பள்ளியில் இருந்து மகளை அழைத்து வந்த தாய்க்கு எமனாக மாறிய டாடா ஏஸ்..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பாலாபூரில் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சாலையில் நடந்து சென்ற பெண் மீது டிராலி ஆட்டோ அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பர்வீன் பேகம் (38) என்ற பெண் தனது மகளை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவர் தனது மகள் மற்றும் மற்றொரு பெண்ணுடன் ஷாஹேன் நகர் நெடுஞ்சாலை பகுதியில் சாலையின் இடதுபுறத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில், அதிவேகமாக … Read more

“உங்கள் கடிதத்திற்கு நன்றி; நான் கட்டுப்படுகிறேன்” – அரசு பங்களா விவகாரத்தில் ராகுல் காந்தி பதில்

புது டெல்லி: “உங்கள் கடிதத்திற்கு நன்றி. அதற்கு நான் கட்டுப்படுகிறேன்” என்று அரசு பங்களாவை காலி செய்வது குறித்த நோட்டீஸுக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார். தகுதி நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்யும்படி ராகுல் காந்திக்கு நேற்று (திங்கள்கிழமை) நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு ராகுல் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிலளித்து மறு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர்,” கடந்த நான்கு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக, இங்கு கழித்த மகிழ்ச்சியான நினைவுகளுக்காக நான் என்றும் கடமைப்பட்டுள்ளனேன். … Read more

அத்தியாவசிய மருந்துகள் விலை உயர்கிறதா… சாமான்ய மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு: பணவீக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் சாமானிய மக்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இப்போது மக்கள் அத்தியாவசிய மருந்துகள் வாங்க அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். ஏப்ரல் 1 முதல், வலி ​​நிவாரணி, ஆன்டிபயாடிக் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகளின் விலை அதிகரிக்கப் போகிறது (Essential Medicines Price Hike). ஆண்டு மொத்த விற்பனை விலைக் குறியீட்டில் (WPI) மாற்றத்திற்கு ஏற்ப மருந்து நிறுவனங்கள் விலையை உயர்த்தக் கூடும். … Read more

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி 2 இலக்குகள் நிர்ணயம் – அமித்ஷா

இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது உள்ளிட்ட 2 இலக்குகளை மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி நிர்ணயித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற ASSOCHAM’s அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முழு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவது, 2025ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார சக்தியாக இந்தியாவை உருவாக்குவது ஆகிய 2 இலக்குகளை பிரதமர் நிர்ணயித்திருப்பதாக தெரிவித்தார். இந்த 2 இலக்குகளையும் நம்மால் நிச்சயம் அடைய முடியும் … Read more

ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்கிறேன் : ராகுல் காந்தி அறிவிப்பு!!

டெல்லி: மக்களவை உறுப்பினர் என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி கடந்த 2004 பொதுத் தேர்தலில் உபியின் அமேதி தொகுதியில் வெற்றி பெற்று எம்பி ஆனதைத் தொடர்ந்து, 2005ம் ஆண்டு முதல் அவருக்கு ஒதுக்கப்பட்ட எண் 12, துக்ளக் லேனில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இதனிடையே பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறு பேசியதாக ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. … Read more

கை கொடுத்த GPS.. அம்பலமான மனைவியின் திருமணத்தை மீறிய உறவு – அதிரடியில் இறங்கிய கணவன்!

தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு உதவியாக இருக்கும் என்பது இக்கட்டான சூழலில்தான் தெரிந்துகொள்ள முடியும் என்பது பெங்களூருவில் கணவன் ஒருவர் மனைவியால் நேர்ந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் முக்கியமான முடிவை எடுக்க காரில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.எஸ். கருவி அந்த நபருக்கு உதவியிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அப்படி என்ன நடந்தது என்பதை காணலாம். இல்லறத்தை மீறிய உறவுகள் பலவும் வெளி வந்தாலும் அதிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது கடினமானதாகவே இருக்கும். நேசித்தவர்களால் மோசம் போய்விட்டோமே என்ற … Read more

''கடுமையாகப் போராட தயாராகுங்கள்'' – பாஜகவினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: கடுமையாகப் போராட தயாராகுங்கள் என்று பாஜகவினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டாம் கட்டத்தில் நடைபெறும் முதல் பாஜக நாடாளுமன்றக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், பியூஷ் … Read more

Old Pension திட்டம் குறித்து மிகப்பெரிய அறிவிப்பு, உடனடியாக இதை படியுங்கள்

ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து இன்று பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிராக பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் தெலுங்கானா மாநில அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுக்கக் கோரி ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் பேரணியில் ஈடுபடவுள்ளனர். அரசிடம் இருந்து பதில் வரவில்லை என்றால், அக்டோபர் 1-ம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பேரணியில் கலந்து கொள்வார்கள் … Read more

திருப்பதி தேவஸ்தான இணையதளம் முடக்கம்: பக்தர்கள் அவதி

திருமலை: திருப்பதி தேவஸ்தான இணையதளம் திடீரென முடங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். விரைவில் இணையதள பழுது சரிசெய்யப்பட்டு செயல்பட தொடங்கும் என தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பழுது பார்க்கப்பட்டு அமெரிக்கா திரும்பிய 'மேத்யூ பெர்ரி' போர் கப்பல்!

அமெரிக்க கடற்படைக் கப்பல் மேத்யூ பெர்ரி இந்தியாவில் சென்னைக்கு அருகே பழுதுபார்க்கப்பட்ட பின்னர் இந்தோ-பசிபிக் கடல் பகுதிக்குத் திரும்பியது. அமெரிக்க கடற்படையின் லூயிஸ் மற்றும் கிளார்க் வகை உலர் சரக்குக் கப்பலான யுஎஸ்என்எஸ் மேத்யூ பெர்ரி, சென்னைக்கு அருகில் காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள எல் அண்டு டி ஷிப்யார்டு என்று அழைக்கப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் கப்பல் பணிமனையில் மார்ச் 11 முதல் மார்ச் 27, 2023 வரையில் பராமரிப்பு மற்றும் பழுதுபார்க்கும் பணியை வெற்றிகரமாக … Read more