50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கித் தொங்கிய கோவை பெண் அந்தரத்தில் திக்.. திக்.. காட்சிகள்..! பாராகிளைடிங் பரிதாபங்கள்

பாராகிளைடிங் பயிற்சியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த பெண் ஒருவர் தனது பயிற்சியாளருடன் 50 அடி உயர மின் கம்பத்தில் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  4 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் இருவரையும்  வலை விரித்து மீட்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி..  கோவையில் பாராகிளைடிங் தற்போது பிரபலமாகி வருகின்றது. பலர் பாராகிளைடிங் செல்வதற்கு பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த வர்க்கலா கடற்கரை பகுதியில் கோயம்புத்தூர் பகுதியை சார்ந்த … Read more

நாகாலாந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ரியோ

நாகலாந்து: நாகாலாந்து முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் ரியோ. ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஏப்ரல் 5ம் தேதி கோதண்டராமர் கல்யாண உற்சவம் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும்-அதிகாரிகளுக்கு ஜேஇஓ உத்தரவு

திருமலை : கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் கோதண்டராமர்  கல்யாண உற்சவம் ஏப்ரல் 5ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய வேண்டும் என்று பல்வேறு துறை அதிகாரிகளுக்கு ஜேஇஓ வீரபிரம்மம் உத்தரவிட்டார்.திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில் கடப்பா மாவட்டம்  ஒண்டிமிட்டா கோதண்டராமர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன்  ஆய்வு நடத்தினார். கோதண்டராமர் கோயிலில் மார்ச் 31 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின்போது பல்வேறு … Read more

நடுத்தர தொலைவு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்திய கடற்படை…!

நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் நடுத்தர தொலைவு ஏவுகணை, வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. ஐ.என்.எஸ். விசாகபட்டினம் கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏவுகணையை சோதனை நடத்தியதன் மூலம், கப்பல் எதிர்ப்பு ஏவுகணையாக பயன்படுத்தும் வகையில் அதன் திறன் உறுதிப்படுத்தப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ. அமைப்புடன், இணைந்து மத்திய அரசின் பாரத் டையனமிக்ஸ் நிறுவனம் அந்த ஏவுகணையை தயாரித்துள்ளது. Source link

போதை, பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்-மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி பேச்சு

திருப்பதி :  சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திருப்பதி எம்ஆர் பள்ளியில் உள்ள போலீஸ் அணிவகுப்பு மைதானத்தில் காவலர் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மகளிர் காவலர்களுக்கு பல்வேறு வகையான புற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வுடன் இலவச பல் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்பி பரமேஸ்வர ரெட்டி பேசியதாவது: மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை … Read more

நடிகை பலாத்கார வழக்கில் கைதான பல்சர் சுனிலுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பிரபல மலையாள நடிகை ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு திருச்சூரில் உள்ள வீட்டில் இருந்து கொச்சிக்கு காரில் சென்றார். அப்போது ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக நடிகையின் முன்னாள் டிரைவரான பல்சர் சுனில் என்ற சுனில்குமார் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் … Read more

ஏற்றுமதி தடையை நீக்கக் கோரி மோடிக்கு வெங்காய பார்சல்: மகாராஷ்டிரா விவசாயிகள் அதிரடி

மும்பை: வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் வெங்காய பார்சல் அனுப்பி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர், வெங்காயம் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் மற்றும் வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையை நீக்கக் கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்துடன் பார்சல் ஒன்றையும் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து  ஷெட்காரி சங்கதானா மற்றும் ஷேத்காரி விகாஸ் மண்டல் பகுதியை … Read more

வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு நற்செய்தி..!!

வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு , ஓட்டுநர் உரிமம் வைத்திருப்போருக்கு நற்செய்தி. மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ள புதிய சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது , ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் , வாக்காளர் அட்டை போன்றவை வைத்திருப்போம் . அவற்றில் முகவரி மாறி இருக்க வாய்ப்புகள் அதிகம். அப்போது குழப்பம் ஏற்படும். இதற்காக அனைத்து கார்டுகளிலும் திருத்தம் செய்வது இயலாது. அப்படியே மாற்றம் வேண்டும் எனில் துறை ரீதியாக அலைய … Read more

Shaliza Dhami: இந்திய விமானப்படை வரலாற்றில் போர் பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் ஷாலிசா தாமி..!

உலகின் முன்னணி விமானப்படைகளில் ஒன்றாக இருக்கும் இந்திய விமானப் படையின் போர் பிரிவில் இதுவரை எந்தவொரு பெண்ணும் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டதில்லை. அந்த வரலாற்றை மாற்றியமைக்கும் விதமாக முதன்முறையாக இந்திய விமானப் படையின் போர் பிரிவில் தலைமைப் பொறுப்பில் ஷாலிசா தாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். தற்போது இந்திய விமானப் படையில் விங் கமாண்டர் பொறுப்பில் இருக்கிறார் அவர். உலக மகளிர் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய விமானப்படைக்கு பெருமை சேர்க்கும் விதமாக … Read more

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தெலங்கானா தொழிலதிபர் நேற்றிரவு அதிரடி கைது: மாஜி துணை முதல்வரிடம் சிறையில் விசாரணை

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடைய தெலங்கானா தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளையை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றிரவு கைது செய்தனர். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி  முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. சிபிஐ கஸ்டடி  விசாரணை முடிவுற்ற நிலையில் அவர் டெல்லி சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.  இன்று அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. இதற்கிடையே இதே வழக்கில் தொடர்புடைய தெலங்கானா மாநிலம் … Read more