நாசர் குழுவுக்கு எதிராக போட்டியிட்ட கே.பாக்யராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கம்!

சென்னை: நடிகர் சங்க தேர்தலின்போது,  நாசர் தலைமையிலான குழுவுக்கு  எதிராக போட்டியிட்டு, வழக்கு போட்டு, தொல்லை கொடுத்த நடிகரும், இயக்குனருமான கே.பாக்யராஜை நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கி, நாசர்  தலைமையிலான நடிகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நடிகர் சங்க தேர்தல் குறித்து உண்மைக்கு புறம்பான பொய்யான கருத்துக்களை பரப்பியதாக கூறி,  நடிகர் சங்கத்தில் இருந்து நடிகர் பாக்யராஜ் மற்றும் உதயா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த  2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் … Read more

மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம்: ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை: மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலர் இறையன்பு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதை அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு கூட்டத்தில் ஆணையர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்" – இந்திய வரைப்பட சர்ச்சைக்கு சசி தரூர் விளக்கம்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். அதில் இருந்த இந்திய ‘மேப்’பில் காஷ்மீரின் பாதி பகுதிகள் மற்றும் லடாக் ஆகியவை இடம்பெறாதது ஆளும் பா.ஜ.க-வினரால் விமர்சனத்துக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, அந்த பக்கம் சரி செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்பட்டது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “யாரும் வேண்டுமென்றே இதுபோன்ற செயல்களைச் செய்வதில்லை. எனது குழு செய்த தவறு. தவறு சுட்டிக்காட்டப்பட்டதும் நாங்கள் அதை உடனடியாக சரிசெய்தோம். மேலும், … Read more

கெயில் நிறுவனத்துக்கு அனுமதி: விரைவில் சென்னை, கோவையில் குழாய் மூலம் எரிவாயு சப்ளை…

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை இணை யமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போன்ற நகர்ப்புறங்களில் செயல்படுத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். மத்திய பெட்ரோலியம், எரிவாயு, தொழிலாளர் நலன் துறைகளின் இணையமைச்சர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகஅரசு தற்போது  கெயில் நிறுவனம் மூலம் குழாய் வழியாக வீடுகளுக்கு எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டம் … Read more

தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

“பட்டியலின மருத்துவர் தொட்ட உடல்…" – இறந்தவர் உடலை வாங்க மறுத்த கிராமம் – சாதியின் கோர முகம்!

உலக பண்பாடுகளுக்கு முன்னுதாரணம் இந்தியா என பெருமை பேசும் நிலையில், ஒவ்வொரு 10 நிமிடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் நிகழ்த்தப்படுகிறது என்கிறது ஒரு புள்ளிவிவரம். அது போன்ற ஒரு கோர சம்பவம் ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்தேறியிருக்கிறது. ஒடிசா மாநிலம், பார்கர் மாநிலத்தில் பாதம்பூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் முச்சுனு எனும் கூலித் தொழுலாளி 2 மகள்கள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்திருக்கிறார். காவல்துறை இந்த நிலையில். அவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. … Read more

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

டெல்லி: தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தபிறகு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்துள்ளார். மதுரையில் நடக்க உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது எனவும் மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கான கடன் குறித்தும் நிர்மலா சீதாராமனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.

அருணாச்சல பிரதேசத்தில் ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு| Dinamalar

புதுடெல்லி: ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை அக்டோபர் 1 முதல் அடுத்த ஆண்டு மார்ச் 30 வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்களில் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான , நாகலாந்து ,அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் சில இடங்களில் மத்திய அரசின் ஆயுதப்படை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள திராப், சாங்லாங் மற்றும் லாங்டிங் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் … Read more

தொடரும் புகார்கள்… புறக்கணிக்கப்படுகிறார்களா 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்?!

மக்களின் அடிப்படைத் தேவையான உணவு, கல்வி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளை அரசு நிர்வாகம் செய்தால் மட்டுமே பொது மக்களுக்குக் குறைந்த விலையில் தரமானதாகவும் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் பொது நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகிறது. அவசரமாக்கப்பட்ட நகரத்தில் விபத்துகள் ஏராளம். மருத்துவமனை இல்லாத கிராமங்களில் மக்கள் தொலைதூரம் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். திடீரென மாரடைப்போ, பிரசவ வலியோ ஏற்பட்டால் வாகன வசதி உடனே கிடைப்பதில்லை. 108 ஆம்புலன்ஸ் இது போன்ற அவசரக்காலத்தில் … Read more

கேதர்நாத் கோயில் அருகே இன்று காலை மாபெரும் பனிச்சரிவு! வீடியோ

தேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத் கோயில் அருகே மாபெரும் பனிச்சரிவு இன்று காலை ஏற்பட்டது. ஆனால், இந்த பனிச்சரிவால் அங்குள்ள கேதாரீஸ்வரர் கோவிலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரகாண்டில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள் கடும் பனி பொழிவு இருக்கும் என்பதால் குளிர்காலத்தில் … Read more