பக்தர்கள் 36 பேர் பலியான இந்தூர் கோயில் இடித்து அகற்றம்..!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்  படிக்கிணறு மேல் இருந்த தடுப்பு இடிந்து விழுந்து 36 பேர் பலியான சம்பவம் நடைபெற்ற கோயில், புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.  இந்தூரில் உள்ள Beleshwar Mahadev Jhulelal கோயிலில் கடந்த வியாழக்கிழமை ராமநவமியையொட்டி வழிபாடு நடத்த ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கோயிலில் உள்ள படிக்கிணறு மேல் அமைக்கப்பட்டிருந்த  சிமெண்ட் சிலாப் தடுப்பு இடிந்து விழவே, அதன்மேல் நின்றோரும் உள்ளே விழுந்தனர். இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறி, ஏற்கெனவே இருந்த பழைய … Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 59,106 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115 புள்ளிகள் உயர்ந்து 59,106 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் 22 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 38 புள்ளிகள் அதிகரித்து 17398 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவர் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் – மார்னிங் கன்சல்ட் கருத்துக் கணிப்பு

புதுடெல்லி: உலகின் மிகவும் புகழ்பெற்ற தலைவராக நரேந்திர மோடி திகழ்வதாக மார்னிங் கன்சல்ட் நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளின் அடிப்படையில், அந்தந்த நாடுகளில் அவரவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தொடர்பாக சர்வதேச ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் ஆய்வு மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் 22 முதல் 28 வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் மூலம் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்தவர்களிடம் இந்த கருத்துக் கணிப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்டுள்ளன. இதன் … Read more

வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது: மல்லிகார்ஜூன கார்கே!

டெல்லி: வலிமை குறைந்ததாக எப்பொழுதெல்லாம் நினைக்கிறதோ அப்போதெல்லாம் பாஜக வன்முறையை தூண்டிவிடுகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். கடந்த வாரம் ராம நவமி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டங்களின்போது பீகார், மேற்குவங்காளம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவம் நடந்தேறியது. பீகாரின் நலாந்தா, சஸாரம் போன்ற பகுதியில் கலவரம் ஏற்பட்டதில், ஒருவர் கொலை செய்யப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராம நவமி பண்டிகையில் ஏற்பட்ட … Read more

சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ராகுல் காந்தியின் ஜாமீன் நீட்டிப்பு; ஏப்.13-ல் மனு மீது விசாரணை

சூரத்: அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப். 3) சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது ஜாமீனை நீட்டித்த நீதிமன்றம், இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 13-ம் தேதிக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி (52), ‘மோடி’ என்று பெயர் உள்ளவர்கள் குறித்து அவர் … Read more

நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது: பிரதமர் மோடி தமிழில் கடிதம்

டெல்லி: நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது என்று பிரதமர் மோடி கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பை கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் ஈரோட்டை சேர்ந்த யோக தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு  பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய அன்பையும், அக்கறையும் பாராட்டுகிறேன். காசி-தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது. நாட்டை ஒன்றிணைப்பதில் எனது முயற்சிகளை இரட்டிப்பாக்க இத்தகைய … Read more

நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் கூடிய நாடாளுமன்றம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் இன்று (ஏப்.3) காலையில் நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. இந்தநிலையில் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நான்கு நாள் இடைவெளிக்குப் பின்னர் நாடாளுமன்றம் திங்கள் கிழமைக் காலையில் கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் நீண்ட நாட்களாக உடல்நலமில்லாமல் இருந்து கடந்த மார்ச் 29 ஆம் தேதி காலமான பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கிரிஷ் பாபட்-க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவை மதியம் 2 … Read more

அவதூறு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை மே 3! வீட்டை காலி செய்வாரா ராகுல்?

நியூடெல்லி: அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சூரத் நீதிமன்றத்தில் மே 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. அண்மையில் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்தது. Hearing in the case challenging Congress leader Rahul Gandhi’s conviction in a defamation case will next be held on May 3 in … Read more

அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை: சூரத் நீதிமன்றம்

சூரத்: அவதூறு வழக்கில் வரும் ஏப்.13-ல் ராகுல் காந்தி நேரில் ஆஜராக தேவையில்லை என்று சூரத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுதாரர் புர்னேஷ் மோடி ஏப்.10ம் தேதி பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ராகுலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவில்லை; வழக்கமான ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ராகுல் விவகாரத்தில் நீதித் துறைக்கு அழுத்தம் தர முயற்சி’ – மத்திய அமைச்சர் குற்றச்சாட்டும் காங்கிரஸ் மறுப்பும்

புதுடெல்லி: நீதித் துறைக்கு காங்கிரஸ் கட்சி தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்க முயல்வதாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளார். ராகுல் காந்தி மேல்முறையீடு: மோடி சமூகம் குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நிலையில், அந்த தண்டனையை எதிர்த்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று நேரில் மேல்முறையீடு செய்யவுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ராஜஸ்தான் … Read more