டெல்லி கார் வெடிப்பு – அல்பலா பல்கலைக்கழக குழும தலைவர் கைது

புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் பயங்கரவாத சதியில் நடந்துள்ளது என்பதை புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த சம்பவத்தில் உயிர்ப்பலி எண்ணிக்கை முதலில் 8, பின்னர் 10, அதன்பின்னர் 13 என உயர்ந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் இரவு லுக்மான் (வயது … Read more

ஆந்திராவில் முக்கிய மாவோயிஸ்டு தலைவன் உள்பட 6 பேர் சுட்டுக்கொலை.. யார் இந்த மத்வி ஹித்மா..?

ராய்ப்பூர். சத்தீஸ்கர் மாநிலத்தில் முற்றி மாவோயிஸ்டுகளை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ஏராளமான மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பலர் சரண் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திரா, சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்ட எல்லையில் அமைந்துள்ள அல்லுரி சீதாராமராஜ் மாவட்ட காட்டுப்குதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். … Read more

இயற்கை வேளாண்மை மாநாடு: பிரதமர் மோடி வருகையையொட்டி கோவையில் கடும் கட்டுப்பாடுகள் – போக்குவரத்து மாற்றம், டிரோன்கள் பறக்க தடை

கோவை: கோவை கொடிசியாவில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர்  மோடி நாளை (நவ.19)  வருகை தர  உள்ள நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கோவை கொடிசியா மற்றும் முக்கிய பகுதிகளில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபபட்டு உள்ளனர். மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவை வரும் பிரதமரிடம் இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் … Read more

ஆம்புலன்ஸ் தீப்பற்றி எரிந்து கோரவிபத்து: பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பலி

காந்தி நகர், குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டம் மோடசா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு நேற்று குழந்தை பிறந்தது. பச்சிளம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று இரவே மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் அகமதாபாத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் குழந்தையின் தந்தை, செவிலியர்கள், டாக்டர் உள்பட 7 பேர் பயணித்தனர். இந்நிலையில், மோடசா – தன்சுரா நெடுஞ்சாலையில் நள்ளிரவு சென்றுகொண்டிருந்தபோது ஆம்புலன்சில் திடீரென தீப்பற்றியது. உடனடியாக ஆம்புலன்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். ஆம்புலன்சில் இருந்து டிரைவர் உள்பட 3 பேர் கிழே … Read more

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள்! தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக  தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவில் 41நாள் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருந்து, தினசரி லட்சக்கணக்கானவர்கள் சபரிமலை வந்து செல்வார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிகம் பேர் சபரிமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில்,   சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் … Read more

முத்தம் கொடுக்க முயன்ற கள்ளக்காதலனின் உதட்டை கடித்து துப்பிய இளம்பெண் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சாம்பி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அதேவேளை, சாம்பிக்கும் அதேகிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலை வளர்த்துள்ளனர். இதனிடையே, அந்த இளம்பெண்ணுக்கு வீட்டில் பெற்றோர் வெறொரு நபருடன் திருமணம் ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால் கள்ளக்காதலை முறித்துக்கொள்ளும்படி சாம்பியிடம் அந்த இளம்பெண் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்கமறுத்த சாம்பி தன்னுடன் தொடர்ந்து கள்ளக்காதலில் இருக்கும்படி அந்த பெண்ணை வற்புறுத்தியுள்ளார். … Read more

அரபிக்கடலை நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தென்தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,  அரப்பிக்கடலை நோக்கி நகர்வதால், தென் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். மேலும் அடுத்த 5 நாளில் புதிய புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது. வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்துள்ளது. … Read more

உ.பி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் – அதிர்ச்சி சம்பவம்

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் பலியா மாவட்டம் மணியர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் கொலு ராஜ்பார் (வயது 22). இவர் அதேகிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஜுன் மாதம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனிடையே, சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்குமுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். … Read more

"இயற்கையை நேசிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்" – K.K.S.S.R. ராமச்சந்திரன்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு வனத்துறை – ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் இணைந்து நடத்தும் ‘வனமும் வாழ்வும்’ என்ற தலைப்பிலான ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இதை ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் முருகன் முன்னிலையில், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது, “இயற்கையை நேசிக்க ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். … Read more

மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது! திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசம்

சென்னை: மக்களின் வாக்குரிமையை பறிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது, எஸ்ஐஆரில் பெரும் குழப்பம் உள்ளது திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ ஆவேசமாக கூறினார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், எதிர்ப்பை மீறி வாக்காளர் திருத்தம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று செய்தியளாரகளை சந்தித்த  … Read more