காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணி சாத்தியமில்லை: ஜெய்ராம் ரமேஷ் பேட்டி

புதுடெல்லி:  வலுவான காங்கிரஸ் இல்லாத எதிர்க்கட்சி கூட்டணிக்கு சாத்தியமே இல்லை என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் அளித்த பேட்டியில், “பாஜவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி இடம்பெறாத எந்த கூட்டணிக்கும் வாய்ப்பே இல்லை. 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக அமையும் எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் கட்சி முக்கியப் பங்கு வகிக்கும். இந்த ஆண்டு கர்நாடகாவிலும், தொடர்ந்து தெலங்கானா, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், … Read more

பாட்னா ரயில் நிலைய டிவியில் திடீரென ஒளிப்பரப்பான ஆபாச வீடியோ – அதிர்ந்துபோன பயணிகள்!

பாட்னா ரயில்நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக 3 நிமிடங்கள் ஆபாச வீடியோ ஓடியதால், பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா ரயில் நிலையத்தை உள்ளூர் மக்களையும் தாண்டி, ஏராளமான மற்ற மாநில பயணிகளும் அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம். அந்தவகையில் நேற்று வழக்கம்போல் தங்களது ரயில்களுக்காக பயணிகள் காத்துக்கொண்டிருந்த நிலையில், காலை 9.30 மணியளவில் நடை எண் 10-ல் பொறுத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் விளம்பரத்திற்குப் பதிலாக ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. இதையடுத்து பயணிகள் பலரும், அதனை வீடியோவாகவும், … Read more

‘சைரன்’ ஒலியுடன் போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்று குஜராத்தில் மாணவிக்கு உதவிய போலீஸ் அதிகாரி

அகமதாபாத்: குஜராத்தில் தற்போது பள்ளி பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. வழக்கம் போல் மாணவி ஒருவரை அவருடைய தந்தை தேர்வு மையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி சென்று விட்டார். அங்கு சென்ற பிறகுதான் வேறொரு தேர்வு மையத்துக்கு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. தேர்வுக்கு நேரமாகிக் கொண்டிருப்பதால் பதற்றம் அடைந்தார் மாணவி. அந்த நேரத்தில் தேர்வு மையத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், மாணவி பதற்றத்துடன் இருப்பதைப் பார்த்து விசாரித் துள்ளார். நிலைமையை … Read more

வங்கதேசத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 19 பேர் பலி

வங்கதேசம்: வங்கதேசத்தில் சொகுசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். வங்கதேசத்தின்  தலைநகரான தாக்காவில் இருந்து 63 கிமீ தொலைவில் உள்ள மதாரிபூர் என்ற பகுதியில் உள்ள விரைவு சாலையில் 45 பயணிகளுடன் சென்ற சொகுசு பஸ் புதிதாக அமைக்கப்பட்ட விரைவு சாலையில் விபத்தில் சிக்கியது. ஷிப்சார் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள அழமான சாக்கடையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளானது இந்த கோரவிபத்தில் பேருந்தில் பயணம் … Read more

'பிரதமர் மோடியின் மிகப்பெரிய டிஆர்பி ராகுல் காந்திதான்" – மம்தா பானர்ஜி தாக்கு

‘ஒரே நாடு, ஒரே காவல் சீருடை’ திட்டத்தை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நேற்று நடந்த கட்சிக்கூட்டத்தில் உரையாற்றுகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடுமையாக சாடி பேசினார். ‘பிரதமர் நரேந்திர மோடியின் மிகப்பெரிய டிஆர்பி தான் ராகுல் காந்தி’ என்று கட்சியினர் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியை தலைவராக … Read more

ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு நேரம் தளர்வு

பாட்னா: ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் தளர்வு வழங்கப்படும் என பிஹார் அரசு அறிவித்துள்ளது. ரம்ஜான் மாதம் வரும் 22-ம்தேதி தொடங்குகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்நிலையில், பிஹார் அரசு இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “ரம்ஜான் மாதம் முழுவதும் முஸ்லிம் அரசு ஊழியர்கள் பணிக்கு 1 மணி நேரம் தாமதமாக வரலாம். இதுபோல பணி நேரம் முடிவதற்கு 1 மணி நேரம் முன்னதாக … Read more

370 சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் முதல்முறையாக அந்நிய நேரடி முதலீடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 370 சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நேரடி அந்நிய முதலீட்டில் புதிய கட்டிடங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு கடந்த 2019ம் ஆண்டு  நீக்கப்பட்டது. அதன் பிறகு ஜம்மு காஷ்மீரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. அதன்ஒரு பகுதியாக, நேரடி அந்திய முதலீட்டின்கீழ், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் வணிக வளாகமும், பன்னோக்கு கோபுரமும் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளை … Read more

பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர் தப்பியோட்டம்: 100 பேர் கைது; பதற்றத்தால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

சண்டிகர்: பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர்அம்ரித்பால் சிங் (30) தப்பியோடிவிட்டார். அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பஞ்சாபி நடிகர் தீப் சித்து கடந்த 2021-ம்ஆண்டு செப்டம்பரில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ என்ற அமைப்பை தொடங்கினார். டெல்லி செங்கோட்டை வன்முறை வழக்கில்அவர் முதல் எதிரியாக சேர்க்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஹரியாணாவில் ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் … Read more

தொழிலதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.36 லட்சம் பணம் உட்பட 80 சவரன் நகைகள் கொள்ளை

புதுச்சேரியில் தொழிலதிபரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 36 லட்சம் ரூபாய் பணம் உட்பட 80 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரெயின்போ நகரைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் இரவு தனது வீட்டருகே இருந்த போது, அங்கு காரில் வந்த மர்மநபர்கள் சிலர் முகவரி கேட்பது போல நெருங்கி கத்தியைக்காட்டி வீட்டினுள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவரை தாக்கி வீட்டிலிருந்த 36 லட்சம் ரூபாய் பணத்தையும், 80 சவரன் நகைகளையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டது. இதுகுறித்து … Read more

'தொடர் காய்ச்சல் இருந்தால் மருத்துவரை அணுகுக' :அதிகரிக்கும் கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகள் வெளியீடு!!

டெல்லி : நாடு முழுவதும் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் அதிகரிக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுக்கும் புதிய விதிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால் திருத்தப்பட்ட விதிமுறைகளை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மராட்டியம், குஜராத், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு அனுப்பியுள்ள புதிய அறிக்கையில், பரிசோதனை, கண்காணிப்பு, மருத்துவம், குணப்படுத்துதல் மற்றும் தடுப்பூசி என 5 அடிப்படை அம்சங்களை … Read more