இந்திய பொருளாதாரத்தின் எழுச்சி உலகின் வளர்ச்சிக்கு உத்வேகம் தரும் – ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி நம்பிக்கை

பெங்களூரு: உலகின் வளர்ச்சிக்கு இந்தியாவின் பொருளாதார எழுச்சி உத்வேகம் அளிக்கும் என்று ஜி20 கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்த நிலையில், அந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டம் கர்நாடக மாநிலம்பெங்களூருவில் நேற்று நடந்தது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய பொருளாதாரத்தின் எழுச்சியில் இருந்து ஜி20 நாடுகள் தேவையான உத்வேகத்தை பெறும். உலக நிலப்பரப்பில் ஸ்திரத்தன்மை, நம்பிக்கை … Read more

நீட் பயிற்சி மைய மாணவன் தற்கொலை

கோட்டா: ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான ஏராளமான பயிற்சி மையங்கள் உள்ளன.  இதில் நாடு முழுவதுமிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்களுக்குப் படிப்பில் அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில்,நீட் பயிற்சி வகுப்பில் படித்து வந்த உபி மாநிலம் பதாயுன் நகரை சேர்ந்த அபிஷேக் யாதவ்(17) என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தற்கொலை முடிவு எடுத்ததற்கு நீட் பயிற்சி மையம்தான் காரணம் என அவரின் தந்தை … Read more

உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி 7 நீதிபதிகளின் பிஎப் கணக்கு மூடல்

புதுடெல்லி: பீகாரின் பாட்னா உயர் நீதிமன்ற நீதிபதிகளான சைலேந்திர சிங், அருண்குமார் ஜா, ஜிதேந்திர குமார், அலோக் குமார், சுனில் தத்தா மிஸ்ரா, சந்திர பிரகாஷ் சிங், சந்திரசேகர் ஜா ஆகிய 7 பேர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்களின் ஓய்வூதியத்திற்கான பொது வருங்கால வைப்பு நிதி (ஜிபிஎப்) கணக்கு திடீரென மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தனர். இந்த மனு குறித்து கடந்த 21ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட் … Read more

மாதவிடாய் காலத்தில் பணி விடுப்பு கேட்ட வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடெல்லி:  உச்ச நீதிமன்றத்தில் ஷஹிலேந்திரா திருப்பாதி என்பவர் கடந்த 15ம் தேதி தாக்கல் செய்த பொது நல மனுவில்,‘‘நாடு முழுவதிலும் உள்ள மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோருக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக வலியினை மனதில் கொண்டு விடுப்பு வழங்க வேண்டும். ஏராளமான தனியார் நிறுவனங்கள் இத்தகைய விடுப்புகளை வழங்கி வருகின்றன. அதனால் மகப்பேறு சட்டத்தில் இதற்காக சில மாற்றங்களை செய்து அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இந்த … Read more

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அதிகாரி கைது

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் சந்திப்பூரில் இயங்கி வரும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் 57 வயதான நபர் பணிபுரிந்து வந்தார். இவர் சந்திப்பூர் நிறுவனத்தில் ஏவுகணை சோதனைகள் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த உளவாளியுடன் பகிர்ந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சந்திப்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அந்த அதிகாரியை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்த நபர் எந்தெந்த தகவல்களை பாகிஸ்தானுக்கு தெரிவித்தார் என … Read more

இளைஞருக்கு திடீர் மாரடைப்பு.. “சிபிஆர்” சிகிச்சை அளித்த உயிரை காப்பாற்றிய போக்குவரத்து காவலர்..!

தெலுங்கானாவில் மாரடைப்பு ஏற்பட்டு மூர்ச்சையான இளைஞர் ஒருவருக்கு சிபிஆர் சிகிச்சை அளித்து போக்குவரத்து காவலர் ஒருவர் காப்பாற்றினார். ரங்கார ரெட்டி மாவட்டம் ராஜேந்திரா நகரில் அரசுப் பேருந்து ஒன்றில் அந்த இளைஞர் பயணித்துக் கொண்டிருந்தார். ஆரா நகர் என்ற இடத்தின் அருகே செல்லும்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் விரைந்து வந்து இளைஞரை கீழே இறக்கி சிபிஆர் சிகிச்சை அளித்தார். சிறிது நேரத்தில் இளைஞருக்கு … Read more

காங். வழிகாட்டுதல் குழுவில் முடிவு காரிய கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க கார்கேவுக்கு அதிகாரம்

நவ ராய்ப்பூர்: காங்கிரசின் உயர்மட்ட முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டியின் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கே வழங்கிட வழிகாட்டுதல் குழுவில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சட்டீஸ்கரின் நவ ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில், இந்த ஆண்டு நடக்க உள்ள 9 மாநில தேர்தல்கள், கட்சியில் மேற்கொள்ள உள்ள சீர்த்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளன. இந்நிலையில், மாநாடு தொடங்கிய நிலையில், காங்கிரஸ் … Read more

அதானி குழுமம் குறித்த செய்திகளுக்கு தடைவிதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: அதானி குழும விவகாரங்கள் குறித்த செய்திகளை வெளியிட ஊடங்களுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அதானி குழும நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், இது குறித்து செய்திகளை வெளியிட தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மூத்த வக்கீலான எம்.எல்.சர்மா தாக்கல் செய்துள்ள … Read more

சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுக்குள் கோழியைப் பிடிக்க சென்று சிக்கிய நபர்.!

உத்தரபிரதேசத்தில் சிறுத்தையைப் பிடிப்பதற்காக வைக்கப்பட்ட இரும்புக் கூண்டுக்குள் இருந்த கோழியைப் பிடிக்கச் சென்ற ஒருவர் உள்ளே சிக்கிக் கொண்டு கதறிய காட்சி நகைப்பை ஏற்படுத்தியது. புலன்ஷார் பகுதியிலுள்ள கிராமத்துக்குள் சிறுத்தை ஒன்று அடிக்கடி நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வந்துள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக இரும்புக் கூண்டு அமைத்த வனத்துறையினர், அதற்குள் உயிருள்ள கோழி ஒன்றை வைத்துள்ளனர். அந்த கோழிக்கு ஆசைப்பட்டு, நள்ளிரவில் ஒரு நபர் கூண்டுக்குள் புகுந்துள்ளார். உடனடியாக கூண்டு மூடிக்கொண்ட நிலையில், காலையில் அவ்வழியாகச் சென்றவர்களைப் பார்த்து … Read more

மகாராஷ்டிரா விவசாயியின் கண்ணீர் கதை 512 கி. வெங்காயத்தை 70 கிமீ கொண்டு சென்று விற்றதில் கிடைத்தது ரூ.2 மட்டுமே: நடவடிக்கை எடுக்குமா ஒன்றிய அரசு?

மும்பை: விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைவித்த 512 கிலோ வெங்காயத்தை 70 கிமீ பயணம் செய்து எடுத்து விற்றதில் வெறும் ரூ.2க்கு விற்றிருக்கும் பரிதாப நிலை மகாராஷ்டிராவில் நடந்துள்ளது. இதுபோல விவசாயிகளுக்கு கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை வீழ்ச்சிக்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். மகாராஷ்டிராவில் சோலாபூர் மாவட்டம் பர்ஷி தாலுகா பர்கோன் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திர துகாராம் சவான் (58). விவசாயி. இவர் தனது நிலத்தில் விளைந்த 512 கிலோ … Read more