சத்தீஷ்கார் என்கவுன்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்புப்படையினர் 2 பேர் வீர மரணம்

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை … Read more

“என்னை விட அழகா இருக்க கூடாது'' – 4 பேரை கொலை செய்த பெண்; திருமண வீட்டில் சோகம்

தன்னை விட யாரும் அழகாக இருக்கக்கூடாது என்று பெண்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த நினைப்பு காரணமாக ஹரியானாவில் பெண் ஒருவர் 4 சிறார்களை கொலை செய்துள்ளார். ஹரியானா மாநிலம் பானிபட் அருகில் உள்ள நெளல்தா பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உறவினர்கள் அனைவரும் கூடி இருந்தனர். திருமணத்திற்கு வந்திருந்த விதி என்ற 6 வயது சிறுமி காணவில்லை. அச்சிறுமி தனது பெற்றோர் மற்றும் பாட்டி–தாத்தாவுடன் திருமணத்திற்கு வந்திருந்தாள். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணவில்லை என்பதை … Read more

நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தில் 2,900 பேர் கைது! நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்…

டெல்லி: நாடு முழுவதும் ‘உபா’ சட்டத்தில் 2,900 பேர் கைது  செய்யப்பட்டு இருப்பதாக  நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு  தெரிவித்துள்ளது. அதிகபட்சம் பேர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது  பாலக்காடு காங்கிரஸ் எம்பி ஷாபி பரம்பில் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்தா ராய் பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:- பயங்கரவாத செயல்கள் மற்றும் அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உபா சட்டத்தின் … Read more

பராமரிப்பு பணி: இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் – விவரம்

சென்னை: பராமரிப்பு பணி  காரணமாக  இந்த மாதம் வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் பல இடங்களில் டிசம்பர் மாதத்தில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. அதன்விவரம் வருமாறு: போத்தனூர்- சென்னை சென்ட்ரலுக்கு டிச.8-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (06124) வழியில் … Read more

IndiGo: ஒரே நாளில் 200 இண்டிகோ விமானங்கள் ரத்து; பயணிகள் கடும் அவதி; காரணம் என்ன?

இந்தியாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ நிறுவனம் சமீப காலமாக, விமான தாமதம், விமானப் பயணம் ரத்து உள்ளிட்ட தீவிர பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் மொத்தம் 1,232 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ நிறுவனமானது நாள் ஒன்றுக்கு 2,200-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்குகிறது. இதில் நேற்று முன்தினம் (டிசம்பர் 2) மட்டும் சரியான நேரத்துக்குப் புறப்படும் விமானங்களின் எண்ணிக்கை 35 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. குறிப்பிட்டுச் சொன்னால் 1,400 விமானங்கள் … Read more

ரோஹிங்கியா அகதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமா? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்

டெல்லி: எல்லை தாண்டி வந்த ரோஹிங்கியாக அகதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு தர வேண்டுமா? என  காணாமல் போன்  ரோஹிங்கியா அகதிகள் தொடர்பான  வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். டெல்லியில்  மாயமான 5 ரோஹிங்கியா அகதிகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான  விசாரணை உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபிதி,  நமது நாட்டிலும்  ஏழைகள் உள்ளனர். … Read more

IND vs SA: `358 அடிச்சும் பத்தல' சொதப்பல் பவுலிங்; வீணான ருத்துராஜ், கோலி சதம்; ஈஸியாக வென்ற தெ.ஆ

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்றது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியில் ஆடிய ரியான் ரிக்கில்டன், சுப்ராயன், பார்ட்மன் ஆகியோர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டு, டெம்பா பவுமா, கேஷவ் மகாராஜ், லுங்கி இங்கிடி ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறக்கப்பட்டனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கைத் தேர்வு செய்தார். Ruturaj Gaikwad அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில், கடந்த போட்டியில் அரைசதமடித்த ரோஹித் … Read more

மொபைல்களில் சஞ்சார் சாத்தி செயலியை கட்டாயம் நிறுவ வேண்டும் என்ற உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றது

மொபைல்களில் ‘சஞ்சார் சாத்தி’ செயலியை நிறுவுவதை கட்டாயமாக்கிய உத்தரவை மத்திய அரசு இன்று (புதன்கிழமை) திரும்பப் பெற்றது. ‘சஞ்சார் சாத்தி’ செயலி மொபைல் போனின் அனைத்து அம்சங்களையும் கட்டுப்படுத்தக்கூடியது என்றும் இது மக்களை கண்காணிக்க மோடி அரசு மேற்கொண்டுள்ள முயற்சி என்றும் செயலியை முன்கூட்டியே நிறுவியதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளிடமிருந்து பரவலான விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளையில், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் புதிய மொபைல் போன்களின் தயாரிப்பின் போதே இந்த செயலியை நிறுவ மறுப்பு தெரிவித்தன. … Read more

திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்; வெடித்த ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு வழக்குத் … Read more