'நல்லதோ கெட்டதோ, எல்லாரும் ஒன்னா நிற்போம்!' – வெற்றி குறித்து ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சி!

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். Team India ஸ்மிருதி மந்தனா பேசியதாவது, ‘எப்படி என்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது என தெரியவில்லை. ஒவ்வொரு உலகக்கோப்பையிலும் எங்களுக்கு நிறைய ஏமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், எங்களுக்கு ஒரு பொறுப்புணர்வு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ‘தலைமுறைகளின் கனவு வெற்றி!’ – உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மகுடம் … Read more

'இந்த பொண்ணுங்க அவ்வளவு உழைச்சிருக்காங்க!' – உருகும் இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார்

உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வரலாறு படைத்திருக்கிறது. வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் அவரது வீராங்கனைகள் குறித்து நெகிழ்ச்சியாக பேசியிருந்தார். Team India அமோல் மஜூம்தார் பேசியதாவது, ‘இந்த அணியை நினைத்து அவ்வளவு பெருமையாக இருக்கிறது. இது ஒரு அசாத்தியமான சாதனை. இந்த வெற்றிக்காக இந்த வீராங்கனைகள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான வெற்றி. இடையில் எங்களுக்கு ஏற்பட்ட சறுக்கல்களை தோல்விகளாக பார்க்கவில்லை. … Read more

பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' – விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 – எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது. 43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம் கிலோ எடை வரை ஏந்திச் செல்லும் திறனுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதனால் இதை ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னர், எடை மிகுந்த செயற்கைக்கோள்களை ஃப்ரென்ச் கயானா நாட்டுக்கு அனுப்பி, அங்கிருந்து வேறு நாட்டு ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணுக்கு … Read more

Army Chief: “அமெரிக்க அதிபருக்கு கூட தெரியாது" – மாணவர்களிடம் மனம் திறந்து உரையாற்றிய ராணுவத் தளபதி

இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதியின் சொந்த ஊர் மத்தியப் பிரதேசத்தின் ரேவா. தன் சொந்த ஊரானா ரேவாவில் உள்ள டிஆர்எஸ் கல்லூரியில் மாணவர்களுக்கு மத்தியில் ஜெனரல் உபேந்திரா திவேதி உரையாற்றினார். அப்போது ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தும், எதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாற்றினார். அவரின் உரையில், “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது நம் யாருக்கும் தெரியாது. இதை நாம் நிலையற்ற தன்மை, நிச்சயமற்ற தன்மை எனக் குறிப்பிடுகிறோம். ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திரா … Read more

Ind vs SA : அதிரடி காட்டிய ஷெபாலி, ரிச்சா; 300 யை நெருங்கிய இந்தியா! – கோப்பையை வெல்லுமா?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முடித்திருக்கிறது. சிறப்பாக ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 298 ரன்களை சேர்த்திருக்கிறது. India vs South Africa நவி மும்பையில் மழை பெய்ததால் போட்டி இரண்டு மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாராதான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்து வீசப்போவதாக அறிவித்திருந்தார். இது பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச். அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இமாலய இலக்கை … Read more

SIR: “இதைத் தவிர வேறு வழியில்லை'' – அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானம் என்ன? – முழு விவரம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் SIR நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இதை விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தமிழ்நாடு அரசு. இந்தக் கூட்டத்தின் இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், பீகார் மாநில SIR வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் … Read more

Mali: முதல் முறையாக தனிநாட்டைக் கைப்பற்றும் அல்-கொய்தா; ஆப்பிரிக்காவை சூழ்ந்துள்ள ஆபத்து!

அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றி ஆளும் வெற்றியை நெருங்கியிருக்கிறது. வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் அதன் இணைப்பு அமைப்பான ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் (JNIM) பரந்த பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. விரைவில் தலைநகர் பமாகோவைக் கைப்பற்றும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அல்-கொய்தாவின் 40 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஒரு நாட்டைக் கைப்பற்றும் தருணமாக இது இருக்கலாம். அல்-கொய்தாவின் நிழல் அரசு கடந்த சில மாதங்களாக வடக்கு மாலியில் இருந்து தெற்கு நோக்கி … Read more

BB Tamil 9: “இதுதான் ரியலா'' – பார்வதியின் பேப்பரை கிழித்த வைல்ட் கார்ட் சாண்ட்ரா

BB Tamil 9: பிக்பாஸ் சீசன் 9 பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த வாரம் புதிய 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் அனுப்பப்படுகின்றனர். இத்தனை நாட்கள் வெளியில் இருந்து போட்டியாளர்களை உள்வாங்கியவர்கள் உள்ளே சென்றதும் ஆக்ரோஷமான ஆட்டத்தை விளையாடத் தொடங்கிவிட்டனர். சாண்ட்ரா – பிரிஜின் புரோமோவில், போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றதற்கான காரணத்தை ஒரு தாளில் எழுதச் சொல்லப்படுகின்றனர். வைல்ட்கார்ட் தம்பதியர்களான பிரஜின் மற்றும் சாண்ட்ரா, போட்டியாளர்கள் எழுதியதை படித்துக்காட்டச் சொல்லி, எல்லோரின் முன்னிலையிலும் கேள்வி எழுப்புகின்றனர். … Read more

பல்லை பிடுங்கிய வழக்கில் 16 முறையாக ஆஜராகாத பல்வீர்சிங்; பிசிஆர் கோர்ட்டுக்கு மாற்றக் கோரிக்கை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர்சிங் பணியாற்றிய போது, பல்வேறு வழக்குகளில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி கொடூரமாக சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பல்வீர்சிங் மற்றும் அவருடன் பணியாற்றிய ஆய்வாளர் உட்பட 14 போலீஸார்மீது சிபிசிஐடி போலீஸார் நான்கு தனித்தனி வழக்குகளை பதிவு செய்தனர். அந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சத்யா முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அந்த … Read more

பீகாரில் ஜனசுராஜ் கட்சி தொண்டர் படுகொலை; ஐக்கிய ஜனதாதள வேட்பாளர் நள்ளிரவில் கைது

பாட்னா, 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய நாட்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 14-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில், ஜனசுராஜ் கட்சியை சேர்ந்த பியூஷ் பிரியதர்ஷி என்பவர் மொகமா தல் தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் கோரி பிரசாரத்தில் ஈடுபடும் … Read more