அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்து விட்டதாக தகவல்!

அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பு தொடர்பான முக்கியக் கூட்டத்தை சீனா புறக்கணித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திபெத்தின் ஒரு அங்கமாக கூறி அருணாசல பிரதேசத்தை தங்களுக்கு சொந்தமான பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை. ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் 50 முக்கிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இடாநகரில் முக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. Source link

ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!

டெல்லி: ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை வழக்கம்போல் 11 மணிக்கு தொடங்கின. இரு அவைகளிலும் எதிர்க்கட்சி சார்ந்த எம்.பி.க்கள், ராகுல் காந்தி தகுதி நீக்கம்தொடர்பாக தங்களது கருத்துக்களை பேசவேண்டும். மேலும், அவையை ஒத்திவைத்து விட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும். நாடாளுமன்ற மக்களவையில் இருந்து ராகுல் காந்தி அரசியல் கால்புணர்ச்சி காரணமாக நீக்கப்பட்டுள்ளார் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். இது அரசியல் முக்கியத்துவம் … Read more

அம்ரித்பால் சிங் விவகாரம் – தேசிய பாதுகாப்பு சட்டத்தில் 7 பிரிவினைவாதிகள் கைது

சண்டிகர்: பஞ்சாப் போலீஸார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பொது அமைதியை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 353 பேரில் இதுவரை 197 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 40 பேர் கிரிமினல் குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (என்எஸ்ஏ) 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நிரபராதிகள் யாரும் துன்புறுத்தப்படுவதையோ அல்லது கைது செய்யப்படவில்லை என்பதையோ உறுதிசெய்ய வேண்டும் என மாநிலத்தின் அனைத்து மூத்த காவல்துறை … Read more

ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!

டெல்லி: ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பான வழக்கில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. 50 இடங்களில் ஒரே நாளில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அப்போது, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தராததற்கு சட்டம், ஒழுங்கு பிரச்னையை தவிர வேறு எதுவும் இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் முகுல் ரோஹத்கி உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதம் … Read more

சாலை விபத்துகள்: மக்களவை தலைவர் ஓம் பிர்லா கவலை

புதுடெல்லி: “டெல்லியில் நேற்று ‘சாலை பாதுகாப்பு’ என்ற கருப்பொருளின் கீழ் கார் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வைத் தொடங்கி வைத்த மக்களவை தலைவர் ஓம் பிர்லா சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அப்போது அவர் “இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 லட்சம்சாலை விபத்து நடப்பது கவலை அளிக்கிறது. இதில் 1.5 லட்சம் பேர்உயிரிழக்கின்றனர். குடும்பத்துக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் மிகப் பெரிய இழப்பு இது. விபத்துகள் குறித்து நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். மக்கள் … Read more

திருப்பதி டூ செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; இன்னும் 12 நாட்கள் மட்டுமே!

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இது பிரதமர் மோடியின் கனவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் இதற்கு ’Train 18’ எனப் பெயர் வைக்கப்பட்டது. அதன்பிறகு தேசத்தை பிரதிபலிக்கும் வகையில் ‘Vande Bharat Express’ என மாற்றம் செய்யப்பட்டது. இது முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பு இதன் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று … Read more

புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை: அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிய கட்டடங்களுக்கு சூரியஒளி மின்சாரம் கட்டாயம் அமைக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி திட்ட குழுமம் நிபந்தனைகளுடன் கட்டிட அனுமதி அளிக்கும் என அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

இந்தியாவில் 10,000-ஐ கடந்த அன்றாட கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 1,805 பேருக்கு தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த 134 நாட்களுக்குப் பின்னர் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,000- ஐ கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழை) ஒரே நாளில் 1,805 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 10,300 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு … Read more

காங்கிரஸூடன் கரம் கோர்க்க தயாராகும் மம்தா – மாறும் டெல்லி களம்

காங்கிரஸ் கட்சியின் வயநாடு தொகுதி எம்பியான ராகுல் காந்தி, அவதூறு வழக்கு ஒன்றில் சூரத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2 ஆண்டுகள் நீதிமன்றம் தண்டனை விதித்ததுடன், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் அனுமதி கொடுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி மக்களவை சபாநாயகரால் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கியுள்ளனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி தகுதி நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக … Read more

போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் 6 மணி நேரம் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வரும் 30ம் தேதி போபாலில் முப்படைத் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் சுமார் 6 மணி நேரம், நாட்டின் முன் உள்ள பாதுகாப்பு சவால்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். முப்படைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிவார். அனைத்து கமாண்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டம் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை போபாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முப்படைகளின் தலைவர் அனில் சவுகானும் பங்கேற்க உள்ளார். இதற்கிடையே பாதுகாப்புத் … Read more