பிறந்தநாளில் நண்பர்களாலேயே வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர்.. ஓட்டல் பில் அதிகமானதால் தகராறு

மும்பை: தனது பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு ட்ரீட் கொடுத்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகமெங்குமே தற்போது ஒரு புதிய கலாச்சாரம் பரவி வருகிறது. பிறந்தநாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த வேண்டும்; கேக் வெட்டுகிறோம் என்ற பெயரில் அதனை நண்பர்கள் முகத்தில் அடிக்க வேண்டும்; யாருக்கு பிறந்தநாளோ அவரை அனைவரும் சேர்ந்து தாக்க வேண்டும் என்கிற மனநிலையில்தான் இன்றைய இளைஞர்கள் இருக்கிறார்கள். என்ஜாய் பண்ணுகிறோம் என … Read more

ஆண்டுதோறும் 4,500 கிமீ தொலைவிலான ரயில் தண்டவாள பழுதை முறையாக புதுப்பிக்க வேண்டும்: ரயில்வே தொழிற்சங்கம் வலியுறுத்தல்

சென்னை: நாடு முழுவதும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் கி.மீ. தொலைவிலான ரயில் பாதைகளில் சுமார் 12,000 பயணிகள் ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 2.30 கோடி பேர் பயணிக்கின்றனர். காலி பணியிடங்கள் நிரப்புவதில் தொய்வு, ரயில் பாதைகள் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பதில் தீவிரம் காட்டாததால், ரயில் விபத்துகளுக்கு காரணமாக அமைவதாக தட்சிண ரயில்வே ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்திய ரயில்வேயில் 3.12 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. … Read more

மணிப்பூரில் என்ன நடக்கிறது? பாஜக கையிலெடுத்த அஸ்திரம்… உடைத்து பேசிய சசிகாந்த் செந்தில்!

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாநில தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் சசிகாந்தி செந்தில், மணிப்பூரில் நடப்பது ஏதோ இரு இனக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதலாக மட்டும் பார்க்க முடியாது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அங்கு மதவாத அரசியலை பாஜக முன்னெடுத்து வந்துள்ளது. சசிகாந்த் செந்தில் கேள்வி ஒட்டுமொத்த பழங்குடி மக்களையும் கிறிஸ்துவர்கள் என்று டார்கெட் செய்து இந்துத்துவாவை வளர்க்க அரசே துணை போயிருக்கிறது. இந்த … Read more

மணிப்பூர் துப்பாக்கிச் சூடு: பிஎஸ்எஃப் வீரர் உயிரிழப்பு; 2 அசாம் ரைஃபிள் படை வீரர்கள் காயம்

இம்பால்: மணிப்பூர் மாநிலம் செரோ பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், கலகக்காரர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்ஏஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார். அசாம் ரைஃபிள் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து இந்திய ராணுவத்தின் ஸ்பியர் கார்ப்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மணிப்பூர் மாநிலம், சுக்னோ மற்றும் செரோ பகுதியில் அசாம் ரைபிள் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் போலீசார் இணைந்து பரந்த அளவிலான தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர். இந்த … Read more

"நீ எப்படி தொடலாம்".. பந்தை எடுத்துக் கொடுத்த தலித் சிறுவன்.. கட்டை விரலை வெட்டிய ஜாதி வெறியர்கள்!

காந்திநகர்: கிரிக்கெட் விளையாட்டில் தலித் வகுப்பைச் சேர்ந்த சிறுவன் பந்தை எடுத்துக் கொடுத்ததால் ஆத்திரமடைந்த சில ஜாதி வெறியர்கள் செய்த கொடூர செயல் குஜராத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தில் ககோஷி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து பவுண்டரிக்கு சென்று கொண்டிருந்தது. ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த மற்றொரு சிறுவன், ஓடிச்சென்று அந்த பந்தை பவுண்டரிக்கு … Read more

கர்நாடக அமைச்சரின் பேச்சால் சர்ச்சை – பசுக்களுடன் பாஜக போராட்டம்

பெங்களுரு: பசுக்களை ஏன் கொல்லக் கூடாது என கர்நாடக அமைச்சர் ஒருவர் கூறியதை அடுத்து, அவருக்கு எதிராக பசுக்களுடன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக அமைச்சரான வெங்கடேஷ், எருமை மாடுகளை கொல்லலாம் என்றால், பசுக்களை மட்டும் ஏன் கொல்லக் கூடாது என கடந்த சனிக்கிழமை கேள்வி எழுப்பி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு பசு ஆர்வலர்களும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பெங்களூருவில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்களத்துக்கு பசுக்களை … Read more

பாம்பை மென்று துப்பிய 3 வயது சிறுவன்.. என்ன ஆனான்..? பகீர் கிளப்பும் சம்பவம்

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள் ஆனால் அது சிறுவர்களுக்கு இல்லை என்று ஒரு சிறுவன் உணர்த்தியுள்ளான். உத்தர பிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டம் மதனபூர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவரது 3 வயது மகன் ஆயுஷ் வீட்டருகே விளையாடி கொண்டிருந்தான். அப்போது, புதரில் இருந்து வந்த பாம்பை சிறுவன் கையில் பிடித்ததோடு வாயில் போட்டு மென்றுள்ளான். பின்னர் அந்த பாம்பு வாய்க்குள் நெளிந்தபோது சிறுவன் கூச்சலிட்டதால் சத்தம் கேட்டு வந்த சிறுவன் பாட்டி, பேரனின் … Read more

ரயில்வே அமைச்சரின் ராஜினாமாவை கோருவது புத்திசாலித்தனம் அல்ல: தேவகவுடா கருத்து

பெங்களூரு: ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என கோருவது புத்திசாலித்தனமானது அல்ல என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒடிசா ரயில் விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரயில்வே அமைச்சர் எடுத்தார். தொடர்ந்து 55 மணி நேரம் அவர் சோர்வின்றி பணியாற்றி இருக்கிறார். நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். சிபிஐ விசாரணை என்பது வேறானது. அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன். இது … Read more

ஒடிசா ரயில் விபத்து; பலி எண்ணிக்கை இதுதான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒடிசா மாநிலம் பஹானாகா பஜார் ரயில்நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த கூட்ஸ் ரயில் மீது மோதி சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானது. இதனால் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் கிடந்ததால் அந்த பாதையில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 300 பேர் இறந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில், பாலாசோர் ரயில்கள் மோதிய விபத்தில் 288 பேர் உயிரிழப்பு என்பதே இறுதி எண்ணிக்கை என்று ஒடிசா … Read more

ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் மனிதத் தவறா..? நாசவேலையா..? விசாரணையை தொடங்கியது சிபிஐ..

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆம் தேதி பாலசோரில் 2 பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதி நேரிட்ட விபத்தில் 278 பேர் பலியானதுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சிக்னல் தொடர்பான மின்னணு இண்டர்லாக்கிங்கில் வேண்டுமென்றே இடையூறு ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று ரயில்வே அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, வழக்கு தொடர்பாக எஃப்.ஐ.ஆரை மீண்டும் பதிவு செய்துள்ள … Read more