DMK : அடுத்தடுத்த அறிவிப்புகள், திட்டங்கள்! `தோல்வி பயமா… தேர்தல் நேர எதார்த்தமா?'

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது என்ற நிலையில், தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தேசிய அரசியல் கட்சி தலைவர்களின் தொடர் படையெடுப்பும், மாநிலக் கட்சிகளின் கூட்டணி சலசலப்பும், சமூக ஊடகங்களில் பரவும் புரோமோஷன் வீடியோக்களும் என மக்கள் பரபரப்பாகத் தொடங்கிவிட்டனர். “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்” என முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் 4 ஆண்டுகள், 7 மாதங்கள், 29 நாட்கள் ஆகிவிட்டது. தேர்தல் பிரசாரத்தின்போதே குஜராத் மாடலுக்கு மாற்றாக திராவிட … Read more

அமெரிக்காவில் புத்தாண்டன்று காணாமல் போன இளம்பெண் கொலை : இந்தியாவுக்கு தப்பிய கொலையாளியைப் பிடிக்க தீவிரம்…

அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலம் கொலம்பியாவில், புத்தாண்டு தினத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட 27 வயதான இந்திய இளம்பெண் நிகிதா கோடிஷாலா, தனது முன்னாள் காதலனின் குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்ததாக நிகிதாவின் முன்னாள் காதலன் அர்ஜுன் சர்மா (26) மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கொலை செய்த பிறகு, அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவத் துறை நிபுணரான நிகிதா, மருந்தியல், … Read more

லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைவு: 'டைப் ரைட்டர் மெக்கானிக் டு நடிகர்' – பகிரும் இயக்குநர் ராம்பாலா

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68. ‘வல்லனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘மனிதன்’, ‘டிக்கிலோ’ எனப் பல படங்களிலும் நடித்திருக்கிறார். ‘மனிதன்’ படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாகக் கலகலக்க வைத்திருப்பார். சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ படத்தில் கம்பிக்கிடையே புகுந்து புகுந்து வந்திடுவார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் எதிர்காற்று அடித்ததில், லேட் ஆக நடந்து வந்தேன் என்பார். இப்படி சின்னதொரு ரோலில் நடித்திருந்தாலும் காமெடியில் அதகளம் செய்திருப்பார் வெங்கட் ராஜ். மறைந்த நடிகர் … Read more

சென்னை கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் – பரபரப்பு

சென்னை: சென்னை எழும்பூரில் கூவம் ஆற்றின் உள்ளே இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறை யினர் அவர்களை கைது செய்துஅழைத்துசென்றனர். தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்கக் கூடாது, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, ரிப்பன் மாளிகை முன்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 10 நாட்களுக்கும் மேலாக தூய்மைப் பணியாளர்கள் … Read more

சென்னை: வேலம்மாள் பள்ளியில் 13வது வீதி விருது விழா; திரளான கலைஞர்கள் பங்கேற்பு | Photo Album

Kanimozhi: “நம்முடைய கலை வடிவங்களையும் மொழியையும் பிடுங்கிக் கொண்டு சென்றுவிட்டார்கள்” – கனிமொழி Source link

அமெரிக்காவில் குடிபோதையில் எதிர்திசையில் வந்த வாகனம் மோதி கோர விபத்து… இந்திய தம்பதி பலி… 2 குழந்தைகள் உயிருக்குப் போராட்டம்…

அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் பயணித்த இரண்டு குழந்தைகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த கோட்டிகலபுடி கிருஷ்ண கிஷோர் (45) மற்றும் அவரது மனைவி ஆஷா (40). இருவரும் மேற்கு கோதாவரி மாவட்டம் பாலக்கொள்ளு நகரைச் சேர்ந்தவர்கள். கிருஷ்ண கிஷோர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். 10 நாட்களுக்கு முன் தனது குடும்பத்தினருடன் பாலக்கொள்ளு வந்த … Read more

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' – சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பார்வையிடுவதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வருகை தந்தார். பின் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ” திண்டுக்கல்லுக்கு வருகை தரும் முதலமைச்சர் ரூ.1,500 கோடிக்கு அதிகமான மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். மேலும் 2 … Read more

தாமிரபரணி ஆறு மாசடைந்ததா? ஆய்வு நடத்த ‘இந்தியாவின் வாட்டர்மேன்’ ஆணையராக நியமித்தது சென்னை உயர் நீதிமன்றம்

தாமிரபரணி ஆற்றின் தற்போதைய நிலை குறித்து விரிவான ஆய்வு நடத்தி, மீட்பு நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்ய பிரபல நீர்வளப் பாதுகாவலர் ராஜேந்திர சிங்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நியமித்து கடந்த வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பி.புகழேந்தி அடங்கிய சிறப்பு அமர்வு இந்த இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. நீர்நிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இந்த அமர்வு, தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தலக்குறிச்சி காமராஜ் (எஸ். காமராஜ்) தாக்கல் செய்த அவமதிப்பு மனுவை விசாரிக்கும் … Read more

சட்டவிரோத தகவல், படங்கள் பதிவிட்டால் தடை: பயனர்களுக்கு எக்ஸ் தளம் எச்சரிக்கை

புதுடெல்லி, எலான் மஸ்கின் எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது கிரோக் ஏ.ஐ. பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்துடன் இணைக்கப்பட்டு கிரோக் ஏ.ஐ. செயல்படுகிறது. எக்ஸ் தள பயனர்கள் சிலர் கிரோக் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை சட்டவிரோதமாக ஆபாசமாக மாற்றி வருகின்றனர். மேலும் அவற்றை எக்ஸ் தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரவே அது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். அப்போது எக்ஸ் … Read more

ரூ.5 கோடி மோசடி புகார்; மனைவியுடன் தேனிலவுக்கு சென்ற பிக் பாஸ் பிரபலம் மும்பை விமான நிலையத்தில் கைது

பிக் பாஸ் பிரபலமான ஜெய் துதானே, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் தனது நீண்ட நாள் காதலி ஹர்ஷலா பாட்டீலை திருமணம் செய்து கொண்டார். அவர் தனது மனைவி, சகோதரர் மற்றும் சகோதரரின் மனைவி ஆகியோருடன் தேனிலவுக்கு புறப்பட்டார். மும்பை விமான நிலையத்தில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கும் வகையில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருந்தது. விமானநிலையத்தில் அவரது பாஸ்போர்ட்டை சோதித்தவுடன் அவருக்கு எதிராக தேடப்படும் நபர் நோட்டீஸ் வெளியிடப்பட்டு இருப்பதை அதிகாரிகள் தெரிந்து கொண்டு … Read more