கேரள மாநில விருது பெற்ற படங்களை எந்த ஓடிடி-யில் பார்க்கலாம்?

55-வது கேரள மாநில சினிமா விருதுகளின் வெற்றியாளர்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையிலான நடுவர்கள் குழு இந்தாண்டுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்திருக்கிறார்கள். கடந்தாண்டு வெளியான படங்களில் 128 மலையாளத் திரைப்படங்கள் விருதுகளுக்கு விண்ணப்பித்திருக்கின்றன. பிரமயுகம் அதில் 26 திரைப்படங்களை இறுதிச் சுற்றுக்கு ஷார்ட்லிஸ்ட் செய்து, இப்போது அதிலிருந்து வெற்றியாளர்களை அறிவித்திருக்கிறார்கள். மஞ்சும்மல் பாய்ஸ், பிரமயுகம் ஆகியத் திரைப்படங்கள் பல பிரிவுகளில் விருது வென்றிருக்கின்றன. எந்தெந்த படங்களுக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது, அந்தப் படங்களையெல்லாம் எந்த … Read more

திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுகவில் மேலும் 2 துணைப் பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்து  திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, க.பொன்முடி, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ‘ திமுகவில் ஏற்கனவே 5 துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ள நிலையில் மேலும் 2 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் திருப்பூர் கிழக்கு – இல.பத்மநாபன், திருப்பூர் தெற்கு கே.ஈஸ்வரசாமி … Read more

சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிக்கு எதிராக தி.மு.க. வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை

புதுடெல்லி, தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதற்கு தி.மு.க. கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உள்ளிட்ட 49 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை நிறுத்தாவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை எதிர்த்து தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் … Read more

SIR: “நிச்சயமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சதவிகித வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள்" – தமிழிசை விளக்கம்!

தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழிசை செளந்தரராஜன் ‘வாக்காளரின் வலிமை’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார். அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று (3-ம் தேதி) நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் உரையாற்றியபோது: திமுக கூட்டணி வாக்குகளெல்லாம் நீக்கப்படவிருப்பதாகவும், சிறுபான்மையினரின் வாக்குகள் நீக்கப்படவிருப்பதாகவும் திமுக பொய் பிரசாரம் செய்துவருகிறது. வாக்காளரின் வலிமை – புத்தக வெளியீட்டு விழா பீகாரில் 64 லட்சம் … Read more

நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்! தவெக தலைவர் விஜய் அறிவிப்பு…

சென்னை:   நாளை (நவம்பர் 5)   தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்மாமல்லபுரம் தனியார் ஓட்டலில் நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கும்  விஜயின் தமிழக வெற்றிக்கழகம், அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய் தொகுதிவாரியாக மக்கள் சந்திப்பு நடத்தினார். ஆனால், திருச்சி கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. … Read more

ரூ.16 லட்சம் வீடு வென்ற அதிர்ஷ்ட குழந்தை

நகரி, தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமபிரம்மன். இவர் தனக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்புள்ள பழைய வீடு மற்றும் நிலத்தை விற்க முடிவு செய்தார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே அவர் தனது வீட்டை விற்க நூதன முறையை கையாண்டார். அதாவது லாட்டரி சீட்டு போல ரூ.500-க்கு பரிசு கூப்பனை அச்சிட்டு அதனை வினியோகித்தார். அவ்வாறு விற்பனையாகும் கூப்பன்களில் இருந்து ஒரு அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுத்து தனது வீட்டை விற்பனை செய்யவுள்ளதாக அவர் விளம்பர … Read more

ரூ.7.90 லட்சத்தில் 2026 ஹூண்டாய் Venue இந்தியாவில் அறிமுகம் | Automobile Tamilan

புதிய தலைமுறை ஹூண்டாய் Venue 2026 மாடல் இந்திய சந்தையில் ரூ. லட்சம் முதல் ரூ.7.90 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, நவீன பாதுகாப்பு சார்ந்த ADAS தொழில்நுட்பம், நவீன இன்டீரியர் வடிவமைப்பு, மற்றும் மேம்பட்ட அம்சங்கள் ஆகியவை காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் போட்டியாளர்களை எதிர்கொள்ள உள்ளது. ஹூண்டாய் Venue விலை விவரம் புதிய வென்யூ காருக்கான வேரியண்ட் வரிசைகளில் தற்பொழுது HX 2 , HX 4, HX 5, HX 6, HX 6T, … Read more

ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் – கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள். குணா (20) மதுரையைச் சேர்ந்தவர். இவர்கள் மீது பீளமேடு, கோவில்பாளையம், சிங்காநல்லூர், துடியலூர், காகாசாவடி, கிணத்துக்கடவு, கோவை மாணவி பாலியல் வழக்கு சூலூர், சத்தியமங்கலம், திருமுருகன் பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வாகனத் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் … Read more

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் அலர்ட்

சென்னை: சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்ககை விடுத்துள்ளார். வட தமிழ்நாட்டில் உள்ள KTCC (சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள்), பாண்டி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், மயில்தவுத்துறை, விழுப்புரம் ஆகிய இடங்களில் இன்று மீண்டும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை தொடரும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்  இன்று தனது முகநூல் … Read more

நடுவானில் கோளாறு: டெல்லி புறப்பட்ட விமானம் மங்கோலியாவில் தரையிறக்கம்

புதுடெல்லி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா வழியாக டெல்லிக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது நடுவானில், அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானம் மங்கோலியா தலைநகர் உலான்பாடருக்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் எந்த விதமான கோளாறு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய பொறியாளர்கள் குழுவினர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். 1 More update தினத்தந்தி … Read more