Gold Rate: தங்கம் விலை மீண்டும் உயர்வு; வெள்ளி அதிரடி உயர்வு; இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் | ஆபரணம் இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50-வும், பவுனுக்கு ரூ.400-வும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்துள்ளது. தங்கம் | ஆபரணம் இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.12,400 ஆகும். தங்கம் | ஆபரணம் இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.99,200 ஆகும். வெள்ளி | ஆபரணம் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 222-க்கு விற்பனை ஆகி வருகிறது. Source link

முதல்வர் ஸ்டாலின் டிச.20, 21ந்தேதி நெல்லையில் சுற்றுப்பயணம் – பொருநை அருங்காட்சியகம் திறப்பு! அமைச்சர் நேரு தகவல்..

நெல்லை: முதல்வா் ஸ்டாலின் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது,  பொருநை அருங்காட்சியகத்தை திறப்பு உள்படபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் என அமைச்சர் நேரு கூறினார். தமிழக முதல்வர், மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு வரும் 20, 21 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் என்று நகராட்சி நிா்வாகத் துறை – திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு. கூறினார். முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லை விஜயத்திற்காக,  திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி … Read more

யமஹா YZF-R2 என்ற பெயரில் புதிய மாடலை வெளியிடுகிறதா.! | Automobile Tamilan

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற R15 ஃபேரிங் ஸ்டைலை போல புதிய 200cc என்ஜின் பெற்ற YZF-R2 வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில், இந்திய சந்தையில் ‘YZF-R2 என்ற பெயருக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது. வருங்காலத்தில் அறிமுகம் செய்வதற்கான முதற்படி என்பதை மட்டும் உறுதி செய்கிறது, மெக்கானிக்கல் அல்லது விற்பனை திட்டம் குறித்து எந்த அதிகாரப்பூர்வமாக இல்லை. யமஹாவின் ஆர்-சீரிஸ் பைக்குகள் என்றாலே அவற்றின் கூர்மையான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தும் வகையிலான ஏரோடைனமிக்ஸ் டிசைனுடன், இந்த … Read more

ராமநாதபுரம்: 50 கிலோ சர்க்கரை, 200 முட்டைகள்; புத்தாண்டை வரவேற்கும் மலேசிய இரட்டை கோபுர கேக்!

இந்த ஆண்டின் கிருஸ்துமஸ் மற்றும் எதிர்வரும் புத்தாண்டு பிறப்பு ஆகியவற்றை ஒருசேர கொண்டாடும் வகையில் ராமநாதபுரத்தில் மாடல் கேக் உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் பெருமைமிகு அடையாளமான இரட்டை கோபுரங்கள் போன்று செய்யப்பட்டுள்ள இந்த கேக் பலரையும் கவர்ந்து வருகிறது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மாடல் கேக் ஒவ்வொரு ஆண்டும் விழாக் காலங்கள் மற்றும் சுதந்திர தினம், குடியரசு தினங்கள், உலக பிரபலங்களின் பிறந்தநாள்கள், உலக கோப்பை விளையாட்டு போட்டிகள் ஆகியவற்றின் போது அதனைக் குறிக்கும் வகையில் பிரமாண்ட மாதிரி கேக் … Read more

பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சோகம்! இது திருவள்ளூர் சம்பவம்…

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து 7ஆம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால்  மாணவன் உயிர் பறிபோயுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில்  அமர்ந்து  உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, திடீரென பள்ளியின்  பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவன் மோகித் உயிரிழந்தார். இந்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், … Read more

அதிக மைலேஜ் தரும் கியா செல்டோஸ் ஹைபிரிட் வருகை.. எப்பொழுது.! | Automobile Tamilan

ஹைப்ரிட் கார்களின் விலை பொதுவாக அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு, இந்திய வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் இந்த காரைக் கொடுப்பதற்காக, ஹைப்ரிட் உதிரிபாகங்களை இந்தியாவிலேயே தயாரிக்க கியா திட்டமிட்டு வருவதனால், இதனை சாத்தியப்படுத்திய பின்னரே செல்டோஸ் ஹைபிரிட்டை 2026 இறுதி அல்லது 2027ல் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. Kia Seltos Hybrid launch Timeline ஹைபிரிட் சார்ந்த வாகனங்களுக்கு மிக முக்கியமான பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் போன்ற முக்கிய பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதன் மூலம், விலையைக் … Read more

சென்னை முதல் தூத்துக்குடிவரை இன்றுமுதல் 2 நாள் மழைக்கு வாய்ப்பு! வெதர்மேன் தகவல்

சென்னை: சென்னை முதல் தூத்துக்குடி வரை கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு  இருப்பதாக  தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கூடலூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய 15 மாவட்டங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது. டிட்வா புயல் … Read more

கரூர்: '1000 ஆண்டுகள் பழமையான கோயில் கலசங்கள் திருட்டு' – குற்றவாளிகளை தேடும் போலீஸ்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சங்கரமலைப்பட்டியில் மலை உச்சியில் ஸ்ரீசௌந்தரநாயகி உடன் சங்கரேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ,அதேபோல், இந்தக் கோயில் பொன்னர், சங்கர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறு குறித்த கல்வெட்டுகள் கோவில் மலை பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் 200 ஆண்டுகளுக்கு முன்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகளை ஊர் பொதுமக்கள் பங்களிப்புடன் அறநிலையத்துறை பணியை துவங்கி … Read more

நாளை வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாளை பிரச்சித்தி பெற்ற வேலூர் பொற்கோயிலுக்கு வருகை தருகிறார். இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாளை (டிச.17) தமிழகம் வரும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேலூர் பொற்கோவிலில் வழிபாடு நடத்தவுள்ளார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு வேலூர், ஸ்ரீபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் டிசம்பர்  டிசம்பர் 16 முதல் 22 வரை கர்நாடகம் தமிழகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதன்படி, … Read more