கேரளத்தில் 15 மாத குழந்தையின் சிகிச்சைக்கு அடையாளம் தெரியாத நபர் ரூ.11 கோடி நன்கொடை..!!

திருவனந்தபுரம்: கேரளத்தில் 15 மாத குழந்தையின் சிகிச்சைக்கு அடையாளம் தெரியாத நபர் ரூ.11 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். எர்ணாகுளம் செங்கமநாட்டை சேர்ந்த சாரங், அதிதி தம்பதியின் குழந்தைக்கு முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோய் ஏற்பட்டது. குழந்தையின் சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்து மருந்து வரவழைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இருந்து மருந்தை வரவழைத்து சிகிச்சை அளிக்க ரூ.17.4 கோடி செலவாகும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த சாரங் – அதிதி … Read more

இந்தியாவில் 1.2 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்ட போதிலும் இன்னும் 1.2 லட்சம் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.1.13 லட்சம் கோடியைமத்திய அரசு ஒதுக்கியுள்ளது. முந்தைய 2022-23-ம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் பள்ளி மற்றும்உயர்கல்விக்கான திட்டமிடப்பட்டசெலவினம் சுமார் 8.3 சதவீதம்அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்த நாம் இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருப்பதை சமீபத்திய … Read more

டெல்லி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்

டெல்லி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா நிறுவன ஊழியர்களுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மும்பைக்கு செல்லவேண்டிய விமானம் தாமதத்தால் நள்ளிரவில் ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்றிரவு 8 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் 4 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.40 மணிக்கு புறப்பட்டு மும்பை சென்றது.

பாஜக ஆட்சியில் வடகிழக்கில் வன்முறை 70% குறைந்தது – மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

கொஹிமா: நாகாலாந்து சட்டப்பேரவைக்கு வரும் 27-ம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாகாலாந்தின் துன்சாங் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: நாகா அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள முயற்சி பலனளிக்கும் என நம்புகிறேன். கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சி மற்றும் உரிமைகள் தொடர்பாக சில சிக்கல்கள் உள்ளன. … Read more

“ககன்யான் திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள்” – மத்திய அமைச்சர்

இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் முதற்கட்டமாக நடப்பாண்டின் பிற்பகுதியில் இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்று காரணமாக ககன்யான் திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகள் தாமதமாகி விட்டதாகக் குறிப்பிட்டார். நடப்பாண்டின் இரண்டாம் பகுதியில் ககன்யான் திட்டத்தின் இரண்டு தொடக்கப்பணிகள் நடக்கும் என்று குறிப்பிட்ட அவர், முதற்கட்டமாக ஆளில்லா விண்கலமும், இரண்டாம் கட்டமாக வியோமித்ரா என்ற ரோபோவும் அனுப்பப்படும் என்று தெரிவித்தார். ககன்யான் ராக்கெட் புறப்பட்ட … Read more

ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அவசர தரையிறக்கம்

டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நுவார்க் நகரில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 300 பயணிகளுடன் டெல்லி வந்துகொண்டிருந்த விமானம் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு பாராட்டு – இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரிக்கிறது – பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

புதுடெல்லி: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இந்திய வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “சர்வதேச அரங்கில் இந்தியா மீதான நன்மதிப்பு அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார். கடந்த 6-ம் தேதி துருக்கி, சிரியாவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இருநாடுகளிலும் இதுவரை 48,000 பேர் உயிரிழந்துள்ளனர். 1.22 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில் இருந்து தேசியபேரிடர் மீட்புப் படை வீரர்கள்,ராணுவ மருத்துவக் குழுக்கள் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த … Read more

மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து

மும்பை : மும்பை, தாராவி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 3 மணி நேர போராட்டத்துக்குப் பின்தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை தோற்கடிக்க முடியும் – ராகுல் காந்தி கருத்து

புதுடெல்லி: இத்தாலியை சேர்ந்த முன்னணி நாளிதழான கூரியர் டெல்லா சீராவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பாசிசம் இருக்கிறது. ஜனநாயக அமைப்பு கள் சீர்குலைக்கப்படுகின்றன. அனைத்து அரசு துறைகளிலும்ஆர்எஸ்எஸ் ஊடுருவுகிறது. நாடாளுமன்றம் செயல்படவில்லை. அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசமுடியவில்லை. கருத்து சுதந்திரம்,பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. வறுமை, கல்வியறிவின்மை, பணவீக்கம் உள்ளிட்ட உண்மையான பிரச்சினைகளை பாஜக அரசு மூடி மறைக்கிறது. கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் … Read more

ஜார்கண்ட் ஊரக வளர்ச்சி துறை முறைகேடு நாடு முழுவதும் 20 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு

புதுடெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரக வளர்ச்சி துறையில் அரசு பணியை வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த பணமோசடியில் தொடர்புடைய ஊரக மேம்பாட்டு துறை அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் மற்றும் டெல்லி உட்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.