தெலுங்கானா முதல்-மந்திரிக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை..!!

புதுடெல்லி,  தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது இடது கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கை, தோள்பட்டைகளில் வலி இருந்ததினால் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறு ஏதேனும் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அங்கு அவருக்கு நவீன பரிசோதனை முறையான ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் … Read more

நள்ளிரவில் பெண்களுடன் இன்பச் சுற்றுலா; செல்போனில் ஆபாச வீடியோக்கள்! – யார் இந்த பாலசுப்பிரமணியன்?

சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், காவலர்கள் தியாகராஜன், தேவா ஆகியோர் கடந்த 2-ம் தேதி அதிகாலை கண்ணன் ரவுண்டானாவில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மஞ்சள் நிற கார் வேகமாக வந்தது. அந்த காரின் முன்பகுதியில் நம்பர் பிளேட் இல்லை. உடனடியாக போலீஸார், காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரின் முன்பகுதியில் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். காரை ஓட்டி வந்தவரிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் … Read more

ரஷ்யர்கள் சூறையாடி விட்டுச்சென்ற நகரம்: கோரமான காட்சிகளை பார்த்து கண்கலங்கிய ஜெலென்ஸ்கி

உக்ரைனில் புச்சா நகரத்தில் இறந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் மற்றும் கொலை செய்யப்பட்ட குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதை விவரித்த ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ரஷ்ய துருப்புக்கள் அப்பகுதியில் இருந்து பின்வாங்கிய பிறகு, உக்ரேனியப் படைவீரர்களுடன் அங்கு நடந்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களை Volodymyr Zelensky திங்கட்கிழமையன்று ஆய்வு செய்தார். தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சாவில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

ராகுல் காந்தியின் கொள்கையால் கவரப்பட்ட 78 வயது மூதாட்டி தனது சொத்து முழுவதையும் ராகுல் காந்தி பெயருக்கு எழுதினார்…

உத்தரகாண்ட் மாநிலம் தேராதூனைச் சேர்ந்தவர் புஷ்பா முஞ்சியால், 78 வயதாகும் இவர் 15 சவரன் தங்கம் மற்றும் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெயரில் எழுதி வைத்துள்ளார். ராகுல் காந்தியின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்றும் அதன் காரணமாக தனது சொத்துக்களை ராகுல் காந்தி பெயரில் உயில் எழுதி உள்ளதாகவும் கூறினார். உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் பிரிதம் சிங் முன்னிலையில் உயில் … Read more

பாட புத்தகத்தில் வரதட்சணைக்கு ஆதரவு சமூக வலைதளத்தில் வலுக்கும் எதிர்ப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-‘செவிலியர் படிப்புக்கான பாடப் புத்தகத்தில், வரதட்சணையால் பெண்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை நீக்க வேண்டும்’ என, சமூக வலைதளங்களில் கோரிக்கை வலுத்து வருகிறது. செவிலியர் படிப்புக்காக டி.கே.இந்திராணி எழுதிய சமூகவியல் பாடத்தில், ‘வரதட்சணையின் நன்மைகள்’ என்ற தலைப்பில் ஆதரவு கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. அந்தப் பாடத்தில், ‘வரதட்சணை பணம் திருமணத்திற்கு பின் புதிய மரச்சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள் வாங்க … Read more

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி,  ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரித்து, மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களை அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். அதனுடன் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்தர்களுக்காக கட்டப்பட்ட பத்மாவதி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களின் அலுவலகம் இன்று முதல் செயல்பட … Read more

SRH vs LSG: ராகுலின் பஞ்சாப்பிடம் இல்லாதது, ராகுலின் லக்னோவிடம் உண்டு; சன்ரைசர்ஸ் விடியல் எப்போது?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி ஓவர் வரை பரபரப்பாகச் சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. காலத்திற்கும் சன்ரைசர்ஸ் அணிக்கு விடிவுகாலம் பிறக்க வழியே இல்லை என்பதை போன்ற ஒரு பெர்ஃபார்மென்ஸை அந்த அணி கொடுத்திருக்கிறது. கேன் வில்லியம்சன் விரும்பியபடி போட்டியை வெல்ல முடியாவிட்டாலும் டாஸை சன்ரைசர்ஸே வென்றிருந்தது. ட்ரெண்ட்படி தாங்களும் சேஸ் போவதாக அறிவித்தார் … Read more

அவேஸ்கான், ஹோல்டர் அட்டகாச பந்துவீச்சு; கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் 15-வது சேஷனின் 12-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய லக்னோ அணியில் துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி 68 … Read more

வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய பாமக தலைவர் – ஆடியோ

வன்னியர் இடஒதுக்கீடு விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பாராட்டியுள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இதையடுத்து, மீண்டும் திருத்தங்களுடன் வன்னியர் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பாமக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட பாமக தலைவர் ராமதாஸ், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக நிச்சயம் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கும் என முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசியுள்ளார். https://patrikai.com/wp-content/uploads/2022/04/Paari-cartoon-Audio-2022-04-04-at-8.24.47-PM.ogg

கோவாக்சின் ஆலையில் குறைகளை சரி செய்ய முடிவு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-உலக சுகாதார அமைப்பு, ‘கோவாக்சின்’ தடுப்பூசி தயாரிப்பு ஆலையில் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை ஒரு வாரத்திற்குள் சரி செய்ய, ‘பாரத் பயோடெக்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது. தெலுங்கானாவின் ஹைதராபாதில் இயங்கும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் கோரோனா தடுப்பூசியை தயாரிக்கிறது. இதற்கிடையே, ஐ.நா., முகமைகள் வாயிலாக கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, இதர நாடுகளுக்கு வினியோகிக்கும் பணிகளை நிறுத்துவதாக, உலக சுகாதார நிறுவனம் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டது.எனினும், கோவாக்சின் தடுப்பூசியின் … Read more