கேரளாவில் 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு…

டெல்லி: கேரளா அரசின் பரிந்துரையை ஏற்று 2 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்து அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். துணைவேந்தர்கள்  நியமனம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், ஆளுநர் துணைவேந்தர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  துணைவேந்தர்கள் விவகாரத்தில்,  கேரள அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டது;  இதையடுத்து புதிய துணைவேந்தர்களாக சஜி கோபிநாத், சிசா தாமஸ் ஆகியோர் துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மாநில அரசுகளுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே மோதல் … Read more

குமரி மாவட்டத்தின் ரெயில்வே கோரிக்கைகள் – மத்திய மந்திரியிடம் விஜய் வசந்த் எம்.பி. மனு

புதுடெல்லி, புதிய ரெயில்கள், ரெயில் நிறுத்தங்கள், ரெயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பேசினார். கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் மக்கள் கோரிக்கையை வலியுறுத்திய விஜய் வசந்த், கீழ்கண்ட முக்கிய கோரிக்கைகளையும் முன் வைத்தார். நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி … Read more

Naturals: நடிகை ஸ்ரீலீலாவை `பிராண்ட் தூதராக' அறிவித்த நேச்சுரல்ஸ் சலூன்ஸ்

தொழில்முனைவோர்களால் முன்னெடுக்கப்படும் உலகிலேயே மிகப்பெரிய சலூன் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் சலூன்ஸ், நடிகை ஸ்ரீலீலாவை தனது புதிய பிராண்டு தூதராக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,000 தொழில்முனைவோரை உருவாக்கி, 15,000-க்கும் மேற்பட்ட ஒப்பனைக் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குதல் என்ற இலக்கை நோக்கி இந்த பிராண்டு துடிப்புடன் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நேச்சுரல்ஸ் சலூன்ஸ் பிராண்டு தூதராக ஸ்ரீலீலா ஒற்றைப் பிராண்ட், ஃப்ரான்சைஸ் (தனியுரிமை) அடிப்படையிலான வணிக மாதிரியில் கட்டமைக்கப்பட்ட நேச்சுரல்ஸ், … Read more

தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் அரசுக்கு மற்றொரு கண்! காலநிலை மாற்றம் குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சி ஒரு கண் என்றால், சுற்றுச்சூழல் என்பது அரசுக்கு மற்றொரு கண் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின்,  இந்தியாவுக்கு வழிகாட்டும் நிலையில் தமிழகம் இருக்கிறது  என்றவர், அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் டிட்வா புயல் சேதம் தவிர்க்கப்பட்டது  என சென்னையில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சியில்  தெரிவித்தார். காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பான குழுவின் 3வது கூட்டம், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அப்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு … Read more

பொன்முடியை பதறி ஓட வைத்தவர், மயிலம் பக்கம் ஒதுங்குவது ஏன்? – தொகுதி மாறும் சி.வி.சண்முகம்!

பொன்முடி ராஜ்ஜியம் விழுப்புரம் மாவட்டத்தை சுமார் கால் நூற்றாண்டு காலம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, அங்கு முடிசூடா மன்னனாக வலம் வந்தவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. 1989 சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்முடி, அதற்கடுத்து வந்த 1991 தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதேசமயம் 1996, 2001, 2006 என அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று தொகுதியை தக்க வைத்துக் கொண்டார். இந்த வெற்றிகள் அவரை கட்சித் தலைமைக்கு நெருக்கமாக அழைத்துச் சென்றதால், … Read more

அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கு! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் நேரு மீதான நகராட்சி நிர்வாகத்துறை, குடிநீர் வாரியம் ஊழல் குறித்து வழக்கு பதிய கோரிய வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து,  தமிழ்நாடு அரசு பதில் அளிக்க  உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சர் நேருவின் துறையான நகராட்சி துறையில், அரசு பணிக்கு ரூ.35லட்சம் பணம் பெற்றதாகவும், குடிநீா் வழங்கல் துறை நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றது மற்றும் டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மாநில டிஜிபிக்கு கடிதம் … Read more

தங்கம் விலையை நிலைப்படுத்த இந்திய அரசு என்ன செய்துள்ளது? – நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் பதில்!

எப்போதுமே இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீது தனி சென்டிமென்ட் உண்டு. ஆனால், நேற்று முன்தினம் அதன் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி, இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது. ஆம்… தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை உயர்வு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண் நேரு மற்றும் சுதா எழுப்பிய கேள்விகள்… அதற்கு மத்திய நிதி அமைச்சக இணை அமைச்சர் … Read more

அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்! ராமதாஸ் தலைமையிலான பாமக நிர்வாக குழுவில் தீர்மானம்!

விழுப்புரம்: அன்புமணி மீதான ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர்  ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற  பாமக நிர்வாக குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையோ அலையோ என அலைகிறார் அன்புமணி என ராமதாஸ் தரப்பில் கடுமையாக விமர்சித்ததுடன், “அன்புமணி ராமதாஸ் இல்ல.. அன்புமணி மட்டும்தான்.. என் பெயரை பயன்படுத்தக் கூடாது” என்றும் கறாராக ராமதாஸ் கூறியுள்ளார்.  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  இன்று சென்னை … Read more

அம்பானியின் வந்தாராவில் மெஸ்ஸி – சிங்கம், புலிகளுடன் புகைப்படம் | Photo Album

வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி வந்தாராவில் மெஸ்ஸி Source link

காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது! ப.சிதம்பரம்

சென்னை: காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் 100நாள் வேலை திட்டத்தின் பெயர் மாற்றப்படுவது  என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாத்மா காந்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில்,   காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் மத்திய அரசு  டிசம்பர் 16ந்தேதி புதிய  மசோதாவை  அறிமுகம் செய்தது.  … Read more