இந்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும்: ராஜ்நாத் சிங்குக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

மதுரை: கேரள மீனவர்களுக்கு இத்தாலி அரசு ரூ.10 கோடி வழங்கியதுபோல் இந்திய அரசு மயிலாடுதுறை மீனவருக்கு இழப்பீடு தர வேண்டும் என சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். மீனவர் வீரவேல் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் இந்திய கடற்படை பொறுப்பாளர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆதார் கார்டை காட்டிய பிறகும் மீனவர்கள் சித்ரவதை என சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமர் | பிரிட்டன் பிரதமர் ரேசில் மீண்டும் பெண்| உலகச் செய்திகள் ரவுண்ட்அப்

இங்கிலாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதாக முதல் நபராக பென்னி மோர்டான்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர் தனது வாயில் 150 எரியும் மெழுகுவர்த்திகளை ஏந்தி கின்னஸ் சாதனை படைத்தார். உகாண்டாவில் யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நெட்ஃப்லிக்ஸின் வெற்றித் தொடரான ‘தி கிரவன்’ தொடரில் பல சலசலப்புக்கு பின் ‘டிஸ்கிளைமர்’ போடப்பட்டுள்ளது. மங்கிபாக்ஸ் தொற்று இதுவரை 100 நாடுகளில் பரவி 73,000 நபருக்கு கண்டெடுக்கப்பட்டது துப்பாக்கி … Read more

ஒன்றரை ஆண்டில் 10லட்சம் பேருக்கு பணி: ‘ரோஜ்கர் மேளா’ திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

டெல்லி: ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு  பணி வழங்கும்  திட்டமான ரோஜ்கர் மேளா வேலைவாய்ப்பு  திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியான இன்று நாடு முழுவதும் 75ஆயிரம் பேருக்கு பணி நிமயன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பணி நியமனம் வழங்கப்படும் ரோஜ்கர் மேளா என்று பணி தொடர்பான திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவை அமைத்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்கை வழிகாட்டுதலை வழங்க, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்க முதல்வர் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

ஜார்க்கண்டில் மென்பொறியாளர் 10 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம்| Dinamalar

ராஞ்சி: ஜார்கண்டின் சிங்பும் மாவட்டத்தின் சைபசா கிராமத்தில் 26 வயது மதிக்கத்தக்க பெண் மென்பொறியாளர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.மென்பொறியாளரான இவர், வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வருகிறார். வெள்ளிக்கிழமை மலை, ஆண் நண்பருடன் வெளியே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது. தொடர்ந்து, ஆண் நண்பரை தாக்கிய அந்த கும்பல், அந்த பெண்ணை … Read more

“ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்திக்கு பதில் நேதாஜி படம் வேண்டும்" – இந்து மகாசபை கோரிக்கை

மேற்குவங்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், அகில பாரத இந்து மகாசபை ஏற்பாடு செய்திருந்த துர்கா பூஜையில், மகிஷாசுரன் இருக்கவேண்டிய இடத்தில் காந்தியைப் போன்ற உருவ அமைப்பில் ஒரு சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. மகிஷாசுரனின் இடத்தில் மகாத்மா காந்தியின் சிலை? மேலும் இந்த சர்ச்சையில், அகில பாரத இந்து மகாசபையின் மாநில தலைவர் சுந்தரகிரி மகாராஜ், “உண்மையைப் பகிரங்கமாகப் பேச வேண்டிய நேரம் வந்திருக்கிறது” எனக் கூறியது மேலும் … Read more

2022ம் ஆண்டு முதல் சூரிய கிரகணம் 25ம் தேதி  நிகழ்கிறது! வெறும் கண்ணால் பார்க்ககூடாது என எச்சரிக்கை…

டெல்லி: தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான அக்டோபர் 25ஆம் தேதி ‘பகுதி சூரிய கிரகணம்’ நிகழ இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்  இந்த அரிய நிகழ்வை இந்தியாவில் ஒருமணி நேரம் பார்க்க முடியும். ஆனால், வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சூரிய கிரகணம் என்பது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு. அதன்படி நடப்பாண்டு,  வரும் அக்டோபர் 25ஆம் தேதி சூரிய … Read more

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்: கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலூர்: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுவதால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குட்டி யானை கொல்லப்பட்ட ஆத்திரத்தில் ஒருவரை மிதித்து கொன்ற யானைக்கூட்டம்| Dinamalar

சத்தீஸ்கரில் குட்டி யானை கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த யானைக் கூட்டம் கிராமத்துக்குள் புகுந்து நேற்று ஒருவரை மிதித்துக் கொன்றது.சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கோர்பா மாவட்டத்தில் உள்ள பனியா கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சமீபத்தில் யானைக் குட்டி ஒன்றை கொன்று வயலில் புதைத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ௪௪ யானைகள் உள்ள கூட்டம், மூன்று கிராமங்களுக்குள் புகுந்து ௨௨ ஏக்கரில் இருந்த நெல் பயிர்களை சேதப்படுத்தின. நேற்று தேவ்மத்தி என்ற கிராமத்துக்குள் புகுந்த … Read more

`ஒரு சாப்பாடு வாங்கினால் ஒரு சாப்பாடு இலவசம்' -முகநூலில் வந்த விளம்பரத்தால் ரூ.8 லட்சத்தை இழந்த பெண்

இணையதள பயன்பாடு அதிகரித்த பிறகு ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சோசியல் மீடியா மூலம் நடக்கும் மோசடிகள் தான் அதிக அளவில் நடக்கிறது. சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகி பணம் அனுப்புவதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணத்தை மோசடி செய்துவிடுகின்றனர். மும்பையில் ஃபேஸ்புக் விளம்பரத்தை பார்த்த ஒரு பெண் ரூ.8 லட்சத்தை இழந்துள்ளார். மும்பை பாந்த்ரா பகுதியை சேர்ந்த நித்யா(54) என்ற பெண் அடிக்கடி ஃபேஸ்புக் பக்கங்களை பார்ப்பது வழக்கம். அப்படி பார்த்த போது ஒரு சாப்பாடு … Read more