உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளரான ஸ்ரீ சரணிக்கு, தனது தாயகம் அளித்த வரவேற்பு மறக்க முடியாதது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தன் மகளின் கனவுக்காகப் போராடிய அவரது குடும்பத்தின் உழைப்பை மதிக்கும் வகையில், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, சரணியை நேரில் … Read more

பராமரிப்பு பணி: சென்னையில் 3 மண்டலங்களில் 9 மற்றும் 10ம் தேதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

சென்னை: பராமரிப்பு பணி காரணமாக 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகள் காரணமாக, அவ்வப்போது சில பகுதிகளில் குடிநீர் நிறுத்தப்பட்டு, பின்னர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேனாம்பேட்டை பகுதியில் நடைபெறும் மெட்ரோ பணிகள் காரணமாக, சில பகுதிகளில் குடிநீர் இரண்டு நாட்கள் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வாரியம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் , சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் … Read more

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோவை கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் அதிர்வலைகள் ஓய்வதற்குள் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட … Read more

இந்தியாவின் மிக அசுத்தமான நகரம் ‘மதுரை’ மாநகரம்! ஸ்வச் சர்வேக்ஷன் ஆய்வறிக்கையில் தகவல்…

டெல்லி: இந்தியாவின் மிக அசுத்தமான நகரம், தமிழ்நாட்டின் ‘மதுரை’ மாநகரம் என ஸ்வச் சர்வேக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாசம் மிகுந்த மதுரை மல்லிக்கு பெயர் போன தூங்கா நகரமான மதுரை மாநகரம், இன்று நாட்டிலேயே அசுத்தமான நகரம் என பெயர் பெற்றுள்ளது தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாடு அரசுக்கும், தமிழக மக்களுக்கும் தலைகுவினை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகராட்சி, ஏற்கனவே ஊழல் காரணமாக நாறி வரும் நிலையில், தற்போது நகரமே அசுத்தமாக காட்சி அளிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  … Read more

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி – ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகிய இருவரும் சிவகாசி அருகே உள்ள அச்சகத்தில் மரியராஜ் பணிபுரிந்து வருவதாக தகவல் அறிந்து, அவரை அழைத்து வருவதற்கு சென்றுள்ளனர். மரியராஜை காவலர் வினோத் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சிவகாசியிலிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் அழைத்துச் சென்றுள்ளனர். ஶ்ரீவில்லிபுத்தூர் … Read more

நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது.! செங்கோட்டையன்

சென்னை: நாங்கள் முன்மொழிந்து இருக்காவிட்டால் இ.பி.எஸ் முதலமைச்சராகி இருக்க முடியாது என்று கூறிய செங்கோட்டையன், அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாகப் பேச பா.ஜ.க-தான் என்னை அழைத்தது” என்று விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும்  எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்த செங்கோட்டையனின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 30ந்தேதி அன்று பசும்பொன் தேவர் ஜெயந்தியின்போது, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் இணைந்து மரியாதை செய்ததுடன், எடப்பாடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதையடுத்து அவரை கட்சியில் … Read more

அகமதாபாத் விபத்தில் விமானியை குறைசொல்ல முடியாது; அவரது தந்தை பழியை சுமக்க வேண்டியதில்லை – சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார். இந்த விபத்தை தொடர்ந்து டாடா குழுமத்திற்கு சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் விமானங்கள் மீது அவசரகால … Read more

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “என்னை அழைத்தது பாஜக தான். அங்கே என்ன நடந்தது என்பதை நான் வெளியே சொல்ல விரும்பவில்லை. கட்சி ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறினார்கள். நானும் அதையேதான் சொன்னேன். பாஜகவை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை. செங்கோட்டையன் எங்களை விட்டால் பாஜகவுக்கு வேறு வழி இல்லை எனக் … Read more

கமல்ஹாசன் பிறந்தநாள் – முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை:  நடிகரும், மநீம தலைவருமான  கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள், இதையொட்டி  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பன்முகத்திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்குக் கொண்டு சென்றிடும் தீராத கலைத்தாகமும் – பன்முகத்தன்மை மிக்க நம் நாட்டை நாசகர பாசிச சக்திகளிடமிருந்து மீட்கும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர்- கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்பு நிறை பிறந்தநாள் … Read more

‘வந்தே மாதரம்’ பாடல்; 150 ஆண்டுகள் நிறைவு – அஞ்சல் தலை, சிறப்பு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் முதன்முதலில் 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி ‘பங்கதர்ஷன்’ என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. பின்னர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி 1882-ல் அவரது புகழ்பெற்ற ‘ஆனந்தமடம்’ நாவலில் இந்த பாடலைச் சேர்த்தார். இந்த பாடலானது நாட்டின் நாகரிக, அரசியல் மற்றும் கலாசார உணர்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்திற்கு உத்வேகம் அளித்து, தேசிய பெருமை மற்றும் ஒற்றுமையை தொடர்ந்து தூண்டி வரும் … Read more