தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்

தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் என யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளிக்கும் தேர்தல் பத்திர நிதி சட்டம் 2017 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசுடமை வங்கிகளில் விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்களை தாங்கள் விரும்பிய தொகைக்கு விரும்பிய பணமதிப்பில் வாங்கி தாங்கள் விரும்பிய அரசியல் … Read more

ஆரணி அருகே முள்ளண்டிபுரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட் பறிமுதல்

ஆரணி: ஆரணி அருகே முள்ளண்டிபுரம் கிராமத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள குட்கா பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. 16 மூட்டைகளில் இருந்த குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஈரோடு: இருவேறு விபத்துகளில் சிக்கி இரண்டு பள்ளி மாணவர்கள் பலி!

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த குதிரைக்கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர், மாதையன்- தங்கமணி தம்பதியரின் மூத்த மகன் திவாகர் (13). இவர் பூதப்பாடியில் உள்ள புனித இஞ்ஞாசியார் அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை வழக்கம்போல பள்ளிப் பேருந்தில் திவாகர் ஏறி பள்ளிக்குச் சென்றுக் கொண்டிருந்தார். திவாகர் சென்ற பேருந்தில் அவருடன் சேர்த்து 3 மாணவர்கள் மட்டுமே இருந்தனர். அதேசமயம், பள்ளி பேருந்தில் உதவியாளர் யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. பேருந்தை அம்மாபேட்டையைச் … Read more

பியானோ வாசித்த தாயை…தலையில் சுட்டுக் கொன்ற நட்சத்திர நடிகர்: போதை பழக்கத்தால் விபரீதம்

தி இமேஜினேரியம் ஆஃப் டாக்டர் பர்னாசஸ் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ரியான் கிரந்தம், தனது அம்மா பார்பரா வெயிட்டை பியானோ வாசித்து கொண்டு இருக்கும் போது தலையில் சுட்டுக் கொன்றுள்ளார். பிரபலமான குழந்தை நட்சத்திரம் கனடாவின் வான்கூவரில் உள்ள பள்ளியில் மாணவராக இருந்த போது ரியான் கிரந்தமிற்கு நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இளம் நடிகர்களை போலவே அவரும் பெரிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு முன் விளம்பரத்தில் தோன்றினார். GETTY அதன்பின், சூப்பர் நேச்சுரல் மற்றும் ரிவர்டேல் உள்ளிட்ட … Read more

வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை! தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் …

கோவை: வீரப்பன் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற  தமிழகஅரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து அவர்கள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த சந்தனகடத்தல் வீரர்பன் கூட்டாளிகள், ஆண்டியப்பன், பெருமாள் ஆகிய 2 பேரும் பல்வேறு வழக்குகள் காரணமாக, கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் , தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். அதையடுத்து, அவர்களை விடுதலை செய்ய  ஆளுநருக்கு திமுக அரசு பரிந்துரைத்தது. … Read more

திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் தொடர்ந்து மதுவிற்பனையில் ஈடுப்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. செல்லமுத்து, சுந்தரமூர்த்தி, மாறன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

QR கோடு மூலம் உண்டியல் காணிக்கை செலுத்தும் வசதி – ஹைடெக்காக மாறும் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்!

நாமக்கல் நகரில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் கோயில், தமிழகம் அளவில் பிரசித்திபெற்ற கோயிலாகும். இந்தக் கோயிலுக்குத் தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் இருக்கிறார்கள். இங்கு வருகைதரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக, இந்த கோயில் வளாகத்தில் ஆறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. பெரிய மால்கள் தொடங்கி சாதாரண பெட்டிக்கடை வரை UPI பணப்பரிவர்த்தனைக்கு மாறிவரும் சூழலில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகமும் ஹைடெக்குக்கு மாறியுள்ளது. நாமக்கல் ஆஞ்சநேயர் அதாவது, இங்கு வரும் பக்தர்கள் நேரடியாகக் கோயில் நிர்வாக வங்கிக் கணக்கிற்குக் … Read more

சென்னையில் மழைநீர் தேங்க இபிஎஸ்தான் காரணம்! அமைச்சர் தா.மோ.அன்பரசன்…

சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முறையாக வடிகால் பராமரிப்பு செய்யப்பட வில்லை என திமுக அரச மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னையில் மழைநீர் தேங்க இபிஎஸ்தான் காரணம் என தெரிவித்து உள்ளார். சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் சில பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, அய்யப்பந்தாங்கல், முகலிவாக்கம், … Read more

பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: அர்ஜுனா விருதுக்கு தேர்வான இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடும் வீராங்கனை இளவேனிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவும், இளவேனிலும் அர்ஜுனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்தார். தகுதி வாய்ந்த 3 பேருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல திறமையாளர்ளை உருவாக்கும் என்று கூறினார்.

2022 தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

புதுடில்லி: 2022 ம்ஆண்டிற்கான மத்திய அரசின் விளையாட்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் பல்வேறு விளையாட்டு வீரர், வீராங்கனைக்குளுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் விளயைாட்டு விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது. இதன் படி 2022 ம் ஆண்டிற்கான தேசிய விளையாட்டு விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 25 பேருக்கு அர்ஜூனா விருதுகள் இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளை ஜானதிபதி மாளிகையில் வரும் 30-ம் தேதி நடக்கவுள்ள விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவிக்கிறார். அதன் … Read more