ராஜஸ்தான் பேரவை தேர்தல் ஆம்ஆத்மி, ஏஐஎம்ஐஎம் களத்தில் குதித்தன: கெஜ்ரிவால், ஒவைசி வருகை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், அம்மாநில தேர்தல் களத்தில் ஆம்ஆத்மி கட்சியும்,  ஏஐஎம்ஐஎம் கட்சியும் தேர்தலில் களம் காண்கின்றன. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், இந்தாண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. முக்கிய எதிர்கட்சியான பாஜக, ஆளுங்கட்சிக்கு எதிரான தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடந்த காலங்களில் போட்டி இருந்த நிலையில், தற்போது மேற்கண்ட இருகட்சிகளுக்கு மாற்றாக டெல்லி … Read more

தீவிரவாத நிதி திரட்டல் – ஹுரியத் தலைவர்களின் வீடுகளில் ரெய்டு

ஸ்ரீநகர்: பாகிஸ்தானின் எம்பிபிஎஸ் சீட்டுகள், காஷ்மீர் மாணவர்களிடம் விற்கப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் ஹுரியத் தலைவர்கள் 3 பேரின் வீடுகளில், அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள எம்பிபிஎஸ் சீட்டுகள் காஷ்மீர் மாணவர்களிடம் விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அனந்த்நாக் பகுதியில் உள்ள ஹுரியத் தலைவர்கள் குவாசி யாசிர், ஜாபர் பட், முகமது இக்பால் காஜா ஆகியோரது வீடுகளில் அமலாக்கத்துறையினர் மாநில போலீஸாருடன் … Read more

இந்தியாவில் H3N2 வைரஸிற்கு முதன்முறையாக கர்நாடகாவில் முதியவர் உயிரிழப்பு

இந்தியாவில் H3N2 வைரஸிற்கு முதன்முறையாக கர்நாடகாவை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 87 வயது முதியவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மார்ச் 1-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் இறந்து 2 நாட்களுக்குப் பிறகு வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு H3N2 வைரஸ் இருந்தது தெரியவந்ததாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. H3N2 வைரஸிற்கு ஹரியானாவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். H3N2 வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு … Read more

OYO நிறுவனர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழப்பு

மும்பை: OYO நிறுவனர் ரிதேஷ் அகர்வாலின் தந்தை ரமேஷ் அகர்வால் உயிரிழந்தார். குருகிராமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 20வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில்தான், ரிதேஷ் அகர்வாலுக்கு டெல்லியில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

பஞ்சாப் பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழிபாடு

அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோயிலில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழிபாடு செய்தார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோயில் உள்ளது. இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று ஒருநாள் பயணமாக அமிர்தசரஸ் நகருக்கு வந்தார். விமான நிலையத்தில் அவரை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பகவந்த் சிங் மான், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், அமிர்தசரஸ் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் ஆஜ்லா மற்றும் உயரதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து … Read more

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : சிசோடியாவை 7 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, மணீஷ் சிசோடியாவை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, அமலாக்கத்துறைக்கு ரோஸ் அவின்யூ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு, ஆம் ஆத்மி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்தியதில், முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கை அளித்து, சிபிஐ விசாரிக்க, டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்திருந்தார். இவ்வழக்கில், துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்து, சிபிஐ விசாரணை நடத்தியது. தற்போது, அமலாக்கத்துறையின் வழக்கிலும் சிசோடியா கைதான … Read more

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கப்பிரிவு காவல்: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு 7 நாள் அமலாக்கப்பிரிவு காவல் என்று நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளனர். சிபிஐ வழக்கில் திகார் சிறையில் இருந்த மணீஷ் சிசோடியவை விசாரணைக்கு பின் நேற்று நேற்று அமலாக்கத்துறை கைது செய்தது. சிபிஐ காவலில் ஏற்கனவே 7 நாள் விசாரிக்கப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கப்பிரிவு விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் … Read more

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையினர் முன்பு நாளை ஆஜராகிறார் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அமலாக்கத் துறை முன்பு நாளை ஆஜராக உள்ளார். டெல்லியில் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இது சில தொழிலதிபர்களுக்கு சாதகமாக அமைந்ததாகவும் இதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியினர் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அக்கொள்கையை டெல்லி அரசு … Read more

துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: டெல்லியில் பேரிடர் பாதிப்பை குறைப்பதற்கான தேசிய கட்டமைப்பின் 3வது அமர்வை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு, பேரிடர் மேலாண்மையை மனதில் கொண்டு புதிய வழிகாட்டுதல் உருவாக்க வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பேரிடர் மேலாண்மை நிர்வாகத்தை வலுப்படுத்த வேண்டும். துருக்கி, சிரியாவில் இந்திய பேரிடர் மீட்புக் குழுவின் பணி உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. தொழில்நுட்பத் திறனை இந்தியா அதிகரித்துள்ளது பேரிடர்களில் பலரின் உயிரை காப்பாற்ற உதவியது. இளைஞர்களுக்கு … Read more

பிக்பாஸ் நடிகைக்கு மிரட்டல் – பிரியங்கா காந்தியின் உதவியாளர் மீது வழக்கு

புதுடெல்லி: இந்தி பிக் பாஸ் 16வது நிகழ்ச்சியில் நடித்த அர்ச்சனா கவுதம் என்பவரிடம் அத்துமீறியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தி பிக் பாஸ் 16-வது நிகழ்ச்சியில் பங்கேற்றவர் அர்ச்சனா கவுதம். இவர் சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார். அப்போது பிரியங்காவின் உதவியாளர் சந்தீப் சிங் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், இது குறித்த தகவலை … Read more