நாடு முழுவதும் பரவும் புதிய வைரஸ் காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆய்வு மையம் அறிவுறுத்தல்!

புதுடெல்லி: நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு ‘A H3n2 ‘ என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘A H3n2 ‘ வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் … Read more

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சிக்கு புகழாரம்..!!

இந்தியா வந்துள்ள பில்கேட்ஸ் பிரதமர் மோடியை வெள்ளிக்கிழமை அன்று சந்தித்திருந்தார். இது தொடர்பாக கேட்ஸ் நோட்ஸ் பிளாக் தளத்தில் அவர் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார். அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர் பில் கேட்ஸ். மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். 67 வயதான அவர் கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முக்கிய பிரபலங்களை அவர் சந்தித்து வருகிறார். … Read more

மேகாலயாவில் என்பிபி கட்சித் தலைவர் கான்ராட் சங்மா ஆட்சி அமைப்பதில் திடீர் திருப்பம்..!!

மேகாலயாவில் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. சோகியோங் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததால் அங்கு தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 26 இடங்களில் வெற்றி பெற்றிருந்த என்பிபி கட்சி தலைவர் கான்ராட் சங்மா, 32 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னர் பகு சவுகானை வெள்ளிக்கிழமை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கான்ராட் சங்மா … Read more

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவை பிடிக்க டெல்லியில் தனிப்படை போலீசார் முகாமீட்டுள்ளனர். திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ், ஆய்வாளர் ஐயப்பன் உள்பட 7 பேர் கொண்ட தனிப்படை போலீஸ் டெல்லியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வாரணாசி மணிகர்னிகா காட் பகுதியில் சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மணிகர்னிகா காட் பகுதியில் திரண்ட ஏராளமானோர் சாம்பலைக்கொண்டு ஹோலி கொண்டாடினர். வருகின்ற 8-ம் தேதி நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதற்கு முன்னதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் களைகட்ட தொடங்கியுள்ளது. மணிகர்னிகா காட் பகுதியில் சாம்பலை வைத்து விளையாடும் ஹோலி நாடு முழுவதும் பிரபலமானது. இங்கு ஹோலி பண்டிகை கொண்டாடவும், அதனை பார்ப்பதற்கும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்தனர். இதேபோல் மதுராவில் … Read more

CCTV: சாலையில் ஏற்பட்ட திடீர் வெடிப்பு… ஆளையே சாய்த்த அதிவேக தண்ணீர் – மிரளவைக்கும் வீடியோ!

மகாராஷ்டிரா தலைநகர் யாவத்மல் விதர்பா குடியிருப்பு என்ற பகுதிக்கு அருகே, சாலையின் கீழே பதிக்கப்பட்டிருந்த ராட்சத தண்ணீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு, சாலையில் பெரிய குழி ஏற்பட்டது. ராட்சத குழாய் வெடிப்பால் தண்ணீர் வேகமாக பொங்கிவந்த நிலையில், அதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு பெண் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியினர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்க அனுப்பிவைத்தனர். மேலும், இந்த வெடிப்பு குறித்து வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. 40 வினாடிகள் உள்ள அந்த சிசிடிவி … Read more

உலகில் முதல் முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ‘பாகுபலி’ மூங்கில் தடுப்பு

புதுடெல்லி: மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கூறியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் வாணி – வரோரா நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்துக்கு மூங்கில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. உலகில் முதல் முறையாக நெடுஞ்சாலையில் போடப்பட்டுள்ள இந்த மூங்கில் தடுப்பு குறிப்பிடத்தக்க சாதனை. இதற்கு ‘பாகுபலி’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் சிறப்பான செயல்பாடு. இந்த மூங்கில் தடுப்புகள் பல அரசு மையங்களிலும், தேசிய வாகன பரிசோதனை சாலை களிலும் பல சோதனைகளுக்கு … Read more

மாவோயிஸ்ட்டுகளுக்கு நிதியுதவி வழங்கியவரின் 152 வங்கி கணக்கு முடக்கம்

புதுடெல்லி: மாவோயிஸ்ட் அமைப்பினருக்கு நிதியுதவி வழங்கியவரின் 152 வங்கிக் கணக்குகள் மற்றும் பரஸ்பர நிதி கணக்கை என்ஐஏ முடக்கி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம், லடேகர் நகரில் காவல் துறை வாகனம் மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 4 காவலர்கள் உயிரிழந்தனர். அவர்களுடைய ஆயுதங்களையும் கடத்திச் சென்றனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் சந்தோஷ் கன்ஸ்ட்ரக்சன் … Read more

உணவுப் பஞ்சத்தில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய சரக்குக் கப்பலில் கோதுமை மூட்டைகளை அனுப்பியது ரஷ்யா..!

பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சம் மற்றும் தட்டுப்பாடு 40 சதவீதமாக மாறிவிட்ட நிலையில் இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு சொந்தமான குளோபல் மார்க்கட்டிங் சிஸ்டம் நிறுவனத்தின் எம்.வி.லீலா சென்னை என்ற சரக்குக் கப்பல் ரஷ்யா அனுப்பிய கோதுமை மூட்டைகளுடன் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தை அடைந்துள்ளது. சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மூட்டைகளை பாகிஸ்தானுக்கு இந்தியாவின் உதவியுடன் ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.லிபரியன் கொடியோடு கோதுமை மூட்டைகளை ரஷ்யாவின் நோவோரோஸிஸ்க் துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் 1ம் … Read more

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது

டெல்லி: 2023-24 கல்வி ஆண்டில் முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் காலை 9 மணி முதல் பகல் 12.30 வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது.