கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே பைக் குளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு..!!

குமரி: கன்னியாகுமரி மாவட்டம் பருத்திக்காட்டுவிளை அருகே பைக் குளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். குளத்தில் சகதியில் சிக்கி எல்லை பாதுகாப்புப் படை வீரர் கிருஷ்ணகுமார், நண்பர் அனுகுமார் உயிரிழந்தார்.

தென் கொரிய பெண்ணை சீண்டிய இரு இளைஞர்கள் மும்பையில் கைது

மும்பை, தென் கொரியாவைச் சேர்ந்த இளம் பெண்ணை, சாலையில் வைத்து பாலியல் ரீதியாக சீண்டிய இரு இளைஞர்களை, மும்பை போலீசார் கைது செய்தனர். கிழக்காசிய நாடான தென் கொரியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ‘யுடியூப்’ சமூக ஊடகத்தில், ‘வீடியோ’க்கள் பதிவிட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, மஹாராஷ்டிராவின் மும்பை நகருக்கு வந்தார். அதிர்ச்சி இங்கு கர் மேற்கு என்ற இடத்தில் சாலையில் நின்றபடி, யுடியூபில் நேரலையில் பேசிக் கொண்டிருந்தார். இதை 1,000க்கும் மேற்பட்டோர் பார்த்துக் கொண்டிருந்தனர். … Read more

மேக்ஸ் லைஃப் இன்சுரன்ஸ், சோழமண்டலம் எம்.எஸ் பாலிசிகள்: இனி டி.எம்.பி வங்கியிலேயே எடுக்கலாம்!

தனியார் துறை முன்னணி வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி (TMB) மேக்ஸ் லைஃப் இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் சோழமண்டலம் எம்.எஸ் பொது காப்பீட்டு நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தம் செய்துள்ளது. மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி சாராத தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளருக்கு காப்பீடுகளை வழங்கி வருகிறது. மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் ரூ.1,000 பொங்கல் பரிசு! குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கியில் செலுத்த பணிகள் தீவிரம்… சோழமண்டலம் எம்.எஸ் பொதுக் காப்பீட்டு நிறுவனம் … Read more

சுவிஸ் மக்கள் வீடு கிடைக்காமல் திண்டாடுவதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம்?

சுவிட்சர்லாந்தில், அந்நாட்டு மக்கள் வீடு கிடைக்காமல் தவிப்பதற்கு புலம்பெயர்ந்தோர்தான் காரணம் என ஒரு செய்தி உலவுகிறது. அது உண்மையா? சுவிஸ் மக்கள் கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி, சுவிட்சர்லாந்தில் மக்கள் வீடு கிடைக்காமல் தவிப்பதற்கு வெளிநாட்டவர்கள்தான் காரணம் என ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அக்கட்சி, சுவிட்சர்லாந்தில் நிலவும் பல பிரச்சினைகளுக்கும் சுவிட்சர்லாந்தில் வாழும் வெளிநாட்டவர்கள்தான் காரணம் என நீண்ட காலமாகவே குற்றம் சாட்டி வந்துள்ளது. சுவிஸ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டவர்கள் தட்டிப்பறித்துக்கொள்வதாகவும், … Read more

கார்த்திகை மகாதீபம்: மலையேற 2500 பேருக்கு அனுமதி – கோவிலுக்குள் செல்ல பாஸ் – 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

திருவண்ணாமலை: கார்த்திகை மகாதீபத்தன்று  மலையேற 2500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும்,  கோவிலுக்குள் செல்ல பாஸ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தீபத்திருவிழாவையொட்டி  12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். கார்த்திகை தீபத்திருவிழா  நவம்பர்  27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிறப்பாக  டிசம்பர் 6ந்தேதி 2668 அடி உயரமுள்ள மலை மீது  மகாதீபம் ஏற்றப்படும். இதையொட்டி,  அன்று அதிகாலை 4 … Read more

தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கு

மதுரை : தாமிரபரணி ஆற்றின் பெயரை பொருநை நதி என பெயர் மாற்றம் செய்யக்கோரிய வழக்கில் 12 வாரங்களுக்குள் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது.  

`விஜயபாஸ்கர் குட்கா, குவாரி நிறுவனங்களிடம் ரூ.87.90 கோடி லஞ்சம் பெற்றிருக்கிறார்!'-வருமான வரித்துறை

கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை, உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய அனுமதித்ததாகவும், அதற்காக பெரும் தொகை லஞ்சமாக வாங்கியதாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில், அப்போதைய காவல்துறை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் பெயரும் அடிபட்டது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி, தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பின்னர் உச்ச நீதிமன்றம் மூலம் சி.பி.ஐ வசம் சென்ற வழக்கில், குட்கா வியாபாரி மாதவ ராவ், … Read more

பிரித்தானிய பவுண்டு தரோம்… ரூபாய் கொடுங்க! சிக்கிய வெளிநாட்டு பெண் மற்றும் ஆண்

தமிழகத்தில் பிரித்தானியா பவுண்டுக்கு பதிலாக இந்திய பணம் கிடைக்குமா என கூறி மோசடிக்கு முயன்ற இரண்டு வெளிநாட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரித்தானிய பவுண்டுகள் பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் மற்றும் சித்தளி கிராமத்தில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்திலும் வெளிநாட்டைச் சேர்ந்த இருவர் அத்துமீறி அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்து பணியில் இருந்த பெண்ணிடம் தங்களிடம் பிரித்தானிய பவுண்டு உள்ளது அதற்கு இந்திய பணம் தர முடியுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு … Read more

ஆவண எழுத்தர்கள் நல நிதியம்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்..

சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து பணிபுரியும் ஆவண எழுத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்கள் நல நிதியம் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கான உறுப்பினர் அட்டையும் வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் (ம) அவர்களது குடும்பத்தினரின் நலனுக்காக ஆவண எழுத்தர்களின் நல நிதியத்தை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்து உறுப்பினர்களுக்கான அட்டைகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில், வணிகவரி அமைச்சர் மூர்த்தி, … Read more

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச ஐகோர்ட் தடை..!!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கில் தன்னை பற்றி அறப்போர் இயக்கம் பேச பழனிசாமி தடைகோரியிருந்தார். டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கம் ரூ.1.10 கோடி மானநஷ்ட தரக்கோரி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அறப்போர் இயக்கத்தின் செயல் அவப்பெயர் ஏற்படுத்தியதுடன் மனஉளைச்சலும் ஏற்படுத்தியுள்ளது என்று பழனிசாமி கூறினார்.