இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டு அதிகரித்த மின்சார வாகனங்களின் விற்பனை.!

இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை 28 விழுக்காடு அதிகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2022 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 248 மின்சார வாகனங்கள் விற்பனையாகியுள்ளன என்றும் அவற்றில் பெரும்பாலானவை இருசக்கர வாகனங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பேட்டரியில் இயங்கும் 9 வகையான இருசக்கர வாகனங்கள், 6 வகையான மூன்று சக்கர வாகனங்கள், 5 வகையான … Read more

மதிப்பெண் சான்று வழங்காமல் இழுத்தடிப்பு: கல்லூரி பெண் முதல்வரை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய முன்னாள் மாணவர்.! 80% தீக்காயம் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை

இந்தூர்: மத்தியபிரதேசத்தில் மதிப்பெண் சான்று வழங்காமல் இழுத்தடித்ததால் கல்லூரி பெண் முதல்வர் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்திய முன்னாள் மாணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பீமா கல்லூரியின் முன்னாள் மாணவர் அசுதோஷ் வஸ்தவா என்பவர், தனது மதிப்பெண் பட்டியலை வாங்குவதற்காக கல்லூரிக்கு சென்றார். ஆனால் அவரது மதிப்பெண் சான்றிதழை கல்லூரி நிர்வாகம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அசுதோஷ் வஸ்தவா கையில் பெட்ரோல் கேனுடன் சென்று, … Read more

ஒரேஒரு பதிவில் ஒட்டுமொத்த கர்நாடகாவை அலறவிட்ட பெண் அதிகாரி! யார் இந்த ”ரூபா ஐபிஎஸ்”?

கர்நாடகாவில் இரண்டு பெண் குடிமைப் பணியாளர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ள மோதல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி டி.ரூபாவுக்கும், ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், கர்நாடக அரசியலையும் தாண்டி பலரையும் கவலைகொள்ளச் செய்தது. கர்நாடகாவில் பெண் குடிமைப் பணியாளர்கள் மோதல் அறநிலையத்துறை ஆணையரான ரோகிணி ஐஏஎஸ் அதிகாரி, அவருடைய தனிப்பட்ட புகைப்படங்களை மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருப்பதாக ஐபிஎஸ் அதிகாரியான ரூபா, தெரிவித்திருப்பதுதான் இந்த சலசலப்புக்குக் … Read more

“இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை மனித நலனுக்கே” – பிரதமர் மோடி

புதுடெல்லி: “இந்தியாவின் முதன்மையான முன்னுரிமை மனித நலனுக்கே” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவும் பணியில் நேரடியாக பங்கு பெற்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விமானப் படையினர் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: “உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் நமது கலாச்சாரம். உலகில் எங்கெல்லாம் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் உடனடியாகச் சென்று உதவுவதே நமது முதன்மையான முன்னுரிமை. I will … Read more

பழைய பர்னிச்சர்களை வரதட்சணையாக கொடுக்க முயன்றதாகக் கூறி திருமணத்தை நிறுத்திய மணமகன்..!

தெலுங்கானாவில் பழைய ஃபர்னிச்சர்களை வரதட்சணையாக கொடுக்க முயன்றதாகக் கூறி, கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் மீது மணப்பெண் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, மணப்பெண்ணின் உறவினர் மண்டபத்தில் காத்திருந்த நிலையில், மணமகன் வரவில்லை. காரணம் கேட்டபோது, அவர்கள் தன்னை அவதூறாகப் பேசியதாகவும் வரதட்சணையாகக் கொடுக்க கொண்டுவரப்பட்டிருக்கும் பர்னிச்சர்கள் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பர்னிச்சர்கள் என்றும் கூறி, திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் பெண்ணின் தந்தை போலீசில் புகாரளித்தார். இதனையடுத்து மணமகன் … Read more

வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கேரள அரசின் பிரதிநிதியை நியமிக்க ஆணை

கேரளா: வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கேரள அரசின் பிரதிநிதியை நியமிக்க ஆணையிட்டுள்ளனர். கேரள அரசின் பிரதிநிதியை நியமித்து மார்ச் 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. வனத்துறை, மின்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து அபாயகரமான மின்வேலிகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். 

டிராக்டர் டயருக்கு காற்று நிரப்பும்போது டயர் டியூப் வெடித்து தூக்கி வீசப்பட்டு கடை ஊழியர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டத்தில் டிராக்டர் டயருக்கு காற்று நிரப்பும்போது, டயர் டியூப் வெடித்ததில் தூக்கி வீசப்பட்ட நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தொடர்பான காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மயிலவரம் பகுதியில் இயங்கி வரும் டயர் பஞ்சர் பார்க்கும் கடை ஊழியர் அன்வர் காலை டயருக்கு காற்று நிரப்பிக் கொண்டிருந்த போது எதிர்ப்பாராத விதமாக டயர் திடீரென வெடித்துள்ளது. இதுகுறித்து என்.டி.ஆர் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source link

பாலக்காடு பகவதி அம்மன் கோயில் தாலப்பொலி திருவிழா: 15 யானைகளுடன் பஞ்சவாத்தியம்

பாலக்காடு: பாலக்காடு அருகே எளவாதுக்கல் பகவதி அம்மன் கோயில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடந்தது. கேரள மாநிலம் பாலக்காடு திருத்தாலா அருகே எளவாதுக்கல் பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் தாலப்பொலி திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்றது. கோயில் வளாக மைதானத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் 15 யானைகளுடன் பஞ்சவாத்தியம் முழங்க உலா வந்த அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் ஊர்வலத்தில் கேரளாவின் பாரம்பரியமான கலைஞர்களின் நாட்டியங்கள், பூக்காவடி, தையம், குதிரை, காளை உருவப்பொம்மைகள் ஆகியவை … Read more

இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், முக்கிய தகவல் வெளியீடு

Free Ration Update: ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும். மேலும் இந்த ரேஷன் விநியோகம் பிப்ரவரி 20 முதல் தொடங்கி பிப்ரவரி 28 வரை நடைபெறும். இதனுடன், NFSA இன் கீழ் இந்த ஆண்டு முழுவதும் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகமும் மீண்டும் வழங்கப்படும். ஏழை மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க, NFSA-ன் கீழ் ஆண்டு முழுவதும் … Read more

சென்னை விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஐதராபாத்தில் பரபரப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் இருந்து ெசன்னை புறப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலையடுத்து, அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று சென்னை புறப்பட தயாரான விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, ஐதராபாத் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. வெடிகுண்டு மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்து, அந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரையும் விமான நிலைய பாதுகாப்புப் படையினர் வெளியேற்றினர். தொடர்ந்து அந்த விமானத்தை சோதனை … Read more