"இன்ஜின் இல்லாத கார் திமுக; அதை கூட்டணி என்ற லாரி இழுக்கிறது" – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “2026-ல் அதிமுக ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. இது ஒரு ஜனநாயகக் கட்சி. உழைப்பவர்களுக்கு இங்கு மரியாதை உண்டு. அவர்களுக்கு வீடு தேடி பதவி தருவோம். திமுகவில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டுமே ஆட்சி அதிகாரம் கிடைக்கும். அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி. 8 கோடி மக்களைச் சுரண்டி ஒரு குடும்பம் வாழ்கிறது. உதயநிதி ஸ்டாலின், மு.க. … Read more

சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! சிஎம்ஆர்எல் அறிவிப்பு…

சென்னை: சென்ட்ரல் டூ விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  சிஎம்ஆர்எல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு வழியாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே நேரடி மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறால் கோயம்பேடு வழியாக மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு பச்சை வழித்தடத்தில் பயணிப்பவர்கள், ஆலந்தூரில் நீல வழித்தடத்துக்கு மாற அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் … Read more

பணப் பறிப்பு, கொலை மிரட்டல், ஜான் பாண்டியன் நட்பு! – சீரியல் நடிகை ராணி மீதான புகாரின் பின்னணி என்ன?

‘என்னிடம் பத்து லட்சம் ஏமாற்றியதுடன் எனக்குச் சொந்தமான விலையுயர்ந்த காரையும் பறித்துக் கொண்டு மோசடி செய்து விட்டார்’ பல ஹிட் சீரியல்களில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ராணி மற்றும் அவரது கணவர் மீது இப்படியொரு புகாரைக் கொடுத்திருக்கிறார் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷ் என்பவர். இவர் கொடுத்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது காவல் துறை. முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் விவகாரத்தின் சுருக்கம் இதுதான். தினேஷ் என்பவர் கரூரில் ஒரு … Read more

12 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ்: பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம் ! தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் படிவங்களை வழங்க ஜன.18 வரை அவகாசம்  வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை  தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், எஸ்.ஐ.ஆர்-க்கு பின் தமிழ்நாட்டில் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற 12.43 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி இதுவரை 7.28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயரை நீக்கக் கோரி 9,410 பேர் மனு அளித்துள்ளனர். இந்த படிவங்களை […]

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.! | Automobile Tamilan

ரெனால்ட் இந்தியாவின் அனைத்து மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், கார்களின் விலையில் சுமார் 2 சதவீதம் வரை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் க்விட், ட்ரைபர், கைகர் போன்ற வாகன உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் தற்போதைய பொருளாதாரச் சூழல் காரணமாகவே இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. வரும் ஜனவரி 26, 2026 அன்று தனது … Read more

திருத்தணி: வடமாநில இளைஞர் தாக்குதல் சம்பவத்தில் நடந்தது என்ன?- ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம்

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) கஞ்சா போதையில் 4 சிறுவர்கள் வடமாநில இளைஞரை வழிமறித்து கத்தியால் குத்தி தப்பித்துச் சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் குரல் கொடுத்திருந்தனர். இன்று இயக்குநர் மாரி செல்வராஜ் இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். Represental Images இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் வடமாநில … Read more

ஜனவரி 5ந்தி இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! அமைச்சர் தகவல்…

சென்னை; 2026 ஜனவரி 5ந்தேதி மாணவ மாணவிகளுக்கு  இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும், இதையடுத்து  மாநிலம் முழுவதுழம் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என  உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார். ஏற்கனவே டிசம்பர் 19ந்தேதி இலவச லேப்டாப் வழங்கும் திட்டம்  தொடங்கி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறிய நிலையில், தற்போது ஜனவரி 5ந்தேதி என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  திமுக … Read more

'அறிவாலயம் முற்றுகை; கருணாநிதி நினைவிடத்தில் போராட்டம்!' – தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது

தனியார்மயத்தை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தையும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சமாதியையும் முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறை குண்டுக்கட்டாக கைது செய்தது. தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் சென்னை ரிப்பன் பில்டிங் வெளியே மண்டலங்கள் 5-6 யைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடங்கினர். தனியார்மயமாக்கலை எதிர்த்தும் … Read more

புலம் பெயர் தொழிலாளியை வெட்டிய திருத்தணி “புள்ளிங்கோ” சம்பவம்! தமிழக அரசு விளக்கம்!

சென்னை: நாடு முழுவதும்அதிர்வலைகளை ஏற்படுத்திய, புள்ளிங்கோ கும்பல் திருத்தணி ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளி சுராஜ் மீது கத்தியால் வெட்டி  தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருத்தணி ரயில் நிலையம் அருகே,  கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள், ‘ரீல்ஸ்’ மோகத்தால், வடமாநில வாலிபரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வெட்டுப்பட்ட வடமாநில வாலிபர் உயிருக்கு போராடி வருகிறார். இதுதொடர்பான வீடியோ உலகம் முழுவதும் … Read more

Parasakthi: ''அந்தத் தைரியம் உங்களுக்கு இருக்குனு சுதா மேம் சொன்னாங்க" – பராசக்தி குறித்து ரவி மோகன்

சிவகார்த்திகேயனின் 25-வது படமான ‘பராசக்தி’ பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருக்கிறார். அவரைத் தாண்டி அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். முதலில் இத்திரைப்படம் ஜனவரி 14-ம் தேதி வெளியாவதாக அறிவித்திருந்தனர். அதன் பிறகு இப்படத்தின் ரிலீஸை ஜனவரி 10ஆம் தேதிக்கு மாற்றினர். Parasakthi பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் புரொமோஷனுக்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படம் பேசும் விஷயங்களை மையப்படுத்தி ஒரு கண்காட்சியைத் … Read more