BB Tamil 9: "சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட்; அவங்க ஒரு கோழை" – திவ்யாவைக் கடுமையாகச் சாடிய விக்ரம்

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 84 நாள்களைக் கடந்துவிட்டது. கடந்த வாரம் நடந்த எவிக்ஷனில் அமித், கனி இருவரும் வெளியேறிருக்கின்றனர். இந்நிலையில் இன்று வெளியான முதல் புரொமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. BB Tamil 9: “எதுக்கு என் மனைவிய இங்க இழுக்குற திவ்யா”- ஆக்ரோசமான விக்ரம் BB Tamil 9 இதில் திவ்யாவை விக்ரம் நாமினேட் செய்கிறார். “நியாயத்துக்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி வெறும் சுயநலமா பேசுற மிகப்பெரிய ஃபிராட் (Fraud). மாற்றுக் … Read more

சமவேலைக்கு சம ஊதியம்: எழிலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் போராட்டம் …

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் என கோரிக்கையுடன்  4வது நாளாக போராட்டம் நடத்திவரும் ஆசிரியர்கள் இன்ற சென்னை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள அரசு அலுவலகங் ளான எழிலகத்தை முற்றுகையிட்டு  போராட்டம்  நடத்தினர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சம வேலைக்கு சம ஊதி​யம் கோரி, சென்​னை​யில் தொடர்ந்து 4-வது நாளாக போராட்​டம் நடத்​தி வருகின்றனர்.  நேற்று  போராடும்  இடைநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கத்தை நேற்று முற்​றுகை​யிட்ட போது கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் … Read more

"என் அரசியல் ஒதுக்கிவிட்டு 'நமது சமூகத்தைச் சேர்ந்தவன்' என்றால், எனக்கு உடன்பாடில்லை" – மாரி

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இயக்குநர் மாரி செல்வராஜ்-க்கு அவரது ரசிகர் நற்பணி மன்றம் மற்றும் மாவட்ட கிராம மக்கள் சார்பாகப் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் 10, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன், “30 ஆண்டுக்குப் பின்பு மணத்தி கணேசன் யார் என்பதை … Read more

ராமேஸ்வரம் மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம்:  இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதை கண்டித்து, ராமேஸ்வரம் அருகே உள்ள  மண்டபம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து டிசம்பர் 27ந்தேதி அன்று  காலை 300-க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி … Read more

"இரு குஜராத்தியர்கள் மும்பையை விழுங்கிவிடுவார்கள்" – உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மகாராஷ்டிரா முழுவதும் வரும் 15ம் தேதி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இத்தேர்தலுக்காக உத்தவ் தாக்கரே கட்சி சார்பாக மும்பை மாடல் என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட புத்தகத்தை உத்தவ் தாக்கரே வெளியிட்டார். அதில் பேசிய உத்தவ் தாக்கரே, ”தியாகிகளின் தியாகங்களால் நாம் மும்பையைப் பெற்றோம். ஆனால் நம் கண் முன்னே, அது இரண்டு குஜராத்தி நபர்களால் விழுங்கப்படப் … Read more

கோவை உக்கடம் உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம்’ பெயர்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை:  கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு ‘சி. சுப்பிரமணியம் மேம்பாலம்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  பெயர் சூட்டி உள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “கொள்கைகளும் பாதைகளும் வெவ்வேறானாலும் மக்களின் நன்மதிப்பைப் பெற்று நாட்டுக்காகப் பணியாற்றிய தலைவர்களைப் போற்றுவதே மாண்பு! ஒன்றிய அமைச்சராகப் பொறுப்பு வகித்து, நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் மதிப்பிற்குரிய பாரத ரத்னா … Read more

கட்சி கட்டமைப்பு: திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் எம்.பி. ஆதரவு

புதுடெல்லி, டெல்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. அப்போது அதில் கலந்து கொண்ட கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்ததுடன் மூத்த தலைவர்களின் காலடியில் அமர்ந்த ஒரு அடிமட்டத் தொண்டர் எப்படி முதல்-மந்திரியாகவும், பிரதமராகவும் உயர்ந்தார் என்று கூறி, ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜனதாவின் அமைப்பு பலத்தைப் பாராட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறவும், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றவும் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை அடிமட்ட … Read more

5 நாள் நடக்கவேண்டியது 2 நாளில் முடிந்தது… விக்கெட் விழுந்த வேகத்தால் ஆஸி கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 60 கோடி இழப்பு

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி இரண்டு நாளிலேயே முடிந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு (Cricket Australia) பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடி வெற்றி பெற்றதுடன், ஆஸ்திரேலிய வாரியத்தின் கணக்கையும் குலைத்துவிட்டது. ஐந்து நாட்கள் நடைபெற வேண்டிய டெஸ்ட் போட்டி இரண்டே நாளில் முடிந்ததால், சுமார் ஆஸ்திரேலிய டாலர் 10 மில்லியன், இந்திய மதிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் வரையிலான வருவாய் இழப்பு ஏற்படும் … Read more

"நாம் விஸ்வகுருவாக மாறுவது உலகத்தின் தேவை" – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ஐதராபாத், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், இந்தியா மீண்டும் ஒரு ‘விஸ்வகுரு’வாக மாறுவதற்கு பாடுபட வேண்டும் என்று கூறினார், இது லட்சியத்தால் அல்ல, மாறாக அது உலகின் தேவை என்பதால், சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இப்போது வந்துவிட்டது என்று மோகன் பகவத் கூறினார். ஐதராபாத்தில் ஒரு கூட்டத்தில் மோகன் பகவத் கூறியதாவது:- 100 ஆண்டுகளுக்கு முன்பு, யோகி அரவிந்த், சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி கடவுளின் விருப்பம் என்றும், … Read more