மன்னர் சார்லஸுக்கு தயாராகும் கிரீடம் | எலி பிடிக்க ஆள் தேடும் நியூயார்க் -உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. உலக மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 க்கான எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிருப்பதாக WHO தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 29,000 எம் பாக்ஸ் தொற்று உறுவானதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சுகாதார அவசரநிலை தற்போது முடிவுக்குக் கொண்டு வரப்படவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இங்கிலாந்து இளவரசர் வில்லியம் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். … Read more

மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மதத்தை வைத்து அரசியல் செய்கின்றனர் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் தமிழக கோயில்களில் 216 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடத்தப்பட்டது. சென்னை திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் பேசிய அவர், திமுகவின் சாதனைகளைப் பொறுக்க முடியாத சிலர் மதத்தை வைத்து அரசியல் செய்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு … Read more

வல்லூர் அனல் மின்நிலைய துணைமேலாளர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

திருவள்ளூர்: வல்லூர் அனல் மின்நிலைய துணைப் மேலாளர் பழனிச்சாமி வீட்டில் 120 சவரன் நகை கொள்ளைபடிக்கப்பட்டது. அனல்மின் மின்நிலைய ஊழியர்கள் குடியிருப்பில் பழனிச்சாமி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை அடித்துள்ளனர். 1 கிலோ வெள்ளி பொருட்கள் ரூ.35,000 ரொக்கத்தையும் கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.

தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை| Dinamalar

புதுடில்லி: இந்திய கடற்படை தினத்தை யொட்டி, டில்லியில் அமைந்துள்ள தேசிய போர் நினைவிடத்தில், கடற்படை தலைவர் ஆர்.ஹரிகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். இந்தியா- பாகிஸ்தான் போரின் போது அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் இந்திய கடற்படையின் வெற்றிகரமான நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் வகையில், 1972ஆம் ஆண்டு மே மாதம் நடந்த மூத்த கடற்படை அதிகாரிகள் மாநாட்டில், டிசம்பர் 4ஆம் தேதியை கடற்படை தினம் ஆக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை … Read more

Camel Beauty World Cup: கத்தார் கால்பந்து கோப்பைக்கு மத்தியில் கவனம் ஈர்த்த `ஒட்டக அழகுப் போட்டி'!

22 வது கால்பந்து உலகக்கோப்பை போட்டி கத்தாரில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு  நடத்தப்படும் ஒட்டக அழகுப் போட்டி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்போட்டி கத்தாரில் உள்ள ஆஷ்-ஷஹானியா என்ற பகுதியில்  ஜாயென் கிளப் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து கத்தார் ஒட்டகம் ஜாயென் கிளப் தலைவர் ஹமத் ஜாபர் அல்-ஆத்பா கூறும்போது, “உலகக்கோப்பை கால்பந்து போட்டி போன்று, நாங்கள் ‘ஒட்டக அழகு உலகக் கோப்பை’ போட்டியை நடத்தி வருகிறோம். வளைகுடா நாடுகளில் உள்ள ஒட்டகங்கள் இதில் கலந்துகொள்கின்றன. … Read more

அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவன் உயிரை காவு வாங்கிய விபத்து நடந்தது எப்படி? குடும்பத்தார் எழுப்பிய கேள்விகள்

அவுஸ்திரேலியாவில் விபத்தில் இலங்கையை சேர்ந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் 90 வயது பெண் ஏன் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டார் என குடும்பத்தார் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர். உயிரிழந்த இலங்கை சிறுவன் 12ஆம் ஆண்டு மாணவரான கல்வின் விஜிவீர (17) கடந்த வியாழக்கிழமை சாலையில் சென்ற போது 90 வயது மூதாட்டி ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியது. இதையடுத்து அவர் வேனுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இது குறித்து பேசிய கல்வின் சகோதரி ஒவிடி விஜிவீர … Read more

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சை, புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 16 மாவட்டங்களில் மிதமான மழிக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டங்கள் நடந்தது: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: காங்கிரஸ் தலைமையில் தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்டங்கள் நடந்தது என்று நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் கூட்டணிக்கு தலைமை காங்கிரஸ்தான், திமுக அல்ல என கூறியது பற்றி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி அளித்து வருகிறார். புதுசேரியில் 10% இட ஒதுக்கீடு தொடர்பான போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடந்தது என்று கூறியுள்ளார்.

முஸ்லிம் பார்முலாவை ஹிந்துக்களும் பின்பற்றலாமே! மக்கள் தொகை விஷயத்தில் அசாம் எம்.பி., சர்ச்சை| Dinamalar

குவஹாத்தி, ”முஸ்லிம்களைப் போல் ஹிந்துக்களும், தங்கள் பிள்ளைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்க வேண்டும். இந்த விஷயத்தில் முஸ்லிம்களின் ‘பார்முலா’ வை ஹிந்துக்களும் பின்பற்ற வேண்டும்,” என, அசாமைச் சேர்ந்த எம்.பி., பத்ருதீன் அஜ்மல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் பிரபலமான அரசியல்வாதியும், ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற கட்சியின் தலைவருமான பத்ருதீன் அஜ்மல் கூறியுள்ளதாவது: … Read more

`மாணவர்கள் நலனா… அரசியலா?' – மேட்டுப்பாளையம் அறிவு சார் மையம் விவகாரத்தில் மோதும் அதிமுக-திமுக

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சிகளில் அறிவு சார் நூலக மையம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. இதற்காக ரூ.1.87 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி மேட்டுப்பாளையத்தில், நகரவை மணிநகர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள பழைய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அறிவு சார் மையம் கட்ட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. மேட்டுப்பாளையம் மணிநகர் பள்ளி கோவை: பகையாளியைக் கொல்ல ஆன்லைனில் வெடிபொருள் வாங்கிய ஆசாமி கைது – சிக்கியது எப்படி?! ஆனால் நகராட்சி அ.தி.மு.க கவுன்சிலர்கள் … Read more