ஜெய்ப்பூரில் அரசு அலுவலகத்தின் அடித்தளத்தில் கட்டுக் கட்டாக ரூ.2.31 கோடி ரொக்கமும், 1கிலோ தங்கக் கட்டிகளும் கண்டெடுப்பு..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள யோஜனா பவன் கட்டடத்தின் அடித்தளத்தில் கோடிக் கணக்கில் பணமும், கிலோ கணக்கில் தங்கமும் கைப்பற்றப்பட்டது தொடர்பாக அரசு ஊழியர்கள் எட்டு பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசு அலுவலகமான ‘யோஜனாபவன்’ பேஸ்மென்ட்டில், பூட்டியிருந்த ஒரு அறைக்குள் இருந்து கட்டுக் கட்டாக 2 கோடியே 31 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் மற்றும் ஒரு கிலோ தங்கக் கட்டிகளை போலீசார் கண்டெடுத்தனர். இந்த … Read more

இந்த கொடுமை எந்த பெற்றோருக்கும் வர கூடாது… தேர்வு முடிவு வரும்போது விபத்தில் உயிரிழந்த 10-ம் வகுப்பு மாணவன்..!

கேரளா மாநிலம் கரவாம் வஞ்சியூர் பகுதியில் வசித்து வருபவர் பினீஷ்குமார். இவரது மனைவி ரஜினி. இந்த தம்பதியின் மகன் சாரங். இவர், திருவனந்தபுரம் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சாரங்க், அவரது தாயுடன் கடந்த 6-ம் தேதி ஆட்டோவில் பயணித்தபோது திருவனந்தபுரம் அருகே விபத்தில் சிக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்த நிலையில், புதன்கிழமை காலையில் உயிரிழந்தார். உயிரிழந்த சாரங்கின் உடல் ஆற்றிங்கல் ஆண்கள் பள்ளியில் சக மாணவர்கள் … Read more

தொடரும் கொடுமை.!! தெரு நாய் கடித்ததில் 7 வயது சிறுவன் பலி..!

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி பகுதியைச் சேர்ந்த சாலையோரங்களில் சிறிய பொருட்களை விற்கும் குடிபெயர்ந்தவர்களான முல்கன். இவரது மனைவி சுனிதா. இவர்களது மகன் சோட்டு (7). இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி அன்று சிறுவன் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய்கள் தாக்கின. நாய் ஒன்று சிறுவனின் கழுத்தைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து படுகாயமடைந்த சிறுவன், எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். வாரங்கல் மேற்கு தொகுதி எம்எல்ஏ தாஸ்யம் வினய் … Read more

கர்நாடக முதல்வராக‌ சித்தராமையா பதவியேற்பு – டி.கே.சிவகுமார் துணை முதல்வரானார்

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விழாவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும், ஜி.பரமேஷ்வரா, கே.எச்.முனியப்பா உள்ளிட்ட 8 பேர் அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி ஒரே கட்டமாக ந‌டந்தது. இதில், மொத்தம் உள்ள 224 … Read more

ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களை சுற்றிவளைத்து தேசிய புலனாய்வு முகமை சோதனை

ஜம்மு காஷ்மீரில் 7 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஸ்ரீநகர், புல்வாமா, அவந்திபோரா, அனந்த்நாக், ஷோபியான், பூஞ்ச், குப்வாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தீவிரவாதக் குழுக்களுக்கு ஆதரவு அளித்தது மற்றும் நிதியுதவி அளித்தது தொடர்பான வழக்குகளில், ஆதாரங்களின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Source link

உத்தராகண்ட் பாஜக பிரமுகர் மகள் முஸ்லிமை மணக்க எதிர்ப்பு: கொடும்பாவி எரித்து நிபந்தனை விதிக்கும் கட்சியினர்

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநில பாஜக பிரமுகர் யஷ்பால் பேனம் மகளுக்கு ஒரு முஸ்லிம் மணமகனுடன் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் பாஜகவினர் யஷ்பாலின் கொடும்பாவியை எரித்ததோடு பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளனர். கடந்த சில நாட்களாக உத்தராகண்ட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பாஜக பிரமுகர் வீட்டுத் திருமண அழைப்பிதழ் வைரலாகி வருகிறது. உத்தராகண்டின் பவுரி நகர முனிசிபல் தலைவரான யஷ்பால், அத்தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் ஆவார். லக்னோ பல்கலைகழகத்தில் பயின்று வந்த யஷ்பாலின் மகள், அங்கு உத்தரப் … Read more

முதலமைச்சர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி போராட்டம்….!

கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி போராட்டம் நடத்தியது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கேரளாவில் இரண்டாம் முறையாக பதவியேற்று இன்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இந்நிலையில், பினராயி விஜயன் அரசில், ஊழல் பெருகிவிட்டதாகவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துவிட்டதாகவும், விலைவாசி உயர்ந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன.  Source link

“கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கு வித்திட்டது ஒரே ஒரு காரணம்தான்” – ராகுல் காந்தி பேச்சு

பெங்களூரு: “தூய்மையான, ஊழலற்ற ஆட்சியை உங்களுக்கு வழங்குவோம்” என்று கர்நாடகாவில் நடந்த காங்கிரஸ் அரசின் பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி கே சிவகுமாரும், அவர்களுடன் 8 அமைச்சர்களும் சனிக்கிழமை (மே 20) பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்கான பிரம்மாண்ட விழா பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் ராகுல் காந்தி, … Read more

Siddaramaiah: ரூ.2000 நோட்டுக்கள் செல்லாது என பாஜக அறிவித்தது இதற்காகதான்… சித்தராமையா பொளேர்!

கடந்த 2016ஆம் ஆண்டு கறுப்பு பணத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையுக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார் பிரதமர் மோடி. அதனை தொடர்ந்து புதிய 2000 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த நடவடிக்கைக்கு பிறகு 6 ஆண்டுகள் கழித்து தற்போது இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் … Read more

போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த வங்கி ஊழியர்கள்..!

தெலுங்கானாவில் போலி வெடிகுண்டுடன் வங்கிக்குள் புகுந்து 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர். மெட்சல் மாவட்டம் ஜி.டி மெட்லா நகரில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்குள் நேற்று மாலை உடலில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு புகுந்த நபர், 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், மறுத்தால் வெடிகுண்டை வெடிக்கச் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சாமர்த்தியமாக செயல்பட்ட வங்கி ஊழியர்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து போலீசில் … Read more