கோவையில் 20.72 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்! டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு…

கோவை: கோவை ஒண்டிப்புதூரில் சுமார் 20.72 ஏக்கரில் அமைக்கப்பட உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் திட்டப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரி  உள்ளது. இந்த மைதானம்,  பொது-தனியார் பங்களிப்பு முறையில்  செயல்படுத்தப்பட உள்ளது. இதில்,  சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை காணும் வகையில் இருக்கைகள்  அமைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் நகரம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து … Read more

பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்; இமாசல பிரதேச மந்திரி

பாட்னா, பீகார் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக அங்கு சென்ற இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுக்கு, பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-20 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பீகாரில் வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை. பீகாரில் 64 சதவீத மக்கள், நாள் ஒன்றுக்கு 66 ரூபாயுடன் வாழ்ந்து வருவதாக வெளியான புள்ளிவிவரமே அதற்கு சாட்சி. நல்லது நடக்க மாற்றம் அவசியம். இமாசலபிரதேசத்தில், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டதால், ஓய்வூதிய … Read more

BB Tamil 9 Day 25: 'லவ் டார்ச்சர் பண்றான்…' – அழுது, கதறி, புலம்பி, தியானம் செய்த பாரு

இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றாலும்கூட ரீல்ஸ் மட்டுமே போட்டுக் கொண்டிருப்பவர் திவாகர். கூடவே நிறைய சண்டையும் போடுகிறார். இம்மாதிரியான காரியக் காரர்களை பிரபலமாக ஆக்குவது நம்முடைய ரசனையின் பாதாள வீழ்ச்சி. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 25 பிக் பாஸ் வீடு தாங்கள் வென்ற பொருட்களை பங்கு போட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க “நமக்கு ஒரு முறுக்கு கூட … Read more

திமுகவின் ‘பி டீம்’ ஆக செயல்பட்ட துரோகிகளால்தான் கடந்த தேர்தலில் அதிமுக தோற்றது! எடப்பாடி பழனிச்சாமி

மதுரை: திமுகவின் பி டீம் ஆக செயல்பட்ட சில அதிமுக  துரோகிகளால்தான் கடந்த தேர்தலில்  அதிமுக தோல்வியை சந்தித்தது என அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி   ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார். தேவர் திருமகன் குருபூஜைக்கு ஒன்றாக சென்ற, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன், மற்றும் எடப்பாடி மீதான அதிருப்தியில் உள்ள செங்கோட்டையன் ஆகியோர், எடப்பாடியை நீக்கும் வரை ஓயமாட்டோம் என சூளுரைத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. … Read more

புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரி, புதுவையில் மின்கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. விட்டு உபயோக கட்டணம் யூனிடுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இது அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:- மின் அளவு பழைய கட்டணம்- புதிய கட்டணம் (யூனிட்) 0-100 ரூ.2.70 – ரூ.2.90 101- 200 ரூ.4.00 ரூ.4.20 201-300 ரூ.6.00 ரூ.6.20 301-400 ரூ.7.50 ரூ.7.70 400க்கு மேல் ரூ.7.50 ரூ.7.90. என … Read more

Doctor Vikatan: ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்பது உண்மையா?

Doctor Vikatan: பொதுவாகவே ஒல்லியாக இருப்பவர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது என்றும் பருமனானவர்களுக்கு அது அதிகமிருக்கும் என்றும் கேள்விப்படுகிறோம். ஆனால், அது தவறான கருத்து என்று சமீபத்தில் ஒரு செய்தியில் படித்தேன். உண்மையா? பதில் சொல்கிறார், கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன்.   கோவையைச் சேர்ந்த இதயநல மருத்துவர் ஜெ.எஸ்.புவனேஸ்வரன் ஒல்லியான நபர்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்காது, பருமனானவர்களுக்கு தான் அது அதிகமிருக்கும் என்ற அறியாமை படித்தவர்களுக்கே கூட இருப்பதைப் பார்க்கிறோம். ஒருவரது உடல் அமைப்புக்கும் அவரது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக்கும் சம்பந்தமே … Read more

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆன்லைன் முன்பதிவில் மாற்றம்… ரூ.5 விருப்ப கட்டணம் வசூலிக்க முடிவு…

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 16ம் தேதி மாலை திறக்கப்பட்டு நவம்பர் 17ம் தேதி முதல் மண்டல பூஜை துவங்குகிறது. மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஆன்லைனில் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் ரூ.5 விருப்ப கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரணமடைந்தால் இந்த மண்டல … Read more

சுட்டுக்கொல்லப்பட்ட இணைய தொடர் இயக்குனர்; சிறுவர்களை சிறைபிடித்தது ஏன்? பரபரப்பு தகவல்கள்

மும்பை, மும்பையில் சிறுவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்த ரோகித் ஆர்யா போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரோகித் ஆர்யா புனேயை சேர்ந்தவர். இணைய தொடர் (வெப் சீரிஸ்) இயக்குனர். இவர் திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்து உள்ளார். சிவசேனாவை சேர்ந்த தீபக் கேசர்கர் கல்வித்துறை மந்திரியாக இருந்தபோது ரோகித் ஆர்யா கல்வித்துறை தொடர்பான ஒரு டெண்டரை எடுத்து உள்ளார்.மாநில அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் `மாஜி சாலா, … Read more

'வெளியூரில் இருக்கிறார்!' – மகள்களோடு சேர்ந்து கணவரை கொன்று புதைத்து, 50 நாள்களாக நாடகமாடிய மனைவி!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியைச் சேர்ந்தவர் பழனிவேலு (வயது: 53). பழனிவேலுக்கு திருமணம் நடந்து மனைவி மற்றும் தமிழ்ச்செல்வி, சாரதா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருகின்றனர். இதில், அவர்களது மகள் தமிழ்ச்செல்வி என்பவருக்கு திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தந்தை பழனிவேல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில், பழனிவேலு பல ஆண்டுகளாகவே உடலில் கலழை கட்டி நோய் இருந்து அதற்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். palanivelu மேலும், வயதானதால் பழனிவேலுக்கு நோய் அதிகமாகவே … Read more

டிரம்ப் பெயரில் போலியான ஆதார் கார்டு தயாரிப்பு; எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்

மும்பை, தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சியின் எம்.எல்.ஏ. ரோகித் பவார், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பெயரில் போலியான ஆதார் கார்டு தயாரிக்கப்பட்டு உள்ளது என அதனை காண்பித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். அதனை பயன்படுத்தி போலியான வாக்காளராக பதிவு செய்யும் அவலமும் நடக்கிறது என குற்றச்சாட்டாக கூறினார். இதனை தொடர்ந்து அது தொடர்பாக மும்பை போலீசார் எப்.ஐ.ஆர். ஒன்றை பதிவு செய்துள்ளனர். இதனை அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பின்போது பவார், … Read more