எல்இடி தெருவிளக்குகள் மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு! எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு

சென்னை: தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக  மாற்றியதில் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குபதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது பல்வேறு புகார்கள் உள்ளன. அதுதொடர்பாக ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு பல்வேறு வழக்குகளை பதிவு செய்து, அவரை கைது செய்ய முனைந்து வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே பல வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், இரண்டு முறை ரெய்டும் நடத்தப்பட்டு உள்ளது. ஆனால், நீதிமன்ற … Read more

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3-ம் கட்ட நகை சரிபார்ப்பு பணிகள் 2-வது நாளாக தொடக்கம்

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3-ம் கட்ட நகை சரிபார்ப்பு பணிகள் 2-வது நாளாக தொடங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு செய்து வருகின்றனர்.  ஏற்கனவே ஆக.22 முதல் செப்.2 வரை இரு கட்டங்களாக நகை சரிபார்ப்பு பணி நடந்தது.

\"ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு போகக் கூடாது..\" வழியில் தடுத்த குஜராத் போலீசார்! ஆவேசமாக சீறிய கெஜ்ரிவால்

India oi-Vigneshkumar காந்தி நகர்: குஜராத்தில் ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு இரவு உணவு அருந்த அரவிந்த் கெஜ்ரிவால் சென்ற போது, போலீசார் அவரை தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய அளவில் தனது கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளார். ஆம் ஆத்மி பல மாநிலங்களில் கட்சியைப் பலப்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் டெல்லிக்கு வெளியே பஞ்சாபில் முதல்முறையாகக் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி … Read more

இந்தியாவில் புதிதாக 4,369 பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,369 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,45,04,949 ஆனது.கடந்த 24 மணி நேரத்தில், 5,975 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,39,30,417 ஆனது. தற்போது 46,347 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கோவிட் காரணமாக 6 பேர் மரணமடைந்ததால், … Read more

HCL-ல் 350 பேர் பணிநீக்கமா.. பதற்றத்தில் ஐடி ஊழியர்கள்.. இன்னும் என்னவாகுமோ?

இந்தியாவின் மூன்றாவது பெரிய ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னால்ஜி, மிகப்பெரிய சாப்ட்வேர் ஏற்றுமதியாளராக இருந்து வருகின்றது. இந்த சாப்ட்வேர் நிறுவனம் அதன் வாடிக்கையாளரான மைக்ரோசாப்ட்டின் திட்டத்தின் பணிபுரியும் ஊழியர்களில், 350 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக மணிக் கன்ட்ரோல் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியியில், ஏற்கனவே ஐடி நிறுவனங்கள் சர்வதேச அளவில் தங்களது செலவு குறைப்பு நடவடிக்கையினை தீவிரமாக எடுத்து வருகின்றன. ஐடி ஊழியர்களுக்கு எதிராக ஒன்று சேரும் டிசிஎஸ், … Read more

மேட்டூர் அணையின் நிலவரம்: நீர்திறப்பு வினாடிக்கு 40,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காலை 11 மணிக்கு நீர்திறப்பு வினாடிக்கு 40,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

தெலங்கானா: எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் இருந்து பரவிய தீ… சென்னையை சேர்ந்தவர் உட்பட 8 பேர் பலி!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூபி பிரைட் என்ற சொகுசு ஹோட்டலின் தரைத் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை இரவு கட்டடத்தின் தரை தளத்தில் அமைந்துள்ள இ-பைக் ஷோரூமில் இரவு 9.20 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், பலருக்குத் தீக்காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்கள் காந்தி மருத்துவமனை … Read more

இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் திமிர் பேச்சு – நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு? வீடியோ

சென்னை: இந்துக்கள் குறித்து திமுக எம்.பி. ஆ.ராசாவின் பேசிய கேலமான திமிர் பேச்சு தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. சாதாரணமாக பெரியார் குறித்து பேசும் பேச்சுக்கள் மீது உடடனே நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, ஆ.ராசாமீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.  தமிழக அரசு உண்மையிலேயே சமூக நீதியை பின்றுபற்றுவது உறுதி என்றால் ஆ.ராசா உடனே கைது செய்யப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நடவடிக்கை எடுக்குமா திமுக அரசு? … Read more