குட்கா தடையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு ஏப்.14க்கு ஒத்திவைப்பு..!!

டெல்லி: குட்கா தடையை ரத்து செய்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மனு ஏப்.14க்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை ஒத்திவைக்கக் கோரி ஏற்கனவே புகையிலை நிறுவனங்கள் கடிதம் கொடுத்ததால் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு ஒத்திவைப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2018 மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர். இதன் பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்நிலையில் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் உள்ள … Read more

தகுதி நீக்கத்தை அடுத்து அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்

டெல்லி: அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்ற தீர்ப்பையடுத்து வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தி 2005ம் ஆண்டு முதல் வசித்துவரும் துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி மக்களவை வீட்டுக் குழுவில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் … Read more

கொரோனா 7 நாளில் 78% அதிகரிப்பு: நாடு முழுவதும் ஏப். 10, 11ல் தடுப்பு ஒத்திகை

புதுடெல்லி: கடந்த 7 நாளில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், வரும் ஏப். 10, 11ம் தேதியில் கொரோனா தடுப்பு ஒத்திகைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரபடி புதியதாக 1,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த பாதிப்பானது கடந்த 210 நாட்களில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாகும். கடந்த ஏழு நாட்களில் ஏற்பட்ட பாதிப்புகளின்படி … Read more

டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ஏப்ரல் 22ம் தேதிக்குள் காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ்..!

டெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி, கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையானது. மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த பேச்சு சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் அமைந்ததாக கூறி குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தில் பாஜ எம்எல்ஏ புர்னேஷ் மோடி, ராகுல் … Read more

”உங்கள் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” – கலாஷேத்ரா நிறுவனத்துக்கு டி.எம்.கிருஷ்ணா கடிதம்!

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கலாஷேத்ரா நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏமாற்றமளிப்பதாகவும், புகாரின் முக்கியத்துவம் கருதாமல் நிர்வாகம் நடந்துகொண்டுள்ளதாகவும், அந்நிறுவனத்தின் சேர்மன் ராமதுரைக்கு பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம்.கிருஷ்ணா கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கலாஷேத்ரா அறக்கட்டளையின் மூத்த ஆசிரியர் ஒருவர் மீது அங்கு படிக்கும் மாணவர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ’கேர் ஸ்பேஸ்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துப் பேசியபோதுதான் … Read more

அரசு இல்லத்தை காலி செய்ய நோட்டிஸ்; ராகுலுக்கு மேலும் ஒரு சிக்கல்.!

காங்கிரஸின் ராகுல் காந்தி கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் தங்கியுள்ள தனது துக்ளக் லேன் பங்களாவை காலி செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அரசு இல்லத்தில் இருந்து வெளியேற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றார்கள் என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து அவர் மீது குஜராத் முன்னாள் அமைச்சர் … Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் ஐகோர்ட்டில் நாளை தீர்ப்பு வழங்குகிறது. அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலை எதிர்த்தும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கம் செய்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் நீதிபதி குமரேஷ்பாபு முன்பு கடந்த 22ம் தேதி விசாரணைக்கு வந்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், மனோஜ்பாண்டியன் … Read more

அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு? – PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா?

அதானி குழுமத்தில் செய்துள்ள முதலீடுகளால் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்பதால் PF சேமிப்பிற்கான வட்டி குறையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இந்தியாவில் உள்ள 27.73 கோடி ஊழியர்களின் பி.எப் சேமிப்பு பணத்தை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நிர்வகித்து வருகிறது. அந்த தொகையில் ரூ.1.57 லட்சம் கோடி அளவுக்கு ஷேர் மார்க்கெட் (ETF ) வழியாக முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் ரூ.8,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது. அதானி நிறுவன பங்குகளில் … Read more

திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல்: ரூ.1.14 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி

திருமலை: திருப்பதி உண்டியலில் செலுத்தப்படும் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்வதற்கு வங்கி நிர்வாகம் தடை விதித்ததால் 26 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஒன்றிய அரசு 3 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதும் அம்பலமாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,450 கோடி உண்டியல் … Read more