12வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் கொரோனா தடுப்பூசி! ஜோ பைடன் தகவல்

வாஷிங்டன்: 12வயதுக்கு மேற்பட்ட அமெரிக்க மக்களுக்கு  ஆண்டுதோறும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்படும் என்று அதிபர் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா பெருந்தொற்று சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி, உலக நாடுகளின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது. இருந்தாலும் கொரோனா தொற்று போன்ற நோய்தொற்றுகளை தடுக்க தடுப்பூசிகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க … Read more

கோலி, ராகுல் அதிரடி.. ஆப்கன் அணிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆப்கானிஸ்தான் அணிக்கு 213 ரன்களை இந்திய அணி வெற்றி இலக்காக நிறையித்தது. துபாயில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமதுநபி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி;  20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடர்நது 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கன் அணி அகளமிறங்க உள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி – 122, கே.எல்.ராகுல் 62 … Read more

கோடீஸ்வரர்களை திக்குமுக்காட வைத்த பெங்களூர் மழை.. ரூ.30 கோடி வீடு, பென்டலி கார் எல்லாம் போச்சு..!

இந்தியாவின் ஐடி நகரமாகப் பெங்களூர் அதிகப்படியான மழை காரணமாக மோசமாகப் பாதித்துள்ளது, குறிப்பாகப் பெரும் பணக்காரர்களை இந்த மழை வெள்ளம் பெரிய அளவில் பாதித்துள்ளதால் அனைத்து மட்டங்களிலும் பெங்களூர் நிலை குறித்து விவாதம் நடந்து வருகிறது. பெங்களூரில் புதிதாக உருவாக்கப்பட்ட இடங்கள், வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பகுதிகள், பணக்காரர்களுக்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வீட்டுப் பகுதிகள் என இந்நகரத்தின் எதிர்காலம் எனப் பெருமைக் கொள்ளப்படும் இடங்கள் அனைத்தும் இந்த மழை வெள்ளத்தில் பாதித்துள்ளது. இதிலும் குறிப்பாக இந்த … Read more

தெலங்கானா: “நான் பெண் என்பதாலேயே பாரபட்சம் காட்டுகிறார்கள்!” – கவர்னர் தமிழிசை

தெலங்கானாவின் கவர்னராக பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ‘தெலங்கானா மக்களுக்கான சேவையில்’ என்ற நிகழ்ச்சி தெலங்கானா ஆளுநர் மாளிகையில் இன்று நடைப்பெற்றது. அந்த நிகழ்ச்சியில், ”தன்னலமற்ற சேவையில் சுயத்தை மீண்டும் கடைப்பிடிப்பது” என்ற தலைப்பில் நூலை வெளியிட்டு பேசிய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், ”முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு பல முறை அழைப்பு விடுத்தும், அவர் கவர்னர் மாளிகைக்கு வர மறுக்கிறார். உண்மையான அன்புடன் மக்களுக்கு பணியாற்ற விரும்பினேன். ஆனால் அந்த முயற்சிக்கு பல தடைகள் … Read more

தமிழகத்தில் அக்டோபர் முதல் மின் கட்டண உயர்வு – 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு! அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை: தமிழகத்தில் அக்டோபர்  மாததம் முதல் மின் கட்டணம் உயர்வு அமலாசுகும் என்றும், 50ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்படு உள்ளது என்றும்  தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் செந்தில்பாலாஜி, மின் கட்டண உயர்வுக்கு மின்சார  ஒழுங்குமுறை ஆணையத் தின் ஒப்புதல் விரைவில் கிடைக்க உள்ளது. அது கிடைத்தவுடன், திருத்தப்பட்ட புதிய மின் கட்டணத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளார் என்றார். … Read more

ரூ.47.72 கோடியில் கட்டப்பட்டுள்ள மதுரை தமுக்கம் கலையரங்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: ரூ.47.72 கோடியில் கட்டப்பட்டுள்ள மதுரை தமுக்கம் கலையரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

லடாக்: கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா-சீனா படை வாபஸ் தொடக்கம்- தணியும் எல்லை பதற்றம்!

India oi-Mathivanan Maran டெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் யுத்த பதற்றத்தைத் தணிக்கும் வகையில் கோக்ரா – ஹாட்ஸ்பிரிங் எல்லையில் இந்தியா, சீனா படைகள் தங்களது ராணுவத்தினரை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. சீனாவுடன் பேச்சுவார்த்தை இந்தப் … Read more

வலிமையான இந்தியாவை நோக்கி முன்னேறுகிறோம்: மோடி பேச்சு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வலிமையான இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுகிறோம் என கர்தவ்யா பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி பேசினார். டில்லியில் கர்தவ்யா பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அங்கு இந்தியா கேட் பகுதியில் 28 அடி உயர நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைத்து சிலைக்கு மலர் தூவி மரியதை செலுத்தினார். பின்னர் மோடி பேசியதாவது, கர்தவ்யா பாதை திறந்து வைக்கப்பட்டது … Read more

இந்த பங்குகள் உங்கள் வசம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. நிபுணர்கள் பலே கணிப்பு!

சிமெண்ட் பங்குகளின் விலையானது கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகின்றன. இதற்கிடையில் சிமெண்ட் பங்குகளின் விலையானது இனி அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் சிமெண்ட்டின் தேவையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறது. இது கடந்த ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் 2 – 3% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே மூன்று ஆண்டுகள் அடிப்படையில் CAGR விகிதம் 5 – 6% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒயின் ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை … Read more

“நான் அவர்களின் வேலைக்காரியல்ல..!" – நேதாஜி சிலை திறப்பு விழாவை புறக்கணித்த மம்தா

டெல்லி இந்தியா கேட் அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 28 அடி உயர சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்துவைத்தார். அதேபோல புதுப்பிக்கப்பட்ட ராஜ்பாத் சாலைக்கு `கர்தவ்யா பாதை’ என மறுபெயரிடும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வதற்கான அழைப்பு முறையாக இல்லாததால், தான் கலந்துகொள்ளவில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நேதாஜி சிலை இது குறித்து, கொல்கத்தாவில் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய … Read more