கொச்சி அருகே விபத்திற்குள்ளான கடலோர பாதுகாப்பு படை ஹெலிகாப்டர்! 3 பேர் படுகாயம்!

கொச்சி: கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே கடலோர காவல் படை ஹெலிகாப்டர் இன்று விபத்துக்குள்ளானது. விபத்தில் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டரில் மூன்று பேர் இருந்தனர். கடலோர காவல்படை பயிற்சியில் விமானம் புறப்படும் போது இந்த விபத்து நடந்துள்ளது. ஹெலிகாப்டர் ரன்வேயிலிருந்து . இச்சம்பவம் 12:30 மணியளவில் நேரிட்டது. இந்திய கடற்படை சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இந்த சம்பவம் கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே நடந்துள்ளது. கொச்சி … Read more

இந்தியாவில், கடந்த 2013-ல் சுமார் 5,000 ஆக இருந்த உடல் உறுப்பு தானத்தின் எண்ணிக்கை, 2022-ல் சுமார் 15,000 ஆக உயர்வு – பிரதமர் மோடி

உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நாட்டில் அதிகரித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, ஒருவரின் உறுப்பு தானம் மூலம் 8 முதல் 9 பேர் வாழ்வு பெறலாம் என தெரிவித்தார். 99-வது மனதின் குரல் நிகழ்ச்சியில், உறுப்பு தானம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்பட பல தலைப்புகளில் பிரதமர் உரையாற்றினார். இந்தியாவில் கடந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பு தானம் செய்ததாக குறிப்பிட்ட அவர், பிறந்து 39 நாட்களில் உயிரிழந்த பெண் குழந்தையின் சிறுநீரகம் … Read more

திருப்பதி மலைப்பாதையில் நடமாடிய சிறுத்தை: பக்தர்கள் அதிர்ச்சி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் சிலர், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரும் முதலாவது மலைப்பாதை வழியாக வாகனத்தில் திரும்பினர். அப்போது சாலையோரம் நடமாடிய சிறுத்தை ஒன்று, அங்குள்ள புதர் அருகே மறைந்து நின்றபடி தண்ணீர் குடித்தது. இதைக்கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் அதனை வீடியோ எடுத்தனர். சில நிமிடங்கள் அங்கிருந்து சிறுத்தை, வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. திருமலையில் வழக்கமாக சிறுத்தைகள் இரவில் மட்டுமே நடமாடுவது வழக்கம். ஆனால் … Read more

வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல்? – தேர்தல் ஆணையம் இறுதி முடிவு

புதுடெல்லி: சிறைக்கு செல்ல அஞ்சவில்லை. சிறையில் அடைத்தாலும், தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும், மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் … Read more

கொச்சி விமான நிலையத்தில் கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர் விழுந்து விபத்து..!

இந்திய கடலோர காவல்படையின் துருவ் மார்க்-3 ஹெலிகாப்டர், கொச்சியில் அவசர தரையிறக்கத்தின்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயிற்சிக்காக அந்த ஹெலிகாப்டர் இயக்கப்பட்ட நிலையில், சுமார் 25 அடி உயரத்தில் பறக்கத் தொடங்கியபோது திடீரென கோளாறு கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கியபோது, விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த விமானிகள் உட்பட 3 பேர் அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து காரணமாக கொச்சி விமானநிலைய … Read more

இன்று அதிகாலை ராஜஸ்தான், அருணாச்சலில் நிலநடுக்கம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், அருணாச்சல் பிரதேசத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் பிகானேரில் இன்று அதிகாலை 2.16 மணியளனில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் அருணாச்சல பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக நிலநடுக்கம் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று … Read more

புதிய வரி முறையின் கீழ் வருமானம் ரூ.7 லட்சத்தைவிட சற்று கூடுதலாக இருந்தால் நிவாரணம்

புதுடெல்லி: 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், புதிய வரி முறையின் கீழ் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு மத்திய அரசு தற்போது கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது. தற்போதைய நடைமுறையின் படி, புதிய வரிமுறையை தேர்ந்தெடுப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரையில் இருந்தால் அவர்கள் வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை. அதுவே, … Read more

ராகுல் காந்தி மீது இன்னும் 10 அவதூறு வழக்கு இருக்கு… ஆனால் அவரு ஒரு வழக்கு கூட தொடரவில்லை

ராகுல்காந்தி அவதூறு வழக்கில் தண்டிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் மோடி என்ற பெயரை அவதூறாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கீழமை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றாலும், அவர் தண்டிக்கப்பட்டவுடன் எம்பி பதவியில் இருந்து உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  இதற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களின் எதிர்ப்பை கடுமையாக பதிவு செய்து வருகின்றனர். அதானி தொடர்பாக ராகுல் … Read more

இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

கேரளா: கொச்சி அருகே இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. துருவ் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக நொறுங்கி விபத்திற்குள்ளானது. ஹெலிகாப்டர் கீழே விழுந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி – சமூக வலைதள பயோவை மாற்றிய ராகுல் காந்தி

டெல்லி: தான் ஒரு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என தனது சமூக வலைதள பக்க பயோவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாற்றியுள்ளார். மோடி சமூகத்தை சார்ந்தவர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை பாராளுமன்ற செயலகம் அறிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக நேற்று தனது தரப்பு விளக்கத்தை ராகுல் காந்தி, பத்திரிகையாளர் சந்திப்பின் … Read more