கர்நாடகாவில் பெண் ஐஏஎஸ் ரோஹினி சிந்தூரி மீது குற்றம் சாட்டி ஐபிஎஸ் அதிகாரி ரூபா பேசும் ஆடியோ வெளியாகி சர்ச்சை

பெங்களூரு: கர்நாடக அரசின் கைவினைப் பொருள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், சசிகலாவின் ஊழலை தெரிவித்தவருமான ரூபா ஐபிஎஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் ஒன்றை கிளப்பினார். அதாவது, இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் மீது ஊழல், நிர்வாக முறைக்கேடு, ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்தாக குற்றம்சாட்டினார். இதற்கு ரோஹினி சிந்தூரி ஐஏஎஸ் ரூபா மீது தலைமை செயலர், மைசூரு போலீஸாரிடம் புகார் … Read more

பட்ஜெட் தொடர்பான விளக்கம் அளிக்க இன்று முதல் மார்ச் 11ந் தேதி வரை 12 இணைய வழி கருத்தரங்குகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

பட்ஜெட் தொடர்பான விளக்கம் அளிக்க இன்று முதல் மார்ச் 11ந் தேதி வரை 12 இணைய வழி கருத்தரங்குகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மத்திய அமைச்சர்கள், அரசுத் துறை அதிகாரிகள், தொழில் வல்லுனர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை கவனப்படுத்த இந்த 12 அமர்வுகள் நடைபெற உள்ளன. பசுமை வளர்ச்சி, வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சி, சுற்றுலாத் துறை வளர்ச்சி, உள்கட்டமைப்பு, சுகாதாரம், மகளிர் மேம்பாடு என்ற தனித்தனித் தலைப்புகளில் … Read more

6 வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: ஒன்றாம் வகுப்பில் சேருவதற்கான வயதை 6ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய கல்வி துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. புதிய தேசிய கல்விக்கொள்கையின்படி, அடிப்படை கட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் (3 முதல் 8 ஆண்டுகள் வரை) ஐந்து ஆண்டு கற்றல் வாய்ப்பு உள்ளது. இதில்  மூன்று ஆண்டுகள் பாலர் பள்ளியும், அதை தொடர்ந்து ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்புக்களும் அடங்கும்.  அங்கன்வாடிகள் அல்லது அரசு ,அரசு உதவி பெறும் மையங்கள், … Read more

இனி 6 வயது நிரம்பிய பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்கை..!!

அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது., நாட்டில் பள்ளிகளில் இனி 1 ஆம் வகுப்பு சேர்ப்பதற்கு குழந்தைகளுக்கு 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்றும் 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது. அதேநேரத்தில் 3 வயதில் குழந்தைகளை ப்ரீ-கேஜி சேர்க்கலாம், 3 ஆண்டுகள் ப்ரீ-கேஜி, எல்கேஜி, யுகேஜி பயில வேண்டும். குழந்தைகளை 6 வயதில் 1 … Read more

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு..!! சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.1.30 லட்சம் வரை..!!

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது. இதற்காக பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவை நடத்தப்படுகிறது. அந்த வகையில், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணியில் நெடுஞ்சாலை, பொதுப்பணி, ஊரக வளர்ச்சி, நகர் ஊரமைப்பு ஆகிய துறையில் காலியாக இருக்கும் 1,083 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வானது மே 27-ம் தேதி நடைபெற இருப்பதாக வெளியான … Read more

டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் வெற்றி – ஆலே முகமது துணை மேயராக தேர்வு

புதுடெல்லி: நீண்ட இழுபறிக்கு பிறகு நடந்த டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஷெல்லி ஓபராய் வெற்றி பெற்றுள்ளார். டெல்லி மாநகராட்சிக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 250 இடங்களில் ஆம் ஆத்மி 134 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 இடங்களில் வென்றனர். டெல்லி மாநகராட்சி கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து பாஜக வசமிருந்தது. இப்போது அதை ஆம் ஆத்மி … Read more

உடல் எடையை குறைக்க முடியாமல் அனுஷ்கா தவிப்பு

ஐதராபாத்: உடல் எடையை குறைக்க முடியாமல் நடிகை அனுஷ்கா தவித்து வருகிறார். ஸ்லிம் தோற்றத்தில் இருந்த அனுஷ்கா, இஞ்சி இடுப்பழகி படத்துக்காக தனது உடல் தோற்றத்தை மாற்றினார். 60 கிலோவாக இருந்தவர், அந்த படத்துக்காக 90 கிலோவுக்கு மாறினார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் உடல் எடையை குறைக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. 10 கிலோ வரைதான் அவரால் எடையை குறைக்க முடிந்தது. இதனால் பழைய 60 கிலோ எடைக்கு அவரால் வரமுடியவில்லை. இதனால் பல … Read more

பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தையை சேர்ப்பதற்கு 6 வயது இருக்க வேண்டும் – மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: பள்ளியில் முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குறைந்தபட்ச வயதை 6-ஆக நிர்ணயிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கைப்படி 3 முதல் 8 வயது குழந்தைகளுக்கான அடிப்படை கல்வி நிலைகள் 5 ஆண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளிக்கு முந்தைய கல்வி (ப்ரீ ஸ்கூல்) 3 ஆண்டுகள் அடங்கும். அதன் பின் முதல் வகுப்பு மற்றும் 2 வகுப்பு கல்வி நிலை இடம் … Read more

வீட்டிற்குள் புகைப்படம் எடுத்த மர்ம நபர்கள்: போலீசிடம் அலியா பட் புகார்

மும்பை: தனியுரிமை மீதான அத்துமீறல் அதன் எல்லையை தாண்டிவிட்டது என்று நடிகை அலியா பட் ஆவேச பதிவை வெளியிட்டுள்ளார். அதற்கு பல நடிகர், நடிகைகள் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை அலியா பட், கடந்த சில தினங்களுக்கு முன் அவரது அனுமதியின்றி அவரது வீட்டிற்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் படத்தொகுப்பை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘நீங்கள் என்ன விளையாடுகிறீர்களா. எனது வீட்டின் அறையில் நான் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்தேன். யாரோ என்னை பார்ப்பதை … Read more

சற்று நேரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி… அறையில் இறந்து கிடந்த புதுமணத் தம்பதி..!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரின் சந்தோஷி நகர் பகுதியில் பிரிஜ் நகரைச் சேர்ந்தவர் அஸ்லம் (24). இவருக்கு கடந்த 19-ம் தேதி ராஜதலாப் பகுதியைச் சேர்ந்த கக்ஷன் பானு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து ராய்ப்பூர் நகரின் சாஸ்திரி பஜாரில் அமைந்துள்ள சீரத் மைதானத்தில் நடைபெற இருந்தது. பந்தல் அலங்கரிக்கப்பட்டு விருந்தினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணமகன் அஸ்லமும் … Read more