அடுக்கு மாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து விழுந்து ஓயோ ரூம்ஸ் நிறுவனரின் தந்தை பலி

குருகிராம்: இந்தியாவின் மிகப்பெரிய ஓட்டல் புக்கிங் நிறுவனம் ஓயோ ரூம்ஸ். இதன்  நிறுவனர்  ரித்தேஷ் அகர்வாலுக்கும் லக்னோவை சேர்ந்த கீதன்ஷா சூட் என்பவருக்கும் நேற்றுமுன்தினம் திருமணம் நடந்தது.  குருகிராமில் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பில்  ரித்தேஷின் தந்தை ரமேஷ் வசித்து வந்தார். நேற்று அடுக்குமாடி குடியிருப்பின் 20 வது மாடியில் இருந்து ரமேஷ்  கீழே விழுந்து மரணமடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விசாரணை நடத்தினர்.  மேலும் தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. சடலத்தின் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. … Read more

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் போதை பொருள் பறிமுதல் அதிகரிப்பு: ஐநா அறிக்கையில் தகவல்

ஐநா:  இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில்,போதை பொருள்கள் பறிமுதல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக  ஐநா போதை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐநாவின் கண்காணிப்பு பிரிவான சர்வதேச போதை பொருள் கடத்தல் கட்டுப்பாடு வாரியம்  வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், சட்ட விரோதமாக  போதை மாத்திரைகள் தயாரிப்பதை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா பல்வேறு  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடத்தல் கும்பல்கள் ஆன்லைன்  மற்றும் கடல் மார்க்கத்தில் இதனை பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் … Read more

இயற்கை பேரழிவின்போது சேதங்களை குறைப்பதில் கவனம்: பிரதமர் மோடி அறிவுரை

புதுடெல்லி: ‘இயற்கை பேரழிவுகளை கையாள்வதில் எதிர்வினையாற்றுவதை விட, சேதங்களை குறைப்பதற்கான அணுகுமுறையை தேவை’ என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். பேரிடர் அபாயங்களை குறைப்பதற்கான தேசிய அமைப்பின் (என்பிடிஆர்ஆர்) 3வது அமர்வு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:இயற்கை பேரழிவுகளை நம்மால் தடுக்க முடியாது. ஆனால் அவற்றால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான கட்டமைப்பை நம்மால் உருவாக்க முடியும். எனவே, இயற்கை பேரிடர்களை கையாள்வதில், அசம்பாவிதம் நடந்த பிறகு எதிர்வினையாற்றுவதை விட, முன்கூட்டியே சேதங்களை … Read more

‘புருஷன் உயிரோட தான இருக்காரு.. ஏன் பொட்டு வைக்காம இருக்க…’: பெண்ணை கேள்வி கேட்ட பாஜ எம்பிக்கு கண்டனம்

கோலார்: புருஷன் உசுரோட தான இருக்காரு.. ஏன் பொட்டு வைக்காம இருக்க என்று பெண்ணிடம் கேட்ட கர்நாடகா பாஜ எம்பிக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி எஸ்.முனிசாமி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில்   மகளிர் குழுக்கள் வைத்திருந்த கடைகளை பார்வையிட்டார்.   கடை வைத்திருந்த பெண்ணை அணுகிய எம்பி முனிசாமி, ‘புருஷன் உசுரோட தான இருக்காரு.. ஏன் பொட்டு வைக்காம இருக்க ’ என்று கோபமாக … Read more

கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

புதுடெல்லி:  இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க  நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் … Read more

வடமாநிலத்தவர் சர்ச்சை..பிரசாந்த் கிஷோர் ட்வீட்..சீமானை சீண்டிய முன்னாள் தம்பி.!

வடமாநிலத்தவர் விவகாரத்தில் வாய் சொல் வீரன் சீமான் சொல்வது போல் தமிழ்நாட்டு மக்கள் இல்லை என திமுகவின் ராஜிவ் காந்தி தெரிவித்துள்ளார். இந்தி பேசியதற்காக தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் கொல்லப்படுவதாகவும், எரிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் போலி செய்தி பரவியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அது பாஜகவினரால் பரபரப்பட்ட போலி செய்தி என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் சமூக வலைதளங்களில் போலி செய்திகள் நீக்கப்படவில்லை. அதேபோல் இன்னமும் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக பாஜக ஆதரவு இந்துத்துவவாதிகள் … Read more

ராகுல் காந்தி மீது விமர்சனம் துணை ஜனாதிபதிக்கு காங். கண்டனம்: ‘ஆளும்கட்சியின் சியர்லீடராக இருக்க வேண்டாம்’ என காட்டம்

புதுடெல்லி: துணை ஜனாதிபதி நடுவராகத்தான் இருக்க வேண்டும். ஆளும்கட்சியின் சியர்லீடராக இருக்க கூடாது என்று ராகுல்காந்தியை விமர்சனம் செய்த விவகாரத்தில் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த வாரம் லண்டன் சென்று இருந்த போது,’ நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும் போது மைக் அணைக்கப்படுகிறது’ என்று குற்றம்சாட்டினார். இதை மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தங்கர் கடுமையாக விமர்சனம் செய்தார்.   காங்கிரஸ் தகவல் தொடர்பு துறை செயலாளர் ஜெய்ராம் … Read more

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக செப்டம்பரில் பிரசாரத்தை தொடங்கும் மோடி: பலவீனமான 160 தொகுதிகளில் தீவிர கவனம்

புதுடெல்லி: வரும் 2024 மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் செப்டம்பரில் தொடங்க உள்ள நிலையில், பலவீனமாக உள்ள 160 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை ஆளும் பாஜக தொடங்கியுள்ளது. நாடுமுழுவதும் பலவீனமாக உள்ள 160 மக்களவைத் தொகுதிகளை அடையாளம் கண்டுள்ள பாஜக, அந்தத் தொகுதிகளில் வெற்றிப் பெறுவதற்காக வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த தொகுதிகளுக்கான ேதர்தல் செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பாஜக தேர்தல் … Read more

பேரவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கியது தேர்தல் கமிஷன் குழு கர்நாடகா வருகை: அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகா பேரவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கிய நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் குழுவினர் பெங்களூரு வந்துள்ளனர். அவர்கள் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் ெபாம்மை தலைமையிலானா பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில், அடுத்த சில வாரங்களில் மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக தலைமை ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் … Read more

இம்மாத இறுதியில் இருந்து H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறைய வாய்ப்பு: மத்திய அரசு

புதுடெல்லி: ‘H3N2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இம்மாத இறுதியிலிருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொது சுகாதார சவாலை எதிர்கொள்ள கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிட்டுள்ளது’ என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்கள்: பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் … Read more