மாடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை தாக்கி 2 பவுன் செயின் பறிப்பு

ஐதராபாத், ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் பொட்டிகுண்ட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் சி.வெங்கடரத்னம்மா (வயது 56). இவர், கிராமத்துக்கு அருகிலுள்ள ஒரு மாந்தோப்பில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் வெங்கடரத்னம்மாவிடம் வந்தார். அவர், தனது பணப்பை இங்கே தவறி விழுந்து விட்டது, அதை தேடி எடுப்பதற்காக வந்தேன், எனக் கூறி பணப்பையை தேடுவதுபோல் நடித்து வெங்கடரத்னம்மாவை திடீரெனத் தாக்கி கீழே தள்ளிவிட்டு கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றார். அப்போது அவர் … Read more

Yamaha: யமஹாவுக்கு தமிழ்நாடு ஏன் முக்கியம்?

யமஹாவின் தொழிற்சாலை தமிழ்நாட்டில், அதுவும் சென்னையில்தான் செயல்பட்டு வருகிறது. அதனாலோ என்னவோ அதன் கவனம் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டின் மீது பதிந்து இருக்கிறது. இது பற்றி தெரிந்துகொள்ள யமஹாவின் மூத்த துணை தலைவர் ரவிந்தர் சிங்கிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.   பொங்கல் திருவிழா கலை கட்டும் இந்த நேரத்தில் இறங்கி அடித்து யமஹா விளையாடுவது ஏன்?  தமிழ்நாடு சந்தையில் யமஹாவின் தற்போதைய மார்கெட் ஷேர்தான் என்ன? குறிப்பாக சென்னை விற்பனை நிலவரம் எப்படி உள்ளது? ரவிந்தர் சிங் … Read more

பாமக எம்.எல்.ஏக்கள் 3 பேர் நீக்கம்.! ராமதாஸ் நடவடிக்கை – சபாநாயகருக்கு கடிதம்…

சென்னை: பாமகவில் இருந்து 3 எம்எல்ஏக்களை நீக்கம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.  அன்புமணி ஆதரவாளர்களான 3 எம்எல்ஏக்களை நீக்கி உள்ளார்.  இதுதொடர்பாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஏற்கனவே பாமக தலைவர் அன்புமணி, ராமதாஸ் ஆதரவாளர்களான ஜிகேமணி, சேலம் அருளை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில்,  தற்போது ராமதாஸ், அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்களான  பாலு உள்பட 3 எம்எல்ஏக்களை நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக எம்எல்ஏக்களின் பதவிகள் முடிய இன்னும் 4 மாதங்களே … Read more

முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் வாட காங்கிரஸ் கட்சியே காரணம்; ஒவைசி குற்றச்சாட்டு

மும்பை, மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஜல்னா மாநகராட்சி தேர்தலையொட்டி அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி எம்.பி. பங்கேற்று பேசியதாவது:- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கி உதவியது. பாகிஸ்தானின் 80 சதவீத ராணுவ தளவாடங்கள் சீனாவில் இருந்து பெறப்பட்டவையாகும். இருப்பினும் இந்திய அரசு சீன நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறது. மேலும், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு … Read more

ஊட்டி: பகலில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகரங்கள் – பனி மூட்டத்தால் முடங்கிய போக்குவரத்து!

குளிர்ந்த கடல் காற்று கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வீசுவதால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழைப்பொழிவு மற்றும் கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உறைபனி நிலவி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பரவலாக மழைப்பொழிவு தொடர்ந்து வருகிறது. பனி‌ மூட்டம் அதிலும் குறிப்பாக ஊட்டி, குன்னூர், குந்தா, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. … Read more

கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல்  வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது.  இதன் காரணமாக, இன்று கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்  என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளதுடன், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  வடகிழக்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு – வடமேற்கு … Read more

காஷ்மீர்: எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பறந்த பாகிஸ்தான் டிரோன்கள் விரட்டியடிப்பு

ரஜோரி, ஜம்மு மற்றும் காஷ்மீரில், போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் கூட்டாக நேற்று நடத்திய தேடுதல் வேட்டையின்போது, சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராமத்தில் இருந்து சீன தயாரிப்பு கைத்துப்பாக்கி, வெடிக்க தயார் நிலையிலுள்ள தோட்டாக்கள், சீன தயாரிப்பு கையெறி குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா-ரஜோரி பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்றிரவு சில டிரோன்கள் (ஆளில்லா விமானங்கள்) பறந்தன. … Read more

தஞ்சை மாவட்டம், திருபுவனம் நடுக்கம் தீர்த்த பெருமான்: நோய்களை நீக்கி மன நிம்மதி அருளும் தலம்!

அசுரனான இரண்யனை வதம் செய்ய நரசிம்ம மூர்த்தியாக அவதரித்தார் பெருமாள். அவதாரம் முடிந்தபின்னும் அவரது ஆக்ரோஷம் அடங்கவில்லை. அவரின் அந்தக் கோபாவேஷத்தைத் தாங்காது நடுங்கத் தொடங்கியது பிரபஞ்சம். இதனால் அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மரின் உக்கிரத்தைத் தணிக்க வேண்டினர். அப்போது சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக்கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளி, மற்றொன்றில் சூலினி துர்கை எனச் சரபேஸ்வரராக வடிவெடுத்து நரசிம்மரைத் தன் கால்களில் தாங்கிப்பிடித்து அவரின் … Read more

இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கைத் தமிழர்கள் விவகாரம்  குறித்து  பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில்,  இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை என வலியுறுத்தி உள்ளார். இலங்கை அரசியலமைப்பு திருத்தங்களால், இலங்கை தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு, உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டு … Read more