"என் உடல் நடுங்கியது; உடனடியாக அங்கிருந்து ஓடிவிட்டேன்" – தன் மோசமான அனுபவத்தைப் பகிர்ந்த மௌனி ராய்

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் இந்தி நடிகை மௌனி ராய். குறிப்பாக ‘நாகினி’ தொடரில் நாகினியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தான் நடிக்கும்போது அனுபவித்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்திருக்கிறார். “எனக்கு அப்போது 21 வயது. ஒரு படத்துக்கான கதையைக் கேட்பதற்கு ஒருவர் அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அங்குச் சிலர் அமர்ந்திருந்தனர். மௌனி ராய் அப்போது அந்த இயக்குநர் காட்சியை விளக்கினார். கதையின்படி, கதாநாயகி நீச்சல் குளத்தில் விழுந்து மயங்கி விடுவார். … Read more

‘வாக்கு திருட்டை மூடி மறைக்கவே எஸ்.ஐ.ஆர். கொண்டு வரப்பட்டுள்ளது’ – ராகுல் காந்தி

போபால், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் தேர்தல்களில் மிகப்பெரிய அளவில் வாக்கு திருட்டு நடந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதற்கிடையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தற்போது தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அரியானாவில் கடந்த ஆண்டு நடந்த … Read more

2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும்? உலக வங்கிகளின் கணிப்புகள்

தங்கம் விலை இந்த ஆண்டு தாறுமாறாக ஏறியிருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.7,000 முதல் ரூ.12,000 வரை சென்றது. ஒரு பவுன் தங்கம் விலை ரூ.57,000-லிருந்து ரூ.97,000 வரை பல பல உச்சங்களைத் தொட்டது. சர்வதேச சந்தையிலும் தங்கம் விலை ஒரு அவுன்ஸிற்கு 4,000 டாலரரைத் தாண்டியது. அடுத்த ஆண்டு, அதாவது 2026-ம் ஆண்டு தங்கம் விலை எதுவரை செல்லும் என்று சில அமைப்புகள் கணித்துள்ளன. அவற்றைப் பார்ப்போம். தங்கம் சீனா செய்த தரமான … Read more

இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தல்

ஐதராபாத், மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் இமொ மாகாணத்தை சேந்தவர் ஜான்கென்னடி (வயது 43). இவர் தொழில்முறை பயணமாக கடந்த 2012ம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். மும்பை வந்த இவர் விசா காலம் நிறைவடைந்த பின்னும் நைஜீரியா திரும்பி செல்லாமல் மாயமானார். மும்பையில் இருந்து பெங்களூரு, ஐதாராபாத் போன்ற நகரங்களில் தலைமறைவாக வாழ்ந்துள்ளார். மேலும், கடந்த 13 ஆண்டுகளாக இந்தியாவில் தலைமறைவாக இருந்த ஜான் கென்னடி போதைப்பொருள் கடத்தல், விற்பனையிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ஐதராபாத்தில் … Read more

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: "SIR-ஐ எதிர்த்து 11ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்" – ஸ்டாலின்

இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்களுடன் காணொளி காட்சி மூலம் கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டன என்பது குறித்து ஸ்டாலின் பதிவிட்டிருப்பதாவது… “தமிழ்நாட்டைச் சூழ்ந்துள்ள #SIR ஆபத்து: கேள்விக்குறியாகியுள்ள பல கோடி மக்களின் வாக்குரிமை நம் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க, கழகத்தினர் கண்ணும் கருத்துமாக இருந்து மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்தும், வரும் 11-ஆம் நாள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் SIR-க்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்களைக் கூட்டணிக் … Read more

"படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்தான்"-அனுபமா பரமேஸ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் எனவும் அனுபமா தெரிவித்திருக்கிறார். அனுபமா பரமேஸ்வரன் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “சில நாட்களுக்கு முன்பு, என்னைப் பற்றியும், என் குடும்பத்தாரைப் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களையும் டேக் … Read more

நியூயார்க்: ஒற்றை அறை, ஒழுகும் குளியலறை டு 11,000 சதுர அடி பிரமாண்ட மாளிகை; சாதித்த ஜோஹ்ரான் மம்தானி

அமெரிக்காவின் நிதி மற்றும் கலாசார மையமான நியூயார்க் நகரத்தின் 111-வது மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸோஹ்ரான் மம்தானியின் (Zohran Mamdani) வெற்றி, நியூயார்க் அரசியலில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை உருவாக்கியுள்ளது. உகாண்டாவில் பிறந்து, இந்தியாவில் வேரூன்றி, குயின்ஸ் மாகாணத்தின் அஸ்டோரியாவில் எளிய வாடகை குடியிருப்பில் வாழ்ந்த இந்த 34 வயது ஜனநாயக சோசலிசவாதி, நகரத்தின் வரலாற்றில் முதல் முஸ்லிம் மற்றும் முதல் தெற்காசிய மேயர் என்ற பெருமையைப் பெறுகிறார். ஜோஹ்ரான் மம்தானி சாதாரண மக்களைப் பாதிக்கும் அத்தியாவசியப் பிரச்னைகளான … Read more

Doctor Vikatan: அதிக ரத்த அழுத்தம்தானே ஆபத்து, ரத்த அழுத்தம் குறைந்தாலும் பிரச்னையா?

Doctor Vikatan: பொதுவாக ஒருவருக்கு பிபி  எனப்படும் ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதைத்தானே ஆபத்தான அறிகுறியாகச் சொல்வோம்.ஆனால், சிலர், குறைந்த ரத்த அழுத்தமும் பிரச்னைக்குரியது என்கிறார்களே. அது உண்மையா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல் ரத்த அழுத்தம் பொதுவாக 120/80  இருக்கும். இது 10 சதவிகிதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ரத்த அழுத்தம் 90/60-க்குக் கீழே இருந்தால் அதை நாம் குறைந்த ரத்த அழுத்தம் (Low … Read more

மைக்ரேன் கஷாயம், சைனசைடிஸ் லேகியம், இருமலுக்கான பசும்பால் – மரு. சிவராமன் சொல்லும் தீர்வு!

தலைவலி என்றாலே அது தாங்க முடியாததுதானே… பலரையும் பாதிக்கிற இதற்கு சில சித்த மருத்துவ தீர்வுகளைச் சொல்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். தலைவலிகளுக்கான வீட்டுத் தீர்வுகள்..! இது மைக்ரேன் கஷாயம்! ’தலை தெறிக்கிற மாதிரி வலி. ஒரே குமட்டலா வேற வருது’ என்றால், அது ஒற்றைத்தலைவலி. மைக்ரேன்னு சொல்ற இந்தப் பித்தத் தலைவலிக்கு சுக்குக் கஷாயம்தான் சட்டுனு கேட்கும். பாதித் தலைவலி நம்ம தப்பான பழக்கவழக்கத்தாலேதான் வருது. நடு ராத்திரி வரைக்கும் தூங்காம, செல்போனை அழுத்திக்கிட்டே … Read more