ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராததற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர வேறு எதுவும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் … Read more

சாலை விபத்துகள்: மக்களவை தலைவர் ஓம் பிர்லா கவலை

புதுடெல்லி: “டெல்லியில் நேற்று ‘சாலை பாதுகாப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் கார் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வைத் தொடங்கி வைத்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 லட்சம்சாலை விபத்து நடப்பது கவலை அளிக்கிறது. இதில் 1.5 லட்சம் பேர்உயிரிழக்கின்றனர். குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு இது. விபத்துகள் குறித்து நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மக்கள் … Read more

திருப்பதி டூ செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; இன்னும் 12 நாட்கள் மட்டுமே!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இதற்கு ’Train 18’ எனப் பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு தேசத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘Vande Bharat Express’ என மாற்றம் செய்யப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பு இதன் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று … Read more

புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திட்ட குழுமம் நிபந்தனைகளுடன் கட்டிட அனுமதி அளிக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

இந்தியாவில் 10,000-ஐ கடந்த அன்றாட கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,805 பேருக்கு தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 134 நாட்களுக்குப் பின்னர் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,000- ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழை) ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 10,300 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு … Read more

காங்கிரஸூடன் கரம் கோர்க்க தயாராகும் மம்தா – மாறும் டெல்லி களம்

காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் சூரத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 ஆண்டுகள் நீதிமன்றம் தண்டனை விதித்ததுடன், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை சபாநாயகரால் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக … Read more

போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் 6 மணி நேரம் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சுமார் 6 மணி நேரம், நாட்டின் முன் உள்ள பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிவார். அனைத்து கமாண்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை போபாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முப்படைகளின் தலைவர் அனில் சவுகானும் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே பாதுகாப்புத் … Read more

ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

டெல்லி: ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் வைத்து வருகிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக 5 இடங்களில் பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி வழங்கமுடியும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

குடிமைப் பணிகளுக்கு ஆட்கள் நியமனம் – தேர்வு நடைமுறையை விரைந்து முடிக்க நாடாளுமன்ற குழு வலியுறுத்தல்

புதுடெல்லி: குடிமைப் பணிக்கு தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைக்கு 15 மாதங்கள் ஆகிறது. இது நீண்ட நெடிய தேர்வு நடைமுறையாக உள்ளது. இதனால், மாணவர்களின் பொன்னான காலம் வீணடிக்கப்படுகிறது. அத்துடன் குடிமைப் பணி தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் மனதளவிலும், உடல்அளவிலும் சோர்வை சந்திக்கின்றனர். இதனால், அவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான தேர்வு, சுழற்சி நடைமுறைகளின் காலத்தை கணிசமாக குறைக்குமாறு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் (யுபிஎஸ்சி) … Read more

XBB.1.16 கொரோனா பாதிப்பு; 210 நாட்களில் முதல்முறை… இருந்தாலும் ஒரு நம்பிக்கை!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை அன்று புதிதாக 1,890 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 210 நாட்களில் இல்லாத அளவிற்கு உச்சமாகும். அதிலும் வாராந்திர பாசிடிவ் விகிதத்தை கருத்தில் கொண்டால் 78 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, மார்ச் 19-25 காலகட்டத்தில் இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 8,781ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதற்கு முந்தைய வாரம் 4,929ஆக இருந்தது கவனிக்கத்தக்கது. இவ்வாறு கடந்த 6 வாரங்களாக … Read more