கு ஷாக் கொடுத்த அணி! கத்தார் உலக கோப்பையில் விறுவிறுப்பான போட்டி

கத்தார் உலக கோப்பை கால்பந்து தொடரின் போட்டியில் கனடாவை மொரோக்கோ அணி வீழ்த்தியுள்ளது. கனடா – மொராக்கோ 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற F பிரிவு ஆட்டத்தில் கனடா – மொரோக்கோ அணிகள் மோதின. இதில் கனடா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொரோக்கோ  அணி வெற்றி பெற்றது. கனடா அணி 2 போட்டிகளில் தோல்வியடைந்ததால், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. AP Photo/Alessandra … Read more

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது ஏன்? நீதிமன்றத்தில் வருமானவரித்துறை விளக்கம்…

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது ஏன்? என்பது குறித்து நீதிமன்றத்தில் வருமானவரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக கூறி, வருமான வரித்துறை கடந்த 2017 ஆம் ஆண்டு அவரது வீடு உள்பட அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், 2011-12-ம் ஆண்டு முதல் 2018-19ம் ஆண்டு வரைக்குமான 206கோடியே 42லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கியை … Read more

சென்னை வடபழனியில் மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்ததில் மாநகர பேருந்தின் முன்பக்கம் சேதம்

சென்னை : சென்னை வடபழனியில் மெட்ரோ பணியின் போது ராட்சத கிரேன் இடித்ததில் மாநகர பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்துள்ளது. கிரேன் ஆப்ரேட்டர் தூக்க கலக்கத்தில் இயக்கியதே காரணம் என தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தின்போது பயணிகள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

வேலூர்: ஒரு குடும்பத்துக்கே கொலை மிரட்டல்?! – திமுக ஒன்றியச் செயலாளர் மீது நில அபகரிப்புப் புகார்

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உட்பட்ட மெயின் பஜார் வீதியைச் சேர்ந்த அண்ணன், தம்பிகளான அரிநாராயணன், சரவணன், அசோக்குமார், அருண்குமார் ஆகிய நால்வரும் தங்கள் வீட்டுப் பெண்களுடன் வேலூர் எஸ்.பி அலுவலகத்திற்கு நேரில் வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். அதில், ‘‘எங்கள் தந்தையும், எங்கள் சித்தப்பாவும் கூட்டாகச் சேர்ந்து 22-03-1994 அன்று ஏரிபுதூர் கிராமத்தில் 7.45 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்தனர். அந்த நிலத்தை இத்தனை ஆண்டுகாலமாக நாங்கள்தான் அனுபவித்துவருகிறோம். இதுவரை எந்த இடையூறும் இருந்ததில்லை. … Read more

37 வயது வரை திருமணம் செய்து வைக்கல! நடிகர் ராஜ்கிரணின் 2வது மனைவியின் மகள் கண்ணீர்

நடிகர் ராஜ்கிரண் வீட்டில் உள்ள நகைகளை தன்னிடம் கொடுக்க வேண்டும் என அவரின் வளர்ப்பு மகன் ஜனத் ப்ரியா பொலிசாரிடம் கேட்டு கொண்டுள்ளார். காதல் திருமணம் தமிழகத்தின் திருச்சியில் உள்ள துறையூரைச் சேர்ந்த இளங்கோவன் பத்மஜோதி தம்பதியரின் மகள் ப்ரியா. கடந்த 2014 ஆம் ஆண்டு இளங்கோவனை பிரிந்த பத்மஜோதியை, நடிகர் ராஜ்கிரண் 2-வது திருமணம் செய்து கொண்டார். பத்மஜோதியை கதீஜா என்றும் வளர்ப்பு மகளான ப்ரியாவை ஜனத்ப்ரியா என்றும் அழைத்து வந்தார். பிரியா (37) சினிமா … Read more

சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் கோளாறு….

சென்னை:  இன்று காலை சென்னையில் இருந்து 139 பயணிகளுடன் தோகா புறப்பட்ட கத்தார் விமானத்தில் திடீர் இயந்திரக் கோளாறுஏற்பட்டது. இதையடுத்து விமானம் உடனே தரையிறக்கப்பட்டது. சென்னை இன்டர்நேஷனல் விமான முனையத்தில் இருந்து சுமார் 139 பயணிகள் மன்றும் விமான பணியாளர்களுடன் கர்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான விமானம், கத்தார் தலைநகர் தோகாவுக்கு புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது, விமான இயந்திரத்தில் கோளாறு இருப்பதை விமான கண்டறிந்தார். இதையடுத்து, 0/விமானி உடனே விமானத்தை தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து … Read more

குவாரி, குட்கா நிறுவனங்களிடம் இருந்து அதிமுக மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்: வருமான வரித்துறை தகவல்

சென்னை: குவாரி மற்றும் குட்கா நிறுவனங்களிடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. குவாரி நிறுவனங்களிடம் இருந்து ரூ.85.45 கோடியும், குட்கா நிறுவனங்களிடம் இருந்து ரூ.2.45 கோடியும் லஞ்சமாக விஜயபாஸ்கர் பெற்றுள்ளார். வங்கிக்கணக்குகள் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டதற்கு எதிராக ஐகோர்ட்டில் சி.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது. 2017 ஏப்ரலில் சி.விஜயபாஸ்கர் இல்லத்தில் நடந்த ஐ.டி. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் … Read more

சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி மருந்து குறிப்புகளை எடுத்து வர வேண்டுகோள்| Dinamalar

சபரிமலை, டிச. 2- சபரிமலை பக்தர்களுக்கு உதவ அதிவிரைவு ‘ஆம்புலன்ஸ்’ வசதி துவங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிகிச்சை குறிப்புகளின் நகல்களை கையில் வைத்திருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் மலைப்பாதைகளில் பயணிக்கின்றனர். இவர்களுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட உடல்நலக் குறைவு ஏற்படும் பட்சத்தில், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கும் வகையில் அதிவிரைவு ஆம்புலன்ஸ் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறுகலான பாதைகளில் செல்லும், ‘பைக் பீடர்’ ஆம்புலன்ஸ், கரடு முரடான பாதைகளிலும் பயணம் … Read more

Doctor Vikatan: தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு வாக்கிங் செல்வது சரியா?

Doctor Vikatan: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்துவிட்டு வாக்கிங் செய்வதுதான் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். நீங்களோ இதற்கு முன் ஒரு கேள்வியில், வெறும் வயிற்றில் வொர்க் அவுட் செய்யக்கூடாது என்று சொல்லி இருக்கிறீர்களே… எது சரி? -விகடன் வாசகர், இணையத்திலிருந்து பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஃபிட்னெஸ் பயிற்சியாளர் ஷீபா தேவராஜ் ஷீபா தேவராஜ் குறிப்பிட்ட நபரை வெறும் வயிற்றில் வாக்கிங் போகச் சொல்லி மருத்துவர் அறிவுறுத்துகிறார் என்றால் அதன் … Read more

குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டம்

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்குக் குறைந்தது ஒரு முறையாவது கூட வேண்டும் என்ற விதி உள்ளது. நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் நவ. மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும். இந்தாண்டு இமாச்சல பிரதேச மற்றும் குஜராத் சட்டசபைத் தேர்தல் காரணமாக இது சற்றே தாமதமானது. இந்தாண்டிற்கான குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் … Read more