வார விடுமுறை: இந்த வாரம் 920 சிறப்பு பஸ்கள் இயக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரம்,  வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள்  இயக்கப்பட உள்ளதாக விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த பேருந்து சேவைகள் நாளை (வெள்ளி) முதல்  நடைபெறும் என கூறியுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து  நாளை திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 340 பஸ்களும்,  நாளை மறுநாள் … Read more

கனடாவில் இருந்து புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – டெல்லியில் தரையிறக்கம்

புதுடெல்லி, கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. இந்நிலையில், அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். அதே சமயம், விமானத்தில் இருந்த ஊழியர்கள் அவசரகால பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர். இதனை … Read more

நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் – காரணம் என்ன?

அமெரிக்காவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கவாய் சமீபத்தில் கூறிய கருத்துக்களுக்கு எதிராக நியூயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதனை Stop Hindu Genocide என்ற அமைப்பு ஒருங்கிணைத்திருக்கிறது. நீதிபதி கவாய்க்கு எதிராக அமெரிக்கா வாழ் இந்துக்கள் போராட்டம் – காரணம் என்ன? இந்த அமைப்பு கடந்த நவம்பர் 8ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு நேரடியாக ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறது. அதில், இந்திய … Read more

நவம்பர் 15ஆம் தேதி பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம்! ராமதாஸ் அறிவிப்பு

சென்னை:  வரும்  (நவம்பர்) 15ந்தேதி அன்று  பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை மாநில செயற்குழு கூட்டம் நடைபெறும் என பாமக நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் அறிவித்துள்ளார். பாமகவில் தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் நாளுக்கு நாள்  பெரிதாகி வருகிறது. ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டும் பணியில் தங்களது ஆதரவாளர்கள் மூலம்  தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கிடையில் பாமகவின் சின்னம் உள்பட கட்சி தலைவர் பதவியை அன்புமணி பெற்றுள்ளார். இதை எதிர்த்து ராமதாஸ் தேர்தல் … Read more

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கவில்லை: திமுக வழக்கறிஞர் வில்சன்

புதுடெல்லி, மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி தரவில்லை என திமுக வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ”2018-ல் திட்ட … Read more

'பிச்சையா எடுக்க முடியும்.. இன்னும் பல தொழில் தொடங்குவேன்' – அண்ணாமலை பரபரப்பு விளக்கம்

கோவையில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தென்னிந்திய இயற்கை விவசாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி கோவை வருகிறார். அப்போது 50க்கும் மேற்பட்ட விவசாய விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். நாட்டுக்குள் தீவிரவாதம் உற்பத்தியாகக் கூடாது. அண்ணாமலை இதில் தமிழக முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும். ஒன்றிணைந்து சமூக ஒற்றுமையை பேண வேண்டும். சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து, குற்றங்கள் பெருகி … Read more

தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லம் உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்!

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக தோழி விடுதிகள், “பூஞ்சோலை” கூர்நோக்கும் இல்லங்கள்  உள்பட புதிய கட்டடங்கள் கட்டும் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்ககல் நாட்டினார். தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் . ரூ.62.51 கோடி மதிப்பீட்டில் 740 பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் 12 புதிய தோழி விடுதிகள் அமைக்கும் பணி, ரூ.27.90 கோடி மதிப்பீட்டில் கோயம்புத்தூர் “பூஞ்சோலை” அரசினர் மாதிரி கூர்நோக்கு இல்லம் மற்றும் திருச்சிராப்பள்ளி அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு புதிய கட்டடங்கள் கட்டும் … Read more

மகிழ்ச்சி: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு…

சென்னை:  தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு  அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  இந்த  அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்தஅகவிலைப்பட உயர்வு கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டுவழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுடள்ளது. இதன்மூலம்,   அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி … Read more

“41 பேர் உயிரிழந்தாலும், அன்பு குறையவே இல்லை; மக்கள் விஜய் பக்கம்தான்'' – தவெக அருண்ராஜ் பேட்டி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல், நிர்வாக நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் இருந்த த.வெ.க, இப்போது மெல்ல மெல்ல மீண்டும் இயங்கத் தொடங்கியிருக்கிறது. தவெக வை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி சில தந்திரங்களைச் செய்து பார்த்தார். ஆனால், நவ.5ஆம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்ததில் கூட்டணி பேச்சுவார்த்தை முயற்சிகள் அடிப்பட்டு போய்விட்டன. அருண்ராஜ் “கே.என்.நேரு கிட்ட, ரூல்ஸ பாலோ … Read more