சபரிமலையில் கன்னடர்களுக்கு உரிய வசதி: கேரள அரசுக்கு கர்நாடக தலைமை செயலாளர் கடிதம்

பெங்களூரு, கேரள அரசின் தலைமை செயலாளருக்கு கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனீஸ் நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கேரளாவில் உள்ள சபரிமலைக்கு கர்நாடகத்தில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக மண்டல பூஜையையொட்டி நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 3 மாதங்களில் அதிகளவில் பக்தர்கள் அங்கு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை தாங்கள் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். உரிய போக்குவரத்து வசதிகளை … Read more

ஜனாதிபதியின் விளக்க கேள்விகள் மீது சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு

புதுடெல்லி, சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதிக்கும், கவர்னருக்கும் காலக்கெடு நிர்ணயித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 விளக்க கேள்விகளை சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் தொட்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 10 நாட்கள் விசாரணை நடத்தியது. செப்டம்பர் 11-ந்தேதி நடந்த இறுதி விசாரணையின்போது தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் இன்று (வியாழக்கிழமை) … Read more

அசாமில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவு

திஸ்பூர், அசாமின் சோனித்பூர் பகுதியில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மதியம் 3.35 மணியளவில் ரிக்டர் அளவில் 2.9 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.60 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.66 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை. அசாமில் அடிக்கடி … Read more

அஜித் தோவலுடன் வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு

டெல்லி, தலைநகர் டெல்லியில் இன்று 7வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் இந்தியா, இலங்கை உள்பட பல்வேறு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனிடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாநாட்டில் பங்கேற்கும்படி வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மானுக்கு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அழைப்பு விடுத்தார். இந்நிலையில், அஜித் தோவலின் அழைப்பை ஏற்று வங்காளதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரஹ்மான் இன்று இந்தியா வந்தார். அவர் … Read more

"தனுஷ் மீது நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை" – நடிகை மான்யா விளக்கம்!

நடிகை மான்யா ஆனந்த், நடிகர் தனுஷ் குறித்து பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது. இந்த விவகாரம் வைரலானதை தொடர்ந்து மான்யா ஆனந்த் தற்போது இது குறித்து ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். சின்னத்திரையில் தொடர்களில் நடித்து வரும் மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட சில சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். ஆனால் அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சமூக வலைதளங்களில் வேறு விதமாகப் பரவத் … Read more

“20 வயதில் குழந்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்" – ஶ்ரீதர் வேம்பு பேச்சும், கிளம்பிய விவாதங்களும்!

இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரும் சிக்கலுக்குரியதாக மாறி வரும் நிலையில், ஜோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு தன் எக்ஸ் பக்கத்தில் 20 வயதில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டிருக்கிறார். அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் துணை தலைவரும் நடிகர் ராம்சரணின் மனைவியுமான உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். ஶ்ரீதர் வேம்பு அதில் “அண்மையில் நான் IIT ஹைதராபாத் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது … Read more

10-வது முறையாக நாளை முதல்வராகிறார் நிதிஷ்; கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர் பதவி? | முழு லிஸ்ட்

பீகாரில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஜே.டி.யு + பா.ஜ.க தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றியாக 202 இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலை விட 15 இடங்கள் அதிகமாக 89 இடங்களில் பா.ஜ.க-வும், 42 இடங்கள் அதிகமாக 85 இடங்களில் ஐக்கிய ஜனதா தளமும் வெற்றிபெற்றன. நிதிஷ் குமார் – மோடி முக்கியமாகக் கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஓர் இடத்தில் மட்டுமே வென்ற சிராக் பஸ்வானின் லோக் … Read more

"S.I.R என்பது குடியுரிமை, எதிர் வாக்குகளை நீக்கும் பாஜகவின் செயல்திட்டம்" – திருமா

‘S.I.R’ எனும் சிறப்புத் தீவிரத் திருத்தம் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படுவதை எதிர்த்து திமுக – காங்கிரஸ் கூட்டணி கட்சிகளால் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பங்கேற்காத தவெக தனியாக ‘S.I.R’யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போது வி.சி.க, திருமாவளவன் தலைமையில் சென்னையில் நவ 24ம் தேதி ‘S.I.R’யை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவிருக்கிறது. SIR “S.I.R. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்” … Read more