நடிகர் பிரபுவை சீண்டிய ஜெயராம்… ரசித்த ரஜினிகாந்த்…

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் 1 படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் விழாவில் கலந்து கொண்டார், தவிர விழாவுக்கு வந்திருந்த ரஜினியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். Superstar @rajinikanth in #PONNIYINSELVAN Trailer and Songs Launch With @ManiRatnamFC @my_aishwarya #AishwaryaRaiBachchan #aishwaryarai #Rajinikanth #PonniyinSelvantrailer … Read more

அரியலூர் அருகே ஐகோர்ட் வழக்கறிஞர் வெட்டிக் கொலை

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அணைக்குடம் கிராமத்தில் திருமணத்திற்கு வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த நாச்சியார் கோயிலை சேர்ந்த சாமிநாதன் என்பவரை முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்தனர். தா.பழூர் போலீசார் மற்றும் ஜெயங்கொண்டம் டி எஸ் பி கலைக்கதிரவன் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தடயவியல் குழு புதிய தகவல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மும்பை : டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவா் சைரஸ் மிஸ்திரி (54), மும்பை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தாா். இந்த விபத்து நிகழ, சம்பவம் நடந்தப் பகுதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே காரணம் என்று தடயவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். சைரஸ் மிஸ்திரி: ‘டாடா சன்ஸ்’ தலைவராக இருந்த தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி, 54, மஹாராஷ்டிராவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். கடந்த 2012ல் அதன் … Read more

ஆதார் மூலம் வங்கி பேலென்ஸ் செக் செய்வது எப்படி..? ரொம்ப ஈசி..!

ஆதார் அட்டை மூலம் பல சேவைகள் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. இதன் அடிப்படையில், தனிநபர்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி இண்டர்நெட் இணைப்பு இல்லாமல் தங்கள் தொலைப்பேசிகளில் தங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பண இருப்பைச் சரிபார்க்கலாம். இது ஸ்மார்ட்ஃபோன் இல்லாத மற்றும் இணைய இமைப்பு இல்லாத மூத்த குடிமக்கள் மற்றும் பெரியவர்களுக்குப் புதிய சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் 134 கோடிக்கும் அதிகமான ஆதார் அட்டைகள்.. ஜூலையில் மட்டும் எவ்வளவு? … Read more

How to: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? |How To Store Breast Milk?

தாய்ப்பால் குழந்தைகளுக்கு உயிர் அமிர்தம். ஆனால், பணிபுரியும் பெண்கள் மற்றும், பயணம் உள்ளிட்ட சூழ்நிலைக் காரணங்களால் சில பெண்களால் குழந்தைகளுக்குத் தேவையான நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போகலாம். அவர்கள், தாய்ப்பாலை சேமித்து வைத்து, தேவையான நேரத்தில் குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை எப்படி சேமிப்பது? எந்தெந்த வகைகளில் சேமிக்கலாம்? இங்கு பார்க்கலாம்… தாய்ப்பால் How To: ஒரு ரோஜா செடியிலிருந்து பல செடிகள் உருவாக்குவது எப்படி? | Explainer Video தாய்ப்பாலை சேமிப்பதற்கு முன், மார்பகங்கள் மற்றும் … Read more

படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார் ராகுல் காந்தி

நாகர்கோவில்: பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை இன்று மாலை தொடங்கும் ராகுல்காந்தி, முன்னதாக, குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார். காந்தி மண்டபத்தில் முதல்வர் ஸ்டாலின் உடன் சென்று மரியாதை செய்ததுடன், அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்து பிரார்த்தனையில் கலந்துகொண்டார். இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக ஒற்றுமை யாத்திரை மற்றும் கட்சியைப் பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை … Read more

இந்தியாவை இணைக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்கிறது பாஜக: ப.சிதம்பரம் உரை

கன்னியாகுமரி: இந்தியாவை இணைக்க வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். இந்தியாவை பிளக்க வேண்டும் என்கிறது பாஜக என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உரையாற்றினார். பாரத் ஜுடோ யாத்ரா என்பதைத்தான் பாரதத்தை இணைக்கும் நடைபயணம் என்று சொல்கிறோம். இந்தியாவை பிளவுபடுத்தும் சக்திகளை வெளியேற்றும் வரை எங்கள் பயணம் தொடரும் என கூறினார்.

’ஜோய்லன் ஷோவான்’ புரியலையா? அதாங்க திருமண வாழ்த்து! வாணியம்பாடி வந்த தென் கொரியா மணமகள்!

Tamilnadu oi-Rajkumar R திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முனைவர் பட்டம் பெற்ற மணமகனுக்கும், தென் கொரியா நாட்டை சேர்ந்த மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், இரு விட்டு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், இவர் கோயம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். பின்னர் மேற்படிப்புக்காக தென் கொரியா நாட்டுக்கு சென்றார். அங்கே அவர் முனைவர் பட்டம் … Read more

தகவல் பாதுகாப்பு மசோதா விரைவில் தயார்: நிர்மலா சீதாராமன்| Dinamalar

புதுடில்லி: தகவல் பாதுகாப்பு மசோதா விரைவில் தயாராகிவிடும் எனவும், அது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பணியாற்றி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்த ‘தகவல் பாதுகாப்பு சட்டம் 2019 ‘ சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்று கொண்டது. இந்த சட்டத்தில் பார்லிமென்ட் நிலைக்குழு திருத்தங்கள் அளித்துள்ளதால் சட்டத்தை திரும்ப பெற்று கொள்வதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி அஸ்வினி கூறியிருந்தார்.இந்நிலையில், இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் ஏற்பாடு … Read more

எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை.. எல்லாம் சாதகம் தான்.. ரஷ்யா அதிபர் பரபர கருத்து!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், உலக நாடுகள் பலவும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்த மோதல் பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு எந்த இழப்பும் இல்லை என கூறியுள்ளார். எனினும் உண்மையில் அதன் உலகளாவிய செல்வாக்கை மீட்டெடுக்கும் ஒரு புதிய இறையாண்மை போக்கை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று கூறப்படும் இந்த தாக்குதலில், ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதாகவும் எதையும் இழக்கவில்லை என்றும் புதின் கூறியுள்ளார். … Read more