யமஹா XSR155 வாங்குவதற்கு முன் தெரிந்திருக்க வேண்டியவை.! | Automobile Tamilan

இந்தியாவில் மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு உள்ளான மாடலான XSR155 நியோ ரெட்ரோ ஸ்டைலுடன் சக்திவாய்ந்த லிக்யூடு கூல்டு என்ஜின் பெற்று சிறப்பான வசதிகளுடன் விளங்குகின்ற இந்த பைக்கை வாங்குவதற்கு முன்பாக அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே பார்க்கலாம். XSR155 டிசைன் குறிப்பாக neo-retro வடிவமைப்பை விரும்பும் இளைய தலைமுறையினருக்கு, தினசரி நகர்ப்புற பயணத்தில் ஒரு நல்ல அனுபவம் தரும் மாடலாக விரும்பினால் யமஹாவின் நம்பகமான என்ஜினை கொண்டுள்ள எக்ஸ்எஸ்ஆர் 155 டிசைனை பற்றி முதலில் பார்க்கலாம். … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ்: "அந்த இரண்டு திறமையும் இருக்க நிரோஷா ஸ்பெஷலான பொண்ணு" – பூர்ணிமா பாக்யராஜ்

சிறந்த சின்னத்திரை கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா கடந்த அக்டோபர் 12ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இதில், 2024-ம் ஆண்டின் `ஃபேவரைட் மாமியார் மருமகள்’ விருதுகள் நிரோஷா, சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி உள்ளிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் -2’ நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்டன. நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இவ்விருதினை வழங்கி சிறப்பித்தார். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரண்யா துராடி, ஹேமா, ஹாலினி, நிரோஷா பூர்ணிமா பாக்யராஜ் பேசுகையில், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவ்வளவு நாள்களாக … Read more

ஏமாற்றம்: சாம்சங் ஆலைக்கு எதிராக ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது

சென்னை: சாம்சங் ஆலை  நிர்வாகம் 27 தொழிலாளர்களை பணி நீக்கத்தை எதிர்த்து, மாவட்ட  ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்ற சாம்சங் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சாம்சங் ஆலைக்கு எதிராக போராடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உறுதி அளித்த நிர்வாகம், அதை செயல்படுத்தாமல் 27 பேரை பணி நிக்கம் செய்துள்ளது. இதை கண்டித்து, சாம்சங் , நிர்வாகத்தை எதிர்த்து சாம்சங் தொழிலாளர்கள் பேரணி நடத்தினர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ஊதிய உயர்வு உள்பட பல்வேறு … Read more

“ரூ.5 லட்சம் சம்பளம்; வேலை இழந்ததால் மனைவி விவாகரத்து'' – டெலிவரி பாயாக மாறிய பட்டதாரி

சீனாவில் பட்டதாரி ஒருவர், தனது அதிக சம்பளம் கொண்ட வேலையை இழந்ததால், மனைவி அவரை விவாகரத்து செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஹாங்சோ நகரைச் சேர்ந்த 43 வயதான கியான்கியான், ஜெஜியாங் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றவர். இவர் ஒரு அரசு நிறுவனத்தில் மாதம் 50,000 யுவான் (சுமார் ரூ. 5.8 லட்சம்) சம்பளத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்தார். காதல் ஆன்லைன் விளையாட்டின் மூலம் சந்தித்த ஒரு பெண்ணை, திருமணம் செய்துகொண்டுள்ளார்.திருமணத்திற்குப் பிறகு, அவரின் … Read more

நவ.20ம் தேதி பதவி ஏற்பு விழா; 10வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்…

பாட்னா: பீகாரின் முதலமைச்சராக  ஜேடியு தலைவரான நிதீஷ் குமார்  10வது முறையாக நவம்பர் 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.  இது புதிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டபபேரவையில் தேர்தலில் பாஜக ஜேடியு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், புதிய முதல்வராக 10வது முறையாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்க உள்ளார். அவரது,  அமைச்சரவையில்  பாஜகவுக்கு  முக்கியவத்தும் வழங்கப்பட வாய்ப்பு உள்ளது. அவரது … Read more

4ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது மக்களை தேடி மருத்துவம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சியின் கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ளது  மக்களை தேடி மருத்துவம் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, நான்கு ஆண்டுகளில் 2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள #மக்களைத்_தேடி_மருத்துவம்! தடம் மாறாத பயணம் – தொற்றா நோய்களின் கட்டுப்பாடு எனச் சாதனை படைத்து, ஐ.நா. விருதை வென்ற இத்திட்டத்தின், 2 கோடியே 50 லட்சமாவது பயனாளியான தஞ்சை … Read more

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் – ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய ‘ஜென் Z’ போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் அரசாங்கம், காவல் மற்றும் ராணுவப் படைகளை அதிரவைத்தன. இந்த வரிசையில் தற்போது லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவும் இணைந்துள்ளது. ஏன் போராட்டம்? மெக்சிகோவில் தற்போது அதிகரித்து வரும் குற்றங்கள், மோசமான அரசியல் நிர்வாகம், ஊழல், போதைப்பொருள் புழக்கம், வன்முறை குற்றவாளிகளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவது, உருபான் … Read more

ரூ.97 கோடி செலவில் சென்னை அண்ணா நகரில் புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை:  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று சென்னை அண்ணா நகரில் அரசு வீட்டு வசதி வாரியததிற்காக  ரூ.97 கோடி செலவில் கட்டப்பட்ட  புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார். சென்னை அண்ணா நகரில் வீடில்லாதோருக்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில் ₹.97 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தமிழ்நாடு அரசின் கட்டடம் மற்றும் வீட்டுவசதி சார்பில் TNHB என அழைக்கப்படும் கட்டட மற்றும் … Read more

Maithili Thakur: “நான் பாடிய தமிழ் பாடல் வைரலாகி இருக்கு, அதனால்''- பீகாரின் இளம் MLA நெகிழ்ச்சி

பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் பிரபலமான நாட்டுப்புறப் பாடகியான 25 வயதுடைய மைதிலி தாக்கூர் என்பவர் அலிநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். மைதிலி தாக்கூர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் வினோத் மிஸ்ராவை விடவும் 11 ஆயிரத்து 730 வாக்குகள் அதிகம் பெற்று இளம் எம்.எல்.ஏ-வாகியிருக்கிறார். அவருக்கு … Read more