1.75 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!!

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் இவானா என்பவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தரும்படி நீதிமன்றத்தை நாடினார். அவர் அங்கு தாக்கல் செய்த மனுவில்,வீட்டு வேலைகள் செய்வதற்காகவே தன்னை திருமணம் செய்து கொண்டார் எனவும், இதனால் தனக்கு விவாகரத்துடன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மேலும், அவர் 25 வருடங்களாக தனி ஆளாக வீட்டு வேலைகளை செய்ததற்கு ரூ. 1.75 கோடி அளிக்குமாறு … Read more

பஞ்சாப் எல்லையில் ஊடுருவிய 3-வது பாகிஸ்தானியர் கைது – எல்லை பாதுகாப்பு படையினர் நடவடிக்கை

புதுடெல்லி: பஞ்சாப் அருகே உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (பிஎஸ்எஃப்) வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எல்லைப்பாதுகாப்புப்படை செய்திதொடர்பாளர் கூறுகையில், “அந்த ஊடுருவல்காரர் நேற்று நள்ளிரவிலில் இருந்து இன்று அதிகாலைக்குள் முன்பக்க எல்லையைக் கடந்து பஞ்சாப் மாவட்டத்தின் பெரோஷ்பூர் செக்டார் பகுதியில் உள்ள “திரத்” என்ற பகுதியின் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் ஊடுருவிய … Read more

7th PC Update: அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! டிஏ 4% இருக்கலாம் AICPI சூசகம்

7th Pay Commission Latest Update: ஜூலையில் மத்திய ஊழியர்களுக்கு எவ்வளவு டி.ஏ., எவ்வளவு உயரும் என்பது தொடர்பான கணிப்பு மத்திய அரசுப் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? Aicpi இன்டெக்ஸ் டிசம்பர் 2022க்கான எண்ணிக்கை 132.3 புள்ளிகளாக இருந்தது. ஏஐசிபிஐ இனி வரும் காலங்களில் இதற்கு மேல் செல்லலாம். 7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு தொடர்பான அகவிலைப்படி உயர்வை இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஆனால் அது நான்கு சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, … Read more

ரயில்வேதுறை ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை

டெல்லி: ரயில்வேதுறை ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதல்வர் லாலுவின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. டெல்லி, பீகாரில் உள்ள உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ரயில்வே துறையில் வேலை பெற உறவினர்கள் பெயரில் நிலம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சோதனை நடத்தப்பட்டது.

உ.பி.யில் லாரியில் பசுக்கள் ஏற்றிவந்தவர் மீது துப்பாக்கிச்சூடு

லக்னோ: உத்தரபிரதேசத்தில் லாரியில் பசுக்கள் ஏற்றி வந்தவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டத்தில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்து லக்னோ நகரின் பாரா காவல் நிலைய அதிகாரி டி.பி.சிங் நேற்று கூறியதாவது: பிரேம் சிங் (50) என்பவர் புதன்கிழமை தனது லாரியில் 13 பசுக்களுடன் மெயின்புரி நோக்கிசென்றார். லக்னோ அருகே அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுடப்பட்டார். இதையடுத்து பிரேம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டத்தின் 307-வது … Read more

Bank Holidays: ஏப்ரல் மாதம் எத்தனை நாள் வங்கிகள் இயங்காது?

வங்கி விடுமுறை பட்டியல்: நடப்பு நிதியாண்டு 2022-23 முடிய உள்ளது. மார்ச் 31 க்குப் பிறகு, ஏப்ரல் 1 முதல் தொடங்கும் 2023-24 புதிய நிதியாண்டில் சில பெரிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. இந்த மாற்றங்கள் நேரடியாக பணம் மற்றும் வங்கிகளுடன் தொடர்புடையவை. அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் ஏப்ரல் 2023 இல் வரும் வங்கி விடுமுறைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கும் ஏப்ரலில் வங்கி தொடர்பான ஏதேனும் வேலை இருந்தால், இப்போதிலிருந்தே திட்டமிடலாம். அத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் … Read more

பாரம்பரிய முறை அடிப்படையில் சிவப்பு கம்பளத்துடன் “குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆஸி. பிரதமரை நேரில் வரவேற்றார் பிரதமர் மோடி”

டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வருகை தந்த ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ்-க்கு பாரம்பரிய முறைப்படி சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அல்பேனிசை, பிரதமர் மோடி வரவேற்றார். தொடர்ந்து, இந்திய அமைச்சர்கள், அதிகாரிகளை அல்பேனிசுக்கு, பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். பின்னர், ராஜ்கட் சென்ற அல்பேனிஸ், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். Source link

டெல்லியில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பேச்சுவார்த்தை..!!

டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஆந்திராவில் கோதண்டராமர் திருக்கல்யாணம் – முதல்வர் ஜெகன் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்

கடப்பா: ஆந்திராவின் கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் பழங்கால மற்றும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோதண்ட ராமர் கோயில் உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், இந்த கோயிலை தனது கட்டுப்பாட்டில் பராமரித்து வருகிறது. ஒவ்வொரு ஸ்ரீராம நவமிக்கும், ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். தற்போது ஸ்ரீராம நவமி நெருங்குவதால், பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளுக்கான ஆலோசனை கூட்டம் கோயில் அலுவலக வளாகத்தில் திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், … Read more

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பி.ஆர்.எஸ். கட்சியினர் போராட்டம்..!!

டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பி.ஆர்.எஸ். கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா தலைமையிலான போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.