பெங்களூருவில் நடந்த ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளுக்கு மிரட்டல்?: கனடா, ஜெர்மன் மீது பகீர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெங்களூருவில் நடந்த ஜி-20 நிதியமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் ரஷ்ய அதிகாரிகளை கனடா, ஜெர்மன் அதிகாரிகள் மிரட்டியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 1  மற்றும் 2 ஆகிய தேதிகளில் டெல்லியில் ஜி-20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்  நடைபெற உள்ளது. இதில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவும்,  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனும் கலந்து  கொள்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் பெங்களூருவில் ஒன்றிய நிதியமைச்சர் … Read more

நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் கைப்பற்றிவிட்டன: சோனியா காந்தி

ராய்ப்பூர்: நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் கைப்பற்றிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த 3 நாள் மாநாட்டில் சோனியா காந்தி இன்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இது ஒரு சவாலான காலம். பாஜகவும், ஆர்எஸ்எஸ்ஸும் நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் கைப்பற்றி அவற்றை நாசமாக்கிவிட்டன. ஒரு சில … Read more

குலாம்நபி ஆசாத் குறித்து ஜெய்ராம் ரமேஷ் சர்ச்சை கருத்து; ரூ.2 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ்: 2 வாரத்தில் மன்னிப்பு கேட்க அறிவுறுத்தல்

புதுடெல்லி: குலாம்நபி ஆசாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை ஜெய்ராம் ரமேஷ் கூறியதால் அவருக்கு எதிராக ரூ. 2 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், ஜம்மு – காஷ்மீரில் தனிகட்சி தொடங்கி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் குலாம்நபி ஆசாத்துக்கு எதிராக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இவரது கருத்து ஊடகங்களில் வெளியாகின. … Read more

உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

டெல்லி: உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-10 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கண்டத்தில் இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார கூட்டாளி ஜெர்மனி என அவர் தெரிவித்தார்.  

''2024 தேர்தலில் ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி'': மல்லிகார்ஜூன கார்கே

ராய்ப்பூர்: 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டின் இரண்டாம் நாள் கூட்டம் இன்று தொடங்கியது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு மல்லிகார்ஜூன கார்கே தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், ”கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கட்சி சிறந்த … Read more

ஒரு ரூபாய் மட்டும் வரதட்சணையாக பெற்ற மணமகன்..!!

வரதட்சணை என்பது திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை அல்லது சொத்து போன்றவைகளைக் குறிக்கும். இது சீர், செய்முறை போன்ற வேறு சில பெயர்களாலும் குறிப்பிடப்படுகிறது. இந்த வரதட்சணையால் பல கல்யாணங்கள் மணமேடைக்கு வந்து நின்று போய் கூட உள்ளது.இதே வரதட்சணையால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன. ஏன் கல்யாணத்திற்கு பிறகு கூட இந்த வரதட்சணையால் பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன.இந்த வரதட்சணையால் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது.இந்நிலையில், ராஜஸ்தான் … Read more

Ola, Uber மற்றும் Rapido நிறுவனங்களுக்கு தடை விதித்த அரசு!

ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற நிறுவனங்களின் பைக் டாக்சி சேவை விதிகளை மீறியதாக குற்றசாட்டுகள் எழுந்ததையடுத்து டெல்லி முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் டெல்லியில் பைக் டாக்சி சேவையை நிறுத்த அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.  இதுகுறித்து டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பைக்கில் பயணிகளை ஏற்றிச் செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  இதனை மீறி யாரும் செயல்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடும் அபராதம் விதிக்கப்படுவதுடன் அவர்களின் ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும் என்று … Read more

எதிர்கால சந்ததியினர் தேவையை புதிய கல்வி கொள்கை பூர்த்தி செய்யும் – பிரதமர் மோடி

எதிர்கால சந்ததியினரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், நாட்டின் கல்வி அமைப்பை புதிய கல்விக் கொள்கை மாற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காணொலி மூலம் மாணவர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய கல்வி கொள்கைக்கு ஆசிரியர்கள் பெரும் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இந்த ஆதரவு, கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய மத்திய அரசை ஊக்குவிக்கிறது என்றும் குறிப்பிட்டார். புதிய தொழில்நுட்ப வசதி, நாட்டில் புதிய வகை வகுப்பறைகளை கட்டமைக்க உதவுகிறது என்றும், ஆதலால் ஆசிரியர்களின் பணியானது … Read more

ம.பி.யில் டயர் வெடித்து பயங்கர விபத்து : 3 பேருந்துகள் மீது லாரி மோதியதில் 14 பேர் பலி; 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் : முதல்வர் நிதியுதவி!!

போபால் : மத்தியபிரதேச மாநிலத்தில், கட்டுப்பாட்டை இழந்த சிமெண்ட் லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 3 பேருந்துகள் மீது அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் 14 பேருடன் சிமெண்ட் லாரி ஒன்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் பேரணியின் கலந்து கொண்டு ஊர் திரும்பிக் கொண்டு இருந்தது. ரேவா-சத்னா எல்லையோத்தில் மொஹானியா சுரங்கப்பாதைக்கு அருகே இரவு 9 மணியளவில் மகாகும்பத்தில் கலந்து கொண்டு திரும்பிய பயணிகளுக்கு உணவு பொட்டலங்களை வழங்குவதற்காக 3 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன. … Read more

இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமரை குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்ற பிரதமர் மோடி

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ்-ஐ, குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கோல்ஸ் இரண்டு நாள் பயணமாக இன்று காலை இந்தியா வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைகுலுக்கி வரவேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு இந்திய அமைச்சர்கள் மற்றம் உயரதிகாரிகளை அறிமுகப்படுத்தினார். பின்னர், ஜெர்மனி பிரதமருடன் வந்துள்ள அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளை அவர் … Read more