தீவிரவாத வழக்குகள் உள்பட இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன்: லாகூர் உயர்நீதிமன்றம் வழங்கியது

லாகூர்: பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தற்போதைய ஆளும் அரசு கடந்த 11 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளது.  இதில் தோஷகானா பரிசு பொருள் வழக்கு மற்றும் பெண் நீதிபதியை மிரட்டிய வழக்குகளில் இம்ரான் நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகததால் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  இதில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக பிடிஐ … Read more

ராகுலுக்கு எதிராக மோடி-மம்தா ஒப்பந்தம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்சி கூட்டத்தில் பேசும்போது,, ‘‘ராகுல் காந்தியின் சமீபத்திய லண்டன் பேச்சு தொடர்பாக நாடாளுமன்றத்தை முடக்கி, அவரை எதிர்க்கட்சிகள் முகாமின் கதாநாயகனாக்க முயற்சிக்கின்றனர்’’ என்று பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு ரகசிய … Read more

புதிதாக 699 பேருக்கு கொரோனா: மேலும் 2 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: நாட்டில் புதிதாக 699 பேருக்கு கொரேனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் பலியாகி விட்டனர். இதுகுறித்து ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று காலை 8 மணி நிலவரப்படி, புதிதாக 699 பேருக்கு தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,599ஆக அதிகரித்துள்ளது.  கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தனர்.   தினசரி பாதிப்பு விகிதம் 0.71 சதவீதம், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.91 சதவீதம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. வீடுகளில் விரிசல்.. வீதிகளில் தஞ்சம் அடைந்த மக்கள்!

ஆப்கானிஸ்தானில் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக்கொண்டு 6.8 ரிக்டர் அளவிற்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இரவு நேரம் என்பதால் பெரும்பாலானோர் பணி முடித்துவிட்டு வீடுகளுக்கு திரும்பிய நிலையில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து அனைவரும் வீடுகளைவிட்டு வெளியேவந்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நில அதிர்வு அடங்கி எந்த பாதிப்புகளும் இல்லை என தெரிந்தபிறகே வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் … Read more

டெல்லி, உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் நில அதிர்வுகள்

டெல்லி: டெல்லி, உ.பி, பஞ்சாப், ஹரியானா மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் வடமாநிலங்களில் நிலஅதிர்வு உணரப்பட்டது எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து உணரப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. வடஇந்தியாவில் மட்டுமல்ல தஜிகிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது என ஐரோப்பிய நிலஅதிர்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் பெஷாவர் நகர் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதாக பாகிஸ்தானின் … Read more

டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

டெல்லி: டெல்லியில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து வீடுகளில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குழப்பம் ஏற்படுத்த பிஎஃப்ஐ சதி: குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பின் டெல்லி நிர்வாகிகள் மீதான வழக்கில் டெல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த 18-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த இந்த குற்றப்பத்திரிகையில் கூறியிருப்பதாவது: வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற பிஎஃப்ஐ இலக்கு நிர்ணயித்திருந்தது. இதற்காக அந்த அமைப்பு பல்வேறு வியூகங்களை வகுத்து, சதித் திட்டங்களையும் தீட்டியது. நாடு முழுவதும் வாழும் முஸ்லிம்களை ஒன்றுபடுத்த தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பிஎஃப்ஐ … Read more

என்கவுன்டர், புல்டோசர் நடவடிக்கையால் பீதி: ஐயா… இனிமே தப்பு செஞ்சா சுட்டுடுங்க! கழுத்தில் பதாகையுடன் சரணடைந்த பிரபல ரவுடி

லக்னோ: உயிர் பயத்தால் தலைமறைவாக இருந்த ரவுடி, காவல் நிலையத்தில் சரணடைந்தான். கழுத்தில் பதாகையுடன் சரணடைந்ததால் அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருவதும், கடுங் குற்றவாளிகளை என்கவுன்டரில் சுட்டுத் தள்ளுவதும், அவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து தள்ளுவதும் வாடிக்கையாக வைத்துள்ளார். இவரது இந்த நடவடிக்கையால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பீதியில் உறைந்துள்ளனர். அதேநேரம் முதல்வரின் … Read more

ஆதாருடன் பான் எண்ணை இணைக்கவில்லையா..? உங்களுக்கு இன்னும் 10 நாட்கள்தான் கெடு இருக்கு!

“ஆதாருடன் பான் கார்டை இணைப்பதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் வங்கி தொடங்கி, அனைத்துக்கும் ஆதார் கார்டு அவசியமானதாக உள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கவும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. குறிப்பாக, வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைக்காவிட்டால், பான் கார்டு ரத்து செய்யப்படும் என்று வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறு ஆதாருடன் இணைக்காதவர்கள், 2023, ஏப்ரல் 1ஆம் தேதி … Read more

தருமபுரி ராணுவ ஆராய்ச்சி மையம் தொடங்குவதை விரைவுபடுத்துங்கள்: மக்களவையில் திமுக எம்.பி. செந்தில்குமார் பேச்சு

புதுடெல்லி: தருமபுரியில் ராணுவ ஆராய்ச்சி மையம் துவக்கும் பணியை விரைவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இதை திமுக எம்.பி.யான டாக்டர்.டிஎன்வி.செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தினார். இது குறித்து தருமபுரி தொகுதியின் எம்.பி.,யான செந்தில்குமார் விதி எண் 377 கீழ் மக்களவையில் பேசியதாவது: ”தருமபுரி மாவட்டத்தில் ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் மூலம் அம்மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். இந்த ஆராய்ச்சி மையம் தொடங்க கடந்த 2010 முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் உத்தரவின் … Read more