Accident: `திருப்பத்தூர் பேருந்து விபத்துக்கான காரணம் இதுதான்' – நடத்துனர் கொடுத்த தகவல்

காரைக்குடி–திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் மதுரை மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர் … Read more

யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா…

சென்னை:  2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வரும் ஜனவரி மாதம் 9ம் தேதி அறிவிக்கும் என்று தேமுதிக பொதுச்செயலாளர்  பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்தவர்,   அதிமுக கொடுத்த வாக்குறுதியின்படி, தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்காததால், கடுப்பான பிரேமலதா, அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அதேவேளையில் திமுகவுடன் நட்பு பாராட்டி வருகிறார். இதனால், தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு  இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்த … Read more

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கி (வயது 22). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த ஒரு சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார். பின்னர் வெங்கி, சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதேபோல், அவர் பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உடல் … Read more

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட `மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பிலான பிரசாரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உரையாற்றினார். இதற்காக கோபிசெட்டிபாளையம் மட்டுமின்றி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் கொண்டயம்பாளையம் இந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் (43) என்பவரும் கலந்துகொண்டார். அர்ஜுனன், எடப்பாடி பழனிசாமி … Read more

உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் புதிய நடைமுறைகள் அமல்….

டெல்லி:  உச்சநீதிமன்றத்தில்  வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில்  இன்று முதல் புதிய நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பொறுப்பேற்றதும், நீதிமன்ற நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகளில் மிக முக்கிய மாற்றங்களை அறிவித்து உள்ளார். இந்த புதிய நடைமுறைகள் இன்றுமுதல் அமலுக்கு வருகின்றன. இதன்மூலம் நீதிமன்றங்களில்  வழக்குகள் தேங்குவதைத் தவிர்க்கவும்,  விரைவான நீதியை வழங்கும் வகையில்  புதிய சீர்திருத்தங்கள் டிசம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி, புதிய வழக்குகளைப் … Read more

பிறரின் முதுகில் குத்துபவன் நான் அல்ல – டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி

பெங்களூரு, கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கர்நாடகத்தில் வருகிற 2028-ம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்துவதே நான் உள்ளிட்ட தலைவர்களின் நோக்கமாகும். நான் டெல்லிக்கு சென்றபோது 8 முதல் 10 எம்.எல்.ஏ.க்களை அழைத்து சென்றிருக்கலாம். அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. என்னுடன் எம்.எல்.ஏ.க்களை அழைத்து செல்வது பெரிய விஷயமில்லை. காங்கிரஸ் தலைவராக இருக்கும் நான் 140 எம்.எல்.ஏ.க்கள் இடையே பாரபட்சம் … Read more

ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் | Photo Album

இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் பிரசாரம் இபிஎஸ் … Read more

கோவை அடுக்குமாடி குடியிருப்புக் கொள்ளை சம்பவம் – சுட்டுப் பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தடுத்து 13 வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கவுண்டம்பாளையம் கொள்ளை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப், இர்ஃபான், கல்லு ஆகிய 3 பேர் என்பது விசாரணையில் தெரியவந்தது. குனியமுத்தூர் பகுதியில் தங்கியிருந்த அவர்களை கைது செய்ய காவல்துறையினர் நேற்று சென்றுள்ளனர். அப்போது அவர்கள் பார்த்திபன் என்கிற காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி … Read more

`ஆடின்னே இருப்போம்' – கடைசி வரை போராடிய தென்னாப்பிரிக்கா; சதத்துடன் மாஸ் காட்டிய கோலி – ஹைலைட்ஸ்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் ராஞ்சியில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஏமாற்றம் தந்தாலும் அதன் பிறகு இணைந்த கோலி – ரோஹித் கூட்டணி, தென்னாப்பிரிக்கா பவுலிங்கை நாலாபுறமும் சிதறடித்தனர். இருவரும் அரைசதம் கடந்து ஆடிக்கொண்டிருந்த வேளையில் ரோஹித்தின் (47) விக்கெட்டின் மூலம் இக்கூட்டணியை உடைத்தார் மார்கோ யான்சென். Rohit, Kohli நீண்ட … Read more

“உலகப் பொருளாதாரத்தை அரசியல் வென்றது"- அமைச்சர் ஜெய்சங்கரின் 'அபாய குறியீடு' உரை

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பதற்றங்களுக்கு மத்தியில், வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரங்களுக்கு ஏற்படும் உலகளாவிய அபாயங்களைக் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். கொல்கத்தா ஐஐஎம் வெளிவுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜெய்சங்கர், “நாம் வாழும் இந்தக் காலம் பொருளாதாரத்தை மிஞ்சும் அரசியல் நிகழக்கூடிய காலம். இது ஒரு நிச்சயமற்ற உலகம். இது வெறும் வார்த்தையல்ல… அமைச்சர் ஜெய்சங்கர் சமகால வர்த்தக … Read more