கார் வெடிப்புக்கு காரணமானோர் மீது கடும் தண்டனை – ராஜ்நாத் சிங்

புதுடெல்லி, டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ஹுண்டாய் ஐ 20 கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயங்களுடன் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நடந்த இடத்தில் நாட்டின் அனைத்து புலனாய்வு அமைப்புகளும் விசாரணைத் தொடங்கியிருக்கும் நிலையில், முதல்கட்டமாக முகமது உமர் என்ற டாக்டர் தனது கூட்டாளிகளுடன் … Read more

26 நாள் தேடுதல்; 300 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு; கடத்தப்பட்ட குழந்தை மீட்பு-தம்பதி கைது

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே சேலம்-கொச்சி நெடுஞ்சாலையில் கோணவாய்க்கால் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட வெங்கடேஷ் – கீர்த்தனா தம்பதி வசித்து வந்தனர். அவர்களது ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனா கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி, இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, கொசு வலையை அறுத்து அடையாளம் தெரியாத நபரால் கடத்தப்பட்டார். குழந்தை கடத்தல் தொடர்பாக தொடக்கத்தில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர், மேலும் 4 தனிப்படைகள் என மொத்தம் 7 … Read more

மகாராஷ்டிராவில் இருந்து திருப்பதி, மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்குபூஜைக்காக மகாராஷ்டிராவில் இருந்து  திருப்பதி, திருவண்ணாமலை,  மதுரை வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில் விடப்படுவதாக  தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. கார்த்திகை மாதம்  சபரிமலை சீசன் தொடங்கவுள்ளது. நவம்பர் 16 முதல் டிசம்பர் 27 வரை மண்ட பூஜை நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து,  மகரவிளக்கு பூஜை 2026 ஜனவரி 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பனை தரிசிக்க மண்டல … Read more

பிஎம்டபிள்யூ F 450 GS அட்வென்ச்சர் அறிமுகமானது | Automobile Tamilan

2025 EICMA அரங்கில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் குறைந்த விலை அட்வென்ச்சர் மாடலாக ட்வீன் சிலிண்டர் பெற்ற F 450 GS விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவிலும் வெளியிடப்பட வாயப்புள்ளது. இந்த பிஎம்டபிள்யூ பைக்கினை டிவிஎஸ் மோட்டார் மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. BMW F 450 GS புதிதாக வடிவமைக்கப்பட்ட 420cc லிக்யூடு கூல்டு parallel-twin என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 8,750 rpmல் பவர் 48 bhp … Read more

மேற்கு ஆப்பிரிக்காவில் கடத்தப்பட்ட 5 இந்தியர்களில் இருவர் தமிழர்கள் – மீட்க குடும்பத்தினர் கோரிக்கை

மேற்கு ஆப்பிரிக்கா நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. அதனை எதிர்த்து பல்வேறு தீவிரவாத குழுக்கள் அல்காய்தா, ஐ.எஸ். அமைப்புகளின் உதவியோடு செயல்பட்டு வருகின்றன. இந்த தீவிரவாத குழுக்கள் வெளிநாட்டினரை கடத்துவதும், அவர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவிப்பதும் வழக்கமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோப்ரி பகுதியில் செயல்படும் மின்சார நிறுவனத்தில் ஐந்து இந்தியர்கள் தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளனர். இதன்பிறகு, மற்ற பணியாளர்கள் பாமோகோ என்ற நகருக்கு பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். West … Read more

தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்து, பெயர் சூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்

விருதுநகர்: சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையங்களுக்கிடையில் இடையே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், அந்த மேம்பாலத்து தியாகி சங்கரலிங்கனார் மேம்பாலம்”  என  பெயர் சூட்டினார். குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும் சிவகாச நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள சாட்சியாபுரத்தில் அமைந்திருக்கும் இரயில்வே கேட் ஒவ்வொரு முறையும் மூடப்படும்போது, பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்ததோடு, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களும், அவசரமாக மருத்துவமனை செல்லும் மக்களும் நீண்டநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. … Read more

மாணவியை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்; போக்சோவில் கைது செய்யப்பட்ட காவலர் சஸ்பெண்ட்

விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவர் சந்தோஷ்குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கயல்விழியும் (இருவரது பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) ஒருவரையொருவர் காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த நவம்பர் 5-ம் தேதி வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற இருவரும், மாலை வீடு திரும்பாமல் மாயமானார்கள். பதறிப்போன மாணவியின் பெற்றோர் ஆரோவில் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பாலியல் துன்புறுத்தல் அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாயமான சிறுமி … Read more

தர்மேந்திரா நலமுடன் உள்ளார் – வதந்திகளை பரப்பாதீர்கள்! ஹேமமாலினி வேண்டுகோள்

மும்பை: நடிகர் தர்மேந்திரா காலமானதாக செய்திகள் பரவிய நிலையில்,   தர்மேந்திரா உடல்நிலை என்ன? என்பது குறித்து அவரது மனைவி ஹேமமாலினி விளக்கம் அளித்துள்ளார்.  வதந்திகளை பரப்பாதீர்கள் என  வேண்டுகோள் விடுத்துள்ளார். தர்மேந்திரா நலமுடன் உள்ளார் – வதந்திகளை பரப்பாதீர்கள் என அவரது  மனைவி ஹேமமாலினி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுபோல,  தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தந்தை நலமுடன் உள்ளார், குணமடைந்து வருகிறார். அவர் விரைவில் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் … Read more

SIR : 'இன்னும் எங்களுக்கே SIR விண்ணப்பம் வரலை..' – திமுக ஆர்ப்பாட்டத்தில் கலகல!

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சென்னை சிவானந்தா சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தவாக, விசிக போன்ற கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டவை. திமுக ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் பேசுகையில், ”தேர்தலுக்கு முன்பாக Summary Intensive Revision என வைப்பார்கள். இறந்தவர்களின் பெயரை நீக்குவதற்காக … Read more

திருச்சி காவலர் குடியிருப்பில் இளைஞர் படுகொலை சம்பவம்! முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது

திருச்சி: திருச்சியில் நேற்று முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்தில், திருச்சி காவலர் குடியிருப்புக்குள் உள்ள போலீசாரின் வீட்டுக்குள் புகுந்த இளைஞர் ஒரு கும்பலால் வெட்டி  படுகொலை சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த கொலை தொடர்பாக  முக்கிய குற்றவாளி உள்பட 4 பேர் கைது செய்ப்பட்டு உள்ளனர். முக்கிய குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் கூறி உள்ளனர். திருச்சி  பீமநகரை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவர் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் … Read more