ICC-ஐ விட அதிக பரிசுத் தொகையை அறிவித்த BCCI; கூடுதலாக சூரத் வைர வியாபாரியின் சர்ப்ரைஸ் கிஃப்ட்!

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற அரை நூற்றாண்டுக் கனவை நிறைவேற்றியிருக்கிறது. நவி மும்பையில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல்முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா. இந்த நிலையில், சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ஐ.சி.சி சார்பில் ஒதுக்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை மட்டுமின்றி, பி.சி.சி.ஐ தனியாக ஐ.சி.சி-யை விட அதிக பரிசுத்தொகையை இந்திய மகளிர் அணிக்கு அறிவித்திருக்கிறது. … Read more

பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்! தமிழ்நாடு அரசு

சென்னை: பரப்புரை, ரோடு ஷோ கூட்டக் கட்டுப்பாடு தொடர்பாக நவ.6ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்  நவ.6-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கரூர் தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிகளின் பரப்புரை, ரோடு ஷோ வின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு நெறிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து,  அனைத்துக்கட்சிகளின் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டி … Read more

சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: சமூக வலைத்தளங்களை சிறார்கள் பயன்படுத்தத் தடை கோரிய  மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு  தெரிவித்துள்ளது.  நேபாளம் அத்தகைய தடையை முயற்சித்தபோது என்ன நடந்தது தெரியுமா? என்றும் கேள்வி எழுப்பியது. நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சியின் பயனாக குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் இணையதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.  இணையதளங்களில் பயன்படுத்துவதில் எவ்வளவுக்கு எவ்வளவு நல்லது உள்ளதோ அந்த அளவுக்கு கெடுதலாக தகவல்களும் உள்ளன. இதனால், சிறுவர்கள் இணையதளத்தை பயன்படுத்தும்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என … Read more

தெலுங்கானா: அரசு பஸ் மீது லாரி மோதி 15 பேர் பலி

ஐதராபாத், தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் செவல்லா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கானாப்பூர் கேட் பகுதியில் இன்று காலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில், 15-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில், பஸ் மீது டிப்பர் லாரி ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், பஸ்சில் இருந்த 17 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். பாரதீய ராஷ்டீரிய சமிதியின் தலைவரான தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்து உள்ளார். … Read more

Maldives: 2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள் மாலத்தீவில் புகைப்பிடிக்க தடை; மீறினால்?

2007-ம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், மாலத்தீவில் கண்டிப்பாக புகைப்பொருள்களைப் பயன்படுத்தவே கூடாது என்கிற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது அந்த நாட்டு அரசு. என்ன அறிவிப்பு? இந்த அறிவிப்பு Tobacco Control Act-ன் இரண்டாவது திருத்தம் என்று அழைக்கப்படுகிறது. மாலத்தீவு நாட்டின் அதிபர் முகமது முய்சு, “புதிய சட்டத்தின் படி, 2007-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதிக்கு பின் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் புகைப்பொருள்களை வாங்கவோ, விற்கவோ அல்லது பயன்படுத்தவோ முற்றிலும் தடை” என்று அறிவித்துள்ளார். … Read more

பிரதமர் பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? முதல்வர் ஸ்டாலின் சவால்

தருமபுரி: பீகாரில் பேசிய கருத்தை தமிழகத்தில் வந்து பேச முடியுமா..? திமுக எம்பி மணியின் திருமண விழாவில் பேசிய முதல்வர் பிரதமர் மோடிக்கு  சவால் விடுத்தார். மேலும,  2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமைவது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பீகார் ஊழியர்கள் தாக்கப்படுவதாக சொன்ன கருத்தை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்து பேச முடியுமா என திமுக எம்பி மணியின் இல்ல திருமண விழாவில் மணமக்கள் வாழ்த்தியபேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்க … Read more

பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை

ஜாம்ஷெட்பூர், இந்திய குடிமக்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. எனவே புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை வழங்குவதை பல அரசு ஆஸ்பத்திரிகள் செயல்படுத்தி வருகின்றன. இதை பல ரெயில்வே ஆஸ்பத்திரிகளும் செய்து வருகின்றன. அந்தவகையில் தென்கிழக்கு ரெயில்வே மண்டலத்தில் முதல் முறையாக ஜார்கண்ட் சக்ரதார்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளது. மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள இந்த ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பிறந்த 4 … Read more

eVitara மூலம் எலக்ட்ரிக் சந்தையில் நுழையும் மாருதி சுசூகி | Automobile Tamilan

இந்தியாவில் மாதந்தோறும் 20,000 கூடுதலாக எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்கள் விற்பனை ஆகின்ற நிலையில், நாட்டின் முதன்மையான மாருதி சுசூகியின் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக eVitara மூலம் மின் வாகன சந்தையில் டிசம்பர் 2025ல் நுழைகின்றது. போட்டியாளர்களான டாடா, எம்ஜி, மஹிந்திரா, வின்ஃபாஸ்ட் மற்றும் ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களை எதிர்கொள்ள தயாராகியுள்ள மாருதி மிக வலிமையான சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் தரம் சார்ந்த மேம்பாடுளை சுசூகி கொண்டிருப்பதனால் வலுவான விற்பனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளது. தற்பொழுது குஜராத்தில் … Read more

“தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" – சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா – பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தனர். அப்போது இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர். அமெரிக்க அதிபரின் சீனா பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருளான நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா சென்ற அதிபர் … Read more