முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா: மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்…

மதுரை: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை, கோரிப்பாளையம் சந்திப்பில் வாகன போக்குவரத்துக்கு தடை செய்யபப்ட்டுள்ளது. இன்றும், நாளையும் காலை 6-இரவு 10.30 மணி வரை கனரக வாகனங்களுக்கு தடை. மதுரையின் பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி மற்றும் 63-வது குருபூஜை விழா   நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும் … Read more

Career: மாதம் ரூ.11.25 லட்சம் வரை சம்பளம்; SBI வங்கியில் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பிராடக்ட், முதலீடு மற்றும் ஆய்வுத் துறையில் தலைவர், ரீடெயில் துறையில் மண்டலத் தலைவர், பிராந்திய தலைவர் போன்ற ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர் பணிகள். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 103 வயது வரம்பு: ஒவ்வொரு பணிகளுக்கேற்ப வயது வரம்பு மாறுபடுகிறது. குறைந்தபட்சமாக 25, அதிகபட்சமாக 50 (சில பிரிவினருக்குத் தளர்வுகளும் உண்டு) சம்பளம்: அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.135 லட்சம்; … Read more

110கி.மீ. வேகத்தில் ஆந்திராவில் கரையை கடந்தது மொன்தா புயல்…

சென்னை: பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மொன்தா புயல், தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர கடற்பகுதியில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சுமார் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுமார் 2 மணி நேரமாக பலத்த காற்றுடன் கரையை கடந்த மொன்தா புயல் காரணமாக,  கடலோரப் பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொன் புயலுக்கு ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது. வங்கக் கடலில் … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்; 1-ந்தேதி ‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்

சென்னை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வருகிற 2-ந்தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் ‘எல்.வி.எம்-3′ ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7 ஆர்’ என்று அழைக்கப்படும் ‘சி.எம்.எஸ்-03′ என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ந்தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு … Read more

செஞ்சி, சிங்கவரம் ரங்கநாதர் கோயில்: வராஹ ரூபமாய்த் தோன்றி வழிகாட்டிய பேசும் பெருமாள் கோயில்!

மகாவிஷ்ணு, சயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் பல தலங்கள் உண்டு. அவற்றுள் முதன்மையானது ஸ்ரீரங்கம் என்றாலும் அதற்கு இணையான பெருமையை உடையது சிங்கவரம். செஞ்சிக்கு அருகில் இருக்கும் இந்தத் தலத்துக்கு விஷ்ணு செஞ்சி என்கிற பெயர் உண்டு. தற்போதைய செஞ்சியை சிவ செஞ்சி என்கின்றன பழம் நூல்கள். அந்த அளவுக்கு விஷ்ணு தலமாக விளங்குகிறது சிங்கவரம். செஞ்சி மாநகரில் இருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் சிறப்புகளைக் காண்போம். பல்லவ மன்னன் ஒருவன் வளர்த்த தோட்டத்தைப் … Read more

110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்தது ‘மோந்தா' புயல்

அமராவதி, வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல், ஆந்திராவை நோக்கி நேற்று முன்தினத்தில் இருந்து பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது. மணிக்கு 17 கி.மீ வேகத்தில் காக்கிநாடா, மசூலிப்பட்டினம் அருகே ‘மோந்தா’ புயல் கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் காக்கிநாடா, கிருஷ்ணா, … Read more

ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் ரூ.18 ஆயிரம் ‘அபேஸ்’

பெங்களூரு, கர்நாடக மாநிலம் சிவமொக்கா டவுன் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா (வயது 65). இவர் கடந்த 10-ந்தேதி பத்ராவதி டவுன் பகுதிக்கு சென்றபோது அங்கு உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் அவசர தேவைக்காக பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், ராமச்சந்திராவுக்கு ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க தெரியவில்லை. இதனை அருகே நின்ற நபர் பார்த்து தான் பணம் எடுத்து கொடுப்பதாக அவரிடம் கூறியுள்ளார். பின்னர் ராமச்சந்திராவிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி பணம் எடுப்பது போல் நடித்து பணம் வரவில்லை … Read more

இந்தியா கூட்டணியின் தேர்தல் அறிக்கை புதிய பீகாரை உருவாக்கும்; காங்கிரஸ்

பாட்னா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட மேலும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி மேற்கொள்ள உள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில், அம்முடிவை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. பாட்னா விமான நிலையத்தில், ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தலைவர் பவன் கேரா கூறியதாவது:- பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது சந்தித்த சிரமங்களுக்கு என்ன செய்வது? அந்த சமயத்தில், காங்கிரஸ் எழுப்பிய கேள்விகளுக்கு தேர்தல் கமிஷன் இன்னும் பதில் அளிக்காதது ஏன்? … Read more

சோதனை வெற்றி; டெல்லியில் செயற்கை மழைக்கு வாய்ப்பு

புதுடெல்லி, காற்று மாசுபாட்டை சமாளிக்க டெல்லியின் மேக விதைப்பு செயல்முறை பணி தற்போது முடிவடைந்து உள்ளது. இந்த செயல்முறை புராரி, மயூர் விஹார், கரோல் பாக் ஆகிய இடங்களில் செய்யப்பட்டது. இது குறித்த டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கூறியதாவது:- டெல்லியின் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். செயற்கை மழை பற்றிய பிரச்சினை குறித்து நாங்கள் தொடர்ந்து விவாதித்தோம். மேக விதைப்பு டெல்லியின் மாசு பிரச்சினையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன், மேக … Read more

‘SIR’ என்று சொன்னாலே திமுகவுக்கு அலர்ஜி! மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

கோவை: சார்  (SIR– Special Intensive Revision) என்று சொன்னாலே திமுகவுக்கு ஒரு அலர்ஜி என மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 4ந்தேதி முதல் தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்தப்பணிகள்  தொடங்கப்படுகிறது. இதற்கு திமுக உள்பட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக … Read more