டெல்லி கார் வெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் – அமித்ஷா

புதுடெல்லி, டெல்லியின் முக்கிய பகுதியான செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி இரவு கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் 14 பேர் பலியானார்கள். இது திட்டமிட்ட பயங்கரவாத செயல் என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) மற்றும் தேசிய பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது டாக்டர் உமர் முகமது என்ற பயங்கரவாதி என கண்டறியப்பட்டது. உமர் உடல் சிதறி இறந்தது டி.என்.ஏ. பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. … Read more

தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பில் இருந்து நடிகை நீது சந்திரா நீக்கம்

பாட்னா, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை நீது சந்திரா, பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். மாநிலத்தில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேர்தல் கமிஷனின் தூதராக அவர் நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்டவர், கட்சி சார்பின்றி விழிப்புணர்வு பணிகளை ஏற்படுத்த வேண்டும். ஆனால் நீது சந்திரா அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து நடிகை நீது சந்திராவை அந்த பொறுப்பில் … Read more

பிரதமர் மோடி வருகை எதிரொலி: கோவையில் வரும் 19ந்தேதி 12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம்

கோவை: பிரதமர் மோடி கோவை  வருகை எதிரொலியாக  வரும் 19ந்தேதி பகல்  12 மணி முதல் மாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.‘ கோவை கொடிசியாவில், விவசாயிகள் சங்கங்களால்   நடத்தப்படும் 25வது தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டில்  கலந்துகொள்ள பிரதமர் மோடி கே 19ந்தேதி கோவை வருகிறார்.  இதையொட்டி,   நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார். … Read more

நாட்டை உலுக்கிய டெல்லி கார் வெடிப்பு சம்பவம் – அரியானாவில் அதிகாரிகள் அதிரடி சோதனை

சண்டிகர், டெல்லியில் கடந்த 10-ந் தேதி நிகழ்ந்த கார் வெடிப்பு பயங்கரவாத சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு அதனை விசாரணைக்கு எடுத்தது. விசாரணை மிகத்தீவிரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். … Read more

நாளை முதல் எஸ்ஐஆர் பணிகளை புறக்கணிக்கப்போவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு…

சென்னை:  தமிழ்நாட்டில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் தீவிர பட்டியல் சீர்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்க மாநிலங்கள் எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை புறக்கணிக்க வருவாத்துறை சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி,  நாளை (நவம்பர் … Read more

அமலாக்கத்துறை முன்பு ஆஜராவதை மீண்டும் தவிர்த்த அனில் அம்பானி

புதுடெல்லி முகேஷ் அம்பானியின் சகோதரரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்சியல் பைனான்ஸ் நிறுவனங்களால் பொது நிதி திரட்டப்பட்டது. இதில் ‘எஸ்’ வங்கி ₹3 ஆயிரம் கோடியை முதலீடு செய்தது. இந்த பொது நிதியை மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. விசாரணையில், அனில் அம்பானி ₹17 ஆயிரம் கோடி பண மோசடி செய்ததாக 2 வழக்குகளை சி.பி.ஐ. (மத்திய புலானாய்வு அமைப்பு) பதிவு செய்தது. சட்டவிரோத … Read more

Tom Cruise: "சினிமா எனக்கு தொழில் அல்ல, வாழ்க்கை" – முதல் ஆஸ்கரை வென்ற நாயகன்!

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கடந்த ஞாயிறு (நவ. 16) அன்று நடந்த கவர்னர்ஸ் விருதுகள் விழாவில் தனது முதல் ஆஸ்கரைப் பெற்றுள்ளார். அவருடன் நடன இயக்குநர் மற்றும் நடிகர் டெபி ஆலன் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் வின் தாமஸ் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டுள்ளனர். விருதாளர்கள் கொண்டாட்டமாக நடனமாடும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. View this post on Instagram A post shared by D-Nice (@dnice) டாம் குரூஸ் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் … Read more

சவூதியில் அதிர்ச்சி சம்பவம்: மெக்காவில் இருந்து மதீனாவுக்கு பேருந்தில் சென்ற இந்தியர்கள் 42 பேர் விபத்தில் பலி

சவூதியில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு நடைபெற்ற  பஸ் விபத்தில் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சென்றவர்கள் 42 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பத தெரிய வந்துள்ளது. சவுதி அரேபியாவின் மதீனா அருகே ஒரு பேருந்தும் டேங்கர் லாரியும் மோதியதில் 42 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் இருந்து சவுதி அரேபியாவிற்கு புனித பயணம் சென்றவர்கள்,  ‘மெக்காவில் இருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்தில் சிக்கி 42 … Read more

SIR: `தவெக எதிர்க்கிறதே தவிர, திமுகவைப் போல் தோல்வி பயத்தில் வேண்டாமெனவில்லை!' – ஜி.கே.வாசன்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து, ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பிற்குப் பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியவர், “’மத்தியில் என்.டி.ஏ கூட்டணி, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி. தமிழகத்தின் கூட்டணி தலைவரான எடப்பாடி பழனிசாமியை, சேலத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமல்லாமல், கூட்டணி கட்சித் தலைவர் என்ற முறையில் … Read more

சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு

சென்னை: சென்னை உள்பட தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை! செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி உபரிநீா் திறப்பு 1200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதிகளில் நிலவுகிறது. இது இன்று மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும்   என்றும், இதன் காரணமாக,   சென்னை உள்பட  கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக … Read more