அவசர சட்டத்தை ஆதரித்திருந்தால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்பியிருக்கும்

புதுடெல்லி: கடந்த 2013-ம் ஆண்டில் வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. அவருக்கும் உதவும் வகையில் அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி … Read more

ராகுலுக்கு பதில் பிரியங்கா: காங்கிரஸ் பக்கா பிளான் – அந்த மோடியா இந்த லேடியா?

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக கூறி நடைபெற்ற வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதே சமயம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக 30 நாட்களுக்கு தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு வெளியான நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நேற்று அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951) பிரிவு 8-இன் … Read more

திருப்பதிக்கு பிளானிங்கா? ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் இருக்கிறது. சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே புக் செய்து கொள்ள முடியும்.  இந்த நிலையில் திருப்பதி … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

''தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்'' – ராகுல் காந்தி

புதுடெல்லி: அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்.பி.பதவியை இழந்துவிட்டதாக மக்களவை செயலர் நேற்று (மார்ச் 24) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பதவி இழப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டில் ஜனநாயகம் … Read more

Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' – கெத்தாக சொன்ன ராகுல் காந்தி

Rahul Gandhi On Disqualification: 2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில், குஜராத் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றதற்காக, மக்களவையில் இருந்து ராகுல் காந்தி நேற்று (மார்ச் 24) தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இந்நிலையில், ராகுல் காந்தி இன்று (மார்ச் 25) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். ராணுவம், விமானத்துறை தொடர்பனா குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடனே வைத்து வருகிறேன். ஜனநாயகம் குறித்து … Read more

இந்தியாவிற்கு எதிராக பேசவில்லை.. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.. கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன் – ராகுல்

  அவதூறு வழக்கில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு எனது லண்டன் பேச்சு குறித்து, நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர் – ராகுல் அதானியுடன், குஜராத் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இருந்து மோடி நட்பு பாராட்டி வருகிறார் – ராகுல் எந்த நடவடிக்கையை கண்டும் அஞ்சப்போவதில்லை; தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்பேன் – ராகுல் லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்புக் கேட்க பாஜகவினர் கோரினர்; அதுபற்றி … Read more

36 செயற்கைகோளுடன் LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது!!!

பெங்களூரு : LVM3-M2 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள நிலையில், அதற்கான 24 மணிநேர கவுன்ட்டவுன் தொடங்கியது. நம் நாட்டுக்கு தேவையான செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் மூலம் விண்ணில்நிலைநிறுத்துகிறது. இதில் வணிகரீதியான செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமே விண்ணில் ஏவப்பட்டன.பிஎஸ்எல்வி ராக்கெட்டில் அதிகபட்சம் 1,750 கிலோ வரை மட்டுமே செயற்கைக்கோள்களை ஏவ முடியும். ஆனால், ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 4,000 கிலோ வரை … Read more

“ராகுல் காந்தி தகுதி நீக்கம் முழுக்க முழுக்க சட்டப்படி நடந்தது”– எல்.முருகன் கருத்து

“தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்ற வேண்டும்” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இன்று காலை திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டார். விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்ட அவருக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோயில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். இதைத் தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு … Read more

குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை.அடுத்து, சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ”மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3)ன்படி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி, தீர்ப்பு வந்ததும் தானாகவே … Read more