அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளது: காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேட்டி

டெல்லி: அரசுக்கு எதிராக ராகுல் காந்தி குரல் எழுப்புவதை தடுக்க பாஜக அரசு சதி செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார். நாட்டில் அச்ச உணர்வை உருவாக்க பாஜக அரசு முயற்சி செய்வதாகவும். ராகுல் காந்தி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட நடவடிக்கை என அவர் டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.  

அவதூறு வழக்கு எதிரொலி: ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு

அவதூறு வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் எம்.பியுமான ராகுல் காந்தி, “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி?” எனப் … Read more

சிறை தண்டனை விதிப்பு எதிரொலி: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி தகுதி நீக்கம் … Read more

ராகுல் காந்தி பதவி நீக்கம்; லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் வழக்கு நியாபகம் இருக்கா?

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது தேசிய அளவில் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இது பழி வாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. அதேசமயம் எல்லா விஷயங்களும் சட்டத்தின் படியே நடைபெற்று வருவதாக பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. தற்போது ராகுல் காந்திக்கு முன்னால் இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் சிறை மோடி குறித்த அவதூறு பேச்சால் கிடைத்த இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய … Read more

ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: ஜனநாயகத்தின் புதிய வீழ்ச்சியை கண்டுள்ளோம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் பாஜகவின் பிரதான இலக்காக மாற்றியுள்ளனர் என மம்தா தெரிவித்தார்.

‘அல்லாவே ராமரை அனுப்பி வைத்தார்’ – பாக். எழுத்தாளரை மேற்கோள்காட்டி பேசிய ஃபரூக் அப்துல்லா கருத்தால் சர்ச்சை

உத்தம்பூர்: தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃப்ரூக் அப்துல்லா ஆற்றிய உரை ஒன்று சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. “கடவுள் ராமரை அல்லாவே அனுப்பி வைத்தார்” என்று பாகிஸ்தான் எழுத்தாளர் ஒருவர் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்ததை மேற்கோள்காட்டி ஃபரூக் அப்துல்லா பேசியதே இந்த சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. காஷ்மீரின் உத்தம்பூர் நகரில் ஃபரூக் அப்துல்லா பேசுகையில், “நான் இன்று உங்கள் அனைவருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். கடவுள் ராமர் முழுக்க முழுக்க இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவர் இல்லை. … Read more

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து நீக்கம்; மக்களவை செயலகம் அறிவிப்பு!

வயநாடு மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர் ராகுல் காந்தி. இவர் 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது பேசிய விஷயம் சர்ச்சையாக மாறியது. அதாவது, மோசடி பேர் வழிகள் அனைவரும் மோடி என்ற பெயரை பின்னால் வைத்திருக்கிறார்களே. அதெப்படி? என்பது போல் கேள்வி எழுப்பியிருந்தார். இது பிரதமர் மோடியை அவமதிக்கும் வகையில் இருந்ததாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அவதூறு வழக்கு ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலத்தை சேர்ந்த புர்னேஷ் மோடி என்பவர் வழக்கு தொடர்ந்தார். … Read more

Breaking! இனி ராகுல் காந்தி MP இல்லை! மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கப்பட்டார் ராகுல்

புதுடெல்லி: ‘மோடி குடும்பப்பெயர்’ குறித்த கிரிமினல் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட  காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. மார்ச் 23 முதல் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் ராகுல் காந்தி. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த விஷயம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Congress party’s Rahul Gandhi disqualified as a Member of Lok Sabha from the date of his … Read more

சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரடி

புதுடெல்லி: சூர்ப்பனகையுடன் என்னை ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ரேணுகா சவுத்ரி தெரிவித்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்?’ என்று … Read more

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிப்பு எதிரொலி: குடியரசுத் தலைவரிடம் முறையிட காங்கிரஸ் திட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, … Read more