மின்வாரிய தேர்வு முறைகேடு; மேலும் 3 பேர் சிக்கினர்

பெங்களூரு: கர்நாடக மின்சாரத்துறையில் காலியாக இருந்த 600 இளநிலை பொறியாளர் பதவிக்கு கடந்த மாதம் (ஆகஸ்டு) 7-ந் தேதி தேர்வு நடந்தது. பெலகாவி மாவட்டம் கோகாக்கில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த தேர்வில் சிலர் தேர்வின் போது முறைகேடு செய்து இருந்தனர். இதுகுறித்து கோகாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 13 பேரை போலீசார் கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் மேலும் 3 பேரை கோகாக் … Read more

"இதற்குத்தான் கடவுள் 2 கைகளை கொடுத்துள்ளார்" ஆண்டுதோறும் ஒரே நேரத்தில் இரண்டு தடுப்பூசி! அமெரிக்கா திட்டம்

காய்ச்சலைப் போலவே ஆண்டுதோறும் கோவிட் தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. காய்ச்சலுக்கான தடுப்பூசியை எடுத்துக்கொள்ளும் அதே நேரத்தில் கோவிட் பூஸ்டர் டோஸ் ஊசியையும் எடுக்கலாம். காய்ச்சல் (influenza) தடுப்பூசிகளைப் போலவே கோவிட் பூஸ்டர்களும் ஆண்டுதோறும் பரிந்துரைக்கப்படலாம் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனர். கடந்த வாரம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA ) அங்கீகரித்து, கொரோனா வைரஸின் அசல் திரிபு (original strain) மற்றும் ஓமிக்ரான் மாறுபாட்டின் BA.4 மற்றும் BA.5 வரிசைகளுக்கு … Read more

கர்நாடக அமைச்சர் மாரடைப்பால் காலமானார்| Dinamalar

பெங்களூரு: பெலகாவி மாவட்டம், ஹுக்கேரி சட்டசபை தொகுதி பா.ஜ., எம்.எல்.ஏ.,வும், கர்நாடக வனத்துறை மற்றும் உணவு பொது விநியோகத்துறை அமைச்சராக இருந்தவர் உமேஷ் கத்தி, மூத்த அமைச்சரான இவர், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களிலும் பங்கேற்றார். இரவில் டாலர்ஸ் காலனியில் உள்ள வீட்டிற்கு வந்தார். உணவு சாப்பிட்ட பின்னர் கழிப்பறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வராததால், சமையல்காரர் கழிப்பறை கதவை தட்டினார்.எந்த பதிலும் வராததால் மற்ற ஊழியர்களை அழைத்து வந்து கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது … Read more

உறவினர்களை மதம் மாற்ற முயற்சி; தம்பதி மீது வழக்கு

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் துளசிதாஸ் என்கிற யேசுதாஸ். இவரது மனைவி தேவி என்கிற மேரி. இவர்கள் 2 பேரும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தனர். இந்த நிலையில் லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வரும் உறவினர்கள் சிலரை துளசிதாசும், தேவியும் சேர்ந்து மதம் மாற்றம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சன்னப்பட்டணா புறநகர் போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை … Read more

ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இலங்கை!

ஆசிய கோப்பை 2022 தொடரில் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. ஆசிய கோப்பை 2022 தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – இலங்கை அணிகள் முதன்முறையாக மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஸ்னாயிற்கு பதிலாக ரவிசந்திரன் அஸ்வின் அணியில் இடம் பெற்றிருந்தார். ஞாயிற்றுக்கிழமை … Read more

எல்லையில் துப்பாக்கி சூடுபாக்., ராணுவம் விஷமம்| Dinamalar

ஜம்மு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு நம் படைகள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளன.ஜம்மு – காஷ்மீரில் எல்லையில், 2021 பிப்., 21 முதல் போர் நிறுத்தம் செய்வதாக இந்தியா, பாகிஸ்தான் அறிவித்தன. இதன்பின் பாக்., ராணுவம் பெரிய அளவில் தாக்குதலில் ஈடுபடவில்லை.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் அர்னியாவில் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து பாக்., ராணுவம் நேற்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. எல்லைக்கு … Read more

பெங்களூருவில், இன்று முதல் காவிரி குடிநீர் வினியோகம்- அதிகாரி தகவல்

பெங்களூரு: பெங்களூருவில் இன்று (புதன்கிழமை) முதல் காவிரி குடிநீர் வினியோகிக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார். நீரேற்று நிலையத்தில் வெள்ளம் புகுந்தது மண்டியா மாவட்டம் மலவள்ளி டி.கே.ஹள்ளியில் பெங்களூரு நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக நீரேற்று நிலையம் (பம்பிங் ஸ்டேஷன்) உள்ளது. அங்கு பெய்த கனமழையால் நீரேற்று நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த நிலையம் செயல்படாமல் முடங்கியுள்ளது. அங்குள்ள வெள்ளத்தை அகற்றும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிலையில் அந்த நீரேற்று நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த … Read more

உணவில் பல்லி : 33 மாணவியருக்குவாந்தி, மயக்கம்| Dinamalar

ஹைதராபாத்,தெலுங்கானாவில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதியில், பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 33 பேருக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள வர்தன்னாபேட்டையில், பழங்குடியினருக்கான அரசுப் பள்ளி மாணவியர் விடுதி உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் தயாரித்து வைத்த உணவில், ஒரு பல்லி இறந்து கிடந்தது. இதுபற்றி, ஒரு மாணவி சமையல்காரரிடம் கூறினார். ஆனால், அது பச்சை மிளகாய் என அவர் கூறி விட்டார்.இந்நிலையில், அந்த உணவை சாப்பிட்ட மாணவியருக்கு, வாந்தி, மயக்கம் … Read more

மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது; ஜே.டி.எஸ். வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் கிடைத்தது

மைசூரு: மைசூரு மாநகராட்சி மேயர் பதவியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது. ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரின் குளறுபடியால் துணை மேயர் பதவியும் பா.ஜனதாவுக்கு கிடைத்தது. மேயர், துணை மேயர் தேர்தல் கர்நாடகத்தில் மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட சில மாநகராட்சிகளுக்கு 4-ம் கட்ட மேயர், துணை மேயர் தேர்தலுக்கு இடஒதுக்கீடு அளித்து கர்நாடக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி மைசூரு மாநகராட்சி மேயர் பதவி பொது பிரிவு ஆண்களுக்கும், துணை மேயர் பதவி எஸ்.டி. பிரிவு பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து … Read more

வாட்ஸ்ஆப் போன் கால் செய்ய கட்டணமா? டிராய் எடுக்கப் போகும் முடிவு என்ன?

வாட்ஸ் ஆப் செயலி மூலம் போன் கால், வீடியோ கால் செய்ய விரைவில் கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட பிறகு இலவச அழைப்புகள், டேட்டா போன்றவை வழங்கப்பட்டன. பின்னர் சில மாதங்கள் கழித்து கட்டணம் வசூலிக்கப்பட்டன. இப்போது ஜியோ, ஏர்டெல், வீ என எல்லா டெலிகாம் நிறுவன கட்டணங்களும் கிட்டத்தட்டச் சமமாகவே உள்ளன. எனவே இணையதள டேட்டா உள்ள பேக், வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள வைஃபை சேவையை பயன்படுத்தி வாட்ஸ்ஆப் … Read more