‘பாஜகவில் இணைந்துவிட்டால் உத்தமர்களா.?’ – பிரதமருக்கு எதிர்கட்சிகள் கடிதம்.!

டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா கைது குறித்து 8 எதிர்கட்சிகள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த கெஜ்ரிவாலுக்கு மிகவும் நெருக்கமானவர் துணை முதல்வராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா. எனவே அவரை தங்கள் பக்கம் இழுத்து டெல்லியில் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்தது. ஆனால் அதற்கு வளையாத மணிஷ் … Read more

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் மதுபோதையில் சிறுநீர் கழித்த மாணவர்.. விமான நிறுவனம் புகார் அளித்த நிலையில் மாணவரிடம் விசாரணை!

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த டெல்லியை சேர்ந்த மாணவர் ஒருவர் மதுபோதையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது கழித்த சிறுநீர் சக பயணி மீது பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேற்று இரவு டெல்லி வந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏஏ292 விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படிக்கும் அந்த மாணவர் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது சிறுநீர் கழித்ததாகவும், அது கசிந்து சக பயணி மீது பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவர் மன்னிப்பு கேட்ட நிலையில், … Read more

திடீரென குடிநீர் குழாய் வெடித்ததில் சாலையில் விரசல் ஏற்பட்டு ஸ்கூட்டரில் வந்த பெண் படுகாயம்!!

மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் நிலத்தடியில் சென்ற குடிநீர் குழாய் வெடித்ததால் சாலையில் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சி அடித்து வெளியேறிய போது ஏற்பட்ட அதிர்வால் சாலையிலும் விரிசல் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் சென்ற பெண் படுகாயம் அடைந்தார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிசி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் பீய்ச்சியடிப்பதும், அப்போது பழுப்பு நிற … Read more

பற்றி எரியும் திரிபுரா; பாஜகவினர் வெறியாட்டம்.!

திரிபுராவில் பாஜக ஆட்சியை தக்க வைத்ததும், கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளை தீக்கிரையாக்கி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த பிப்ரவரி 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆட்சியை அமைக்க 31 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. ஆனால் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 11 இடங்கள் குறைவாகவே பாஜக வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் முக்கிய … Read more

மருமகளை காதலித்த மாமனார்… மகனின் பைக்கையும் விட்டுவைக்கவில்லை!

Rajasthan Bizarre Love: காதலில் விழுவது மிக அழகான உணர்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால் உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே அங்கம் வகிக்கும் நபரிடம், நீங்கள் காதலில் விழுந்தால் என்ன செய்வது? வினோதமானது தானே! ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தனது மகனின் மனைவியுடன் காதலித்துள்ளார். இந்த காதலால், அந்த நபரின் பேத்தியை (மகனின் மகள்) விட்டுவிட்டு இருவரும் ஓடிவிட்டனர். ராஜஸ்தானின் பூண்டி மாவட்டத்தில் உள்ள சிலோர் கிராமத்தில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பவன் வைரகி சதர் … Read more

''நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டது'' – பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடு ஜனநாயகத்தில் இருந்து எதேச்சதிகாரத்திற்கு மாறிவிட்டதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான மத்திய விசாரணை அமைப்புகளின் கைது நடவடிக்கைகள் உணர்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் டெல்லி மாநில கல்வி அமைச்சராக இருந்தவருமான மணிஷ் சிசோதியா கடந்த பிப்ரவரி 26ம் தேதி சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் கடந்த 2021-22ல் அமல்படுத்தப்பட்ட மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக அவர் மீது … Read more

நாடு முழுவதும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆய்வு மையம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி: நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு ‘A H3n2 ‘ என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘A H3n2 ‘ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் … Read more

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு புகழாரம்..!!

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை அன்று சந்தித்திருந்தார். இது தொடர்பாக கேட்ஸ் நோட்ஸ் பிளாக் தளத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய பிரபலங்களை அவர் சந்தித்து வருகிறார். … Read more

மேகாலயாவில் என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா ஆட்சி அமைப்பதில் திடீர் திருப்பம்..!!

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சோகியோங் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்த என்பிபி கட்சி தலைவர் கான்ராட் சங்மா, 32 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் பகு சவுகானை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கான்ராட் சங்மா … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாமீட்டுள்ளனர். திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், ஆய்வாளர் ஐயப்பன் உள்பட 7 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.