கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு!!

கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதனிடையே தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாகவே தேர்தல் களம் அம்மாநிலத்தில் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் … Read more

பெண் வேடத்தில் அம்மனுக்கு நன்றி சொன்ன ஆண்கள்!! வைரல் வீடியோ

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பர். பெண்கள் வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை. மாலை முதலே ஆலயத்து படையெடுக்கும் ஆண்கள் கோவிலில் விற்கப்படும் 5 முக விளக்கை வாங்கி அதில் தீபம் ஏற்றி இரவு முழுவதும் கோயிலை … Read more

ஜனநாயகத்தின் தாய் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்” என்று பிரதமர் மோடி ஜனநாயக நாடுகளின் உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.  ஜனநாயக நாடுகளின் 2023ம் ஆண்டுக்கான உச்சிமாநாடு வீடியோகான்பரன்சிங்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சியினால் இயக்கப்படுகின்றது. பல உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது. இதுவே  ஜனநாயகத்திற்கான மற்றும் உலகத்திற்கான சிறந்த விளம்பரமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு

புதுடெல்லி:  கிரிமினல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால்,  லட்சத்தீவு எம்பி முகமது பைசல் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம்  திரும்ப பெற்றுள்ளது.  தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சத்தீவு நாடாளுமன்ற  உறுப்பினரான முகமது பைசல் கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, அரசியல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிஎம் சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: கூகுள் மீது வர்த்தக ஒழுங்குமுறை ஆணையமான சிசிஐயின் உத்தரவு சரியானது என தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. 30 நாட்களுக்குள் 1,337 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிக போட்டி ஆணையம்(சிசிஐ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. இந்திய வணிக போட்டி ஆணையம் விதித்த அபராதத்தை … Read more

வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி,மார்ச்30: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரூ.55,600 கோடியில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் அதிக நிதி பெற்றுள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் கூறியதாவது:  வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010ன் படி, வெளிநாட்டு நிதி பெறும் ஒவ்வொரு அரசு சாரா நிறுவனமும் வரவு செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் … Read more

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்: வன பாதுகாப்பு திருத்த மசோதா தாக்கல்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு நடுவே மக்களவையில் நிறுவனங்கள் போட்டி சட்ட திருத்த மசோதா எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டது. மேலும் வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. ராகுல் தகுதி நீக்கம் விவகாரம் மற்றும் அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், மக்களவை நேற்று காலை கூடியதும், இந்த விவகாரங்களை எழுப்பி, கருப்பு உடையில் வந்திருந்த காங்கிரஸ் உள்ளிட்ட … Read more

நாளை மறுநாள் முதல் 1000 மருந்துகள் விலை 11% உயர்கிறது

புதுடெல்லி: நாளை மறுநாள் முதல் 384 அத்தியாவசிய  மருந்துகள் மற்றும்  1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதக்கும் அதிகமாக  உயர்த்தப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  மருத்துவ துறையில்  மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையில்  384 அத்தியாவசிய  மருந்துகள்  மற்றும் 1,000க்கும் மேற்பட்ட மருந்துகளின்  விலைகள் 11 சதவீதத்துக்கும்  அதிகமாக உயர்த்தப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 1ம்  தேதி முதல் மருந்துகளின் விலை  உயர்வு நடைமுறைக்கு வரும். குறிப்பாக வலி  நிவாரணி, தொற்று எதிர்ப்பு,  … Read more

நாடாளுமன்ற தேர்தல் 2024: மம்தா பானர்ஜியின் திடீர் மாற்றம்; பாஜகவிற்கு சம்மட்டி அடி.!

மம்தா கர்ஜனை கொல்கத்தாவின் நகர மையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாயத்து தேர்தலுக்கு முன்னதாக இன்று பேரணி நடத்தப்பட்டது. அப்போது அதில் பேசிய மேற்கு வங்க முதல்வர், ‘‘அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடி, பாஜகவை நாட்டிலிருந்து, ஆட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பா.ஜ.க.வுக்கு எதிராக வெற்றிகரமாகப் போராட வேண்டும். துஷ்யஷனை ஒழித்து நாட்டைக் காப்பாற்றுங்கள். துரியோதனனை அகற்றி ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள், ஏழைகளைக் காப்பாற்றுங்கள்’’ என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 நாடாளுமன்ற … Read more

வெறுப்பு பேச்சு முடிவுக்கு வர அரசியலில் மதத்தை பயன்படுத்த கூடாது: உச்ச நீதிமன்றம் அறிவுரை

புதுடெல்லி:  அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் நிறுத்தும் தருணத்தில், வெறுப்புப் பேச்சுகள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் நடந்த 50 பொதுக்கூட்டங்களில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் டெல்லி, உபி, உத்தரகாண்ட் மாநிலங்களில் வெறுப்பு பேச்சு குறித்தும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த வழக்குகள் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more