பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுத்ததாக தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். அவர் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு ஆற்றும் முதல் உரை என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. அன்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், மத்தியில் ஆளும் … Read more

விடுதலை இந்தியாவில் சட்ட ஒழுங்கில் விழுந்த முதல் ஓட்டை; மகாத்மாவின் மரணம்!

விடுதலை இந்தியாவில் சட்ட ஒழுங்கில் விழுந்த முதல் ஓட்டை மகாத்மா காந்தியின் மரணமாகும்.  ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு அடிமைபட்டு கிடந்த நம் நாடு 1947ஆம் ஆண்டு ஆகத்து 15ஆம் நாள் விடுதலைப் பெற்றன. அதற்கு அண்ணல் காந்தியின் அறவழியே முன்நின்றன.  இந்நிலையில், விடுதலை கொண்டாட்டத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில், ஓராண்டுக்குள்- அதாவது 1948ஆம் ஆண்டு சனவரி 30ஆம்நாள் உலகுக்கே அகிம்சையை போதித்த உலக உத்தமர்-நாட்டு விடுதலைக்காக அரும்பாடுபட்ட நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி, கோட்சே எனும் கொடியவனால் … Read more

ஸ்ரீசைலத்தில் மலைப்பகுதி வளைவில் 30 பயணிகளுடன் சென்ற தெலுங்கானா அரசு பேருந்து விபத்து

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலத்தில் மலை பகுதி வளைவில் திரும்புகையில் பிரேக் செயலிழந்ததால், தெலுங்கானா அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. 30 பயணிகளுடன் மகபூப் நகருக்கு சென்ற பேருந்து, மலையில் உள்ள வளைவு ஒன்றில் திரும்பும்போது பிரேக் செயலிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மெதுவாக இயக்கி பக்கவாட்டு சுவற்றில் பேருந்தை மோதி டிரைவர் நிறுத்தினார். எனவே மலைக்கு கீழே இருக்கும் அணைக்குள் பேருந்து கவிழாமல் தவிர்க்கப்பட்டது. அந்தரத்தில் பேருந்தின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் தொங்கிய நிலையில் நின்றது. ஓட்டுநர் பேருந்தை … Read more

சமாஜ்வாடி கட்சியில் ஷிவ்பாலுக்கு புது பொறுப்பு

லக்னோ:  சமாஜ்வாடி கட்சி பொது செயலாளராக ஷிவ்பால் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தப்பாவும்  முன்னாள் அமைச்சருமான ஷிவ்பால் யாதவ் இடையே கடந்த 2016ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. அகிலேஷ் உடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த ஷிவ்பால் தனிக்கட்சி தொடங்கினார். கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் மரணமடைந்ததால் கடந்த டிசம்பரில் நடந்த மெயின்புரி மக்களவை தொகுதிக்கு நடந்த இடைதேர்தலின் போது சமாஜ்வாடிக்கு ஆதரவாக ஷிவ்பால் பிரசாரம் செய்தார். இந்நிலையில் கட்சியின் புதிய … Read more

பைக் ரேஸ் விபரீதம் – சாலையில் சென்றவர், பைக் ஓட்டியவர் பலி!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பைக் ரேஸ் ஓட்டிய இளைஞரும், அவரது பைக் மோதி பெண் ஒருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பொது இடங்களில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவது தொடர் கதையாகி வருகிறது. அதனால் பல விபத்துகளும் ஏற்படுகின்றன. புதிய வகை ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வருகையால் சட்ட விரோத பைக் ரேஸ்கள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், திருவனந்தபுரத்தில் கோவளம் பைபாஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது, திருவளம் பகுதியை சேர்ந்த … Read more

பனிப்பொழிவு காரணமாக சுவிட்சர்லாந்து போல் காட்சியளிக்கும் அருணாச்சலப் பிரதேசம்

புதுடெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அங்குள்ள சுற்றுலாத் தலங்களின் படங்களை பேஸ்புக்கில், மாநில முதல்வர் பீமகந்துவெளியிட்டிருந்தார். ‘‘திபாங் மாவட்டத்தின் அனினி பகுதியில்பனிப் பொழிவு ஆரம்பித்துள்ள தால், அப்பகுதி முழுவதும் பனிபடர்ந்து காணப்படுகிறது. பனிமூட்டம், குளிர்காற்றும் வீசுகிறது. இங்குள்ள அழகான சிகு ரிசார்ட்ஸை பார்க்க வாருங்குள்’’ என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் நாகாலாந்து உயர்கல்வித்துறை மற்றும் பழங்குடியின விவகாரத்துறை அமைச்சர்தெம்ஜேன் இம்னா, அனினி பகுதியில் உள்ள சிகு ரிசார்ட்ஸ் படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவர் ட்விட்டரில் … Read more

ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று நிறைவு: மக்களவைத் தேர்தலில் மாற்றம் நிகழுமா?

சுமார் ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்று வரும் ராகுல் காந்தியின் நடை பயணம் காங்கிரஸ் இழந்த வாக்கு வங்கியை மீட்டுக் கொடுக்கும் என்றும், பொது வாக்காளர்களை காங்கிரஸ் நோக்கி திருப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற … Read more

ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவிதொகை: ம.பி. முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் அறிவிப்பு

போபால்: மத்தியபிரதேசத்தில் ஏழை பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என மத்தியபிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியபிரதேசத்தில் சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜ ஆட்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்தியபிரதேச தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் நர்மதாபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் நேற்று கலந்து கொண்டு பேசினார். அப்போது, “மத்தியபிரதேசத்தில்  ஏழை பெண்களுக்கு மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் … Read more

மதுவிற்பனையில் ரூ.45,000 கோடி வருவாய் ஈட்ட இலக்கு!!

2023-24ஆம் நிதியாண்டில் மது விற்பனையில் 45,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட உத்தரப்பிரதேச அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. மாநில அரசுகளுக்கு மது விற்பனை வருவாய் என்பது மிக முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. புதுச்சேரி, கோவா போன்ற யூனியன் பிரதேசங்கள் சுற்றுலாத்துறையை நம்பி இருப்பதால், அங்கு மதுவிற்பனையும் முக்கிய ஆதாரம். அதே போல் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் மதுவிற்பனை வருமானம், மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. எதிர்க்கட்சிகள் மதுவிலக்கு வேண்டும் என்று குரல் எழுப்பி வந்தாலும் … Read more

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான டெட் 2-ம் தாள் தேர்வு: பிப். 3 முதல் 14 வரை நடைபெறுகிறது

சென்னை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த டெட் தேர்வு 2 தாள்களை கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி 2022-ம் ஆண்டுக்கான டெட் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 16 முதல் … Read more