சூரத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீ உயரமான குளிரூட்டும் கோபுரம் 7 நொடிக்குள் தகர்ப்பு..!

குஜராத்தின் சூரத்தில் மின் உற்பத்தி நிலையத்தில் பயன்பாட்டில் இல்லாத 85 மீட்டர் உயரம் கொண்ட குளிரூட்டும் கோபுரம் 220 கிலோ வெடிமருந்து வைத்து பாதுகாப்புடன் தகர்க்கப்பட்டது. புதிய கோபுரம் அமைக்கப்பட்டதால், சுமார் 30 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த கோபுரத்தை இடிக்க முடிவெடுத்த மின்சார வாரியம், வெடிமருந்துகளை கோபுரத்தின் பல்வேறு பகுதிகளில் பொருத்தி வெடிக்க வைத்தனர். 72 மீட்டர் விட்டமும், 85 மீட்டர் உயரமும் கொண்ட சிமென்ட் கான்கிரீட் கோபுரம் சுமார் 7 நொடிக்குள் பயங்கரமான சத்தத்துடன் தகர்ந்தது. … Read more

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8ம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தாம்பரம் – செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ள இடையேயான ரயில் சேவைகள் உள்ளிட்ட ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயண நேரத்தை பெரிதும் குறைப்பதால் பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். … Read more

மக்களவையில் கடும் அமளிக்கு இடையே ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் நிறைவேற்றம்

புதுடெல்லி: மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிகளுக்கு இடையில், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கான 2023 -2024-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் அமளிகளால் இன்றும் (செவ்வாய்க்கிழமை) இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிகளுக்கு இடையேயான அமளிகளால் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு தொடங்கியது முதல் முடக்கப்பட்டு வருகிறது. நேற்றைய நாள் முழுவதுமான முடக்கத்திற்கு பின்னர் இன்று காலை நாடாளுமன்றம் கூடியது. கேள்வி நேரத்துடன் தொடங்கிய மக்களவையில் அதானி … Read more

டெல்லி பட்ஜெட் நிறுத்தம்; மக்கள் மேல் என்ன வருத்தம்? பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்!

டெல்லியின் 2023-24 வது நிதியாண்டிற்கான பட்ஜெட் இன்று மார்ச் 21 அன்று டெல்லி சட்டசபையில் தாக்கல் செய்யவிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை டெல்லியின் பட்ஜெட் தாக்கலை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆம் ஆத்மி கட்சி விளம்பரங்களுக்காக எவ்வளவு செலவு செய்தார்கள் என்ற விவரத்தை கூறுமாறு கேட்டு இந்த பட்ஜெட்டை தள்ளிவைத்துள்ளனர். முக்கியமாக உள்கட்டமைப்பு செலவுகளை காட்டிலும் விளம்பர செலவுகள் ஏன் அதிகமாக இருக்கிறது என கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி … Read more

ஆன்லைன் சூதாட்டம்! சட்டம் இயற்ற மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது : மத்திய அரசு

Online Gambling Ban Law: ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழ்நாட்டில் தற்கொலைகள் தொடர்ந்து வரும் நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பி விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், இன்று மக்களவையில் மத்திய அமைச்சர் அளித்த விளக்கம் முக்கியமானதாக கருதப்படுகிறது. மக்களவையில் எம்.பி பார்த்திபன் அவர்கள் ஆன்லைன் சூதாட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் சிங் … Read more

விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 31-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு

டெல்லி: விமான படையில் அக்னி வீரராக சேர விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் வரும் 31-ம் தேதி வரை தங்களை பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை agnipathvayu.cdac.in இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் எழுத்து தேர்வு மே 20 முதல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அதே போல தற்போது … Read more

மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து 2 நாட்கள் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கத்திற்கு எதிரான மத்திய அரசின் பாகுபாட்டைக் கண்டித்து தலைநகர் கொல்கத்தாவில் வரும் 29-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை போராட்டம் நடத்த இருப்பதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இது தொடர்பாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, ”மேற்கு வங்கத்திற்கு எதிராக மத்திய அரசு பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. இதேபோல், … Read more

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை

டெல்லி: சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்.8-ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். தாம்பரம் – செங்கோட்டை, திருத்துறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ள இடையேயான ரயில் சேவைகள் உள்ளிட்ட ரூ.294 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.

ஷீலா பாணியில் கன்னய்யா குமாரை களமிறக்கும் காங்கிரஸ் – டெல்லி இளைஞர் பிரிவுத் தலைவராக்க திட்டம்

புதுடெல்லி: கட்சியின் இளம் தலைவர் கன்னய்யா குமாருக்கு டெல்லியில் முக்கியப் பதவியை அளிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைகழக (ஜேஎன்யு) மாணவர் பேரவையின் முன்னாள் தலைவரான இவரிடம் டெல்லி மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் தொடர்ந்து மூன்று முறை டெல்லியில் ஆட்சி செய்திருந்தது. இக்கட்சியிடம் இருந்து புதிதாகத் துவங்கிய ஆம் ஆத்மி கட்சியினால் டெல்லி ஆட்சி பறிக்கப்பட்டது. இதை மீட்க தொடர்ந்து … Read more

நாடாளுமன்ற முதல் தளத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்களுடன் திடீர் ஆலோசனை

புதுடெல்லி: ஆளுங்கட்சி – எதிர்கட்சி எம்பிக்களின் அமளியால் நாடாளுமன்றம் 6வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. ெதாடர்ந்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற முதல் தளத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதானி குழும விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை என்று எதிர்கட்சிகளும், லண்டனில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சிகளும் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இரண்டாவது அமர்வின் 6வது நாள் கூட்டம் இன்று தொடங்குவதற்கு முன், நாடாளுமன்ற … Read more