குஜராத் கடலோர பகுதியில் படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள 61 கிலோ போதைப்பொருள் பறிமுதல்; 5 பேர் கைது..!!

குஜராத்: குஜராத் கடலோர பகுதியில் படகில் இருந்து ரூ.500 கோடி மதிப்புள்ள 61 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது ஈரான் நாட்டினரின் படகில் சோதனை செய்யப்பட்டது. படகில் சோதனையிட்டபோது ரூ.500 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியதை அடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வயாகராவால் வந்த வினை… தோழியுடன் உல்லாசத்தில் இருந்தவர் மரணம்- திடுக் தகவல்

சமீபத்தில், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் 41 வயதான ஆண் ஒருவர், மது அருந்திவிட்டு இரண்டு வயாகரா மாத்திரைகளை உட்கொண்டதால் உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவ பத்திரிகை ஆய்வு மேற்கொண்டு அதை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வு முடிவில் அவரது உயிரிழந்ததற்கான காரணம் குறித்து முழு தகவல் வெளியாகியுள்ளது.  வயாகரா என்ற பிராண்டின் கீழ் விற்கப்படும் சில்டெனாஃபில் என்ற இரண்டு, 50 மில்லி கிராம் மாத்திரைகளை எடுத்துக் கொண்டபோது, அந்த நபர் ஒரு பெண்ணுடன் இருந்ததாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. … Read more

இந்திய பாதுகாப்பு நலன்கருதி சீன செல்போன்களை பயன்படுத்த வேண்டாம்: வீரர்களுக்கு உளவு அமைப்பு எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு நலன் கருதி சீன செல்போன்களை ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் பயன்படுத்த வேண்டாம் என்று உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியா – சீனா இடையிலான கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்திற்கு பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அருணாச்சலப்பிரதேசம் தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றனர். அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ ரீதியிலான பதற்றம் நிலவிவரும் … Read more

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஹோலி கொண்டாட்டம்..!

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பஞ்சாப்பில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். கசாவிலுள்ள எல்லைப்பாதுகாப்புப்படை தலைமையகத்தில் வீரர்கள் அனைவரும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.   ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள், ஆடல் பாடலுடன் உற்சாகமாக ஹோலி கொண்டாடினர். மேற்குவங்கத்தில் உள்ள இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியான ஃபுல்பாரியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லை பாதுகாப்புப் … Read more

பீகார் மாநிலம் கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழப்பு

பீகார்: கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குலர்வெத் கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் ஷெல் குண்டு பாய்ந்ததில் 3 பேர் பலியாகிய நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். பீகார் மாநிலம் கயா பகுதியில் இந்திய ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் மோர்டார் ஷெல் குண்டுகள் இலக்கு தவறி அங்குள்ள வீடு ஒன்றின் மீது பாய்ந்து வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு இளம் ஜோடி மற்றும் … Read more

நடனப்பெண் மீது பணமழை; காங்கிரஸ் உறுப்பினரின் ஜொள்ளு வீடியோ வைரல்.!

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் நடனப்பெண் மீது பணமழை பொழியும் வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளதால், தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. பாஜகவின் முக்கிய தலைவர்கள், ஒன்றிய அமைச்சர்கள் பொதுக்கூட்டங்கள், மக்கள் பேரணி உள்ளிட்ட பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்த … Read more

அடுக்குமாடிக் கட்டிடத்தில் இயங்கி வந்த வங்கி, அலுவலகம், கடைகளில் வேதியியல் பொருட்கள் வெடித்த விபத்தில் 17 பேர் பலி..!!

டாக்கா: வங்கதேசத் தலைநகர் டாக்காவிலுள்ள பழைய டாக்கா நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் 7 மாடிக் கட்டிடத்தில் வங்கி அலுவலகம், கடைகள், அலுவலகங்கள் இயங்கிவந்தன. இந்நிலையில் நேற்று மாலை கட்டிடப் பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்தனர். அங்கிருந்த இடிபாடுகளை அவர்கள் அகற்றி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த வெடிவிபத்தில் இதுவரை 17 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து … Read more

தெலங்கானா முதல்வரின் மகளுக்கு சம்மன்; ஒன்றிய அரசின் பலே மூவ்.!

டெல்லி மதுக் கொள்கை வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்க இயக்குனரகம் நாளை விசாரணை நடத்த உள்ளது. டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வருமானத்தை அதிகரிக்கவும், மதுபான விற்பனை நிலையங்களின் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், கள்ளச்சந்தை மற்றும் மாஃபியா ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் டெல்லியை 32 மண்டலங்களாகப் பிரித்து அதில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் 27 மதுபான விற்பனை கடைகள் வைக்கப்பட்டது. தனியார் பார்கள் … Read more

2 இதயம், 4 கைகள், 4 கால்களோடு பிறந்த அதிசய குழந்தை.. பிறந்து 20 நிமிடங்களில் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ரத்தங்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரண்டு இதயம், நான்கு கால்களுடன் ஒரு குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள கங்கா ராம் மருத்துவமனையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி 19 வயதுள்ள ஒரு கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அப்பெண்ணுக்கு அடுத்த சில மணி நேரத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பின் 20 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்த குழந்தை, பின்னர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் … Read more

கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் பலி

பீகார்: கயா பகுதியில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியில் ஷெல் குண்டு வீட்டுக்குள் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர். குலர்வெத் கிராமத்தில் உள்ள வீட்டுக்குள் ஷெல் குண்டு பாய்ந்ததில் 3 பேர் பலியாகிய நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.