அரசு பணி வழங்கியதில் ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி! நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை: அரசு பணி வழங்கியதில் திமுக அரசு ரூ.888 கோடி ஊழல் என்பது மத்தியஅரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி என  ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள தமிழ்நாடு  நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்  அளித்துள்ளார். நகராட்சி நிர்வாகத்துறையில் காலியாக இருந்த பணியிடங்களுக்கு இரண்டு இலட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து, 1 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதி, ஒளிவுமறைவற்ற முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, இறுதியாக 2,538 பணியாளர்கள்   பணியமர்த்தப்பட்டு, சிறப்பாகப் பணிபுரிந்து வரும் நிலையில், இவ்வாறு களங்கம் … Read more

ஹோண்டா இந்தியாவில் வெளியிட உள்ள 0 α (Alpha) எலக்ட்ரிக் எஸ்யூவி அறிமுகம் | Automobile Tamilan

2027 ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் இந்தியாவில் ஹோண்டா கார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ள 0 α (Alpha) என்ற எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை ஜப்பான் மொபிலிட்டி கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாக ஹோண்டாவின் இந்திய அதிகாரி எலக்ட்ரிக் மாடல் குறித்து உறுதிப்படுத்தியிருந்தார். ஹோண்டா தனது மின்சார கார்களுக்கான வரிசை 0 சீரிஸ் கான்செப்ட் என்றே வரிசைப்படுத்தி வரும் நிலையில் முதல் உற்பத்தியை அடைய உள்ள காருக்கு தற்பொழுது 0 α (ஆல்பா) … Read more

`குண்டர் சட்டம் பாய்ந்தது!' – பாலியல் வன்கொடுமை செய்த காவலர்கள்; ஓராண்டு சிறைக்காவல்

ஆந்திராவைச் சேர்ந்த திருமணம் ஆகாத 25 வயது இளம் பெண் தன்னுடைய வளர்ப்புத் தாயிடம், `திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலம் சென்று வழிபட வேண்டும்’ என்று சொல்ல, தாயும் மகளும் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி இரவு, ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலைக்குக் கிளம்பியிருக்கிறார்கள். நெல்லூரிலிருந்து வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு, திருவண்ணாமலை கீழ் அணைக்கரைப் பகுதியிலிருக்கும் மொத்த வியாபாரக் காய்கறி மார்க்கெட்டுக்குப் புறப்பட்ட மினி லாரியில் அவர்கள் பயணித்திருக்கின்றனர். அந்த வளர்ப்புத் தாயின் தம்பிதான் லாரியை ஓட்டி வந்திருக்கிறார். செப்.30-ம் … Read more

தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்..

 தென்காசி: தென்காசி மாவட்டத்துக்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். இது அம்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ன்காசி அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தொடர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்து … Read more

"முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் வேலை" – பாஜக முன்னாள் எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் உள்ள டோமரியாகஞ்ச் தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ-வாக இருந்தவர் ராகவேந்திர பிரதாப் சிங். இவர் அடிக்கடி இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுக்களைப் பேசி சர்ச்சையில் சிக்குபவர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், அங்கிருந்த இளைஞர்களைப் பார்த்து, ” முஸ்லிம் பெண்ணை அழைத்து … Read more

தென்காசியில் ரூ.1,020 கோடி மதிப்பிலான பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த முதல்வர் ஸ்டாலின் அங்குள்ள சீவநல்லூர்  பகுதியில் கட்டப்பட்டு வரும்,  கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் ஒரு லட்சமாவது வீட்டை திறந்து வைத்தார்.  புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 கோடியே 60 லட்சம் செலவிலான 117 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். தென்காசி மாவட்டம் மைய நூலகம், தென்காசி மகப்பேறு மையம் மற்றும் குழந்தைகள் நல கட்டிடம், மாறாந்தையில் அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், புளியங்குடி சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட ரூ.141 … Read more

Rohit Sharma: 38 வயதில் நம்பர் 1; ICC தரவரிசையில் முதல் இடம் பிடித்த ரோஹித் சர்மா

ஐசிசி (ICC) ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ரோஹித் சர்மா மொத்தமாக 202 ரன்கள் எடுத்திருந்தார். இதில் ஒரு சதமும், ஒரு அரைசதமும் அடங்கும். இதன் மூலம் ரோஹித் சர்மா தொடர் நாயகன் விருதை வென்றார். இதன் காரணமாக அவருடைய புள்ளிகள் 781 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளன. ரோஹித் சர்மா இதன் மூலம் … Read more

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏசி மினி பேருந்துகள்! டெண்டர் கோரியது மாநகர பேருந்து கழகம்

சென்னை:  சென்னை மக்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள  மெட்ரோ ரயில் சேவையில், அடுத்த கட்டமாக மெட்ரோ ரயில்  நிலையங்களில் இருந்து பயணிகளின் வசதிக்காக  ஏசி மினி பேருந்துகளை இயக்க சென்னை மெட்ரோ ரயில்  நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் டென்டர் கோரி உள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அருகிலுள்ள முக்கிய பகுதிகளை இணைக்க பயணிகளின் வசதிக்காக சுமார் 5 கிலோ மீட்டர் … Read more

மதுவுக்கு மாற்றாக `ஜீப்ரா ஸ்ட்ரிப்பிங்' பழக்கத்தை விரும்பும் Gen Z- என்ன காரணம் தெரியுமா?

உலகம் முழுவதும் இளைய தலைமுறையினரிடையே, குறிப்பாக Gen Z-யினர் மத்தியில், மது அருந்தும் பழக்கம் குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உடல் நலன், நிதி பாதுகாப்பு மற்றும் மனநலன் போன்ற காரணங்களால் Gen Z தலைமுறையினரில் சுமார் 10-ல் 4 பேர் (அதாவது 36%) மது அருந்துவதை தவிர்ப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. Alcohol மதுவை நிராகரிக்கக் காரணம் என்ன? இந்த ஆய்வை யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்ற தரவு பகுப்பாய்வு நிறுவனம் நடத்தியுள்ளது. … Read more

சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம்! சென்னை மாநகராட்சி அறிக்கை

சென்னை: சென்னையில் இன்று 15 மண்டலங்களில் 116 இடங்களில் மருத்துவ முகாம்  நடை பெறுகிறது, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவசர கால உதவிக்கு 1913 எண்ணை அழைக்கவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. நோய்த்தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் 17.10.2025 அன்று முதல் 28.10.2025 வரை 624 நிலையான மருத்துவ முகாம்கள், 217 நடமாடும் மருத்துவ முகாம்கள் என மொத்தம் 844 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 36,353 நபர்கள் பயனடைந்துள்ளனர். … Read more