“இனி ஏ.டி.எம்-ல் தங்க நாணயங்கள் வாங்கலாம்!" முதல் சேவை ஐதராபாத்தில் ஆரம்பம்!

பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் ஏடிஎம் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருப்போம். ஆனால் தங்கத்தை அளிக்கும் ஏடிஎம் – களை பார்த்திருக்கிறீர்களா?.. நாட்டிலேயே முதன்முறையாகத் தங்கத்தை வழங்கும் ஏடிஎம் இயந்திரத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த கோல்ட்சிக்கா (Goldsikka) என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. Goldsikka நிறுவனம் Opencube Technologies என்ற தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் உதவியுடன் ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட்டில் நாட்டின் முதல் தங்கம் வாங்கும் இயந்திரத்தை அமைத்துள்ளது. இந்த இயந்திரம் நாட்டின் முதல் தங்கம் வாங்கும் இயந்திரம் ஆகும். Goldsikka … Read more

இளவரசி கேட் மிடில்டன், மேகன் மார்க்கல் நேரடி மோதல்: நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தால் வெடிக்கும் அச்சம்

இளவரசர் ஹரி & மேகனின் புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணத் தொடர் அடுத்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியால் மேகன் மார்க்லேவுக்கும் இளவரசி கேட் மிடில்டனுக்கும் இடையே நேரடியான மோதல் ஏற்படும் என்ற அச்சம் வெளிவர தொடங்கியுள்ளது. நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம் பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. சுமார் 1 … Read more

மெட்ரோ ரயில் பணிக்காகக அடையாறு  ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு…

சென்னை: மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு  ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது  ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, சென்னை பசுமை வழிசாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை ஆற்றில் சுரங்கம் தோண்டப்படுகிறது. அடையாறு ஆற்றில் மிதவை படகில் இயந்திரம் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் … Read more

டெல்லி சாஸ்திரி நகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

டெல்லி: டெல்லி சாஸ்திரி நகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பயன்பாட்டில் இல்லாமல் இருந்த  கட்டடம் தானாக இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர், பொருள் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு ரொட்டிக்கு ஏன் யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து ? – பிரெஞ்சு கழி ரொட்டி புராணம் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஏழை மக்களின் மீது எவ்வித அக்கறையும் இல்லாத அரசியல்வாதிகளைச் சாட,  “ரொட்டி இல்லையென்றால் கேக்கை சாப்பிட சொல்லுங்கள்”  எனும் உதாரண வாசகம் அரசியல் அரங்கில் பயன்படுத்தப்படுவதுண்டு…  அந்த வாசகம் பிரெஞ்சுப் புரட்சியின் போது, மக்கள் ரொட்டி கூட கிடைக்காமல் பசியால் தவிக்கிறார்கள் என … Read more

கனடாவில் கேட்பாரற்று இருக்கும் ரூ.100 கோடிக்கும் அதிகமான பணம்! மொத்தமும் ஒருவருக்கு சொந்தம்

கனடா லொட்டரியில் $5 மில்லியன் பரிசு அதிர்ஷ்டசாலி ஒருவருக்கு விழுந்துள்ள நிலையில் இதுவரையில் யாரும் அதற்கு உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது. $5 மில்லியன் பிரிட்டீஷ் கொலம்பியாவின் ரிச்மண்டில் லொட்டோ 6/49 டிக்கெட்டுக்கு $5 மில்லியன் (ரூ.1,36,99,81,837.50) பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த பரிசு தொகை இதுவரை கேட்பாரற்று உள்ளது. ஆம்! பரிசு தொகைக்காக யாரும் இன்னும் உரிமை கோரவில்லை. saultonline அவகாசம் எவ்வளவு? லொட்டரி பரிசு வென்றவர்கள் தங்கள் பரிசைப் பெற 52 வாரங்கள் வரை … Read more

மீனவர்கள் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால், மீனவர்கள் நாளைமுதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் தமிழகஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கினாலும் டெல்டா மாவட்டம் உள்பட கடலோர மாவட்டங்களில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.  மேலும் சென்னை போன்ற பல நகரங்களில் தொடக்க காலத்தில் ஒருசில நாட்கள் மழை பெய்த நிலையில், கடந்த 10 நாட்களாக மழை ஏதும் இல்லாத நிலையே உள்ளது. இந்த … Read more

பொன்னேரி அருகே தனியார் சொகுசு பேருந்து, டேங்கர் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே தச்சூர் கூட்டுசாலையில் தனியார் சொகுசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேருந்து ஓட்டுநர் ஜானகிராமன் உயிரிழந்தார். 3 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கட்டட பணிகளுக்கு டில்லியில் தடை| Dinamalar

புதுடில்லி : புதுடில்லியில், நேற்று காற்று மாசின் அளவு மிகவும் மோசமான நிலையை எட்டியதால், அத்தியாவசியம் இல்லாத கட்டடப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் புதுடில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரி காற்றின் தரம் அளவு மிகவும் மோசமாகி,407 புள்ளியை எட்டியது.எனவே, காற்றின் தரம் குறித்து மதிப்பிட, மத்திய காற்று தரக் குழு நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில், காற்றின் தரம் மேலும் மோசமடைந்து விடாமல் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அத்தியாவசியம் … Read more

பாம்பு தீண்டி உயிரிழந்த தாய்; சோகத்திலும் கிராம உதவியாளர் தேர்வெழுதிய மகள்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள குருமலை வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவரின் மனைவி பசுபதி. இருவரும் விவசாயக்கூலி தொழிலாளர்கள்.  இவர்களுக்கு கனகரத்தினம் என்ற ஒரே மகள். கனகரத்தினத்தின் கணவர் இருளப்பன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவினால்  உயிரிழந்து விட்டார். இவர்களுக்கு 8-ம் வகுப்பு படித்து வரும் வசந்த் என்ற மகனும், 3-ம் வகுப்பு பயிலும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். கணவரை இழந்த நிலையில், கனகரத்தினம் தன் தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் … Read more