ராகுல் தகுதிநீக்கம் | காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் ஆலோசனை

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். முன்னதாக கடந்த வாரம் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியவில் … Read more

நாளை தொடங்குகிறது ஜி 20 மாநாடு – ரூ.157 கோடி செலவில் சாலைகள் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அதிகரிப்பு!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை ஜி 20 மாநாடு தொடங்குகிறது. இதையொட்டி நகரை அழகுபடுத்த 157 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே கட்டடங்கள், சாலைகள் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் 200 விருந்தினர்களை தங்க வைப்பது, அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்வது, பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து ஆந்திர அமைச்சர்கள் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினர். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் அனைத்து … Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்: டெல்லி காந்தி நினைவிடத்தில் தடையை மீறி கார்கே, பிரியங்கா பங்கேற்பு

புதுடெல்லி: ராகுல் காந்தியை மக்களவை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரசார் நேற்று சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். டெல்லி ராஜ்காட்டில் போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர். குஜராத்தில் போராட வந்த காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியின் குடும்ப பெயரை, … Read more

வெளிநாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் அதிக காலம் தங்கியிருந்தால் ஒழுங்கு நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி: டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளில் தங்கி பணியாற்ற அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அதனை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் தங்கி பணியாற்றும் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட காலத்தையும் … Read more

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்!!

திருவனந்தபுரம் : மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 750 படங்களுக்கும் மேல் பல்வேறு வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகர் இன்னசென்ட். தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கேராளாவில் உள்ள சாலக்குடி தொகுதியின் முன்னாள் எம்பி, பாடகர், தயாரிப்பாளர் என் பன்முக திறமை கொண்ட இன்னசென்ட் மலையாள நடிகர் சங்க தலைவராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு … Read more

“மோடி சமூகமா? அப்படினு ஒன்னு இல்லவே இல்ல” – அம்பலப்படுத்திய ராகுல் காந்தியின் வழக்கறிஞர்!

அவதூறு வழக்கில் ஈராண்டு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பரப்புரையின் போது “ ‘நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயரே இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதையடுத்து குஜராத் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவான புர்னேஷ் மோடி, “மோடி சமூகத்தினரை தவறாக வகைப்படுத்துவதாக … Read more

149 நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் 1,890 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் உயர்ந் துள்ளது. 149 நாட்களில் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 1,890-ஆக உயர்ந்துள்ளது. 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் தொடங்கியது. அதன் பின்னர் கோடிக்கணக்கான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. நாட்டில் நேற்று காலை 8 … Read more

இளைஞர் காங். சார்பில் இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நாடாளுமன்ற வளாகம் சுற்றிலும் போலீசார் குவிப்பு..!

இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற இருப்பதையொட்டி நாடாளுமன்ற வளாகம் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியின் எம்.பி.பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு முக்கிய நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று ராகுலின் தொகுதியான வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கைகளில் தீப்பந்தங்களை ஏந்திப் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இன்று நாடாளுமன்றத்தில் கருப்பு பட்டை அணிந்து வர காங்கிரஸ் … Read more

2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

கொல்கத்தா : 2 நாட்கள் பயணமாக இன்று மேற்கு வங்கம் செல்கிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இல்லம், ரவீந்திர நாத் தாகூரின் ‘சாந்தி நிகேதன்’ உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறார்.

ஹைதராபாத் விடுதலைக்கு பாடுபட்டவர்களை மறந்தது காங்கிரஸ் – மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

பீதர்: கர்நாடகாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் ஹைதராபாத் விடுதலைக்காக பாடுபட்டவர்களை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் மறைந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் மற்றும் கோராட்டா தியாகிகள் நினைவிடத்தை பீதர் மாவட்டத்தின் கோராட்டா கிராமத்தில் நேற்று திறந்த வைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மே 9, 1948 அன்று … Read more