BB Tamil 9: "உனக்கு எந்த அருகதையும் இல்லை" – விஜே பார்வதி – கனி சண்டை; இரைச்சலாகும் பிக் பாஸ் வீடு!

இன்றைய 40வது நாள் பிக்பாஸ் எபிசோடின் 3வது புரோமோ வெளியாகியிருக்கிறது. விஜே பார்வதி கூச்சல் சத்தம்தான் பிக்பாஸ் வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. கம்ருதீனுடன் சண்டை, சபரியிடம் சண்டை, விக்ரமிடம் சண்டை என வரிசையாக வம்பிழுத்து, இப்போது கனியிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் விஜே பார்வதி. “துஷாரும் அரோராவும் விட்டுக் கொடுக்காமல் ஒன்றாக இருந்தார்கள். அதன்பிறகு கம்ருதீனை கைக்குள் போட்டுவைத்திருகிறார் அரோரா” என திவாகரிடம் புறணி பேசி அடுத்தடுத்த சர்ச்சைகளை கிளப்பி வருகிறார் பாரு. பிக் பாஸ் … Read more

பாகல்கோட் மாவட்டத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் கரும்பு லாரிகளுக்கு தீ வைப்பு… இழப்பீடு வழங்க விவசாய சங்கம் வலியுறுத்தல்…

கரும்பு கொள்முதல் விலையை ரூ. 3500ஆக உயர்த்த வேண்டும் என்று கர்நாடக கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். சர்க்கரை ஆலைகள் இதற்கு இணங்க மறுத்ததை அடுத்து டன்னுக்கு ரூ. 50 உயர்த்தி ரூ. 3300ஆக வழங்க மாநில அரசு முன் வந்தது. ஆனால் கரும்பிலிருந்து எடுக்கக்கூடிய சர்க்கரையின் அளவு விகிதத்தை 10.25% வீதத்தில் இருந்து 11.25% வீதமாக உயர்த்தியதால் மொத்தத்தில் கரும்பு விவசாயிகளுக்கு தற்போதுள்ள விலையும் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனால் கரும்புடன் வந்த 200க்கும் மேற்பட்ட … Read more

ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டம்; புறக்கணித்த சேகர்பாபு; புகைச்சலில் அறிவாலயம்

2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பான ஆலோசனையின்போது தி.மு.க எம்.பி. ஆ.ராசாவுக்கும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்ட நிலையில், ஆ.ராசா தலைமையிலான SIR கூட்டத்தை அமைச்சர் சேகர்பாபு புறக்கணித்திருப்பது அறிவாலயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 09.11.2025 அன்று நடைபெற்ற காணொலி காட்சி கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி, SIR தொடர்பான பணிகளை முழுமையாக முடிப்பது குறித்து சென்னை மண்டல மாவட்டங்களுக்கு ஆலோசனைக் கூட்டம், சென்னை மண்டலத் தேர்தல் பொறுப்பாளரும் கழகத் துணைப் பொதுச்செயலாளருமான ஆ.ராசா … Read more

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று  மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் கூறியிருந்தார். இந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று 8வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று  காலை 11 … Read more

US Shutdown: 43 நாள்கள் முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்; காரணம்-முடிவு என்ன? ட்ரம்ப் என்ன செய்தார்?

அமெரிக்க வரலாற்றிலேயே மிக நீண்ட அரசு முடக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி, ‘அமெரிக்க அரசு நிர்வாக முடக்கம்’ என்ற செய்தியைக் கேட்டதும், பலருக்கும் தலையும் புரிந்திருக்காது, வாலும் புரிந்திருக்காது. என்னது அரசு நிர்வாக முடக்கமா, அது எப்படி நடக்கும்? இந்த நிலையில் அமெரிக்கா எப்படி இயங்கும்? போன்ற ஏராளமான கேள்விகளும் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் இதோ: அரசு நிர்வாக முடக்கம் என்றால் என்ன? அமெரிக்காவின் நிதியாண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் … Read more

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை: என்டிஏ கூட்டணி 192 தொகுதிகளில் முன்னணி… அரசியல் அனாதையானார் பிரசாந்த் கிஷோர்…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை  நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி  அமோக முன்னிலையில் உள்ள நிலையில், அரசியல் சாணக்கியன் என்று கூறிக்கொள்ளும்  பிரசாந்த் கிஷோர்-ன் ஜன்சுராஷ் கட்சி போட்டியிட்ட அனைத்து இடத்திலும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அரசியல் சாணக்கியன் இன்று அரசியல் அனாதையாகி உள்ளார். பீகார் மக்கள் அவரது கட்சியை அனாதையாக்கி உள்ளனர். நிதிஷ்குமார் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வென்றுவிட்டால், நான் அரசியலை விட்டே செல்கிறேன் என்ற பிரசாந்த் கிஷோரை  … Read more

சேலம் தி ஃபுட் ஸ்ட்ரீட்: 35 கடைகளுடன் கோடிக்கணக்கில் அமைந்த புதிய டைம் பாஸ் ஸ்பாட் – எப்படி இருக்கு?

சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி ஏரி பூங்கா அருகில் பிரமாண்டமான அழகுடன், அனைத்து வசதிகளும் அடங்கிய சுமார் ₹3 கோடி செலவில் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறது சேலம் ஃபுட் ஸ்ட்ரீட். சுமார் 35 அழகிய சிறுசிறு கடைகளுடன், பேவர் ப்ளாக் கற்கள் பொதிக்கப்பட்டுள்ள வளாகம், ஆண்கள்–பெண்கள் என தனித்தனியான கழிவறை வசதிகளுடனும், இரவு நேரங்களை மக்கள் இயல்பு நேரங்களாக மாற்றும் வண்ணம் அமைக்கப்பட்ட அழகிய மின் விளக்குகளுடனும், பள்ளப்பட்டி பகுதிக்கு இன்னொரு அடையாளமாக … Read more

193 வழக்குகள்: ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணைகைள விரைந்து முடிக்க நீதிபதிகள் உத்தரவு!

சென்னை: தமிழ்நாட்டில் ­ எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிராக 193 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்க அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்படாத வழக்குகள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு … Read more

Arjun: “ஜென்டில்மேன் படமும் அப்படிதான்!'' – பட விழாவில் நடிகர் அர்ஜுன்

அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் ரிலீஸுக்கு ரெடியாகி வருகிறது. நவம்பர் 21-ம் தேதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. Aishwarya Rajesh | ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர். அர்ஜூன் பேசுகையில், “எனக்கு ஒவ்வொரு படமும் முதல் படம் மாதிரி தான். … Read more

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: ஆவணங்கள் திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றம்!

திருச்சி: தவெக தலைவர் விஜயின் கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள்  வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதுபோல புதிதாக அரசியல் கட்சி தொடங்கி உள்ள நடிகர் விஜயும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதுடன், தனது கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம், ஆட்சியில் பங்கு என கூறி, மற்ற கட்சிகளுக்கு அழைப்பு … Read more