பா.ஜ.க எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு…!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக குறித்து பேசிய ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா மீது பாஜக மாநில பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான மதன் திலாவர் தனது ஆதரவாளர்களுடன் கோட்டாவில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுத்ததாக குற்றம்சாட்டி திலாவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மஹாவீர் நகர் காவல்நிலையத்தின் பிரதான வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டடனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு இந்த … Read more

2024 மக்களவைத் தேர்தலுக்கு உருவாக்கப்படும் புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை: அகிலேஷ் யாதவ் சூசகம்

புதுடெல்லி: புதிய எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸுக்கு இடமில்லை என சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்தார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்யாதவ், சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தாவை கொல்கத்தாவில் சந்தித்து பேசினார். காங்கிரஸ் இன்றி புதிய எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்க அவர் சம்மதம் தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ரே பரேலி தொகுதியிலும்.. காங்கிரஸ் தேசிய கட்சி. நாங்கள் மாநில கட்சிகள். மிக பழமையான கட்சியான காங்கிரஸ், தனது செயல்பாடு குறித்து … Read more

பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா: இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை

டெல்லி: ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இன்று காலை தலைநகர் டெல்லி வந்தார். அவரை ஒன்றிய அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, சர்வதேச சவால்களை எதிர்கொள்ளுதல், இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு  திட்டங்கள், உறவுகள், இந்தோ-பசிபிக் தொடர்பான புதிய திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர். பிரதமர் கிஷிதாவிடம் நமது ஜி20 தலைவர் பதவிக்கான முன்னுரிமைகள் பற்றி விரிவாக கூறினேன். நமது G20 ஜனாதிபதி பதவியின் முக்கியமான … Read more

இந்திய ஜனநாயகத்தில் தலையிட வெளிநாடுகளை அழைக்கும் ராகுல் செயல் வெட்கக்கேடானது: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தாக்கு

புதுடெல்லி: இந்திய ஜனநாயகத்தில் தலையிட வெளிநாடுகளுக்கு ராகுல் அழைப்பு விடுத்தது மிகவும் வெட்கக்கேடான செயல் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்தார். சென்னையில் பாஜக கட்சியின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் ‘தேசிய இளைஞர் நாடாளுமன்றத்தை’ தொடங்கி வைத்த பிறகு காணொலி காட்சி மூலம் ஜே.பி.நட்டா பேசியதாவது: அந்நிய மண்ணில் இந்திய ஜனநாயகத்தின் விழுமியங்களை அவமானப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் செயல் ஏற்க முடியாதது. … Read more

முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல்

டெல்லி: முல்லை பெரியாறு அணை தொடர்பாக ஒன்றிய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. வரும் 28-ம் தேதி அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடத்தப்படும் என நிலை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு கடந்த ஜனவரி 12-ல் அணை பாதுகாப்பு குழு தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் அணை பாதுகாப்பு தொடர்பாக 16-வது கூட்டத்தை கூட்ட ஏதுவான தேதிகளை அளிக்குமாறு கோரியிருந்தார். கேரள எல்லையில் இருக்கும் முல்லை … Read more

2034-ம் ஆண்டுக்குள் உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33% ஆக இருக்கும்: அமித் ஷா

காந்திநகர்: இந்திய பால் பண்ணை சங்கம் (ஐடிஏ) 49வது பால்பண்ணைத் தொழில் மாநாட்டை குஜராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடத்தியது. இதன் இறுதி நாள் நிகழ்ச்சியில், ‘உலகுக்கு இந்தியா வின் பால்வளம்: வாய்ப்புகளும் சவால்களும்’ என்ற தலைப்பில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு பேசியதாவது. உலகின் மிகப் பெரிய பால்உற்பத்தியாளர் என்ற அந்தஸ்தோடு மட்டும் இந்தியா இருந்துவிடக் கூடாது. உலகின் மிகப் பெரிய பால் பொருட்கள் ஏற்றுமதி நாடாக … Read more

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வரின் மகள் அமலாக்கத்துறை ஆபீசில் ஆஜர்

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.  டெல்லி மதுபான கொள்கை ஊழல் விவகாரத்தை சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை நடந்தி வரும் நிலையில், இவ்வழக்கில் தெலங்கானா முதல்வரும் பிஆர்எஸ் கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தினர். கடந்த 11ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் கவிதாவிடம் சுமார் 9 மணி … Read more

“ரகசிய ஒப்பந்தப்படி மோடியின் வழிகாட்டுதலுடன் பேசுகிறார் மம்தா” – காங்கிரஸ் விமர்சனம்

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், “பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் மம்தா பானர்ஜி பேசி வருகிறார். காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அமலாக்கத் … Read more

ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது

டெல்லி: ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் 6வது நாளாக முடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆனால், கடந்த வாரம் முழுவதும் தொடர் அமளி ஏற்பட்டதால் ஒரு மசோதாவை கூட விவாதம் … Read more

எச்3என்2 காய்ச்சல் அதிகரிப்பால் பீதியடைய தேவையில்லை: முன்னெச்சரிக்கை அவசியம்

புதுடெல்லி: நாட்டில் எச்3என்2 காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து டெல்லி அப் பல்லோ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் அனுபம் சிபில் கூறியதாவது: எச்3என்2 காய்ச்சல் அறிகுறிகள், கரோனா போல்தான் இருக்கும். இருமல், சளி, காய்ச்சல்தான் இதன் அறிகுறிகள். ஆனால் நீண்ட காலத்துக்கு இருக்கும். இதனால் இந்த தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற சூழலில் முன்னெச்சரிக்கை அவசியம். கரோனா காலத்தில் … Read more