சிகரெட் தர மறுத்த நபர் மீது கொடூர தாக்குதல்!!

டெல்லியில் சிகரெட் தர மறுத்த பன்னாட்டு நிறுவன ஊழியர் மீது இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்குதல் நடத்தியது சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வார்கா பகுதியைச் சேர்ந்த சௌரவ் வர்டாக் என்பவர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் அண்மையில் தனது அலுவலகம் அருகே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நண்பர்களுடன் வந்த பவன் என்பவர் தனக்கு ஒரு சிகரெட் தருமாறு சௌரவிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சிககெட் தரவில்லை. இதனால் இருவருக்கும் இடையே … Read more

நாடு முன்னேற்றம் அடைய தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நாடு விரைவான முன்னேற்றத்தை காண தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். “வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நிதிச் சேவைகளின் செயல் திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான இணையவழிக் கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த 9 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை அம்சங்களை வலுப்படுத்த அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முயற்சிகள் பாராட்டுதலுக்குரியது. ஏனெனில், உலக நாடுகள் இந்தியாவை சந்தேக கண் … Read more

இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க ஐ.எம்.எப் முடிவு..!

இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டாலர் கடனுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை கோரிய கடனுதவி நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், வரும் 20ம் தேதி ஐ.எம்.எப் வாரியக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இலங்கைக்கு கடனுதவிக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தியாவைப் போல் சீனாவும் இலங்கைக்கு கடனுதவி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு, எரிபொருள், மருந்துகள் உள்ளிட்டவை போதிய அளவு கிடைக்காமல் கடந்த 6 … Read more

செயலிழந்த செயற்கைகோள் வெற்றிகரமாக அழிப்பு

புதுடெல்லி:  இஸ்ரோ, பிரான்ஸ் விண்வெளி ஆய்வு மையம் இணைந்து கடந்த 2011ல் மேகா டிரோபிகியூஸ் -1 (எம்டி-1) செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பின. 3 ஆண்டு ஆயுட்காலத்துடன் வானிலையை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள் 10 ஆண்டுகள் வெற்றிகரமாக செயல்பட்டது. 2021ல் செயலிழந்த 1000 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளை, விண்வெளியிலிருந்து அப்புறப்படுத்தும் வகையில், பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்ப கொண்டு வந்து அழிக்கும் கடின பணியை இஸ்ரோ நேற்று மேற்கொண்டது. திட்டமிட்டபடி நேற்று மாலை பசிபிக் … Read more

6% இந்திய நிறுவனங்கள் பசுமை விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை

புதுடெல்லி: இந்தியாவில் 6%-க்கும் அதிகமான அல்லது 4,40,989 நிறுவனங்கள் அடிப்படை பசுமை விதிகளைக்கூட கடைபிடிப்பதில்லை. பசுமை விதிகளை முறையாக கடைபிடிக்காத நிறுவனங்கள் மீது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அபராதங்களை விதிக்கிறது. சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கையில் பஞ்சாப் மாநிலம் (6,293)முதலிடத்தில் உள்ளது. அதனைத்தொடர்ந்து குஜராத் (4,605), ராஜஸ்தான் (3,796), மகாராஷ்டிரா (3,043), ஜார்க்கண்ட் (1,760 நிறுவனங்கள்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. ரசாயனம், சிமெண்ட் உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வரும் 34 நிறுவனங்களுக்கு ரூ.13.4 கோடிக்கு … Read more

திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக இன்று பதவியேற்கிறார் மாணிக் சாஹா.!

திரிபுரா முதலமைச்சராக 2வது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்கிறார். 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. மாநில கட்சியான திரிபுரா மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தலில் களம் கண்ட பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐ.பி.எஃப்.டி ஓரிடத்திலும் வென்றன. இதையடுத்து, பாஜக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், மாணிக் சாஹா முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகர்தலாவில் இன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக … Read more

ஊழலுக்கு எதிராக பேசும் தகுதி இல்லை நாட்டிற்கு சேவையாற்றியவர்களை சிறையில் அடைத்துள்ளார் மோடி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:   டெல்லியில் சுகாதாரம், கல்வித் துறைகள் கடந்த 65 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன. ஆனால்  சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் தங்கள் கடின உழைப்பால் அனைத்தையும் மாற்றி ஏழைகளுக்கு தரமான கல்வி, மருத்துவம் வழங்குவதை உறுதி செய்தனர். ஆனால் பிரதமர் மோடி,  நாட்டிற்கு நல்ல பணி செய்த சிசோடியா, ஜெயின் ஆகியோரை சிறையில் அடைத்துள்ளார். அதே நேரத்தில் நாட்டை கொள்ளையடிப்பவர்கள் அரவணைக்கப்படுகிறார்கள். சிசோடியா, ஜெயின் சிறையில் இருப்பது பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்கள் … Read more

உண்மையிலேயே பெண் என்பவள் ஆணை விட பலவீனமானவளா.. ?

இன்று மார்ச் 8 – சர்வேதேச மகளிர் தினம்… நாம் ஆண்டுதோறும் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம் துவங்கியதெல்லாம் 1913-ல் இருந்து தான். பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள் தனக்கான சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். சரி, பெண்கள் உண்மையிலேயே சுதந்திர உணர்வோடு தான் வாழ்கிறார்களா என்று கேட்டால், அதற்கு எப்போதும் பதில் பெரிய கேள்விக் குறி தான்? ஏன் அப்படி? பெண் என்பவள் ஆணை விட பலவீனமாவள் என்ற கருத்து எப்போதும் … Read more

ஊழல் வழக்கில் லாலுவிடம் சிபிஐ விசாரணை – எதிர்க்கட்சிகள் விமர்சனம்

புதுடெல்லி: கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ரயில்வேயில் வேலைபெறுவதற்காக பலர் அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலுவிடம் நிலங்களை கொடுத்ததாகவும் அல்லது குறைந்த விலைக்கு விற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக பிஹார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் பாட்னாவில் நேற்று முன்தினம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக லாலு பிரசாத்திடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை … Read more

நாகலாந்து, மேகாலயாவில் பா.ஜ கூட்டணி அரசுகள் பதவி ஏற்பு: கன்ராட் சங்மா, நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வரானார்கள் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு

ஷில்லாங்: நாகலாந்து, மேகாலயாவில் பா.ஜ கூட்டணி அரசு நேற்று பதவி ஏற்றது. மேகாலயாவில் கன்ராட் சங்மாவும், நாகலாந்தில் மீண்டும் நெய்பியூ ரியோவும் முதல்வராக பதவி ஏற்றனர். மேகாலயா,  நாகலாந்து, திரிபுராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில்,  மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 26 தொகுதிகளை ஆளும் தேசிய மக்கள்  கட்சி கைப்பற்றியது. பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், பாஜ உள்ளிட்ட  பிற கட்சிகள் முதல்வர் கான்ராட்  சங்மாவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால்,  பாஜவின் இரண்டு எம்எம்ஏக்கள்  உள்பட … Read more