அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சவாலானது என்பதுடன் ஆட்சிமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாகும்: காங். தலைவர் கார்கே பேச்சு

ராய்பூர்: அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சவாலானது என்பதுடன் ஆட்சிமாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாகும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரியக் கமிட்டியின் 85வது மாநாடு, கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் தொடங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இந்த காங்கிரஸ் மாநாட்டில், 9 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்தும், அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், … Read more

காங்கிரஸ் முக்கிய கூட்டத்தை தவிர்த்த காந்தி குடும்பத்தினர்: ராய்பூர் மாநாட்டில் பங்கேற்கிறார்கள்

ராய்பூர்: சத்தீஸ்கரில் இன்று (பிப்.24) நடக்கும் காங்ரகிஸ் கட்சியின் வழிகாட்டு குழுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கிறது. காந்தி குடும்பத்தினர், புதிதாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மல்லிகார்ஜூன கார்கே சுதந்திரமாக செயல்பட விரும்புவதாகவும், முடிவகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதை விரும்பவில்லை என்பதால் இந்தக் கூட்டத்தை காந்தி குடும்பத்தினர் புறக்கணித்துள்ளனர். … Read more

நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி!

டெல்லி: நீட் தேர்வு தொடர்பாக அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பபெற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு தொடர்ந்து அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் நீட் தேர்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பல வலுவான வாதங்களுடன் தமிழ்நாடு அரசு புதிய … Read more

இரட்டை கொலை:பசு காவலர்களால் 20 மணிநேரம்.. 200 கி.மீ.தூரம் இஸ்லாமிய இளைஞர்கள் அலைக்கழிப்பு?

அரியானாவில் பசு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் காரில் வைத்து எரித்து இஸ்லாமிய இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டம் காட்மிக்கா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான நசீர் (27) மற்றும் ஜுனைத் (35) ஆகிய இருவரும் கடந்த 15-ம் தேதி காணாமல் போனநிலையில், இரண்டு நாட்கள் கழித்து ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டம் லோஹரு கிராமத்தில் கார் ஒன்றில் எரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இதில் … Read more

அதானி குழுமம் விவகாரத்தில் ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்

அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கையை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். ஊடகங்களுக்கு எங்களால் தடை விதிக்க முடியாது எனவும், எங்கள் தீர்ப்பை மட்டுமே வழங்குவோம் என வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்தபோது தலைமை நீதிபதி அமர்வு இதனைத் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு தடை விதிக்க முடியாது தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “ஊடகங்களுக்கு எதிராக நாங்கள் எந்த … Read more

கோழிக்கோட்டில் இருந்து சவூதி அரேபியா புறப்பட்ட விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் இருந்து சவூதி அரேபியா புறப்பட்ட விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 163 பயணிகளுடன் சென்ற ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டது.

அதானி குழுமம் – ஹிண்டன்பெர்க் விவகாரம்: ஊடகங்களுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

அதானி குழுமம் – ஹிண்டன்பெர்க் விவகாரத்தில் செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு எந்த தடையும் விதிக்க முடியாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் எம்.எல். சர்மா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் அமர்வு முன்பு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும், மாண்பையும் விமர்சிக்க கூடிய வகையில் உள்ள ஹிண்டன்பெர்க் அறிக்கையை தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என முறையிட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ஊடகங்களுக்கு … Read more

சுகேஷ் சந்திரசேகர் சிறை அறையில் ஆடம்பர பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி: மோசடி வழக்கில் டெல்லி மண்டோலி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் அறையிலிருந்து விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் பணம் பறித்த வழக்கு உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரது அறையில் சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு … Read more

மார்ச் 1-ம் தேதி இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன்..!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஜி20 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க மார்ச் 1-ம் தேதி இந்தியா வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 28-ம் தேதியிலிருந்து அரசு முறை பயணமாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு செல்லும் அவர் அதனைத் தொடர்ந்து இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின்போது பலதரப்புவாதத்தை வலுப்படுத்துவது, உணவு, எரிசக்தி பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, போதைப்பொருள் எதிர்ப்பு, உலகளாவிய சுகாதாரம், மனிதாபிமான உதவி, பேரழிவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து கவனம் செலுத்தப்படும் என … Read more

ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார் அப்துல் நசீர்

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய ஆளுநராக அப்துல் நசீர் பதவி ஏற்றுக்கொண்டார். விஜயவாடாவில் அப்துல் நசீருக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் முதமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.