பயங்கரவாதிகளுக்கு எதிராக பாக்., உறுதியான நடவடிக்கை: இந்தியா வலியுறுத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளித்ததாக எப்.ஏ.டி.எப். அமைப்பின் குற்றச்சாட்டில் ”கிரே” பட்டியலிலிருந்த பாகிஸ்தான் அதிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைக்க செய்வதை தடுக்க ஆசிய பசுபிக் குழுக்களுடன் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்றும். ஏப்.ஏ.டி.எப்., அமைப்பின் ஆய்வு காரணமாக, மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் உட்பட பல முக்கியமான பயங்கரவாதிகள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை … Read more

`ஸ்பான்சர்ஸ் கிடைச்சா இன்னும் மேல போவோம்!’ – சர்வதேச கராத்தே போட்டியில் 4 தங்கம் வென்ற மாணவர்கள்

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் பகுதியில், கடந்த 16-ம் தேதி முதல் `உலக அளவிலான கராத்தே போட்டி’ நடைபெற்றது. இதில் மலேசியா, தாய்லாந்து, சவுதி அரேபியா, துபாய் உள்ளிட்ட பல உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் ‘எய்ம்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ சார்பில் 3 பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரு கல்லூரி மாணவி பங்கேற்றனர். தனித்தனி வயது மற்றும் எடைப்பிரிவில் பங்கேற்ற இந்த நால்வருமே தங்கப் பதக்கங்களை வென்று … Read more

ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கு 10வது முறையாக பரோலை நீட்டித்தது தமிழகஅரசு!

சென்னை; ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கு 10வது முறையாக பரோலை  தமிழகஅரசு நீட்டித்ததுள்ளது. இதனால்,கடந்த 8 மாதமாக சிறையில் இருந்து விடுபட்டு வீட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவரும் நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட  வழக்கில் 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும்  கடந்த  30 ஆண்டு களுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்தனர். இதில், பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் கருணையால், கடந்த … Read more

சென்னை அயப்பாக்கத்தில் தற்கொலை செய்த விசாரணை கைதி ராயப்பா ராஜுவின் பிரேத பரிசோதனை தொடங்கியது..!!

சென்னை: சென்னை அயப்பாக்கத்தில் தற்கொலை செய்த விசாரணை கைதி ராயப்பா ராஜு அந்தோணியின் பிரேத பரிசோதனை தொடங்கியது. மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக 3வது மாடியில் இருந்து குதித்து விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ராயப்பா உடலை அம்பத்தூர் நீதித்துறை நடுவர் பரம்வீர் பார்வையிட்டார்.

வளர்ச்சி பாதையில் இந்தியா: பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உலக நாடுகள் பொருளாதார சிக்கலில் தவிக்கும் நிலையில், இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.10 லட்சம் பேருக்கு பணி வழங்கும் ‘ரோஜ்கர் மேளா’ என்ற வேலைவாய்ப்பு முகாமை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைத்தார். இந்த முகமில் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: 10 லட்சம் … Read more

தொழில்துறையின் பிரபல பத்திரிகையாளர் விஸ்வநாதன் காலமானார்!

சென்னையில் இருந்து வெளியாகும் தொழில் துறை பத்திரிகையான ‘The Industrial Economist’ பத்திரிகையின் நிறுவனர் – ஆசிரியர் எஸ்.விஸ்வநாதன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. தொழில் துறை உலகில் உள்ள பத்திரிகையாளர்களில் மிகவும் முக்கியமானவர் விஸ்வநாதன். தனது 24 வயதில் ‘த இன்டஸ்ட்ரியல் எக்னாமிஸ்ட்’ என்கிற பத்திரிக்கையை பிசினஸ் மற்றும் இன்டஸ்ட்ரி தொடர்பான செய்திகளை மட்டும் வெளியிடுவதற்காகத் தொடங்கினார். லண்டனில் இருந்து வெளியாகும் ‘The Economist’ பத்திரிகையைப் படித்து, அதைப் போன்ற ஒரு பத்திரிகையை … Read more

கணவனையும் மைத்துனனையும் ஒன்றிணைக்க 'மாஸ்டர் பிளான்' போடும் கேட்! அமெரிக்காவில் தனிப்பட்ட சந்திப்பு

இளவரசி கேட் மற்றும் இளவரசர் வில்லியம் டிசம்பரில் அமெரிக்கா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளவரசி டயானாவும், ராணி இரண்டாம் எலிசபெத்தும் அதைத்தான் விரும்பியிருப்பார்கள் என்பது கேட்டுக்கு தெரியும். பிரித்தானிய அரச குடும்பத்தையும், இளவரசர் ஹரி மற்றும் வில்லியம் சகோதரர்களையும் மீண்டும் இணைக்க இளவரசி கேட் மிகப்பாரிய திட்டத்தை வைத்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வேல்ஸ் இளவரசி கேட், தனது கணவர் இளவரசர் வில்லியம் மற்றும் மைத்துனர் இளவரசர் ஹரிக்கு இடையே உள்ள இடைவெளியை உடைக்க ஆவலுடன் இருப்பதாக … Read more

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

பெர்த்: டி20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் பேட்டிங்கில் அதிகபட்சமாக லிவிங்ஸ்டன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பந்துவீச்சில் சாம் கரன் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

லஞ்சம் கேட்ட பெண் ஊழியர் ஆடியோ, வீடியோவால் பரபரப்பு| Dinamalar

காஞ்சிபுரம் மாநகராட்சியில் பணிபுரியும் தாசில்தார் அலுவலக தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், பொது மக்களிடம் லஞ்சம் கேட்கும் ‘ஆடியோ, வீடியோ’ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், பட்டா பெயர் மாற்றம், பட்டா பெறுதல் போன்ற பணிகளுக்கு, ‘செட்டில்மென்ட்’ தாசில்தார் அலுவலகத்தில் மக்கள் விண்ணப்பிக்கின்றனர். அவர்களிடம் சொத்துக்களின் அளவுகளை பொறுத்து, 5,௦௦௦ ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெறப்படுகிறது என, நீண்ட காலமாகவே புகார் உள்ளது. செட்டில்மென்ட் தாசில்தார் மற்றும் சர்வேயர் … Read more

தீபாவளியன்று அலுவலகம், புதுக்கணக்கு, பஞ்சாபி வீடுகளில் விளக்கு; இது டெல்லி தீபாவளி!

டெல்லியில் காற்று மாசுபாடு சில ஆண்டுகளாகவே கடுமையாக உள்ளது. அது மக்களிடம் தீவிர ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அங்கு 2023 ஜனவரி 1-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடையை அமல்படுத்தியுள்ளது டெல்லி அரசு. பட்டாசு உற்பத்தி செய்ய, விற்பனை செய்ய, விற்க விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, டெல்லி மக்கள் பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். காற்றை அளவுக்கு அதிகமாக மாசுபடுத்தியதால் டெல்லி … Read more