மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒடிசா அமைச்சரை போலீஸ் எஸ்ஐ சுட்டுக் கொன்றது ஏன்? மர்மங்கள் நீடிப்பதால் சிஐடி விசாரணைக்கு உத்தரவு

புவனேஸ்வர்: மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் எஸ்ஐ ஒருவர், ஒடிசா அமைச்சரை கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மர்மங்கள் நீடிக்கிறது. அதையடுத்து இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் (60), நேற்று ஜார்சுகுடா மாவட்டம் பிரச்ராஜ் நகரில் குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றார். அப்போது, … Read more

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்ககோரும் வழக்குகள் – உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்!

தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட ஆறுக்கும் மேற்பட்ட வழக்குகளை டெல்லி உயர் நீதிமன்றம் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டினரைத் தொடர்ந்து, நம் நாட்டிலும் தன்பாலின திருமணங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதற்கான  அதிகாரப்பூர்வமான சட்டப்பிரிவு 377 நீக்கப்பட்டதைத் தொடர்ந்து,  தன்பாலின திருமணம் குற்றமில்லை.. என்று உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு வெளியிட்ட அதிரடி அறிவிப்பினை தொடர்ந்து, தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்ந்து தங்களின் திருமணத்தை அங்கீகரிக்க உத்தரவு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் இவ்வழக்கானது, உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு … Read more

பிபிசி ஆவணப்பட தடை மனு குறித்து: சட்ட மந்திரி கருத்து

டெல்லி: குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல் மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். அதன் பின்னர் நரேந்திரமோடி இந்தியாவின் பிரதமரானார். இதனிடையே, குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் … Read more

”கையிலே ஆகாசம்..” : முதல் முதலாக விமானத்தில் பயணித்த இளைஞர்.. பொழியும் வாழ்த்துகள்!

வானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசைக்கு எளிதான வழியாக விமானங்கள் இருந்தாலும் அந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசையும் கனவும் இங்கு பலருக்கும் இருக்கிறது. என்றாவது ஒரு முறை விமானத்தில் சென்று வர மாட்டோமா என்ற ஏக்கம் அதில் பயணிக்காதவர்களிடையே இல்லாமல் இருக்கவே முடியாது. இப்படி இருக்கையில் 27 வயதான இளைஞர் ஒருவர் முதல் முறையாக ஃப்ளைட்டில் செல்வதை மிகவும் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “எனக்கு 27 வயதாகிறது. விமானத்தில் செல்வது இதுவே முதல்முறை. … Read more

“ஜம்மு காஷ்மீரில் நடந்து செல்ல பாஜக தலைவர்கள் அஞ்சுவர்” – ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்வில் ராகுல் காந்தி பேச்சு

ஸ்ரீநகர்: “ஜம்மு காஷ்மீரில் நடந்து செல்ல பாஜக தலைவர்கள் அஞ்சுவார்கள்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இங்கு தேசிய கொடி ஏற்றப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ”ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிவைத்துக் … Read more

புதுடெல்லியில் 4 பள்ளிப்பேருந்துகள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் காயம்..!

டெல்லியில் 4 பள்ளிப்பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில், பள்ளி மாணவர்கள் 25 பேர் உள்பட 29 பேர் காயமடைந்தனர். சலீம்கர் மேம்பாலத்தில் நேர்ந்த இந்த சங்கிலித்தொடர் விபத்தில் 4 பள்ளிப்பேருந்துகள், ஒரு கார், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. 4 பேருந்துகளில் மொத்தம் 216 மாணவர்கள் பயணித்த நிலையில், மாணவர்கள் 25 பேரும், பள்ளி ஊழியர்கள் 3 பேரும் காயமடைந்தனர். Source link

வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில், தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்: ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

டெல்லி: வந்தே பாரத் ரயில் செல்லும் பாதையில், தடுப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். மாடுகள் மீது வந்தே பாரத் ரயில் மோதி, தொடர்சியாக ரயிலின் முன்பக்கம் சேதமடைந்து வரும் நிலையில், இந்திய ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதானி குழும சொத்துக்கள் விவகாரம் – என்ன சொல்கிறது எல்.ஐ.சி.?

அதானி குழும சொத்துக்கள் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளுக்கு எல்.ஐ.சி. பதில் அளித்துள்ளது. அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால், இந்தியாவின் அதானி குழுமம் சமீபகாலமாகச் சரிவைச் சந்தித்து வருவதுடன், உலகப் பணக்காரர் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 7வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அதானி குழுமமும், ஹிண்டன்பர்க் நிறுவனமும் மாறிமாறி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், “அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் … Read more

ஏரோ இந்தியா கண்காட்சியை முன்னிட்டு பெங்களூரு விமானப் படை தளத்தை சுற்றி 22 நாட்கள் இறைச்சி விற்க தடை

பெங்களூரு: பெங்களூருவில் ஏரோ இந்தியா விமான கண்காட்சியை முன்னிட்டு எலஹங்கா விமானப் படை தளத்தை சுற்றிலும் 10 கி.மீ. தொலைவுக்கு இறைச்சி, அசைவ உணவு விற்பனைக்கு பெங்களூரு மாநகராட்சி தடை விதித்துள்ளது. பெங்களூருவில் உள்ள எலஹங்கா விமானப் படை தளத்தில் வரும் பிப்ரவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 14-வது ‘ஏரோ இந்தியா 2023’ விமான கண்காட்சி நடைபெறுகிறது. மத்திய பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். … Read more

சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்: திமுக வலியுறுத்தல்

டெல்லி: சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது. 2023-24 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு முக்கிய பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக தெரிவித்தார். அதில் முக்கியமாக குஜராத் மத கலவரம் குறித்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை தொடர்புப்படுத்தி உள்ளதால் அவர் விளக்கம் அளிக்க வேண்டியது அவசியம் என்று டி.ஆர்.பாலு … Read more