தலைப்பு செய்திகள்
டெல்லி கார் குண்டுவெடிப்பு: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!
டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, கடந்த 10ஆம் தேதி (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இந்த … Read more
டெல்லி கார் வெடிப்பு: சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிச்சயமாக தண்டனை நிறைவேற்றப்படும் – அமித்ஷா
புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே மெதுவாக வந்த ஹுண்டாய் ரக கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பான பலத்த சத்தம், பல மீட்டர் தொலைவில் இருந்தவர்களுக்கும் கேட்டது. புகை வான்வரை பரவியது. சாந்தினி சவுக் சந்தை உள்பட பல முக்கிய பகுதிகள் இதனருகே … Read more
டெல்லி கார் குண்டு வெடிப்பு குற்றவாளி உமர்நபி! டிஎன்ஏவில் உறுதி – பெற்றோர்கள் அதிர்ச்சி
டெல்லி: தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது மருத்துவர் உமர்நபி தான் என்பது DNA பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டடுள்ளது. இது அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நவம்பர் 10ந்தேதி அன்று டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையம் கார் நிறுத்தும் இடத்தில் மாலை நேரத்தில் பலத்த சத்ததுடன் கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பைக் மற்றும் நான்கு … Read more
கார் வெடிப்பு எதிரொலி; ரெயில், விமான பயணிகளுக்கு டெல்லி காவல் இணை ஆணையாளர் அறிவுறுத்தல்
புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை மாலை 6.52 மணியளவில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே ஹுண்டாய் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து, எரிந்தது. இதன்பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் பற்றி என்.ஐ.ஏ. மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்ததும் அந்த இடத்தில் டெல்லி காவல் துறை … Read more
“ஒரு தவறும் செய்யவில்லை; அடி மேல் அடி, நொறுங்கிப் போனேன்" – மத தாக்குதல் பற்றி ஜெமிமா ஓபன்!
ஜெமிமா ரோட்ரிக்ஸ்… இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் இனி மறக்க முடியாத பெயர். நடந்து முடிந்த மகளிர் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று அரைநூற்றாண்டுக் கனவை நனவாக்கியிருக்கிறதென்றால் அதில் தவிர்க்கமுடியாத பங்களிப்பைக் கொடுத்தவர் ஜெமிமா. இந்த லீக் போட்டியில் வென்றால்தான் அரையிறுதிக்குச் செல்ல முடியும் என்ற நெருக்கடியான போட்டியில் நாட் அவுட் வீராங்கனையாக 76 ரன்கள் அடித்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் – Ind vs Aus world cup semi … Read more
மகளிர் நலமே சமூக நலம்: ரூ.40 கோடியில் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிருக்காக, ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ ஊர்திகளை இன்று தொடங்கி வைத்தார். மு.க.ஸ்டாலின்..! புற்றுநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மகளிருக்கான 38 நடமாடும் மருத்துவ ஊர்திகள் சேவை தொடக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மகளிர் நலமே சமூக நலம் என முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இந்த மருத்துவ ஊர்திகள், தலா ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டது. இந்தஅதிநவீன நடமாடும் மருத்துவ ஊர்தியை முதலமைச்சார் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ், … Read more
கர்நாடகாவில் பரபரப்பு; 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்
பாகல்கோட், கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போ ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய தலைவர்களுடன் முதல்-மந்திரி சித்தராமையா அடுத்தடுத்து கூட்டங்களை நடத்தினார். இதுபற்றி பிரதமர் மோடிக்கும் கடிதம் ஒன்றை எழுதினார். இந்நிலையில், இந்த விசயத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பெலகாவியில் வி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் கற்களை வீசி … Read more
ரூ.2.6 கோடிக்கு குஜராத் அதிரடி வீரரை ட்ரேட் செய்த மும்பை; கூடுதலாக LSG-யிலிருந்து ஒரு ஆல்ரவுண்டர்!
அடுத்தாண்டு ஐ.பி.எல் சீசனுக்கான மினி ஏலம் டிசம்பரில் நடக்கவிருக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் ஏலத்தில் விடும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும். இவ்வாறான சூழலில்தான், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ட்ரேடிங் முறையில் ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கப்போவதாகத் தீவிரமாகப் பேச்சு அடிபடுகிறது. IPL (ஐ.பி.எல்) இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிலிருந்து ஒரு ஆல்ரவுண்டரையும், குஜராத் … Read more