Karnataka Election: ஜெகதீஷ் ஷெட்டரை மண்ணை கவ்வ வைக்க பாஜக திட்டம்! அமித் ஷா மீது புகரளித்த காங்கிரஸ்

Karnataka Election 2023: ஜெகதீஷ் ஷெட்டரை அவரது சொந்த மண்ணில் தோற்கடிக்க திட்டமிட்டுள்ள பாஜக, அதற்கான காய்களை நகர்த்தினால் காங்கிரஸ் சும்மா இருக்குமா?

ஷார்ஜாவில், கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான பாலிவுட் நடிகை கிரிசன் பெரேரா விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட பாலிவுட் நடிகை கிரிசன் பெரேரா, ஷார்ஜா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இம்மாதம் ஒன்றாம் தேதி, வெப் தொடரில் நடிப்பதற்கான நேர்காணலுக்காக ஷார்ஜா சென்ற கிரிசன் பெரேராவிடம் கஞ்சா இருந்ததாகக் கூறி ஐக்கிய அரபு அமீரக போலீசார் கைது செய்தனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் தனது மகள் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் மும்பை போலீசாரிடம் புகாரளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையில், ஒரே குடியிருப்பில் வசித்துவந்த ஆண்டனி பால் என்பவரின் தங்கைக்கும், கிரிசன் … Read more

மக்கள் அதிர்ச்சி..!! மீண்டும் மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 45 பைசா உயர்வு..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் மின் கட்டணம் யூனிட்டுக்கு 45 பைசா உயர்த்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 30 பைசா உயர்த்தப்பட்டதால், இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 75 பைசா உயர்ந்துள்ளது. இதனால் நுகர்வோர் ரூ. 1000 முதல் ரூ.2000 வரை கூடுதலாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நிலக்கரி மற்றும் நிலக்கரியை சுத்தம் செய்வதற்கான அதிக செலவு காரணமாக மின்கட்டணம் … Read more

கர்நாடகா | காங்கிரஸ் குறித்த அவதூறு பேச்சு – அமித் ஷா மீது வழக்குப் பதிவு

பெங்களூரு: உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, டாக்டர் பர்மேஷ்வார், மாநில காங்கிரஸ் தலைவர் ஆகியோர் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) வந்தனர். கர்நாடாகாவில் நடந்த பாஜக பேரணியில், காங்கிரஸ் கட்சி குறித்து அவதூறாகவும் வெறுப்பைத் தூண்டும் வகையிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை … Read more

ஏவுகணைக்கே டாட்டா காட்டிய ராணுவ வீரர்.. ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த பரிதாபம்.. என்ன நடந்தது?

போபால்: எதிரி நாட்டு ஏவுகணைகள், வெடிகுண்டுகள் ஆகியவற்றுக்கே அசால்ட்டாக கல்தா கொடுத்த ராணுவ வீரர் ஒருவர், சாதாரண ராக்கெட் பட்டாசு தாக்கி உயிரிழந்த சோக சம்பவம் மத்திய பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். என்னதான் பெரிய திறமைசாலியாக இருந்தாலும், நேரம் சரியில்லை என்றால் சாதாரண விஷயத்தில் கூட கோட்டை விடுவதை பார்த்திருப்போம். அதுபோல், நாம் தான் பலவற்றை பார்த்திருக்கிறோமே.. இந்த சிறிய விஷயம் என்ன செய்துவிட போகிறது என்ற எண்ணத்தில் … Read more

‘சூடானில் 3,500 இந்தியர்கள் சிக்கியுள்ளனர்’ – வெளியுறவுத்துறை தகவல்

உள்நாட்டு சண்டை மூண்டுள்ள சூடானில் இந்தியர்கள் சுமார் 3,500 பேரும், இந்திய வம்சாவளியினர் 1,000 பேரும் சிக்கியுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், சூடானின் நிலைமையை இந்திய அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்குள்ள இந்தியர்களை மீட்பதற்காக 3வது கடற்படைக் கப்பல் ஐ.என்.எஸ் தர்காஷ், சூடான் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். சூடான் ராணுவமும் துணை ராணுவப்படையினரும் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதை அடுத்து, ‘ஆபரேஷன் காவிரி’ … Read more

இந்தியாவில் புதிதாக 9,355 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 9,692 என இருந்த நிலையில், ஒரு நாளில் 2.8 சதவீதம் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 9,355 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 57,410 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் … Read more

தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள்!!

சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதிகாரப்போட்டி காரணமாக ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில் அங்கு சிக்கியுள்ள வெளிநாட்டவர்களை மீட்க அந்தந்த நாட்டின் அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் இந்தியா சார்பில் விமானங்களும், கப்பலும் அனுப்பப்பட்டன. ஆப்ரேஷன் காவேரி என்ற பெயரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அங்கு … Read more

காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகி விட்டன: பிரதமர் மோடி

புதுடெல்லி: காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்த்துவிட்டன; இனி வாக்குறுதி தரமுடியாத நிலையில் அக்கட்சி உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 10-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள கர்நாடக மாநில பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது பிரதமர், “கர்நாடக மக்கள் பாஜக மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையானது பிரச்சாரத்திற்காக பாஜக தலைவர்கள் செல்லுமிடங்களில் எல்லாம் வெளிப்படுகின்றது. 10 … Read more

வந்தே பாரத் vs சதாப்தி எக்ஸ்பிரஸ்: வேகம், வசதிகள், டிக்கெட் கட்டணம்… இரண்டில் எது சிறந்தது?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… கடந்த சில மாதங்களாக இந்தியர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுள்ளது. செம ஸ்பீடு, விமானத்தில் இருப்பது போன்ற வசதிகள், அதிக கட்டணம் எனப் பல்வேறு விஷயங்கள் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. எந்த ரயில் சிறந்தது? ஏற்கனவே அதிவிரைவு சதாப்தி எக்ஸ்பிரஸ் சேவை அமலில் இருக்கும் போது, புதிதாக வந்துள்ள வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒப்பீட்டளவில் எப்படி இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் எழத் தான் செய்கிறது. இதில் ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள … Read more