கேரளாவில் 2வது நபருக்குகுரங்கு அம்மை தொற்று| Dinamalar

திருவனந்தபுரம் : பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை, கேரளாவைச் சேர்ந்த மற்றொருவருக்கு உறுதியாகி உள்ளது. இது, நம் நாட்டில் பதிவாகியுள்ள இரண்டாவது பாதிப்பு.விலங்குகளிடம் இருந்து, மனிதர்களுக்கு பரவக் கூடியது, குரங்கு அம்மை. இது, சில ஆப்ரிக்க நாடுகளில் மட்டுமே தென்படும். ஆனால், தற்போது, பல நாடுகளிலும் இதன் பாதிப்பு பதிவாகியுள்ளது. சமீபத்தில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவருக்கு, குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளது உறுதியானது. இது, நம் நாட்டில் பதிவான முதல் பாதிப்பு.இந்நிலையில், கேரளாவின் … Read more

ஐடி ஊழியர்களே உஷாரா இருங்க.. டிசிஎஸ், அக்சென்சர், ஹெச்சிஎல் திடீர் முடிவு..!

இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தக சந்தை கடந்த 3 வருடமாக அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட நிலையிலும் இந்திய ஐடி துறை பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது என்றால் மிகையில்லை. அதிகப்படியான வேலைவாய்ப்பு, வீட்டில் இருந்து பணியாற்றினாலும் முழு சம்பளம் என மொத்த நுகர்வோர் சந்தையை வீழ்ச்சியில் இருந்து காப்பாற்றியது ஐடி துறை என்றால் மிகையில்லை, ஆனால் இப்போது நிலைமை மொத்தமாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. குறிப்பாக முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்களை பணியில் அமர்த்துவதை பெரிய … Read more

மைதானத்தில் ரிஷப் பண்ட் செய்த காரியம்..திகைத்துப்போன ரவிசாஸ்திரி! வைரலாகும் வீடியோ

ஆட்டநாயகன் விருது பெற்றபோது ரிஷப் பண்ட் மது போத்தலை வர்ணனையாளர் ரவிசாஸ்திரி கையில் கொடுத்து விட்டு ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் சதம் விளாசி மிரட்டினார். 113 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 125 ஓட்டங்கள் விளாசிய பண்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். விருதை பெற்ற பண்ட் வர்ணனையாளராக … Read more

தடம் புரண்ட சரக்கு ரயில்; ரயில் சேவை பாதிப்பு| Dinamalar

தாஹோத் : குஜராத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து, மேற்கு ரயில்வே அதிகாரிகள் நேற்று கூறியதாவது: மத்திய பிரதேசத்திலிருந்து சரக்கு ரயில் ஒன்று நேற்று முன்தினம் குஜராத்துக்கு சென்றது. ரயில், லிம்கேடா ரயில் நிலையத்துக்கு அருகே சென்றபோது திடீரென தடம்புரண்டது. இதில், உயிர்ச் சேதம் ஏதுமில்லை. இதையடுத்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், 29 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் … Read more

பல் துலக்க மைக்ரோரோபோட்கள் அறிமுகம்… டூத் பிரஷ் வணிகம் இனி என்ன ஆகும்?

நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர வளர புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன என்பதும் அதேபோல் புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் காலாவதி ஆகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்றியமையாத தேவை என்று கருதப்படும் டூத் பிரஷ் இனிவரும் காலத்தில் காணாமல் போகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. டூத் பிரஷ்க்கு பதிலாக தற்போது பல்துலக்க மைக்ரோரோபோட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மைக்ரோரோபோட்கள் மிகவும் எளிமையாக பற்களை சுத்தம் செய்யும் … Read more

மூக்கை அழகுபடுத்த பணம் தேவை., பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையை விற்ற ரஷ்ய பெண்!

ரஷ்யாவில் தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து அழகுபடுத்த (Nose Job) பணம் தேவைப்பட்டதால், பெண் ஒருவர் பிறந்து 5 நாட்களே ஆன தனது குழந்தையை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தையை 3,581 அமெரிக்க டொலருக்கு விற்ற ரஷ்ய பெண் ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 33 வயதான அப்பெண் (பெயர் வெளியிடப்படவில்லை) ஏப்ரல் 25 அன்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பின்னர், ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர் ஒரு … Read more

உள்ளாடையை அகற்ற வற்புறுத்தல் நீட் தேர்வு எழுதிய மாணவியர் புகார்| Dinamalar

கொல்லம் : நாடு முழுதும் நேற்று முன்தினம் நடந்த ‘நீட்’ மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வில், கேரளாவில் ஒரு மையத்தில் மாணவியரின் உள்ளாடைகளை அகற்ற கட்டாயப்படுத்தியது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுதும் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிலையில், கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ‘மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’யில் அமைக்க-ப்பட்டு இருந்த மையத்தில், ஏராளமான மாணவியர் தேர்வு எழுதினர்.ஆனால், மாணவியர் தங்கள் உள்ளாடைகளை அகற்றிய பிறகே … Read more

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறையலாம்.. எச்சரிக்கும் மார்கன் ஸ்டான்லி!

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் சற்று சரிவினைக் காணலாம் என ஆய்வு நிறுவனகளும் கணித்து வருகின்றன. முன்னதாக நோமுரா நிறுவனம் 2023ம் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 5.4%ல் இருந்து, 4.7% ஆக குறைத்தது. மார்கன் ஸ்டான்லி ஆய்வு நிறுவனமும் தனது பொருளாதார வளர்ச்சி குறித்தான கணிப்பினை ரெசசன் அச்சத்தின் மத்தியில் குறைத்துள்ளது. அதானி எடுத்த அதிரடி முடிவு.. சாமானிய மக்கள் செம ஹேப்பி.. ஏன் தெரியுமா? வளர்ச்சி கணிப்பு குறைவு ஆய்வு நிறுவனமான மார்கன் … Read more

சின்னசேலம் கலவரம்: 8 பிரிவுகளில் வழக்கு… 128 பேர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கணியாமூரில் இயங்கிவந்த தனியார் பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவியின் மர்ம மரண விவகாரத்தில், நீதி கேட்டு நடந்த போராட்டம் நேற்று (17.07.2022) வன்முறையாக மாறியது. இந்த விவகாரத்தில், மாணவி படித்த தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடினர். பள்ளிக் கட்டடம், அங்கிருந்த பள்ளிப் பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் உள்ளிட்டவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. இந்தக் கலவரத்தில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி பாண்டியன், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வக்குமார் மற்றும் 52 காவலர்கள் காயமடைந்தனர். … Read more

சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் | Dinamalar

சபரிமலை : சபரிமலையில் ஆடி மாத பூஜை நேற்று அதிகாலை தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. அன்று வேறு பூஜைகள் இல்லை. இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கு ஏற்றினார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம் நடத்தி நெய் அபிேஷகத்தை தொடங்கி வைத்தார். பின்னர் வழக்கமான … Read more