டெல்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தக கண்காட்சி தொடக்கம்

டெல்லி: டெல்லியிலுள்ள பிரகதி மைதான் அரங்கில் உலக புத்தக கண்காட்சி தொடங்கியது. மார்ச் 5-ம் தேதி வரை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு கண்காட்சியில் நுழைவு கட்டம் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார்: பிரதமர் மோடி

புதுடெல்லி: “உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர எந்தவொரு அமைதி பேச்சுவார்த்தையிலும் இணைய இந்தியா தயார்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அவரது உரையில் உக்ரைன் போரே முக்கிய இடம் பெற்றிருந்தது. ரஷ்யா – உக்ரைன் மோதல் காரணமாக உலகம் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக அவர் வேதனை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் – இந்தியா … Read more

கர்நாடக தேர்தல் 2023: பாஜக கையில் ’யோகி மாடல்’… டெல்லியின் மாஸ்டர் பிளான்!

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் முதல் மாநில கட்சிகள் வரை பலவும் வியூகம் வகுத்து வருகின்றன. இந்த தேர்தலுக்கு முன்னோட்டமாக நடப்பாண்டு ஒன்பது மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் பெறும் வெற்றி 2024 மக்களவை தேர்தலுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அந்த வகையில் வரும் ஏப்ரல் – மே மாதங்களில் நடக்கவுள்ள கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் தென்னிந்தியாவில் பாஜக … Read more

கல்லூரி வளாகத்தில் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட பெண் முதல்வர்..!

மத்திய பிரதேச மாநிலத்தில் தனியார் கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அக்கல்லூரியின் முன்னாள் மாணவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இந்தூரில் இயங்கி வரும் பி.எம். (BM) மருந்தியல் கல்லூரியில் கடந்த ஆண்டு படிப்பை முடித்த அந்த மாணவனுக்கு கல்லூரி நிர்வாகம் சான்றிதழ் தர மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்தவன், கல்லூரியின் பெண் முதல்வரை கல்லூரி வளாகத்தில் வைத்தே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான். 5 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி … Read more

ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார கூட்டாளி ஜெர்மனி : பிரதமர் மோடி பேச்சு

டெல்லி : இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்-க்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு ஜி 20 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்-ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, ஜெர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ்இன்று 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜெர்மனியின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அளவிலான … Read more

“எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப இந்திய கல்விக் முறையை புதிய கல்விக் கொள்கை மாற்றியமைத்துள்ளது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “புதிய கல்விக் கொள்கை, இந்திய கல்வி முறையை எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையப் பேரவையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது, ”நமது நாட்டில் கல்வி முறை முன்பு கடினமானதாக இருந்தது. கல்வி என்றால் அது கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்பது போல், கடினத்தன்மைக்கு கல்வி இலக்காகி இருந்தது. புதிய கல்விக் கொள்கை, நெகிழ்வுத்தன்மையை கொண்டுள்ளது. அதோடு, அது எதிர்காலத் தேவைக்கு ஏற்றதாக மாற்றி … Read more

இந்தியா வந்த ஜெர்மன் அதிபர்; முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சு.!

இந்தியா ஜெர்மனி இடையே கடந்த சில ஆண்டுகளாக ராஜதந்திர உறவுகள் மேம்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கடந்த ஆண்டு மே 2ம் தேதி, ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற 6வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையேயான ஆலோசனைக்காக (ஐஜிசி) பிரதமர் மோடி சென்றிருந்தபோது, ஜெர்மன் அதிபருடன் முதல்முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஜூன் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தெற்கு ஜெர்மனியில் உள்ள அல்பைன் கோட்டையான ஸ்க்லோஸ் எல்மாவுக்கு பிரதமர் மோடி வருகை தந்து, G7 குழுவின் வருடாந்திர … Read more

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி

ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களின்படி, அந்த உறுப்பினர்களுக்கு ஏற்ப உங்களுக்கு ரேஷன் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், புதிதாக திருமணமான ஒருவர் உங்கள் குடும்பத்தில் சேர்ந்திருந்தால் அல்லது உங்கள் வீட்டில் குழந்தை பிறந்திருந்தால், நீங்கள் ரேஷன் கார்டில் அவரது பெயரை சேர்க்க வேண்டும். எனவே ரேஷன் கார்டில் புதிய குடும்ப உறுப்பினரின் பெயரைச் சேர்ப்பதற்கான முழுமையான ஆன்லைன் செயல்முறையை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள். ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க ஆன்லைன் வழி … Read more

பாஜகவை வீழ்த்துவதற்கான தேவையை மக்களிடம் தெளிவாக எடுத்துரையுங்கள் : காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பேச்சு!!

டெல்லி : தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் பாஜக அரசு பெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, காங்கிரசுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது சவாலான நேரம் என்றார். மேலும் பேசிய அவர்,’ பிரதமர் மோடியும் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியும் நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் … Read more

அந்தமான், நிக்கோபார் தீவுகளின் மேற்பகுதியில் உளவு பலூனை போன்ற பலூன் வகை பொருளை இந்தியப் படைகள் கண்டதாக அறிவிப்பு

அமெரிக்க வான்பகுதியில் பறந்த சீன உளவு பலூனை போன்ற பலூன் வகை பொருளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் மேற்பகுதியில் கடந்த ஆண்டு இந்தியப் படைகள் கண்டதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பலூன் வகை வெள்ளைப் பொருளின் நோக்கம் மற்றும் தோற்றம் தெளிவாக தெரியாததால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அந்தப் பொருளின் படங்கள் பொதுமக்களால் தரையில் இருந்து எடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அது மியான்மரில் இருந்து வந்ததா அல்லது சீனாவில் இருந்து வந்ததா என்பது தெரியவில்லை … Read more