மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு வைத்துக் கொள்வது சரியா?.. ஒன்றிய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: மனைவியின் விருப்பமின்றி பாலியல் உறவு வைத்துக் கொள்வது தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் குஷ்பூ சைஃபி என்ற பெண் தொடுத்த திருமண பாலியல் வன்கொடுமை குறித்த வழக்கில், கடந்த மே 11ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர் மற்றும் சி. ஹரிசங்கர் ஆகியோர் அளித்த வெவ்வேறு தீர்ப்பால் இதுதொடர்பாக மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், … Read more

'ஜோஷிமத் விவகாரத்தில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?' – மம்தா பானர்ஜி கேள்வி!

“ஜோஷிமத் விவகாரத்தில் மத்திய அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரம் அமைந்து உள்ளது. புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. இமயமலையையொட்டி அமைந்த இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காகக் கூடிய இடங்களை கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக, … Read more

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் முறியடிப்பு..!

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த வாரம் ஜஹாங்கீர்புரியில் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த உடலை மீட்ட சிறப்பு பிரிவு போலீசார், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டதும், டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள தலைவர்களை குறிவைத்து சதித்திட்டமிட்டதும் தெரிய வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 8 பேர் இத்திட்டத்தில் … Read more

நாளை மறுநாள் நடைபயணம்; காஷ்மீரில் ராகுலுக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை

புதுடெல்லி: காஷ்மீருக்குள் நாளை மறுநாள் ராகுலின் நடைபயணம் இருப்பதால், பாதுகாப்பு அமைப்புகள் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைபயணம் தற்போது பஞ்சாப்பில் உள்ளது. இந்த நடைபயண குழுவினர்,  லகான்பூரிலிருந்து கத்துவா, சம்பா வழியாக ஜம்முவின் சத்வாரி சவுக்கை  வரும் 19ம் தேதி அடைவார்கள். அவர்கள் அன்று முதல் 30ம் தேதி வரை ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நடைபயணம் மேற்கொள்கின்றனர். தொடர்ந்து 30ம் தேதியன்று பொதுக்கூட்டமும், … Read more

மருமகனுக்கு 379 உணவு வகைகளைப் பரிமாறிய மாமனார்! எதற்காக தெரியுமா?

திருமணத்துக்குப் பின்னான முதல் சங்கராந்தியை முன்னிட்டு ஆந்திராவில் புதுமாப்பிள்ளை ஒருவருக்கு 379 உணவுகள் பரிமாறப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகை என்றாலே தமிழர்களுக்குக் கொண்டாட்டம்தான். இது, உழவுத்தொழிலை மதிக்கும் தினம் என்பதால் தமிழ்நாடு மட்டுமன்றி பிற மாநிலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கு எப்படி தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின்போது புதிதாய்த் திருமணமான தம்பதியர்கள் ‘தலை தீபாவளி / பொங்கல்’ கொண்டாடி மகிழ்வரோ அப்படி அங்கும் கொண்டாடுவர். பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளின்போது தம்பதியருக்கு பல்வேறு வகையான உணவுகளில் விருந்து வைத்து, … Read more

தாதா தாவூத் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்….!

நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் வசிக்கிறார் என்றும் அவருக்கு 2-வது திருமணம் நடந்து உள்ளது என்றும் தகவல் வெளிவந்து உள்ளது. மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம், இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரை நாடு கடத்தும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. குண்டுவெடிப்புக்கு பின்னர் நாட்டை விட்டு தப்பியோடிய அவர் பாகிஸ்தானில் வசித்து வருகிறார் என கூறப்படுகிறது. எனினும், இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. … Read more

தானியங்கி கதவுகள் என தெரியாமல் வந்தே பாரத் ரயிலில் மாட்டிக்கொண்ட நபர்..!!

ஆந்திரா – தெலுங்கானா மாநிலத்தை இணைக்கும் விதமாக விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வந்தே பாரத் ரயில் சேவையை கடந்த 15ஆம் தேதி டெல்லியில் இருந்தபடி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முற்றிலும் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட இந்த ரயில் விமானத்தில் உள்ளதை போன்று இருக்கைகள் மற்றும் முழு ஏசி வசதி செய்யப்பட்ட தானியங்கி கதவுகளுடன் கூடிய ரயிலாகும். இந்த ரயிலில் ஏறி போட்டோ எடுப்பதற்காக கிழக்கு கோதவரி மாவட்டம் ராஜமஹேந்திரவரத்தில் ஒருவர் ஏறினார். … Read more

17-வது மக்களவை குளிர்கால கூட்டத்தொடரில் அதிக கேள்விகள் கேட்டு தமிழக எம்.பி.க்கள் சாதனை

புதுடெல்லி: பிஆர்எஸ் இந்தியா, பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் ஆகிய 2 சமூக ஆய்வு அமைப்புகள், மக்களவை குளிர்கால கூட்டத் தொடரில் எம்.பி.க்களின் செயல்பாடுகள் குறித்த புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளன. இதில் தருமபுரி திமுக எம்.பி. டிஎன்வி செந்தில்குமார் முதலிடம் பிடித்துள்ளார். இவர் மொத்தம் 453 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் 17-ம் இடத்தில் உள்ளார். 384 கேள்விகள் எழுப்பியது, 66 விவாதங்களில் பற்கேற்றது, 194 விவாதங்களை முன்மொழிந்தது, 3 தனி நபர் மசோதாக்கள் ஆகியவை இவரது பணியில் … Read more

SHOCKING..! – 71 வயது முதியவரை பைக்கில் தரதரவென இழுத்து சென்ற இளைஞர்

கர்நாடக மாநிலத்தில், 71 வயது முதியவர் ஒருவரை, இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், இன்று, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது காரில் இருந்து இறங்கிய ஓட்டுனர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரிடம் இது குறித்து வாக்குவாதம் செய்தார். இதை அலட்சியப்படுத்திய அந்த இளைஞர், இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். … Read more

பைக்கில் சுமார் 1 கிமீ தூரம் முதியவரை இழுத்து சென்ற இளைஞர் "வீடியோ பார்க்கும் முன் எச்சரிக்கை"

Bengaluru Viral Video: மேற்கு பெங்களூருவில், மகடி டோல் கேட் அருகே இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் ஒரு வயதான முதியவர் ஒருவரை இளைஞர் ஒருவர் பைக்கில் சுமார் 800 மீட்டர் தூரம் தரதரவென சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கூட்டர் ஓட்டி வந்தவ இளைஞர் நாயண்டஹள்ளியில் வசிக்கும் மருத்துவ பிரதிநிதி சாஹில் (25,) காயம் அடைந்த கார் டிரைவர் முத்தண்ணா (71) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து முத்தண்ணா மருத்துவமனையில் சிகிச்சை … Read more