இந்தியாவில் அறிமுகமாகிறது டிரைவர் இல்லாத கார்!

பெங்களூரு, தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகி வருகின்றன. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பது போல், ஏ.டி.எம். இட்லி கடை, ஓட்டல்களில் உணவு பரிமாறும் ரோபோ, தோசை சுடும் ரோபோ, வீட்டு வேலைகளுக்கு ரோபோ பயன்பாடு என பெங்களூரு இன்றைய வளர்ச்சிக்கு ஏற்ப தன்னை கட்டமைத்து வருகிறது என்றால் மிகையல்ல. அந்த வரிசையில் தற்போது டிரைவர் இல்லாத கார் பெங்களூருவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆம் பெங்களூருவில் உள்ள விப்ரோ, இந்திய அறிவியல் நிறுவனம் ஆகியவற்றுடன் … Read more

“2 நாள் உனக்கு டைம்; என்னுடைய வீரியத்தை பார்ப்பாய்'' – பெண் அதிகாரியை தரக்குறைவாக பேசிய விசிக மா.செ

கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறி மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ஆதரவாக நேற்று நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு … Read more

ஜப்பான் பெண் பிரதமருக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து

புதுடெல்லி, ஜப்பான் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக சனே தகைச்சி கடந்த வாரம் பதவியேற்றார்.இந்நிலையில், அவரை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியா-ஜப்பான் சிறப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், பொருளாதார பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதித்தனர். உலக அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் வலிமையான இந்தியா-ஜப்பான் உறவு அவசியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். இருதரப்பு உறவை அதிகரிக்க நெருங்கி பணியாற்றுவது என இருவரும் முடிவு செய்தனர். 1 … Read more

‘56 அங்குல மார்பு இன்னும் அமைதியாக இருக்கிறது’ பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கடும் தாக்கு

புதுடெல்லி, இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை நிறுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறார். ஜப்பான், தென்கொரியா நாடுகளில் சமீபத்தில் பேசும்போதும், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியதாக தம்பட்டம் அடித்துக்கொண்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி அமைதி காப்பதை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் டிரம்ப் பேசியது குறித்த வீடியோ பதிவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு கூறுகையில், ‘இது ஒரு சில நிமிடங்களுக்கு … Read more

டெல்லியில் மேக விதைப்பு சோதனை நிறுத்திவைப்பு

புதுடெல்லி, கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (ஐ.ஐ.டி) இணைந்து டெல்லி அரசு நேற்று முன்தினம் 2 முறை மேக விதைப்பு சோதனைகளை நடத்தியது. ஆனால் டெல்லியில் மழைப்பொழிவு இல்லை. சோதனைகளுக்கு பிறகு நொய்டாவில் குறைந்தபட்ச மழைப்பொழிவே பதிவானது.இதுகுறித்து கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- டெல்லியில் திட்டமிடப்பட்ட மேக விதைப்பு சோதனை மேகங்களில் போதுமான ஈரப்பதம் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை சரியான வளிமண்டல நிலைமைகளைப் பொறுத்து அமையும். தற்போது நடத்தப்பட்ட சோதனை … Read more

கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு! நேரடியாக ஆய்வு செய்தார் முதலமைச்சர் ஸ்டாலின்…

தென்காசி: தென்காசிக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், அங்க,  கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பேசிய மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ்  வழங்கப்பட உள்ளது. இந்த வீடு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வீட்டை  நேரடியாக  சென்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினை மாணவர்கள் சிலம்பம் சுற்றி  வரவேற்றனர். உடனே காரில் இருந்து இறங்கிய முதல்வர் ஸ்டாலின், மாணவ, மாணவிகளுடன் உற்சாகத்துடன் சிலம்பம் … Read more

“யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது?!’ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து அன்புமணி ராமதாஸ் கேள்வி…

சென்னை: சிபிஐ விசாரணையை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு இரண்டாவது முறையாக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில்,  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் யாரை காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மீண்டும், மீண்டும் மேல்முறையீடு செய்து யாரைக் காப்பாற்ற திமுக அரசு துடிக்கிறது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக … Read more

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? – அஸ்வின் பகிர்ந்த தகவல்!

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன. அதில் குறிப்பாக, குஜராத் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சென்னை அணிக்கு டிரேடிங் மூலம் பெறப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த சீசனை கடைசி இடத்தில் முடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலுப்படுத்த திறமையான வீரர்கள் வேண்டுமென ரசிகர்கள் … Read more