“மாட்டுகறி” நல்லது! திரண்ட பஜ்ரங்தள்.. திகைத்த ரன்பீர்-ஆலியா ஜோடி – உஜ்ஜைன் கோயிலுக்கு விடக்கூடாதாம்

India oi-Noorul Ahamed Jahaber Ali போபால்: மாட்டுக்கறி சாப்பிடுவது நல்லது என்று கருத்து கூறியதற்காக பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட் ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் கோயிலுக்குள் செல்ல பஜ்ரங்தள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் பிரபல நடிகை ஆலியா பட்டை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் ரன்பீர் கபூர் … Read more

ஆள விடுங்க.. இப்போதைக்கு உணவு, குரோசரி டெலிவரி கிடையாது.. டெலிவரி நிறுவனங்கள் கைவிரிக்கிறதா?

பெங்களூர்: கடந்த சில தினங்களாகவே வெள்ளத்தில் மிதந்து வரும் டெக் சிட்டியான பெங்களூரில், ஒரே நாள் இரவில் 130 மிமீ மழை கொட்டி தீர்த்ததால் பல இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. மக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் டிராக்டர்களில் பயணம் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் வீடுகளிலேயே முடங்கும் நிலை இருந்து வருகின்றது. ஏற்கனவே பல ஐடி நிறுவனங்கள் வீட்டில் இருந்து … Read more

பாரத் ஜோடோ யாத்ரா: இன்று தொடங்குகிறார் ராகுல் காந்தி… ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை, இன்று மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபம் முன்பு இருந்து தொடங்குகிறார். அதை முன்னிட்டு, இன்று காலை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்குச் சென்றார். நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்த ராகுல் அங்கு மரக்கன்று ஒன்றையும் வைத்தார். இந்த யாத்திரை … Read more

ஓணம் பண்டிகையையொட்டி பழனி- கொடைக்கானல் சாலையில் இலகு ரக வாகனங்கள் செல்ல ஆட்சியர் அனுமதி

திண்டுக்கல்: பழனி- கொடைக்கானல் சாலை மழைக்கு சேதமடைந்த நிலையில் இலகு ரக வாகனங்கள் செல்ல ஆட்சியர் விசாகன் அனுமதியளித்தார். ஓணம் பண்டிகையையொட்டி கேரள பயணிகள் சாலையை அதிகளவில் பயன்படுத்துவார்கள் என்பதால் அனுமதி வழங்கப்பட்டது. 

இட ஒதுக்கீடு வழக்குவரும் 13 முதல் விசாரணை| Dinamalar

புதுடில்லி, ‘கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் மீதான முழுமையான விசாரணை வரும் 13 முதல் துவங்கும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், 2019ல் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 2019 ஜனவரியில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் இந்த சட்ட திருத்தம் நிறைவேறியது. அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் … Read more

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி ஐபிஓ: இன்றே கடைசி.. வாங்கலாமா? வேண்டாமா?

தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை இரண்டாம் நாள் ஐபிஓவில் காலையிலேயே முழுமையாக முதலீட்டாளர்கள் வாங்கி குவித்தனர். இரண்டாம் நாள் முடிவில் தகுதியான முதலீட்டு நிறுவனங்கள் 0.98 மடங்கும், நிறுவன முதலீட்டாளர்கள் 1.27 மடங்கும், ரீடெயில் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 3.61 மடங்கும் என மொத்தமாக 1.53 மடங்காகத் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகளை வாங்கியுள்ளனர். இன்று கடைசி நாள் என்பதால் மேலும் அதிகமாக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்க்கண்டைல் ​​வங்கி ஐபிஓ.. முதல் நாளிலேயே … Read more

“இந்தியாவின் இருள் அகற்றுவோம்; மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" – சூளுரைத்த பிரகாஷ் காரத்

“இந்தியாவின் இருள் அகற்றுவோம், மோடி ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற முழக்கத்துடன் சி.பி.எம் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவு பொதுக்கூட்டம் சென்னை பெரம்பூரில் நடைபெற்றது. வடசென்னை மாவட்ட செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். சி.பி.எம் பொதுக்கூட்டம் `மகசேசே விருது பெற வேண்டாம்’ – சி.பி.எம் முன்னாள் … Read more

அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்…

சென்னை: அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு இன்றுமுதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் இளங்கலை படிப்புக்கான விண்ணப்பங்கள் முடிவடைந்து கல்லூரிகள் ஜூலை இறுதியில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த  நிலையில் முதுநிலை படிப்புக்காக  அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில்   24,341 இடங்களுக்கு இன்று முதல்  செப்டம்பர் 16ம் தேதி வரை இந்த இணையதளத்தில் … Read more

ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது

திண்டுக்கல்: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்க போராட்டம் நடத்த சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையிலிருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்ற போது திண்டுக்கலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூ.2.42 கோடி தங்கம்கடத்தல்: 2 பேர் கைது| Dinamalar

சிலிகுரி: மேற்கு வங்கத்தில், ‘ஷூ’ வுக்குள் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.2.42 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை, வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்து, நேற்று இருவரை கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருவர் தங்கம் கடத்திச் செல்வதாக, வருவாய் நுண்ணறிவுப் பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற அதிகாரிகள், இருவரை கைது செய்தனர்.அவர்கள் ஷூவுக்குள் மறைத்து வைத்திருந்த ௨௯ தங்க பிஸ்கட்டுகளை பறிமுதல் … Read more