அரசு பங்களாவை காலி செய்ய ராகுலுக்கு ஒரு மாதம் கெடு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பிரதமர் மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக கூறி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. விதிகளின் படி, 2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் தண்டனை பெற்றால் மக்கள் பணிகளில் ஈடுபட முடியாது என்பதால், ராகுல்காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதனால் தற்போது அவர் வசித்து வரும் அரசு பங்களாவில் ெதாடந்து வசிக்க முடியாது. அதன்படி, … Read more

சிறை நிரப்பும் போராட்டம் நடத்த காங்கிரஸ் தலைவர்கள் திட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் நேற்று கூறியதாவது: முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி, ராகுல் காந்தி குறித்து பாஜக தலைவர்கள் மிக மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர். இப்போது வரை விமர்சனம் தொடர்கிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் தரப்பில் அவதூறு வழக்குகள் தொடரப்படவில்லை. ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து 2 ஆண்டுகள் சிறை … Read more

‘ராகுல் காந்திக்கு இது அதிகம்..’ – வாஜ்பாயை மேற்கோள் காட்டிய பிரசாந்த் கிஷோர்.!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருப்பது அதிகம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், கடந்த காலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தலில் பணியாற்றியுள்ளார். பாஜக முதல் முறை ஆட்சி அமைத்த பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்ற 2014 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு சார்பாக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அதுவரை குஜராத் தவிர்த்த மற்ற மாநிலங்களுக்கு … Read more

மாநில அரசு ஊழியர்களுக்கும் வந்தது நற்செய்தி… அகவிலைப்படி உயர்வு!

DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக நேற்று அறிவித்தது. மேலும், ஜனவரி 1, 2023 முதல் செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.  இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை ஒப்புதல் “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை … Read more

சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரம்; சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல்: நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி: சிறை தண்டனை பெற்ற எம்பி, எம்எல்ஏக்களை உடனடியாக தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு மீதான விசாரணை நாளை மறுநாள் நடைபெறுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் சட்ட மேலவை உறுப்பினர்களில் யாரேனும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றால், அவர்கள் உறுப்பினர் தகுதியை இழப்பது பற்றி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவில் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த சட்டப் பிரிவுகளின்படி, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கடன் பிரச்சினையால் திவால் ஆனதாக … Read more

ரஃபேல் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் மாறாத ராகுல் காந்தி

புதுடெல்லி: ரஃபேல் வழக்கின் தீர்ப்பு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரித்தும் ராகுல் காந்தி மாறவில்லை. அதன் காரணமாகவே இப்போது அவர் எம்பி பதவியை இழந்திருக்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 2019 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், நாட்டுக்கு சேவை செய்ய மக்களின் காவலாளியாக இருக்கிறேன். ஊழல், அசுத்தம், சமூக கொடுமைகளை எதிர்த்துப் போராடும் அனைவரும் காவலாளிதான்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. … Read more

இரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்று மோசடி..? பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன் ஆஜர்

இரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்று மோசடி செய்த வழக்கு விசாரணைக்காக, பீகார் துணைமுதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சிபிஐ முன்பும், அவரது சகோதரியும், ராஸ்டிரிய ஜனதா தள கட்சி எம்.பி-யுமான மிசா பாரதி அமலாக்கதுறை முன்பும் ஆஜராகினர். இதுவரை 3 முறை சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், இந்த மாத விசாரணையின் போது தேஜஸ்வியை, கைது செய்யமாட்டோம் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் விசாரணைக்கு ஆஜரானார். இதே வழக்கு விசாரணைக்காக, தேஜஸ்வியின் … Read more

கர்நாடகா சட்டசபை தேர்தல் 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது: மாஜி முதல்வர் வருணா தொகுதியில் போட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர். ஆளும் பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்களில் பங்கேற்று மக்கள் ஆதரவை திரட்டி வருகின்றனர். அதேபோல் … Read more

வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்: பிரதமர் மோடி ஏப்ரலில் தொடங்கி வைக்கிறார்

புதுடெல்லி: வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட அதிநவீன விரைவு ரயிலை ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ரயில்வே அமைச்சகம் கடந்த 2019-ல் அறிமுகம் செய்தது. இதன் முதல் சேவையை, புதுடெல்லி – வாரணாசி இடையே பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2019-ல் தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் தற்போது 10 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு … Read more

எம்.பி, எம்.எல்.ஏ பதவி பறிக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு

எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பதவியை தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(3)- ஐ எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்களை தன்னிச்சையாக தகுதிநீக்கம் செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 8(3), அதிகாரத்தை மீறிய ஷரத்து என்றும், இது எம்.பி, எம்.எல்.ஏ-க்களின் பேச்சு சுதந்திரத்தை குறைப்பதுடன், அவர்களின் கடமையை தடுக்கும் வகையில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும், கடந்த 2013-ல்  உச்சநீதிமன்றத்தால் சட்டப்பிரிவு 8(4) ரத்து … Read more