"ஜட்டுவை கொடுத்தது, ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாகத்தான் இருக்கும்; ஆனால்!"- CSK காசி விஸ்வநாதன்

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணி வாங்கியிருப்பது உறுதியாகியிருக்கிறது. சென்னை அணியிடமிருந்து 14 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும் 2.4 கோடி ரூபாய்க்கு சாம் கரணையும் வாங்கிவிட்டு 18 கோடிக்கு சாம்சனை ராஜஸ்தான் அணி கொடுத்திருக்கிறது. சஞ்சு சாம்சன் – ரவீந்திர ஜடேஜா இந்நிலையில் சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே வாங்கியது குறித்தும், ஜடேஜா மற்றும் … Read more

தூய்மை பணியாளர்கள் செய்வது வேலை இல்லை சேவை! மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை:  தூய்மை பணியாளர்களுக்கு  மூன்றுவேளை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.  நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் அவர்கள்  செய்வது வேலை இல்லை சேவை என்று கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவுத் திட்டம், குடியிருப்பு வீடுகள் மற்றும் புதிய நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து . தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு கொண்டு செல்லும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சென்னை கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை … Read more

39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி | Automobile Tamilan

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது பிரபலமான கிராண்ட் விட்டாரா காரில் எரிபொருள் இருப்பினை மிக துல்லியமாக கிளஸ்ட்டரில் வழங்காத கார்களை திரும்ப அழைக்க உள்ளது. டிசம்பர் 9, 2024 முதல் ஏப்ரல் 29, 2025 வரை தயாரிக்கப்பட்ட 39,506 கிராண்ட் விட்டாரா கார்களை திரும்பப் பெறுவதாக இந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வாகனங்களில் சிலவற்றில் உள்ள ஸ்பீடோமீட்டர் அசெம்பிளியில் உள்ள எரிபொருள் இருப்பினை காட்டுவதற்கான, எச்சரிக்கை விளக்கு, எரிபொருள் நிலையை துல்லியமாக … Read more

Friends: `அந்த கடிகாரம் உடையும் காட்சி ஷூட் மறக்க முடியாது; ஏன்னா.!’ – `கிச்சனமூர்த்தி' ரமேஷ் கண்ணா

மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் அடுத்த வாரம் ரீ ரிலீஸாகிறது. விஜய் – சூர்யா காம்போ, ஆக்‌ஷன், வடிவேலுவின் காமெடி, நெகிழ வைக்கும் ப்ரண்ட்ஸ் செண்டிமெண்ட் என கம்ப்ளீட் கமர்சியல் சினிமாவான ‘ப்ரண்ட்ஸ்’, இப்போதும் பலருக்கு க்ளோஸ்! ப்ரண்ட்ஸ் இன்று, அப்படம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டாலும் முழுப் படத்தையும் அமர்ந்து பார்க்கும் ஆடியன்ஸ் இருக்கிறார்கள். திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கிறது. நவம்பர் … Read more

பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்! தமிழ்நாடு அரசு கோரிக்கை

சென்னை: பேரரசா் பெரும் பிடுகு முத்தரையருக்கு நினைவு அஞ்சல்தலை வெளியிட வேண்டும்  என  தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது. பொதுவாக இதுபோன்ற கோரிக்கைகள் மாநில முதல்வரால் வைக்கப்படும் நிலையில், இந்த கோரிக்கை தமிழக அமைச்சரால் விடுக்கப்பட்டுள்ளது.  பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் நினைவாக அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுக்கு தமிழக பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், … Read more

டாடாவின் ஹாரியர், சஃபாரியில் பெட்ரோல் அறிமுகமா.! | Tata motors harrier and safari petrol | Automobile Tamilan

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற ஹாரியர் மற்றும் சஃபாரி எஸ்யூவிகளில் புதியதாக 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிட வாயுப்புள்ளது. அதற்கு முன்பாக இன்றைக்கு முக்கிய தகவல் வெளியாகவுள்ள புதிய டாடா சியரா எஸ்யூவி மாடலிலும் இதே 170hp பவர் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற உள்ளது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் … Read more

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி – என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர்களும், தாசில்தாரும் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறியது. இந்த வெடிவிபத்தில் சிக்கி போலீஸார் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என 9 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் போலீஸ் நிலைய கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இதில் தாசில்தாரும் உயிரிழந்தார். வெடிவிபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், தீயணைப்பு துறையினர் … Read more

202 தொகுதிகளில் வெற்றி: பீகாரில் ஆட்சியை தக்க வைத்தது என்டிஏ கூட்டணி!

பாட்னா: பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.  வரலாறு காணாத அளவில் 202 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியான மகாபந்தன் கூட்டணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக பீகார் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ந்தேதி நடைபெற்றது. இதில்   பாஜக, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி, 202 தொகுதிகளில் வெற்றி … Read more

திருச்செந்தூர்: உண்டியலில் முருக பக்தர் செலுத்திய `வெள்ளிக்காசு மாலை' – சிறப்பு என்ன?

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா, கடந்த மாதம் 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 27-ம் தேதி சூரசம்ஹாரமும், 28-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற்று முடிந்தன. இந்த விழாவில், உள்நாடு மட்டுமின்றி குறிப்பாக, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற நூற்றுக்கணக்கான வெளிநாட்டு பக்தர்கள், என சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டனர். வெள்ளிக்காசு மாலை திருக்கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலில் அவர்களின் வேண்டுதல்கள் … Read more

பீகார் வாக்கு எண்ணிக்கை 12மணி நிலவரப்படி, என்டிஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை

பாட்னா:  பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  மதியம்  12மணி நிலவரப்படி,  பீகார் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் என்.டி.ஏ கூட்டணி 193 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமகா என்டிஏ கூட்டணி ஆட்சி தக்க வைக்கும் என  நம்பப்படுகிறது. மகாகத்பந்தன் 46 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.  காங்கிரஸ் கட்சி வெறும் 6 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளது. இது ராகுல்காந்திக்கு … Read more