டெல்லி கார் குண்டு வெடிப்பு: 2 கார்களை தேடும் பணி தீவிரம்

புதுடெல்லி, டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன. இந்த வெடிச்சம்பவம் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போல இருந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் இந்த சம்பவம் சாதாரணமானதாக தெரிவிக்கப்பட்டது. … Read more

இந்தியா வரவுள்ள 2026 கியா செல்டோஸ் டிசம்பர் 10ல் அறிமுகம் | Automobile Tamilan

கியா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற 2026 செல்டோஸ் எஸ்யூவி மாடலில் முதன்முறையாக ஹைபிரிட் பவர்டிரெயின் ஆப்ஷனை பெற்றதாக இந்திய சந்தைக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் சர்வதேச அளவில் டிசம்பர் 10ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோற்ற அமைப்பில் சமீபத்தில் அறிமுகம் செயப்பட்ட புதிய டெல்லுரைடு அடிப்படையிலான டிசைனை பகிர்ந்து கொள்ள உள்ள செல்டோஸ் காரின் முன்புறத்தில் மாறுபட்ட எல்இடி ரன்னிங் விளக்குடன் மிக நேர்த்தியான எல்இடி ஹெட்லைட் மற்றும் செங்குத்தான கிரல் அமைப்பு … Read more

"அதிமுக ஆலமரத்தில் அடைகாத்து குஞ்சு பொரித்தவர்கள் வருவார்கள்… போவார்கள்…!"- சி.விஜயபாஸ்கர்

புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த, அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டச் செயலாளருமான சி.விஜயபாஸ்கர், “ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குப் பிறகும் வாக்காளர் சீர்திருத்தப் பணி என்பது நடைபெறக்கூடிய வழக்கமான பணி. இரட்டை வாக்குப்பதிவு நீக்கப்பட வேண்டும், இறந்தவர்களை நீக்க வேண்டும், புதிய வாக்காளர்களைச் சேர்க்கவேண்டும். இதற்கெல்லாம் சீர்திருத்தம் செய்யவேண்டும். தேர்தல் ஆணையத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தப் பணியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, சீர்திருத்தப் பணியை வெளிப்படையாக, நேர்மையாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். c.vijayabaskar எத்தனை முனைப் … Read more

கே.என்.நேரு, அன்பில் மகேஷ் வீடு உள்பட திருச்சியின் பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் – பரபரப்பு

திருச்சி: அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி வீடு  உள்பட திருச்சியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சென்னையில், அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப மாதங்களாக தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் புற்றீசல் போல அதிகரித்து வருகிறது.  சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், முக்கிய தலைவர்கள் வீடு, … Read more

சிவகாசி: சூடுபிடிக்கும் ரயில்வே மேம்பால விவகாரம்: "எங்கள் ஐயா மோடி; எங்கள் டாடி!" – ராஜேந்திர பாலாஜி

சிவகாசியில் அ.தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி முகாமில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் போன்ற விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கு எல்லாம் அனுமதி பெற்றது அ.தி.மு.க ஆட்சி காலத்தில்தான். உங்களால் (தி.மு.க-வினால்) மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற முடியுமா? மத்திய அரசில் ஆட்சியில் இருப்பது உங்கள் ஐயா இல்லை, எங்கள் ஐயா மோடி. எங்கள் டாடிதான் அதிகாரத்தில் உள்ளார். மாணிக்கம் தாகூர் … Read more

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டுக்கான பொது விடுமுறைப் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டிற்கான அரசுப் பொது விடுமுறை நாட்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு 2026-ம் ஆண்டிற்கான பொது விடுமுறைப் பட்டியலை புதன்கிழமை (12.11.2025) வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு விடுமுறை நாட்கள் பட்டியல்: விடுமுறை    நாள்    கிழமை ஆங்கிலப் புத்தாண்டு – ஜனவரி 1 – வியாழன் பொங்கல்  –  ஜனவரி 15  –  … Read more

Hongqi Bridge: சீனாவின் 'ஹாங்கி பாலம்' சரிவு – வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் புதிதாக திறக்கப்பட்ட பாலம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. நிலச்சரிவு மற்றும் பாலத்தின் கட்டமைப்பின் பலவீனம் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சிச்சுவான் மாகாணத்தின் மார்காங் பகுதியில் அமைந்துள்ள இந்த ‘ஹாங்கி பாலம்’ (Hongqi bridge) 758 மீட்டர் நீளம் கொண்டது. சிச்சுவான், சீனாவின் மத்திய பகுதிகள் மற்றும் திபெத் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டிருந்த மலைப்பகுதி … Read more

சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் தகவல்…

சென்னை: சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என  காவல்ஆணையர் அருண் கூறியுள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்) வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவின் இல்லம் உட்பட பல பிரபலங்களின் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதேபோல், நேற்றும் (நவம்பர் … Read more

BB Tamil 9: "மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது" – பார்வதியிடம் கோபப்படும் திவாகர்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 5 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்தப் போட்டியில் தற்போதுவரை 7 பேர் வெளியேறி இருக்கின்றனர். கடந்த வாரம் துஷாரும், பிரவீன் ராஜூம் வெளியேறி இருக்கின்றனர். BB Tamil 9 இதனைத்தொடர்ந்து இந்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் நடைபெற்றது. பார்வதி, சபரி, திவ்யா கணேஷ் போட்டியிட்ட நிலையில் சபரி டாஸ்க்கில் வெற்றி பெற்று இந்த வார பிக் பாஸ் வீட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். BB Tamil 9: … Read more

‘உடன்பிறப்பே வா’: இன்று புதுக்கோட்டை உள்பட 3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை..!!

சென்னை: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று 3 தொகுதி திமுக நிர்வாகிகளுடன்  ஆலோசனை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி,  தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.  திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின்  அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்க மாவட்டங்களுக்கு செல்லும்போது திமுகவினரிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுமட்டுமின்றி  உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக முக்கிய  திமுக … Read more