PMKVY மெகா மோசடி: போலி பயிற்சி, போலி கணக்கு, போலி ஆய்வு – CAG அறிக்கை முழு விவரம்

2015ம் ஆண்டு பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகள், நேரடி பயன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2015 முதல் 2022 வரை ₹10,000 கோடி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள CAG அறிக்கை, நடந்தது பயிற்சி அல்ல மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் சுமார் 95 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சி … Read more

கரூர்: சோமூர் சோமேஸ்வரர் திருக்கோயில்; மனக்கவலைகள் தீர்க்கும் மகாதேவர் ஆலயம்!

நவகிரகங்களில் சந்திரன் மனதின் அதிபதி. மனதின் எண்ணங்களை, ‘மதி’ என்று அழைப்பதும் உண்டு. சந்திரனுக்கும் மதி என்ற பெயர் உண்டு. ஒருவனின் ஜாதகத்தில் சந்திரன் பலம் குன்றியிருந்தால் அவர் மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்படுவார். அப்படிப்பட்டவர்கள் சந்திர பரிகாரத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதன் மூலம் நல்ல மனநலமும் வாழ்வில் செழிப்பும் பெறலாம். அப்படிப்பட்ட ஒருதலம்தான் கரூர் அருகில் இருக்கும் சோமூர். கரூர் மாவட்டத்தில், கரூரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில்-காவிரிக்கும், அமராவதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது சோமூர். இங்குள்ள … Read more

அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்! கடலூர் விபத்து குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்…

சென்னை; அரசு பேருந்துகளின் பராமரிப்பு, முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை  கடலூர் விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசை வலியுறுத்தி உள்ளார். கடலூர் விபத்தில், 9 பேர் உயிரிழப்புக்கு  தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். மதுரையில் இருந்து சென்னை நோக்கி நேற்று (டிசம்பர் 24ந்தேதி)  மதியம் அரசு விரைவு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் … Read more

`உன் சிரிப்பை காணமுடியவில்லை' – ஜாக்குலினுக்கு 'லவ்நெஸ்ட்' அமெரிக்க சொகுசு பங்களா பரிசளித்த சுகேஷ்?

டெல்லி தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி ரூ.100 கோடி பறித்தது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் இப்போது டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது சிறையில் ஆடம்பரமாக வாழ்க்கை நடத்தினார். அதோடு சிறைக்கு மாடல் அழகிகள், நடிகைகளை வரவைத்து பரிசுப்பொருள்களை வழங்கினார். பரிசுப்பொருள்களை பெற்றதில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸும் ஒருவர். ஜாக்குலினுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்களை பரிசாக கொடுத்துள்ளார். இதனால் ஜாக்குலின் பெர்னாண்டஸை சுகேஷ் சந்திரசேகர் தொடர்புடைய … Read more

வாஜ்பாய் 101-வது பிறந்தநாள்! ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் அஞ்சலி

டெல்லி: வாஜ்பாய் 101-வது பிறந்தநாளையொட்டி,  டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான  ‘சதைவ் அடல்’ நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்பட பல தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.  மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா வாஜ்பாயின் 101-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  … Read more

BB Tamil 9 Day 80: “கேமைவிட கேரக்டர் முக்கியம்"-ஸ்ரீரஞ்சனியால் அவஸ்தைப்பட்ட பாரு – நடந்தது என்ன?

வந்த விருந்தினர்களிடம் கெட்ட பெயர் வாங்கியதில் பாருவிற்கு முதலிடம். அடுத்த இடம் சான்ட்ரா. “இவங்க ரெண்டு பேர் கிட்டயும் ஜாக்கிரதையா இருங்க. கேமிற்காக என்ன வேணா பண்ணுவாங்க” என்கிற மாதிரியான உபதேசங்கள் வந்தன.  பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 80 சான்ட்ராவும் அமித்தும் பேசிக் கொண்டிருக்க “பாருவை நம்பாதீங்க.. மாத்தி மாத்தி பேசறா” என்று சூசக குறிப்பு தந்தார் சான்ட்ரா. “அப்ப.. யார் கிட்ட என்ன பேசறதுன்னே தெரியல.. பயமா இருக்கு” என்று … Read more

யாருக்கும் வெட்கமில்லை…..! மூத்த பத்திரிகையாளரின் குமுறல்…

யாருக்கும் வெட்கமில்லை.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு விரைவு பேருந்தின் முன் டயர் வெடித்து, சாலை நடுவே உள்ள தடுப்பை தாண்டி எதிரே வந்த வாகனங்கள் மீது மோதுகின்றன.. இரண்டு கார்கள் மீது பேருந்து மோதி, கார் பயணிகளில் ஒன்பது பேர் பலி. பத்து பேர் படுகாயம். “விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பு” என்ற ஒரே ஒரு விஷயத்தோடு … Read more

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.! | Automobile Tamilan

கிளாசிக் லுக்கில் தொடர்ந்து கிடைக்கின்ற பஜாஜின் பல்சர் 150 பைக்கில் மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் மற்றும் புதுப்பிக்கப்பட்ட நிறங்களை பெற்று விலை ரூ. 1,08,772 முதல் டாப் வேரியண்ட் ட்வீன் டிஸ்க் கொண்டது  ரூ. 1,15,481 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டிசைனில் அறிமுகமாகி வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், புதிய தொழில்நுட்பம் மற்றும் வசதிகளுடன் வந்துள்ள இந்த பைக்கின் முழு விவரங்களை இங்கே காண்போம். Bajaj Pulsar 150 பல்சர் N150 மற்றும் N160 மாடல்களில் … Read more

பாஜக கூட்டம், புறக்கணித்த அண்ணாமலை டு திமுக-வை நெருங்கும் ராமதாஸ்; டென்ஷனில் அன்புமணி! | கழுகார்

கடுப்பில் மேற்கு மண்டல நிர்வாகிகள்!உத்தரவு போட்ட ‘தில்’ மாஜி… ‘தில்’லான மாஜி அமைச்சர் வசமிருக்கும் மேற்கு மண்டலத்தில், உடன்பிறப்புகள் பயங்கர கோபத்தில் இருக்கிறார்களாம். அங்கு ஏற்கெனவே அனைத்து கன்ட்ரோலும் கம்பெனி ஆட்களிடம் சென்றுவிட்டன. அவரின் அனுமதியில்லாமல் அறிவாலயத்துக்குச் செல்வதற்குக்கூட முடியாத நிலையில்தான் நிர்வாகிகள் இருக்கிறார்களாம். இந்த நிலையில், சமீபத்தில் அங்கு நடந்த தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ‘தில்’ மாஜி, ‘`இனிமேல் யாரும் நிகழ்ச்சிகளுக்காகப் பொதுமக்களிடம் நிதி வசூல் செய்யக் கூடாது. அதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. உங்களால் முடிந்தால் நிகழ்ச்சியை நடத்துங்கள்… இல்லையென்றால் விட்டுவிடுங்கள். இனி யாரும் வசூல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது’’ என்று கறார் … Read more

பணி நிரந்தரம் உத்தரவாதம்: ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ்!

சென்னை:  முதல்கட்டமாக 1000 பேருக்கு பணி நிரந்தரம்  என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உத்தரவாததைத் தொடர்த்நது, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த செவிலியர்கள், தமிழக அரசின் வாக்குறுதியை ஏற்றுத் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போராடிய செவிலியர்களை காவல்துறை கொண்டு அடக்முறை கையாண்டு, அவர்களை கைது … Read more