அதிகரித்துள்ள போதைபொருள் நடமாட்டம்: திமுக அரசுக்கு எதிராக வைகோ 10 நாள் நடைபயணம் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக  போதைபொருள் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், அதை தடுக்க அரசை வலியுறுத்தியும்,   மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், திமுக கூட்டணி கட்சியான மதிமுக பொதுசெயலாளர் வைகோ  தமிழக அரசுக்கு எதிராக 10 நாட்கள்  நடைபயணம் அறிவிப்பு  வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பயன்பாடு மற்றும் அதனால் அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்கள் போன்றவைற்றை தடுக்க வலியுறுத்தியும்,  பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் … Read more

செல்போன் செயலி வழியாகவே ஆதார் கார்டு திருத்தம் செய்யலாம்: வருகிறது சூப்பர் வசதி

இந்தியாவில் ஆதார் அட்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் ரெயில் டிக்கெட் புக்கிங் வரை பல சேவைகளுக்கு அதார் எண் கேட்கப்படுகிறது. 12 இலக்க எண் கொண்ட இந்த ஆதார் கார்டில் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. … Read more

சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி; 'சென்னைஸ் அமிர்தா' மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று சாதனை!

உலக சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் சார்பில் இந்தியாவில் முதல்முறையாக நடந்த ‘சர்வதேச சமையல் கலைத் திறன் போட்டி’யில் ‘சென்னைஸ் அமிர்தா’ மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்கள். SICA எனப்படும் ‘தென்னிந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கம்’ சென்னையில் நடத்திய இந்த போட்டியில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், இலங்கை போன்ற பல நாடுகளைச் சேர்ந்த 3200-க்கும் மேற்பட்ட பிரபலமான சமையல் கலை வல்லுனர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். அவர்களோடு போட்டியிட்டு, வென்று, தங்கப்பதக்கங்களை அள்ளி … Read more

டிரம்ப் நிர்வாகம் உணவு சலுகைகளை உடனடியாக வழங்க வேண்டியதில்லை அமெரிக்க உச்சநீதிமன்ற உத்தரவால் 4.2 கோடி மக்கள் அச்சம்…

அமெரிக்காவில் அரசு முடக்கம் (shutdown) ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கிறது. இதன் காரணமாக அரசின் உணவு உதவி திட்டமான SNAP (Supplemental Nutrition Assistance Program) மூலமாக வழங்கப்படும் உணவு சலுகைகள் தாமதமாகியுள்ளன. டிரம்ப் நிர்வாகம் “இப்போதைக்கு SNAP சலுகைகளின் முழுத் தொகையை உடனே வழங்க வேண்டிய அவசியம் இல்லை” என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. நவம்பர் மாத உணவு சலுகைகளை வழங்க அமெரிக்காவின் சில மாநிலங்களுக்கு அவசர நிதி மற்றும் பிற நிதிகளைப் … Read more

கேரள முன்னாள் மந்திரி காலமானார் – தலைவர்கள் இரங்கல்

திருவனந்தபுரம், கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ரெகுசந்திரபால் (வயது 75). இவர் 1991 முதல் 1995 வரையிலான கேரள காங்கிரஸ் அரசில் மாநில கலால் துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். ரெகுசந்திரபால் அரசியல் மட்டுமின்றி, கவிதை எழுதுதல், நாடகம் எடுத்தல் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார். இந்நிலையில், வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரெகுசந்திரபால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி ரெகுசந்திரபால் இன்று உயிரிழந்தார். ரெகுசந்திரபாலின் … Read more

The Girlfriend Review: `சால பாகுந்தி சினிமா ரா!' – எப்படி இருக்கிறாள் இந்த `தி கேர்ள்ப்ரண்ட்'?

முதுகலைப் பட்டப்படிப்பிற்காக வெளியூருக்கு வருகிறார் பூமா தேவி (ராஷ்மிகா). பிறக்கும்போதே தாயை இழந்த பூமா தேவி, தந்தையினால் வளர்க்கப்பட்டவர். கல்லூரியில் கணிதவியல் துறையைச் சேர்ந்த விக்ரம் (தீக்‌ஷித் ஷெட்டி) என்பவருடன் பூமாவுக்குக் காதல் மலர்கிறது. பூமாவின் ஆசைகள் அத்தனையையும் ஆணாதிக்க எண்ணம் கொண்டு தடுக்கிறார் விக்ரம். The Girlfriend Review விக்ரமின் இந்த செயல்கள், பூமாவை ஒரு கட்டத்திற்கு மேல் டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் சிக்கி விட்டோமோ, நம்முடைய எதிர்காலம் என்னவாகும் எனச் சிந்திக்க வைக்கிறது. காதல் வாழ்க்கையிலிருந்து … Read more

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்…

சென்னை:   வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில்  இன்று தென்மாவட்டங்களின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டில்,  வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து  பரவலாக மிதமானது முதல் … Read more

சத்தீஷ்காரில் 7 நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த நிலையில், சத்தீஷ்காரில் உள்ள கரியாபந்த் பகுதியில் 7 நக்சல்கள், தங்களது ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் குறித்து … Read more

கிலோ ரூ.12,500: நோயை எதிர்த்து போராடும், அதிக விலையுள்ள அரிசி ஜப்பானில் அறிமுகம்!

ஆசியாவில் உள்ள நாடுகளில் பல்வேறு வகையான கலாச்சாரம், மொழி இருந்தாலும் சாப்பாட்டில் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருப்பது அரிசி மட்டுமே. அதுவும் தெற்கு ஆசியாவில் சாப்பாட்டிற்கு அரிசி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. அந்த அரிசி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக விளைவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான ரக அரிசிகளை விளைவிக்கிறது. அதோடு ஒவ்வொரு நாட்டிலும் அரிசியை சமைக்கும் விதமும் மாறுபடுகிறது. இந்த அரிசியை மட்டும்தான் மக்களால் மலிவு விலையில் வாங்கி சாப்பிட முடிகிறது. ஆனால் இப்போது … Read more

எஸ்ஐஆர் தொடர்பாக நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக  நாளை தி.மு.க மாவட்ட செயலாளர்கள்  காணொளி காட்சி மூலம் நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் (எஸ்ஐஆர்) பணிகள் நவம்பர் 4ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் விவாதிக்க உள்ளார். இதுதொடர்பாக  திமுக பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்ஐஆர் குறித்த விவாதிக்க நாளை தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கழக தலைவர் … Read more