விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.143 அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனால், முந்தைய ஆண்டில் ரூ.2,040 ஆக இருந்த பொதுவான தர நெல் வகையின் ஆதரவு விலை ரூ.2,183 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, பருப்புக்கான ஆதரவு விலையும் இதுவரை இல்லாத வகையில் உச்சபட்சமாக குவின்டால் ரூ.8,558 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு (சிசிஇஏ) கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், 2023-24 பயிர் ஆண்டுக்கான காரீப்(கோடை) … Read more

வெளிநாடுகளில் இந்தியா குறித்து ராகுல் பேசுவது தேச நலனுக்கு ஏற்றதல்ல: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடெல்லி: நமது நாட்டின் அரசியல் குறித்து வெளிநாடுகளில் ராகுல் காந்தி பேசுவது நாட்டு நலனுக்கு ஏற்றதல்ல என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டு கால சாதனையை விளக்கும் செய்தியாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று வெளியுறவுத் துறையில் 9 ஆண்டு கால சாதனை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நம்பிக்கையும் திறமையும் கொண்ட நாடாக உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. இந்தியாவுடன் … Read more

மணிப்பூரில் பழங்குடியினருக்கு வெளியிலிருந்து ஆயுதங்கள் வருவது கண்டுபிடிப்பு…. மியான்மரில் இருந்து ஆயுதங்கள் சப்ளை.?

மணிப்பூரில் கலவரத்தில் ஈடுபடும் பழங்குடியின மக்களுக்கு ஆயுதங்கள் வெளியில் இருந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தொடரும் வன்முறையை அடுத்து, மத்திய அரசு மணிப்பூர் அரசுடன் சஸ்பென்ஷன் ஆஃப் ஆபரேஷன்ஸ் (Suspension of Operations) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்நிலையில் தொடரும் வன்முறையை அடுத்து குக்கி போராளிக் குழுக்களின் முகாம்களில் ஆயுதத் தணிக்கைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போது சரணடைந்தவர்கள் ஒப்படைத்த அதி நவீன ஆயுதங்கள் மாயமானதாகக் கூறப்பட்டது. ஆனால் தணிக்கையில் ஓரிரண்டு ஆயுதங்கள் மட்டுமே காணாமல் போனதாகக் தெரிவிக்கப்பட்ட நிலையில், … Read more

அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சுக்கு இடையூறாக 'மோடி' கோஷம் – பதிலடி கொடுத்த அமைச்சர்

டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்ட விழாவில், மோடி கோஷம் எழுப்பப்பட்டது சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று குரு கோவிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் கிழக்கு டெல்லி வளாக திறப்பு விழாவில் பங்கேற்றார். விழாவில் அவர் பேசும்போது, சிலர் ‘மோடி, மோடி’ என்று கோஷங்கள் எழுப்பி அவரின் உரையை இடைமறித்தனர். கோஷம் எழுப்பியவர்களுக்கு “கோஷங்களால் கல்வி முறையை மேம்படுத்த முடியும் என்றால், அது கடந்த 70 ஆண்டுகளில் நிறைய நடந்திருக்கும்” … Read more

சிறுமிகள் குழந்தை பெற்றுக் கொள்வது சர்வ சாதாரணம்.. மனுஸ்மிருதி படிங்க.. குஜராத் உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: சிறுமிகளுக்கு திருமணம் நடப்பதும், அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதும் அந்தக் காலத்தில் சர்வ சாதாரணமாக இருந்தது. மனுஸ்மிருதி படித்தால் இதை தெரிந்து கொள்ளலாம் என குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் சமீபகாலமாக நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகளும், தீர்ப்புகளும் பெரும் விமர்சனங்களுக்கும், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வருகின்றன. சமீபத்தில் கூட கர்நாடகா உயர் நீதிமன்றம், “பெண்ணின் சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றமல்ல” என தீர்ப்பு வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோன்ற ஒரு … Read more

புடவை செலக்ட் பண்ற மாதிரி டெட்பாடி போட்டாவ எடுத்து போலீசில் சிக்கிய தில்லாலங்கடி..! எல்லாம் நிவாரண பணத்துக்காகத்தான்

ஒடிசா ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 40 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் இருக்கும் நிலையில், கருத்துவேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழும் பெண் ஒருவர் மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள லட்சக்கணக்கான ரூபாய் நிவாரணத்தொகையை பெறும் நோக்கில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை தனது கணவனின் சடலம் என்று ஏமாற்றி வாங்கிச்செல்ல முயன்ற சம்பவம் நடந்துள்ளது.. ஒடிசாவின் பாஹனக பசார் ரெயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 3 ரெயில்கள் மோதிக் கொண்ட … Read more

‘அக்னி பிரைம்’ ஏவுகணை பரிசோதனை வெற்றி

ஒடிசா: அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் உள்ள டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் தீவிலிருந்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையின் போது ஏவுகணையின் அனைத்து அம்சங்களும் வெற்றிகரமாக செயல்பட்டதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக … Read more

திருப்பதி ஏழுமலையானுக்கு திறக்கப்பட்ட 6வது கோவில்… ஜம்மு – காஷ்மீரில் பிரமாண்டம்!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஜம்மு – காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் இன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. திருப்பதிஉலகப் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். ஆந்திர மாநிலம் திருப்பித மாவட்டம் திருமலையில் இந்த கோவில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதியை, பெருமாள், பாலாஜி, வெங்கடேச பெருமாள், சீனிவாச பெருமாள், ஏழு மலையான் என பல்வேறு பெயர்களில் அழைத்து வருகின்றனர் பக்தர்கள்.​ திருப்பதி கோவிலில் ஆதிபுருஷ் இயக்குநரிடம் முத்தம் வாங்கிய கிரித்தி சனோன்!​திருப்பதியில் கூட்டம்சர்வதேச அளவில் … Read more

நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பது எந்த மாதிரியான அன்பு? – ராகுல் காந்திக்கு ஸ்மிருதி இரானி கேள்வி

புதுடெல்லி: சொந்த நாட்டின் நாடாளுமன்றத் திறப்பு விழாவை புறக்கணிப்பது எம்மாதிரியான அன்பு என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பி உள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் 9 ஆண்டுகால சாதனையை விவரிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “சீக்கியர்களை படுகொலை செய்தது எம்மாதிரியான அன்பு? நிலக்கரி ஊழல், மாட்டுத் தீவன ஊழல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களோடு கைகுலுக்குவது எம்மாதிரியான … Read more

41 வயதில் இறந்த இதய மருத்துவர்.. திடீரென நடந்த கால பைரவ கர்மா பூஜை.. எதுக்கு தெரியுமா?

காந்திநகர்: 16000 பேருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களின் உயிரை காப்பாற்றிய பிரபல இதய மருத்துவர் கவுரவ் காந்தி அகால மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருக்காக கால பைவர கர்மா பூஜை ஏன் நடத்தப்பட்டது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம் நகரைச் சேர்ந்தவர் கவுரவ் காந்தி (41). குஜராத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள தலைசிறந்த இதய மருத்துவர்களில் ஒருவராக திகழ்ந்தார். இதுவரை 16000 இதய அறுவை சிகிச்சைகளை … Read more