ராகுல் காந்தியின் பதவி நீக்கம் சரியா.? – மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன.?

ராகுல் காந்தி பதவி பறிப்பு மோடி என்ற பெயரை வைத்தவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கின்றனர் என ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார். அதைத் தொடர்ந்து ஓபிசி சமூக மக்களின் குடும்ப பெயரை இழிவுபடுத்தியதாக கூறி, குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தநிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில், நேற்று ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் … Read more

நாட்டுக்காக போரடினால் சிறையா? ஏற்கத் தயார்: சூளுரைக்கும் ராகுல் காந்தி

நியூடெல்லி: எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். “இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது பதவி தகுதிநீக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; ”நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன்” என்று … Read more

”பெரும்பாலான போதைப் பொருட்கள் பாகிஸ்தானிலிருந்து, ஈரான் வழியே, ஆப்பிரிக்காவுக்கு கடத்தல்..” – அமித்ஷா..!

பெரும்பாலான போதைப்பொருட்கள் பாகிஸ்தானில் இருந்து ஈரான் வழியாக இலங்கை மற்றும் ஆப்பிரிக்காவிற்கு கடத்தப்படுவதால், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்துவது அவசியமானது என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிராந்திய மாநாட்டில் பேசிய அமித்ஷா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க, டிரோன்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.  Source link

எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: எதிர்க்கட்சி தலைவர்களை குறி வைப்பதே பிரதமர் மோடியின் புதிய இந்தியா என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவையில் குற்றவாளிகள் சிலர் இடம்பெற்றுள்ளதாகவும் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். மம்தா பானர்ஜி அண்மை காலமாக காங்கிரசையும், ராகுல் காந்தியையும் மிக கடுமையாக விமர்சித்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் பாஸ் அல்ல காங்கிரஸ் கட்சி என்று அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இந்த சூழலில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து … Read more

“நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” – எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

புதுடெல்லி: “நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்” என்று எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ”இந்தியாவின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் என்பதற்காக நான் போராடுகிறேன். அதற்காக எந்த ஒரு விலையையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இந்தத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள … Read more

ஒன்று சேர்ந்த 14 மாநில எதிர்கட்சிகள்; பாஜகவிற்கு பெருத்த அடி.!

மத்திய புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதாகக் கூறி 14 எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளன. இந்த வழக்கை ஏப்ரல் 5-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குநரகம் போன்ற அமைப்புகள் பாஜகவின் எதிர்ப்பாளர்களை மட்டுமே குறிவைத்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜகவில் இணைந்தவுடன் தலைவர்கள் மீதான வழக்குகள் அடிக்கடி கைவிடப்படுவதாகவும் அல்லது புதைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பாஜக, புலனாய்வு … Read more

பொதுத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ’பாரத் ஜோடோ’ வலுக்கும் கூட்டணி கட்சிகளின் ‘கை’

நியூடெல்லி: ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தகவல் வெளியானதுமே, அவரது தண்டனையை நிறுத்தி வைக்க காங்கிரஸ் தனது சட்டப்போராட்டத்தைத் தொடங்கிவிட்டது. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்குப் பிறகு, இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி, இந்த நடவடிக்கை பாஜகவின் அரசியல் பழிவாங்கலைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்று தெரிவித்தார். அதானி விவகாரம் வெளியானதில் இருந்து அந்த குழுமம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராகுல் … Read more

2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தகுதி நீக்கம் – மக்களவை செயலகம் அறிவிப்பு..!

பிரதமர் குறித்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல் காந்திக்கு, சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 102 (1) e-ன் படி, இரண்டாண்டுகள் மற்றும் அதற்கு மேல் சிறைதண்டனை விதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவர். அதன்படி, வயநாடு தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல்காந்தி, தீர்ப்பு வெளியான நேற்றைய தேதியிலிருந்து … Read more

திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார்: உத்தவ் தாக்கரே கண்டனம்

டெல்லி: திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது என்று மராட்டிய முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் தண்டிக்கப்பட்டுள்ளார். ராகுல் தகுதி நீக்கம் நாட்டில் சர்வாதிகாரம் முடிவதற்கான தொடக்கப் புள்ளி இது. நாட்டின் அரசமைப்புகள் அனைத்தும் அழுத்தத்தில் உள்ளன என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்

ராகுல் காந்தி தகுதி நீக்கம்… மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு!!

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 2019இல் பிரச்சாரத்தில், நீரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என மோடி பெயர் வைத்துள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசியிருந்தார். இதனையடுத்து குஜராத் பா.ஜ.க எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் காந்தி பேசியது குறித்து சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் … Read more