உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: மூளைச்சாவு அடைந்த 1,548 பேரிடம் 9,257உடல் உறுப்புகள் பெறப்பட்டுள்ளன என்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தினை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது என மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசினர் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில்  இருதயம் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நபரை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.  அவருடன்  மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை … Read more

பெரியார் சிலை சர்ச்சை பேச்சு: ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை: பெரியார் சிலை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 4 வார காலத்துக்கு விசாரணை அதிகாரி முன்பு காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும், இனி இது போன்று பேசமாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.   

மாதத்தில் முதல் நாளே குட்நியூஸ்.. மக்கள் நம்மதி..!

இந்திய பொருளாதாரம் ஜூன் காலாண்டில் 13.5 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்திருந்தாலும் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 20.1 சதவீத வளர்ச்சி மட்டுமே அடைந்துள்ளது. உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா, பிரிட்டன் ஐரோப்பா பொருளாதாரம் மோசமாக இருக்கும் வேளையில் இந்தியா 2 இலக்கு வளர்ச்சி அடைந்துள்ளது தரமான சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் மோசமான குறைவான சரிவை அடைய முக்கியக் காரணம் விலைவாசி உயர்வு தான். இந்த நிலையில் செப்டம்பர் மாத முதல் … Read more

Doctor Vikatan: வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் அல்சரின் அறிகுறிகளா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக அடிக்கடி வயிற்றுவலியும் வயிற்று எரிச்சலும் வருகிறது. நான் தினமும் இரண்டு வேளைகள் மட்டுமே சாப்பிடுவேன். அதன் விளைவாக எனக்கு அல்சர் வந்திருக்கும் என்கிறார்கள் வீட்டில். அல்சர் பாதிப்பின் அறிகுறிகள் எப்படியிருக்கும்? இதற்கு 2 மணிநேரத்துக்கொரு முறை சாப்பிட வேண்டும், காரமாகச் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் சொல்கிறார்களே, உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார். இரைப்பை, குடல் சிகிச்சை மருத்துவர் வினோத்குமார் நீங்கள் குறிப்பிட்டுள்ள … Read more

கழிவறை இருக்கையில் பேப்பர் வைத்து பயன்படுத்தக் கூடாது! ஏன் தெரியுமா?

நமது வீட்டில் உள்ள கழிவறைகளை குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே வேறு வீடு, அலுவலகம், மால் போன்ற வெளி பொது இடங்களில் இருக்கும் கழிவறைகளை பயன்படுத்தும் போது, எத்தனை பேர் பயன்படுத்தினார்களோ என்ற அசௌகரியம் இருக்கும். பெரும்பாலும் இன்று வீடுகள் மட்டுமின்றி, பொது இடங்களிலும் வெஸ்டர்ன் மொடல் கழிவறை தான் பயன்பாட்டில் அதிகம் இருக்கின்றன. இங்கு கழிவறை பயன்படுத்தும் போது பலர் கழிவறை பேப்பரை இருக்கயில் படர வைத்து பயன்படுத்துவார்கள். theasianparent இம்முறை சுகாதாரமானது அல்ல என … Read more

வெளிநாட்டினர் விளம்பரங்களில் நடிக்க நைஜீரிய நாட்டு அரசு தடை

அப்யூஜா: நைஜீரிய நாட்டில் வெளிநாட்டினர் மாடல்களாக விளம்பரங்களில் நடிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்க, அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வர இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும், அரசு ஊடகங்களில் குரல் பதிவுக்கும் நைஜீரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் மறைவு: ஜனாதிபதி, பிரதமர் உட்பட தலைவர்கள் இரங்கல்!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ(90) உடலநலக்குறைவால் உயிரிழந்தது, குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர், நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துகொண்டனர். சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “சோனியா காந்தியின் தாயார், பாவ்லா மைனோ, கடந்த சனிக்கிழமையன்று இத்தாலியிலுள்ள அவரது வீட்டில் காலமானார். இறுதிச் சடங்குகள் … Read more

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இரண்டு தமிழர்கள் செய்த அசத்தலான சாதனை! குவியும் பாராட்டுகள்

லண்டன் சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த தமிழர்கள். பிரமோத்குமார், ராஜ்குமார் ஆகிய இருவருக்கும் குவியும் பாராட்டு  லண்டனில் நடைபெற்ற சைக்கிள் போட்டியில் தமிழர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். பிரித்தானிய தலைநகர் லண்டனில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நெடுந்தொலைவு சைக்கிள் போட்டி நடக்கிறது. அந்த போட்டி கடந்த மாதம் நடந்தது. போட்டியில் இந்தியா சார்பில் 160 பேர் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். லண்டனில் தொடங்கி ஸ்காட்லாந்து தலைநகரான இடின்பராக் வரை … Read more

ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்த 9ம் வகுப்பு மாணவர்கள்! இது ஜார்கண்ட் களேபரம்…

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வில் தோல்வி அடைந்த 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர், தாங்கள் படித்து வந்த பள்ளி ஆசிரியர்கள் 2 பேரை மரத்தில் கட்டி வைத்து அடித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இநத சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்துக்கு தலைகுனியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மாநில கல்வி கவுன்சில் கடந்த சனிக்கிழமை தேர்வு முடிவுகளை வெளியிட்டது. இதில், ஜார்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள ஒரு பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், … Read more

திருச்சி – கல்லணை இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் பேருந்துகள் செல்ல தடை

திருச்சி : திருச்சி உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் திருச்சி – கல்லணை இடையே பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி கொள்ளிடத்தில் 1.95 லட்சம் நீர்வரத்து உள்ளதால் உத்தமர்சீலி தரைப்பாலம் நீரில் மூழ்கியது.