காங். ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு

புதுடெல்லி: மேற்கு மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரில் பாஜக தொண்டர்களின் ‘‘விஜய் சங்கல்ப்’’ பேரணி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி 10 ஆண்டு காலம் நடைபெற்றது. அப்போது அவர்கள், ரூ.12 லட்சம் கோடி மதிப்பிலான ஊழல்களில் ஈடுபட்டனர். ஆனால், பிரதமர் மோடி பதவியேற்று இத்தனை ஆண்டுகளில் எங்களது அரசுக்கு எதிராக 1 ரூபாய் கூட ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு இல்லை. முன்னாள் பிரதமர் … Read more

மேகாலயாவில் கணவர், மாமியாரை கொன்று துண்டுகளாக வெட்டி வீசிய மருமகள்: 7 மாதத்துக்கு பின் கைது

கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியை சேர்ந்த அமரேந்திர டே மற்றும் அவரது தாயார் சங்கரி டே. இருவரையும் காணவில்லை என அமரேந்திர டேவின் மனைவி கடந்த செப்டம்பரில் நூன்மதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தாய், மகன் ஒரே நேரத்தில் காணாமல் சென்றதால் புகார் கொடுத்தவர் மீது போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதனால் புகார் கொடுத்த இளம்பெண்ணை போலீசார் தொடர்ந்து கண்காணித்ததோடு விசாரணையும் நடத்தி வந்தனர். இந்நிலையில் கணவர் மற்றும் மாமியாரை வெவ்வேறு வீடுகளில் வைத்து அவர் கொலை செய்துள்ளது … Read more

சந்திராயன் -3 ன் ஆரம்பகட்ட சோதனை வெற்றி! இஸ்ரோ அறிவிப்பு!

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் -2 விண்கலம் அனுப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கி.மீ தூரமே இருந்த நிலையில் விக்ரம் லேண்டருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன்பின்னர், பலமுறை முயற்சித்தும், விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இதனால் இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. இதனையடுத்து சந்திரயான் -3 திட்டத்தை இஸ்ரோ கையிலெடுத்தது. இந்தியாவின் நிலவு பயணத்தை ஆய்வு செய்யும் சந்திரயான் 3 விண்கலத்தின் ஆரம்பக்கட்ட சோதனை பெங்களூருவில் உள்ள யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் நடைபெற்று … Read more

சிவசேனா பெயர், சின்னத்தை ஷிண்டே அணிக்கு ஒதுக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே அணி வழக்கு

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய அரசை அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கணிசமான எம்எல்ஏக்கள் விலகி பாஜக .வில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக கூட்டணி … Read more

அதானி விவகாரத்தில் போர்ப்ஸ் அறிக்கை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: அதானி விவகாரத்தில் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையை பதிவு செய்யக் கோரிய மனுதாரரின் பரிந்துரையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்தது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் மோசடி செய்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து 4 பொது நல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்திய உச்ச நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழுவை அமைக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்தது. இந்த நிபுணர் குழு … Read more

நாட்டின் முதல் வழித்தடத்தில் அகமதாபாத் – மும்பை புல்லட் ரயில் பணி தீவிரம் – 2026-ல் ரயிலை இயக்க இலக்கு

அகமதாபாத் – மும்பை இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் வரும் 2026-ல் புல்லட் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடுகளில், அதிவேக ரயில் போக்குவரத்து முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிகபட்சமாக 600 கி.மீ. வேகத்தில் செல்லும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நம் நாட்டில் தற்போது 170 கி.மீ. வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை இயக்கி வருகிறோம். இந்நிலையில், அகமதாபாத் … Read more

மேகாலயாவில் மோடி பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

ஷில்லாங்: பிரதமர் மோடி வரும் 24ம் தேதி மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில், அதற்கான அனுமதியை மாநில அரசு மறுத்துள்ளது. மேகாலயாவில்  தேசிய மக்கள் கட்சி (என்பிபி) மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறும்  நிலையில், அங்கு வரும் 27ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.  அதையடுத்து பிரதமர் மோடி வரும் 24ம் தேதி துராவில் ஏற்பாடு செய்யப்பட்ட  தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால்  மோடியின் மெகா பேரணி … Read more

நிலக்கரி ஊழல் புகார் – சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

ராய்ப்பூர்: பல கோடி மதிப்புள்ள நிலக்கரி ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல்தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நிலக்கரிவரி விதிப்பில் மிகப்பெரிய முறைகேடு,ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பான சட்ட விரோதபண பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், நிலக்கரி வரி விதிப்பு முறைகள் தொடர்பாக சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் … Read more

மாநிலங்களவையில் ஒழுங்கீனம் 12 எம்பிக்களிடம் விசாரணை: துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவு

புதுடெல்லி: மாநிலங்களவையில் ஒழுங்கீனமாக நடந்து அவை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்திய 12 எம்பிக்களிடம் விசாரணை நடத்த சிறப்பு குழுவை அமைக்கும்படி துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் விவாதம் நடந்த போது மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அதானி விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் பலமுறை இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்.13 ம் தேதி முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த … Read more

பெங்களூர் சிறையில் சசிகலா முறைகேட்டை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ்-பெண் ஐஏஎஸ் மோதல்: பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்ததால் சர்ச்சை

பெங்களூரு: பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவின் முறைகேட்டை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ்சுக்கும், அங்குள்ள பெண் ஐஏஎஸ் இடையே மோதல் வெடித்துள்ளது. பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்ததால் இந்த பிரச்னை உருவாகி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி அடைக்கப்பட்ட போது அவர்கள் சிறையில் சலுகைகள் அனுபவித்து வந்ததை வெளியே கொண்டு வந்தவர் ரூபா மவுதிகல் ஐபிஎஸ். துணிச்சலாக பல கருத்துக்களை வெளியிடுவதால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி, … Read more