12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது விசாரணை – மாநிலங்களவை தலைவர் உத்தரவு

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு சமீபத்தில் முடிந்தது. இதில் அதானி குழுமம் மீதான புகார் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின. இந்நிலையில், மாநிலங்களவை செயலகம் சார்பில் பிப்ரவரி 18-ம் தேதியிட்டு வெளியான செய்தி அறிக்கை: நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அவை மரபு மற்றும் விதிகளை மீறி அவையின் மைய பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பினர். அவைத் தலைவரின் உத்தரவை … Read more

போலி பெயரில் அதானி பற்றிய தகவல்கள் திருத்தம்: விக்கிபீடியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: போலி பெயரில் அதானி குடும்பம் மற்றும் அதானி குழுமம் குறித்து விக்கிபீடியாவில் இடம் பெற்ற தகவல்கள் திருத்தப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவின் முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நடத்திய ஆய்வில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்கு சந்தையில் வரலாறு காணாத வகையில்ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்ததாக ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சி அடைந்தது. ஹிண்டன்பர்க்கின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த அதானி … Read more

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..!! மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!

1982-ல் வெளியான ‘சங்கலி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பிரபு. அதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும், ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகர் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது … Read more

பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பலை பிடிக்க 70 இடங்களில் என்ஐஏ சோதனை – முழு விவரம்

புதுடெல்லி: பாகிஸ்தானுடன் தொடர்புடைய சமூகவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதம் மற்றும் நிதியுதவியை வழங்கி வருகிறது. இவை தவிர, லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானா, பாம்பிகா உள்ளிட்ட சமூக விரோத கும்பல்கள் பாகிஸ்தான் பின்புலத்துடன் செயல்பட்டு வருகின்றன. பணத்துக்காக பிரபலங்களை கொலை செய்வது, தொழிலதிபர்கள், … Read more

விலைவாசியை கட்டுப்படுத்த மேலும் 20 லட்சம் டன் கோதுமை விற்க முடிவு

புதுடெல்லி: தேவை அதிகரிக்கும் போது விநியோகத்தை ஊக்குவிக்கவும், பொது சந்தையில் விலைவாசி உயரும் போது அதனைக் கட்டுப்படுத்தவும்  இந்திய உணவுக் கழகம் உணவு தானியங்களை  விற்க ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஜனவரி 25ம் தேதி அரசின் இருப்பில் இருந்து 30 லட்சம் டன் கோதுமையை விற்க ஒன்றிய அரசு முடிவு எடுத்தது. இந்நிலையில், உயர்ந்து வரும் கோதுமை விலையைக் கட்டுப்படுத்த, இருப்பில் இருந்து மேலும் 20 லட்சம் டன் கோதுமை விற்க … Read more

பாஜவை வீழ்த்துவது நூறு சதவீதம் சாத்தியம்: ராகுல் காந்தி பேட்டி

புதுடெல்லி: பாஜவை வீழ்த்துவது நூறு சதவீதம் சாத்தியம் என காங்கிரஸ். எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இத்தாலியில் வௌியாகும் புகழ் பெற்ற ‘கூரியல் டெல்லா செரா‘ என்ற நாளிதழுக்கு ராகுல் காந்தி பிப்ரவரி 1ம் தேதி அளித்த பேட்டியின் விவரங்கள் தற்போது வௌியாகியுள்ளன. அந்த பேட்டியில் இன்னும் ஏன் நீங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு, “இந்த கேள்வி விசித்திரமாக உள்ளது. எனக்கு ஏன் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை. … Read more

தீவிரவாதிகளுடன் தொடர்பா? 8 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: தீவிரவாதிகள், சமூகவிரோத கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்  இடையே உள்ள தொடர்பு குறித்த வழக்குகள் தொடர்பாக 8 மாநிலங்களில் 76 இடங்களில் நேற்று தேசிய புலானய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். மகாராஷ்டிரா, பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் என்ஐஏ குழுவினர் சோதனையை மேற்கொண்டனர். அப்போது ரூ.1.5 கோடி பணம், ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தற்போது  பாகிஸ்தானில் இருக்கும் ஹர்விந்தர் சிங் சந்து என்கிற ரிண்டாவை … Read more

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குரூ.2 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடியிடம் ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் உறுதி

புதுடெல்லி,பிப்.22: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க தயாராக இருப்பதாக ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்தார். மணிலாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய வளர்ச்சி  வங்கி தலைவர் மசட்சுகு அசகாவா இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர்  மோடியை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவில் பல்வேறு உட்கட்டமைப்புகளை மேற்கொள்ள அடுத்த 5 ஆண்டு திட்டமாக ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.   … Read more

வங்கி நிதி மோசடியில் 5 பேருக்கு 7 ஆண்டு சிறை

புதுடெல்லி: சிக்கிலாம் டிரேட் ஹவுஸ் நிறுவனம் போலியான ஆவணங்களை காண்பித்து, எஸ்பிஐ வங்கியில்ரூ.2 கோடியே 8 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்றதாக சிபிஐ வழக்கு பதிந்து விசாரித்து வந்தது.  கடந்த 2013ம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், சிக்கிலாம் நிறுவனத்தின் 2 ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும்ரூ.50,000 … Read more

செல்பி விவகாரம் பிருத்வி ஷா மீது நடிகை பாலியல் புகார்

மும்பை: கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மற்றும் அவரது நண்பர்கள் மீது நடிகை சப்னா கில் மும்பை போலீசில் பாலியல் புகார் அளித்துள்ளார். செல்பி விவகாரத்தில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சமூக வலைத்தள பிரபலமும் நடிகையுமான சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சப்னா கில், அவரது நண்பர்கள் ஷோபித் தாக்கூர், ஆஷிஷ் யாதவ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீன் கோரி விண்ணப்பித்ததைத் … Read more