இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி! பபாசி அறிவிப்பு…

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கும், நடப்பாண்டின் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு இலவச அனுமதி  என பபாசி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும்,   வாசகா்களின் வசதிக்காக புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம் இயந்திரங்கள், 15 இடங்களில் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை ஸ்வைப் செய்யும் வசதிகள், இலவச வைஃபை, கைப்பேசி சார்ஜிங் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் நடத்தப்படும் 49-ஆவது சென்னை புத்தகக் காட்சி, … Read more

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’  மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு  வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதனப்டி,   பிரசார கூட்டத்தின் பாதுகாப்புக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரே பொறுப்பு என்றும்,   ரோடு ஷோ-க்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி உள்பட பல்வேறு   கட்டுப்பாடுகளை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் விஜய் நடத்திய கூட்டத்தில் 41 பேர் பலியானதை தொடர்ந்து, தமிழகத்தில் ரோடு ஷோ-க்கு நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழ்நாடு … Read more

போலி Booking.com மெயில்கள் மூலம் ஹோட்டல் ஊழியர்களை குறிவைக்கும் புதிய சைபர் தாக்குதல்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஹோட்டல் நிறுவனங்களை குறிவைத்து, புதிய வகை சைபர் தாக்குதல் ஒன்று நடப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு PHALT#BLYX என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் முக்கிய நோக்கம், DCRat எனப்படும் ஆபத்தான Remote Access Trojan (RAT) வைரஸை கம்ப்யூட்டர்களில் நிறுவுவதாகும். இந்த நடவடிக்கை கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. தாக்குதலின் முதல் கட்டமாக, Booking.com நிறுவனத்தைப் போல உருவாக்கப்பட்ட போலி மெயில்கள் ஹோட்டல் ஊழியர்களுக்கு … Read more

திருப்பரங்குன்றம் விவகாரம்: `நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த புத்தகத்துக்கு தடை'- உயர் நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம், சென்னை 49-வது புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ள இந்தப் புத்தகத்தின் விற்பனைக்குத் தடை விதிக்க வேண்டும் என, வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், `புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்க அனுமதித்தால், அது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதைப்போல் ஆகிவிடும் என்பதால்… இந்தப் புத்தகத்தை விற்கக் … Read more

திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகள் – ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் – பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று ( ஜனவரி 7-ந் தேதி ) அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்,  ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே … Read more

நெல்லை: `வாடகைக்கு டேபிள், சேர் தராததால் கொன்றோம்'- போலீஸையே அதிரவைத்த குற்றவாளிகளின் வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் அருகேயுள்ள மேலப்புதுக்குடியைச் சேர்ந்தவர் ராம்குமார். மாவு மில் உரிமையாளரான இவர், டேபிள், சேர் வாடகைக்கு விடும் தொழிலும் நடத்தி வந்தார். இவரது மாவுமில்லுக்கு அருகில் செல்வ மணிகண்டன் என்பவர் கறிக்கோழிக் கடை நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு செல்வ மணிகண்டன், ராம்குமாரிடம் வாடகைக்கு டேபிள், சேர் கேட்டுள்ளார். ஆனால், ராம்குமார் கொடுக்க மறுத்துள்ளார். வீர்வநல்லூர் இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து செல்வ மணிகண்டன் தன்னுடைய நண்பரான … Read more