டெல்லியில் "மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று" போஸ்டரால் பரபரப்பு: காவல்துறை அதிரடி!

டெல்லியில் பல்வேறு பகுதிகளில் “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகத்துடன் கூடிய போஸ்டரால் ஒட்டப்பட்டிருந்ததை அடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.  டெல்லியில் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை தொடர்ந்து டெல்லி காவல்துறை இதில் சம்பந்தப்பட்ட 4 நபர்களை கைது செய்துள்ளது. டெல்லியில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த 2000 க்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை டெல்லி காவல்துறை அகற்றினர். இதில் பெரும்பாலும் , “மோடியை அகற்று; நாட்டை காப்பாற்று” என்ற வாசகம் … Read more

இந்துத்துவாவை விமர்சித்ததாக கன்னட நடிகர் சேத்தன் கைது

பெங்களூரு: கன்னட நடிகரும், சமூக செயற்பாட்டாளருமான சேத்தன் நேற்று முன்தினம் தனது ட்விட்டர்பதிவில், “இந்துத்துவ அரசியல் என்பது பொய்களால் கட்டமைக்கப்பட்டது. ‘ராவணனை ராமன் தோற்கடித்து அயோத்திக்குத் திரும்பியபோது இந்திய தேசத்தை தொடங்கினார்’ என சாவர்க்கர் கூறியது மிகப்பெரிய பொய் ஆகும். பாபர் மசூதியில் ராமர் பிறந்தார் என்பதும் திப்பு சுல்தானை கொன்றவர்கள் ஊரிகவுடா-நஞ்சேகவுடா என கூறுவதும் பொய் ஆகும். பொய்களால் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவ அரசியலை உண்மையால் தோற்கடிக்க முடியும்” என விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக பெங்களூ ருவை சேர்ந்த … Read more

இந்தியாவில் மீண்டும் ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாதா அளவிற்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 0.7%-ல் இருந்து 1.09% ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் 14-ம் தேதி 402-ஆக … Read more

“உங்க ஆதாரிலிருந்து எக்கச்சக்க குற்றச்செயல்கள்"-மும்பை போலீஸ் பெயரில் ரூ.20 லட்சம் மோசடி

ஹரியானாவை சேர்ந்த பெண்ணொருவர், மும்பை போலீஸ் என பெயரிட்டவர்களை நம்பி சுமார் 20 லட்சம் ரூபாய் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஹரியானாவின் செக்டார் 43 இல் வசித்துவந்த பெண்ணொருவருக்கு, கடந்த மார்ச் 3-ம் தேதியன்று கொரியரில் நிறுவனத்திலிருந்து அழைக்கிறோம் எனச் சொல்லி ஒரு ஃபோன்கால் வந்துள்ளது. அந்த ஃபோன்காலில், ‘உங்களுக்கு வந்த சட்டவிரோத பொருட்கள் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது’ என்று கூறியிருக்கின்றனர். மேலும் அவர்களேவும் மும்பை காவல்துறைக்கு ஃபோன்கால் கனெக்ட் செய்வதாக கூறி செய்துள்ளனர். அடுத்தநொடியே அழைப்பு வேறொருவருக்கு இணைக்கப்பட்டுள்ளது. … Read more

அதானி, ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் – 7-வது நாளாக அமளியால் நாடாளுமன்றம் நாளை காலை வரை ஒத்திவைப்பு

புதுடெல்லி: தொழிலதிபர் அதானி, ராகுல் காந்தி மன்னிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுன்றத்தின் 2 அவைகளிலும் 7-வது நாளாக நேற்றும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் நாளை காலை வரை (மார்ச் 23) வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. தொழிலதிபர் அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு (ஜேபிசி) உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த … Read more

அதிகரிக்கும் கொரோனா! கடந்த 24 மணி நேரத்தில் 1,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

Coronavirus Cases In India: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் தொற்று புதிதாக ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் 1,134 பேருக்கு புதிதாக கோவிட் -19 வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.  புதிய தொற்றுடன் தினசரி கொரோனா பரவல் விகிதம் 1.09 சதவீதமாகவும், வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 0.98 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.  நாட்டில் H3N2 இன்ஃப்ளூயன்ஸா தொற்று அதிகரிப்புக்கு மத்தியில், கடந்த சில … Read more

டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்

டெல்லி: டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி மாநில நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) நேற்று ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், சில காரணங்களுக்காக ஒன்றிய … Read more

வாகனங்கள், உடைகளை மாற்றி அம்ரித்பால் சிங் தப்பிச் சென்றது டோல்கேட் கேமராவில் பதிவு

சண்டிகர்: பஞ்சாப் போலீஸாரால் தேடப்படும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், வாகனங்களை மாற்றியும், உடைகளை மாற்றியும் டோல்கேட்-ஐ கடந்து சென்றது அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. பஞ்சாப்பில் ‘அனந்த்புர் கல்சா ஃபவுஜ்’ என்ற பெயரில் மீண்டும் தீவிரவாத குழுவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் போலீஸார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கடந்த 4 நாட்களாக தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 120-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ள … Read more

மகளிர் தின கலை நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உற்சாக நடனம்!

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உற்சாகமாக நடனமாடினார். மகளிர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு உரையாற்றினார். இறுதியில் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அப்போது அங்கு நடனமாடியவர்களுடன் இணைந்து ஸ்மிருதி இரானியும் நடனமாடினார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ: Source : … Read more

டெல்லி பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் – இன்று தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் கைலாஷ் கெலாட்

புதுடெல்லி: டெல்லி அரசின் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (எம்எச்ஏ) ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று டெல்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு பதிலாக நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறப்பட்டது. இதனிடையே டெல்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த … Read more