நொடியில் நொறுங்கிய 20 வருட அனுபவம்… ராஜநாகம் தீண்டி `பாம்பு மனிதர்' பலி!

ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் திவாரி (45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலைச் செய்து வருகிறார். பாம்பு மனிதர் என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் வினோத் திவாரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை காடுகளுக்குள் விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்த நிலையில், கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் ராஜநாகம் ஒன்று புகுந்துவிட்டதாக வினோத் திவாரிக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, அவர் அந்தப் பகுதிக்கு விரைந்தார். கடைக்குள் புகுந்து ராஜநாகத்தைப் … Read more

தென் கொரியாவைச் சேர்ந்தவரை இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கலாமா ? கருத்து கேட்டு இந்திய பார் கவுன்சில் கடிதம்

தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார். டேயோங் ஜங் மற்றும் டெல்லி பார் கவுன்சில் இடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சட்டப்போராட்டத்தை அடுத்து மாநில பார் கவுன்சில்களின் கருத்தை அறிய இந்திய பார் கவுன்சில் கடிதம் அனுப்பியுள்ளது. தென்கொரிய பல்கலைக்கழகத்தில் வழக்கறிஞர் பட்டம்பெறும் இந்திய குடிமகன் அந்நாட்டு நீதிமன்றத்தில் பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது, அதனால் … Read more

அகமதாபாத்தில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழப்பு

அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டுமான பணி  நடைபெற்ற கட்டடத்தில் லிப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளனர். லிப்ட் அறுந்து விழுந்ததில் அதில் பயணித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் பாஜக கலவரம்.. யோகி மாடலில் “புல்டோசர்” அனுப்பலாமா? பாண்டை பிடித்த திரிணாமூல் எம்பி

India oi-Noorul Ahamed Jahaber Ali கொல்கத்தா: பேரணியின்போது பொதுசொத்துக்களை சேதப்படுத்திய பாஜகவினரின் வீடுகளை இடிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்போல் புல்டோசர்களை அனுப்பி வைக்கட்டுமா என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில … Read more

சித்து மீது முட்டை வீசிய விவகாரம்; சட்டசபையில் கடும் வாக்குவாதம்| Dinamalar

பெங்களூரு : மடிகேரியில் சித்தராமையா கார் மீது, பா.ஜ., உறுப்பினர்கள் முட்டை வீசிய சம்பவம் தொடர்பாக, சட்டசபையில் நேற்று காரசார வாதம் நடந்தது.சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:காங்., — சித்தராமையா: எதிர்க்கட்சி தலைவரின் கார் மீது, முட்டை வீசும்படி செய்த பா.ஜ., தலைவர்கள் வீரரா, சூரரா. மழை சேத பகுதிகளை பார்வையிட, குடகு மாவட்டத்துக்கு சென்றேன். அப்போது பா.ஜ., தொண்டர்கள், இரண்டு இடங்களில் என் கார் மீது முட்டை வீசினர்.முட்டை வீசிய பின், பின்னாலிருந்து கல் வீச்சு … Read more

இரவிலும் இனி ஹோம் டெலிவரி.. சென்னை, பெங்களுருக்கு வரும் புதிய சேவை..!

இந்தியாவில் ஆன்லைன் டெலிவரி சேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல புதிய சேவைகளைக் குவிக் காமர்ஸ் பிரிவில் இருக்கும் நிறுவனம் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இந்தியாவில் NIGHT LIFE குறித்த விவாதம் தற்போது பல மாநிலங்களில் அதிகரித்துள்ளதால் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவில் முதல் நிறுவனமாக ஸ்விக்கி தனது இன்ஸ்டாமார்ட் சேவையின் டெலிவரி நேரத்தை விடியகாலை வரை நீட்டித்துள்ளது. இது முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படும் நிலையில் விரைவில் பெரும்பாலான நிறுவனங்கள் இத்தகைய … Read more

பர்கரில் கிடந்த கையுறை… வாடிக்கையாளர் அதிர்ச்சி; வைரலாகும் வீடியோ!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த இளைஞர் டேவிட். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சமீபத்தில், ஆரோவில் அருகேயுள்ள பிரபல தனியார் உணவுக்கடை ஒன்றிற்கு நண்பருடன் சென்று பர்கர் வாங்கியுள்ளார். அதில் பிளாஸ்டிக் பொருள் கிடப்பதை கண்டு அதிர்ந்தவர், அதை சோதித்துப் பார்த்தபோது, ஊழியர்கள் பயன்படுத்தும் கையுறை அது என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து உணவுக்கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியவர், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதற்காக, தனியார் உணவுக்கடை … Read more

வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடிங்க! ஈசியா உடல் எடை குறையுமாம்

 பெருஞ்சீரக விதைகள் மிகவும் வாசனை மற்றும் ருசியான மூலிகை என்பதால் சமையல் மற்றும் மருத்துவத்திற்கு மிக அதிகமாக பயன்படுகிறது. இந்த பெருஞ்சீரக விதைகளின் பயன்கள் ஏராளம். குறிப்பாக இந்த பெருஞ்சீரகமானது சாப்பிட்ட பிறகு செரிமானத்திற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். பெருஞ்சீரக விதைகளில் நிறைய தாதுக்கள் உள்ளன. இவற்றை ஜூஸ் செய்வது குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுகின்றது. அது எப்படி என்பதை பார்ப்போம்.  ஜூஸ் எப்படி செய்வது? பெருஞ்சீரகத்தை ஒரே இரவில் ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் காலையில் … Read more

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

சென்னை: பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டு உள்ளார். செப்டம்பர் 15ந்தேதி மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 127 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை  மற்றும் சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் … Read more

கோவை காரமடையில் கடை உரிமையாளர் மீது தாக்குதல்: இந்து முன்னணி அமைப்பினர் 6 பேர் கைது

கோவை: கோவை காரமடையில் பெரியார் பெயரில் உணவகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடையின் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணியை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்தல், ஆபாசமாக பேசுதல், அத்துமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.