`திறந்தவெளி டாஸ்மாக் பார் ஆன திருவல்லிக்கேணி பஸ் ஸ்டாப்!' – நடவடிக்கை எடுப்பாரா எம்.எல்.ஏ உதயநிதி?

`பொது இடங்களில் மது அருந்துதல் சட்டப்படி குற்றம். ஆனால், அந்தக் குற்றம் சென்னை மாநகராட்சின் பல்வேறு இடங்களில் மிகவும் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக, டாஸ்மாக் கடை அமைந்திருக்கும் பகுதிகள், பார் வசதி இல்லாத டாஸ்மாக் கடை வீதிகள், அதன் அருகிலிருக்கும் பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என பொதுமக்கள் பெரும்பாலும் நடமாடும் இடங்களில், மதுப் பிரியர்களின் அட்டகாசங்கள் தலைதூக்கி வருகின்றன. மேலும், இதைக் கண்டும் காணாதபோல காவல்துறையினர் கடந்து செல்வதாக குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன’ டாஸ்மாக் பாரான திருவல்லிக்கேணி … Read more

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி செய்த கொடூர செயல்: பேய் வீடாக மாறிய பயங்கரம்

தன் கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தவறான உறவு இருப்பதை அறிந்த மனைவி, ஆத்திரம் கண்ணை மறைத்ததால் செய்த செயல், நாடே அவரது வீட்டை இன்று பேய்வீடு என அழைக்கும் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டது. கணவனைக் குறித்த நீண்ட நாள் உண்மை தெரியவந்ததால் ஆத்திரமடைந்த மனைவி மலேசியாவிலுள்ள Selangor என்ற இடத்தில், 19,000 சதுர அடி கொண்ட பிரம்மாண்டமான வீடு ஒன்றில் மனைவியுடன் வாழ்ந்துவந்தார் சஞ்சய் (Sanjay Gill). image – dailystar ஒரு கட்டத்தில், அவர் வேறொரு பெண்ணுடன் … Read more

ரஷ்யா – கிரிமியா இடையிலான பாலத்தின் மீது கார் ஒட்டிச் சென்ற ரஷ்ய அதிபர் புடின்… வீடியோ

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட கிரிமியா பாலம் வழியாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று கார் ஒட்டிச் சென்று ஆய்வு நடத்தினார். உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கிரிமியா-வை 2014 ம் ஆண்டு ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. 2018 ம் ஆண்டு ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையே கிரிமிய கடலில் 30000 கோடி ரூபாய் செலவில் 19 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் செல்ல பாலமும் ரயில் பாலமும் அமைக்கப்பட்டது. உக்ரைன் ரஷ்யா போரை அடுத்து தென்பகுதியில் உள்ள ரஷ்ய படையினருக்கு … Read more

சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர்: டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டு!

சென்னை: தாம்பரத்தில் பயணி ஒருவரிடம் இருந்து விலை உயர்ந்த ‘ஐ- போனை’ பறித்துக் கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்த திருடனை பெண் காவலர் காளீஸ்வரி மடக்கி பிடித்தார். சாதுரியமாக செயல்பட்டு செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர் காளீஸ்வரியை, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அலுவலகத்திற்கு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

ஜார்கண்ட்: உறவினரால் கொலை செய்யப்பட்ட நபர்; துண்டிக்கப்பட்ட தலையுடன் நண்பர்கள் எடுத்த செல்ஃபி

ஜார்கண்ட் மாநிலம், குந்தியில் வசிப்பவர் தேசாய் முண்டா. இவரின் குடும்பத்தாருக்கும், இவருடைய உறவினர் குடும்பத்தாருக்கும் நீண்ட காலமாக நிலத் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 1-ம் தேதி தேசாய் முண்டா வயலுக்கு சென்ற சமயத்தில் இவரின் மகன் கனு முண்டா வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். வயலில் வேலைகளை முடித்துவிட்டு, தேசாய் முண்டா வீட்டுக்கு வந்தபோது, கனு முண்டா வீட்டில் இல்லை என அக்கம் பக்கத்தினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும், கனு முண்டாவை அவரின் உறவினர் … Read more

கத்தார் உலகக்கோப்பையில் இளைஞரை முரட்டுத்தனமாக எட்டி உதைத்த கால்பந்து ஜாம்பவான்! அதிர்ச்சி வீடியோ

கத்தார் உலகக்கோப்பை மைதானத்திற்கு வெளியே முன்னாள் கால்பந்து ஜாம்பவான் சாமுவேல் எட்டோவோ நபர் ஒருவரை முரட்டுத்தனமாக எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமுவேல் எட்டோவோ Stadium 974 – ரஸ் அபு அபௌட் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இந்தப் போட்டியை முன்னாள் கேமரூன் ஜாம்பவான் வீரரும், தற்போதைய கேமரூன் கால்பந்து நிர்வாகத்தின் தலைவருமான சாமுவேல் எட்டோவோ கண்டு களித்தார். போட்டி முடிந்ததும் வெளியே … Read more

9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை! தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு…

சென்னை: முறைகேடாக நடந்துகொண்ட 9 வழக்கறிஞர்கள் பணியாற்ற தடை விதித்து சென்னை புதுச்சேரி பார் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தனது கட்சிக்காரரிடம் பெருந்தொகையை கையாடல் செய்ததாக கைது செய்யப்பட்ட நந்தகோபாலன், குழந்தை கடத்தல் வழக்கில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த பிரபு ஆகியோர் வழக்கறிஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்பது லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பணி நியமன உத்தரவு வழங்கியதாக … Read more

தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

சென்னை: தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளதால்  852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளனர். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற புகாரில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனையார்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது

பெங்களூரில் அதிர்ச்சி: இளைஞரை கல்லை போட்டு கொலை செய்த கும்பல்: வீடியோ வைரல்| Dinamalar

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெருவில், இளைஞர் ஒருவரை, ஒரு கும்பல் கல்லை போட்டு கொலை செய்யும் வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது. கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சடலத்தை மீட்டு, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அதில் இரவு நேரத்தில் வீடு ஒன்றில் அமர்ந்திருக்கும் … Read more