அரியானா: தூய்மை பணியில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட வெளிநாட்டினர்

குருகிராம், நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. தூய்மையான நகரங்கள் ஆண்டுதோறும் கணக்கெடுப்பின்படி தேர்வு செய்யப்படுகிறது. ஸ்வச் சர்வேக்சன் எனப்படும் தூய்மையை கணக்கெடுக்கும் பணியை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு வரிசைப்படி விருதுகள் வழங்கப்படும். தூய்மையான நகரங்களுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்குவார். இதன்படி, நடப்பு ஆண்டில் மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரம் முதல் இடம் பிடித்துள்ளது. 8-வது முறையாக தொடர்ந்து முதல் இடம் பிடித்து இந்த … Read more

ரூ.10 லட்சம் வரை கடன் கிடைக்கும்; லாபம் தரும் காளான் வளர்ப்பு; நேரடி பயிற்சி!

காளான் வளர்ப்பு நேரடி பயிற்சி பசுமை விகடன் மற்றும் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கீழ் இயங்கும் EDII தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி, சனிக்கிழமை `லாபம் கொடுக்கும் காளான் வளர்ப்பு’ என்ற நேரடி பயிற்சியை நடத்த இருக்கிறது. அறிவிப்பு இந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பை தொடங்க எவ்வளவு இடம் தேவைப்படும். கொட்டகை அமைப்பது எப்படி, காளான் வளர்ப்பு பைகளை தயார் செய்யும் முறைகள், விதைகள் எங்கு … Read more

சுதர்சன் ரெட்டி நக்சல் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் என அமித்ஷா விமர்சனம்! முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில்  எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நக்சல் பயங்கரவாதி களுக்கு உதவியர் என உள்துறை அமித்ஷா விமர்சனம் செய்திருந்தார். இதற்கு  முன்னாள் நீதிபதிகள்  18 பேர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். துணை குடியரசுத் தலைவர் தேர்தல், வரும்  செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் … Read more

ஆந்திர பிரதேசம்: மகன், மகளை ஏரில் பூட்டி உழுத விவசாயி

கடப்பா, உலகத்திற்கு சோறு போடும் விவசாயியின் இன்றைய நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. கடுமையாக உழைத்து, வேளாண் பணிகளை மேற்கொண்டு விளைச்சலில் கிடைத்த பொருட்களை கொண்டு விற்க சென்றால், அதற்கான போதிய விலை கிடைப்பதில்லை. அதனால், விவசாயத்தில் முதலீடு செய்வது என்பது ஒரு சுமையாக பார்க்கப்படுகிறது. வேளாண் பணிக்கான கூலி, உரத்திற்கான விலை ஆகியவையும் உள்ளன. விளைந்த பயிர்களை விற்கும்போது, அவற்றை கொள்முதல் செய்வோரிடம் இருந்து விவசாயிக்கு சரியான விலையும் கிடைப்பது இல்லை. இதனால், முதலீடு செய்வதற்கும், … Read more

Sarathkumar: “இதுகூட தெரியாமல் பேசுகிறீர்களே விஜய்" – TVK விஜய் பேச்சுக்கு நடிகர் சரத்குமார் பதில்

கள்ளக்குறிச்சியில் நடிகர் சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில் உரையாற்றிய நடிகர் சரத் குமார், “நான் உழைப்பால் உயர்ந்தவன். என் 36 ஆண்டுகால சினிமாவில் நீங்கள் கொடுத்ததை மீண்டும் உங்களுக்கே கொடுக்கத்தான் வந்திருக்கிறேன். நான் டெல்லியில் பிறந்தவன். எனக்கும் டெல்லிக்கும் தொடர்பிருக்கிறது. அதனால்தான் கலைஞர் என்னை எம்.பியாக அறிவித்து டெல்லி அனுப்பினார். இப்போது டெல்லியோடு அரசியல் களத்தில் இணைந்திருக்கிறோம். வரும் சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமானது. TVK மதுரை மாநாடு – … Read more

கடலூர் அருகே மீண்டும் அதிர்ச்சி சம்பவம்: தண்டவாளத்தில் கவிழ்ந்த பள்ளி வேன்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம்  பூவனூர் அருகே தண்டவாளத்தை கடந்த பள்ளி வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு  முன்பு (ஜூலை மாதம்) கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன்மீது ரயில் மோதி 3மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  தற்போது ரயில்வே கேட்டை கடந்த பள்ளி வேன், நிலைதடுமாறு கவிழ்ந்து விழுந்த சம்பவம் … Read more

Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?

Doctor Vikatan:  சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்போ எடுப்பது தவறா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை சிறப்பு மருத்துவர் சஃபி குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி பொதுவாக, ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொருவித தன்மைகள் இருக்கும். உதாரணத்துக்கு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளின் தன்மை வேறு. வலி நிவாரணிகளின் தன்மை வேறு. ஒவ்வொரு மருந்தும் ஒவ்வோர் இடத்தில் … Read more

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி – தமிழ்நாடு அரசு எதிர்ப்பு…

சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி  வழங்கியுள்ள நிலையில், அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு  மத்தியஅரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி,  முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி, எண்ணை கிணறுகள் எரிவாயுக்காக சுமார்  3,000 மீட்டர் ஆழம் … Read more

சேலம்: பிறந்த பெண் குழந்தையை ரூ.1.20 லட்சத்துக்கு விற்ற தம்பதி; 4 பேர் கைது – விசாரணையில் அதிர்ச்சி

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஏற்கெனவே ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில், மீண்டும் கர்ப்பம் அடைந்த சிவகாமிக்கு, கடந்த ஒன்பதாம் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், சந்தோஷ் அவரது மனைவி சிவகாமி ஆகியோர் கடந்த 14-ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டதாக மருத்துவ அறிக்கை ஒன்றுடன் ஊருக்கு வந்தனர். குழந்தையின் … Read more