Karnataka Election: முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு காத்திருந்த அதிர்ச்சி.!

கர்நாடகா தேர்தல் கர்நாடகாவில் வருகிற மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இருப்பினும் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியும் கர்நாடகாவில் போட்டியிடுகிறது. கருத்து கணிப்பு தென் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலமாக கர்நாடகா இருப்பதால், அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை பாஜக வகுத்து வருகிறது. ஆனால் பாஜகவை … Read more

ஒயிட்ஃபீல்டு முதல் கிருஷ்ணராஜபுர வரையிலான பெங்களூரு மெட்ரோ ரயில் வழித்தடத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பயணம்!!

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த உதவும் முன் முயற்சியாகவும், இப்பகுதி மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்கும் நடவடிக்கையாகவும் பிரதமர்  மோடி ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். இந்த நிறுவனம், … Read more

என்ன மனுஷன் டா நீ ? 5-ம் வகுப்பு மாணவிக்கு மயக்க ஊசி போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை..!!

கிழக்கு டெல்லியில் உள்ள நகராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 14-ம் தேதி வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அன்று மாலை பள்ளி முடிந்த போது வீடு திரும்பவதற்காக பள்ளி வாசலுக்கு மாணவி சென்றுள்ளார். அப்போது அங்கு ப்யூன் வேலை பார்க்கும் அஜய் குமார் (54) என்பவர் மாணவி அருகே வந்து உன்னை வீட்டில் கொண்டு சென்று விடுகிறேன் எனக் கூறியுள்ளார். அப்படியே பேசி தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு சென்ற அஜய் குமார் … Read more

அவசர சட்டத்தை ஆதரித்திருந்தால் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தப்பியிருக்கும்

புதுடெல்லி: கடந்த 2013-ம் ஆண்டில் வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், “குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அதற்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்பி, எம்எல்ஏக்களின் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பால் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் பாதிக்கப்படும் சூழல் எழுந்தது. அவருக்கும் உதவும் வகையில் அப்போது பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி … Read more

ராகுலுக்கு பதில் பிரியங்கா: காங்கிரஸ் பக்கா பிளான் – அந்த மோடியா இந்த லேடியா?

பிரதமர் மோடியை அவதூறாக பேசியதாக கூறி நடைபெற்ற வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதே சமயம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கி அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பாக 30 நாட்களுக்கு தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு வெளியான நிலையில் ராகுல் காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நேற்று அறிவித்தது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் (1951) பிரிவு 8-இன் … Read more

திருப்பதிக்கு பிளானிங்கா? ஏப்ரல் மாதத்திற்கான தரிசன டிக்கெட் வெளியீட்டு தேதி அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் ஆலயம் உலகப் புகழ் பெற்ற ஒரு கோவிலாகும். இங்கு இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். அதன்படி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஏற்படும் சிரமங்களை களையும் விதமாக தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் இலவச தரிசனம் மட்டுமல்லாது கட்டண தரிசனமும் இருக்கிறது. சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே புக் செய்து கொள்ள முடியும்.  இந்த நிலையில் திருப்பதி … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. நாடெங்கும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் நிலையில் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல். கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாடு, கர்நாடக, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

''தொடர்ந்து கேள்வி கேட்பேன்; ஜனநாயகத்திற்காகப் போராடுவேன்'' – ராகுல் காந்தி

புதுடெல்லி: அரசுக்கு எதிரான தனது கேள்விகளும், ஜனநாயகத்திற்கான தனது போராட்டமும் தொடரும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, அவர் எம்.பி.பதவியை இழந்துவிட்டதாக மக்களவை செயலர் நேற்று (மார்ச் 24) அறிவிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், பதவி இழப்புக்குப் பிறகு முதன் முறையாக ராகுல் காந்தி டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”நாட்டில் ஜனநாயகம் … Read more

Rahul Gandhi: 'மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை' – கெத்தாக சொன்ன ராகுல் காந்தி

Rahul Gandhi On Disqualification: 2019ஆம் ஆண்டு தொடரப்பட்ட மோடி பெயர் குறித்த அவதூறு வழக்கில், குஜராத் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை பெற்றதற்காக, மக்களவையில் இருந்து ராகுல் காந்தி நேற்று (மார்ச் 24) தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இந்நிலையில், ராகுல் காந்தி இன்று (மார்ச் 25) டெல்லியில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்தார். ராணுவம், விமானத்துறை தொடர்பனா குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடனே வைத்து வருகிறேன். ஜனநாயகம் குறித்து … Read more

இந்தியாவிற்கு எதிராக பேசவில்லை.. தொடர்ந்து கேள்விகளை எழுப்புவேன்.. கைது நடவடிக்கைக்கு அஞ்ச மாட்டேன் – ராகுல்

  அவதூறு வழக்கில் எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பு எனது லண்டன் பேச்சு குறித்து, நாடாளுமன்றத்தில், மத்திய அமைச்சர்கள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர் – ராகுல் அதானியுடன், குஜராத் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இருந்து மோடி நட்பு பாராட்டி வருகிறார் – ராகுல் எந்த நடவடிக்கையை கண்டும் அஞ்சப்போவதில்லை; தொடர்ந்து கேள்விகளை எழுப்பிக் கொண்டிருப்பேன் – ராகுல் லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்புக் கேட்க பாஜகவினர் கோரினர்; அதுபற்றி … Read more