காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை | Dinamalar

ஸ்ரீநகர், ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில், ஒரு பயங்கரவாதி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். ஜம்மு – காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள கேப்ரியன் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்து இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது சுட்டனர். உடனடியாக பாதுகாப்பு படையினர் தந்த பதிலடியில் ஜெய்ஷ் – இ – … Read more

12.11.22 சனிக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | November – 12 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

போக்குவரத்து விதிமீறல் அபராத உயர்வு வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யகோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். போக்குவரத்து விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து அக்டோபர் 19ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

மோசமான வானிலை: காந்தி கிராம பல்கலை. விழாவில் பங்கேற்ற பின் காரில் மதுரை திரும்பினார் பிரதமர் மோடி..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் காந்தி கிராம பல்கலை. விழாவில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி காரில் மதுரை திரும்பினார். ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்த நிலையில் வானிலை சரியில்லாததால் பிரதமர் மோடி காரில் மதுரை புறப்பட்டார். மதுரையில் இருந்து விமானப்படை விமானம் மூலம் விசாகபட்டினத்துக்கு பிரதமர் செல்ல உள்ளார்.

தினமலர் – பட்டம் மெகா வினாடி வினா போட்டி துவங்கியது: புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் ஆரவாரம்

பள்ளி அளவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்ற தினமலர் மெகா வினாடி வினா போட்டி புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் நேற்று ஆரவாரத்துடன் துவங்கியது. மாணவ சமுதாயத்திற்கு சிறப்பான அடித்தளம் அமைத்து தரும் வகையில் தினமலர் நாளிதழ் ‘பட்டம்’ எனும் மாணவர் பதிப்பை வெளியிடுகிறது. பள்ளி மாணவர்களின் பொது அறிவு, அறிவியல் தகவல்கள் ஆகியவற்றுடன் கூடிய, நுண்ணறிவை வளர்க்கும் வகையில், பட்டம் இதழில் செய்திகளும், அரிய தகவல்களும் வெளியிடப்படுகின்றன. பதில் சொல்; அமெரிக்கா செல் புதுச்சேரி, தமிழக பள்ளி மாணவர்கள், … Read more

மனைவி மேகன் மார்க்கலை நினைத்து பயப்படும் இளவரசர் ஹரி

இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மார்க்கலை நினைத்து எப்போதும் ஒரு பயத்திலேயே இருப்பதாகா கூறப்படுகிறது. இளவரசர் ஹரி, தனது மனைவி மேகன் மார்க்கலின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படாவிட்டால், அவர் தன்னை விட்டு பிரிந்துவிடுவார் என்று பயப்படுகிறார். பிரபல சர்வதேச செய்தி நிறுவனத்தின்படி, இளவரசர் ஹரி மேகனை தொந்தரவு செய்யக்கூடிய எந்த தவறும் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறார், ஏனெனில் அவர் தன்னை விட்டு பிரிந்து செல்ல நினைத்தால், அதனை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது. அவர்களது … Read more

புயல் உருவாக வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும்! பாலச்சந்திரன்

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை ஆனால் 3 நாள் மழை நீடிக்கும், மீனவர்கள் 2 நாள் கடலுக்குள் செல்லவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை இன்றும் நாளையும் கன முதல் மிக கனவழை பெய்யக்கூடும். நேற்று தமிழகத்தில் ரெட் அலர்ட் காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கு வாய்ப்பு குறைவு என்பதால் … Read more

கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில்களின் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான விண்ணப்பங்களில் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியை சேர்க்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. விண்ணப்பதாரரின் அரசியல் தொடர்பு குறித்த கேள்வியுடன் கூடிய பகுதியை சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்திற்கு மேல் உள்ள 560 கோயில்களுக்கு அரசே அறங்காவலர்களை நியமிக்கும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு, அறைக்காவலர்களை நியமிக்ககோரிய வழக்குகள் 2 வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.