சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதல்… 10 வீரர்கள் உட்பட 11 பேர் வீர மரணம்..!

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடாவில் புதன்கிழமை நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் 10 ஜவான்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் உட்பட 11 பேர் வீரமரணம் அடைந்தனர்.

55 வயதுக்கு அதிகமான காவலர்களை போக்குவரத்து சீரமைப்பு பணிக்கு அனுப்ப வேண்டாம் – மும்பை காவல்துறை புதிய உத்தரவு

மகாராஷ்டிர மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், 55 வயதுக்கு அதிகமான போக்குவரத்து காவலர்களை பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை போக்குவரத்தை சீர் செய்யும் பணிக்கு அனுப்பவேண்டாம் என மும்பை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற பாதிப்பு உள்ளவர்களையும், பெரும் பாதிப்புகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட போலீசாரையும் குறிப்பிட்ட நேரத்திற்கு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என தெரிவிக்கபட்டுள்ளது. Source link

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல் – 10 காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழப்பு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 காவலர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். தண்டேவாடா மாவட்டத்தின் அரண்பூர் பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாவட்ட காவல் படையை (DRG) சேர்ந்த போலீசார் ஒரு வேனில் அங்கு சென்றனர். தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் திரும்போதும் அரண்பூர் சாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐஇடி குண்டு வெடித்துள்ளது. இதில் 10 காவலர்கள், ஒரு வாகன ஓட்டி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இது … Read more

பீகார் கணக்கெடுப்பு: ‘40 பெண்கள்.. ஒரே கணவர்’.. எப்புட்ரா.!

பிகாரில் 40 பெண்களுக்கு ஒரே கணவர் இருப்பது தெரியவந்துள்ளது. இடஒதுக்கீடு நாடு முழுவதும் சமூகநீதி திட்டங்களை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவசியமாகிறது. எனெனில் இந்தியா என்பது சாதி அமைப்பால் பிளவுண்டு கிடப்பதால், அனைத்து மக்களுக்கும் வளர்ச்சி, சமமான உரிமை கிடைக்க இடஒதுக்கீடு என்பது இன்றியமையாததாக உள்ளது. இடஒதுக்கீடை அமல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமாகிறது. ஆனால் துரதிஷ்டவசமாக 2011ம் ஆண்டு எடுத்த சாதிவாரி கணக்கெடுப்புகளின் முடிவை, பாஜக அரசு வெளியிட மறுத்து வருகிறது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் கணக்கெடுப்பைத் தவிர, … Read more

அதிர்ச்சி தந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு… 40 பெண்களின் கணவர்களுக்கு ஒரே பெயர்!

பீகாரில் ஏப்ரல் 15ம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் கீழ் அனைத்து சாதியினருக்கும் குறியீட்டு எண்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ராபிடோ ஓட்டுநர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி சாலையில் குதித்த பெண்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு

பெங்களூரில் பெண் பயணிக்கு ராபிடோ ஒட்டுநர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி பைக்கில் இருந்து அந்த பெண் சாலையில் குதித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். 21 ஆம் தேதி இந்திராநகர் பகுதிக்கு செல்வதற்காக பெண் ஒருவர் ராபிடோ செயலியை பயன்படுத்தினார். அங்கு வந்த ஓட்டுநர், பெண்ணை ஏற்றி கொண்டு சென்றபோது, பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஓடிபி பார்ப்பதாக கூறி செல்போனை பறித்ததுடன் தவறான பாதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திடீரென … Read more

2024 மக்களவை தேர்தல் தாக்கம் | உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2024 இன் மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். உ.பி.,யில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நிலவுகிறது. இங்கு இதர மாநிலங்களை விட அதிகமாக முஸ்லிம்கள் எண்ணிக்கை சுமார் 24 சதவிகிதம் உள்ளனர். இவர்களது வாக்குகளால் உ.பி.,யின் பல சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு … Read more

ஆஸ்துமா நோய்க்கு மீன் பிரசாதம்..!

ஒவ்வோர் ஆண்டும், பருவமழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மிருகசீர கார்த்திகையின்போது மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவது வழக்கம். இந்த நிகழ்வில் விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்டை வைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும். சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்துக் கொடுக்கப்படும். தொடர்ந்து … Read more

மீண்டும் டெல்லி மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு..!!

தலைநகர் டில்லியில், வடக்கு டில்லி – 104, தெற்கு டில்லி – 104 மற்றும் கிழக்கு டில்லி 64 வார்டுகள் கொண்ட மூன்று மாநகராட்சிகள் செயல்பட்டு வந்தன. கடந்த 2022ல் மூன்று மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டும் 250 வார்டுகள் டில்லி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2022ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, டில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி கட்சி 134, பா.ஜ., 104, காங்கிரஸ் 9 மற்றும் சுயேச்சை … Read more

டெல்லியில்  13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவசப் பேருந்து வசதி: முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் இலவசப் பேருந்து பயண வசதிகள் விரைவில் அமலாக்கப்பட உள்ளன. அண்மையில் நடந்த தொழிலாளர் துறை கூட்டத்தில் முதல்வர் கேஜ்ரிவால் அதிகாரிகளுக்கு இதனை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம், தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்துறையில் சுமார் ரூ.4,000 கோடி … Read more