அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: அரசுப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு  முதல் கட்டமாக ரூ. 240 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ரூ. 1,050 கோடியில் 7,200 வகுப்பறைகள் காட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

டில்லியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்பு| Dinamalar

புதுடில்லி: டில்லியில் சில நாட்களில் கொலை செய்து, சடலங்களை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்து, காட்டு பகுதியில் துண்டுகளை வீசும் சம்பவம் நடந்து வருகிறது. இந்நிலையில் சூட்கேஸ் பெட்டிக்குள் அழுகிய நிலையில் பெண்ணின் உடலை இன்று (டிச.,08) போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லியில் ஷ்ரத்தா வாக்கர் என்ற பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை பல்வேறு பகுதிகளில் வீசிய கொடூர சம்பவம் நடந்தது. தொடர்ந்து, … Read more

"இந்திய கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு வேண்டும்"- கன்னட நடிகர் சேத்தன் குமார்

கன்னட நடிகர் சேத்தன் குமார் சினிமா நடிகராக மக்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், சமூகத்திற்காக பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது , தலித் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்க ஏற்பாடு செய்வது, LGBTQ மக்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைப்பது, அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கும்படி அரசாங்கத்திடம் முறையிடுவது, என சமூக நலன் சார்ந்த பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது  இந்திய கிரிக்கெட் அணியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் … Read more

சுவிட்சர்லாந்தில் முகப்பருவுக்கு மருந்து எடுத்துக்கொண்ட கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

சுவிட்சர்லாந்தில் கர்ப்பிணிப்பெண் ஒருவர் முகப்பருவுக்காக எடுத்துக்கொண்ட மருந்து, அவரது குழந்தைக்கு நிரந்தர பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டது. கர்ப்பமாக இருந்தபோது முகப்பருவுக்காக மருந்து எடுத்துக்கொண்ட இளம்பெண் உண்மையில், முகப்பருவுக்கான சிகிச்சையில் இருக்கும்போது அவர் கர்ப்பமுற்றிருக்கிறார். அவருக்கு குழந்தை பிறந்தபோது, அந்த மருந்தின் தாக்கத்தால் அந்த குழந்தை வாய் பேச இயலாததாக இருந்ததுடன், அதற்கு கற்றல் குறைபாடுகள் இருப்பதும் பின்னர் தெரியவந்தது. ஆகவே, தனக்கு மருந்து பரிந்துரைத்த மருத்துவர் மீது வழக்குத் தொடர்ந்தார் அந்தப் பெண். PHOTO: GETTY  நீதிமன்றம் அளித்துள்ள … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி: மெரினாவில் 6அடி உயரத்துக்கு எழும் அலை – கடல்சீற்றம்…

சென்னை: மாண்டஸ் புயல் எதிரொலியாக சென்னை மெரினா உள்பட பல பகுதிகளில்  கடல்சீற்றம் அதிகமாக உள்ளது. 6அடி உயரத்துக்கு அலை எழுந்து அச்சுறுத்தி வருகிறது. இதனால், கடலுக்கு செல்ல  பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டூள்ளது. காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல குமரியில் கடல் உள்வாங்கியது. வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகத்தினர் … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், தென்காசி, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

ஆப்பிள் தேசத்தில் முன்னேறும் காங்கிரஸ்… இமாச்சல் முன்னணி நிலவரமும் பின்னணிக் காரணங்களும்!

குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பா.ஜ.க-வே வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் தற்போதைய சூழலில், இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க-வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு காங்கிரஸ் கட்சி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. அங்கு, மொத்தம் 68 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேசத்தில் 35 இடங்களைப் பிடித்தால் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்கிற நிலையில், தற்போது 37 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையே … Read more

அவளை கனடாவுக்கு அனுப்பியதற்காக வருந்துகிறோம்… கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண்ணின் பெற்றோர் கண்ணீர்

தங்கள் மகளை கனடாவுக்கு அனுப்பியதற்காக வருந்துவதாக, கனடாவில் கொலை செய்யப்பட்ட இந்திய இளம்பெண் ஒருவரின் பெற்றோர் கண்ணீர் விட்டுக் கதறியுள்ளனர். கனடாவில் வாழ மகள் உதவுவாள் என நம்பி அனுப்பிய குடும்பம் தங்கள் பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பும் ஒரு பைத்தியக்காரத்தனம் இந்தியாவில் பலருக்கும் இருக்கிறது என்கிறார் கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பவன்பிரீத் கௌர் (Pawanpreet Kaur, 21) என்னும் இளம்பெண்ணின் தந்தையான தேவிந்தர் சிங். பிள்ளைகளை முதலில் கனடாவுக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் மூலம் குடும்பமே கனடாவுக்கு செல்ல இது … Read more

மாண்டஸ் புயல் எதிரொலி: களப்பணியாளர்கள் 3 நாட்கள் 24 மணிநேரமும் பணியில் இருக்க மாநகராட்சி உத்தரவு…

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் எச்சரிக்கை எதிரொலி காரணமாக, இன்று முதல் 10ம் தேதி வரையிலான 3 நாட்கள் 24 மணி நேரமும் மாநகராட்சி களப்பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் நாளை (இன்று) முதல் … Read more

குஜராத் மாநில முதல்வராக டிச.12ம் தேதி பதவியேற்கிறார் பூபேந்திர படேல்: பாஜக அறிவிப்பு

டெல்லி: குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிச.12ம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.