‘admin123’ போன்ற பலவீனமான பாஸ்வர்ட்களால், ஆபாசத் தளங்களில் பதிவேறிய மகளிர் மருத்துவமனை காட்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய சைபர் ஊழல் “admin123” என்ற பலவீனமான கடவுச்சொல்லால் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது. மருத்துவமனையின் சிசிடிவி அமைப்பு “admin123” என்ற சாதாரண கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பயன்படுத்தி சிஸ்டத்தில் நுழைந்த ஹேக்கர்கள், பரிசோதனைக்கு வரும் பெண்கள் தொடர்பான அந்தரங்க வீடியோக்களை திருடினர். அந்த காட்சிகள் பின்னர் சர்வதேச ஆபாச வலைத்தளங்களில் விற்கப்பட்டன. புலனாய்வின்படி, ஹேக்கர்கள் ஒரு ஆண்டுக்குள் … Read more

Apology Trend: 'மன்னிப்புக் கடிதம்தான் பாஸ் இப்போ டிரெண்ட்!' – எதனால் இதை நிறுவனங்கள் செய்கின்றன?

சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டிரெண்ட் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அப்படி சமீபத்தில் ஹஸ்கி நாய் நடனமாடும் காணொளி பெரும் வைரலானது. நடிகர்கள் தொடங்கி பலரும் அந்த டிரெண்ட் நடனத்தை ரீகிரியேட் செய்திருந்தார்கள். தற்போது அந்த டிரெண்டைத் தொடர்ந்து பிராண்ட் நிறுவனங்கள் பலவும் மன்னிப்புக் கோரும் நகைச்சுவைக் கடிதத்தை வெளியிட்டு டிரெண்டை வைரலாக்கி வருகின்றன. Skoda – Apology Statement வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல நிறுவனங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ லெட்டர் ஹெட் கொண்ட … Read more

திமுக அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை வெளியிட்டு கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  திமுகவின் அறிவுத் திருவிழாவில் “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து கருத்தரங்கத்தை தொடங்கி வைத்தார்.  சென்னையில் திமுகவின் 75வது ஆண்டு விழாவையொட்டி இன்று அறிவு திருவிழா தொடங்கி உள்ளது. இன்று  நடைபெறும் அறிவு திருவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, “காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு” புத்தகத்தை முதலமைச்சர்  வெளியிட்டார். தொடர்ந்து,  ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ எனும் தலைப்பில் நடைபெறும் 2 நாட்கள் கருத்தரங்கத்தையும் தொடங்கி வைத்தார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.? | Automobile Tamilan

ஓலா எலக்ட்ரிக் தனது சொந்த தயாரிப்பு என குறிப்பிட்ட பாரத் செல் 4680 ஆனது தென்கொரியாவின் எல்ஜி எனர்ஜி சொல்யூஷன் (LG Energy Solution) நிறுவனத்தின் அதிக அடர்த்தி கொண்ட பவுச் வகை (high-density pouch-type cells) லித்தியம் ஐன் பேட்டரியை போலவே உள்ளதாக சிக்கல் எழுந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் தென் கொரிய அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக “தேசிய மைய தொழில்நுட்பம்” (National Core Technology) என்று வரையறுக்கப்பட்டுள்ளது, அதாவது எந்தவொரு வெளிநாட்டு பரிமாற்றம் அல்லது வெளிப்படுத்தலும் தொழில்துறை … Read more

விருதுநகர் நகராட்சிக் கூட்டம்: "பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை" – உறுப்பினர்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: பழைய அருப்புக்கோட்டை சாலை மேம்பாலத்தின் கீழ் அணுகுசாலை கழிவு நீர் செல்வதற்காகத் தோண்டி பல மாதங்கள் ஆகியும் ஏன்? இன்னும் சீரமைக்கவில்லையென உறுப்பினர் ஜெயக்குமார், மிக்கேல்ராஜ், கலையரசன் ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த தலைவர், “உடனடியாக அங்கு வடிகால் கட்டும் பணி துவக்கப்படும்” … Read more

18000 மெகாவாட்: பருவமழை காலத்திலும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின்தேவை…

சென்னை: தமிழ்நாட்டில் அக்டோபர் 15முதல்  பருவமழை தொடங்கி பரவலாக நல்ல மழை பெய்து வரும் நிலையிலும், மன்சார தேவை குறையாமல் உயர்ந்து வருவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  தினசரி மின்தேவை 18,000 மெகாவாட்டை கடந்துள்ளது என கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி ஒருபுறம் மழை பெய்து வந்தாலும், மறுபுரம்  வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தினசரி மின்தேவை 18,000 மெகாவாட்டை கடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் தினசரி மின் தேவை சராசரியாக 17,000 மெகாவாட்டாகவும், … Read more

சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணிநிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறை கைது செய்தது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தங்களின் வீடுகளில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போதும் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அல்லிக்குளம், உழைப்பாளர் சிலை, எக்மோர் … Read more

கோவாவில் நடைபெற உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது!

பனாஜி: கோவாவில் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள 56  இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு கவுரவ விருது  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் திரைத் துறையில் 50ஆண்டுகள்,  அதாவது பொன்விழா ஆண்டுகளை  நிறைவுசெய்துள்ளதை கவுரவிக்கும் வகையில் விருது வழங்கப்பட உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவாகும்.  இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான திரைப்பட விழாக்களில் இதுவும் ஒன்று.  இந்த … Read more

Non Veg: வாரத்துக்கு எத்தனை முறை சாப்பிடலாம்? ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி விளக்கம்

‘அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடலாமா?’ விளக்கமளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் தாரிணி கிருஷ்ணன். Non Veg அசைவ உணவுகள் நல்லவையா? “அசைவம் சாப்பிடுபவர்களில் ஒரு வகையினர், அசைவ உணவு பிரியர்கள். மற்றொரு தரப்பினர், புரோட்டீன் தேவைக்காக அடிக்கடி அசைவம் சாப்பிடுபவர்கள். தானியங்களைக் காட்டிலும் சில அசைவ உணவுகளில் புரோட்டீன் அளவு அதிகமாக இருப்பது உண்மைதான். அதேசமயம், அசைவ உணவுகளில் இயற்கையாகவே கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளது. இருப்பினும், இறைச்சியில் சுவைக்காக அதிக அளவிலான எண்ணெய் சேர்த்துப் பயன்படுத்தும் … Read more

இந்தோனேசியாயில் மசூதி மற்றும் பள்ளியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு…. 55 பேர் காயம்…

ஜகர்தா: இந்தோனேசியாவில் இன்று மசூதி மற்றும் அருகே உள்ள உயர்நிலைப் பள்ளியில் அடுத்தடுத்து  குண்டுவெடிப்புகள் நடைபெற்றது. இதில்   55 பேர் காயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புகள் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல என்று தெரிவித்துள்ள காவல்துறையினர், அதுகுறித்து  விசாரணை நடத்தி வருவதாகக் கூறினர். இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் கலபா கார்டிங் என்ற பகுதியில் பிரபல மசூதி அமைந்துள்ளது.  இன்று (வெள்ளிக்கிழமை) மசூதியில் தொகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,  திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தொடர்ந்து,  அருகே செயல்பட்டு கொண்டிருந்த … Read more