மொந்தா புயல் – தொடரும் கனமழை: சென்னை, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

சென்னை: வங்கக்கடலில் உருவாக்கி உள்ள மொந்தா புயல்  காரணமாக,  சென்னை, திருவள்ளூரில்  இன்று  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்  வலுவடைந்தது. இது இன்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநில கடற்கரையோரம் கரையை கடக்க உள்ளது.இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்தபடி ‘மோந்தா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  தற்போது  மொந்தா புயல் சென்னைக்கு 480 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் இன்று ஆந்திராவின் மசிலிப்பட்டிணம் – கலிங்கப்பட்டிணம் இடையே … Read more

14 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களை தொழிலாளர்களாக பயன்படுத்த ராஜஸ்தான் அரசு தடை

ஜெய்ப்பூர், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தொழிலாளர்களாக பணியமர்த்துவதைத் தடைசெய்யும் ‘ராஜஸ்தான் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் (திருத்தம்) அவசரச் சட்டம், 2025’-க்கு அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த தடை உத்தரவு தொடர்பாக ராஜஸ்தான் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த சட்டமானது, தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில், வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இந்த அவசரச் … Read more

கல்லூரி மாணவி கால்வாயில் பிணமாக மீட்பு: காரணம் என்ன? – போலீசார் விசாரணை

பெங்களூரு, கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் கோடகல் கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவரது மகள் சவுஜன்யா (வயது 17). இவர், கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. படித்து வந்தார். கடந்த 21-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சவுஜன்யா அதன் பின்னர் திரும்பி வரவில்லை. தனது மகளை சரணப்பா கிராமம் முழுவதும் தேடியும், விசாரித்தும் பார்த்தார். ஆனால் சவுஜன்யாவை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தனது மகளை காணவில்லை என்று கூறி கடந்த 24-ந் தேதி … Read more

அரையிறுதியில் இந்தியாவுக்குப் பின்னடைவு; காயத்தால் உலகக் கோப்பையிலிருந்து விலகிய பிரதிகா ராவல்!

நடப்பு மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள், இந்தியா vs வங்காளதேசம் போட்டியுடன் நேற்று நிறைவடைந்தது. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் அணியிறுதிக்கு முன்னேறியிருக்கின்றன. கடைசி 4 இடங்களைப் பிடித்த இலங்கை, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறிவிட்டன. ICC Womens world cup வரும் புதன் கிழமை (அக்டோபர் 29) முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களில் … Read more

வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி கிடையாது! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்..

சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை தமிழ்நாட்டில் ரோடு ஷோக்கு அனுமதி   வழங்கப்படாது என கரூர் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு  தெரிவித்துள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில்,  ‘ கட்சிக் கூட்டங்களுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக்கோரி வழக்கின் விசாரணை இன்று உயர்நீதி மன்றத்தில் தலைமைநீதிபதி அமர்வில் நடைபெற்றது. இந்த விசாரணையின்போதர, காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில்,  அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்வரை … Read more

பீகார்: சாத் பூஜையை முன்னிட்டு ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாட்னா, சூரியனைப் போற்றி வணங்கும் பண்டிகைகளில் முக்கிய பண்டிகை சாத் பூஜை ஆகும். பீகார், கிழக்கு உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள் மற்றும் இந்தப் பகுதிகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த மக்களாலும் இப்பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘பூர்வாஞ்சலிகள்’ மத்தியில் சாத் பூஜை மிகவும் பிரபலமானது. இந்நிலையில், தற்போது வடமாநிலங்களில் சாத் பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் சென்று புனித … Read more

”தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது திமுக அரசு ”! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை; ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசானது தமிழகத்தையே பட்டா போட்டு விற்க துடிக்கிறது, முன்னாள் முதல்வரும்,  அதிமுக பொதுச்செயளாலருமான  எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். பள்ளிக்கரணை சதுப்புநிலம்  திமுக அரசு மூலம், விதிகளை மீறி தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக சுமார்  2ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக  ஊழல்  அறப்போர் இயக்கம் குற்றம்  சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில்,  தமிழ்நாடு அரசு மற்றும் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு மீது கடுமையாக விமர்சனம் … Read more

பீகாரில் நாளை மறுநாள் பிரசாரம் செய்கிறார் ராகுல் காந்தி

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சி கூட்டணியில், தேர்தல் டிக்கெட்டுகள் பணத்துக்கு விற்கப்பட்டதாக அதிருப்தியாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இதுபோன்ற அதிருப்தியை சரிக்கட்டவும், காங்கிரஸ் கட்சிக்கு வியூகம் வகுக்கவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பீகாரில் முகாமிட்டுள்ளனர் .இந்தநிலையில் பீகாரில் 2 நாட்கள் ராகுல்காந்தி பிரசாரம் செய்யவுள்ளார். இது தொடர்பாக பேசிய காங்கிரச் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், ”சாத் பண்டிகைக்குப் பிறகு எங்கள் … Read more