வாக்கு வங்கிக்காக, சில கட்சிகள் மொழி பிரச்சனைகளை எழுப்புகின்றன்றன – பிரதமர் மோடி

அரசியல் சுயலாபம், வாக்கு வங்கிக்காக, சில கட்சிகள் மொழி பிரச்னைகளை எழுப்புவதாகவும், கிராமப்புற, ஏழை மாணவர்கள், மருத்துவர், பொறியாளராக உருவாவதை அவர்கள் விரும்புவதில்லை என்றும் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். கர்நாடகாவின் சிக்கபள்ளாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அனைவரது முயற்சியும், பங்களிப்புமே 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். முன்னதாக, பாரத ரத்னா விருதினை பெற்ற புகழ்பெற்ற பொறியாளரான விஸ்வேஸ்வரையாவின் … Read more

பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகள் மிசா பாரதி இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

பீகார்: பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத்தின் மகள் மிசா பாரதி இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே பணி நியமன ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக மிசா பாரதிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. லாலூபிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது பணி நியமனங்களில் முறைகேடு செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

“இரட்டை இன்ஜின் அரசை தக்கவைக்க கர்நாடக மக்கள் முடிவு செய்துவிட்டார்கள்” – பிரதமர் மோடி

கர்நாடகம், இரட்டை இன்ஜின் அரசை தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பரப்புரைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தாவணகரேவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கர்நாடக மக்கள், மத்தியிலும், மாநிலத்திலுமாக இயங்கும் இரட்டை இன்ஜின் அரசை தக்க வைத்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டார்கள் என்றார். சுயநலவாதிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் கொண்ட அரசால் நீண்டகாலமாக கர்நாடகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வந்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா குறித்தோ, கர்நாடகம் குறித்தோ எந்த முன்னேற்ற திட்டமும் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சியினருக்கு வெறும் பேச்சுதானே தவிரசெயலில் ஒன்றுமில்லை … Read more

ஓட்டுநர்களுக்கு நற்செய்தி… இனி சுங்கச்சாவடிகளில் நிற்கவே வேண்டாம் – 6 மாதத்தில் வரும் புது திட்டம்

டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கட்கரி, தற்போது நெடுஞ்சாலைகளில் செயல்பாட்டில் இருக்கும் சுங்கச்சாவடிகள் நீக்கம் குறித்து மீண்டும் ஒருமுறை அவர் பேசியுள்ளார். அதில்,”நாட்டில் தற்போதுள்ள நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக அடுத்த 6 மாதங்களில் ஜிபிஎஸ் அடிப்படையிலான கட்டண வசூல் அமைப்புகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் அறிமுகப்படுத்தும். இந்த புதிய தொழில்நுட்பம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படும். நாட்டில் … Read more

ரயில்வே பணிநியமன ஊழல் தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன்

பீகார்: ரயில்வே பணிநியமன ஊழல்தொடர்பாக இன்றுவிசாரணைக்கு ஆஜராக பீகார் துணைமுதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக தேஜஸ்வியின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ராகுல் பாணியில் ‘மோடி’ குறித்து 2018-ல் ட்வீட் செய்த குஷ்பு தன்னிலை விளக்கம்

சென்னை: கடந்த 2019-ல் மோடி சமூகம் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில், பாஜகவில் அங்கம் வகிக்கும் குஷ்பு, கடந்த 2018-ல் நீரவ் மோடி, லலித் மோடி, நமோ என்றால் ஊழல் என குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார். அது இப்போது பரவலாக கவனம் பெற்று வைரல் ஆனது. இந்நிலையில், அது குறித்து … Read more

வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே எம்.பி., எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்!!

புதுடெல்லி: வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே தகுதி நீக்கம் செய்ய பயன்படுத்தப்படும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 8(3)-ஐ ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரசாரத்தில், கர்நாடக மாநிலம் கோலாரில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளது எப்படி?’ என்று தெரிவித்தார்.இதை எதிர்த்து ராகுலுக்கு எதிராக குஜராத்தின் சூரத்தை சேர்ந்த பாஜ எம்எல்ஏ புர்னேஷ் … Read more

பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் இனி சுங்க கட்டணம் – எப்போது முதல் அமலுக்கு வரும்?

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறையை அடுத்த 6 மாதங்களில் செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தொழில்துறை அமைப்பான சிஐஐ நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியாவின் தற்போதிய சுங்க வருவாய் 40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் 1.40 லட்சம் கோடியாக உயரும் என தெரிவித்துள்ளார். மேலும், தானியங்கி நம்பர் பிளேட் … Read more

ராகுல் காந்தி அஞ்சமாட்டார் – பிரியங்கா காந்தி கருத்து

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது: எனது அண்ணன் ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க மத்திய அரசு சதி செய்கிறது. அவர் எதற்கும் அஞ்சமாட்டார். எப்போதும்போல உண்மையை பேசுவார். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார். எங்கள் தந்தை ராஜீவ் காந்தி நாட்டுக்காக உயிரை தியாகம் செய்தார்.அவரது மகனை துரோகி என்று குற்றம் சாட்டுகின்றனர். நாங்கள் காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒட்டு மொத்த பண்டிட் குடும்பத்தை அவமதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் … Read more

36 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் – 3 ராக்கெட்

36 இணைய தளசேவை செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் எல்.வி.எம். மார்க் – 3 ராக்கெட் ஞாயிற்றுக்கிழமையன்று விண்ணில் பாயும் நிலையில், அதற்கான 24 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 72 செயற்கைக்கோள்களை ஏவ, இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் படி கடந்த அக்டோபரில் 36 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டன. அதைத் தொடர்ந்து 2ஆவது கட்டமாக எஞ்சிய செயற்கைக்கோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளன. … Read more