'நடுங்கும் குளிரிலும் நான் ஏன் டி-ஷர்ட் மட்டுமே அணிகிறேன்…' – மனம் திறந்த ராகுல் காந்தி

சண்டிகர்: ராகுல் காந்தி தனது இந்திய ஒற்றுமை யாத்திரையின் போது நடுங்கும் குளிரிலும் டிஷர்ட் மட்டுமே அணிந்து செல்வது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனது யாத்திரையை ஒட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி அதற்கான விளக்கத்தை நல்கியுள்ளார். அவர் பேசியதாவது: நடுங்கும் குளிரிலும் நான் ஏன் டிஷர்ட் மட்டுமே அணிகிறேன் என்று விமர்சனங்கள் எழுகின்றன. அதற்கு நானே விளக்கம் தருகிறேன். நான் யாத்திரையை தொடங்கும்போது வெப்பமான வானிலையே இருந்தது. ஆனால் நான் பல மாநிலங்களைக் கடந்து … Read more

திருவனந்தபுரத்தில் பறவைக் காய்ச்சல் 3 ஆயிரம் கோழி, வாத்துகளை கொல்லும் பணி துவக்கம்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில்  பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த வாத்துக்கள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவியதை தொடர்ந்து 3,000 பறவைகளை கொல்லும் பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம்  மாவட்டம் ஆழூர் அருகே உள்ள பெருங்குழி பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான கோழி, வாத்துப் பண்ணைகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான கோழி மற்றும்  வாத்துக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த நூற்றுக்கணக்கான கோழிகளும், வாத்துகளும் திடீரென சாகத் தொடங்கின. இவற்றின் ரத்த மாதிரி … Read more

மாஸ்கோ – கோவா விமானத்தில் வெடிகுண்டு ஏதுமில்லை: சோதனைக்குப் பின் அறிவிப்பு

ஜாம்நகர்: மாஸ்கோவில் இருந்து கோவா வந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சோதனைக்குப் பின்னர் சந்தேகப்படும்படி ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 236 பயணிகளுடன் கோவா நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து விமான குஜராத்தின் ஜாம்நகருக்கு திருப்பிவிடப்பட்டது. ஜாம்நகரில் விமானம் தரையிறங்கியதும் 236 பயணிகள் 8 விமான ஊழியர்கள் என அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். … Read more

12 கி.மீ. தூரம் காரில் இழுத்து செல்லப்பட்டு; விபத்தில் பலியான அஞ்சலி சிங் குடும்பத்துக்கு ஷாருக்கான் உதவி

மும்பை: டெல்லியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கஞ்சவாலாவில் புத்தாண்டு கொண்டாடிவிட்டு மது போதையில்  திரும்பிக் கொண்டிருந்த 5 பேர் வந்த கார், திடீரென கட்டுப்பாடு இழந்து மொபட்டில் வந்து கொண்டிருந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது பெண் மீது மோதினர். இதில் அஞ்சலி சிங், காரின் அடிப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டார், அதை கவனிக்காத வாலிபர்கள், காரை மேலும் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளனர். இதில், அஞ்சலி சிங்கின் உடல் பல பாகங்களாக கிழிந்து சாலையெங்கும் ரத்தமும் சதையுமாக … Read more

திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை உள்ளே புகுந்த கடல்நீர் – நிபுணர்கள் ஆய்வு

திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டா பகுதியில் 350 அடி வரை கடல்நீர் உள்ளே புகுந்தது தொடர்பாக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருப்பதி மாவட்டம், ஸ்ரீ ஹரி கோட்டா பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கடல் பரப்பு சுமார் 250 அடியிலிருந்து 350 அடி வரை உள்நோக்கி வந்துள்ளது. இப்பகுதியில் அடிக்கடி புயல், சூறாவளி ஏற்படுவதாலும், கடல்மட்டம் அதிகரித்துள்ளது. இந்தியவிண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) விண்கலம் ஏவும் இடமான சதீஷ் தவாண் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மிக அருகே கடல் … Read more

பட விழாவில் சமந்தா கண்ணீர்

ஐதராபாத்: புராணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள தெலுங்கு படம் சாகுந்தலம். இதில் சமந்தா சகுந்தலையாக நடிக்கிறார். அவருடன் தேவ்மோகன், மோகன்பாபு, அதிதி பாலன், கவுதமி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். குணசேகர் இயக்கி உள்ளார். வருகிற பிப்ரவரி 17ம் தேதி படம் வெளிவருகிறது. படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடந்தது. இதில் சமந்தா கலந்து கொண்டார். அரிய வகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா கடந்த 4 மாதங்களாக எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் சிகிச்சை பெற்று … Read more

உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் புதிய மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா பேசியதாவது: ஒவ்வொரு நாடும் இந்தியாவை தற்போது உற்று நோக்குகிறது. நமது கரோனா கட்டுப்பாட்டு பணிகள் இதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. நான் உலகில் பல நாடுகளுக்கு சென்று வந்தேன். உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் கரோனா பரவல் … Read more

கட்டாய மத மாற்றம் வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி: மத மாற்றம் தொடர்பான வழக்கு முழுமையான அரசியல் உள்நோக்கம் கொண்டது என உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் காரசார வாதங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கட்டாய மத மாற்றத்தை எதிராக வலுவான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தொடந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் … Read more

உலகத்தின் திறன் தலைநகராக இந்தியா உருவெடுக்கும் – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி

புதுடெல்லி: உலகத்தின் திறன் தலைநகராக இந்தியா உருவெடுக்கும் என்று வெளிநாடுவாழ் இந்தியர் தின மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9-ம் தேதி பிரவாசி பாரதிய திவஸ் தினம் (வெளிநாடுவாழ் இந்தியர் தினம்) கொண்டாடப்படுகிறது. தேசத் தந்தை காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை திரும்பிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஓர் இந்திய நகரத்தில் பிரவாசி பாரதிய திவஸ் தின மாநாடு நடைபெறுகிறது. அந்த வகையில் … Read more

பெட்ரோல் ஊற்றி 7 மாத கர்ப்பிணிக்கு தீ வைத்த மாமியார்… உண்மை என்ன?

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 6ஆம் தேதி ஏழு மாத கர்ப்பிணி பெண் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது மாமியார் சித்திரவதை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பெண், டெல்லி பவானா பகுதியில் வசிக்கும் குஷ்பூ (26) என அடையாளம் காணப்பட்டார். அந்த பெண் விபத்தாகதான் தன் மீது நெருப்பு பிடித்து காயங்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார். போலீசாரின் கூற்றுப்படி, “அந்த … Read more