சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி மினி பேருந்துகள்! டெண்டர் கோரியது மாநகர பேருந்து கழகம்

சென்னை:  சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள  மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில்  நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக  ஏசி மினி பேருந்துகளை இயக்க சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் டென்டர் கோரி உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அருகிலுள்ள முக்கிய பகுதிகளை இணைக்க பயணிகளின் வசதிக்காக சுமார் 5 கிலோ மீட்டர் … Read more

மதுவுக்கு மாற்றாக `ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங்' பழக்கத்தை விரும்பும் Gen Z- என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதும் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக Gen Z-யினர் மத்தியில், மது அருந்தும் பழக்கம் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் நலன், நிதி பாதுகாப்பு மற்றும் மனநலன் போன்ற காரணங்களால் Gen Z தலைமுறையினரில் சுமார் 10-ல் 4 பேர் (அதாவது 36%) மது அருந்துவதை தவிர்ப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. Alcohol மதுவை நிராகரிக்கக் காரணம் என்ன? இந்த ஆய்வை யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் நடத்தியுள்ளது. … Read more

சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம்! சென்னை மாநகராட்சி அறிக்கை

சென்னை: சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம்  நடை பெறுகிறது, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவசர கால உதவிக்கு 1913 எண்ணை அழைக்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் 17.10.2025 அன்று முதல் 28.10.2025 வரை 624 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36,353 நபர்கள் பயனடைந்துள்ளனர். … Read more

உலகின் ஆடம்பர கார்களில் மற்றொரு அடையாளம் ”டொயோட்டா செஞ்சூரி” | Automobile Tamilan

டொயோட்டாவின் லெக்சஸ் கடந்து புதியதாக ஒரு ஆடம்பர பிராண்டினை டொயோட்டா செஞ்சூரி ஆக நிலை நிறுத்தப்பட உள்ளதை உறுதி செய்து கூபே ஸ்டைலை அறிமுகம் செய்துள்ளது. மற்றொரு பிராண்ட் போல அல்லாமல் உலகின் ஆடம்பர கார்களின் வரிசையில் உள்ள ரோல்ஸ்-ராய்ஸ், பென்ட்லீ போன்றவற்றுக்கு சவால் விடுக்கும் வசதிகளை பெற்றதாக நிலை நிறுத்தப்பட உள்ளதாக டொயோட்டா உறுதிப்படுத்தியுள்ள நிலையில் 2026ல் முதற்கட்டமாக ஜப்பான் சந்தையில் செஞ்சூரி கூபே விற்பனைக்கு கிடைக்க உள்ளது. Toyota Century Coupe ஜப்பான் மொபிலிட்டி … Read more

மெலிசா: `நூற்றாண்டின் புயல்’ 174 ஆண்டுகளுக்குபின் ஜமைக்காவை தாக்கிய கடும் புயல்; அதிர்ச்சி காட்சிகள்

ஜமைக்கா நாட்டில் நேற்று கடுமையான சூறாவளி புயல் வீசியது. இந்தப் புயலுக்கு பெயர் மெலிசா. ஜமைக்கா நாட்டில் கடந்த 174 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, இந்தப் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புயல் குறித்த முக்கிய விவரங்கள் இங்கே… நேற்று 300 கி.மீ வேகத்தில் நகர்ந்த மெலிசா புயல், ஜமைக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள தீவுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு பெரும் மழை மற்றும் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மெலிசா புயல் தாக்கம் … Read more

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்…

மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா   நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் … Read more

Career: மாதம் ரூ.11.25 லட்சம் வரை சம்பளம்; SBI வங்கியில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பிராடக்ட், முதலீடு மற்றும் ஆய்வுத் துறையில் தலைவர், ரீடெயில் துறையில் மண்டலத் தலைவர், பிராந்திய தலைவர் போன்ற ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணிகள். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 103 வயது வரம்பு: ஒவ்வொரு பணிகளுக்கேற்ப வயது வரம்பு மாறுபடுகிறது. குறைந்தபட்சமாக 25, அதிகபட்சமாக 50 (சில பிரிவினருக்குத் தளர்வுகளும் உண்டு) சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.135 லட்சம்; … Read more

110கி.மீ. வேகத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது மொன்தா புயல்…

சென்னை: பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மொன்தா புயல், தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர கடற்பகுதியில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சுமார் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2 மணி நேரமாக பலத்த காற்றுடன் கரையை கடந்த மொன்தா புயல் காரணமாக,  கடலோரப் பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொன் புயலுக்கு ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது. வங்கக் கடலில் … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்; 1-ந்தேதி ‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்

சென்னை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு … Read more

செஞ்சி, சிங்கவரம் ரங்கநாதர் கோயில்: வராஹ ரூபமாய்த் தோன்றி வழிகாட்டிய பேசும் பெருமாள் கோயில்!

மகாவிஷ்ணு, சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் பல தலங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையானது ஸ்ரீரங்கம் என்றாலும் அதற்கு இணையான பெருமையை உடையது சிங்கவரம். செஞ்சிக்கு அருகில் இருக்கும் இந்தத் தலத்துக்கு விஷ்ணு செஞ்சி என்கிற பெயர் உண்டு. தற்போதைய செஞ்சியை சிவ செஞ்சி என்கின்றன பழம் நூல்கள். அந்த அளவுக்கு விஷ்ணு தலமாக விளங்குகிறது சிங்கவரம். செஞ்சி மாநகரில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் சிறப்புகளைக் காண்போம். பல்லவ மன்னன் ஒருவன் வளர்த்த தோட்டத்தைப் … Read more